மாமன் கண்மணிக்குள் சிக்கி
விட்ட என் மணிகளை
சின்னச்சின்ன சொற்கள் எடுத்து
வானவில் வர்ணம் தொட்டு
வரைந்தான் ஒவியமாய்
வில்லின் அழகில் சொல்லின்
வடிவில் பத்திரமாய்
நெஞ்சுகள் துடிக்க தித்திக்குது இதயத்தின்
உணர்வெங்கும் மாமன் நினைவுகள்
கற்கள் வடிவில் பேச்சுகள்
சொற்கள் இன்றி போன மௌனம்
துன்பம் துணையாக வந்தபோதும்
இழையதன் வடிவாய்
உறையாது ஒடியது மாமன் உணர்வு
என் இதயமெங்கும்
தேடலின் இடையே வரும் தடையின்
நிமிடமாய் யோசனையின்றிய இரவாய்
காரணமின்றி நனையும் மழையின்
துறல்களில் எதிரோ நடந்தது மாமன்
நினைவு
கைபிடித்திட நேரங்களில்
கையணைத்து தூங்கிடும் என்
குட்டியானையின் வடிவில் தட்டிவிட
முடியாது தள்ளிவிட முடியாது கூடவே
நிக்கின்றது மாமன் உயிர்!!!!!