பிடித்தவை தூரமாய்
போக பிடிவாதமாய்
வந்தமர்ந்தது சாபம்
கிடைத்தது தூரமாய்
போக தடையாக
வந்தமர்ந்தது சாபம்
கண்டதை காணதை
சொல்லிகொண்டே
கற்றுதந்தே தொடர்ந்தே
கூட நடக்கின்றது சாபம்
வாழ்க்கையென்னும்
தொலைதூரத்து நெடிப்பொழுது
சாபத்தை மாற்றிடாதே
தவிக்கின்றது
கூடாவிதி!!!
No comments:
Post a Comment