விழுந்த பெண்னின் அரைக்கோணம்
பார்க்கும் விழிகளுக்குகிடைத்ததே
பெண்விடுதலை
உறைபனியின் மேல் ஓரு நடை
விழுந்தெழும்பி தத்தி தவழ்ந்து
மகனின் கைபிடித்த நடை
ஓரு குழந்தை போல்
அழகிய நடை ! விழுந்திடாதே
இறுகப்பற்றிக்கொண்ட மகனின்
கைகளுக்குள் ஓரு நடை
நடக்கக்க கற்றுக்கொடுத்த தாயே
நடக்ககற்றுக்கொண்ட நடை
புதிதாய் பிறந்திட்ட
அழகிய தருணம் மீண்டும்
குழந்தையாய் வாழ்ந்த நடை
அன்பான தருனத்தை
அருகே இருப்பவர் அழகா
கொடுத்தாலே போதும்!!
அழகானா வாழ்க்கை பூக்கும்
வாழ்வோடு
செல்லும் ஆண்டு எடுத்து செல்வதை
வரும் ஆண்டு தந்து செல்லுமா
ஏனத்தெரியவில்லை இருந்தும்
காத்திருக்கின்றேன் எல்லா ஆண்டும்
அழகிய நாட்களுடன் அழகிய
வாழ்வை அழகாய் வாழத்தான்
ஆசை மாமா ஆனால்
நான் அழகியாய் பிறக்கவில்லையே
உனக்கு நீ கைபிடித்து
மாலையிட்டு கையேடு கூட்டிப்போக
கல்மீதும் முள்மீதும் நான் நடக்க
விதியென நீருக்க
கால் வலிபொறுத்து பசிமறந்து
உடல்மெலிந்து உள்ளம் உடைந்து
காதல் ஊமையானேன் உன்னால்
கடசிவரை நீவிரும்பா பெண்ணாகவே
ஆனேன் மாமா!!
சட்டென திரும்பிப் பாரென்றது
உணர்வு
நீயெனப்பார்த்தது விழிகள்
நிழலாய் சிலநொடி நீ தோன்றுகையில்
ஏதோ ஓரு உணர்வு எனக்குள்
சந்தோஷம் தருகின்றது।
அது நிரந்தரமில்லையெனத்தெரிந்தும்
அதேயே மனம் விரும்புகின்றது।
அவள் போராட்டக்களத்திற்க்குள்
பருந்துகள்
அவளை தூக்கியெறிந்திடவே
வட்டமிடுகின்றது அவள் எதிரிகளை
மறந்து பருந்துகளுடன் யுத்தம்
செய்கின்றாள் அவள் உயிர்
எதிரியிடம் அவள் மானம்
பருந்துகளிடம் பெண்மைக்கு
எப்போதும் இருயுத்த வாழ்க்கையே
இருக்கும் வரை!!!
கிழிந்த ஆடையை நனைத்த
மழைத்துளி தொட்டு சொன்ன காதல்
அவளை விட்டுச்சென்ற மரணம்
கொட்டிக்கொடுத்த வலிக்குள்
கைவிட்டு சென்ற கணவன் மிண்டும்
உயிர்பெற்று கட்டியணைத்தததை போன்ற
உணர்வினை கொடுத்தது அச்சமின்றி
புன்னகைத்தால் மிச்சமீதவலிகள் மறந்து!!
மாமன் நெஞ்சுக்குள் வாழும்
இந்த கூண்டுக்கிளி
மாமன் உயிரை தன்
நேஞ்சுக்குள் சுமந்த்து
மாமனை நினைவிற்குள் வைத்து
தன்னை வடித்தால் ஒவியமாய்!
ஒற்றுக்காய் என்னைத்தேடி
உன் இதயம் எனக்காய் துடிப்பது
நிஜமென்றால் நிஜங்களை கண்டு
அச்சம் கொண்டு மிச்வாழ்கையை
தொலைத்திருக்கமட்டாய்
என் தேனீர் சுவையேடு
இசையின் சுவை இணைந்து
என் கவிச்சுவையை களவாடியே
என்னை ஊமையாக்கி உறங்கிட
சொல்கின்றது!!
சொல்லாமலே எனக்குள்
ஒடும் உணர்வைப்போல்
நான் உடைந்தே அழுதிடும் நிமிடங்களில்
எனக்கு சொல்லாமலே என்னை
எழும்பியேட செய்கின்றது இசை!!
நின்றுபேசி பிரிந்த பின்
சிலநெடி பிரியாதே நம்மேடு
வீசும் வாசம்போல் சிலரின்
வாழ்கையில் சில உறவுகள்
அர்த்தங்கள் இல்லா வாசமகின்றனர்!!
எதை என் வாழ்வில் வேண்டாமென
வெறுகின்றேனோ
அதையே திரும்ப கொடுக்காதே
இறைவா
என்னை படைத்தபோது
என்ன நினைத்து
படைத்தாயெத்தெரியவில்லை
ஆனால் எனக்காய் என்முன்னே
உள்ள வாழ்கை கொடுமையான
வலியெனக்கு இறைவா
என்னை புரிந்தும் என்முன்னே
வைப்பது ஏன் இறைவா।சிலுவை
சுமப்பவளை கல்கொண்டு அடிக்கும்
வலியை தருகின்றாயே இறைவா
தண்டனைக்காளாம் மரணமென
தெரியும் ஆனாலும் வலிகள்
வலிக்குது இறைவா!!!என்பிறவியின்
அர்த்தம் பாவத்தின் தண்டனையென
அறிந்தாலும் மனசு கல்லில்லை இறைவா
சோர்ந்திடும் போது தந்தை
கரம் தேடுது மனசு
அழுதிடும் போது தந்தை
மடிதேடுது மனசு
தடுமாறும் போது தந்தை
தோல்தேடுது மனசு
கோவம் வரும்போது
தந்தை முகம் தேடுமனசு
நிறங்கள் நிறப்பிய வண்ண நீருக்குள்
அவளை போட்டு எடுத்தாலும்
அவள் என்னவோ வெள்ளை வர்ணம் தான்
அழகான ஒற்றைகனவு
கிளிக்கூட்டுக்குள் அடைபட்ட
கிளியைப்போல் சிறைப்பட்டுக்கிடக்கிறது
எப்பவும்
தன்சிமைஎன்னை
கொஞ்சம் அழவைக்கும்
இப்போது
என்னை சிந்திவைக்கின்றது
பல விடைகள்
கேள்வியானதால்
கேவிக்கு விடைத்தேடலே
தனிமைக்கு துணையானதால்
கண்ணீருக்கு அர்த்தம் தேடுகின்றது
தனிமை!!
இரட்டை வேடம் இரடடை
வாழ்கை வாழும் இருண்ட
மனித வாழ்வை வெறுத்தே
கல்லறையில் பூத்தேன்
இருந்தும் என்னை
நடிக்க அழைக்கின்றாயே
இறைவா
பொய்யாய் வாழும் வாழ்கையில்
மெய்யான வலிகள் வேண்டாம்
இல்லா உடலாய் வாழும்
உயிர் போதும் இந்தக்கல்லறைபூவிற்கு
துன்பம் கண்டு துவண்டு போன
துன்பப்பூவிற்கு
இனியும் வேண்டாம் உன் வேடிக்கை
தாங்கிகொள்ள இதயமில்லை
தடுத்து நிக்க தைரியமும் இல்லை
போதுமே இந்த உயிர் பட்டகாயங்கள்
விட்டுவிடு கல்லரைக்குள்ளேயே
உறங்கிக்கிடந்திட
வாழ்கையென்னும் நதியில்
விழுந்த உயிர் போகுமிடம்
தானாய் ஒட நாம் எதையே
வென்றதாய் பெருமை கொள்கின்றேன்!!
என் கனவுகள் ஆசைகளுக்காய்
யார் வாழ்வையும் கனவையும்
இதுவரை அழித்திடவில்லை
மாறாக என் கவையே அழித்தேன்
முதல் முரை என் கனவிற்காய்
உன் கரம் பிடிக்கின்றேன்
இது சரியா பிழையா தெரியவில்லை
இருந்தும் என் மரணம் உன்னை
என் கனவின் வழியாய் வழிநடத்துமென
நம்பிக்கையேடு இறுகப்பற்றிக்கொள்கின்றேன்
மகனே உன்னை!!!
ஒரு பெண்மையை
நேசிக்கும் போது
நல்லதை தேடும் ஆண்மை
அந்த பெண்ணை சமூதாயம்
பார்க்கும் பார்வையை மட்டும்
ஒருபோதும் ஏன் புரிவதேயில்லை
அவமானங்களையும் பழிகளையும்
பெண்மை சுமப்பதாலா
அப்போ எப்போ
ஆண்மை பெண்மையை
பாதுகாக்கும்!!இன்றுவறை ஒற்றையாய்
வாழும் பெண்னிற்க்கு புரியவில்லை
ஆண்மையும் சமூதாயமும் !!!
நான் தூக்கியெறிந்த எதையும்
சிந்தித்ததிலை
பிரிவுகளே வாழ்கை பாடமானதால்
விட்டு சென்றவர்கள் நினைவில்
வாழ ஆசையுமில்லை
பிரிந்தே புரிந்தே போகும்
வாழ்கையேடு வாழும் வாழ்கை
என்னை விழாதே தாங்கிகொள்வதால்
புரியாமல் பேசும் வாய்களோடு
கோவமும் இல்லை।
காலம் கடந்து காயபட்டு காயப்பட்டு
இதயங்கள் இருப்பதாய் சொல்லும்
இதயங்களின் புரிதலையும் புரிந்தது
வாழ்வதால் பொய்கள் மீதும்
வருத்தமில்லை!!ஒரு மாயவாழ்கைக்குள்
பேசும் ஓவியம் போல் நான்
என்னை சுயநலவாதியென்றவரகள்
இன்னும் என்னோடு சேர்ந்தே இருக்க
தன்னை தியாகியென்றவர்கள் சுயநலமாய்
தொலைதே போனார்கள்
உங்களிடம் தைரியம் இருந்தால்
நீங்கள் ஒரு அழகான
வாழ்க்கு தேவையான ஒன்றை
தேடியிருப்பீர்கள் ஆனால்
உங்களுக்கு வாழ்க்கையே
வேடிகைவிளையாட்டு என்றால்
உங்களுக்கு அழகின் அர்த்தங்கள்
ஒரு பெண்ணின் ஒபபணை போன்ற
சிலநெடித்தேடலே!!!
சொல்லூக்குள் அடங்கா ஒற்றை
உணர்வை சொல்லிட ஏங்கிடும்
சொல்லுக்கு இல்லை உணர்வு
சொன்னாலும் புரியா சொல்லை சொல்லியே
ஏங்கினாலும் உணர்வுக்கு இல்லை
ஏக்கம் இருந்தும் இல்லாமல் தேடும்
உணர்வே உயிரின் தேடல்
எனக்கான உலகிற்க்குள்
எனக்கான எதையும் யாருக்காவும்
விட்டுக்கொத்திடவும் மாட்டேன்
யாருக்கானதையும் எதற்க்காவும்
எனக்காவும் வைத்துக்கொள்ளவும்
மாட்டேன்!!!
பெண்ணின் கற்பனைக்குள்
கருவெடுத்து கதையெழூதும்
ஆண்மையே பெண்மையின்
நியத்தை அழிக்கின்றது।
இருண்ட பாதைக்குள்
வெளிவரமுடியா யுத்தம் என்னேடு
சண்பையிட்டு கொண்டபோது
என்னால் புரிந்திட முடியா
இருட்டே நியமாய் நீண்டது
ஒற்றை ஒளி பிறந்தபோது
விட்டுவிழகா உறவே இன்று
விலுந்திடம்ஸ் தாங்கயே நிக்கின்றது
விழுந்த காயம்
நெஞ்சின்வலியானாலும்
தாங்கி நிற்க்கும் கரங்கள் நிஜமானதால்
எழும் பூவும் நம்பிக்கையோடு
எண்ணத்தின் வண்ணமாய் மலர்கின்றது
மீண்டும் ஒரு யாழ் இசையாய்
வீசும் காறிற்க்குள் மிதற்க்கும்
மொழீயாகின்றேன் விழூம் இடத்தில்
ஏந்திடுதே s ஸ்வரங்கள் ।
இப்படி வாழ்ந்திடத் தான்!
ஆசைத்துறலாயாய் விழுகின்றது
மனதில் முதல்
மழைத்துறல் பட்ட இடமும்
பூக்கிறது தானாய்!!!
என் கனவிற்க்குள் ஓரு அழகான
வாழ்கை உறங்கியேகிடக்கின்றது
யாரும் புரியாமால்
சிலநேரம் ஏக்கமாய் என்னை வாட்டும்
சிலநேரம் கண்ணீர்த்துளியாய்
கரைந்தேயேடும் இருந்தும்
வாழ்க்கை நகருகின்றது
தானாய்।।
ஓரு ஆழகான வாழ்க்கை
எல்லோர் மனதிலும் அழகாய்
பூத்திருக்கும் ஓரு சிலருக்கு மட்டுமே
அழகாய் கைசேரும்
ஓரு சிலருக்கு கனவின் மேகத்தில்
கற்பனையின் துறலில் நினைவாய்
வாழூம்।
நம்மில் அக்கரையேடு இருப்பவர்
கூடயிருந்தால் போதும்
எதையும் முடிக்கும் நம்பிக்கை
தைரியமாய் பிறக்கும்!!!
எல்லாம் அறிந்தவர் முன்
அறியா ஒன்று இருப்பது
அறிந்தவருக்கு தெரிவதில்லை
எதுகும் தெரியாதவர் முன்
தெளிவாய் ஓன்று இருப்பது
தெரியாதவருக்கும் புரிவதில்லை
இருவர் நிலையிலும்
ஒன்றை இழக்கும் போதே
கடவுள் எலுகின்றான்!!!
தோற்ற போதும்
துவண்டு அழூதபோதும்
தனிமையே உண்மையை சொன்னது
இருப்பவரும் இல்லாதவரும் உன்வாழ்வில்
ஓன்றுதான் என்று!!
என்னை விட்டுச்சென்ற எதையும்
என் வாழ்கை திரும்பப்பெறவில்லை
மாறக என்னை மேலும் துன்படுத்தவே
சிலரை உறவாய் தத்தது இபோ
நான் என்னையே வெறுத்த பின்னே
மரணம் மன்னிக்க சொல்கின்றது!!
என்னை புரிந்து கொள்ளா
ஆயிரம் உறவைவிட என்னை
புரிந்த ஒரு உறவு கூடயிருந்தால் போதும்
நான் நினைத்தது கைசேர
ஒற்றையிழக்கும் வரை அதன்
அருமை புரிவதில்லை
ஒற்றை இழந்தபின்பு
மற்றென்றின் அருமை தெரிவதும் இல்லை
கூடவரும் இன்னென்று
நீண்டே வருவதும் இல்லை
கூடிபேசும் மனிதர் எல்லாம்
கூடவே இருப்பதும் இல்லை
கூட இருப்பவரும். இருந்தும் பயணில்லை
எல்லாம் கடக்குமென மரணவரை நடிப்பதே
உண்மையானது!!!
பிடித்தவர்கள்
மரணிக்கும் போதுதான்
நாம் பிடிக்காதவர்கள கூட வாழும் சுமை
அதிகமாகமாய் அழவைக்கின்றது
பிடித்தவர்கள்
எப்போதும் நம்மை
மகிழ்ச்சியாய் வைத்திருப்பார்கள்
பிடிக்காதஙர்கள்
எப்போதும் நம்மை
அழவைத்துக்கொண்டே இருப்பார்கள்!!!
இறையவன் வித்தைக்குள்
சிக்கிகொள்ளும் போதெல்லாம்
தனிமைகேலிசெய்யும்
மனிதபிறப்பின் அர்த்தம்
தன்கையெழுத்தென
வித்தையாய் எப்போதும் போல
மனம் ஏங்கும்
நடக்காதாயென இயற்க்கை
இயம்பினாலும்
எனக்கு எழுப்படா தேடலே
என் தோல்விகளாய் முடியும்
நான் இழந்த உறவே
என் தண்டனையாகும்!!!
இவள் என்ன கல்லறையின்
மேல் பூத்தபூவா மீண்டும் மீண்டும்
மரணமே மன்னிக்கமறுக்கின்றது
இவளை என் தேவதையென்றவன்
இப்போ சொல்லாதே சென்றுவிட்டான்
பிறவிகளில் சில உறவுகள்
நம்மை தாங்கியே தன்னை தரும்
அப்படி என் வாழ்வில்
வந்த அண்ணன் அவள் சின்னவயதில்
பொறமையால் பூத்த நேசம் அவன்
தங்கையே விட்டத்தந்த பந்தம்
அண்ணியஙள் பொறமைகொள்ளும்
்அன்பு இப்போ என்னிடம்
சொல்லாமல் சென்றே விட்டது
நம்ப மறுக்குது உணர்வு
நம்பித்துடிக்கு மனசு விதியே என்
சந்தோஷங்களை மட்டும் பறிக்கின்றாய்
என்னை பறித்திட சொல்லியும் கேளாமலே
கண்களில் இல்லையண்ணா
கண்ணீர் உன்னை நினைத்தே
அழுது துடிக்க இதயம் மட்டும் அழுகின்றது
உனக்காய்!! அங்கே நான் வரும்போது
எனக்காய் காத்திருக்கும் உயிர்களில் நீயும்
இருப்பாய் !எனக்காய் !
என்றும் உன் சொல்லத்தங்கை
நான் தான் எப்போதும்!
இங்கே இல்லைமாமா நான்
எங்கே எடுத்துச்சென்றாய் என்னை
எங்கையும் காணேமாமே நம்மை
யார்யாரே தேடிப்பார்த்தும்
இல்லையென்று சொல்லியழைக்க
நாம் மட்டும் என்னவானோம் என
ஒற்றை உயிரெடுத்து
எந்தன் இதயம் சுமந்து
ஓருமுறை கனவேடு பேசிட வா மாமா
கற்பனைக்குள் நம்மை விடையாக
கண்டுவந்த கண்களுக்கு ஒற்றை
உயிர்வாசம் பேசும் நாமே வாழ்வின்
தேடலாவோம்!!!
கோடிமின்னல் தாக்கிய
இருள் சூழ்ந்த வனத்திற்க்குள்
ஒற்றைக்குயில் வாழுது தனியாய்
வனத்தை தொலை்த்த ஒளிக்கு
ஒற்றை விளக்கு கூட கூடயில்லா
பரிதாவம்!!!
இல்லையெனும் உறவுகள்
இருக்கும் உறவுஎள்
இருப்பதை மறைக்கும் இதயத்திற்க்குள்
இல்லாமல் இருக்கும் இதயம்
இருக்கும் வாழ்வே
உயிருக்கு இறை தந்த வரம் !!!
முற்களின் உதிரத்த்தில்
பாதம் மருதாணிச்சிகப்பில்
நடந்திட கண்கள் சொன்ன
பொய்யுக்கு கற்பனை உயிர்கொடுத்தான்
வறுமையை அறியா சொல்வந்தன்!!!
வஞ்சியவள் கஞ்சியில்லா
கொடுமையை கண்டுகொள்ளா
மனம்படைத்த கற்பனைகள்
தனக்கு தேவையென்றால் வைரத்தைகூட
அள்ளிக்கொடுக்கும் உடல்தேவைக்காய் !!!
உண்டு உறங்க கூரையில்லாப்
பெண்ணிற்க்கும்
தெருவேர வாழ்க்கையிலும்
வறுமையை போக்க போராடும்
போராட்டத்தை விட
தன் உடல்காக்க போராடும் போராட்டமே
வலிகூடியது!!!இருப்பதையெடுத்து
இல்லா கதைபடிக்கும் உலகானது!!!
மொழிதடுக்க இனம் தடுக்க
நிறம் தடுக்க இதயம் மட்டும்
இதயத்திடம் பேசிதோற்கின்றது
காதல்மொழி!!!
இதயங்கள் மோதிகொண்டே
ரணங்களில் தூங்கிக்கொள்ளும்
இயல்பினேடே வாழ்வதா காதல்!!!
இயற்கையேடே சண்டையிடும்
மரணத்தைபோல் தெரியமலே
வந்தே மறைகின்றதே காதலாய்!!!
கண்ணீரை கைதுடைத்து
மண்மீதேயுள்ளவரை நம்பிக்கையில்
பூப்பதில்லையா காதல்!!
இருள்பற்றிய வாழ்வினுடே
ஒற்றை விரல் தொட்டு ஓளிபற்றும்
பாதைவரை கூட்டிபோகதா காதல்!!
இருக்கும் வரை சேர்ந்தே சுவாசித்து
இனிமையான நாட்களைப்போல்
இணைந்து போக எதைகொண்டு
எது தடுக்குது இதயதிற்க்குள் காதலை!!!
உணவுர்வு எழும் கிறுக்களைபோல்
இதபமொழிகள் களவுபோக இதயம்
பேசா வார்த்தையில் புதைத்திடவே காதலா!!!
ஊருமெச்ச. உறவுஉச்சுக்கொட்ட
ஊருக்குள்ள மாமான் கைபிடித்தே
நடக்கதான் ஆசை !!!
உள்ளூர் பெருமைகொள்
பெருமை போல் மாமான்
உயிராய் வாழ
அக்கம் பக்கம் பொறாமைபடும்
ஒருத்தி நானாய்
ஊருக்குள் வாழத்தான் ஆசை!!!
அச்சதேடு வந்து அஞ்சிபேசும்
மனிதனெல்லாம் எக்கரைக்கு சென்றாலும்
மாமான் ஒற்றைபெயரை கேட்டால் பயம்வர
மாமான் கொஞ்சும் கிளியாக ஆசை!!!
ஊருக்குள்ள உள்ள ஜோடியெல்லாம்
கண்ணுபட்டு கண்ணுகதற மாமன்
கண்ணுக்கு ஒருத்தி
நானாக தானாக ஆசை!!
இஸ்ரதெய்வம் இருக்கும் வரமாக
மாமான் பெற்றதெய்வம்
கொடுத்தவரமான மாலைக்கு
மல்ராக பூத்திடத்தான் ஆசை!!!
கண்பட்டு கண்ணீசொட்டும்
கண்கள் தேடும் ஜோடி
நாங்களாய் கண்களுக்குள்
வாழத்தான் ஆசை !!!
மாமன் கைபட்டு சொழித்திடம்
நிலம்போல் எம் வாழ்க்கை
மண்ணின்பெருமைகொள்
வளம்போல் காலம்மோறும்
வாய்பேசும் மொழியின் சிறபாக
வாழ்ந்திடத்தான் ஆசை!!!
அன்பானவர்கள் கூடவே இருந்தால்
எதிர்மறை எண்ணங்களால் கூட
தோற்கடிக்க முடியாது யாரையும்!!!
நம்மை நாமே சிந்திக்காதவரை
நம் எதிர்வுனையே மற்ளவர்களை
உயரத்திற்க்கு எடுத்து சொல்லும்
நம்மையும் முந்திக்கொண்டு!!!
நீண்ட வான் தொடாதூரம்
நான் தொடா நீயும் நானும்
கார்கால மயில்தோகைபோல்
காத்திருக்கும் கனவிற்குள்
மழைவந்தது!!!
கண்மூடிய நம்பிக்கையில்
தன்னைத்தொலைத்த பூவென்று
நம்பிக்கையை மறந்து
புன்னைக்க கற்றுக்கொள்கின்றது
எட்டிப்பிடித்திடத்தான் ஆசை
ஆனால் எட்டவில்லை உன் கனவுகள்
விட்டு நடந்திடத்தான் ஆசை
ஆனால் முடியவில்லையெனக்கு
தள்ளித்தனியே நின்றிடத்தான் ஆசை
ஆனால் அசையவில்லை இதயம்
எட்டாதே என தெரிந்தும்
எட்டிபிடித்திடா வானவிலின்
வண்ணங்களாய் வண்ணம் தொலைத்து
வண்த்தோட்டத்தில் தனியாய்
சும்மா நிக்கின்றேன் சுமையின் வலியாய்
சொன்னால் புரியா சொல்லின்
மௌனத்தின் புன்னகை போல்!!!
என்னில் என்னை காணாத்தருனம்
எல்லாம் நான் இழந்த தருனம்
ஒற்றை இதயம் என்னை தாங்கியே
எல்லா உறவின் தூணாய் நின்றவர்
இற்றைபொழுது ஏனே இறைவன்
கஸ்ரத்தை கொடையாய் கொடுத்தே
கஸ்ரங்களை சுமக்க சொல்கின்றான்
இதையும் தாங்கி மலையாய் எழுந்து
தவிக்கும் மனையாளின் கணீர்துடைக்க
வரவே வேண்டும் இறையே என்னில்
கண்ட துயரம் எல்லாம் எனியும் கானா
நன்மைகொண்ட நாட்கள் வேண்டும்
எந்தன் உயிரே முதலாய் போகும் வரமே
வரமாய் வேண்டும் வதைப்பதும்
சிதைவதும் நானாகவே முடியவேண்டும்
கண்ணீர் கண்கள் புன்னகைக்கும்
பொழுதாய் நாளைய பொழுது வேண்டும்
இறையின் தீபமே இல்லமாய் மாறிட நீயே
எழுந்தே நடத்திட வா!!!
தாத்தாவிற்க்கு
இரண்டு மனைவியென
பாட்டியழும்போது கூட வளர்த்த
அப்பாவிற்க்கு இன்னெருத்தி வந்தால்
அம்மா உயிருடன் இருக்க!!
அம்மா சண்டைபோட கூட
இருந்த அண்ணனுக்கு
மனைவி கூடவாழ்கையில்
அண்ணன் மனைவியறியாமல்
அண்ணனுக்கு இன்னெருத்தி
இயல்பாய் கைகோர்த்தால்
அண்ணியழுவதை பார்த்து பார்த்தே
அண்ணன் மகன் கூடவளர்கின்றான்
நாளை அவனுக்கு இரு பெண் காத்திருப்பதாய்
கற்பனைகள் நாளைய வாழ்க்கைக்கு
ஒருவழிதேடிகொடுக்க
பெண்ணின் கோழைவாழ்க்கைக்கு
புதிய அந்தியாயம் எழுதிகின்றத்து
கற்பனைகதைபோல் !
!திருட்டுதனங்களின்
அங்கிகாரப்பணத்தோட்டம்
புதியபாதையாய் பூக்கின்றது பழமையில
புதுமையாய்!!!
கவலைவிடுபெண்னே
அங்கிகாரம் இல்லாகோடிகளுக்குள்
கோடிவாழ்க்கை கஸ்ரமில்லாமல்
எதிர்காலத்திட்டதில் சில்லறைகளைபோல்
சிதறி புன்னைக்க கைபிடித்தபடி
நீயே எப்பவும்போல் கற்பனையுலக்தோடு
சண்டைபோட்டே உயிர்வாழ தயராயிரு!!
உன்னைதொலைக்கும் வரை
என்னையாரும் திரும்பிபார்க்கவில்லை
மாமா
உன்னைத்தொலைத்தபின்னர்
ஐந்துவயதிற்க்கு கூட
அன்ரிமேல் ஆசைவருதுமாமா
நீயல்ல உலகில்
வாழ்க்கையே கறுப்பாச்சிமாமா
நான் நடக்கபாதையும் வெறுப்பாச்சிமாமா
என் உறக்கமும் கனவாச்சி மாமா
கனவேடும் கற்பனையேடும் காலமும்
முடிந்தது மாமா!!!
தனித்தபெண்னின் இடருக்குள்
சிக்கிகொள்ளும் குழந்தைகள்
எப்போதும் பாதிப்புக்குள்ளயே
நடக்கின்றனர்
தானாய் நடக்கமுடியாமல்
தொலையும் குழந்தைகளே அதிகம்
ஒடிவிளையாடும் வயதில்
போராடும்காலில் உறுதியுண்டு
ஆனாலும் வலிகின் வழிகள்
கொஞ்சம் தடுமாறும் இயல்பாய்
இது கூடநடக்கும்
உறவுக்கே புரியாதபோது
வேடிக்கை பேசும் மனிதம் அறியாமுடியாதே
தோற்றுபார்தெரியும் உலகு
படித்தவர் மற்றவர் மனசை
படித்தால் போதும்
பலபடிகள் தாண்டும் குழந்தையும்!!!!
புத்திசாலியை பார்த்து
கற்றுக்கொள்ளாத முட்டாளே
புத்திசாலியின் அடிமையாகின்றான்
கற்றவன் தன்வழி நடக்கின்றான்!!
என்னில் துறல்போட்ட
மழைதுளி சொன்னது
உந்தன் ஆசை
எந்தன் ஆசையென்று
எப்பவும் தோற்றிடும்
எந்தன் தோல்விகளுக்கு
எந்தன் மனசு சொன்னது.
எந்தன் வெற்றி
இயற்கையின் காதலால்
பூக்கும் நம்பிக்கையின்
கையென்று!!!
அழகான வாழ்க்கை
எதுவென தேடிபார்த்தேன்
உண்மையற்ற இதயத்தின்
பொய்களில் மயங்கிக்கிடந்தது!!!
அன்பான வாழ்க்கை
எதுவென தேடிப்பார்த்தேன்
வறுமையின் குடிலுக்குள்
மழைவெள்ளத்தி்ல் மிதந்து கிடந்தது
அறிவான வாழ்க்கை எதுவென
தேடிப்பார்த்தேன்
கையில் சிக்கிடா முத்தைபோல்
கடலிலுக்குள் கிடந்தது
கற்பான வாழ்க்கை
எதுவென தேடிபார்த்தேன்
தனியான பெண்மையின் கையின
ஆயுதமாய் இருந்தது!!!
பண்பாடான வாழ்க்கை
எதுவென தேடிப்பார்த்தேன்
ஆண்மையின் உருவத்தில்
விலங்கைப்போல் காட்டிற்க்குள்
கிடந்தது!!
மனிதனின் பிறப்பென்னயென
தேடிப்பார்த்தேன்
தவறுகளின் வடிவில் தன்னையே
தொலைத்து தேடும் உயிராய் கிடந்தது!!!
நம் வாழ்க்கையை
எதுவும் தீர்மாணிக்கலாம்
நாம்
நம்நற்பண்பை இழக்காதவரை
நம் வாழ்க்கை
எப்போதும் மற்றவரிடமிருந்து
வேறுபடும் !!!
அவள் தோல்விகளில்
மகிழ்ச்சியை ரசித்தபடி பல
உருவம் நிழலாய் நடைபோட
அவள் நிழலின் விம்பத்தில் கால்வைத்தே
நடக்க தனகென தனிவழியமைத்தால்!!
கற்பனை கண்ணாடிக்குள்
கற்பனை உருவம்.
கற்பனை உயிர்பொய்யில்
கருவாகி வடிக்கின்றது கண்ணீர் கதை!!!
வாக்கப்பட்டு இஸ்ரப்பட்டு
கஸ்ரப்பட்டு வதைபட்டு
காயப்பட்டு கண்ணீர்பட்டு
பூவென்று பூக்கின்றது தீக்குளிக்க!!
கொஞ்சநேரம் ஓய்வாய்
கொஞ்சிபேசிய காலம்
கொஞ்சம் கொஞ்சமாய்
ஓய்ந்தே போக
கொஞ்சமும் ஒய்வற்ற தேவையேயற்ற
தேவைகளை சுமந்தபடி
வாழும் வாழ்க்கை ஏங்கு தேடுது
கொஞ்நேரம் கொஞ்சிப்பேச…..
மங்கையவளை விதவையாக்கிய
மரணத்தோடு ஓற்றைக்காதல்!!
வெள்ளைமலரைக்கொய்தே
மாலையாக்கி மரணக்காதலுக்கு
காணிக்கையாக்கியே
மங்கை சூடினால் வெள்ளையாடை!
வெள்ளை மாலைக்குள் மாலரைப்போல்
அவளுக்கு மட்டும்
பூக்கும் கனவுவாழ்க்கை!!
கல்லினுள் கவிதையாய்
ஒற்றைவாசல் இல்லாவீட்டில்
மங்கையிவள் ஏற்றிய ஆத்மதீபம்
அழகாய் எரியும்
மனிதனின் மறுபக்கத்தில்!!
கவிவழியே கரையும்
கனாக்காலத்தை பறித்தே
பதியமிட்டத்து வாழ்கையை!!!
என் கற்பனைகளுக்கு முகங்கள்
தேடபட்டபோதெல்லாம்
என் முகம் கருமையின்
கனவிற்குள் முழுமதியற்றே
தொலைந்தேகிடந்தது
இருந்தும் ஓற்றை நிமிடத்தை
மரணம் கொடுத்திடவே கனாக்கண்டேன்
கற்பனை முகம் புன்னகைக்க!!!
அப்பாதோற்றே விழுந்த நினைவு
கடனால் அம்மாவடித்த கண்ணீர்
அறிந்தும் அறியாபருவம் அறிவாய்
சிந்தனை செய்யென்றது!!தந்தைகற்று தந்த
பாடம் கணவர் எழுதிய தொடர்கதை
தீயின் சுவாலையாய் என்னை எரித்தே
சாம்பலாக்கியது !!
சாபலில் இழந்து விழுந்து எழுந்த
பெண்னாய் மீண்டும் மீண்டேயெழுந்திட
விடாமல் கூடவே கூடியே நடித்தே
கூடவே நடத்தவரே அதிகம்
ஆனாலும் மனிதம் அப்படியே
அன்றிலிருந்து
இன்றுவரை எதை இழந்தாலும்
அதைவிட அதிகமாய்
சிந்தனை செய்திடச்சொன்னது!!!
அறிவும்தோல்விகள்
வாழ்க்கையில் மலையென
உயர்ந்தாலும் முயற்சிகள் ந்தியென
ஒடுது வழியாய் என்னுள்ளே !!
பரதிகண்டகனவு
தோற்றதே வென்றதே அறியேன்
பரதிபெண்ணாய் உடைதாலும் எழுகின்றேன்
சுயமாய்!!!
சந்தர்ப்பங்கள் தோற்கடித்தாலும்
நம் சந்தோஷங்களை தோற்கடிக்கா
சந்தர்ப்பத்தை தரும் நம்பிக்கையே
நம் எதிர்காலம்!!!
கொஞ்சம் கூட
தெரிய மனிதர்களின் பொய்யே
கற்பனைபொழுதுபோக்காய்
இன்றைய மனிதர்களின் வாழ்க்கையின்
நியமாய்பேச்சு!!
உள்வீட்டு உண்மைகள்
வறுமைகுடிக்க
உயரத்தின் ஒளியில்
தெரியும் முகத்தின்பின்னே
ஆயிரம் கதைபடித்தோடுகின்றனர்
தன்னைமறந்தமனிதர் கூட்டம்!!
உயரதெட்டவன் படியில்
பலவடிவம் படுத்துறங்கிப்டதை
அறிந்தவனே தானாய் தான்னைக்கொடுத்தே
தன்னைசெதுக்க தன்னையே மித்தே
நல்லதலைவனாய் உயர்கின்றான்
பொய்களால் அல்ல!!
புரியாமனிதனே கடசிவரை தன்னை
மறந்து பெய்யேடு வாழ்கின்றனர்
அடுத்தவர் வாழ்வின் வாழ்க்கை
கற்பனையாயில்!!!
பொஞ்சம் இரக்கம்கொள்
இறையே !!!
கொஞ்சுமொழிச்சுவை
பெண்ணவள் கொஞ்சகாலம்
நின்மதி கொள்ள!!
கொஞ்சம் கருணைகொள்
இறையே !!!
கருணைவடிவானவள்
கண்குளத்திற்க்குள்ளும் கொஞ்சகாலம்
புன்னகைவழித்தோடிட!!!
கொஞ்சம் பாசம் கொள்
இறையே !!!
பசமானபெண்னிவள் ஏமாந்தே
இழந்த இதயத்தின்வலிகளும்
கொஞ்சமறந்திடும்
பாசகொடு இதயம்பெற!!!
கொஞ்சம் உயிரபெறு
இறையே!!!
கல்லான பெண்னிவள் கற்பனையும்
தோற்றிட்ட நாட்களை கொஞ்சம்
கவிவடிவமாய் உயிர்பூவில் பூவாக!!!
போராடும் வாழ்க்கையில்
தடைபோட்டே
நிறுதிய தோல்வியில்
தடுமாறும் மனதினை
தடுதிடும் இசையெடுத்து தூங்க
தோழன் மடியால்
விதியேடு விளையாடவும்
பிடிக்கின்றது முதுமையிலும் !!
மீண்டும் மொழியேடு
காதலும் பூக்கின்றது
அழகான போராட்டக்கடல் மீனாகின்றேன்
விதியேட தூண்டிலில் சிக்கியே!!!
விதையாய் விழுந்த கனவு
விளையாடிடு என்னேடு
விருப்பமே இல்லாமல்
திண்டாது உறவு
அடுத்த அந்தியாதை
அழகாய் தொடங்கு விதி
விதியின் கையில்
பொம்மையாய் நான்
விழுந்த தெருவில் அழிந்த கனவு
விதியின் வடிவெடுக்கு தானாய்!!
அழிவதே எழுதே இறைவன் எழுதிய
நாட்காட்டியின் எழுதியே முடிவான பக்கம்!!!
பூக்களின் பனித்துளி
விழும் வரைபனித்துளியேடு காதல்
பருகிடும் சூரியன்
தாகம் உள்ளவரை நீரோடு காதல்
பூமிக்கு மழைத்துளியின்
தேவையால் மழையோடு காதல்
தேடிய உடல் அழகினேடு
சேர்ந்தே பிறக்கவும் இறக்கம் காதல்
பூவைத்தீ சுட்டுவிட்டால்
வண்டிற்கு தேனேடு காதல்
கல்லறையுமில்லையென்றால்
காகிதம் குப்பையேடு காதல்
மண்ணிலுள்ள உயிருக்கு மட்டும்
மண்ணில் இல்லா மரணமே காதல்!!!
ஒற்றைபெண்ணாய்
பிறந்ததில் இந்தனை தவரா
எத்தனை நாட்கள் இங்கே
சுத்தமாய் தொலைந்தே போச்சி
எந்தனை தடைகள்
என் முன்னே எழுந்திட முடியா
எரிமலையாய் எழுகின்றது
உன்னால் முடியாதென
உச்சரிக்கும் ஓலியின் சத்தமே
என் உறக்கத்தை பறிக்கின்றது
இருந்தும் பாதம் முன்னே வைக்கின்றேன்
பின்னே என்னை வைத்தே!!!
வெண்பனி ஒன்றை
கொட்டினாபோல்
முன்னே சென்றவள்
பின்னே நடந்தவரை
சட்டென திரும்பி பார்த்தாள்
அழகில் சாத்திரங்கள் விழுந்தது
அவள் காலடியில் !!!
பெண்ணின் அழகிற்க்கு முன்
எந்த கட்டுக்குள்ளும் ஆண்மையை
கட்டிவைத்திட முடியா வரமே
மண்ணில் அழகிய பெண்மை!!!
வெற்றி வேண்டுமா!!!
உண்மையற்ற உருவம் கொள்
பொய்களேடு உறவாய் பிறந்திடு
நிமிடத்திற்க்கு நிமிடம்
எமாற்றகற்றுக்கொள்
இல்லாத ஒன்றை இருப்பதாய்
நடித்திடு
வறுமையை மறைத்து ஆடம்பரமாய்
வாழகற்றுக்கொள்
உயர்ந்த எண்ணங்களை
அழித்த சுயநலமாய் சிந்தனை செய்
கொடுத்திடமலே கொடுத்தாய்
விளம்பரம் செய்
கோவிலை கண்டால் அச்சம்கொள்
உச்சத்தை திரும்பி பார்க்க
உலகம் வரும்!!!
அவள் தலையாடி
உதிர்ந்த மலர்கள்
தன்னை தொட்டாலே
கருகிவிடுவேன் என்றது
அவள் முகமுதிர்ந்த மங்களமே
அவளை அமங்களம்
என்றே தள்ளி நில்றென்றது
அவள் உடல் வளைந்து அழகான பட்டே
அவள் உள்ளமறந்தே தீயேடு
சாம்பலானது
அவள் நடந்த தெருவே அவள் பதம்
பட அஞ்சியே விழிகள் முடிட
அவள் தன்னை வெறுத்து
சிறைபட்ட இருளே அவள் வாழ்வின்
துணையானது !!!
அவள் தனிமைக்கு
துணையாய் அவள்
வரைந்த கற்பனை
உருவம் உயிபெற்று
வராதென்று அவள்
மட்டுமே அறிவாள் !!!
திரும்பிபார்க்கின்ற
என்னை
எப்படிபார்த்தாலும்
ஒற்றை துளியே நிற்காமல்
விழுகின்றதை கண்கள்
சொல்லாமல் சொல்லிசெல்லுகின்றது
இருந்தும் என்னிலும் உண்டு
கற்பனைகைக்குள் அடங்கிடா
கனவுகள்
கையேடு எடுத்திடமுடியாமல்!!!
என் தோல்விகளுக்குள் எத்தனை
காரணமும் இருக்கலாம் ஆனால்
இற்றைவரை என்னை நம்பியே
ஏற்றிவிட ஓற்றை கரம் இல்லா தோல்விகளே
அதிகம் இது விதியே இல்லை
என்பிறப்பின் தண்டனையே அறியேன்
தோல்வியால் பறிபோன ஆசை
அலைமோதி அலைமோதி
மனசுடைக்க தனிமைகொண்டு
உறக்கம் தொலைந்த நிமிடம்
வெற்றி கிண்ணமாய் மரணத்தை
தூக்கிதரும் நெடி உயிர்ப்பாரத்தை
உடல் சுமக்க மறக்கின்றது!!
எந்தனை தடைகள் வந்தாலும்
உடைத்திடவே நினைக்கின்றேன்
ஆனால் கொஞ்சமும் மாறமலே
வாழ்வும் தடுமாறியே ஏங்கிடுது
ஒற்றை கைகூட தடுத்திட இல்லாமல்
மனசு ஏங்கிடும் பொழுதெல்லாம்
தனிமையை தலையணையாக்கியே
உறக்கம் விழித்திடுது
இல்லையென்ற ஓன்றையே
தேடிதுடிப்பதும் ஏமாந்தே ஒய்ந்து
கிடப்பதும் இழப்பால் கிடைத்திட
துயரமென்றாலும் மனசு அழுதிட
இதயம்வலிகிறதே தானாய்!!!
ஓரு மரணம் வலியேட பிறசவம்
அதுவே பிரசவித்த மகளின் வலியென்றால்
தீயிட்டு கொழுத்திடும் வலியை விட
வலி தரும்!!!
நமக்காக சிந்திக்க தவறினால்
முதுமைக்காலம்.
நம்மை அதிகம்
சிந்திக்க செய்கின்றது
நாம் மற்றவருக்காய்
பார்த்து பார்த்து சிந்தித்து
செய்யும் நல்லவைகள் யாவும்
யாரும் தனக்காய் செய்யாத போதே
முதுமை சந்தித்து
சிந்திக சொல்லும் நம்மை!!!
இறையே
நீயே தந்தாய்
நீயே பறித்தாய்.
நீயே எழுதினாய்
நீயே தடுத்தாய்
நீயே கருவி
இங்கே
நான் எப்படி குற்றவாளி
நீயே பதில்
நீயே கேள்வி இங்கே
விடையை என்னிடம் ஏன் கேட்க்கின்றாய்
எப்போதெல்லாம்
ஒரு வெற்றிட ஏமாற்றத்தடுமாற்றதை
அடைகின்றேனே
அப்போதெல்லாம்
ஒரு அனாதையைபோல் தனியாகின்றேன்.
எப்போதெல்லாம்
ஓரு துணையற்ற போராட்டத்திற்க்குள்
நடக்கின்றேனே
அப்போதெல்லாம்
என் கண்கள்
தேடும் தூரம் வரை ஒரு நிழல் கூட
துணையானதில்லை
எப்போதெல்லாம்
என் கற்பனைகள் புன்னைக்கின்றதோ
அப்போதெல்லம்
வாழ்க்கைக்கு நடுவே பல விம்பத்துகள்
புன்னகைக்கின்றது
எப்போதெல்லாம்
பொய்களை நம்பிஏமாறுகின்றேனே
அப்போதெல்லாம்
அன்பிற்க்கும் எனக்கும் நடுவே
ஓரு அவநம்பிக்கை யுத்தம் நடக்கின்றது!!
நம்
வாழ்க்கையை நாமே
கேலிகூத்தாகி
மற்றவர் கேலியில்
சிதைக்கின்றோம் ஏனோ!!
வாழ்க்கையை வாழ நமக்கே
தெரியாதபோதே
நாம் எடுக்கும முடிவுகள்
நம்மையே கேலிபேசும்!!
ஒரு விதையின் அழகில் ஓரு
உயிரின் அழகு பூப்பதை
மனிதயழகு புரியாமலே தன்னை
தானே அசிங்கப்படுத்தி
வாழகற்றுகொண்டது!!!
மண்ணின் அழகு மனிதனின் அழகில்
பூப்பது!!!
இசையின் கரங்களை பற்றியே
காதல் செய்தவள்
மழையின் துறல்
பட்டுக்கவிதையானவள்
வெண்ணிலாவின் வளர்பிறைக்குள்
பூவாய் மலர்ந்தவள்
ஓவ்வொரு விடியலிலும்
ஆதவன் ஒளியின் கரங்களின்
உளியாய் எழுபவள்
வானவில் வளைந்தால் மட்டுமே
துள்ளி விளையாடுவாள்
சிறுமியைப்போல்!!
இந்த பூவிற்க்கு எந்த பூவும்
தலைசாய்க்கும்
தன்னைபோன்ற தனிமையானவள்
என்று !!!
இந்த பூவின் மரணக்குடைக்குள்
ஓரு ஆசை கைபிடிக்கின்றது
தானாய்!!!
நினைவுகளை கைதுசெய்து
நிழலாய் என்னைத்திரிந்து
நியமென நீ உயிர் வாழ்கின்றாய் என்னில்
அறியமலே கதையென்று முடிவற்று
தவித்திடு முடிவுக்காய்!!!
நம் கனவுகள் ஆசைகள்
ஓரு கற்பனை உலகத்தேட
நிழலாய் மறைந்தே
வாழும் போதுதான்
நியவாழ்க்கை
வெறுபில் விழுகின்றது
நம் நம்பிக்கை
ஓருவர் தூக்கியுடைத்த
பொம்மைபோல்
சிதறிவிழுந்திடும் போதே
நம் மனசு உறைந்து விடுகின்றது
விழிகள் அசைகையில்
விம்பங்கள் தோன்றினாலும்
உயிரற்ற விம்பமே வந்து
மறைகின்றது
தோற்றதைவிட வலி
தோற்கடித்தவர் தந்த
ஏமாற்றதின் வலியே
பெரிய பறையின் சுமையாகின்றது!!!
பணதிற்க்காக அசிங்கப்பட்டு
கூட வாழும் மனிதம்
அன்பிற்காய் விட்டுகொடுத்து
கூட வாழாமல் பிரிந்தே
செல்கின்றனர் தனியாய்
வண்ணம் இழந்த நிழலையெடுத்து
வண்ணங்களால் எண்ணம் போல்
ஒவியன் அழகேற்றினான். நியத்தை
கண்ட்டுகொள்ள நியத்தை மறைத்திட
மனிதன் மற்றவரை அழிப்பது
எப்படியென கற்று தந்தான்
இயற்கை மனிதனை எப்படி
நேசிப்பதென கற்று தந்தது!!!
மனிதனிடம் தோற்று
இயற்கையிடம் வாழகற்றுகவண்டேன் !!
எந்த முயற்ச்சியும்
மனிதன் முகங்களின் மன
முகமூடிகளை திறக்காது என்பதால்!!!
உயிர் போகும் இறுதி
நிடத்தில் கூட
ஒரு நினைவு கூட என்னை
உயிர்மெற்றிட செய்திடா
ஒரு நெடியையே யாசிக்கின்றேன்
இறைவனிடம்!!!
நேசம் எனக்குள் இருந்தவரை
உள்ளம் தனக்காய்
அனைத்தையும் கேட்டே
சண்டையிட்டது
என் நம்பிக்கை உடைந்தே
இழந்த காலத்தின் காயங்கள்
என்னை சிறையிட்டபின்னே
மனிதன் இல்லா இயற்க்கையின்
சிறைக்குள் முற்கள் சுமக்கும் பூவானேன்!!’
என்னக்கு மட்டு
ஒரு மறதியை வரமாய்
கொடுத்தாலே போதும்
என்னை ஏமாற்றி என்னை
உடைந்த விம்பத்தை மறந்தே
என் விம்ப கண்ணாடிக்குள் புதிதாய்
பிறந்தே வாழ!!! இல்லையென
திரும்ப திரும்ப
நினைக்க சொல்லு நினைவு!!!
இல்லாத ஒன்றைசொல்லியே
ஏமாற்றிய வாழ்வதே ஆண்மை
இல்லாத ஓன்றை இருப்பதாய்
கற்பனைசெய்தே எமாறுவதே பெண்மை
செதுக்கிய சிலையை
மீண்டும் செதுக்கிட நினைக்கும்
மனசுக்கு தெரியாமலே சிலை
உடைந்து விழுகின்றது
உடைந்துவிழுந்த பின்னே
அறிவு பேசுகின்றது திரும்ப
வடித்திட முடியாதென!!!
மனசும் அறிவு பேசிகொண்டாலே
அழகியலான வாழ்க்கை
சசிலையாகின்றது!!!
விளையாடி தோற்றவன்
எறிந்து சொல்லும்
பொம்மைபோல்
சில பெண்மையின் கற்பம்!!!
களவாடிதோற்றவன்
எறிந்து சொல்லும்
குப்பையை போல்
சில பெண்மையின் வறுமை!!!
போராடி தோற்றவன்
எறிந்து செல்லும்
ஆயுதம் போல் சில பெண்மையின்
வாழ்க்கை!!!
இறையாடி தோற்றவன்
எறிந்து செல்லும்
காவியை போல் சில பெண்மையின்
பிறப்பு!!!
அவள் தடுக்கிவிழுந்த குழிக்குளே
குழிபறித்தே வெளிவரமுடியாமல்
புதையுண்டவளை
தூக்கிவிட கூட ஓரு
நல்லிதயமில்லை தான்!!!
ஆனால் எழுந்து நடக்க
எப்போதும் மழைத்துளி
கூடவே அழுகின்றது!
அவளுக்கு ஒரு தாய்போல்!!
அவளையே புரியாமல்
அவளை விமர்சனம் செய்தவர்
வலிகள் தந்த காலம் போய்
அவளும் புரியாமலே பார்த்த
காலம் போய்
கடந்தே நடந்தே கற்கை
கொண்ட காலமும் போய்
அவள் அவர்களை
பரிதாபமாக பார்க்கும்
காலமாகியும் இன்னும் புரியாமலேயே
அவளேடு அவர்கள்!!!
நம்மை பலர்
பலவிதமாய் காயபடுத்தி
கடந்திருப்பார்கள்
நாம் திரும்பி பார்க்காமலே
சட்டென கடந்திட முயற்ச்சி
செய்வோம்! ஆனால் நாம்
நம்பிய ஒருவர் ஏற்படுத்தும்
காயமே நம்மை கடந்திடாமல்
நிறுத்திவிடுகின்றது
நாம் பலவினமானவர்களே
நம்மை யாரும் ஏமாற்ற முடியும்
ஆனால் நம்மை நம்பவைத்து
ஏமாற்றும் நம் நம்பிக்கையாவரே
நம்மை அதிகமாய்
பலவினமாக்கி விடுகின்றனர்
கைபிடித்து கூட நடந்திட ஒரு
நம்பிக்கை துணை
துணையாக வரும்போது
நம் பலவினம் கூட பலமானதாய்
மாறுவிடும் நம்யாருமற்று
தனியாய் நிற்க்கும் போதே
நம் நம்பலவினம்
பலர் கை பொம்மையாய்
மாறிவிடுகின்றது
நம்மை காயபடுத்தியே
வாழத்துடிப்பவருக்கு அறியாவலியே
நம்மிடம் நாமே இழக்கும் வலி!!!
ஓன்றுக்குள் ஓற்றைவைத்தவன்
ஓன்றையெடுக்கும் போதே
ஒன்றைவிழுத்திடுகின்றான !
உண்மை புரியாமலே!!!பலர்
தன்னையே தரையில் போட்டு சொல்கின்றனர்!!!
பெண்மையை காக்க
ராமன் துணையாய்
பல வானரங்கள் உயிர்கொடுத்தாய்
வரலாறு சொல்லுவதை
பல பலவிதமாய் படித்தவர்
கூறிகொண்டேயிருக்க
பெண்மையே காலகாலமாய்
பல அரக்கனின் சிறையில்
அழிந்துகொண்டே இருப்பதை
எந்த மனிதனும் கண்டுகொள்பதேயில்லை
அன்று இருந்த வானரமும்
கற்பனைகதையானது
இன்று பல பெண்மையால் பெண்மைக்கே!!!
சொல்வம் கூட வே
பலரை கூட்டியது
வறுமை கூடவே
பலரை கற்று தந்தது
அன்பு கூடாமல் கேளாமல்
மரணத்தை தந்தது!!!
ஓவ்வொருமனிதனும் தன்னை
வருத்தி தனக்கான பாதையை
உருவக்கி வலிகளை கடந்தே
நடக்கின்றான்
சும்மா இருப்பவனே
தன்னை மறந்து வீண்கதைகள் பேசி
தன்பிறப்பின் அடையாளத்தை
மறந்தே தன்காலத்தை இழக்கின்றான்!!!
என் முன்னே
மனிதனை அனுப்பி
விளையாடித்தோற்ற இறைவன்
என்வாழ்க்கை வேகத்தடையாய்
அவனே நிக்கின்றான் முன்னே
எனக்கும் அவனுக்குமான
சண்டையில் தோற்பது
நானாக இருந்தாலும் இன்னும்
எதிர்த்தே நிக்கின்றேன் அவனேடு
கொஞ்சம் கூட புரிந்திடாக்கூட்டத்தே
தனியாய் இருப்பதைவிட தனிமையேடு
வாழும் வாழ்க்கையே நிறைய இதயங்கள்
தேடிக்பொண்ட சொர்க்கம்!!!
உடைந்து சிதறிய
என் விம்பத்துகள்களை
ஒவ்வொருநாளும்
சிலையென வடித்திட
முயன்றே தோற்கின்றேன்!
இறந்தே உடைந்தே
விழுகின்றது தரையில்!!!
இதுவரைகாலமும்
காலத்திடம் கேட்டிடும்
யாசகப்பெண்ணாகவே வலம் வந்தேன்
இல்லையெனும் சொற்களே
எதிலும் கூடிநடக்கவே
லூசுப்பெண்ணானேன்
குண்டலும் கேலியும் என்னை
அப்படியே மாற்றிட.
எதையும் தாங்கிடும் இதயமாய்
புன்னகைகளை மட்டும்
அஎ்ளிக்கொண்டே கடந்தே நடந்தேன்
ஒளிமறைக்கும் இருள் எனை
மறைக்க எதுவரையெனத்தெரியா
இதுவரை நான்!!!
வாழ்க்கை இருப்பதைப்பறிந்திட
இல்லாத கற்பனைகள்
வாய்திறக்கின்றது!
இல்லாகற்பனைகள் பேசிட
அழகான நாட்கள் பறிக்கபடுகின்றது
அழகான தாட்கள் பறிபோனபின்னும்
ஏன் எதற்க்கு என்றகேள்விகள்
மௌனமாகும் போதே நம்மை நாம்
தொலைத்தே ஏக்கங்கத்தோடு
தேடுகின்றோம்
காலம் இருப்பதை பறித்தே
விரும்பமில்லாத்தை கொடுப்பதை
அறிந்தாலே போதும் நாம் விரும்பியது
கற்பனையென !
இந்தகற்பனையுலகத்தை விட்டாலே
இருக்கும் வாழ்க்கையாவது
நின்மதியாகும்!!!அர்த்தமில்லா உறவு
அர்த்தமில்லா வாழ்க்கை எப்பவும்
சந்தோஷத்தை நிலைத்திட செய்யாது!!!
நிலைத்திடா உயிருக்குள் நிலையில்லா
கற்பனைகாயங்களை தள்ளியே
பார்த்தாலே மரணத்திலாவது
ஆத்தமாவிற்குள் ஓரு அழகான
பூ பூக்கும்!!!
சிலவிடையம் நாம் ஆசைபடமலே
நம்மை அவமான படுத்திவிடும்
சிலவிடையம் நம் ஆசையால்
நம்மை அவமானபடுத்திவிடும்
எது எதுவானாலும் ஆசைகளே
நம்மை சிதறடிக்கின்றது!!விரும்பியே
சிலநேரம் விரும்பாமலே சிலநேரம்
நம்மை காயபடுத்திவிடுகின்றத்து
எந்த திறமையும் அறிவும்
இல்லாமலேயே முயற்ச்சி செய்து
தோற்கின்றேன் ஒவ்வொரு தோல்வியும்
ஒரு அறிவின் திறவுகோலாய்
தோல்வியின் பின்னர் காணுகின்றேன்
இதுவரை முயற்ச்சிகள்
மட்டுமே கூடவே
துணையாய் வருகின்றது
இருளே ஓளியே பசியே தாகமே
வறுமையே நோயே என்னை விழுதிடவில்லை
ஓவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு
விதமாய் விழுத்தியே ரசிப்பதால்
எந்த மனிதனையும் நம்பிட மனசு
சொல்லிடவில்லை சொல்லாமலே
ஏமாற்றும் மனிதனுள் நான்
உணர்வற்றே நடக்கின்றேன்
இருந்தும்
இருப்பனுக்கே கடவுளும்
ஓளியாகின்றான் இல்லையென்றால்
இறைவனும் கல்லாகின்றான்!!!
நமக்கான நாட்கள் எப்படி
போகின்றத்து என தெரியாமல்
போனால் !நாம்
மகிழ்ச்சியாய் வாழ்கின்றோம்!
நமக்கான நாட்கள் ஏன்
போகின்றது என தெரியாமல் வாழ்ந்தால்
நம்மை நாம் வெறுத்தே வாழ்கின்றோம்
நம்மை வெறுக்க ஒரு போலியும்
நம்மை நேசிக்க ஓரு காதலுமே வாழ்க்கை!!!
இது புரியும் போதே வாழ்க்கை
முடிகின்றது!!!
எனக்கான மண்ணில் என்
முகவரிக்காய் போராட்டம்
முகவரியிருந்தும் அன்னியபெண்ணாய்
சொந்தமண்ணில்!!
சுற்றுலாப்பயணியாய்
பணத்தை கட்டுக்கட்டாய் கொடுப்பவன்
முகவரிகள் மட்டும் வெளிச்சத்தில்
உரிமையற்ற நிலம் கூட
உரிமையாகின்றது சிலநெடியில்
வாழமுடியா இடந்தில்
பலகோடிசொலவில் வீடுகள்
அனாதையாய் உயர்ந்தே கிடக்கின்றது
போகும் பாதையேரம் இறந்தபின்னே
நிழலாய் மாறிய நிழல்கூட மனிதர்கள்
விழிகளில் ஆச்சரியமானர்கள்
யுத்தம் பறித்த தமிழ்
என்னைபோல் அங்கே
முகவரிதேடியழைகின்றது அர்த்தங்கள்
புரியாமலே தாய்மொழி விற்பனை சந்தையில்
முதல் தரப்பெருமை
அரசியல் சந்தை நன்றாகவே பேசி
விற்பனை செய்கின்றது!!!
வெளிநாட்டுத்தமிழ் தன்னைமட்டும்
சிந்தித்து இருபதையும் கெடுக்கின்றது
நாடு எனது உரிமை மட்டும் இல்லை!!!!
அன்பைகொடுப்பதில் இல்லை
வாழ்க்கை அதைவிட பெறுவதில்தான்
மகிழ்ச்சி யென முதல்
முறை கிடைத்தபோது புரிந்தது
எனக்கு !!
அன்பு என்னவெல்லாம்
செய்யுமென இதுவரையறியாமல்
ரணங்கள் வார்த்தைகளை
கொன்று திண்று
வாழ்க்கை கைபிடியற்று தரையில்
சருகையாய் போட்டு
தன்னம் தனியாய் கிடந்தவள்ச
முதல் முறை நட்புக்கள் கைபிடித்தே
சூழ்ந்தபோது புரியாத நிமிடங்கள்
பூத்திட பூத்திட்ட ஆசைகொண்டாள்
ஆனால்! மீண்டும்
விதி பிரித்தே தனிமையாகிட்டது!!!
வாழ்க்கையை விதி வட்டமிட
மீண்டும் அனாதையாய் வாழ்க்கை
மரணத்தோடு சண்டையிட்டே!
வாழச்சொல்கின்றது!
வெப்பத்தின் உச்சம்
வேர்வைத்துளிக்குளியல்
அச்சச்சோ !
என்னடா கொடுமையென
சினந்திடும் நிமிடம் நீர்தடாகபட்டு
தொன்றல் தரும் முத்தம் அழகு!!!
நாட்கள் கடகடவென ஓடிக்கொண்டது
மண்தந்த சின்ன சின்ன் ஆறுதல்களை
சிதறடித்தே நாட்கள்
கடந்தே போனெ துரத்துதனியாய்
மீண்டும் வரவேற்கின்றது
பணத்தேடும் பணக்கார யுத்தம்
இங்கே பக்கத்தேயிருந்தும்
தூரமாய் பெய்யும் அன்பு மழை
காணாமல் போகும் உணர்வு இறந்தே
தேடும் ஆடம்பரபோராட்டம்
அதிகாலையும் இரவும் ரசனையற்றே
தனியாய் கடக்கும்
எல்லோரும் ஒரு பொய்யில்
அழகாய் தெரிவார்
மனமட்டும் சலிப்போடு ஒரு கனவை
சுமக்கும் மீண்டும் வந்திடலாம்
என்ற நம்பிக்கையாய் இருக்கும்!!!
அன்னையவள் மடியில்
சிலநெடி வலிகளை கண்ணீராய்
ஓடவிட்டது அவளும் அறிவாள்
என்றாலும் உணர்வுகளின் தாகம்
தலைகோதிய விரல்கள் போட்ட
தூண்டில்!!!
ஏழ்மை பெண்ணிடம்
ஓரு நம்பிக்கையின் ஓளியைக்
கண்டேன
இழிவுபடுத்திடும் கண்கள்
கண்டுகொள்ளா தன்நம்பிக்கை ஒளி
அவர்கள் போராட்டக்களத்தில்
தோல்வியடைந்தவளாய்
அவர்கள் துணிவின் முன்!நான்!!
இழந்தவை கற்றுக்கொடுக்க
இருப்பவர் ஏமாற்ற
தனக்கென தனிபாதையில்
நடக்கின்றார்கள் !ஆச்சரியம்
பெண்னுள் தேடப்படாமலே
நிறைய பக்கங்கள்
இருளேடு மறைந்தே புதைகின்றது
கைபிடித்திட யாருமில்லையென்ற
கவலைகளை. காலடியில் போட்டே
துணிந்தே சொல்லும் இவர்களே
புகழப்படவேண்டியவர்கள்!!!ஆனால்
இகழபட்டே. மடிகின்றனர்!!
இதற்க்குள் ஆண்மை கொஞ்சம்
குளிர்காய்கின்றது!!!தற்பெருமைக்காய்!!!
ஓவ்வொரு முறையும் என்னைபற்றி
சிந்திக்கும்பொழுது. எத்தனைபெயர்
அருகேயிருந்தாலும் ஓரு வெற்றிடம்
நிரப்படாமலே. கிடக்கின்றது!!!
ஒற்றை பயணம் ஒற்றை
இசையை நிமிடத்துளியை
களவாடிக்கொண்டது உந்தன்
நினைவுகள் எத்தனை தூரம்
எந்த இடம் எங்கு சென்றாலும்
நமக்குள் இல்லை பிரிவுகள்
என சொல்லிகொண்டது இசை
நீண்ட பாதையெங்கும்
நீயும் நானும்
நீண்ட வலிகளை எதிர்த்தே
நடந்தோம்
நமக்கான பாதையில்
நம்மை தவிர யாருமில்லை
நமக்கான வாழ்க்கைக்குள்
உனக்காகவே என்னை எடுத்தாய்
எனக்கான நீயாய் இல்லாமலே
கொஞ்சம் சண்டை கொஞ்சம்
கோவம் கொஞ்சநேரம் கடந்தால்
மறந்தே போய்விடும் நாம்
எதற்கா சண்டையிட்டோமென
உனக்கான பாதையின் தொடக்கம்
எனக்கான தனிமையின் தொடக்கம்
இப்போ நான் தனியாய்
நீ தனியாய் நமக்கான
பாதையில் நமே இல்லை
என்கைபிடித்திட்ட
நீ தூரமாய் போனாய்
நானோ
ஏனோ வழியோரம்
ஏமாற்றம் என்பதை ஏமாமந்திடும்
பயணத்தை நீ தொடங்கிட்ட
நாட்கள் கூறியதை உனக்கான
நான் புரிந்திடாமலே தொலைத்திட்டேன்
என்னை!!!
கடந்தபாதை கற்களும் முற்களும்
இழந்த பொக்கிஷம் திருபகிடைத்திடா
தண்டனை
இருந்தும் ஏதேதோ வாழக்காரணம்
நண்ற்பே !!!
இற்றைவரை நீயும் நானும்
எப்போதும் சந்தித்தில்லை
இன்று என்னைத்தேடியே
வந்தாய் என்னை மறந்து என்னைக்
காண அழகிய தருணம்
எனக்காய் தந்தாய் இன்றும் என்றும்
உங்கள் தேவதையாய் வாழும்
அன்பு உலகில் எனக்கு எவராலும்
தந்திடமுடியா சந்தோஷமென்பது
இந்தனை காலப்பிரிவும்
கடந்த மனிதனும் கற்று தந்ததடா!!
எட்ட நின்றபோது தெரியா வலிகள்
நீ பக்கம் வந்து அன்போடு கேட்டபோது
அதிகமாய் தெரிகின்றது ஏனோ
குழந்தையான என்னை
பலமுறைகுழந்தையாய் காண்கின்றோன்
உன்கைபிடித்த நடந்த
நாட்களை கைபிடித்தபோது அழகாய்
பூத்தது என்னில்
அள்ளி தந்தே சந்தோஷத்தை
அள்ளக்குறையா வலிகளை புத்து
போகின்றாய் !!!
அதிகாலைக்குளியல் இறைவனுக்காய்
பூக்கொய்தல் விடிந்தும்
விடியா இரவுகளை
தகர்த்தே விடிகின்றது அழகாய்
சோவல் அலாரம் கோயில் மணி
பாடசாலைபிள்ளைகளின் பேச்சும் சத்தமும்
மீட்டிச்சொல்கின்றது வாழ்வை
சண்டைகாரியென அச்சம்
கொண்டே தங்கைகள்
இல்லையென்றதும் சந்தோஷமாய்
கிண்டல் பேசும் பொழுதுகள்
அக்கம் பக்கம் ஒன்றாய் கூடியே
விளையாடிக்கழித்த் ஓய்வே
இல்லாப்பொழுதுகள்
இற்றைவரை யாரும் கொடுத்திடா
சந்தோஷமாய் இப்போ ஒய்வாய்
அமர்ந்தே கூடிபேசி மழ்ந்தே போகின்றது
நாட்கள்!!
்அப்பா சோர்த்து வைத்த
சொத்துகள் உண்டு
அப்பா நடந்த மண்ணுண்டு
அப்பாவுடன் கைபிடித்தே
நடந்த நினைவுகள உண்டு
ஆனால் அப்பா மட்டும் இல்லை
அப்பப்ப ஏக்கங்கள் தேட
அனைத்திலும் அப்பாவே தெரிகின்றார்
எனக்கு மட்டும்!!!
வெப்பத்தின் உச்சத்தில்
குளிர்ச்சியின் தீண்டல் சுகம்
தோல்வியின் உச்சத்தில்
மாற்றத்தின் தீண்டல் சுகம்
யாருமற்ற தனிமையின் உச்சத்தில்
உறவுகளின் சங்கம்ம் சுகம்!!!!
வறுமையும் வாழ்க்கையும்
யுத்தம் செய்ய இடத்தின்
குட்டிராச்சியம் செய்கின்றாள்
என் அன்னை அன்பே ஆயுதம்
கோவமே சின்னம் இல்லையென்பவரை
கண்டால் மட்டும்
துடிக்கம் இதயம்
அச்சம் கொண்டே நடித்தாலும்
பசிபோக்கும் ராணியென்பதால்
வெறுப்பவர் இல்லை ராச்சியத்தில்!!
நான் நடிப்பதாய்
சொன்ன நடிகர்களின்
முன்னால்
எது நடிப்பென தெரியாமல்
நின்றேன் என்னைக்கண்டதும்
கண்டியழுத நண்பி
சொன்னால் நீ மாறவில்லைடியென
இப்போது
புரிகின்றது நல்ல நட்பு
இல்லாமலே நீண்டதூரம் பயணித்த
என் பயணம் திரும்ப நல்லநட்புகளிடம்
வந்து விட்டது!!!
சிறைபிடித்தே அடைந்திட்ட
எந்தன் சிறைவாழ்வினை சிறையெடுத்த
நானே என்னை சுகந்திரமாக
திறந்தே விடுகின்றோன் !!!
முதுமையை யாரும் திரும்பி
பார்த்திட மாட்டார்கள் என்ற
நம்பிக்கையில்
இளமை கற்று தந்து
ஆயிரம் ஏமாற்றுகார்களிடம்
ஏமாறும் வித்தையை
இளகிய மனம் உண்டானால்
நாம் அதற்கும் தகுதியானவர்கள்
விரைந்தேடிய வாழ்வில்
மறைந்தோடிய வயதால்
கடந்திட முடியாமல்
வந்த முமையால்
மறந்தே போனது முகம்
மாறிபோனது தோற்றம்
நண்பா கோபங்கள் வேண்டாமே
இடைவெளியால் இடைநடுவே
நடந்த கிறுக்கல்களை
தூரப்போட்டு விட்டு
தொடங்கிடலாமே புதிய நாளை!!!
மாமனரின் அன்பிற்க்குள்
சிக்கிகொண்ட என் இதயம்
கண்கள் குளமாக மீண்டும்
பாடசாலைக்குழந்தையானது
என்னை கட்டித்தழுவிய மாமியின்
அன்பிற்க்குள் மகளான என் இதயம்
உடைந்தோடியது கண்ணீராய்
தேவதாயாய் தொலைந்த
காலத்தின் கண்ணீர்துளியென்றை
அமைதியாய் வடிந்தோட விட்டது
மனசு!!!
மாமன் நெஞ்சுக்குள
ஓரு முச்சுத்திணறல்
என் மூச்சுக்குள் ஓரு சுவாசத்தவிப்பு
ஒரு நிமிடம் கனவாக!!
நல்ல சந்தர்ப்பை தனக்காக
உருக்கத்தெரிந்தவனே நல்லதை
நல்லசந்தர்ப்பத்தில் விதையிடவும்
அறிவான்!?
என் பூந்தோட்டதிற்குள்
ஓர் வாசம் என் நாசித்தூவரங்கள்
கேலிபேசும் வாசம்
என் பூக்கள்
தோற்றே தலைகுணியும் வாசம்
என் மாமன் சேற்றோடு வேர்வைக்குளியிட்டு
கம்பீரமாய் நடக்கும் வாசம்
எனக்கு மட்டுமே பிடித்தவாசம்!!!
என்
விழித்துடிப்பில் எதிரே கண்ட
நிழல் வர்ணம் நீ
என் மனத்திற்குள நான் வரைந்த
அழகிய ஒவியம் நீ
இது வரை மழைபட்டும் கரைந்திட
வண்ணங்கள் உன்னால்
என் விழிநீர் பட்டு கரைகின்றது
என் உயிரோட்டத்தீல் கலந்திட்ட
என் வளிமண்டலம் நீ
என் சுவாசக்காற்றை நீ
வாங்க மறுத்தால் மட்டுமே
என் உயிரோட்டம் உறைந்திடும்
என் விழிகள் தேடுயே
நின்ற ஓவியம் நீ நான்
கவிபாட வந்த செந்தமிழ்
வழியேர கவியம் தீ
உன் ஒளிபட்டு மலர்நத
மலர் நான்
என் இரவுக்குள் பூத்த
கனவு நீ
என் இழுக்குள் சிறைபட்ட
வண்டு நீ
நான் இறந்தாலும் கொண்டு
சொல்லும் உறவும் நீயே!!!
என் குறைகளின் நிறை நீயானதால்
உன் நிறைகளின் அழகு நானோன்
இப்போ! என் குறைகள்
கூட அழகிய வடிவமாகின்றது தன்னால்!!!
நம் வாழ்க்கைக்கு எதுதேவையென
தெரியாக்குழப்பமே
பலர் நம் வாழ்வை சிந்திக்க காரணம்
நம் தேவை புரிந்தாலே போதும் நாம் வாழ!!!
என்னைபுரியாத நியங்களை
என்ன நிழவான நியம்
கவலைகொள்வதில்லை
என் இருளான தீ விழுந்த பின்னே!!!
வேண்டாத ஓன்றை
கையில் வைத்து
இருபதை தொலைத்து
இல்லாத ஒன்றை தேடும்
வாழ்க்கையே வாழ்க்கையாக
மாறுகின்றது நம்மில்!!!
கற்றுக்கொண்டே வாழ்ந்திட
சொன்னால்
வாழ்கை பட்டாம்பூச்சியின்
வண்ணமாகாது
ஓரு கற்பனை கயிறின்மேல்
கம்பீரமாய் நடப்பதாய் நாம்
ஒற்றின் வழியே நடப்போம்
திரும்பிபாரமலே
அழகான திருப்பங்கள் நம்மைவிட்டே
பறந்திடும்
தப்பெது சரியெது புரிந்தாலே
போதும் வாழ்க்கை வண்ணம்கொண்ட
பட்டம்பூச்சிபோல் சுகந்திரமாய்
பறிந்திட!!!
என்னை மறந்த
ஒரு ஓய்விற்காய்
சிலகாலம் ஏங்குது மனசு
எனக்குள்
ஆசையாய் தேடுது மனசு
ஆனாலும் மீண்டும்
விட்டபாடில்லை வாழ்க்கை!!
தொட்டது விட்டிட
விட்டது விலகியே ஒட
கற்றதும் மறந்திட
நித்தம் ஓரு சுமை முடியமலே
முடிவில் என்னையே
சுற்று இடவலமாய்!!!
இதயத்திற்க்குள்ளே ஓரு
ஓட்டம் உணர்வகள் பேசிடா
மொழியின் ஒட்டம்
மனதிற்க்குள் ஒரு ஓட்டம்
அறிவு தடுத்திடாத நிலையால்
ஓட்டம்
வாழ்க்கைக்குள் ஒரு ஒட்டம்
இறைவன் சொல்லாத நிலையால்
ஒட்டம்
வலிமேதிய விதியேடு ஓரு ஒட்டம்
உயிரில்லா வாழ்வை தேடிய
ஒட்டம்!!!
மாமன் சொல்லும்
ஓற்றை சொல்லுக்காய்
காத்திருந்த கானக்குயில்
நான்!!!
மாமன் கட்டும் மாலைக்காய்
பூத்திருந்த காட்டு பூ
நான்!!
மாமன் பார்க்கும் விழிகள்
இரண்டும் கேட்கும் மொழி பேசும் தாய்
நான் !!
மான் ஓடியாடி உழைக்கும்
வாழ்க்கைக்குள் சலிப்பில்லா
முயற்சி குழந்தை
நான்
மாமன் விட்டுமட்டும் சென்றால்
உயிரை விட்டுவிடும் ஒற்றை பறவை
நான்!!
நம்பிக்கையுடைபோதே
நம்பாதையில் தவறான பக்கம்
திறக்கின்றது !!
அந்த நெடியில்
ஓரு உறுதியான இதயம் தடுக்குமெனில்
நம் தவறான பக்கங்கள் திறமாலே
முடியேயிருக்கும்!!!
உதிக்கும் நிலவில் முகம் கண்டு
மதியவன் !!!நிலா இருக்கு வரை
. ந்திபோலே ஒடுகின்றான்!!
கார்மேகம் குதிக்கம் வரை
மதியவன்!!!ஏனே
நடப்பதில்லை தானாய்
நிலதேயும காலம் கண்டால்
மதியவன்!!ஓடும் காலம்
நிக்கின்றது தானாய்!!!
ஓற்றைகையின் நிழாட
ஏழைப்பெண்னின்
கிழிஞ்சல் சேலைச்சோலைக்குள்
இதயம் பூவாய் பூக்கின்றது
நிழல் பார்த்தே!!!நித்தம் ஒரு
கற்பனை நித்திரைக்கனவேடு
விழித்திடவே போனது தூக்கம்!!
அச்சம் பயம் அருகே எட்டிப் பார்க்க
மிஞ்சம் மிதி சொல்லாமல்
தூக்கம் வந்து தொண்டைக்குள்
சிக்கிக்கிடக்குது வார்த்தையாய்!!
அழகு ஒரு நெடிமொழுதில்
வீழ்த்தியே வாழ்ந்து விடுகின்றது
மனசோ இறப்புவரை
தவிக்கின்றது வீழ்ந்தே
கிடந்து!
வெற்றிபெற்றவர்கள்
கைகளில் திறமையாளன்
வெற்றிபெற்றால்
வெற்றி பெற்றவன்
வெற்றியின் பாதையின்
ஒளியின் வழிகாட்டியாகின்றான்
எப்போதும்!!!தன்னை
புரிந்தவனே இன்னெருவர்
வெற்றியின் பாதையாவான்!!
அதுவும் தன்னை
நம்பியே பயணிப்பனே
இன்னெருவரை வெற்றியின்
ஓளியில் நிறுத்திட முடியும எப்போதும்!!
நாம் தோற்க்கும்
மனிதனின் வெளிச்சமானால்
நம் திறமையின்
பாதைகள் அழகாகும்!!!
வறுமைக்கு பிறந்த
மகளானேன்
வார்த்தைகள் பேசிடா
கவியானேன்
ஊமையின் காதல்
பூவானேன்
உயிர்விட்டு சென்ற
உடலானேன்
உள்ளம் சிதைத்து இதயம் உடைந்த
கண்ணீர்பேசிடும்
கண்களானேன்
வெள்ளிநிலா பார்த்தே பசியை மறக்கும்
குழந்தையானேன்
இழிவுபடுத்தி உயர்வு கொள் மனிதனேடு
பகையுமானேன்
பசம் தந்து பாசங்கு செயது
ஏமாற்றிய வாழும் மனிதனுக்கு
முட்டாளானேன்
இருந்தும் என்னில் ஒடும் வேகம் மட்டும்
மாறவில்லை
இழந்ததை விட்டு அடுத்தது
என்ன என்றே கேட்குது
நம்பிக்கை!!!
ஓற்றையாய் தட்டுதடுமாறி
நிக்கையிலே
ஒரு உயிர் கூட நடக்கையிலே
வந்ததுயரம் கூட நம்மை
எதுகும் செய்யாதே ஒடும்
அழகின் வடிவமாய்
அன்பின் உச்சமாய்
புரிதலின் கைபிடியாய்
தடைகளின் காப்பாய்
காயத்தின் மருந்தாய்
குளிரின்வெப்பமாய்
தாமையின் மடியாய்
எம்மேடு எமக்காய் கூடவே
எம் பயணத்தின் கைகாட்டியானால்
எம் பயணத்தின் அழகே
எம்மை கண்டெடுத்த உயிரின்
வெற்றி!!!வெற்றியின் புள்ளிகளிலே
மனிதன் தன்னை தேடுவதால்
தோல்வியின் புள்ளிகள் கைவிட்டு
மரணிக்கின்றது!!!
இயந்திரமனிதனேடும்
பணத்தேடும் பேசமறந்த மொழி
ஓலைகுடில் தேடி காலைத்தென்றல் தேடி
பறவையின் கொஞ்சல்தேடி
வைத்த செடிகளில் ஊமைமொழீதேடி
ஒற்றை உதயத்தை போர்வையேடே
எட்டிப்பார்த்திட்ட காலம்தேடி
இழந்த பருவத்தை மனதிற்குள் தேடி
தொலைத்த கனவை கண்டெடுத்திட
காலத்தின் கற்பனை ஓலைக்குள்
மீண்டும் ஒரு காகிதப் பேனா தேடி
கதைபேசிய குளம்தேடி
கண்டவுடன ஓடி மறைந்து
மீண்டும் பேசும் மீன்தேடி
ஒற்றைவேலிதடுத்தும் எட்டிபறித்த
கொய்யாமரம் தேடி
அக்கபக்கம் வாடியென கொஞ்சம்
அச்சம் கொண்டு எட்டிபோகும்
கால்தடம்தேடி
தன்னைதொலைத்த
மண்னைவிட்டு தன்னைதேடயே ஓரு
வெள்ளைபக்கம்
கண்ணீர்த்தைளியழித்த வெற்றுபக்கத்தை
அழகாய் கிறுக்கிட ஒரு வானம்பாடியாய்
மாறுகின்றாள்!!
இருளேடு நடந்தே
பழகிய நாட்கள் கற்றுகொடுத்ததை
ஓளியிடம் கற்று கொள்ளா
அறிவை இருள் சூழ்ந்த வாழ்க்கை தந்தால்
இருளே பிடித்துகொண்டது
மனதிற்க்கு!!!
காலகாலமாய் ஒன்று என்பதை
ஆண்மை ஏமாறும் பெண்ணின
கைகளிலே கொடுத்திருக்க
பெண்மை மட்டும் இன்னும் மாறாமல்
இறுக்கியே பிடித்தே நடக்கின்றது
ஓன்றை எதிர்பார்து அனைத்ததையும்
இழந்து!!!
பிடித்தென பிடித்த பிடிவதமே
பெண்மை இழந்திடும் வாழ்க்கை
படித்தென்ன உழைத்தென்ன
உயர்ந்தென்ன
பிடித் தொன்றாலேயே
அசிங்கபட்டு அவமானபட்டு
அழுவதே வாடிக்கை
இதைபடைத்தவனும்
அறியா ஆண்மைக்கே வேடிக்கை!!!
உதிர்ந்து விழுந்த
நரைமுடியில்
அழுது விழுந்த கண்ணீர்துளி
நனைத்த ஈரமதில்
ஒட்டிகொண்ட கண்மைத்துளி
கேலியாக பார்க்கின்றது
என்னை
இழந்த இழப்பில் விழுந்த
ந்தியில் இழுத்த
பொம்மையாய் நீயிருந்தால் கூட
எடுக்க கரம் இருந்திருக்குமென்று!!!
தொலைத்து விட்டு. தொலைவில்
நின்று தேடுகின்றோம் நாம்
தொலைத்த உணர்வினை
தொலைத்தது நமென தெரிந்தே
என்னை ஏமாற்றியே
என்னை வென்றதாய்
நம்பிய இதயத்தின்
நம்பிக்கையின் கைபொம்மை நான்!
விழ்ந்த போதும்
உடைந்திடமால் அழிந்திடமால்
அப்படியே இன்னும் நான்!!!
ஓரு அன்னையின்
ஓரு உயிர்த்துடிப்புற்க்குள்
ஓரு உயிர்பிறப்பின்
ஓரு பிறப்பே தாய்மை
இந்த உயிருக்குள் உயிர்கள்
காத்திடும் வடிவமாய் பிறப்பவளே
அம்மா!
உலகின் படைப்பிற்க்குள்
பெண்மை காத்திடும் ஓளியின் வடிவமாய்
பிறந்த அன்னையவள் கொண்டாடிட
கொடுத்த வர்மே
அம்மா!
இவள் தடுமாறினால் இவ்வுலகே
தடுமாறுமென்பதால் அன்னையவள்
ஆண்மையிடம் கொடுத்தாள்
கொண்டாடிட ! பெண்னை
கெடுப்பவனும் கெட்டவனும்
ஒரு நிமிடம் கைகூப்பிட
நினைத்திடும் அன்னையவள்
கொடுத்த வரமே அம்மா
இங்கே! மன்னிக்கும் கடவுளானால்!!
யாரேயெருவர்
யாறும் அறியாமல் நம்
வாழ்க்கைக்குள் எது தடுத்தும்
வந்துவிடுகின்றனர்!!
எதையும் உணரும் தருமின்றி
நம்மை காப்பது போல்
வாழ்க்கையை கொடுத்திட்டு
இது தான்
சந்தோஷமென்கின்றோம்!!
அழிப்பதும் காப்பதும்
நம் உறுதியான
மனதின் செயல்!
அறிவிருந்தும் நாம்
நம்பிக்கையால்
செயலற்று சிலையாய் நின்றிடும்
தருனம்!
உணர்வுகள் அடைக்கலம்
தேடிட இதுவே உலகில் நாம்
தேடிய சிறந்த தருனமாய்
தோன்றும்!
இடைவெளி கற்றுப்புரிந்திடாமல்
இருபதையே அழித்திடும் தருனமாய்
நாம் புரியும் காலம் புரியும் போதே
வாழ்வில் அனைத்தும் இழந்திருக்கும்
தருனமாய
தோற்றே வீழ்வோம்!!!
இதனால்தானே
நம் வாழ்க்கை ஒரு ஓழுக்கத்திடம்
ஓப்படைக்கபடது !
இப்போ!
ஓழுக்கமே இங்கே சிக்கலாகி
ஓழித்தேடிவிளையாடுது நம்
வாழ்வை விட்டு!!!வரமுறைகள்
தடுமாற வறையரைகள்
திசைமாற வாழ்வியல்
மாயவுலகானது!!!
ஓரு பௌரணமியாய்
தன்னை தனக்கென
எடுத்து
ஒருவெளிச்சப்பாதயில்
ஓரு அமவாசைஇருளை
வெளிச்சத்தில்
எடுத்துசொல்வாளென நம்பியே
ஒரு அம்மாவினை
கொடுத்தான் இறை பௌர்ணமியாய்
ஒரு அமவாசை
ஓருவெளிச்சத்தில் எழுவதை
அறியாமலேயே உயர்வதால் தான்
வெளிச்சதின் அருமை புரிவதில்லை!!!
சின்ன சின்ன சந்தோஷமே
ஓரு கண்ணாடியாய்
உடைந்திடும் போது
எங்கே வாழ்வில் பெரிதாய்
தேடிட
சின்ன சின்ன முயற்ச்சியே
தோல்வியாய் திரும்பிடும் போது
எங்கே வாழ்வில் பெரிதாய்
முயன்றிட
சின்ன சின்ன கனவுகளே
கைசோராமல் நழுவிடும் போது
எங்கே கனவுக்குள்
வாழ்வை தேடியெடுத்திட
சின்ன சின்ன புன்னகைப்பே
கண்ணீராய் மாறும் போது
எங்கே வசந்ததை
எதிர்பார்க்க
சின்ன சின்ன நம்பிகையே
கூடிடாதே தோற்றிடும் போது
எங்கே வாழ்வை நம்பி
நடக்க!
சின்ன சின்ன தந்துவமே
இங்கே காத்திடாத போது
இறைவன் எழுதிய விதியின்
உறையை எங்கே தேடிப்படித்திட
சின்ன சின்ன
மனதிற்க்குள்
இல்லையென்னும் கற்பனையே
இருக்கு என்றபொய்யாய்
வாழுது சின்ன சின்னதாய்!!!
மலரென்று மடிதனில்
மலர்ந்த நாள் இன்று
பூவெடுத்து தாய்மையை
பூத்திட செய்த நாளின்று
அன்னையவள் கையேந்தி
புன்னகைத்த நாளின்று
மலருமென எண்ணியே தாய்மை
நெஞ்சணைத்த நாளின்று
இறைவன் எழுதிய விதியறியாமல்
கொண்டாடியே மகிழ்ந்த நாளின்று!!!
ராசியில்லாதவள்யென
மற்றவர் கூறும் போது வலித்ததுயில்லை
இறைவா !!!
நீயே தந்து பறித்த பொதே
நானும் மடியில்லா பிறவியின்
குழந்தையானபோதே எனக்கும்
வலிக்குது தானாய் ஏனோ!!!
திரும்ப கிடைத்திடா நிமிடங்கள்
கிடைத்திடும் பொழுதே
நாம் தொலைத்தது
திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி
நம் அர்த்தமில்லா காலத்தில்
தொலைத்த சந்தோஷமே
நமக்கு கிடைத்ததால் கிடைத்தது
கிடைத்திடும் வரமென
உணர்வு உணரும் போதே
வாழ்வும் புன்னகைக்கும்!!!
மனசு கொஞ்சம் வலிக்க
கண்கள் கொஞ்சம் குளமாக
நானெ நீயாய் கடந்த காலம்
இந்தனை காலமா?
யாரே திருப்பிய பக்கத்தில்
ஏக்கங்களாய் என் இதயம்
கொஞ்சம் பரமாய் நின்றே துடிக்க
உன்னை தொலைத்த என் விதி
என்னை பார்த்தே புன்னகைக்கின்றது
உன்னைப்போல்
மீண்டும் கையேந்த முடியா
பாவியாய் இன்னும் உன்னை
சுமக்கின்றேன் நினைவேடு
என்னில் நின்று பிரித்திடமுடியாமல்
கடல் அலையாய் மேதியுடைக்கின்றது
என்னை!!!
நம்
ஆசை கனவுகளை
மற்றவர்களிடம்
எதைகொண்டும் எதிர்பார்க்க
முடியாத பாதையாய் நாம்
தெரிவுசெய்து விட்டு
நம் ஆசைக்காய் அடுத்தவரை
கட்டாய படுத்த முயல்கின்றோம்
கட்டயத்திடமே தேற்கின்றது
நம் கனவின் பாதை நமக்காக
நாமே தேடிய கனவின் பாதையை
நாமே தொடர பாதையையும்
நாமே தேடவும் வேண்டும்
காலத்தின் மாற்றதை ஏற்க மறுபவனே
காலத்திடம் தேற்றிடவும் செய்கின்றான்
மாற்றமே நம் பாதையின் தெளிவு
எதைகொடுத்து சரிசெய்திட முடியா
வாழ்க்கையிடம் எதையும் எதிர்பார்க்கதவனே
மதிக்கபடுகின்றான் !!!
பெற்ற குழந்தை முகம் பாராமல்
வீசியெறியும் பெற்றவர்
உணர்ச்சிக்கு பழியாகும்
குழந்தையின் ஏக்கங்கள்
இல்லாமல் இல்லையென்ற
உறவிற்கு அன்னையாகிட
இற்றை நாளில் ஆசை கொண்டேன்
இல்லையென்பரை இருக்குயென்று
பிச்சைபோடும் கரமாய் இல்லாமல்
கொடுக்கும் கரமாய் மாற்றிடவே
இற்றை நாளில் ஆசைகொண்டேன்
ஒற்றை உலகில் இருக்கும்
உயிர்கள் அனைத்துமே ஒன்றை
உறவாய் ஏற்றம் பெறவே இற்றைநாளில்
ஆசைகொண்டேன்
ஆசையேடு ஆசைகள்
அலையேடு இழுத்தே போக
அனல் மேல் விழுந்த உயிராய்
இற்றைநாளும் ஆனது எனக்கு
மரணம்
என்னை சிறைகைதியாக்கிய
பின்னே தனிமை எனக்கு
ஆயுள் தண்டனையெழுதியது
உறவ உரிமைபெற நிலையிலேயே
உயிர் உறங்கிட துடித்தது
குற்றத்தின் தண்டனையை
மாறிமாறி மனிதன் தந்தபோது தான்
பிறப்பு ஏளெ புரிந்தது
எல்லாம் அவன் எழுதிய சாபமென
இருந்திடவே
வாழ்க்கை ஊமையாது !!
இக்கட்டிற்குள் சிக்கவிட்ட
சிக்கலை சிற்பமாக்கிய
என் கற்பனைக்கு தெரிந்தது
ஒரு கனவின் வடிவம்!!
விழுந்திட முதலே பிடித்திடும்
கரம் இருந்திடும் உறவிற்க்கு
கிடைத்திடும் வெற்றியே
வாழ்வில் சிறந்த பரிசு!!!
என் பேச்சில் என் கோவம
என் மூச்சில் இல்லை உயிர்
அவன் தூக்கி போட்ட என்னில்
அவன் எழுதி சொன்ற கோலம்
அவன் அலச்சியத்தால் எனக்கு
கொடுத்த தண்டனை!!!
ஓற்றை ரோஜாவை
மெழுக்குள் புதைத்து
கண்ணாடி குவாளைக்குள்
அடைத்தது போல்
சிலர்வாழ்வின் அழகு
அழகை மட்டும் புரிந்து
கடக்கும் நிமிடத்தின்
பார்வையே சிலர் பார்வை
உணர்வுகள் எங்கே ?? இங்கே
பூவிற்கு இல்லையே உயிர்!!!
அனைந்தும் இழந்து
கூட வரும் நினைவு
சிலர் வாழ்வில் அச்சம்
சிலர் வாழ்வில் அனுபவம்
சிலர் வாழ்வில் வலி
சிலர் வாழ்வில் மறதி
சிலர் வாழ்வில் மட்டும் தான்
அடுத தவறின் ஆரம்பம்!!!
மனசுபேசி மொழிகள்
புன்னகைத்து போதுமென
விழிகள் பேசி மௌனம் புன்னகைத்திட
புன்னைகள் சொன்னது
மொழிகளை ஊமையாயிருயென!!
இருப்பவர் கொடுத்திட பிடித்திடா
இல்லாதவர் கையில் நின்றிடா
உழைப்பின் வறுமையே
ஊதியம்.
இது காலகாலமாய்
மனிதசங்கலியின் அடிமைதனத்தில்
சிக்கிக்கொண்டு இன்றைய நாளிலும்
ஓடிட சொல்லுது. ஓய்வின்றி!
வறுமையைம் கடனும்
பசியும் வட்டியைம்
நோய்யும் மரணமும் நின்றட
விடுவதில்லை ஓர் நாளும்
நின்மதியும் வருதில்லை உழைத்தாலும்
இருப்பவர் மனதில்
சிந்தனையும் மாறவில்லை!
உழைப்பவர் உழைப்பில்
வறுமையும் மறையவில்லை தன்னாலும்
கண்ணீரும் மாறவில்லை என்னாலும்!!!
ஓற்றை வீணைக்குள் விழுந்த
உயிர்த்துளி ஊமையாக்கியது
இசையை
பெற்ற வலிக்குள் விழுந்த
கண்ணீர்த்துளி குருடாக்கியது
கண்னை
இற்றைவரை புரியாமலே
ஊணமாக்கியது காதல்
கற்றவரை துணையாய் வருகின்றது
கவிதை
இக்கதியில் கூட நடக்குது
கற்பனை
எக்கதியிலும் என்னை தாங்குது
தனிமை
அக்கம் பக்கம்
யாருமில்லாப்பொழுது
உறக்க சொல்லு உறக்கம்
இப்பொழும் சொல்லாமல் துடிக்கு
உயிர்
எப்பொழு சொல்லும் என
தெரியாமலே தயங்கியே கிடக்கு மனசு!!!
உண்மைகள் ஊமையாகும்
போதே
தவறுகள் பேசிக்கொள்கின்றது
உண்மைகள் மௌனமாகும்
போதே
சிலர்வாழ்க்கை தடமாறுகின்றது
உண்மைகள் புரியாத
போதே
பொய்கள் உறவாடுகின்றது
உண்மைகள் உறங்கிடும்
போதே
வாழ்க்கை இருள்லாகின்து!!
புரியமால் பேசும் இதயங்கள்
முன்னே பேசாதிரு
புரிந்த இதயமுன்னே
எதையும்பேசு
எல்லாம் அறிந்தவர் முன்னே
அமதியாய் இரு
எதையும் அறியாமல் பேசும் இதயமுன்னே
ஊமையாய் இரு
தன்னை உயர்த்தியே பேசும். இதயமுன்னே
உன்னை தாழ்தியே வை
உன்னை தாழ்த்தியே பேசும் இதயமுன்னே
ஒரு படி விலகியே நில்லு
உன்னை உயர்வாய் நினைக்கும்
இதயத்தைடன் தோழமையேடு இரு
உன்னை அன்பாய் பார்த்திடும்
இதயத்தேடு கைபிடித்தே நட
உன் சுமைகளை சுமந்திடும் இதயத்தின்
உதயமாய் இரு!!!
நிமிடத்துளிக்குள் முடிந்தது
கனவு
காலத்துளிகள் சொல்லுது
கொல்லுது என்னை
ஏமாற்றதை சொல்லிச்சொல்லியறயே
ஆசைதுளிகள் அடிக்குது இலையுது
பின்னே
அலையில் சிக்கிய இலையாக
நாளும் கிழமையும்
வருவதும் போவதும் தெரியமலே
உறங்கிக்கிடக்கு தனியாக!!!
வெட்டிய கதிர்வீடு சோர
குற்றிய நெல்லால் பானை நிறைய
வற்றிய வயிர்கள் மகிழ்வாய் புன்னகைக்க
இல்லையென்பதை இல்லாமல்
செய்ய இருப்பவர்
கொடுக்க கையேடு விசேசம்
வாங்கியவர் இல்லமும்
குதுகலம் கொண்டே புதிதாய்
பிறந்திட பழமையின்
உன்னதம் பருவங்களை கொண்டியது
அறியாமை மனிதனின் அழகியலை
அழித்தால்
கொடுப்பவர் கைகளும்
கொடையை மறக்க இருப்பதே
வறுமையென இல்லாதவர் ஏங்க
இருப்பர்களுக்கே பண்டிகைகளானது!!!
வாழ்க்கையே இல்லையென
இறைவன் சொன்ன
விதி
இருந்த தைரியம் தொலைத்தே
என்னை கோழையாக்கிய
விதி
போதுமென துன்பம் கொடுத்தே
இன்பதை அதிஸ்ரமாய் தொலைத்த
விதி
சொற்கள் குத்தியே இதயம்
பட்டு காயம் கண்ட
விதி
மரணத்தை தந்து மனதை
வென்றிட இறைவன் எழுதிய
வீதி
இறந்த காலத்தின் ஆசையை
நான் இறந்தகாலத்தில் தேடிடும்
விதி
நிகழ்காலமாய் தூரத்தியே வருகின்றது
என் இருண்ட முகம் பார்த்தே
விதி!!
அன்றெரு நாள்
விதி
இற்றைய நாளில்
வெள்ளையாடைதனை
பரிசாய் தந்த போது
மகிழ்வா்ய் பெற்றேன்
எதனையும் புரிந்துகொள்ளாமலே!!
விதி உணர்த்திய எச்சரிக்கையின்
அர்த்தங்கள் யாவையும்
இப்போதே நம்பு மனசு!!
மரணம் ஈன்ரெடுத்த
மைத்தனின் நாளில்
மரணம் ஈன்ரெடுத்த ஒற்றை
பூவிது!!!
கற்கள் வழிபாதையின்
சிலுவையாய் பவத்தை சிந்தாமல்
சிதறமல் சுமக்குது
செய்த பாவம் புரியாமல்!!
விதியென பாவத்தை சுமந்தபடி
தள்ளாடியே தனிமையேடு
திண்டாடு தினமும் !!!
கண்டாடும் விழிகள் கதையாக
விழுத்தாடும் நெடிகள் சுமையான
பூவிற்க்கு !!
கையேடு இறை கொடுத்த விதி
கருவேடு இருள்
விடியதேயென தேடியே
வினானது காலங்கள்!!
அழித்திட முடியாமலேயே
பூவும் நடிக்குது இயல்பாய்
கண்ணீரை மறைக்கு சிரிக்குது
ரசிப்பவர் பாவம்மென்று!!!
பெய்களை நம்பியே வாழ்பவர்
வாழ்க்கைக்குள் ஒரு கற்பனை
பெய்யாய் உண்மையின் விதியில்
இற்றைவரை அர்த்தங்கள்
புரியாமலே மற்றவர் எழுதிய
தண்டனைகளையும் சுமக்கு
விதியென்று!!!
பெற்றோர்கள் சரியாய்
இருந்தால் பிள்ளைங்க தவறாய்
இருக்கின்றார்கள்
பிள்ளைங்க சரியாய்
இருந்தால் பெற்றோர்கள்
தவராய் இருக்கின்றார்கள்
பெற்றோரும் பிள்ளைகளும்
சரியாய் இருந்தால் கூட
சோர்கின்றவர்கள் தவராய்
இருக்கின்றார்கள் ! ஒரு சரியும்
ஒரு தவரும் இணைந்ததே வாழ்க்கை
சக்கரம்!
நிலையற்ற
விந்தை உலகின்
விசித்திர மனிதர்களின்
வேடங்களை கண்ட
பின்னே
அவள் வனத்திற்க்குள்
ஒரு ஒற்றை குயிலானால்!!!
உண்மையை யார் கூறியும்
கேட்கா மனிதன் அனுபவித்து
தோற்ற பின்பே
அன்பை பிச்சையீய்
கேட்கின்றான் !!!
வாழ்க்கை தோற்றமோது
உறுதியாய் எழுந்தே நடந்தவள்
காதல் தோற்றபோது உடைது
சிதறி விழுந்து விட்டாள்!!!
வர்ணங்கள் கொண்டு
வரைந்தவள் ஒவியத்தை
ரசித்தவர் பார்க்காதே
போன அவள் விரும்பிய
வர்ணம் அவள் கைகளில்
ஒட்டிக்கொண்டது!!!
ஓரு சிந்தனை சிதறிலின்
தொலைந்து போன முகம்
இவள் முகம்
ஒரு கனவின் சிதறலில்
கரைந்து போன முகம்
இவள் முகம்
ஒரு கவிதையின் கற்பனைக்குள்
தொலைந்து போனது
இவள் முகம்!!!
மனதேடு போராடி
மனதினைவென்றெழுந்திட
சிலகாலம்
கனவேடு போராடி
கனவுனை தொலைத்தெழுந்திட
சிலகாலம்
கற்பனையேடு வலிகளை சுமந்து
மாற்றத்தை தேடியே நின்றது
சிலகாலம்
எதிர்பார்ம்போடு ஏமாற்றங்களை
சுமந்து நல்ல காலத்தின் காத்திருப்பில்
சிலகாலம்
காலம் கடந்தே கடந்த வயதை
திரும்பிபார்த்த
கண்ணீர் சொன்னது
உன் வாழ்க்கை அர்த்தங்கள்
புரியாமலே முடிந்து போன ஒரு
ஓற்றை சொல் கவியென்று!!!
வாழ்க்கை கசந்த பின்னர்
நம்மையே நாம் வெறுத்த பின்னர்
எந்த மரணமும் நம்மை
பாதிப்பதில்லை நாளை நாம்
என நினைக்கும் மனசு நமக்குள்
வந்துவிடுகின்றது!!!
சித்திரைப்பெண்னிவள்
சிற்றிடை சுற்றிய பட்டுடை
பட்டெளியில் நித்திரை போனது
மாமனுக்கு
சிந்தைக்குள் வந்தவள்
முகம் சிந்திய புன்னகையில்
நிலவெளி வெறுத்தது
மாமனுக்கு
வெட்டிய நெற்கதிர் குத்தியே
சமைத்த சோற்றிக்குள் கைகள்
கோலபோட்டிட அத்தையவள்
உருட்டியவிழிகளுக்குள்
உருண்டெழுந்து மாமன்
உண்டதென்னவே அவள்
நினைப்பதைத்தான் !!!
விடியலில் விடிவுகள்
விடியும் என்றே
விழிகள் விழிக்கின்றது
விழிகளின் கனவுபோல்
சிலவிடியலும் தவிக்கின்றது
கனவைகள் சோரும் போது
சில மனங்களும் சோரும்
மனங்களில் சோர்வு கொண்டால்
பல விடியல்கள் உதயத்தை
இழக்கம்
இழந்தை தேட பல விடியலில்
இதயமும் துடிக்கும்
துடிக்கும் இதயம் இழந்ததை இரவுகளே
சுமக்கும்
சுமக்கும் இரவிற்கு தான் தெரியும்
விழிகளின்ஆசையும் கனவும்!!!!
ஓன்றையடைத்து
இன்னென்றை நேசித்து
இரட்டை வாழ்க்கை
தன்னை மறக்க
தண்ணீயை நாடியேடுது
தன்னில் தவறியில்லையென
இன்னும் புரியா
வாழ்க்கையை புரித்தே வாழ!!!
தன்னை தொலைத்து
கோப்பைக்குள் விழுந்து
இருப்பதையும் இழப்பதே
வாழ்க்கையென்கின்றனர்!!!
விமர்சணம் தாண்டியது
வாழ்க்கை நம்மை காயபடுத்த பலர்
வாழும் உலகில் தன்னை
புரிந்தவர் கூட வாழ்பவரே
மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர்
விமர்சணத்திற்கு பயந்தவர்கள்
போலியாய் நடித்து பொய்யாய்
புன்னைகைத்து தன்னை நிறுபிக்க
போராடிகொண்டே வாழ்கின்றனர்!!!!
ஏதோ!!
ஓரிடத்தில் பணம்
எம்மை உடைதெறிந்திடுவதால்
நாம் அதனிடம் அடிமையாகி
விடுகின்றோம்!!!
ஏதோ ஓரீடத்தில் ஏழ்மை நம்மை
பின் தள்ளிவிடுவதால்
நாம்பணம் கடவுள் என
கை கட்டி சேவை
செய்கின்றோம்!!!
அனைத்தையும் இழந்து பணத்தை
அடைகின்றோம் பணத்தை இழக்கும்
போது தனியாக
நிக்கின்றோம்!!
நிரந்தரம் இல்ல பூமியில் ஒரு
நிரந்தரம் தேடியே வாழ்க்கையேடு
சண்டை போடுகின்றோம்!!!!
புரிந்திடாமல் உதாசினம்
செய்து போனவர்களில் நடிப்பில்
தேற்றுவிடுகின்றது நம் உணர்வு
நம்மை புரியவைத்திட முடியாமல்!!
கற்பனைக்குள
ஓரு சிலைவடித்து
என் கனவால் உயிர்கொடுத்து
என் ஆசைகளை கூறி
விளையாடுகின்றேன் நியமற்றதென
தெரிந்தும்!!!
அவள் விட்டு போன முகம்
இவள் வைத்துக்கொண்ட
கவிதை
அவள் தந்து சென்ற இசை
இவள் உறக்க செய்யும்
தாலாட்டு
அவள் வரைந்து கொடுத்த
ஒவியம்
இவள் கைகள் பிடித்து
அழைத்து செல்லும்
கற்பனை
அவள் பேசி கொண்ட வார்த்தைகள்
இவள் மொழியில் பூக்கும்
காதல்
ஓவ்வொரு துன்பத்திலும்
ஒரு விரக்த்தி
ஓவ்வொரு விரக்த்திலும்
ஒரு சலிப்பு
ஓவ்வொரு சலிப்பிலும்
ஓரு ஏமாற்றம்
ஓவ்வொரு ஏமாற்றத்திலும்
ஓரு வெறுப்பு
ஒவ்வொரு வெறுப்பிலும்
உயிர் இழக்கின்றது
நம்மிக்கையை!!!
என்னை பார்த்து பைத்தியமென
திட்டியவனை பார்த்து
புன்னகைத்தே திரும்பினேன்
திரும்பிய என்னுள்
அவனை நினைத்து கவலையானேன்
நான் இசையேடு பேசி
கவிதையேடு விளையாடி
உரையாடுவதை
இவன் பார்த்தால்
இவன் அல்ல பைத்திமாவான்
எல்லோரும் ஏதோ ஒன்றின் மீது
பைத்தியம் தான்!!’இதை புரியாமல்
மற்றவரை கூறுகின்றோம்!!
ஓற்றை சலிப்பில் தேனீருக்காய்
ஓரு ஏக்கம்
வேலைக்கனைப்பில் சமையலுக்காய்
ஓரு ஏக்கம்
ஓய்வாய் அமர்கையில் கூடி
வாழும் வாழ்க்கைக்காய்
ஒரு ஏக்கம்
எல்லாம் இருந்தும் இல்லாமல்
ஓடும் நேரத்திற்க்காய் ஒரு
ஏக்கம் !ஏக்கம்
ஏக்கமாய் அடைபட்டு கிடக்கு
உறவு பணத்தை மட்டும் வைத்துக்
கொண்டு வெளிநாட்டிலும்!!!
முற்கள் மேல் பிறந்தே முற்களின்
காயமற்று அழகாய் பூப்பதாய்
வந்த ஓற்றை சந்தோகத்தில்
தென்றலும் மழையும்
அடித்துக்கொண்டதில்
காணமல் போது ரோஜா!!!
நம் கற்பனையும் இப்படியே!!!
நமக்கு பிடித்ததை அடைய
எந்தவழியை தேர்வு செய்தாலும்
தப்பில்லையென
தப்பாய் அடியெடுத்து வைக்கின்றோம்
இங்கே
நம்மை மட்டும் சிந்திக்கும்
நம் சுயநலமே
யாரே ஒருவர் பாதையை
அடைத்து நீக்கின்றது
என் காட்டுவழி பாதையில்
மனிதமிருங்களை கடந்தேன்
மனிதனை மட்டும்
கடந்திட செய்தே நின்றேன்
இங்கே மிருங்கள்
அன்பானது மனிதமிருகங்கள்
எதிரியானது!!!எதிரிகளை அன்பால்
வென்றிடவே அமைதியானேன்
என் அமைதிக்குள்
அழகான ஒரு உருவம்
உயிரானது!!! அந்த உயிர்
பல கேலிகளால்
தன்னை வரைந்தபோதும்
தன் பாதையை மாற்றவில்லை
நம்பிக்கை வைக்காமலே
நம்பிக்கையை மட்டும் நம்பி நடக்கின்றது
பொய்கள் தேற்கும் போது
உண்மை வாழும் தானே,….,,
நம்மை பிடிக்காமல் விட்டு
சென்றவருக்கூட நம் சந்தோஷம்
ஏன் கஸ்ரத்தை கொடுக்கின்றது
நாம் சந்தோஷமாய்
இருக்க கூடாதென ஏன் நினைக்கின்றார்
இங்கே
கஸ்ரப்படும் போது வராத பாசம்
நம்மை யாரேனும் நேசித்தால் மட்டும்
கோவமாகின்றதே ஏன்?
நம்மை வெறுப்பவர் மனதிலும்
நாம் நன்றாக வாழ்ந்திடக்கூடதென்ற
நல்ல எண்ணங்களா!!
தன் பிரிவு அவர் வாழ்வை
அழித்திடவேண்டும் என்ற நற்பாசமா
இற்றைவரை புரியாத ஆண்பெண்
வாழ்க்கை ஓரு யுத்தகளமே
இதில் பெரிதென்றும் சிறிதென்றும்
சண்டையிட்டு மண்டையுடைத்து
மண்ணில் சாம்பலாகியவரே அதிகம்!!!
நேசித்து பாருங்கள் குறைகள்
காதலாகும்
மதித்து பாருங்கள் வாழ்க்கை
வெளிச்சமாகும் ஓற்றுக்குள் ஓன்றை
ஓழித்தவன் செய்தது தவரல்
சொர்க்கமே !!!
வருடங்கள் ஓடின நம்
பிரிவிற்க்குள் வாழ்கையும்
எதை எதையே கற்பித்தது!
கற்பித்த வாழ்க்கைகுள்
உன்னைபோல் ஒருத்தன்
இல்லாமல் தோற்று போன
பெண்னானேன்!!
நம் பிரிவு தந்த
இடைவெளிமறந்த நீயோ
என்னை இன்னும் பாடசாலை
பெண்ணாகவே பார்க்கின்றாய்
மாற்றதில் உடைந்த
விம்பத்தை கண்டால் உன் முகம்
தாங்காதேயென நானும் உன்
கைபிடித்தே மடியுறங்கிய பெண்னைபோல்
நடித்துக்கொண்டே இருக்கின்றேன்
என் கோகத்தை
உன் அன்பு கட்டிப்போடுகின்றது
என் பிடிவாத்தை
உன் புன்னகை சிதறடிக்கின்றது
என் சோம்பலை
உன் கோவம் எழுந்திட செய்கின்றது
என்னை கண்டாலே
உன் கண்கள் உற்சாகம் கொள்ளுகின்றது
உன்னேடு வாழ்ந்த நாட்களில்
என் கண்கள்
கண்ணீரை கண்டதில்லை
பொய்யாயன என் நடிப்பில் கூட
கண்ணீர் வந்ததில்லை இப்போ
என்னை கண்ணீர் காதலிக்க
தோல்விகளே கைபிடிக்க
நீ காண நான்
நீகாணாதே உன் வீட்டு
பூசையறை படமாகவே ஆசைகொண்டேன்
உன்னையும் என்னையும் மீண்டும்
விதி சந்திக்க வைக்கின்றது தானாய்
கடந்து. வந்த பாதையில்
சில முகம் நிலவைப்போல்
நம்மோடு கூட நடக்க
சந்தோஷாம் தரும் தோழியாய் நானும்
என் மரணம் வரை நீயும் இருக்கின்றோம்
பாக்கியம் செய்திருக்க வேனும்
நம் வாழ்வில் நம்மை பிரியாமலே
நம் பாக்கத்தில்
இருந்து நம்மை
வழிநடத்தும் நல்லுறவோடு
நம்மை இணைத்து இறைவன்
படைத்திருக்க!!!
நீண்ட காலமாய் தொலைத்த
ஓரு அழகிய விடியலை என்
காதுகளில் கேட்டேன்
ஒரு கவிபொழுதில் அன்றை பொழுது
எதையே அடைந்த மகிழ்ச்சி என்
இதயக்கூட்டில்!!!ஓற்றை சேவல்
சொன்ன அதிகாலை வணக்கம்
விட்டு வந்த ஊரை கூட்டிபோக சொன்னது
என் மனதிடம்!!!
நம் புரிதலில்லா உறவினை
புரிந்தவர்களே !!நமக்கு நன்மை
செய்வதாய் நம்மை வைத்து
விளையாடும் ஆட்டமே
நம் வாழ்க்கையாகின்றது!!
என்
நீண்ட பொழுதில் ஓரு பொழுது
என் நடைபாதை தூரமாய்
என் கனவேடு
நீயும் நிலவும் என்
வண்ணதூரிகையாய் எண்ணத்தை
அழகாய் தந்த
அந்த இரவுத்தூரம்
ஒரு அழகான ஒவியக் கையேடாய்
என் இதயதாமரையில்
சட்டென வந்தே பட்டென
மறையும் மழைகாலத்தின்
சூரியன் போன்றே ஒரு நெடி
பொழுதில் வந்து தேயும்
நிலவு போன்றே என் உணர்வில்
பூத்த உன் உணர்வுகளை ஒரு
நெடியில் மொய்யாப்கிவிட்டாய்
என்னை விட்டு சென்றதெல்லாம்
எனக்குள் அழகானதும்
நான் நேசித்ததும்
என்னேடு கூட
வரவே நான்
ஆசைகொண்டதும்
ஆனால்
விசிந்திரமே வாழ்க்கையானதால்
என்னை விட்டே தூரமானது!!!
இல்லாத ஒன்றை இருப்பதாய்
கற்பனை செய்து நடிப்பதை விட
இல்லையென்றே நடப்பதே
எனக்கு நானாய்
உணரும் தருனம் இதன்
சிறப்பே என்னில் நின்று பலர்
விலகிச் சொல்லும் தருனம்!!!
இருந்தும் புரிந்து பேசும் மனிதனே்
எனக்கு என்றும் உறவு!!!
நீ விட்டு சென்ற என்னை
காலம் கொலைசெய்ததை
காத்திருந்தே கடந்திட்டு
இறந்த உயிரிடம் உன்னை தேடி
அழுகின்றாய்.
நேரம் யாருக்காகவும்
நிற்காது. என்று தெரிந்தும் !!!இப்பே
உணர்வற்ற உடலேடு.
உயிர்பேசுவதை ஓரு ஆத்தமா
வேடிக்கை பார்க்கின்றது
உயிர் உள்ள வரை தான்
உணர்வுகள் வாழும் வாழும் போதே
வாழ தொடங்கிடு எனியாவது!!!
என்னை திரும்பி பார்த்த
பின்னே என் தவறுகளை
திருத்திப்பார்த்தேன் என்
தவறுகள் புரிந்த பின்னே நான்
சேற்றில் பூக்கும்
வெண்தாமரை போல்
மழையில் நனைகின்றேன்
இப்போ !
நினைவில் கூட
தவறுகள் இல்லை
கவலையின்றியே என்
மனசும் உறங்கிக்கிடக்கின்றது
கெட்டவர் நடுவே
நல்லகண்டிபூப்போல்
என் அழகான அகம்
அழகாய் தெரிகின்றது !!!
வறுமையும் பினியும்
ஆசையும் கூட
அருகே இருந்தும்
என்னை கற்பனையாய்
காத்துக்கிடக்கின்றது கொஞ்சம்
ஏக்கம் கண்ணீர் விட்டாலும்
அறிவு சமதான் சொல்லியே
அழைத்து சொல்கின்றது இந்த
உலகத்தை காட்டியே !!
என் பாதைகளின்
ஓரங்களில்
என்விழியின்
கண்ணாடியில் விழுகின்ற
பல விம்பல்களே இங்கே
தோன்றும் வண்ணங்கள்
தன்னை மறைத்து
கொண்டவர்களுக்கு
தான் தெரியும் தன் நிழல்
இருளேடு தனியே
நடப்பவர்களுக்குவ தெரியாது
தன் இருளுக்குள்
ஓழிந்து கொண்ட நிழலை
இங்கே
நியம். புரிந்திடா நிழல்களின்
பெய்களே வலிகளை கொடுக்கின்றது!!!
பெண்மையின் வாழ்க்கையில்
உண்மைகள் அற்ற பொய்களே
அழகாய் பூக்கின்றது
இங்கே உண்மையில் பெண்மை
தனக்கே தெரியா பெய்களிடம்
மட்டிக்கொள்கின்றது கடசியில்
பெண்மைக்கே தெரிவதில்லை
தான் வாழும் வாழ்க்கை!!!
பெண்மையை பழி சொல்லி
பழி வாங்கி பழி போடும்
யாரேனும் மெண்மையி்ன்
வலிகளை மட்டும்
ஏன் புரிந்திட மறுக்கின்றனர்
பெண்மையை தனது
அறியாமையென நினைப்பதால்
தானே!!
ஓருவர் ஜெயித்திட அன்பால்
முடியும்
இல்லை எதிரியானால் முடியும்
அன்பை கொடுத்து ஜெயிந்திட
இதயங்களில் புரிதலில்லை
ஆதலால்!
எதிரியாகயாகியே மற்றவரை ஜெயிந்திட
செய்கின்றோம் அன்பின் தோல்விகளில்
எழும் தோல்விகளே
வெற்றியின் முதல் படியாகின்றது!
அன்பான இதயமே அழகான
உறவிற்கு சொந்தக்கார்கள்
அந்த
அழகான உறவிலே அழகான
இல்லம் பூக்கின்றத்து
இங்கே
சண்டையுண்டு பழிவாங்கிட
தான் யாருமில்லை
கோவம் உண்டு
பிரிந்து சொல்லத்தான்
யாருமில்லை
பூக்கும் பூவை விட
அழகான மனசே வாழ்வின் ஆதாரம்!!!
அந்தியில் ஒரு கனவு
அத்தை மகன் கைபிடித்து
நடக்க கண்ட கனவு
இதில்
எதை சொல்ல எதை விட
எப்படிச்சொல்ல அவனுக்கு
இருந்தும் உதடுகள் துடிக்கின்றது
உணர்வுகள் உச்சரிக்க தவிக்கின்றது
அவன் முகம் பார்க்கையிலே
ஆனாலும்!
மிஞ்சம் மிதி சொல்லாமலே
அத்தை முகம் நினைக்கையில்
அச்சம் வருதே தானாய்!!
அத்தையவள் பெற்றது
ஊரைசுற்றி திரிந்தாலும்
உருப்படாமல் திரிந்தாலும்
இப்பிறவியில்
அத்தைகை மந்திரகோலாய்
அல்லவா சுழல்கின்றது
சுழலும் மந்திரகோலை என்
கரம் பிடிக்க என்ன செய்து வெல்லுவேன்
அத்தையை!!!0
நினைவாய் சில சந்தோஷம்
கவியேடு பிறந்ததால் கவியான
உன்னேடு பலகாலம்
உறவாக வாழவே தந்தான்
இறைவன் எனக்கே எனக்கு!!
தம்பியாய் நண்பனாய்
என்னை புரிந்திட்ட ஒரு
அழகான இதயமும் நீயானாய்
என்றும் எனக்கு!
நிண்ட சுமை நீளும் தனிமை
என்னடா வாழ்க்கையென
சி்ந்தித்த பொழுது
உன்னேடு
சிலதினம் சிந்திய மழைமேக
நாட்களைப்போல் மீண்டும்
அழகான தருனமாய் பூத்தது எனக்குள்
எதை எதையே
பேசிடும் நம் உரையாடல்
தேனீர்கோப்பையும் புன்னகைக்க
மீண்டும் உயிர்கொடுத்தாய்
என்னக்கு !
உன்னைபோல் ஒரு
உறவு கூடவே இருந்தால் என்றுமே
மனசிற்க்கு தோல்வியில்லை
புரிந்ததாய் சொல்லும் சொல்லுக்கு
அர்த்தங்கள் என்றும் எனக்கு நீயே
உன்னை தந்து என்னை புன்னகைக்க
வைத்த விதி
என் வாழ்வில் எழுதிய ஓற்றை
நன்மைய இதுவே!!!
அன்பின் கைகளின்
வட்டதிற்க்கைள் கொஞ்சும் கிளி
ஆகாய மேகத்தை கயிராக்கி
வானவில் வளைவில்
ஊஞ்சல் கட்டி அச்சமின்றி
ஆடினாள் கொஞ்சம் கூட பயமற்று
தென்றல் கவியில்
கண்கள் நனைய
கொஞ்சம் பார்த்தே
வெண்ணிலா தேய
கொஞ்சம் கொஞ்சமாய.
கொஞ்சுமொழி
கோவையிதழ் சுவையானது
இவள் கொஞ்சிபேசுபோது
இவள் கற்பனை தோட்டமெங்கும்
எட்டி நின்ற எட்ட பார்த்த
விழிகள் ஏங்க
இவள் கற்தரையின் கற்பனை
கனவுக்குள் கைகள் தந்த
நம்பிக்கையில் பூவாய் மலர்ந்தாள்
அச்சச்சோ!!யார் கண்பட்டதே
அச்சமில்ல கிளி ஊமையாக
மிஞ்சமிதி தெரியா அறியா கதை
கற்பனையில் முடிந்திட
நம்பிக்கையிழந்த கிளியே
கூண்டுக்கிளியானது!!!
அங்கிகாரம் இல்லாமலே பல
திறமைகள் அழிக்கபடுகின்றது
இங்கே! அறிமுகமே அறிவினை
தேற்கடிப்பதால்
கொஞ்சம் பணம் இல்லா திறமை
கொஞ்சகூட மதிக்கபடுவதீல்லை
உன்னை யாரென
அடையாளம் காட்ட
பணத்தை தேடு
இல்லை பணக்காரனின் முகவரியை தேடு
பின் திறமையை விற்பனை செய்
என்கின்றது உலகம்!!!
யாருமில்லில்லையென்னும்
தருனத்தில் போராடி
ஜெயிக்கும் போது
கிடைக்கும் நம்பிக்கை
யாராலும் கொடுத்திட
முடியா தைரியம்!!
அதுவே!!
சில சமயம்
மற்றவர் கண்களுக்கு
திமிராய் தெரிகின்றது!!
ஓற்றை மனிதனுக்கு ஒற்றைமனிதன்
கொடுக்கும் அன்பில்
கட்டிய தாலிக்கு கட்டுப்பட்டவர்
கொடுப்பது காதல்
கட்டிபோடும் காதலுக்குள்
கைகள் கட்டுபட்டு பூத்தால்
கொடுப்பது நம்பிக்கை
இழுத்து சொல்லும் இருண்ட
காலத்தில் கூட இரூந்தே
மீண்டும் இழுது வந்தே
மாறிடாதே வாழ்ந்திட செய்யும்
உறுதியே காதல் வாழ்க்கை!!!
உயிரிழையேடு உணர்விழை
பிணைப்பிற்க்குள் ஒருவாகின்ற
பந்தமே உறவு அன்பின்
கட்டுப்பாட்டிற்க்குள்
பண்பாடு கோர்த்தே
கட்டியாளும் பக்குவமே
இல்லம்
சிறந்த சிந்தனையறிவுடைய
அன்பின் ஆளுமையாளனாய்
இருப்பவளே தன்னை உயர்ந்தி
மற்றவரையும் உயர்த்தியே வாழ்ந்து
காட்டுபவான்
சிறந்த இல்லத்தின்
அழகு!சிறந்த சிந்தனையின் அழகு
நான் மூடி வைத்த
புத்தகத்திற்க்குள் எந்த
மயிலிறகையும் வைத்து
காத்திருக்கவில்லை !!!
என் கனவிற்க்குள் எந்த
உணர்வையும் பூட்டி வைத்து
காத்திருக்கவில்லை !!!
என் கற்பனைகள் வரையபட்டால்
அங்கே சிலையாய் நான்
நிற்பதுமில்லை!!!!
என்னுடன் நடக்க இதுவரை யாரும்
கால்களாய் மாறி என்னேட
நம்பிக்கையாய் தடந்ததுமில்லை!!!
என் தூரத்தின் விடுதலைக்கு
மரணத்தின் முடிவை மட்டுமே
இறைவள் மகிழ்ச்சியின்
தொடக்கமென்றான்!!!
காத்திருக்கின்றேன் பூக்களை மட்டுமே
சொந்தமாய் வைத்துக்கொண்டு
இறுதியில் எனக்காய் எடுத்துசொன்றிட…,
எப்பவும் நாம் மற்றவர்
வாழ்வில் தூரத்து வானவில்லாய்
தோன்றிடுவதால் கண்கள் கானும்
சாட்சியே கதையாகின்றது!!!
எப்பவும் அருகே சென்று பாருங்கள்
உங்கள் கற்பனை கூட பொய்யாகலாம்
ஓரு முறை நம்பிக்கை
பொய்யானால் மீட்டெடுப்பது
கடிணம் அப்படியே மீட்டெடுத்தால்
அதுவே சிறந்த வாழ்க்கை!!!
நீண்ட தனிமை
மீண்டிடா வாழ்க்கை
நம்பிக்கையை இழக்க
செய்யும் வாழ்க்கை சாரல்
முன்னே பின்னே யார் சென்றாலும்
நம்பிடா மனம்! எழுப்பிய முள்வேலி
தன்னையே குத்தினாலும்
தரையேடே உறங்கினாலும்
நம்பிடாமலே நடக்கும்
சொல்லோடு கற்பனை தீர்ந்து விடும்
வாழ்வேடு வலிகள் தொடரும்
இதனாலே பாதைகள்
தடுமாறும் படைத்தவன்
மீதே கோவம் வரும் இருந்தும்
ந்திமேல் விழுந்த இலைபோல்
கிடக்கும் மனசு !!!
உலகமே அச்சப்பட வைத்தே
உச்சம் தொட்ட தமிழ்
இன்று !
அஞ்சி ஓடியே வாழ்வதாய்
அரசியல் கதிரையின் ஒற்றைகால்
பேசு மற்றக்கால் நின்றாடிட!
மூன்று கால் நிலைத்திட
நாலாவது காதல் ஆடும் ஆட்டமே
இங்கே! அரசியல்
வார்த்தைகளில் வித்தைகார்களே
சிறந்த ஆளுமைக்கார்களாய்
மக்கள் தீர்ப்பு!!
நினைவேடு நிழலெழுதிய
நியம் கற்பனையானதில்
உயிருக்குல் ஒரு வலி முகமின்றி
அழுகின்றது !!!
உன்னை புரிந்தும் புரியாமலும்
ஓரு பாதை
உன்னை அறிந்தும் அறியாமலும்
ஒரு பயணம்
உன்னை தேடியும் தேடாமலும்
ஒரு வாழ்க்கை ! இருந்தும்
யாரே வட்டத்திற்க்குள்
இட்டு ஒடச்சொன்னதைப்போல்
திரும்பும் திசையெங்கும் நீயாகின்றாய்
பூட்டிய கதவினை திறக்கவில்லை
அணைந்த தீபத்தை ஏற்றவில்லை
இருந்தும் என் இருளுக்குள்
ஓரு நிலவாக என்னேடு
நீயே நிழலாய் உணர்கின்றேன்!!!
எப்பவும் போல் புரியாக்குழந்தையாய்
அறியா நீயாய் தனியாய நானாய்
தொடர்பிற்கு அப்பாலே தோடர்கின்றது
வாழ்க்கை!!!!
பெண்ணின் தன்நம்பிக்கையே
ஆண்மை வெறுக்கின்றது
தன்னை சார்த்தே
வாழவேண்டும் என்பதால்
தன் தவறை சிந்திக்காமலே
பெண்மையை குற்றவாளியாக்கின்றது
பெண்மை !!
அடைக்கபட்ட கூண்டே
பெண்மை சிந்திக்கா
சாவியானதால்!
பெண்மைக்கு இன்னும் பெண்மையை
நேசிக்க தெரியவில்லை
இழந்தவள் பலர் முன்
பரிதாவ கண்ணீராய்
மட்டும் பார்க்கும் பெண்மைக்கு
புரிவதில்லை !
வலிகளை சுமக்கும் பெண்மைக்கு
தானே காப்புயென்பதை
புரிந்தாலே போதும்
ஆண்மையின் தாய்மை
மரணிக்காமல் வாழும்!!!!
வறுமையும் தனிமையும்
கற்றுதரும் வாழ்க்கையில்
வெற்றிகள் இருப்பதில்லை
வெற்றிபெற்றால் தனிமையே
கிடையாது!! பெய்யான
நம்பிக்கைகளை விட
வெற்றிபெற்றிடா வாழ்க்கை
ஓன்றும் கோவலம் இல்லை!!!
என் கனவுகளில் கைதொட்டு
என் சகற்பனையின்
வடிவத்தில் பூத்த பூ.
அவள்
என் ஆசைகளின்
கற்பனையை தோற்கடித்த
கவிதையவள்
என் கைபட்டுக்கருகிபோன
மலர் வாசம் செய்யும்
கல்லறை அவள்
நான்
பேசும் மொழியின்
காதல் மொழியவள்
என்
தனிமைக்குள்
வாழும் துணையவள்
என்
மௌனத்தை உடைக்கும்
இசையின் வடிவம்
அவள்
என் துயரங்களில்
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டையவள்
என்
உயிரின் சுவாசத்தை
சுவாசிக்கும் மூச்சின்
கருணையும் அவள்!!!