Wednesday 17 June 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

புதைகுழி மண்ணிற்குள்
உடல் மறைய !
முகமிருந்தும் முகமின்றி
முகவிரி தேடும் உடலையும்
உயிரையும் பாதுகாக்கின்றது
உடைந்து எரிந்த உயிரில்லா
மரங்கள் தமக்கு எருவாய் போன
மனிதனை எண்ணி..
எஞ்சியது மிஞ்சியது
மனிதனென எண்ணியதால்!
சிறையில்லா சிறைச்சாலையில்
சுகந்திர காற்று ,சுவாசிக்க கடன்
கேட்பது போல் ,மறுக்கப்பட்ட
காற்று விடுதலை செய்ய
அடிமை உயிரைத் தேடுது மெல்ல!
இட்ட கட்டளையால்
வென்ற கொடுமை
ஏங்கும் மனிதனிடமிருந்து
இன்னெர் விடுதலையை தேட!
தெரிந்தும் தெரியா உலகம்
உதிரும் உயிரின் எண்ணிகை
கொண்டு தேடுது உண்மையின்
உண்மையை! உறங்கும் உயிர் போல்....