ஒன்றைநினைத்து ஓன்றுக்காய்
காத்திருந்து ஓன்றால் இழந்தது
ஒன்றுமில்லாமல் போவதை விட
ஓன்றை தொலைத்து தன்றாய்
வாழ்பவர்களே. சிறந்தவர்கள்!!!
ஒன்றைநினைத்து ஓன்றுக்காய்
காத்திருந்து ஓன்றால் இழந்தது
ஒன்றுமில்லாமல் போவதை விட
ஓன்றை தொலைத்து தன்றாய்
வாழ்பவர்களே. சிறந்தவர்கள்!!!
கால்களில் அலைமோத
கடல் நீர் உப்பாகி கண்ணீர்
துளி விழுகின்றது அலைமேல்
முடியாத நினைவிற்க்குள்
கடனாக கேட்ட ஆசைகளை
அலையேடு போட்டேன்
என்னைப்போல்
பூவாகியே கருகிய ஆசைகளை
கைபிடித்து நடந்தே பட்டகாயங்கள்
நிலையாக நின்றே சொன்னதால்
மெளனமாய் திரும்பியது மனசு
ஊமையான விழிகளில்
ஓவியமாய் போன ஆசையை
கற்பனைகளிடமிருந்து கடனாய்
வாங்கியதை கற்பனையிடமே
கொடுத்திட்டே அமதியாய்
செல்லுது மனசு
இதன் பின்னே நானும்
அமைதியாய் செல்கின்றேன்
வாழ்க்கையின் கைபிடிதூரம்
மரணம் காத்திருக்க கைவிட்டு
போகின்றேன் என்னை!!!
கையெடுத்து கைபிடித்து நடந்திடாமல்
ஊனமாய் போன ஆசைகளில
தடுக்கிவிலுத்திடமால்
விலகியே போகின்றேன்
விதியிடமும். மதியிடமும்
மன்னிப்பை கேட்டுக்கொண்டு
நிழலின்றிய பாலைவனம்
நியமதனை சொல்லியதை நம்பி
என் மனசைபோல் நானும் போகின்றேன்
தன்னம் தனிமையை நேசித்தபடி
இவ்வுலகின் விந்தையில்
சிக்கி தவிக்காமல் விலகியே செல்கின்றேன்
என் மனசைபோல்!!!!
அழிவுகள் இழப்புக்கள்
சொல்லி ச்சொல்லி ஒரு
கூட்டம் தன்னை வாழவைக்கு
பெண்னே உன்னை கைதியாக்கி
இழப்பை ஆயுதமாக்கி
தன்னை முன்னேற்றுது ஒரு
கூட்டம்
விடியல் தேடுவதாய்
விடுதலை பேசிப்பேசி
விமர்சணத்தால்
உன்னை அடிமையாக்கி
தன்னை முன்னேற்று ஓரு
கூட்டம்
உன்னைவிட உயர்ந்தவர்
இல்லையென்பதால் உன்னை
வைத்தே நாடகமாடி தன்னை
முன்னேற்று ஓரு கூட்டம்
தமிழ்தேசம் தமிழ்பற்று
பேசி பேசி மண்ணில் வென்ற
மரணத்தை ஆயுதமாக்கி
ஆடம்பரத்தை சொந்தமாக்கி
ஆடம்பர வாழ்க்கை தேவைக்காய்
அங்கே. இங்கே நல்லவர் போல்
பாசாங்கு காட்டுது ஓரு கூட்டம்
தன் குடும்பம் தன் வாழ்க்கை
உயர்வடைய அழிவுமில்லை
இழப்புமில்லை தினமுமில்லையென
யார்யாரிடமே பெருமைபேசி
நடிக்குது ஓரு கூட்டம்
தேசபற்றாய் இருப்பதாய் இவர்களை
போல் இருபதை விட
நம்மிக்கையின் விதையாய்
எழுந்திடு உன் பின்னேயும்
வருமே கூட்டம்!!
விடுதலை தேடிய இழப்பின்
மண்ணில் ஒரு விருட்சமாய்
எழுந்திடு வெட்டிட வாளும் வாலும்
வரும் கண்ணீர் துளிகள்
இல்லை வாழ்க்கை அடைபட்ட
இடத்திலேயே
எழுந்திடும் திறமையே வெற்றி
அந்தவெற்றியேடும் வருமே
ஒரு கூட்டம்
உயிர் பயந்தேடி
உன்னை கேலிபேசும்
மனிதனுக்கில்லை வலிகள்
உன்னை அழவைத்துக்கொண்டே
உயரும்மனிதனிடம்
இல்லை உண்ர்வு
உன் பயணத்தை உன் விருப்படி
அமைத்திடுக
அழிவின் பின்னே
உயர்ந்த பல சரித்திரம்
கண்முன்னே
புதிய வரலாறு படைத்திடுக!!
கூட்டமும் கைதட்டி கூட்டாமாகும்
உன்னோடு!!!
நம் உணர்வேடு கலந்த
ஒன்றை இழந்த பின்னர்
அந்த உணர்வின் அழகை
எந்த உண்ர்வும் நமக்குள்
எழுதிட முடியாது
நம்மை சுற்றி நமக்காய்
நிறைந்த இதயங்கள்
நம்மேடு இருப்பதாய்
பெருமைபேசியி்ருப்போம்
அப்படியாயென !!!
ஒரு
ஓற்றை சந்தர்ப்பம்
நமது பெருமையை
உடைத்தெறிந்து விட்டு
போய்விடுகின்றது
எப்பவும் ! ஓரு பிச்சுவிரல்
ஓன்றே
உண்மையாய் இருப்பதாய்
உணர்த்தி செல்கின்றது மாய்யையாய்
காலம்!!!
வேடிக்கை பார்த்தவிழிகள்
வலியேடு அலைநோக்கியே
ஏங்குகின்றது
வந்த அழிவே அறிய விழிகளாய்!
தன்னையிழுக்கும் அலைமோத
இரு கரம் தேடியே
உறவிழந்து உடல் நடுங்க
அலைமேதும் நீரைபோல்
தன் மரணத்தின் நெடியின்
அச்சத்தில் ஓரு கரம் பிடித்து
உயிர்சுமக்க தேடியவழிமுடியே
அலையிழுக்க அலையேடு
அலையாய் தவிக்கின்றது
உடல்களேடு உடலாய்
உடல்போவதை பார்த்த விழிகள்!!!
தம்
கனவினை தாமே
செதுக்கிடுக
மற்றவர் கைகளில்
உளியினை
கொடுத்திடாது இருந்திடுக
உளியினை பிடிக்கும் கரம்
எப்பவும் நம்மை வென்றிடும்
கரமாகவே கண்டிடுக!!
இல்லையெனில்
கனவு தடுமாறும் நம்மை போல்
தன்கனவைவெல்ல தானே
சிந்தித்திக்க தன் கனவேடு
மற்றவரையும்பயணிக்க செய்க
தன்கனவிற்குள்யாரும்
நிரந்தரமுமில்லையென
உணர்விற்கு சொல்க
கட்டிப்போட்டு கதைபடிக்க
கனவு தேவையுமில்லயென
சிந்தித்து செயல் புரிக
காலத்தின்மாற்றதேடு தன் கனவையும்
சோர்ந்தே மாற்றிக்கொள்க
கனவிற்க்கும் வயதிற்க்கும்
தொடர்வுகள் இல்லையென்று
விம்பத்தை உடைதெறிக
கனவேடு
ஆசைகளை கலந்திடாமல்
கையெடுக்க
மற்றவர் வார்த்தைகளையும்
கொஞ்சம் செவியெடுக்க
தேவையானதை அறிவிற்குள்
அடக்கியே சிந்திக்க
தேவையற்றதை செவிவழிவிடுக
தன்கனவினை மற்றவர் விரும்பிடும்
வித்தைகளை கையெடுக்க
ஓடும்வேகத்தை
ரசனையேடு கைபிடிக்க
கனவை உன் ஆசைகாய்
கட்டிபிடிக்காதே
ஆசையை வெளியேடு கனவை
வென்றிட ஆசையைத்திடுக
மாற்றதின் குடையை வானவில்லாக்க
கனவு வண்ணங்களாகும்
இதயங்களேடு!!!
இல்லையேல் கனவேடு போராட்டமே
மாற்றதின் புள்ளியே
மனிதனின் வாழ்க்கையின் புள்ளி
சிந்தனையின் வரைவை உன்
கற்பனையில் செதுக்கு தானாய்
கனவு நிலைத்திடும் உன்னை சொல்லி
உன்னை நீயே கனவிற்காய்
யாரிடமும் கொடுக்காதே
பிச்சையிடும் கரங்களில்
உன் கண்ணீர்துளியை விழுத்தாதே
உன் வலிகள் உன்னையே
கேலியாய் பார்க்கும்
கனவை உருவாக்கிட தெரிந்தவனுக்கு
அறிவே சிறந்த ஜோதி!!!
முமையில் ஓரு ஓய்வுகாலம்
வரமாய் கிடைத்தால் மண்ணில்
மீண்டும் அப்பா அம்மா கைபிடித்து
நடந்திட காத்திருக்கு
ஒரு பொற்காலமென
தானாய் கைபிடித்த தனிமை
கண்ணீர்துடைத்து எழுந்திட
சொல்லு என்னை
காலத்தேடு கற்றவை
உன் பாதையில் பயம் தராது என்று
மீண்டும் நான் நானாய்
வாழ எழுந்திட
சொல்லு கண்ணீர்துடைத்தே
மிருகங்களின்நட்பாகி
குருவிகளின்இசையாகி நாகத்தேடு
வம்பிழுந்து அச்சம்போல் நடித்து
எழுந்துபடமெடுக் அருகிருந்தே ரசித்து
மீன்பிடித்தே மீண்டும் நீரில் விட்டு
அல்லிபூக்க நிலாவைத்தேடி
கரையோரம் காத்திருந்து நிலவேடு
கதைபேசி கவிசொல்லி
பூக்களேடு சண்டைபோட்டு
பூஙிதழ் திறந்திட காத்திருந்து
போர்வை விலக்கி ஆதவன்
ஓளிகண்டு பனிதுளியில் கால்
நனைக்க எழுந்திட சொல்லு தனிமை
கண்ணீர்துடைத்து
காட்டின் சொல்லப்பிள்ளையாய்
நடைபோட
அச்சமில்லை துன்பமில்லை
குறையேடு வாழும் வாழ்க்கையில்லை
ஆடம்பரதேவையில்லை அழுகையைம்
தேவையில்லை
எழுந்திட சொல்லு தனிமை
கண்ணீர்துடைத்து
தொலைத்த
பொம்மை தேடிய சிறுமியாய்
என் அழகான நாட்களை தேடியேட
தனிமை கூப்பிடுது என்னை
ஆசையாய்!!!!
ஓரு எழுகோலின்
மெளனத்தில்
ஊமையான மொழியில்
சிதறிய ஒரு துளி
என் கற்பனைச்சிதறலின்
உயிர்த்துடிப்பு!
தாமரைகுளத்தண்ணீருக்குள்
வெண்தாமரையை மழை
நனைக்க
நனைவதை
வேடிக்கை பார்த்தவர்
தமரையை திட்டி
செல்கின்றனர்
கண்ணீருக்கும் தண்ணீருக்கும்
அர்த்தம் புரியாமல்! பல பூக்களின்
வாழ்கையைம் இற்றைவரை
அர்த்தமற்ற மரணமே!!!
நல்லவை கெட்டவை
அறியாமலே எல்லாம்
நல்லவையாய் தெரிந்த நிமிடம்
நானும் ஒர் ஏமாளியே
கெட்டவை
கண்டு நல்லவையை எடுத்து
கெட்டவை கற்பித்த பாடம்
தந்த காயம் தாங்கியே
தூரமானேன்
கெட்டவை தவிர்த்து
மனசும் எண்ணமும் உறுதியாக
எனக்கான என்னை நானே
கற்றுக்கொண்டேன்
தவறுகளிடம் இருந்து
தவறிப் பாதம். வைத்தாலும்
நிலைகொள்ள முடியாமல்
திரும்பு பாதம் என்னை தண்டிக்க
ஓழுக்கமில்ல வாழ்வில்
சில நெடிமுடிந்தாலும் பலநெடி
மனசின் கோவம் என்
உணர்வின் தவறினை தண்டிக்க
அறிவுக்கும் உணர்வுக்கும்
நடக்கும் யுத்தில் உண்ர்வு தோற்றே
திரும்பிடு தானாய்
மொய்யான நட்புக்கூட
கூடி நடந்ததில்லை என்னோடு
இற்றை வரை எழுதிய
கற்பனைகள் என்
வறுமையை காத்திடவில்லை
இருக்கும் வரை புரியாநேசம்
இறந்தவர் நிழல் முன் மேசும்
படையல் போன்றது இதனை புரியா
மனிதனின் பொய்களேடு நடந்திடா
மனசு ஊமையான மொழி
போல்கூண்டுக்குள் நிழலானது
இதைபுரியா மனிதனே
எனக்கு பகையான்!!!!
ஏக்கங்களாய் புதையும்
உள்ளத்தில் காயங்கள்
அதிகமே !ஆறுதல்
கிடைக்காமல் தவித்தாலும்.
கிடைத்ததை பிரித்தாலும்
கனவிலே கற்பனையிலே
நம்மை நாம் ஓழித்தாலும்
ஏக்கத்தின் வலிகள் நம்
தூக்கத்தை பறித்தே கண்ணீராய்
காத்திருக்கும்!!!!நம் உருவக்கண்ணாடி நம்மமை
மறைத்தாலும்
நினைவுக்கண்ணாடியின்
விம்பத்தில் பூத்திருக்கும்
இவ்வுலக நிறைந்த மனிதன்
இருந்தும் நமக்கான ஏக்கமே
தனியாய நம்மேடு வாழும்!!!
விழும்போது தாங்கிடவும்
அழும்போது புரிந்திடவும்
வாழ்க்கை யாரையாவது தேடி
கொண்டால் ஏமாற்றம் கைவிட்டு
கைபிடிக்கும் நம்பிக்கையாகும்!!!
உறைபனிகாலத்து பூப்போல்
உறைந்து விட்ட. என்
உணர்விடம் தேடிபார்க்கின்றேன்
ஒரு நிமிடம் எனக்காக !!ஒரு
உணர்வு பேசிடாதா என
தொலைத்தது என்னையே
என்பதால் அழுகின்றது
உணர்வுகள் வழியின்றி!!!
கைவிளக்கு கையேந்திய
காலம் தொட்டு
தெருவிளக்கு வழிகாட்டும்
காலம் வரை
புறாவிடம் தூது சொன்ன
காலம் தொட்டு
கைபேசி தூதாகும் காலம்
வரை பெண்மையின்
உடலுக்கே அதிக
கூட்டம்!!!கவிதடை நடந்தாலும்
கதைநடைநடந்தாலும்
அழகான கற்பனையாய்
விற்பனையாகின்றது பெண்
உடல்கள்!!குறை நிறைந்த
உடலானாலும் அழகான உடலானால்
அது கூட தேவையின் தேவையாகின்றது!!!
ஓடிக்கொண்டே இருக்கும்
வருடத்திற்க்குள் ஓடாமல்
நிக்கின்ற என் உயிரேசையே
உன்னைக்கேட்க்கின்றேன் வரும்
வருடத்தில் வருவதை தடுத்திட
என்னில் இயலாமல் போன
என்னுள் உள்ளே
என்னால்
எதனிடமும்கேட்டிட இயலாது
இயங்கிட சொல்லி
நீயாவது
ஒடிவிடு என்னுளிருந்து!!
முடியாதவாழ்விற்குள் விம்பமாய்
நிற்பதனை விட ஒவியமாய்
தொங்குவதே சிறப்பு!!!!
ஓடிய பாதையில்
ஒழிந்துகொண்ட நியத்தின்
விடியலே என் ஓயவு காலத்தின்
வெற்றி!!
தேற்றும்போன நாட்களில்
தூரமா போன உறவுகளின்
நியமே
என்.ஓய்வுகாலத்தின் மறதியில்
பூக்கும் நியத்தின் பூத்தோட்டம்
என் இறந்த காலத்தின் கசப்பில்
தூக்கிப்போட்ட நிமிடத்தின்
தூக்க தொலைத்த இரவுகளின்
விடியலே எனக்காய்
நானே எழுதிக்கொண்ட
நியத்தின் நிழல்
தொலைவாய் தொலைந்த
போலிகளின் முகமே எனக்காய்
போட்ட தொலையாவேலியின்
முற்கள்
அந்தனையும் பறித்தே நிற்கதியாய்
நின்ற நிமிடமே என் கருணையின்
முதல் பூ
ஏமாற்றங்கள் எதிர்காற்றாய் முகம்
சிதைக்க
எழுதிய கனவு கற்பனைக்குள்
தொலைய
என்னில் மறா புன்னகை சொன்னது
ஒன்றே
உனக்கானதாய் பூமியில்
ஓன்றுமில்லை உன்னை சோர
விதியின் கையில் நியமும் இல்லையென்பதே
உண்மை!!!!
ஒன்றை வார்த்தை தேடி
ஓன்பது வார்த்தை மறந்து
இன்றைவரை இயலாமல்
தோற்றாலும் தேடியலையும்
இதயம் அடையும் ஆனந்தமே
காதல்!!!
முடங்கியே கிடக்குது
மனசு
இயங்கிட மறுக்கின்றது.
இதயம்
இயல்பதை தடுக்கு
இயலாமை
இயன்றவரை முடியாமல் தேடுது
நிழலை
இருந்ததும் கிடைபதே தனிமை!!
பிரிப்பதே
இயலுமென்பதால்
பிரித்திட்டு மெருமைகொள்ளும்
நம் வாழ்வில்
இணைப்பதுவும். காப்பதுவும்
முடியாமல் தோற்பதே
நம் அறிவு!!!
சிலநிமிடத்தின்
மெளனத்தின்வலி
பல நிமிடத்து கண்ணீரின்
திரை
நம்மை அறியாமல் நாம்
நமக்காய் செதுக்கும். நிமிடத்தின்
மெளனச்சிலையே
நம் இதயத்தின்
காயத்தின் மருந்து !!!
உள்ளம் பேசும் அழகில்
உதிக்கும். அழகான அன்பை
பேசும் இதயம் தன்
உணர்வை
தேடலில் தொலைப்பதே
காதல் தோல்வி
இல்லாமல்
இருப்பதாய் காட்டும்
கண்ணாடி இல்லையென்பதால்
கண்ணாடி தன் முன்னே
காட்டும் முன்
இல்லையென்றாலும் இருப்பாய்
காட்டும் கண்ணாடி. மனசு
முன் தோன்றாமலும்
காட்டும் வித்தையே
உனக்குள் உள்ள காதல் !!!
தென்றலிலேடு தேன்விருந்தாக
திசைகளேடு சிதறியேட
கண்களும் இங்கே
சுவையேடு விழிக்க
கனவுகளும் கொஞ்சம்
கொஞ்சலோடு கொஞ்சம்
கடனாய் கொடுத்தது
சந்தோஷ நிமிடங்களை!!!
நாம் வாழ்வை
கற்றுகொள்ள ஒரு
கற்பனையுலகின் கனவுக் காதல்
கைபிடிக்காமலே நீந்துகின்றது
தரைதொடமலே வானில்
நியமென நிழலென புரிந்திடமலே!!!
நம் கற்பனையுலகு
விழிக்கும் வரை
நம்மை வார்த்தைகளே
பல நேரங்களில்
வாழவைக்கின்றது!!!
இருளே நீ விலகிட இருளானவள்
கேட்க்கின்றேன்
ஒளியே நீ பரவிட
தீபமாய் கேட்க்கின்றேன்
பகையே நீ இறைவன் ஆனதால்
திரியாய் நான்எரிந்தே
கேட்க்கின்றேன்
கருணையின் வடிமே என்
இல்லமானதால்
என் வாசலின்
ஒளியாய் கேட்க்கின்றேன்
உன் உள்ளத்தின் ஒளியாய்
என் பாவத்தின் கருணையாய்
உனக்குள் என்னை கேட்க்கின்றேன்
மீண்டும் தீயாக எழுந்திட என்
உள்ளத்தின்ஓளியே
ஒளியாகிட மீண்டும் வா
என்னேடு!!!
விளையாட்டாய் சிலசமயம்
பேசி கடந்திடும் நேரம்
நமக்கே அறியாமல் ஓரு பாவம்
பழியாய் தொடரும் தூரம் நியமாகின்றது
உன்னேடு பேசி உயிர்வரை
நினைத்து என்னேடு நடந்த
நிமிடம் கண் இருந்தும்
குருடாய் கண்ட மேகம்!!
இல்லையென்றபொது
இருந்தவரை காணவில்லை வாழ்வில்
உண்டென வாழ்ந்தபோது
உணர்வினைக்காணவில்லை
இரண்டும் வேண்டாமென்றபோது
உயிரினை காணவில்லை எனக்குள்!!
ஓற்றையில நின்றாலும்
ஒன்று கூடி வாழ்ந்தாலும்
உள்ள மனசினை
வைத்தே பூட்டிட இயலாது.
நாமே நமக்கான நல்தும் கெட்டதும்
என் மாமனுக்க என்ன ஆச்சி
மணித்துளிகள் வெறுத்தே
வாடும் தனிக்கதையாச்சி
கையேடு கைபிடித்த
கைகள் எங்கே போச்சி
காலையும் மாலையும
காணாமல் தேய்மிறையாய்
ஏங்கலாச்சி
கூடிய நட்பிற்கெல்லாம்
என்னென்ன ஆச்சி
கூடுவிட்டு. போன கவிக்கூயில்
தேடலாச்சி!!!
காடுதேடும் வயதாச்ச்சி
கைய்பிடி எங்கே
தொலைந்த போச்சி
அறிவுப்பேச்சு அடங்கிப்போக
உணர்வு கூடிபேசிடாட மனசேன்
தேடிவாடும் கதையேன் வந்தாச்சி!!!!
பிடித்தவை பிடிக்காமல் போவதும்
பிடிக்காதவை பிடித்தவையாக
மாறுவதும் நமக்கான காலத்தின்
மாற்றம் ஆனால் ஆண்மை
பெண்மையை
புடிக்கவில்லையென
கூறுவதை சரியென ஏற்கும்
மனிதனுக்கு ஓரு
பெண்சொன்னால் மட்டும்
மன்னிக்க முடியா தவறாகின்றதே
ஏன்?
எதையும் புரியாமலே
மரணம் வரை கூடவே போயென
விரட்டும் வாழ்வை விட்டு
பெண்மை தன்னையே நம்பியே
தனியே வாழபோவதும்
நாமே.
பெண்மைக்கு கற்றுகொடுத்ததே
கற்றுக்கொடுத்து கற்றுகொடுத்தே
தன்னைதொலைக்கும்
பெண்மையை உருவாக்கியே
இன்னும் கற்பனையிலே தேடிக்கொண்டே
வாழுவதே வாழ்வாகின்றது!!!
உணர்வுடையும் போது
நல்ல இதயமும்.
மனதுடையும் போது
நல்லநட்ப்பும்.
நம்மிடம் இல்லாத
போவதால்
தேற்க்கின்றது நம் பிறப்பு!!!
நல்லவங்க நல்ல வாழ
நல்லநாளே இல்லையேயென
எண்ணச்சொல்லுகின்றது. எல்லா
நாளும் தரும்துன்பம்!!!
வெற்றிக் கிண்ணத்திற்காய்
நாடுகள் போராடும் போது
ஒரு இனமட்டும் நாட்டுகளை
வெற்றியடைத்துள்ளது
இங்கே!!
வெற்றிடையும் நாட்டின்
வெற்றிகிண்ணம்
ஒரு இனத்தின்
வெற்றிக்கிண்ணமாய்
தேற்கடிக்கப்படுகின்றது!!!
வேண்டும் என்ற மனதை விட
எதுகும் வேண்டாம் என
தனிக்கும் மனதின் சுமையை
புரிந்தாலே வலியின் துடிப்பை
சொல்லமலே துடைக்கவும்
மனதிற்கு தோன்றும் நாம்
தூரத்து வெண்ணிலவாய்
தோன்றும் போதே
அருகே இருக்கும் சிமினிவிளக்கின்
ஒளியின் இருள்
எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!
தடைகளை உடைந்திடும்
உறுதியுண்டு தடைதாண்டியே
ஓடிடகால்களும் உண்டு
சுவர்களை உடைத்திட
வலிமையு உண்டு சுவர்தாண்டியேடிட
தைரியமும் உண்டு
சூழ்ச்சிகளை முறியடித்திட
அறிவும் உண்டு சூழ்ச்சியால்
வென்றிட விவேகமும் உண்டு
உண்டான உண்டெல்லாம்
உள்ளிருந்தும் இல்லாமல்
போக்க்கின்றது வலிகளே
பெண்ணென
சுற்றியே தாக்கிடும் அம்பின்
கூர்மையின் வலியே
ஆயுதம்ஏந்தினாலும்
தோற்றாடிடும்
பெண்னென மண்ணில் பிறந்ததன்
முகவரி!!!
இழப்பின்வலியால்
இழந்தஉணர்வால்
எழுந்த உரிமையின்
குரலில்கள் விழுந்த இருளின்
விடிவின் கண்ணீருக்குள் எரியுது
தீபம் இல்லையென்ற தாய்மையின்
ஊமையாய்!!!
படைப்பின்
இருபால் உணர்வினை
படைத்தவன் செய்த பிழையே
இதை
தனக்குள் தோற்ற
முப்பாட்டன்
அருகருகே வைத்திட பயந்தே
நம்மை நமக்காய்
தனித்தனியே வைத்தான்
இதுவே சிறப்பென
வைத்தவர் தவறென நம்மை
நாம் வென்றிட உடைத்தன்
பெறுமை
உறுதியாய்நின்றவரும்
தோற்றே தோற்றவரும் சேர்ந்தே
தம்மை நாமே
கூடிபேசும் நிலை!!
என் கற்பனைகள் என்
கண்களிடம் தேற்றபோதே
என் கண்ணீர்கள் என் கனவுனை
தொலைத்தது என் நம்பிக்கை
பொய்களிடம் தோற்றபோதே
என் அன்பிற்க்கு இதயமற்று போனது!!!
தொலைவாய் போகும்
மேகம் போல் தான் நம்மில்
மற்றவருக்கு ஏற்படும் உணர்வும்
காற்றடிக்கும் வரையே நிலைத்திடும்
தூரமாய் இருப்பவர் துயரத்தில்
பங்கு கொள்வது போல் தான்
நம்மை மற்றவர் புரித்துகொண்டதாய்
சொல்லிக்கொள்வதும் வார்த்தைகளும்
என் பதைகளில் இலக்கு இல்லை
என்பதால் முடிப்பவன் என்னை
நிறுத்திட போவதில்லை அவன்
எழுதிய இலக்குவரை என் கால்கள்
நடத்து கொண்டே இருக்கும்!!!
ஒன்றை புரியமாலே பலதாய்
மாற்றி விடும் நம் அறிவு நம்மை
புரியமலே மற்றவரை விமர்சணம்
செய்கின்றது பலதாய்!!!
யாரேடும் யாரும்
இல்ல வாழ்வில்
விட்டிட முடியா
கைதொலைபேசி போல்
வாழ்க்கை தேவைக்கேற்ப
உறவாகின்றது!!!
தொலைத்தது போக மிஞ்சிய
உயிரில் !!எழுதிய தோல்விகள்
தோண்டிய. குழிகளில் மேலும்
பல உயிர்கள் விழுந்தும் குழிகள்
அப்படியே!!!
அப்பாடியென
நினைக்கும் நிமிடத்தில்
தேற்றுவிடுகின்றது பெருமூச்சு கூட
அடுத்த நிமிட தோல்வியில்!!!
என்னால் புதைக்கபட்ட
வெற்றி என் தோல்விகளை
விட சிறந்தவையல்ல என்
தோல்விகளே மனிதருக்களுக்கு
உன்மை முகம் கொடுத்து காட்டியது!!!
நம் தவறுகளை அங்கிகரிக்கும்
உறவே நமக்கு பிடித்த
உறவாகின்றது தவறென சுட்டிக்காட்டும்
உறவே வெறுக்கபடுகின்றது
நம்மை நேசிக்க நாமே
தவறாகின்றோம்!!!
பிடித்ததிற்க்கும் பிடிக்காத்திற்க்கும்
இடையில் நடக்கும் யுத்தமே
வாழ்க்கை
பிடித்ததை அடைய போராடும்
நமக்கு தெரிவதில்லை எது
பிடிக்குமென!!!
பிடிக்காத்தை பிடித்தே பிடித்ததை
அடைகின்றோம் ஒன்றை இதயத்தின்
காயத்திலே நம் சந்தோஷகோட்டையின்
ஆரம்பம் புத்தியுண்டு ஆனால்
உணர்வுகள் எழுதுகின்றதே
பிடித்தவையாகின்றது
ஓற்றை சொல் தேடி
உதிர்ந்த வார்த்தைகள் கோடி
கொண்ட ஆசை தேடி
தொலைத்த நாட்கள் அதிகம்
பிறந்த கனவை சொல்ல
பிறக்காமல் போன விடியல்கள்
ஊமையானது நியம்.
இருந்தும் நிழலேடு உரையாடல்
நாம் இருக்கும் கற்பனையில்!!!
நினைவுகள் பேசும்
உணர்விற்க்குள் கொஞ்சம்
நியங்கள் கண்ணீர் சிந்தியிருந்தால்
துளிகளில் கூட ஓரு தாய்கனவு
பிறந்திருக்கும்
காத்திருந்த சுந்திரம்
காத்திடா விடுதலை
காயமான உடல் காத்திடா
உணர்விற்குள் அனாதையானது
தாய்யின் தாகம் !!!
விட்டேடும் நினைவேடு விட்டேடா
நியாமானாய் மாமா
கற்றேடும் வாழ்வேடு கட்டுயணைக்கும்
உறவானாய் மாமா
இட்டுபேசும் பேச்சோடு
இட்டுநிறப்பிய ஆசை மாமா
கொண்டி சிதறிய மல்லிகைக்கைள்
நான் கட்டி போட்ட மாலை மாமா
அறிவுள்ள
புத்தகமென்றின் அழகிய
பக்கங்களை புரட்டியதில்
அழகான பக்கங்களாளது என்
பக்கங்கள்
எனக்குள் கலந்த என்
கற்பனையின் உயிரின்
வடிவம் மாமா. நீ!!!
கடவுள் கூட படைத்திடா
ஆண்மையின் சிகரம்
மாமா நீ!!!
உன்னோடு வாழும் கனவுகளிள்
அழகுகளில் பூத்த பூவின்
புன்னகை மாமா நீ !!!
பூமிதனில் யாரும்
படைத்திடா கவியுலகின்
நாயகன் மாமா நீ!!!
தேடுபோதே தொலைக்கும்
காதலின் தொலையா வாழ்க்கையின்
இறுதி மூச்சின் வெப்பத்தில்
தொட்டணைக்கும் முதுமைக்கும்
காதல் கொள்ளும் என் காதல்
மாமா நீ!!!!
கைபிடித்த மழைகாலம்
கைதொட்டிடா வானவில்
கைகோர்த்திடா தனிமை
முதுமையையில் சொன்னது
கற்பனையின் வெறுமையில்
கரைத்திட்ட நிமிடத்தின்
தனிமையின் கொடுமை!!!
இலக்கணம் தொலைத்த
இலக்கிய பிழையான என்
இலக்கணம் இலக்கியமாக
வேண்டாம்
இருபவர் தொலைத்திடா
இலக்கணமாகவே ஆசை
என் இலக்கின் பாதையில்
விழுந்த பூவிற்கு் ஒரு அழகிய
இலக்கணம் கிடைத்திட்டால்
என் வாழ்விற்க்குள் ஒரு மழைக்காலம்
கண்ணீர் காலத்தை வென்றதை
கல்லறை பூ பெருமையாய் கூறும்!!!
வயதை கடந்தும்
கடந்திட முடியாமல்
மனிதன் தன்னை தொலைப்பதே
ஓன்றை உணர்வை
தனக்குள் ஜெந்திட முடியாமல்
தன்னைதொலைபதாலே
விளையாட்டாய்
திரிந்த மனதை விளையாடி
பார்த்த இறைவனுக்கு மட்டுமே
புரிந்தது வலிகள்
கொடுமையானதேயென
தேடிபார்த்தும் கிடைக்காமல்
கல்லாய் நிக்கின்றான்
விடைதெரியாமல் !!!
தேடிப்பா்த்தேன்
மாமா
தேவைகள் புரியாமல்
போனது
தேடாத்தேடலாய்நீ
வந்தாய் மாமா
தேடல்களற்ற தேவை நாமேயாக
தேவைகள் புரிந்திடா
தேடல்கள் புரிந்திட
நம் வாழ்க்கை
அழகான மாமா!!!
உன்னேடு நினைவிருக்க
இருளேடு கனவு சிறைபட
என்னேட உயிர் விண்ணேட
போக கல்லறைக்குள்
என்னை உயிரோடே
பத்திரமாய்
அடைத்தே வைத்தே சென்றத்து
தன்னேட கனவிற்காய் உயிர்!
கண்ணேடு
பார்த்த என்னேட உருவத்தை
நீயே மண்மீது வரைகின்றாய்
ஏதோ கற்பனையில்
உனக்காய் !
என்னேட
ஆசையும் உன்னேட கற்பனையும்
ஓன்றை ஓன்று தேற்றே
என்னை கண்டே அச்சம்
கொள்ளுது கற்பனை தோல்வியாய்!!!
நம்மை நாமே அழித்து
கற்பனைகைக்குள் அடைத்து
வைத்த விடுதலை நம்மை
சிறைவைத்து விற்பனை சந்தையில்
உயர்ந்ததே நிக்கிக்கின்றது
வரலாறின் சிறப்பாய்!!
பல கல்லறை பேசும் வலிகள்
கறைபட்டு உடைத்தெறிபட்டது
சுயமற்ற உணர்வுகளின்
சுகங்களை கடன் வேண்டி
கடமை பேசும் கடன்கார்ர்கள்
கடனாய் விற்ற விடுதலை
கற்பனையின் சிகரத்தின்
உச்சத்தில் தினமும் தேடுகின்றது
தமிழின் விடுதலையை!!
இடைவிடா இடைவெளியின்
இடையே சிக்கிக்கொண்டது
நினைவு
இடையரும். கயவரும்
கடந்திடும் வனத்திற்க்குள் பெய்தேடும்
மழையை போல் தடையற்றே
என்னுடனே ஓடுதே
உன் நினைவு
ஒரு வானம்பாடியின் இசைக்குள்
சிக்கவண்ட ஓரு குரலாய்
ஒலிக்கின்றது
உன் நினைவு
யாரேடும் சோரா ஓற்றை குரல்
ஓசையை ப்போல்!!!
இருக்கும் நிமிடம்
இல்லெயென சொன்ன
வலிகளுக்கு மட்டும்
தெரிந்தது தொலைத்தையாவும்
எனக்கு
கிடைக்கா நிமிடமென
கற்றிட வைத்த நிமிடம் கற்று தந்த
நிமிடத்திற்க்கு சொன்னது
நான்கற்றிட்ட நிமிடத்தை
விட என் வாழ்க்கை கற்றுதந்த
நிமிடம்
எந்த புத்தகம் என்னாக்காய்
கற்று தந்திடாத பாடமென!!!
மாமான் சொந்தம் மரக்கிளிக்கு
இல்லையென மரிக்கொலுத்து
சொன்ன நிமிடம்
கிளிக்கு சொந்தமானது மாமன்
நினைவு மட்டுமே சொன்னதை
சொல்லும் கிளிக்கு சொல்ல மட்டும்
உரிமையானத்து மாமன் தந்த
காதல் மட்டுமே!!!
நமக்கு உரிமையான ஒன்றை
இழக்கும் நிமிடம் வலியே
அதுவே நம்
சொந்தமில்லையென
பார்க்கும்
நிமிடம் உரிமையற்றே
விலகிவிடுகின்றது மனசு!!
பிடித்தவை தூரமாய்
போக பிடிவாதமாய்
வந்தமர்ந்தது சாபம்
கிடைத்தது தூரமாய்
போக தடையாக
வந்தமர்ந்தது சாபம்
கண்டதை காணதை
சொல்லிகொண்டே
கற்றுதந்தே தொடர்ந்தே
கூட நடக்கின்றது சாபம்
வாழ்க்கையென்னும்
தொலைதூரத்து நெடிப்பொழுது
சாபத்தை மாற்றிடாதே
தவிக்கின்றது
கூடாவிதி!!!
ஓய்வற்ற இயந்திர
வாழ்க்கைக்கு கொஞ்ச
நிழல் மட்டும் கிடைத்திட்டால்
போராட்டம் கூட அனுபவமாகும்!!
நியமற்ற உயிருக்கு கொஞ்சம்
அன்பு உண்மையானால்
கோழைக்கும் போராடும்
உறுதிவரும்!!!
கையேடு அழகான
வாழ்க்கை கைசோர்ந்தத்தை
கைவிட்ட பின்னர் கூட
புரியமலே
கையேடு இருந்த தன்
விருப்பத்தை கைவிட்டு
தன்னை மாற்றிகொள்ளும்
மனிதனுக்கு கூட
ஒரு கைபிடிப்பு தேவைபடுகின்றது
பல அனுபவங்கள
கண்முன்னே இருந்தாலும்
இருப்பதால் நினைப்பதை
செய்திட ஆடம்பரத்தை
தேடியேடும் கால்களுக்கு
தெரிவதில்லை மற்றவரை
மதித்திட
அள்ளி இறைப்பதால் பெருமை
கொள்ளும். கைகளுக்கு
தெரிவதில்லை மற்றவரின்
தேவைகள்
இல்லையென ஒன்றுமில்லையென
காட்டதுடிக்கும் மனசுக்கு
தெரிவதில்லை
இருப்பவரின் காத்திருப்பின்
நிமிடம்கரைந்தேடி
வெறுப்பாகி கசப்பாகும்
வாழ்த்துக்கள்!!!!
தண்டிக்க தெரிந்தால்
மன்னிக்கவும் கற்றுக்கொள்
போட்ட விதைகள்
உயிர்கொண்ட வேரை
பிடிங்கிய வலியை
கற்றுக்கொண்டு துடிக்கும்
இதயத்தின் வலியை விட
பெரிதல்ல
உற்ற பந்தம்
உயிரேடு இருக்க
மற்றதெரு பந்தம்
உன்னில் பெரிதற்ற
உன்னால்உருவான
வாழ்க்கை பெரிதாகும்
உன்னேடு பேசிய வார்த்தைகள்
மழையேடு பேசிய மலரின்
தன்னம்பிக்கை பறித்துபோன
துளிகளின் மரணம்!!!
ஓன்றாய் கூடி நன்றாய்
வாழ ஓன்றை கொண்டாடினால்
நாம் இறைவரைந்த மனிதன்!
ஓன்றையெடு நாலாய் உடைத்து
ஐந்தாய் நின்று எதையும்
கொண்டாடமல் இருக்கும் நிமிடத்தை
கறுப்புத்துணியால் கட்டி வைத்ததாய்
நினைத்தால் நாம்
மனிதன் வரைந்த இறைவன்!
முதுமையின் ஏக்கத்திற்குள்
சிறைபட்ட தேடலாய்
கைவிட்ட கரங்களின் தூரம்!
கண்தேடா பதையேர
காத்திருப்பால்
ஏக்கம் கொண்ட இதயம்
காத்திடாமலே காதுகளேடே
விசாரிப்பு!
பூட்டபட்ட அறையைபோல்
தூரமான உறவுகள்
பணத்தேடு குதுகலம் !
தேவயின்றிய ஆடம்பர
தேவையால்
தேடிபேசும் சுகவிசாரிப்பு!
முன்னே பின்னே சித்திக்கா
முடிவெடுப்பால்
முதுமைக்கு வயது போதாதே
போகின்றது தீயேடு!
ஒய்விற்காய் ஏங்கும்
மனதினை அலைச்சியம்
செய்யும் போதே
போராடும்வாழ்வு
ஓய்விற்காய் தூரமாய்
ஒடுகின்றது
நாம் நமக்கான
முடிவுகளை
தாமதமாக சிந்திப்பதால்
கற்றுக்கொள்ளும்
வயதைத்தாண்டி
கற்றுக்கொடுக்கும் வயதில்
நம் வாழ்வியலை சரிசெய்ய
முடிவை எடுக்கின்றோம்!!
இன்றைய வாழ்வியலில்
நாம் எடுக்கும் முடிவு
மற்றவரின் தவறான
முன் உதாரணமாகின்றதால்
நம்மை மதிக்க நம்மிடம்
எந்த காரணமும் இல்லாமல்
போய்விடுகின்றது!!!
விடியலே இல்லையென
இருளேடு கடந்தவை கற்று
தந்தையே விதியென
கடந்திட்ட உயிரில்!
ஒளியாய் தேயும்
உணர்வில்
புதைக்கபட்ட உடல்
சிதையும் காலம்
வரை
மறாதே தொடரும்
நியங்களின் வலிகளால்
நிழலுக்குள் வரைந்த
ஒவியமும் அழுதிடும்
இவள் விதி கண்டு!!!!
இன்மைகள் கொண்டே
நன்மைகளை சொல்லியே
போகும் பாதையேரம்
கனவுகளை போல் சில
நிமிடங்கள் நம்மையேன் சந்தித்தே
கடக்கின்றது என தெரியமாலே
நின்று ரசிந்து தேடுவதே நம்
வாழ்வின் புரியா கேள்விகள்
அந்த நிமிடம் வரமலே
இருந்திருக்க கூடாதாயென
பல நெடிகள் புலம்பினாலும்
தடுத்திட முடியா நியதியே வாழ்க்கை
கிண்டலும் கேலியாய்
ஓரு கூட்டம்
அறிவேயில்லையென
அறிவுகள் கூற
ஓரு கூட்டம்
தவறுகளை தேடி
திருத்தியே வாழவைக்க
ஒரு கூட்டம்
இப்படி
கூட்டமாய் சுற்றும்
கூட்டத்தில் ஓருவர்
நேய்யில் விழுந்தாலும்
துன்பத்தில்
விழுந்தாலும் காணவில்லை
ஓருத்தரையும் அன்பின் உருவத்தில்
உண்மையில் மற்றவர் வாழ்க்கை
இன்னெருவரின் பொழுதுபோக்கே
கொஞ்சநேரம்
தோல்சாய்ந்தே கவலை மறக்க
தோழன் வந்தான் என்னோடு
விம்மலுக்குள் கரைந்தே
காணாமல் போன காலத்தின்
விக்கலைப்போல்!!!
எழுந்தின் வடிவமாய் கவியின
உண்ர்வாய் கற்பனையின்
உருவமாய் என்னை கொடுத்த கனவில்
விழிகள் குருடானதால்
ஊமையானது மொழியில் காதல்
விட்டுகொடுத்தவர்
ஆர்பாட்டமின்றியே நகர்கின்றார்
எடுத்துகொண்டவரே
ஆர்ப்பாட்டமாய்வாழ்கின்றார்
விட்டு கொடுத்தவருக்கு
மட்டுமே மனசின் உணர்வு
புரிவதால்
தன்னை விட்டுக்கொடுத்தே
தனியே விட்டு
வந்துவிடுகின்றார்
இதை புரிந்தவரே வாழ்வில்
மன்னிக்கவும் தெரிந்ததவர்
கனவுகள் அழகாய்
தோன்றிமறைகின்றது
கையில் கிடைக்காமலே
வாழ்க்கை தோல்வியேடு
புன்னகைக்கின்றது
கனவை நேசித்தும் மறந்தும்
காலங்கள் ஒடி மறைகின்றது
கனவுகளாய்!!!
என் மரணத்தின் பாதையேரம்
பல மரணத்தை கடக்கின்றேன்
எந்த மரணமும் மனிதனுக்கு
வலியை கொடும்பதாய் தெரியவில்லை
அன்று மரணத்தின் இழப்பிற்க்குள்
இருள் சுழ்ந்தது இன்று
பணம் கொண்ட வெளிச்சங்கள்
பாதையை தெளிவாக்கியே போக
வலிகள கூட ரணங்களாகதே
கடந்து போகின்றது!!!
சின்ன சின்ன விடையங்களில்
கூட குட்டிக்குட்டி சந்தோஷம்
இருப்பதை புரிந்த இதயமே
மகிழ்ச்சியாய் வாழ்கின்றது
நம் வாழ்க்கை
இன்னெருவரிடமிருந்தே
நமக்கு யாசகமாக
கிடைத்தது என எப்போது
நமக்கு புரிகின்றதோ!!!
அப்போதே சஅந்த வாழ்க்கையில்
தோற்றுவிடுகின்றேன்
எனக்கு தாணாமாக
கிடைப்பதே
பிடிப்பதில்லை அதலால்
யாருடைய வாழ்க்கையையும்
யாசிக்கவில்லை
நானே தனியாக வாழ்வை
வாழத்தொடங்கினேன்
சிலநேரம்
வெறுப்பும் வரும் சிலநேரம்
கண்ணீரும் வரும் ஆனாலும் யாரும்
என்னால் அழுவதில்லை!!!
விட்டுக்கொடுத்ததன் வலி
விட்டுக்கொடுத்தவர் மட்டுமே
உணரும் போது விட்டு பிரிந்தவர்
எப்படி பிரிவின் வலிகளை
உணர முடியும் பிரித்தவர்
புரிவதில் பிரிவுமில்லை பிரிவுகள்
பேசிட காதலும் காத்திருப்பதில்லை
காத்திருந்தால்
தொலைபது காதலுமில்லை!!
சிதறியே வாழும் மனிதன்
ஓற்றைசொல்லால் ஓற்றை
குடும்பத்தை ஓன்றாக்கி போனான்
குடும்பமாய்வாழும் மனிதன்
தன்னை காணவில்லையென
ஒற்றை குடும்பத்தை கையில் வைத்தே
நித்தம் சண்டையிடுகின்றான்
இங்கே
இறைவனையும் காணவுல்லை
இறைவண் படைத்த மனிதனையும்
காணவில்லை!!!மதம் மட்டும்
வாழ்கின்றது!!!!
ஆட்சியாளன்பேசும்மொழி
ஆட்ச்சிபுரியாயமல் உயரும்மொழி
காலத்தின் மொழிகளேடு
காலத்தோடும்கவிதைமொழி
யுத்த்தில் காலத்தளமாடும்
உதிரத்தின் வீரமொழி
அழித்தாலும்அழிவின்றி
வாழும்மொழி
வரலாறுகள் தேடிப்பேசும்
பண்பின்மொழி
வரலாற்றையே தேற்கடித்த
வெற்றியாளன் மொழி
படித்திட படித்திட
சுவை தரும் அன்பின்மொழி
பலமொழிகள்தேடிப்பேசும்
பழமைமொழி
திறமையாளனை படைத்தே
திறம்பட ஆண்டமொழி
தேடியும் ஆடைத்திடா
தேசமின்றி தேசம் வாழும்
இனிய மொழி இருந்தும்
ஏனோ தனக்குள் தானே
சண்டையிட்டே தேற்குது வீனாய்!!!
விழுந்தபோது உயர்ந்த
கையின் முன்னே
வெட்டிக்கதை பேசிய
உருவங்கள்
உடைத்தே நெறுங்கிய
துகல்களில்
கைவைத்தே எழுந்தவள்
இவள்!!!
தோல்விகளின் அச்சத்தில்
வீழ்ந்தே கிடப்பதே
சுகமென
கையில் எடுத்ததே
தொலைத்தவர்
காலத்தை சிந்தித்தே கடந்தபோதே
நான் சந்ததித மனிதனில் என்
இதயம் வெறுத்தவத்த மனிதனே
தன்னைமறக்க
கோப்பைக்குள் விழுந்தமனிதன்
கெட்டதை வெறுத்தே நல்லதை
சிந்தித்தால் கெட்டவள்
இருக்கும் நிமிடம் உண்மையற்றபோதும்
போதுமென்ற காலத்தேடு நான்
தேவையென ஏங்கும் மனிதனுக்கு
என் மீதி காலம் சமர்ப்பணம்!!!
வாழ்க்கையெரு விற்பனை
பொருளானது. கைக்குகை
மாறியேடத்துடிக்கின்றது!!
நல்ல
விலையில் விழுந்துகிடக்கின்றது
சுகமாய்
இருப்பதாய் நினைத்தது!!
நிரமில்லையென சரியும் போதே
அழுகின்றது!!!!
தனித்தனி கூட்டிற்க்குள்
தனிதனியே அடைபட்ட
மிருகங்கள் ஓன்றாய்
ஓற்றை கூட்டிற்குள் கட்டவிழ்த்தே
விட பட்டுகின்றது இங்கே!
அறிவேடு திறமையை அழித்தே
இழிவுபடுத்தும் உணர்வுகளை
தமக்குள் கொண்டு
தன்னை தானே
கட்டியாளத்தெரியாமலே
தன்னை காப்பத்திட போராடுது
சிறப்பாய்!!
உணர்வுக்கும் அறிவிற்கும் நடக்கும்
யுத்தமதிலே குணங்களே ஆயுதம்
பிழைகளும் சரிகளும்
மாறி மாறி காத்தாலும் இறுதியில்
தன்னை தனக்குள் அடைக்க முடிந்தவையே
காயபட்டாமல் வெற்றியடைகின்றது!!
அலையின்
சூராவளியேடு சுழண்டு
சுழட்டிய சுழலுக்குள்
சிக்கிடாமல்
சுழண்டாடியே
துடுப்பிட்டு சுழண்டவள்
தன்னை வைத்தே
உயிரை மீட்டிட போராடியதன்
நம்பிக்கையே வீரம்
பேசிப் புகழும் வீரத்தை
மறைக்குது
பெண்மையின் அழகு அந்த
பெண்மைக்கு கிடைத்த
சிறுமைகொள்
பெருமையின் அழகு
ஊமைக்கு கிடைத்த மொழி
அந்த பெருமைகொள்
அறிவை அழிக்க
மறைக்கப்படுவதே பெண்மையின
அழகின் உண்மை !!!
தெளிவில்லா மனதையே
குழப்பிட முடியும் தெளிவான
மனதை
குழப்பிட பலர் தோன்றியே
தேற்றே போக உறுதியான மனதின்
தெளிவே காரணம்!!!
நாம்செய்வது
நமக்கு புரிந்தாலே போதும்!!
குழப்பிட நினைப்பவரை நாம்
குழப்பியே கடந்தே போக!!!
பயமற்று
குழதை தாய்மடியில்
சுகமாய் உறங்குவது போல்
உன் மடியில் குழந்தை போல்
நான் உறங்க
நீயே ஏதோ வளர்த்தவளிடம்
கூறுவதை போல் புலம்பிகொள்கிறாய்
நானே உன்னை
வேற்றுமொழியாளன்
என்னிடம் ஏதோ கூறிசொல்வதைபோல்
அர்த்தங்கள் புரியமலே.
உறங்கி விடுகின்றேன் !!!
இன்னும் குழந்தையாய் நானும்
வேற்றுமொழியாளனாய் நீயும்
ஒன்றை இசையின் தாலாட்டாய்
தொடர்கின்றது உறக்கம்!!!!
நம்மை நம்பியே
நம் உறவுகள
நம் ஆசைகளை
தாண்டிய நம்மை
நாம் வாழும் காலம் நம்மோடு
கட்டிபோடும் பலவிதமாய்
உறவேடு!!
ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
அதிகம் தான் நம்மோடு
அதையும் தாண்டிய தியகமே
நம் வாழ்க்கை !!
இன்றைய நாளை
ஆசைகளையே நம்பியே
அறுத்தெறிந்தேயேடுது
உறவை!
அன்றைய தேடலில்
கண்டுகொண்ட நம்மை
இன்றைய நாளை தொலைத்ததோ
பிரிவாகின்றது மதிப்பற்றே
தந்தை தாய் கூட
தூரமாய் போனதே நியமென்ற
ஆசையின் மேகத்தால்
பயமற்ற மனிதன் வரமாய்
இருந்தும்
தவறு அஞ்சா மனிதன்
தலைநிமிர்கின்றான்
உயர்வாய்!!!
என் பாதையை நான்
தெரிவு செய்தே. நடக்கவில்லை
என் பாதையின் தடைக்கல்லாய்
மாறியவர்களே என் பாதையின்
தொடக்கமானார்கள்
எனக்கான எந்த இலட்சியமும்
என்னில் நங்கூரமாய் கிடக்கவில்லை
இருக்கும் நிமிடத்தை எனக்கான
நிமிடமாய் மாற்றியே வாழ்க்கை
அழகாய் நகர்ந்தது இங்கே
எதிரியும் தண்பரும்
ஒன்றாய் என்னேடே எப்போதும்
நடந்தார்கள் இருந்தும்
யாருடனும் ஒட்டி வெட்டி
புதிய பாதை தேடவில்லை!!!
என்னை சிறையெடுத்த
வலிகள் மட்டுமே.
அழுதுகொண்டே ஏதோ
ஓரு நம்பிக்கையில் என்னேடு
தொடர்கின்றது எதோ ஓரு
நம்பிகையேடு !!
தொலைத்த இடத்தை விட்டு
தொலைதூரம் கடந்த பின்னர் தான்
தொலைவான இடத்தின்
வெற்றிடம் தெரிவிக்கின்றது
இடத்தின் நியத்தை!!!
நேசத்தால் பூத்த
நேசத்தின் வாழ்க்கை
காதலின் வண்ணத்தில்
அழகை ரசிக்கின்றது
சின்ன சின்ன
விடையத்தையும் அழகாய்
மனசே உறைந்தால் தான்
நம் உணர்வுகள் பேச மறக்கும்
உணர்வைகளே
உறைந்தால் தான் எவ்வளவு
வலியையும் தன்னுள். சும்ப்பது
தெரியாமல் சுமக்கும்
நன்மையற்ற மற்றவர் தரும்
அவமானங்களை சதாரனமாய்
கடந்தும் செல்லும் !!!
ஏதோ ஒன்று என்னை
தூக்கிடா இரவில்
ஏங்க செய்கின்றத்து
ஏதோ ஒன்று என்னை
தனிமையை த்தேடியேடச் சொல்ல
ஏதோ ஒன்று என்னை
மரணத்திடம் கைபிடித்திட
செய்கின்றது
ஏதோ ஒன்று என்னையே
நானே வெறுத்திட சொல்கின்றத்து
ஏதோ ஒன்று என்னை
திசைகாற்றில்
சிக்கித்தவிக்க வைக்கின்றது
ஏதோ ஒன்று என்னை
மொழியற்ற ஊமைபோல்
கூண்டினிலும் அடைத்தே
வைக்கின்றது
அந்த ஏதோயென்றை
எதுவென தேடித்தேடி பார்த்தேன்
நான் பெண்ணாய் பிறந்தே
இழந்தவை எனக்காய்
தந்த அன்பின் பரிசுகள்
என புரிந்தது
என் உணர்வுகள்
பேசும் போது
உயிர பிரிந்த ஓரு
உடலின் மொழியில்
யாரோ தேடும் அன்பில்
ஒரு ஆத்தமாவின் உணர்வுதான்
நானெ புரிந்தது !!
எப்பவும் நமக்கே நமக்காய்
ஒரு உயிரை தேடும் மனசு
அப்படியுமில்லையெனில்
நம்மை நம்மைவிட அழகாய்
நம்மை பார்த்துக்கொள்ள
தேடும் மனசும்
அப்படியுமில்லையெனில்
நம்மில் தேன்றும் வலிகளை
புரிந்தேனும்நம்மேடு
வாழ்த்திட தேடும் மனசு
இந்தேடலில் தேற்கும் மனசே
சலிப்பேடு வெறுப்பை சுமக்கும்
தனக்குள் வாழ்வின்
வெற்றிகள் தனிமனிதனை
உருவாக்கும் மனிதனிடம்
ஓழிந்திருப்பதை வெற்றியாளன்
புரிந்திட்டால்
தேடிதேற்றவருக்கும் கிடைக்கும்
நல்மனசு!!!!
காவியங்களில் ஏதோ ஓரு
இடத்தில்
பெண்மையை தொலைத்தே
தொலைதூரமானது காவியம்
பெண்மை தேற்ற இடத்தை
தேடிக்கொண்டேயுள்ளது
எங்கேயென தெரியாமல்!!
இல்லம் தேற்றே
உலகம் தேடும் அமைதி
இல்லையென தெரியா
இல்லத்தின் கதவுகளே
உலகத்தை நேசிபமாய்
கூறி க்கொண்டே மூடியவழியினுடே
உலகத்தின்அமைதியை
தேடுகையில்
இல்லம் உடைந்தே இல்லாமல்
போகின்றது அமைதியை
தண்ணீரேடே கண்ணீர் பேச
மழையேடு காதல் பேச
மொழிகள் ஊமையானது
வழியில்லா யுத்தம் போல்
வெள்ளி பணம்
சோறுபோட பச்சமிளகாய்
விலையென்றால் அன்னை
அழுகின்றால் விலையேற்றதை
எண்ணியே
அள்ளியே தண்ணீர் ஊற்றி
வீட்டேடு தோட்டம்
செய்த நாட்கள் தோற்றதே
வீட்டுத்தோட்டம் எங்கே என்றேன்
வீணாய்போனது தண்ணீரைபோல்
மனித சுயசிந்தனை தன்னை
வெளிநாட்டு உறவிடம்
அடைவு வைத்தே காத்திருப்பாதால்
என்றாள்!!!!
அழகாய் காட்டும. கைகளிலேயே
சில தவறான கையுறை
மின்னுவதால் அழிகின்றது
கையுரையின் கைபிடிப்பிற்குள்
அழகிய பெண்னின் வாழ்க்கை
முற்கள் பாய்ந்த
சொற்களை கொஞ்சம்
சேகரித்தேன் என்னுள்
என் பாதைகளை கடந்திட
கற்கள் பட்டவலியை
மறந்தே பதம் போக
தக்க வைக்க ஆசையற்ற
பயணமான வாழ்வில் கொஞ்சம்
கற்பனையை இசையாய்
கொடுத்தேன் என் இதயம் தாங்க
இயல்பாய் இயங்கா இதயம்
துடிக்க மறந்த நிமிடம்
இசையே ஒடியது என்னுள் உயிராய்
ஆச்சரியமாய் விழிக்கும்
விழிகள்தோற்றுவிட்ட
உறவாகளாய் என்னை
தேற்றியே தூக்கியே
உறவாகி என்னுள் துடிப்பதும்
இசையே
அச்சத்தில் வந்த பயத்தில்
மிஞ்சமாய் போனவாழ்க்கையை
கற்பனைகள் தொட்டிடா
கற்சிலையாய் வடித்தெடுத்தால்
பக்கத்தில் நின்று புறம்பேசும்
மனிதனும் பகையற்றே போனான்!!!
துள்ளிய கால்கள்
அள்ளிய ஆசைகளை
நம்பிய இதயம் தட்டிவிட்ட
நினைவு கட்டிபோட்டது
கால்களை. எட்டிப்பிடிக்க
அச்சமற்ற துணிவு. இருந்தும்
அக்கறையாய் இக்கரையில்
நின்றுவிட்டது கால்கள்
சித்ததுள் சிதைத்த
சின்ன சின்ன கனவு
தொடைக்குழிவரை
வந்து வந்து சென்ற
அழகிய ஆசை
இருந்தும் மறைந்த
கற்பனைகள்
எழுதமுடியா தோல்விகளால்
எழுதி முடித்த புத்தகம்
இருந்தும் வருகின்றது
ஏழ்மையேடே ஏக்கம்
விரைந்தே போகுமே காலம்
விரைவாய் முடியுமே நாட்கள்
இருக்கும் உயிரை தேடி தருமே
விடுதலை இயல்பாய்
நடித்தே இயலாதே தேற்கின்றது
இதயம்
இல்லையென்றதை
இருப்பதாய் எழுதும் விதியிடமே!!!
மேகங்கள் என்னிடத்தில்
கேட்டது
உன் எண்ணத்தில்
ஒரு வண்ணத்தின் தூரிகையால்
உன் விம்பத்தின் புன்னகைக்குள்
வானவிலால் ஓரு கற்சிலை
வரைய கொஞ்சம்
கார்மேகம் ஆடையுடுத்தி
என்னேடு
கறபனை கடலில் விழுந்திட வாயென
நான் கனவில் கரைந்த
கண்ணீர் விம்பம் நீயே கற்பனை
வானின் ஆச்சரியம் என்னை
வரைந்தே உந்தன்
கற்பனைதேற்றிட வேண்டாமே
உன் கார்மேக ஆடையே
போதுமென்றேன் எனக்கு
ஆச்சரியத்தின்ஆச்சரியம்
தன்னை கரைத்தே வானவில்லை
தந்தது எனக்கு
சுயநலமே பலர் வாழ்க்கையை
திசைகாற்றில் சிறவிடுகின்றது
கொஞ்சம்
தன்னை மாற்றிட முடிந்தவனே
தன் வாழ்க்கையில்
தெளிவு கொள்கின்றான் தெளிவில்
சிதறும் பிழையே
தவறை மறுபடி செய்யாமல்
வாழகற்றுக்கொடுக்கின்றது
வண்ணத்தின் வண்ணத்தில்
எண்ணங்கள்சொல்ல
வண்ணத்தை எடுத்த
வண்ணம்
கடசியில்தந்தே
சென்றதுவெள்ளை
வண்ணத்தை
வாழ்வின்நியமதை
புரியா பெண்மை
கைநிரைய வண்ணங்களை
அள்ளி வந்தே மழையில் நனைத்தே
புரிந்தாள் தன்னை!!!
நமக்காய் யாரேனும் வாழவே
நம் மனசு ஏங்கும்
காலங்கள்போகப்போக
எல்லாமே குறைய குறைய
எது இதில் நியமென ஏமாற்றங்கள்
கற்றுகொடுக்ககொடுக்க
கொஞ்சம் கொஞ்சமாக
நம்மைவிட்டு
ஒவ்வொன்றாய் விலகவிலக
நம் தனிமை கற்பிக்கும்
நியமே உண்மையான
வாழ்க்கையாகும்
இப்போ
நம்மை தவிர நமக்காய்
யாருமில்லையென்ற உறுதியேடு
ஒரு புன்னகைபதிலேடு
வாழ தொடங்குவோம்
இங்கே
ஆசைகளும் கனவுகளும்
சிலநெடி துறல் போல்
மனதில் விழுந்தேடினாலும்
காலம் கைபிடித்து நிறுதிவிடும்
காயங்கள் கண்மூடி
உறங்கி கொண்டேஇருப்பதால்
நம்பிக்கை ஓன்று மட்டும் எப்போதும்
நிழலாடும் நம்மில்!!!
தெரிந்தவர் தெரியாதவர்
கைபிடித்தே நடத்தி சென்றால்
வாழ்க்கை சுகமாகும்
மாறாக நாம்தெரியவர்களையே
அதிகம் காயபடுத்தி
நம்மை பெரியவர்களாய்
காட்டிக்கொள்கின்றோம்
தவறுகளில்சிந்திக்க
செய்த பெண் தாமரை
சேற்றில் பூக்கும்
வெண்தாமரைப்பூவாய்
தன் மனசுக்குள் பூக்கின்றது!!!
இங்கே மனித அழுக்குள்
தன் அழுக்கையவது மழைநீர்
போல் தூய்மையாய் பட்டேட
நிமிர்நே நிக்ககின்றது பூ!!!!
தன்னில் தேடும்
மண்ணின் அழகு வடிவத்தில்
பெருந்த கற்பனை அழகு
வளைப்பவர் கைகளில்
வளைந்திடும்அழகு
வளைவுகளின் கண்களுக்குள்
வளையா அழகு
மதியுண்டு மறுப்பர் முன்
மறைத்தெளிரும் அழகு
தனித்தடைத்தே தனியாய்
தொலைத்தவர் கான அழகு
தடையங்கள் தேடும்
ஆராட்சியின் தேடலின்அழகு
அழிப்பதும் சிதைப்பதும்
இதயம் தொலைத்தவர்
படைப்பின் அழகு
இருந்தும் ஒளிருவதே
கருணைகொண்ட கண்ணின்
அழகு
கவியாக தனித்தே
தன்னை காக்கும்
உறுதி
எதையும் செய்யும்
திறமை
யார் தடுத்தும்
நிக்கா தேடல்
தன்னைதானே
தேற்றுவிக்கும் தைரியம்
யாராலே
உடைத்தெறியும்போது
தேற்றுவிட்டால்
என்ற பயம்
தோற்றுவிக்கும்
கோழைவிம்பம்
நெடிப்பொழுதில்
கொடுக்கும் தைரியமே
மரணம்
இதனிடமே
நானும்தோற்றேன்
ஒரு நெடிம்பொழுதின்
கோழையாய்!!!
அழகிய கனவு ஓன்றை
தந்தது விழிகள்
இதயம் பூவாய் சிரிக்க
புன்னகை கண்ட இறைவன்
தொலைபேசி சத்ததால்
தொடர்வை அறுத்தான்
கனவும்மறைய
தொடர்வும் நிக்க
எல்லாம் மாயமாய் போக
விடியலி்ல்கனவுக்கவிதை
கனவில் புதைய
ஏக்கம் கிறுக்கலானது!என்னேடு!!!
தீயில் சாம்பலான த்த்துவம்
இல்லையென்ற விதி
தொலைத்துபோன உருவம்
இருந்தும் தேடிபார்க்கின்றனர்
சாம்பலுக்குள் ஒழித்து கிடக்குமே
வாழ்க்கையென !!!!ஊமையான
உணர்வு உயிரே இல்லா கவிதை
படித்தாலும் அறியா கிறுக்கல்
பார்வையின் முன்னே இருட்டு
இருளும் ஒர் நாள் ஓளியாய்
மாற விழிகள் கண்டு
கண்ணீர் ஊற்ற
சாபலும் மறையும் மண்ணேடு!!!
புரிந்திடாவர் கைகளில்
பொம்மையாவதை விட
புரிந்தவர் கைகளின் நம்பிக்கையானால்
கையேடு வெற்றி கண்களேடு
மகிழ்ச்சி கஷ்ரத்தோடு போராடியேனும்
அடையும் உறுதியாவோம்!!!
இல்லத்தின் அழகிற்குள்
அஞ்சலம்பெட்டிபோல்
பயண் பட்டால் பெண்
வாசணைதிரவியமாய்
வலம் வந்தால் ஆண்
இங்கே
வாசணைபடும் இடத்தினை
பலர் பேசிபெருமை கொள்ளவர்
ஆனால்
அஞ்சலபெட்டிகளை
மட்டும்
மறைத்தே வைக்கவே
ஆசைகளேடு
காதல் கொள்கின்றது
பொம்மையை ரசித்தாலே என்
இதயம் தாங்காமல்
கோவம் கொண்டே
சண்டை போடும்
என் கோவம்
தப்பே சரியே அறியேன்
ஆனால் ஒற்றையாணைத்தஙிர
இவ்வலகில் ஆண்மையே இல்லையென
தன்னை தொலைத்து
தன் அறிவைதொலைத்து
சுயமிழந்து வாழ எப்படி முடிகின்றது
பெண்ணால்
வீரமற்று விவேகமற்று இவ்வலகில்
ஆச்சரியமாய் தோன்றும்
பெண்மைகள் எழுதும்
வாழ்க்கை நாடகம் சந்தோஷத்தை
புதைத்து தன் நம்பிக்கையும் புதைத்து
தன்னையே அழித்திடும் எதிர்கால
சூனியக்கற்பனைகள்
இன்று
உன்னை இரட்டை பயிராய்
பிரித்தே வடிக்கும்
வடித்தில் கிடைக்கும்
முடிவின் கதைக்கு
மட்டுமே நீ வாழ்வதாரம்
பெண்னே ஒன்றைஏந்தி
ஒன்றை பயண்படுத்தும் ஆண்களை
இரண்டை ஏமாற்றுவதை
உணரும் காலம் எக்காலம்
பாராங்கற்களை கொடுத்தவன்
கடினபாதையில் தண்ணீர் இல்லா
கண்ணீர் தடாகம் வடித்தவன்
இல்லையென்ற ஒன்றை மட்டும்
இறுகட்டிவிட்டவன்
இருக்க நிலையில் தனிமை தந்து
மரணத்தை நேசிக்க சொன்னவன்
இருப்பவர் இல்லாதவர்
இயல்பை கற்க
வறுமைக்கு என்னை விற்றவன்
வரைந்த பாதை கசக்க
மனசை கல்லாய் மாற்றியவன்
ஆசைகள் தொலைத்து
தனக்காய் தானே உண்மையாய்
நம்பிட செய்தவன்
நம்பிகையற்ற நிழல்களை
வடித்தே தன்னை
பற்றிய கைகள் கொண்டு
நம்பிகையாய் போராடி
வாழ சொன்னவன் எதிர்காற்றில்
நடைதளர்த்தாலும் எந்தன் கைகளையே
தூணாய் நம்பி நடக்க செய்தவன்
எழுதிய விதியே நானும் பிறப்பும்!!!
அழித்திடவும்
அசிங்கமாய்படைத்திடவும்
கட்டிபோட்டு கற்பனை
செய்யவும் படைத்திட்டதே
உந்தன் உருவம்
தவறி விழுந்தே தவறுகள் சுமக்கும்
அடையலாங்களே உந்தன்
பெருமையின் கொள் அழகு
ஆண்மைக்கு எழுதா விதிகள்
உந்தன் நிழலுக்கு போட்ட வேலிகள்
நியமாய்நீ நிழலாய் வாழ்வதால்
உந்தன் நியமே கற்பனையாகிட
நீயே உலகின் பிழைகளாகின்றாய்
தவறுக்குள் உன்னை கட்டி
ஆண்மை தேடும்
தன் தவறுக்கு முகம்
காட்டிடாதே
உந்தன்
வாழ்வின் தனித்துவத்தை
புரித்திட முடியாமல்
சிதைத்தழித்தே
உன்னை உருவாக்க் உந்தன்
கற்பனைக்கு கூட
கற்றுக்கொடுக்காதே தவறை
உன்னை வடித்தெடுக்கும்
கற்பனைகளே அதிகமாய்
புதைக்கின்றது உன்னை
மண்ணில்!!!!
அழகின் அழகில் மயங்கி
ஒன்றை இதயதிற்க்குள்
இரண்டை ஒளித்தே வைத்து
என் கண்முன்னே
தனியே அமர்ந்தவனே!!
உன்னை சுற்றியே வந்த
என்னை திரும்பிப் பாரா
உந்தன் ஆண்மையும்அழகே!
எத்தனை கொண்டாலும்
அடங்கா ஆண்மையேடு
போட்டி போடா ஆண்மையே
நீயே சிறந்த ஆண்மகன்!
கற்பனையே
சரித்திரமே உண்மையே
கற்றவர் கற்பனை பொய்யே
இவ்வுலகில் நான்
ஆற்றங்கரை கடக்கையில்
தனியே அமர்ந்த உன்னை பார்த்தே
எந்தன் காதல் எனக்குள்
பூத்தது!!
பூத்தகாதல் பூவில் கோர்த்தே
போட்ட மாலைகள் தவறின்
தவறே என்றாலும்
மறைத்தே வைத்த உந்தன்
கதையை தேடா
எந்தன் காதலே தவறு நீ
ஓளித்த ஓளிக்கு
ஓளியை ஏற்றுகின்றேன்
இருளாய் போன இருளின் ஒளியாய்
ஓளித்திட!!!இவ் உலகத்தில்
நல்லவை அழிந்து கெட்டவை
நல்லவைபோல் உயர்கின்றது!!
அந்த கெட்டவை அழிந்து நல்லவை
உயர்ந்திட!!!!
கனவின் கனவிற்குள்
கற்சிலையென்றை கண்டேன்
கையேடு கையெடுத்து
கனவிற்குள் நடந்தேன்
அழகான பெண்வடிவம்
மூடியவிழியின்திரையானது
என்னைப்போல்
கனவிற்குள் ஒரு கற்பனை
என்கற்பனையை தடைபோட்டது!!
ஒரு குரல் காற்றைகிழித்தே
என் நடையை
தடைபோட மெல்ல
திரும்பினேன்
குரல் வந்த திசைகேட்டு !
வேல்விழியின் வால்வீச்சே
திசைதொட்ட ஒளிவீச்சே
உன்மொழிகாற்றின் வில்பட்டு
என் இதயம் விழுந்ததடி கால்லடியில்!!!
என்ற கவி கேட்டு
கற்சிலை போல் நானேயானேன்
சிலைவடித்து கவிவடித்தவன்
குரல் கேட்டு !!!இருள் தனை
கிழித்தெடுத்தவன் உருவம் தேட
கனவினை உடைத்தே விழிகள் திறந்தது
பாராமல்!!!
ஆழகான உறவின் அழகிய
அன்பினால் அழகான
சதருங்களை தரமுடியும்
ஆனால்
அழகிய உறவுகள் தான்
இங்கே எங்கேயென
தெரியமால்ஏமாற்றம்
அடைகின்றோம்
சின்ன வயதின்
கற்பனைகள் மாறலாம்
ஆனால்
வயதான காலத்தின்
ஏமாற்றங்கள்மாறாதே
எப்பவும்
மனிதனும் இயந்திரமும்
பழுதடையும்வரைதான்
தேவைப்படும் தேடல்கள்!!!
என்னில் நின்ற எல்லாம்
தொலைத்து இல்லா உயிராய்
இருந்தும் கடந்த காலம் பெரிதே
ஆனாலும் கற்றுதந்த மனிதன் கூட
நடந்தே கடந்ததால் கடந்த வழியில்
வலிகள் மறைந்த மதியாய் தேய்ந்தும்
வாழுது வாழ்க்கை!!!
என் சுவடுகளின் கண்ணீர்துளியை
கடல் அலைகள் அள்ளிச்செல்வதால்
என் பாத்த்தின் சுவடுகள் தடமின்றி போனது!!
உதிர்த்த பூவிடம்
இதயம் தேடும் கனவு
இறந்த மலரிடம்
உயிரை தேடும் கற்பனை
அழித்த உயிரிடம்
ஆசையை கேட்க்கும் பாசம்
இருந்தால் செலவு இறந்தால்
வரவு இதுதான் உயிரின் உறவு!!!
பெண்மை தேற்ற மென்மை
வன்மை கொண்ட தாய்மை
வழிகள் இல்ல வாழ்க்கை
தடைகள் போடும் மனிதம்
கரைகள் தொடா கற்பனை
அறிவு சொல்லா பாசம்
அறியாமை செய்யும் அழங்காரம்
இருப்பதை மறந்து
இல்லாத ஓன்றை
தேடும் வாழ்க்கை பயணம்!!!
இல்லையென்ற ஓன்றைவைத்து
இருப்பதாய் சொல்லி
இயல்வாய் நடித்து இயன்றவரை
போராடும் வாழ்விற்குள்
உள்ளம் ஏனோ நியத்தை
மட்டுமே தேடுகின்றது
வறுமையென்ற கோட்டில்
வாழ்க்கையென்ற நியம்!
எட்டிபார்க்கும் அயல்வீட்டின்
வாசணைகளின் ஏக்கமாய்
மாறுவதும்
இயல்பான. நிமிடங்களே!!!
ஓய்விற்காய் ஏங்குது மனம்
இல்லையென்றது காலம்
சோர்வாய் வாடுது உடல்
சோகமாய் விழிக்கு காலை
இயந்திரமாய் தேற்றது இதயம்
இயலாமல் தள்ளாடுது முதுமை
பொறுமைக்கு கிடைத்தது தனிமை
போதுமடா என்றது உயிர்
என் சந்தோஷங்கள்
என்னிடம்இல்லையென
என் ஏமாற்றங்கள்சொல்லியது
என் நம்பிக்கை
என்னிடம் இல்லையென
என்தோல்விகள் சொல்லியது
என்னை புரிந்திட
யாரும் இல்லையென
என் கண்ணீர்துளி என்னிடம்
சொல்லியது!!!
பிரிவின் கதையில் பல
விம்பங்கள் உடைந்தது தானாய்
மெளனத்தின் மொழியில் பல
உறவுகள் பிரிந்தது தானாய்
உளியின் வலியில் என்னைக்
கடந்தேன் நானாய்
மொழியின் அழகில்
உயிரையிழந்தது வாழ்கை
!!!விதியின் கதையில்
கசந்தே போனது நிழலும்
முடியும் வரையில்முயன்றே
தேற்கின்றது நாட்கள்
இருந்தும் வாழ்க்கை
இல்லாதே போனது கதையில்!!!
நான்கற்பனைகளை
கடந்திட ஓரு
கற்சிலை நின்றது
முன்னே
கண்நீரை கடந்திட
பல கற்பனைகள்
தேற்றது பின்னே!!!நான்
மனிதனை கடந்திட
பவ மிருகங்கள்
நின்றது முன்னே நான்
மிருகங்களையே
கடந்திட பல காயங்கள்
வந்தது பின்னே!!!
முற்கள் சிந்தித்தால் வலிகளை
சந்திக்க கால் துணியும்
இதயம் சிந்தித்தால் வாழ்க்கை
யுத்தம் செய்ய துணியும்!!
நினைவுகளை அழித்திட
நினைத்தால்
நினைவுகளே ஈட்டியாய்
பாய்கின்றது என்னில்
தப்பிக்க முடியா
தண்டனைகளை விட
தப்புகள் இல்ல
நினைவுகள் பரவாயில்லை
வாழ்வில்!!!
நமக்கே தெரிய சில விசித்திரங்களை
சந்திக்கும் போதுதான் இந்த
இடம் நமக்கானதில்லை என்பதை
அறிந்து விலகுகின்றோம்
ஓவ்வொரு தாள் விடியலிலும்
மனசு ஏங்கின்றது நாளைய
ஒய்வை தேடி உழைப்பும்
சலிப்பும் சேர
இறைவனும் கற்பனையாய் தேற்க
வாழ்க்கையும் வெறுப்பாய் மாற
இன்னும் என்ன என்ற நாளையாகின்றது
இயலாத சுமைகளை சுமக்கும்
ஓவ்வொரு இதயமும் முதுமையில்
தேடும் நின்மதியை எந்த சுமையும்
திருப்பி கொடுப்பதில்லை ஆனாலும்
சுமக்கின்றது தன்னையும் சுமந்திட
ஒரு இதயம் இருக்கும் என்ற நம்மிக்கையில்!!!
ஆண் உலகத்தின் தேடல்
போதையென்பதால்
உயிரை மறந்த உடல்களே
அதிகம் நேசிக்கபடுகின்றது
இங்கே வேலிகளும்
பாதுகாபற்றவையென்பதால்
பெண்ணின் உடல்களே பேசுபொருள்
கற்பனையாகின்றது!!!
நம்மை எப்படி மாற்றினாலும்
நம்மால் மாற்ற முடியாமல்
தொலைப்பது நாம் மனிதனாய்
பிறந்த பிறப்பை மட்டுமே
தொலைத்துட்டு தேடியழையும் போது
சரிசெய்ய முடியாமல் தவிப்பதும்
இப் பிறப்பால் தான்
விழும்போது தாங்கி பிடிக்க
கைகள் இருந்தால் எழும்போது
வலிகள் தெரியாமல்நினைவு சொல்லும்
அன்பின் ஆழத்தை!!!
இல்லங்களை கோயில் என்றான்
தமிழன் இப்பே தெய்வங்களே
அழுகின்றது கோயில்களை பார்த்து
இல்லங்களிலும் இல்லை அன்பு
என்பதால்தெய்வங்களும்
ஆசிரமங்களில் தேடியமர்கின்றது !!
என்னில் பிறந்த
கற்பனையை
என்னுள் வடித்தெடுத்தே
வரைவதால்
என்னை கற்பனைக்குள்
தேடும் கண்கள்
தொலைத்திடுது உண்மையை!!!
சிலநெடி நம் துன்பம்
யாரையே தேடுது நமக்காய்
சிலநெடி நம் துன்பம் யாருமற்ற
தனிமையை தேடுது நம்மால்
வந்த துன்பம் தனிமையை தேட
இறைவனால் எழுதிய துன்பம்
ஆறுதல் தேடு!!!
தவறுகளை மன்னித்து வாழ்லென
பெண்மைக்கு சொல்லும் மனிதம்
ஆண்மைக்கு பெண்மையை
தண்டிக்கசொல்லிக்கொடுக்கிண்றது
ஆண்மையுலகத்தின் கண்ணாடிமட்டும்
இன்னும் இருட்டாய் இருப்பதே ஆச்சரியம்
ஆண்மையை ஞாயபடுத்தும் மனிதம்
பெண்மைக்கு மட்டும் ஞாயத்தை தேடாமலே
அழிக்கின்றது!!!!இன்னும்
இவ்வுலகம் மனிதன்மையற்ற
ஆண்மையுலகாமா?
சின்ன ஆசை சிங்காராசை
என்னை தள்ளி வைத்து
புன்னகைக்கும்பூவே
உன் மீது ஆசை
ஆசை ஆசையாய்
அள்ளிசூட ஆசைகொண்ட
ஆசைக்கு இல்லைபோவென
ஆசையை எரித்த பூவே
உன்னை தொட்டெடுத்து
கூத்தல் சோர்க ஆசையில்லை
போ!! மங்கையவள் வாசம்
கொண்ட மல்லிகைப்பூவே
நீ வேண்டாம் எனக்கு
உன்னைக்கட்டி
தலையில் சூடும் ஆசையில்லை
வேண்டாம்பே
நீ
என்னைத்தெட்டு தலையில்
வாட
என்னைபோல் வேண்டாம்போ
நான்
கட்டிமாலையாக்கி
கழுத்தை அழகு பார்க்க
ஆசையில்லை என்றாலும்
வண்ணம்கொண்டரோஜாவே
உன்னை விடவும்
ஆசையில்லையெனக்கு
வாசம் தோற்றபெண்ணிவள் தான்
உன் வாசத்தோடு எறிந்தே போக
சின்ன ஆசை உன்மீது எனக்கு
மங்கையவர்அழகில்
மங்களத்தை கொடுத்து
அமங்கலம் தேற்றிவித்த
கதைதேடவில்லை
உடலுக்கு கொடுக்கும் அலங்காரம்
மனசுகிடைக்கா பிறப்பென
எனக்கும்தெரியும்
ஆனாலும் ஆசை உன் மீது
என் உடல்மூடும் ஆடையாய்
என் தீ தாங்கும் குளிர்ச்சியாய
என்சாம்பலேடு
ஒன்றாய் கலந்தே கடலில்
கலக்க!!!
இலக்குகள் இல்லை
சாதித்துடவுமில்லை
சாதிக்கநினைத்ததுமில்லை
என் பயணத்தில் பிடித்ததை
எனக்காக செய்தே நடக்கின்றேன்
இங்கே கொஞ்சம் கிறுக்கள்
கொஞ்சும்தமிழேடு
அச்சமான பிறப்பை
கொஞ்சம் மறக்க
கொஞ்சம் கற்பனை
எப்படி தேற்றலும்
சட்டென தூக்கும்
இசையின் கையில்
விழியின் தூக்கம்
மனதின் தூக்கம்
மறந்தே போச்சு
முதுமையின் பாதம்
வலியால் ஏங்க
இருக்கும் நிமிடம்
மௌனத்தை போதுமென்றது!!!
இறைவியும் இறைவனும்
மறந்த இலக்கணபிழையிவள்
இலக்கியம் தேற்ற விதியாள்
எழுத்தினை கோர்த்த மரணத்தால்
வாழ்கின்றாள்
நம்பிக்கையில் தேற்கவுமில்லை
யாரையும் நம்மி மேற்கவுமில்லை
நான் நம்பிட யாரும் என்னைபோல்
இல்லை எனக்கு!!
என்னை தந்தெடுத்த காலம்
எனக்காய் வடிவமைத்த பாதை
கொஞ்சம் இருளின் அச்சத்தை பல
இதயத்தில் காட்டியதால் சற்றே
புதைத்துவிட்டேன் காலத்திற்குள்
பாலைவனப்பயணமானதால்
வறட்ச்சியானது நாட்கள்!!!
பெய்களற்ற பாதையில்
குத்திய கற்பனை முற்களே
என்னை தொலைத்து தேடியழைகின்றது
நியமாய் மரணம் தந்தெடுத்த
நிழலில் கண்ணீர்த்துளியின்
பொக்கிஷம் நான்!!!
வெறுப்பும் சலிப்பும்
நம்மை சோர்வடைய செய்ய
மற்றவர் முன் தூரமாகின்றோம் நாம்
நம்மை புரியமால் விலகியே போகின்றது
அக்கரையும் பாசமும்!!!
நம் பயணங்களில் கற்றவை
நம்மை பக்குவப்படுதுமெனில்
நாம் ஓரு அழகிய குடும்பத்தையாவது
உருவாக்கியிருப்போம் நாம்
கற்பதுமில்லை
தவறுகளை கண்டு அஞ்சுவதுமில்ல
உண்மையில் நாமே பெரிய குற்றவாழி!!!
எந்தனை முறை
எத்தனை விதமாக
சொன்னாலும் அந்தனையும்
உண்மையெனிலும் அதை
ஒரு நல்லமனிமனிடம் சொன்னாலே
விடையென்னும் முடிவு கிடைக்கும்
ஒரு நல்லமனிதனே
சிறந்த தலைவனாகவும் முடியும்!!!
இருவர் உறவிற்க்குள் யாரும்
நுளைய முடியக்காதல் மலர்ந்தால்
மூவர் வாழ்வின் முட்டாள் உறவு
புதிதாய் பிறந்திட முடியா இதயம்
நமதாகும் !!!
இல்லையென்ற ஏழ்மையிடம்
இருக்கு என்ற திமிர் பிச்சை
கேட்டும் கொடுத்தும் நிக்கமால்
தப்பியேடுது பாசம்!!!
மாமன் மனசுக்குள்
மாமன்நினைப்பேடு
மாமன் உயிருக்குள்
உறங்கிய பையிங்கிளி
விழிகள் திறக்கவில்லை
மரணம் வரை
ஆயிரம் உறவுகள் கூட
இருந்தாலும் மாமன்போல
யாருமில்லையென்று!!!
என்னைத்தொலைத்து
என்னைத்தேட
மாமன் வந்தான்
கையில் கொண்டு
மாமன் கையில்
என்னைக்கண்டு
விழியின் தவிப்பில்
மழையும் வந்தது
கொஞ்சம் கொஞ்ச
கொஞ்சும் மழையால்
மாமன் கையில் நனைந்த
என்னைக்கண்டு
கதிரவன் வந்தான் கொஞ்சம்
பாசம்கொண்டு கொஞ்சபாசம்
கண்டு மெல்லமலர்ந்த
என்னைக்கண்டு
மெல்ல வளைந்தது வானவில்
கூடையாய் எனக்கு!!!
தேவையின் அளவுகோல்
தேடலின் அளவுகோலால்
பிழைத்திடால் வாழ்வின்
அளவுகோல் சிக்கிவிடுகின்றது
சிக்கிய சிக்கலின் முடிச்சிகளை
கண்டறிந்திட முதல் யார் யாரோ
புரட்டிவிடுகின்றனர் !!!
எழுந்தின் வடிவத்தில்
வடித்த கற்பனையித்தோல்வியில்
செதுக்கிய் சில சிலைகள்
உயிர் பெறமலேயே
உறவாகி உணர்வின்றி சிதைகின்றது!!
பெண்மையே நம்மை
தப்பாக நினைத்து
நடிப்பரிடத்தில்
கல்லாக மாறிவிடு
தன்
சந்தோஷத்திற்காக
எம் கைபிடித்து கைவிடுபவரிடத்தில்
நீ கல்லாக மாறிவிடு
கூடவே வாழ்ந்தும்
கொஞ்சம் கூட நம்மை
நேசிக்காதவர் முன் நீ
கல்லாய் மாறிவிடு
நமக்கு நல்லதை செய்வதாய்
தமக்கான நல்லதை தேடுபவர் முன்
நீ கல்லாகமாறிவிடு நம்
உண்ர்வை சிந்தி தன் உணர்வை
வாழவைக்கும் அறிவிலிகள்
முன் நீ கல்லாய் மாறிவிடு
மாற்றத்தை தேடும் மாற்றத்தின் முன்
மட்டும் நீ உளியாய் மாறிவிடு
உண்மைநேசம்
உடைத்தே விடுகின்றது உறுதியை
கைபிடித்தே சொல்லும்
தையரியத்தையும் கொடுக்கின்றது
சபைதனிலும்
மனங்கள்உண்மையெனில்
காதலும் கைபிடித்து
புன்னகைக்கின்றது கூடவே
வாழ
தலைசாய்த்தே
இதயம் வாழ்ந்திட துடிக்கும்
நிமிடம் பக்கம் நின்று கத்தி சொல்லுகின்றது
தனக்கான காதலை
அங்கிகாரத்தை கொடுத்தே
அங்கிகாரம்பெற்று காதலை
வென்று கைபிடிக்கின்றது
நேர்மையாய்! உள்ளத்தின் உண்மை
காதல்!!!
தீச்சுவாலை தீந்தமிழ்
அச்சமின்றி எல்லைதாண்டி
அச்சுவெள்ள சொல்லெடுத்து
அக்கம்பக்கம் கைபிடித்து
தென்றல்கோர்த்து திக்கெட்டும்
தமிழ் ஒளியாய் பட்டுதெறிக்கின்றது
பெண்ணை மதிபதாயே
புதைக்கின்ற உலகம்
இங்கே நம்மை நாமே
தண்டிக்கும். வரலாறு மாறாதவரை
புதைகுழிகளும் பெண்மையும்
உலகத்தில் மாறாது
கருகியபூக்களையே
மீண்டும் மீண்டும் புதைத்திட்டு
வித்திட்டதாய் ஏமாறும் நாம்
நம்மையுணரா நமக்காய்
பறிக்கும் புதைகுழிகளே நம்
தியாகம்!!!
நெடிப்பொழுதில் வந்து
மறைகின்றது ஆயிரம் உணர்வுகள்
ஓரு வானவிலைப்போல் நெடிகள்
கடந்ததும் தானாய் வருகின்றது
ஏமாற்றத்தின் வலிகள் ஒரு தேய்பிறை
ஏக்கமாய்!!!
நம் செயல்களே
மற்றவரை தப்பாக
சிந்திக்க வைக்கின்றது
நம் சுயநலமே மற்றவரை
எதிராய் நிக்க வைக்கின்றது
நாம் எப்பவும்
நமக்கான சந்தோஷத்தை
தேடும் வானம்பாடிகள்
நாம் மற்றவர்
உணர்வை உணராமல்
அழிக்கும் போது
நம்மை மற்றவர்
உணர்வு அழிக்கின்றது
நம்மில் தவறுகள் குறைந்தாலே
மற்றவர்த வறுகளும் குறையும்
ஓரு சுயநலவாதி
ஓரு தியாகத்தை மதிப்பதில்லை
மதிக்க திரிந்தவனே உணர்வுகளை
நேசிக்கவும் தெரிந்தவன்
தனக்கான வாழ்வை
கொஞ்சம் மற்றவருக்காவும்
வாழ கற்றுக்கொண்டால்
நம்மை சுற்றிய வாழ்வும் ஒரு அழகிய
வானவில்லாகும் !!!!
பூவிற்குள் பூவாய்
கொஞ்சம் வண்ணத்தின்
எண்ணத்தில் இதழ்கள்
மலர வண்டுகள் சொன்னது
தேனின் சுவைத்தேடல்கள்
தான் தாமென்று அன்று மூடிய
இதழ்கள் மலராமலே உதிர்ந்தது
மண்ணில்!!!
மரணங்கள் நம்மீது
எழுதபட்டவை
மரணிக்கும் நிமிடங்கள்
விசித்திரமானவை
புரியாவிளையாட்டு பொம்மைகளாய்
நாம் எல்லாம் புரிந்ததாய்
ஓன்றையிழந்து ஓன்றைபற்றி
வாழ்கின்றோம்
எனக்கு மரணகற்று
தந்ததை எந்த மனிதனும்
கற்றிட செய்திடவில்லை
விதியோடு மோதியுடைந்த நிமிடத்தில்
மதிகூட கைகட்டியே நின்றது
என்னோடு !!!
மதிபற்ற பிறப்பு பெண்மை
மதியாளாய்
இருக்கும் வரை இருந்திட்டு
தேவையில்லையென்றால்
தூக்கிபோடும்உடலும் அவளே!!!
தோல்விகளை தந்த
வேல்விகள்
கற்றிட சொன்ன காவியங்கள்
விட்டு விட்டு சென்ற உயிர்கள்
விட்டுவிடாமல்
பற்றிகொண்ட ஆசைகள்
தேடலில் தொலைந்த கண்ணீர்கள்
தேவையென்ற கனவுகள்
தேவையற்ற கற்பனைகள்
உண்டு உடைத்தே
எறிந்து விளையாடி மகிழ்கின்றது
அறியா அறிவாய் !!
பற்றித்துடிக்கும்உயிர்கள்
பக்கமென நினைக்கும்
வாழ்வின் வெற்றி
வைத்திடா இறைவன்ஆட்ச்சி
தீயிற்குள் தண்ணீர்துளியாய்
வாழ்ந்து முடிகின்றது!!!
நினைவேடு நீ நியமின்றி நான்
நினைவேந்தலில் நாம்
கடந்தது. காலம்
கரைந்திடமுடியாமல்
வழிகின்றது வாழ்க்கை
இழந்ததை தேடு இதயம்
அடைந்திட
முடியாமல் தவிக்குது
மனசு
இருந்தும் நம் மரணம்
வாழுது விசித்திரமாய்
இல்லையென்றது அறிவு
இருந்தும் வாழ்வதாய். சொல்லு
உணர்வு
மனசேடு மனசாய் உன்னையும்
என்னையும் இனைந்து விளையாடு
விதி அந்த விதியின்
காத்திருக்கும் நிமிடத்தின்
கவியாய் பிறந்திறக்கின்றாய்
நானாய்!!!
தடைகளை தாண்டி
நினைத்தை செய்யும் போது
கஸ்ரங்களை தாண்டி
நம்மில் வரும் நம்பிக்கை
பிறக்கும் நிமிடம்
மற்றவர் பின்னேமறைந்த
தன் நம்பிக்கையின்
முகவரியின்
சந்தோஷ சாதணையின்
முகவரிகளைவிட
சாதிக்க வைத்த பெருமை
என்னுள் இன்னும முடியுமென
உறுதியளிக்கின்றது!
முகவரிதேடியே பிரிந்தவர்
தடையானவர் என்னால்
முடியாதென கேலிபேசியவர்
கூடவே கூடிநடக்காதே
என்னை தேற்கடித்திட
கைகள் பற்றியவர்
முகங்களின் முகவரியே என்னை
இன்னும் தேற்கவிடா
கைகளாகின்றது என்னுள்
நான் !!
வாழும் நாள் நம்பிக்கை
ஆயிரம் முகமாகும் ஒரு நாள்!!!