ஒருமுறை மரணம்
பலமுறை வந்தால் உயிர்தான்
எப்படி நடிக்கும் !!
ஒற்றையிழக்கும் வரை அதன்
அருமை புரிவதில்லை
ஒற்றை இழந்தபின்பு
மற்றென்றின் அருமை தெரிவதும் இல்லை
கூடவரும் இன்னென்று
நீண்டே வருவதும் இல்லை
கூடிபேசும் மனிதர் எல்லாம்
கூடவே இருப்பதும் இல்லை
கூட இருப்பவரும். இருந்தும் பயணில்லை
எல்லாம் கடக்குமென மரணவரை நடிப்பதே
உண்மையானது!!!
பிடித்தவர்கள்
மரணிக்கும் போதுதான்
நாம் பிடிக்காதவர்கள கூட வாழும் சுமை
அதிகமாகமாய் அழவைக்கின்றது
பிடித்தவர்கள்
எப்போதும் நம்மை
மகிழ்ச்சியாய் வைத்திருப்பார்கள்
பிடிக்காதஙர்கள்
எப்போதும் நம்மை
அழவைத்துக்கொண்டே இருப்பார்கள்!!!
இறையவன் வித்தைக்குள்
சிக்கிகொள்ளும் போதெல்லாம்
தனிமைகேலிசெய்யும்
மனிதபிறப்பின் அர்த்தம்
தன்கையெழுத்தென
வித்தையாய் எப்போதும் போல
மனம் ஏங்கும்
நடக்காதாயென இயற்க்கை
இயம்பினாலும்
எனக்கு எழுப்படா தேடலே
என் தோல்விகளாய் முடியும்
நான் இழந்த உறவே
என் தண்டனையாகும்!!!