பிடித்தவை தூரமாய் போக
பிடிவாதமாய் வந்தமர்ந்தது
சாபம்
கிடைத்தது தூரமாய்போக
தடையாக வந்தமர்ந்தது
சாபம்
கண்டதை காணததை
சொல்லிகொண்டே
கற்றுதந்தே தொடர்ந்தே
கூட நடக்கின்றது
சாபம்
வாழ்க்கையென்னும்
தொலைதூரத்து நெடிப்பொழுது
சாபத்தை மாற்றிடாதே
தவிக்கின்றது
கூடாவிதியால் !!!

No comments:
Post a Comment