தடுமாறும் இடத்தில்இதயத்தின்
கைபிடியானேன்
தடுக்கி விழுந்த இடத்தில் பிடித்தெழுந்திட
கல்லானேன்
புரியா நட்பு பிரியும் இடத்தில் புரிந்திட்ட
நட்பானேன்
இழந்தவையை இதயம் அடையும்வரை
மனதின் உறுதியானேன்
இதயம்தன்னைதேற்றி தானேயெழும்வரை
நல்இதயத்தின் நல்லவையே நானானேன்
எல்லாம் கைசேர கைதட்டி வாழ்த்திட்டு
தூரத்தின் தூரமானேன்என்னை
நானே ஏமாற்றி!!
என்னை தொலைத்து என்னை புதைத்தேன்
எல்லாம்தெரிந்தும்!!!
தப்பாய் தவறாய்என் தேற்றங்களை
மாற்றியவர் விம்பங்களாய் மாற
மெளனமாய் வேடிக்கை பார்த்தேன்
புரியாமல் தடுமாறுவது மனிதமனம்
தானே இறையே !!!
நம்தேவையும் தேடலும்
நம் சுயநலம்என்பதால் !!பார்வையும் எண்ணமும்
மனதின் கற்பனைதானே புன்னகைகள்
மெளனிக்க புதிராய் மாறியது என் திருவுரும்!!!
நல்வையும் நல்லெண்ணமும் மாறாமல்
என்றும் நானே தானே தனியாய்!!