Thursday 25 December 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

உன்னை நினைக்கின்றேன்.........

இதழ் விரியும் பூக்களை
நான் பார்க்கும் பொழுதெல்லாம்
என் அன்பே!!   உன்னை தான்
நினைக்கின்றேன்

சங்கடத்தால்தந்தை தோல்
சாய்திடும் போதெல்லாம் ,என்
அன்பே சங்கடத்தோடு
உன்னையே நினைக்கின்றேன்

துன்பத்தால்  தாய் மடியில் சோயாய் முகம்
புதைத்திடும் போதெல்லாம்
என் அன்பே!!
என் வலிகள் போக்க உன்னைத்தான்
நினைக்கின்றேன்!!

குழந்தையின் தாலாட்டைக் கேட்டிடும்
 போதெல்லாம் என் அன்பே!
என்  தாயின் நெஞ்சாய்
உன்னைத்தான் நினைக்கிறேன்!

பசி மறந்து   உண்ணாது
இருந்த போதெல்லாம் என்
அன்பே!
விழிகள் தவிந்திடும் மணித்துளிகளில்
 உன்னைத்தான் நினைக்கின்றேன்
 என் அன்போ... சுற்றி நின்ற உறவின்
நடுவிலும்


உன்னை நினைத்து நினைத்து
நான் நொந்து சலித்து வெறுத்தாலும்
என் மனசின் உணர்வுகள் உன்னையே
நினைக்கின்றது அன்போ!!

பலகனாய் பிறந்திடு இறைவா....

பாவத்தின் உச்சியில் மனிதன்
நின்று கொண்டு
அணுகுண்டு கொண்டு
உயிரெடுத்து உயிரெடுத்து
மெல்ல மெல்ல அறில்லா
மிருகத்தை வெல்லுகின்றான்
உன்னை நேசித்துத் நேசித்து!

புனிம் சொல்லிப் போன இறைவனை
மாட்டுத் தொழுவம் தோறும்
ஆண்டுக்கு ஆண்டு
மீண்டும் மீண்டும் தேடுகின்றேன்
உண்மையாய் இந்த நாளில்.....

ஆட்டு மந்தை மேய்ந்தவனே
புதுச்சட்டை வேண்டாம்
ஆடம்பரம் வேண்டாம்
நீ பிறந்த ஓலைக் குடில் போதும்
நாம் நின்மதியாய் வாழ
மனித மந்தை அழிவதை நிறுந்திட
பாலகனாய் பிறந்திடு மீண்டும்

அழகிய பூமி தனைப் படைத்து
அதனை ஆள எம்மை படைத்த
இறைவா! இப்போதாவது எம்மால்
அழியும் பூமி தனைக் காத்திட!
யாரையும் படைக்காது  நீ
போனதால்
பாலகனாய் பிறந்திடு மீண்டும்

Thursday 11 December 2008

எழுந்திரு மாமா எழுந்திரு....

அதிகாலை வந்து போக
அந்தி சாயும் நேரம் வரை
அசையாத் தூக்கத்தில்
எப்போதும் வாழ்ந்திடும்
என் மாமாவே எழுந்திரு!

வட்டிக்கு வட்டி வேண்டி
காசுடன் காசு சேர்த்து
மற்றவர் கஸ்ரத்தில் வாழ்ந்திடும்
என் மாமாவே எழுந்திரு!

அடுத்தவர் வயிற்றில் அடித்து
உன் வயிற்றை வளர்ந்து
குட்டி யானை போல்
வீட்டை சுற்றிச் சுற்றி வந்து
என்னை அதிகாரம் பண்ணும்
என் மாமாவே எழுந்திரு!

கொட்டிக் கொட்டி காசை
ஊரில் கட்டிய வீட்டை
ஆமி அடித்து மண்ணாய் ஆக்க
கவலையின்றி சிரித்து
பெருமை பேசியது போதும்!
என் மாமாவே எழுந்திரு!

அடுத்தவர் வேர்வையில் வந்த
பணத்தை! பறிந்த பாவத்தால்
அழிந்து போனதை எண்ணி வாழ
எழுந்திரு என் மாமாவே எழுந்திரு

லட்சம் லட்சமாய் பாவத்தை நீ
சேர்க்க! கோவில் கோவிலாய்
அதை நான் போக்க வேண்டாத
கவலை வேண்டாத வாதம்!
வேண்டாமே என் மாமா எழுந்திரு
பவத்தை போக்கிட எழுந்திரு

Wednesday 10 December 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

கொட்டும் மழையின் நடுவோ
கூரையில்ல மனித வாழ்வு
கொடி மரங்களைப் போல்
நட்ட நடு வெளியில் நனைகின்றது!
இன்று மனிதவுரிமையால் !!!


குடிக்க தண்ணீர் வான் கொடுக்க
வயிற்று பசிக்கு வழியின்றி
சேற்றிலும் சகதியிலும்
சேர்ந்து துடிக்கின்றது ஓர் இனம்
இன்று மனிதவுரிமையால்

வார்தைகளை அடுக்கடுக்காய்
அள்ளி வீசினாலும்
அடிமை வாழ்வு தொடர
காத்திட யாருமின்றி வாடுது
ஓர் இனம் மண்ணில் இன்று
மனிதவுரிமையால்

ஆமி தேடிச் சுட்டது போக
கொட்டும் மழை அழித்தது போக
ஆற்று வெள்ளம் அள்ளியது போக
மேட்டு மண்ணில் தேடுது
ஒர் இனம் காச்சலோடு இன்று
மனிதவுரிமையால்


சொல்லிச்சொல்லி சொல்லும்களைக்க
சொல்ல வார்தையின்றி தமிழும் தவிக்க
சொல்லியும் கதைத்தும் கேட்டும்
நடக்க போவது எதுகுமின்றி!
ஓர் இனம் தவிந்து நிக்கின்றது!
இன்று மனிதவுரிமையால்......

கண்கள்

எதற்கும் அழதிடா
என் விழிகள் இன்று
அவனுக்காய் அழுதது!

ஏன் அழுகின்றாய்
என நான் கேட்க!
என் விழியே சொன்ன
பதில் கேட்டு! என் இதயமே
வலிக்கு தடா இன்று!

உன்னிடமிருந்து
அவனை ரசித்து மகிழ்ந்த
என்னை நீ மூடாது அவனை
ரசித்த  உன் தவிப்பை கண்டு தானே!
அவன் வரும் போதும்!
போகும் போதும்பேசும் போதும் !
நான் ரசித்தேன் அவனை

இன்று!
 உன்னால் அவனையின்றி
வேறு யாரையும் பார்க்கப் பிடிக்காது
தவிக்கின்றேன்!
அவனை மறக்க என்னால்
எப்படி முடியும் நீயே சொல்!

அதைவிட அவனை ரசித்த
என் விழிகளை குருடாக்கி விடு
உன்னை விட அவனை
காதலித்த நான் இருட்டுக்குள்
அவனை
பார்த பார்வையோடு
வாழ்கின்றேன்........

கறுப்புக் கனவுகள்

அடுத்தவர் வாழ்வு தனை
அடிக்கடி எட்டிப்பார்த்து
தன் வாழ்வை சுமையென
நினைக்கும் கட்டுக்கடாங்கா
மனசுகள் கட்டட்டு தவிக்க
விட்டுக் கொடுக்கா இதயங்கள்
மாற்றம் தேடுது இங்கே!!

தவருகளை சொல்லிச் சொல்லி
தவருகள் செய்து தவரும்
இதயங்கள் தவருகளை
நிலையென்று நினைந்து
தவறுது இங்கே!!

குற்றம் கண்டு குற்றம்சொல்லி
குற்றம் செய்து குற்றம் செய்து
சுகமாய் வாழ வெளியே
சுகந்திரம் தேடுது இங்கே!!

தனக்கான மாற்றத்தை
பிறரிடம் தேடி! அருகிருக்கும்
துன்பம் பெரிதென்று
தொலைதூரத்து துன்பத்தை
இன்பமாய் நினைத்து
தொலைகின்றது இதயங்கள் இங்கே

எங்கும் ஒரோ கனவு ஒரோ துன்பம்
ஒரோ வாழ்கையென
எப்போதோ புரியும் போது!
கரைகின்ற வாழ்வை
காப்பாற்ற முடியாமல்!!!
தொலைதூரத்து! கோடிக்
கோடி கனவுகளாய் போவார் அப்போது
!!

Sunday 7 December 2008

வற்றாத தேடல்

இதயம் காதலைத் தேடியதால்
காதல் உறவைத் தேட
உறவு வாழ்வைத் தேடியது

வாழ்வு மகிழ்ச்சித் தேடியதால்
மகிழ்ச்சி ஆடம்பரத்தை தேட
ஆடம்பரம் கடனை தேடியது

கடன் வட்டியத் தேடியதால்
வட்டி அவமானத்தை தேட
அவமானம் துன்பத்தை தேடியது

துன்பம் வெறுப்பைத் தேடியதால்
வெறுப்பு பிரிவைத் தேட
பிரிவு சோகம் தேடியது

சோகம் தனிமை தேடியதால்
தனிமை பாசம் தேட
பாசம் வயதைத் தேடி
யது

வயது நின்மதி தேடியதால்
நின்மதி முதுமை தேட
முதுமை இறைவனைத் தேடியது

Friday 5 December 2008

ஒர் துடிப்பின் சிரிப்பு

வானம் நிலவை
நிலையாக்க துடிக்க
சூரியன் வானத்தை
பொய்யாக்கி சிரித்தது!!

பகல் பூமியை
நிலையாக்க துடிக்க
இரவு பகலை
பொய்யாக்கி சிரித்தது!!

நந்தவனம் பூக்களை
நிலையாக்க துடிக்க
மழைச்சாரல் நந்தவனத்தை
பொய்யாக்கி சிரித்தது!!

பூ தேனை
நிலையாக்க துடிக்க
வண்டு பூவை
பொய்யாக்கி சிரித்தது!!

தென்றல் வாசத்தை
நிலையாக்க துடிக்க
மனிதன் தென்றலை
பொய்யாக்கி சிரித்தான்!!

நான் உன்னை
நிலையாக்க துடிக்க
மரணம் என்னை
பொய்யாக்கி சிரித்தது!!

மீண்டும் உன்னோடு
பொய்யாய் பொய் சிரிக்க
பூமியின் தொடராய் சிரிப்பும்
துடிப்பும் .................

Friday 28 November 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒரு துளி...

துன்பம் மெல்ல மெல்லத்
தொடர
உணர்வுகள் என்னைத்
தொட்டு வதைக்க

வறுமை என் வீட்டுக்
கதவு தட்ட
உறவுகள் எனனை விட்டு
விலக

பசியினால் என் குழந்தை
கதற
தெருத் தெருவாய் நான்
வேலை தேட

வசை பாட நால்வர்
எனைத் தேடியழைய
என் தருத்திரம் வாசல்
திறக்காமலே வீட்டுக்குள்
வாழ!!!

வீதியோர சிருசும் பெருசும்
என்னைப் பார்த்து கேலி பேச
நாலுபோருக்கு நாலு கதையாய்
என் வாழ்கை மாற

வழிதெரியாது வழிதேடிய
பாதையில் வழிமாறியது
என் வாழ்வு நீர் சுமக்கும்
இயந்திரமாய்

ஒரு துளியில் என் கதையை
நான் எழுத
கண்ணிலிருந்து வழிந்த
துளி அதை அழித்தது
அருவருப்பு நீயொன்று......

Thursday 27 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

செந்தனல் குருதியில்
செங்கதிராய் உதித்த
செந்தமிழ் வீரர்களே!!
செந்தாமரைப் பூவாய்
தோழமை உணர்வோடு
தலைவன் தோழனாய்
தோல் கொடுத்தவர்களே!!

உண்மை வாழ்விற்காய்
உள்ளத்தின் உறுதியோடு
தோல்வியிலும் வெற்றிகானும்
உயர்ந்த எண்ணத்தில்
உயர்வாய் நிற்பவர்களே!!
உலகை வென்று
எங்களோடு கலந்து
எழிமையாய் எங்களை
என்றும் உங்கள் பாதையில்
மாற்றிப் போனஎம்
 வீரர்களே!!!

உங்களுக்காய் நாங்கள்
ஆயிரம் ஆயிரம் தீங்கள்
ஏந்தி! தாழ் பணிந்து
தழிழால் தவிந்தெழுந்து
தனித்தனி பாதை மாற்றி
தருகின்றோம் உறுதி!

இந்த புனித நாளில்
தரணியெங்கும் ! தமிழ்
தலைநிமிர்ந்து வாழ!
உங்கள் பாதையில்
தொடர்வோமென!

Tuesday 25 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

துயிலும் இல்லமெல்லாம்
துயிலாது தவிக்கும்
தூய்மையானவர்களே !!!
உங்களுக்கு ஈடாய் நான்
எதைச் சொல்ல!

பசித்த வயிற்றுக்கு
நீர்கொடுத்து
வாடிய முகத்தை
தாம் மறைத்து!

வந்த களைப்பை
எதிரிக்கும் காட்டா வீரம்
கொண்டு ! எழுந்த
உங்கள் மனதிற்கு ஈடாய்!
நான் எதைச் சொல்ல

இதை அறிந்து தாய் தவிக்க
பாசக்கல்லாய் நின்று
தாய் மனதை கடந்து!
தாய் மண்ணை காக்க
புறப்பட்ட உங்களுக்கு ஈடாய்!
நான் எதைச் சொல்ல!!


எதிரியின் செல் கண்டு
பட்ட காயம் மறந்து
வீழ்ந்த தோழன் உடல் தாண்டி
எதிரி மேல் போர் தொடுக்கும்
உங்கள் மனதின் உறுதிக்கு
ஈடாய் ! நான் எதைச் சொல்ல!!

மண்ணில் வீழ்ந்த உடலோடு
உயிர் ஒட்டி நின்றால்!
எதிரியைக் காணமுதல்
அமுதாய் விசம் பருகி
கொஞ்சம் கொஞ்சமாய்
விண்ணுலகம் தேடிடும்!
உங்களுக்கு ஈடாய்
நான் எதைச்சொல்ல!!

இன்று! உங்களுக்காய்
பூக்கும் பூக்களும்
மண்ணில் வீசும் தென்றலும்
வாசம் வீச!! மழைமேகம்
கண்ணீரை சென்நீராய்
தருகின்றது! எம்மை விட.........

Saturday 15 November 2008

மயமாய் வந்த என் மாயவனே.....

மாயவனே!!
நீ என் இயத்தில்
எப்படி வந்தாயென
எனக்குக்குள் தெரியாது
ஆனால் இருக்கின்றாய்

என் கனவில் எப்படி
தோன்றினாய்யென தெரியாது
ஆனால் நித்தமும்
கனவில் வருகின்றாய்

நான் தடுமாற! நீ
ஏன் கரம் தந்தாய்
எனத் தெரியாது
ஆனால் கரம் தந்து
காக்கின்றாய்!

தவித்த போதெல்லாம்
தாயாய் ஏன் மாறினாய்
எனத்தெரியாது
ஆனால் தவிக்கும் போது
தாய் மடியானாய்

என்னை நீ
சோதித்து சோதித்து
எதைத் தேடினாய்
எனத்தெரியாது
ஆனால் என்னை
சோதிக்கின்றாய்

நான் ராதையா பேதையா
மீராவா எனத்தெரியாது
ஆனாலும் உன்னோடு
நான் இணையாய் இருக்கக்
கண்டேன்......................

Tuesday 11 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

வாழும் மண்ணிழந்து
வாழ்விழந்து போகும்
வழிதானிறி தவியாய்
தவிக்கம் எம் உறவு காக்க!

நாம்,எம் நிலமை தனை
எழுதி எழுதி கையும் சலித்தே வலிக்க!
தூரம் தூரமாய் எம் நின்மதியும்
தொலைந்தே போக!

உம் முன்னே
மனிதர்களாய் காத்து காத்து
தலைசாய்த்து சாய்ந்து
எம் நிழமை சொல்ல !தேடித் தேடி
திரும்பித் திரும்பி கூடிக் கூடி
கூட்டங் கூட்டமாய் நாங்கள்
வருகழன்றோம்....

சாக்கு போக்கு சொல்லிச்சொல்லி
எம்மை ஓரக்கண்ணால்
பார்த்துப் பார்த்து பேசிப் பேசி
எம்மை ஏமாத்தி விளையாடும்
உலகே! எம்மை ஏமாந்தியது போதும்

ஒரு முறை எம்மை நேராய் பார்த்து
எம் வேதனை அறிந்து
எம் உண்மை புரிந்து
உதவிட வா !!!!!

எங்கிருந்தாய்?

வானத்து கார்மேகத்திற்குள்
நீர்த்துளியாய் நானிருக்க!
தென்றலாய் நீ வந்து
மழைத்துளியாய்
என்னையெடுத்து மண்ணுக்குள்
ஏன் மறைத்தாய்.......

மண்ணுக்குள் மறைந்து
மண்ணோடு மண்ணாய் கரைந்திட
 என்னை
ஈரமண்ணென்னறு நினைத்து
சின்ன சின்ன தூக்கனாங் குருவி
கூட்டிற்குள் மறைத்து  ஏன்வைத்தாய்!!

இருண்ட கூட்டிற்குள்
மண்ணாயிருக்கும் எனைத்தேடி
மின்மியாய் நீ வந்து உடல் கொடுத்து
உயிர் கொடுத்து என் இருட்டுக்கு
ஒளியேற்றி வைப்பாய்யென்று
தூக்கனாங்குருவிக் கூட்டிற்குள்
காத்திருக்கின்றேன் உனக்காய்......

Thursday 6 November 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

நெஞ்சத்து நெருடல்

வண்ணப் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்த மகள்!
தன் குடும்ப வாழ்விற்காய்
தன் நெஞ்சத்து கனவாய்
தன் நெஞ்சோடு பூட்டி!
தன் குடுபவாழ்வை
தன் கனவாய் நேசிந்து
தரமாய் நிமிர்ந்து தாழ்ந்தாள்
ஓர் மனைவியாய்....

மனைவியாய் எழுந்த மகள்
 பெண்மையின் தாமையால்
 தாயாய் பிறந்தமகளுக்கு
சோயாய் வந்த மகளை
சின்ன சின்ன ரசனையின்
புன்னகைப் புதுபொலிவாய்
கொடுத்ததாள்
நெஞ்சத்துத் கனவாய்
அவள் நெஞ்சம்கொஞ்சுமழலை
நெஞ்சதனில் இறக்க!!


இறப்பின் பிரிவால் வந்த
பிரிவின் பிரிவு அவள்
இதயத்தை வாட்ட
வாடிய இதயத்தின் ஒளியிழந்து
உணர்விழந்து வாழும் அவள்
உணர்வுச்
சுவையிழந்த மனதில்
அவளிருந்து வாட்ட
நெஞ்சம் சுமையால் தவிக்க
மகள் நினைவோ நெஞ்சத்தில்
ஊசலாட! மெளனத்தில் வாடுது
நெஞ்சம் நெருடலால்......

Wednesday 5 November 2008

அடித்தள்ளுபடியானது எம்மவர் வாழ்கை...

ஆடிவந்து உயிரை
அள்ளிக் கொண்டு போக
ஆடித் தள்ளுபடி
வியபாரப் பட்டியல்
சோலை வேட்டியாய்
தத்தி தவிக்கு எம்மவர்
வாழ்கை..... இன்று

வேண்டுவதும் விற்பதும்
அரசின் கையில் சிக்க
நிர்ணைய மற்ற விலையாய்
உடல் வீழ்ந்து கிடக்குது மண்ணில்

வீவேகமும் வீரமும்
கொண்ட நாம் வாழ்கை
நாணயத்தைப்போல இன்று
ஞாயமற்ற ஜடப்பொருள்
விலையாய் சிக்கித் தவிக்கின்றது

தள்ளுபடி கடை சேலை வேட்டி போல்
தத்தளிக்கும்எம் இனத்தைக் காத்திட
எழுத்திட்ட உள்ளங்களே
காயங்கள் மறந்து காவியம்
படைத்திட இனைந்த கரங்களை
இறுக பற்றிக்கொள்வோமா?
என்றும்..

Tuesday 4 November 2008

பூவிற்கும் ஓர் கதை ........

அதிகாலை தானெழும்பி
நந்தவனப் பூவென்று
தான் வாழ பூப் பறித்தாள்
நந்தவன் சென்று!

அதிகாலை காலை  தேனீருக்கு
வழியின்றி சரம் தொடுத்து
அழகழகாய்  கூடைக்குள் அடுக்கி
தலை சுமந்து ஓடோடிச் சென்றாள்
கோயில் வாசலுக்கு!


உள்ளிருக்கும் கடவுளுக்கும்
தெரிந்த கதையை கண்களால்
சொல்லி தலையால் நினைவு படுத்தி
காத்து நின்றாள் வருவோர் போவோர்
முகம் பார்து தன் பூவைவிற்பதற்காய்!

கிழிந்த ஆடை மற்றவர்
கண் தைக்க
வயிற்று பசி இசை பாட
தன் தலைச் சூட பூ
மற்றவர் தலை சேர
விதம் விதம் மாய்
கோர்த்தால் கடவுளுக்கும்
சேர்த்து இன்றாவது
தன் வியிற்று பசி போகாதா
என்ற ஏக்கத்தில்....

மனிதா ஒரு நிமிடம்..

எதை இழந்து எதைத் தேடி
எதை எடுத்து எதை
அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

அறிவு வளர்த்து அறியாமை வளர்த்து
பூமி கடந்து வான் தொட்டு
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

இனம் பிரித்து மொழி பிரித்து
தனித் தனியாய் வாழ்வமைத்து!
சண்டை போட்டு சண்டை போட்டு
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

பூமியழித்து பூவழித்து
சிகப்புக் கோலம் நாம்
போட்டு! மரணஓலத்தின் நடுவே
கண்ணீர் கடலின் மேல்
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடைய போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!!

Sunday 26 October 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


ஒர் ஜென்மப் பூ.............

கற்பனையும் கனவும்
நமைச் சேர்க்க
வானவீதியில் நீயும்
மண்தரையில் நானும்
பிரியா உறவாய்
பிரிந்தே வாழ்ந்ததால் !!
உன் பிரிவு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனைத் தாக்க!!
என் இதயம்கொஞ்சம் கொஞ்சம்
வலியால் துடிக்க!
 நினைவுகள்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னைவாட்ட  !
என் இதழிருந்தும்
மலரா மலரானேன் உன்னால்.....
ஆனால் இன்று!
மீண்டும் உன்னைக் கண்டு
மகிழ்ச்சி பூவாய் ....
இதழ்விரித்து
 மலருக்குள்!
மலராய் மலர்கின்றேன்

என் வரவை கண்டு
எனைப் பார்த மலர்க் கூட்டம்
கொஞ்சம் வாடிபோனது
ஏன்னென நான் கேட்க!!
எங்களுக்கு சொந்தமென நினைத்த
பனியும் மழையும்
தென்றலும் கதிரவனும்
எனி உன் உறவைத் தேடுமே
என்ற ஏக்கத்தோடு................

Saturday 25 October 2008

தர்மம் வேண்டும்....

தரணியில் தொலைந்த
தர்மம் மனிதர்களால் தேடிடும்
தர்மம் தன்னைத் தானே!
தொலைந்து விட்டு இன்று
தேடுது!! வேண்டுமென்று!!

தலைவர்கள் கையில்
தவழ்ந்து கொண்டும்
கோடிகளை கண்டு பேசிக் கொண்டும்
தன்னைத்தானே தொலைந்து விட்டு
இன்று தேடுது!! வேண்டுமென்று


மேடைப் பேச்சில் வாழ வைத்து
யுத்தம் செய்து காத்து நிற்க
கடவுளோடு தோன்றி
கடவுளோடு மறைந்த தர்மம்
தன்னைத் தான் தொலைந்து விட்டு
இன்று தேடுது!! வேண்டுமென்று

தரணியியெங்கும் வேண்டும்
தர்மம் தேடும் தர்மம் !!
நிந்தம் பூக்கும் பூவாய்ப் போல்!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

சொல்லமே சொல்லம்

முத்து முத்து தமிழை
நீ விட்டு விட்டு பேசுகையில்!
என் இதயம் சிரிக்குதடா உன்னால்..

கட்டியணைத்து பல கதை சொல்லி!
என்னை கட்டிப் போடும்
உன் அன்பில்! ஆயுள் முழுதும்
சிறைப் பட்டு வாழ தோனுதடா
என் மனசு உன்னால்...

விட்டுப் பிரிந்து நான் போன போது
உன் முகச்சோகம் கண்டு!
வாடித் தவிந்து இயங்காது
நின்றதடா என் இதயம் உன்னால்...


மீண்டும் வந்து சேர்ந்து
பேசிச் சிரிந்த போது!
என்னோடு தோன்றி வாழ
ஆசை கொண்டதடா
ஓர் உலகம் உன்னால்.....


உன்னைக் கட்டியணைத்து
முத்தம் கொடுத்து சொல்லி மகிழ்ந்து
நிக்கும் போது இந்த உலகமே
நீயென்று ஆனதடா எனக்கு....

Thursday 23 October 2008

நீ சொல்வாயா?

வெண்மேகமாய் வந்து
எனைக் காக்கும் என் மேகமே!
நீ அப்பப்ப கருமேகமாய் என்னை
மூடி நிற்பது! சரிதானா என நீ சொல்வாயா?


துளித் துளியாய் துறல் போட்டு
என்னை நதியாய் நனைத்த
என் மழையே !நீ அப்பப்ப
வெள்ளத்தில் மூழ்கடித்து
தவிக்க விடுவது!சரிதானா என நீசொல்வாயா?

பூங்காற்றாய் என் மீது வீசும்
பூந்தென்றலே என் வாசம் சுமக்கும் நீ
அப்பப்ப சுறாவழிக் காற்றாய்
சுழட்டி அடிப்பது சரிதானா என நீ சொல்வாயா?


வெள்ளை வெள்ளையாய் என் மேல்
படந்திட்ட என் பனித்துளியே!
தேன்துளியாய் நானிருக்க
அப்பப்ப தேனவளை மண்ணுக்குள்
சரிந்திடச் செய்வது சரிதானா என நீ சொல்வாயா?

Sunday 12 October 2008

யார் தவறு?

எல்லை போட்டு
எல்லை போட்டு
அவளை அடைத்து

காதல் கொண்டு
காதல் கொண்டு
அவளை ரசித்து

கிண்டல் செய்து
கிண்டல் செய்து
தனிமை கொடுத்து

ஆதரவு காட்டி
ஆதரவு காட்டி
அடிமையாக்கி

உறவைச் சொல்லி
உறவைச் சொல்லி
பொய்யாய் வாழ்ந்து

பெண்ணைப் பேசி
பெண்ணைப் பேசி
நெந்து போவது தான்
ஏனோ?

Saturday 11 October 2008

வர்ணம்

அவள் உதிர்ந்த வர்ணம்
கையில் ஏந்தி
அவள் வெறுக்கும் வர்ணம் தனை
தவிர்த்து
அவள் வாழும் வர்ணத்தில்
கலந்து
அவளை விரும்பிய வர்ணத்தில்
வரைந்து
அவள் நேசிக்கும் வர்ணமாய்
மாறி
அவள் ரசிந்த வர்ணத்தை
தேடி
அவள் தேடிய வர்ணத்தை
நேசிந்து
ஏழு வர்ணத்தைப் போல்
காலத்தில் கரைந்திடா வர்ணமாய்
காலமுழுதும் இணைந்திட்டான்
அவளோடு........

எதனால் இறைவா ?

சின்னச் சின்ன சொல்லெடுத்து
நன்றியென நான் எழுத
வார்தை வந்து வரி தொடுக்க
மறுக்கின்றதே இறைவா! எதனால்

பக்கம் பக்கமாய் நான் படித்த
காவியக் கதையெல்லாம்!
மனித கண்ணீரால் நன்றியேடு
கரைகின்றதே இறைவா! எதனால்

காத்திட வருவாயென
காத்து காத்து கருகிய
இதயமெல்லாம்!
சருகாகி போகும் வரை
காத்திடாது மறைந்தது!
எதனால் இறைவா?

பூமியை நீ மறந்து
மனிதனை மிருமாக்கி
உயிரை உயிரால் குடிக்கச் செய்து
உயிரின்றி நிற்பது எதனால் இறைவா?


கலியுக காட்சியாய் கண்முன்னே
பல கண்ட படி சிதற!
வறுமையும் பினியும்
அழங்கோல வாழ்வும்
வகை வகையாய் தோன்ற! நீ
இன்னும் தோன்றாது இருப்பது
எதனால் இறைவா?

Thursday 2 October 2008

பிறப்பு

வாழும் போது அறிந்திடாப்
பிறப்பு
பிரிவு வந்தால் துடிக்கும்
பிறப்பு
கோவத்தால் அழியும்
பிறப்பு
அடிமையாக்கி ரசிக்கும்
பிறப்பு
ஏழையை ஏழனம்
செய்யும் பிறப்பு
இறப்பை கண்டும் மாறரிடா
பிறப்பு
இறப்புக்குள் மட்டும் அடங்கும்
பிறப்பு
இறந்து இறந்து வாழுது
பிறப்பாய்.................

Friday 26 September 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தமிழர் எம் இருள் போக்கிட
உம் உடலையே மெழுகாக்கி
உம் உயிர்த்திரிக்கே உண்ணா
எண்ணை விட்டு எமக்காய்
எரிந்திட்ட தியாகனே!

 எம்உயிரிலும் மேலாத்தோழனே!!
மண்ணில் மறைந்த உம் உடல்
எங்கள் லட்சிய தீபமாய்
எப்போதும் எமக்குள் எரித்து
கொண்டேயிருக்கையிலே!

எம் உலகம் எம்மை
சுற்றி சுற்றி வேட்டையாடி
விளையாடி பார்க்கையில்!
அவர்கள் விளையாட்டை
எதிர்த்து எரிக்கும் தீயாய்
உம் பாதையில்  நாம் வளர
எம் கண்ககளின் ஒளியாய்
மீண்டும் மீண்டும் எழ வேண்டும்
உம் லட்சியம்........

Wednesday 27 August 2008

தமிழ்

ஆதி அந்தம் தேடிய தமிழ்
ஆண்டவனுக்குப் பிடித்த தமிழ்

விதி வந்தும் அழியாத் தமிழ்
வீதியில் நின்றும் தொலைந்திடா
தமிழ்

அகதியாய் அலையும் தமிழ்
வறுமையிலும் மானம் காத்திடும் தமிழ்

எரியும் தீயில் எரிந்த தமிழ்
சாபலிலும் வீரமாய் பூத்திடும் தமிழ்


அஞ்சா நெஞ்சம் கொண்ட தமிழ்
யாரிடமும் தோற்க்காத் தமிழ்

வரலாற்று வலி கண்ட தமிழ்
வழி மாறிடா இன்பத் தமிழ்

உண்மைக்காய் வாழும் தமிழ் என்றும்
சரித்திடம் படைத்திடும் அன்புத் தமிழ்

Thursday 14 August 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தமிழர் எம் வாழ் நிலத்தில்
நெருப்புப் பொறியால்
குண்டு நெருப்புப் பொறியால்
அரசு கோலங்கள் போட!
எம் இருண்ட வாழ்விற்கு
ஒளியாய் குடிசைகளும் எரிய!

நித்தம் நித்தம் நாமும்
பாதுகாப்பிற்கு ஓரிடம் தேடி!
இரவு பகல் அறியாது
ஊண் உறக்கமில்லாது
உயிர் காக்க ஓடினாலும்
வானத்தின் கீழ் எம் வாழ்வு
என்பதால்.....கண் இழந்து
கையிழந்து காலிழந்து
இறக்காமல் இருந்தவர்
வலி போக்க மருந்துமின்றி
உதவிக்கு ஆளுமின்றி
சுற்றி எரியும் நெருப்பின்
மத்தியில்
ஏக்கத்தோடு தவிக்கின்றோம்!
காத்திட யாருமில்லா துயரோடு.............

Tuesday 29 July 2008

காதலிக்கலாம் வா

கருவறையின் கருவாய்
கருவாயிலிருந்து எட்டி
உதைக்கும் உன்னை!!
அள்ளியெடுத்து, முத்தம் கொடுத்து!
உயிர் கொடுத்து வளர்க்க
வெளியில் வந்து எட்டி உதைக்காமல்
காதலித்துப் பார்க்கலாம் வா.


திட்டி அடித்தாலும் முன்னும்
பின்னும் சுற்றி சுற்றி
உன்னோடு வரும் சகோதரியை!
சின்ன சின்ன சண்டை போட்டு
தொலைத்திடாமல்
காதலித்துப் பார்க்கலாம் வா....

மனைவியாக வந்தவளை
காதலியாக்கி!
காலம் முழுதும் காப்பாற்றி
ஓடி ஓடி உழைத்து
அவள் மகிழ்ச்சிக்காய் வாழும்
உன் வாழ்வின் புனிதம்
காலம் முழுதும் களங்கப் படாமல்
காதலித்துப் பார்க்கலாம் வா......

உனக்காய்ப் பிறந்து
உன் மார்பிலும் தோளிலும்
விளையாடி வளரும் மகளின்
ஆசைகளை சுமக்கும்
உன் தாய்மை உள்ளத்தை
காலம் முழுதும்
காதலித்துப் பார்க்கலாம் வா.....

Sunday 27 July 2008

மனித தத்துவம்

பத்துப் பேர் காவல் வைத்து
பதவி தனை தான் காக்க
மேடைபோட்டு பேசிக் காத்தான்
அரசியல் வாதி மனித தத்துவத்தை

புதிது புதிதாய் ஆயுதம் வேண்டி
பாது காப்பு கூண்டில் நின்று
அரசு தலைவர் தன் மக்களிடம்
பேசி காத்திட்டனர் மனிததத்துவத்தை

யுத்தம் செய்ய பலகோடி
உள்ள பணக்கார நாட்டில்
வறுமை மனிதனக்கு
உணவளிக்க பணமில்லா
பணக்கார வறுமை தலைவர்
பேசி காத்தார் மனித தத்துவத்தை..

வந்த வழி தெரியா
மனித ஜாதி! ஜாதி வெறி
கொண்டு உயிர் குடித்து
மகிழ்ந்து பேசி காத்தது
மனித தத்துவத்தை....

சொன்ன கடவுளும் அறியாமல்
வந்த கடவுளும் தெரியாமல்
அன்பால் பலியெடுத்து
கடவுளுக்கும் சொல்லி
கொடுத்தனர் மனிதர்கள்
மனித தத்துவதை..

Friday 25 July 2008

கடமை

அப்பாவிற்கு ஒர் கடமை
அம்மாவிற்குத் தெரியாமல்!
அம்மாவிற்கு ஓர் கடமை
அப்பாவும் அறியாமல்!
பிள்ளைக்கும் ஒர் கடமை
யாருக்கும் புரியாமல்!

இப்படியேஆழுக்கெரு கடமை
யாருக்கும் அறியாமல்
வந்து சேர!
தனித்தனியே ஆனோம்
பல முகத்தோடு!

கடமையால் குடும்பமாகி
கடமைக்காய் வாழ்ந்ததால்
பொய்யில் சில நேரமும்
மெய்யில் சில நேரமும்
பணத்தில் பாதியும் புகழில் பாதியும்
கடமைக்காய் போக
இல்லத்தில் புன்னகையும்
போலியானது கடமையால்....

கடமைக்காய் வாழ்வு தேடி
வீனாய் போன நாட்களை
கடமையால் வெறுத்து
இன்னும் கடமையாய்
தொலைத்ததை தேடாமல்
கடமை கடமையென
அழைகின்றோம்......

Friday 11 July 2008

என் பெண்ணே

என் பெண்ணே சின்னக் கண்ணே
அவன் மனசை உன் மனசு
ஏற்றுக் கொண்டேன் என்று!
சொல்லச் சொல்லியதா?

இப்படியே..
அறியாத அறியாமை அறியாமல்
உன்னை படுகுழிக்குள் தள்ளிச் சிரிக்க!
நீ மட்டும் பலர் முன்!அடைமொழி
குற்றவாளியாய் !தோன்றித் தவித்து!
இழந்ததை இருளுக்குள் தேடித் தேடி
ஏமாந்து ஏமாந்து உன் மனசால்
உலகில் ஏமாழியாகி விடாதே
என் பெண்னே!

ஒரு முறை சிந்தித்து எழுந்து
உன் சிந்தனையால் உனைச் செதுக்கி
துயரத்தை எறிந்து நிமிர்ந்து நில்லடி!
என் பெண்ணே!!

நிலையான அழகை இவ்வுலகில்
படைத்திட வெளியழகை நம்பி
உன் அழகை இழக்காமல் வாழ்ந்திட
எழுந்து நடந்திட விரைந் வாடி
என் பெண்னே!!

Wednesday 9 July 2008

இது தானா வாழ்கை?

காத்துக் காத்து காதல்
செய்து
பார்த்துப் பார்த்து
வாழ்வமைத்து
கொஞ்சி கொஞ்சி இன்பம்
தேடி
கெஞ்சிக் கெஞ்சி
உறவு கொண்டு! வாழ்ந்திட்ட
நம் காதல் வாழ்வு!
பூமியிலே சொர்க்கத்தைக்
கொண்டு வர..

நண்பர்கள் நமைப்போல்
ஜோடி தேட
அடுத்தவரும் அயலவரும்
நமைப் பார்த்து பொறாமை
கொள்ள
கிண்டலும் கேலியும்
மகிழ்ச்சியும் கோபமும்
மாற்றி மாற்றி நாம் கொண்டு
நம்மை நாம் மறந்தால்
பெற்றோம் முத்தாய் குழந்தை
இரண்டு
நம் வாழ்வின் சாட்சியாய்..

பெற்றேராய் நாம் மாறி
நம்மை நாம் மறக்க!
குழந்தைகள் நமையாழ!
இரவு பகல் கண்விழிந்து
அலுப்பிலும் சலிப்பிலும்
அன்போடு அரவணைத்து
அடுத்தவர் கண் படாது
பாதுகாத்தோம் அவர்கள்
வாழ்வை நம் வாழ்வாய்
நாம் கொண்டு! வாழ்ந்திட்ட
காலத்தின் சொர்க்கத்தை
ஏன் நாம் அழித்தோம்?

உன்னில் சந்தேகம்
நான் கொண்டு
என்னையும் சேர்த்து
கலங்கப் படுத்தி
எரிச்சலும் கோவமும்
நான் காட்ட
இன்பம் போய் துன்பம்
வந்து
மகிழ்ச்சி போய் சண்டை
வர
ஆளுக்கொரு கதை நாம்
பேசி! தப்பின் மேல் தப்புசெய்து
இல்லாத உண்மை தேடி
ஏன் தனிமை காத்தோம்?


இல்லத்திலே இனிமை கொண்ட
நம் இல்லம்
சோகத்தால் இருளில் மூழ்கித்
தவிக்க
காதலால் நிறைந்த நம்
பள்ளியறை தனிமை
காக்க
தனித் தனி அறையை
நாமேன் தேட!
உன்னேடு தூங்குவதா?
என்னேடு தூங்குவதா?
எனத் தெரியாது குழந்தைகள்
தவிக்க!
வேலைக்கு போன நானே
உலகமே உறங்கும் வரை
சுற்றி விட்டு வீடு வர
ஏன் என்று கேட்காது நீ தூங்க
உன்னை புரிந்த நானும்
என்னை புரிந்த நீயும்
எப்படி புரியாது போனோம்!
************************தொடரும்......
புரியாது நாம் வாழ்ந்த
வாழ்கை! எம் மீது
எரிச்சலும் கோபமும்
காட்ட! தொலைத்த மகிழ்ச்சி
தேடி இரு திசை போனோம்
நம் திசை ஒன்றெனத் தெரிந்தும்!
வரட்டு கெளரவம் நம்மை
துரத்த......
குழந்தைகளை அள்ளி
நெஞ்சோடு அணைத்த
கை கொண்டு நான் அடிக்க!
என்மேல் கொண்ட வெறுப்பை
குழந்தைமேல் நீ காட்ட!
குழந்தைகள் தவிக்க
அடுத்தவர் எம்மை
சாமானப்படுத்த! கோபத்தால்
நான் கொதிக்க நம் குடுபம்
வாழ்க்கை தெருவோர வாழ்வாகி
போனது நம்மால்......

தெருவோர வாழ்வை கண்ட
உன் உறவும் என் உறவும்
சமாதான படுத்திட முயன்றதால்
வந்தது புதிய சண்டை!
பணத்தின் பெருமை சொல்லி
உன் உறவு என்னை திட்ட
என் உறவு உன்னைத் திட்ட
பணம் மட்டும் பேசியதால்!
நம்மைப் போல் பொறுமையிழந்த
பிரிவு! நிரந்தர பிரிவாய் நம்மை
பிரித்து செல்ல!
குழந்தைகள் உன்னோடு சேர
தனிமையும் இருளும் இல்லத்தில்
என்னோடு நிரந்தரமானதால்!
தனிமை என்னை வாட்ட
உன்னை மறந்திட மது துணைவர
தவறியது மனது உன்னால்...
என்னால்.. நம்மால்...

.........................

Thursday 3 July 2008

குடிகாரன்

நிலையில்லா வாழ்வு
இதுவென்று
நிலையில்லா எண்ணம்
கொண்டு
வரையரையின்றி வழி பல
மாறி
தரை விழ்ந்து தடுமாறி
தடம் புரண்டு
தானெழும்ப மதுக் கரம் பிடித்து
தன்னைத் தான் மறந்தான்
அறியாமை மயக்கத்தில்!!



மயக்கத்தால் கண்ட சுகம்
அவனை அழிக்க
வரும் வலி தெரிந்தும்
உடலுக்கு வலி கொடுத்தான்
உள்ளத்தை ஆற்ற தன்
வலி மறந்த அறியாமை
விலங்காய்!!

செய்த பவத்தால் வந்த பாவத்தை
கூடி நின்று ஊர் பார்க்க
குடும்பம் தனை தெரு நிறுத்தி
தள்ளாடி நடந்தவன்
எமனைத் தேடி உயிர்
கொடுத்தான் இறுதிவாழ்வு
புத்தனாய்...

Thursday 26 June 2008

எங்கே?

இறைவா நீ
அழித்த அரக்கன்
எங்கே ஒழித்தான்
மனித சுவாசத்திலா?
உன் சுவாசத்திலா?
இல்லை
பூசையில் இறைவாசம்
வீதியில் இரத்த வாசம்
மனிதரில் மிருகவாசம்
இங்கே நீ எங்கே?
மனிதன் எங்கே?
அரக்கன் எங்கே?
தெரியாது தேடுகின்றேன்

Monday 23 June 2008

விழிகளுக்குள் சிக்கிக் கொண்ட சாரல்.....2


உன்னில் என்னை
அடக்கி
என்னில் உன்னை
அடக்கி
காதல் நம்மை
அடக்கியதால்!
தொலைந்திட மகிழ்ச்சிக்குள்
இன்பத்தை அடக்கி
வாழ்விற்குள் நாம் அடக்கி
எங்கும் இல்லா சொர்கத்தை
அமைந்திடுவோமா?
************************

வறுமைக் கோலம்
கண்டும்
தன் குடும்ப
வாழ்வை
தன் வாழ்வாய்
எண்ணியதால்
தன் வறுமைத்
தவிப்பிலும்
மாறாப் பாசம்
கொண்டு
தன் சுமை சுமக்கின்றான்
வலி மறந்து
உலகில் உயர்தவுள்ளம்
இவனிடம் உள்ளதன்றோ...
*****************************

அழகாய் ஒரு வீடு
அதில் இவள் வாழ்ந்திட
மட்டும் ஒரு கூடு

போகுமிடமெல்லாம்
பூக்களின் வாசம்
நடுவே இவளக்காய்
ஊஞ்சல் ஒன்று
துயில்கொள்ளும் பஞ்சனையாய்

இவளை தாலாட்டும்
இசைகள் எல்லாம்
தென்றலில் மோதி
இசைத்திட- அதை கேட்டு
ஆடிடும் பூக்களாய் -அந்த
வீட்டில் இவள்
ரம்மிய மாலைப்பொழுதில்
இவள் கண்மூடி துயில் கொள்ளும்
அந்த அழகை கண்ட
வண்டுகள் பூவோயென
தேனெடுக்க தேடி வந்து
தேவதையாய் இவளைக் கண்டு
முத்தமிட்டு சென்றிடும்
இவள் துயில்களையாது....
**************************

என் இதயம் அடிக்கடி
இறந்து துடிக்க என்
இதயத்தை வெறுமையாக்கி
உன்னை என் உயிரில்
கலந்து கொண்டேன் !
என்னோடு உன்னையும்
எடுத்து செல்ல!

என் இதயமே என்னைத் திட்டாதே
உன் மனதிற்குள்
சுயநலவாதியடி நீ என்று
உனக்கு மட்டுதான் நான்
எப்போதும் சுயநலவாதியே!!

பின்பு என் இறப்பு வரை நீ
திட்டிக் கொண்டே இருப்பாய்
என் இதயத்திற்குள் உன் உயிரென
அறியாதே!

அல்லவா!! அதனால் உன்னிடம்
இப்போதே சொல்லி விட்டேன்

இப்போது ஏன் சொன்னாய்
எனக் கேட்காதே!!
இப்போது நீ என்னோடு
கோவமாய் இருக்கின்றாய்..
நமக்குள்இன்னெரு சண்டை
வேண்டாமே அதனால் தான்....
இப்போதே சொல்லி விட்டேன்......
நாளை சொல்லாதே சென்று விட்டாள்
என திட்டகூடாது என்பதால்!!!
******************
பல வர்ணப் பூக்கள்
அழகழகாய் இதழ்விரியும்
வர்ணத் தோட்டத்தின் நடுவே
பூக்களின் பூமகள் பூவோடு பூவாய்

சிந்தும் புன்னகையும்
சிதறும் குறும்பும்
தேடிய செல்வமும்
தன் வர்ணங்களாக்கி
தன்னை மறந்து விளையாட
வந்தர் போனவர் நின்றவர்
இல்லாதவரும் மயங்கி நின்று
இவளைப் பார்க்க

சின்னம் சிறுமியாய்
தன்னைத் தான் மறந்து
தென்றல் காற்றாய்
நதியோடு விளையாடி
மழையோடு உறவாடி
மனிதனை மறந்து
நிலாஒளியின் மின்னியாய்
உலகை வலம் வந்தால்
கவலை மறந்து கவிதை பாடி
தனிப் பூவாய் நந்தவனத்திற்குளோ
இருள் அகற்றும் ஒளியாய்
****************
நித்தம் நித்தம் உன்னை
சுற்றி சுற்றி ரசித்தேன்!
தென்றல் காற்றில் கலந்திடா
பூவாய்! மழை நீர்
நனைத்திடா மண்ணாய்!
நதியோடி அழித்திடா பாதையாய்!!
உன்னை அறியா அறிவிநீர்
தூய்மை கொண்டு!
சுத்தமாய் என்னை அதில்
தொலைத்து! எதிர் பார்ப்பிலா
உண்மைப் பாசம் கொண்டு

இதில் கள்ளமில்லை
கபடமில்லை பொய்யுமில்லை
புகழுமில்லை ஆனால்
உண்மை அன்பு கொண்ட
மனசு எப்போதும் உணக்காய்
உண்டு

********************
வைகரையில் எழுந்து
இயற்கையோடு நடந்து
இலக்கியதை ரசித்து!
கவியென அவள் நிற்க!

பொய்கை மலரென்று வாடியதாய்
நினைத்து
கருமேகம் மழையாய் பொழிய!

தென்றல் காற்று அவள்
உடல் நீரைத் துடைக்க!

குளிர் நீர் நனைந்த புறாவைப்
போல் அவள் உடல் நடுங்க

அதைப்பார்த்து வானவில்
சிரிக்க..சூரியன் கம்பளியைப் போல்
தழுவினான் அவள் உடலை...
*********************
நீண்ட நெடும் பாதையில்
நீயும் நானும் கைகோர்க்கையில்
நம்மைக்கண்டுநந்தவன பூக்கள்
பொறுமைகொள்ள
துன்பம் வென்று இன்பம் கொண்டு
சொல்லச் சொல்ல கதைபேசி
நான் சிரித்து  ரசிக்கையில்!
எம்மைப் பார்த்து பொறாமை கொண்ட
மலருண்டு வண்டுண்டு
பெண்ணுடு பொன்னுடு
நிலவுண்டு நினைவோடு
ஆனால் நீ எங்கே?
நான் மட்டும் தனியா
இப்போ இங்கே!!!
**********************
ஊசியிலைக் காட்டுவீட்டுக்குள்!
அதிகாலை சூரியன்
உதித்திட முதல்!
என்னவன் வந்தானென்று
என் கனவிற்குள்
வனதேவதை வந்து சொல்ல!

கண்ணுக்குள் மன்னன் நினைவோடு
பனிக்காற்றுப் புள்ளிமானாய்
துள்ளியோடி வந்தேன்
என்னவனைக் காண!

வந்த குதிரை காத்து நிற்க
என் மனமே ஏங்கித் தேட
மாயவன் எங்கே சென்றான்
என்னை தவிக்க விட்டு!

என் தவளையே
பார்தாயா என்னவனை!
தவிக்கும் என் மனசு தெரிந்தும்!
என்னைத்தவிக்க விட்டு
வேடிக்கை பார்ப்பதுவும்  ஞாயம் தானா!

எனக்காக அவனிடம்
நீயே கூறிவிடு!

 இதழ் விரிந்த பனிப்பூவாய்!
ஓடி வந்தவள்
சூரியன் தீண்டிய மலராய்
வாடிச் செல்லுகின்றாள்
இன்று...........என்று

*****************
குட்டிக் கூட்டுக்குள்
ரோஜா மலருக்குள்
இன்பமாய் வாழும்
தேன் சிட்டுக் குருவியே!
உன்னோடு நானும்...
தேன் குடித்து துயில்
கொண்டு!விலி வந்த
திசை மறந்து! ஓர் நாள்
ஆனந்தமாய் வாழ்ந்திட
வரலாமா?
******************
கருவில் சேராக்கவிதையாய்
சோகம் தந்ததனிமையாய்
அருகில் நீயில்லாத்துன்பமாய் !
சிறைக்குள்வாழும் மகிழ்ச்சியாய்
 வாழ்வே !ஆன பின்
எப்படி அன்பே ! மகிழ்ச்சி
பூக்களாய் பூக்கும்....


************
உடைந்தது என் மனசு
பதிந்த உன் உருவக் கண்ணாடி
போட்ட வேடம் கண்டு!

சிரிக்குது விழியிரண்டும்
போதைப்பெண் நீயென்று
என்னை கேலி செய்த
உன்னை அறிந்த போது
வலிக்கு இதயம்
நீ செய்த மாயம் கண்டு!

காயம் காக்க வந்த காயம்
காயம் செய்து மாயம் செய்து
காயத்தின் மேல் காயம்
செய்ததது ஏனோ?
****************
நித்தம் நித்தம் என்
 கனவில் தோன்றி
செல்லச் செல்லகதைகள் பேசி
என்னைச்செல்லமாய் சிறையிட்ட
என் தேவதையே!
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
மாறி மாறிதோன்றியதால்
நான் யாரே ஆனோன்
மணணில் உன்னால்!
ஆனால் !!கண்மணியே
என் கண்மணிக்குள்
கண் மூடிக் கொண்டு
என்னைக் கண் மூட விடாது!
எனக்குள் உறங்குகின்றாய் நீ!
இருவரும் வான் மேகத்தில்
கண்ணுறங்குவது எப்போது?
***************
வலி மறந்து
கனவை நேசித்து
நம்மை நாம்
ரசித்திட்ட நாட்கள்
இப்போ எங்கோ
தொலைந்தாய் ஓர் உணர்வு.....

உனைப் பிரியா நானும்
எனைப் பிரியா நீயும்
இனைந்து ரசித்து
மோதி விளையாடி
கோவமாய் நடித்த நாட்கள்
இப்போ எங்கே தொலைந்தாய்
ஓர் உணர்வு!
பல நிமிடம் நம்மை நாம்
மறந்தாலும்!
ஓர் நிமிடத்தில்
இரு உணர்வு ஒன்றாகும்!
அந்த இனிய நாட்கள்
இப்போ எங்கோ
தொலைந்ததாய் ஓர் உணர்வு
வந்து வந்து போகுதடா எனக்குள்.....
*************
வண்ணக்கிளியே என்
செல்லக் கிளியே
என்னைத் தேடி
வந்ததென்ன செல்லு கிளியே!



தன்னம் தனிமையில்
ஒருத்தி; தலைவன்
வருவிற்காய் காத்திருக்கும்
சங்கதி அறிந்து தனிமை
போக்க நீ வந்தாயா?

இல்லை
இவள் எழுத்தில் வடித்திடா
கனவை நேரில் கண்டறிந்து
சொல்லிட வந்தாயா?

இல்லை
இவள் இதயத்து ஆசைகளை
அருகிருந்து ரசித்து மகிழ்ந்திட
வந்தாயா?
இவளிடம் நீ சொல்வாயா
கிளியே உன் செவ்விதழ்
திறந்து!உன் வரவை!
*******************
சுற்றி சுற்றி சோகம்
வட்டமிட்டு என்னைத்
தேடித் தேடி வதைத்திட

கண்ணீர் சிந்திச் சிந்தி
விழியோ சிவந்து நேக
காலமறியா கண்ணீர் கதையும்
தொடர கதையாகிட

தன்னம் தனிமையில்
கானல் நீர் தடாகத்துள்
கரைகின்றேன் பெண்ணாய்
நானும்................

****************
உன்னைத் தேடி
உனக்குள்ளிருக்கும்
மனதைத் தேடி
மனசுக்குள்ளிருக்கும்
நினைவைத்திறந்து பாரேன்டா....... அவள்
மெளனமாய் இருப்பது தெரியும்

அவளுக்காய் ஒருதரம்
 உன்மனதைத் திறந்து
சொல்லேன்டா உன்காதலி அவளென்று

****************

கார் மேகத்தின் நீர் துளியில்
ஓர் துளி சிப்பிக்குள் வீழ்ந்து
கருவாகி உயிர்பெற்று
பூத்திட்டாள் சிப்பி வீட்டிற்க்குள்
முத்துப் பெண்.............

கடவுளுக்கே வரமாய்
சுற்றியகொடிப்பூவின்
வாசத்தோடு
வெண்மேக மெத்தை விரிப்பில்
கனவுத் தேவதையாய்
தனை மறந்து உறங்கினாள்
மாய உலகத்துமுத்துப் பெண்.........

அவள் உறக்கம் கலைத்து
நித்தம் நித்தம ஓர்உறவு
கனவிற்குள் தோன்றி
மெல்ல மெல்ல கதை பேசி
செல்லமாய் எழுப்பியது

யன்னல் திறந்து தென்றல்
 சில்லென்று வீச
அந்த வழி வந்த சூரியன்
மனதோடு பேச
வந்தவர் அறியாமல்
உறவும் புரியாமல்
மெல்ல விழித்தாள் முத்துப்பெண்

அவள் விழிபார்த்த பார்வையில்
 பனிபோல் ஒருவன் பறந்து வர
பார்த்தவள் இதயம் படபடக்க
பயந்தவள் மீண்டும் போனாள்
மாய உலகிற்கே..
***************
அழகு மயில் போல்
தென்றல் பெண்ணெருத்தி
வண்ண வண்ண கனவோடு
சின்ன சின்ன ஆசை சுமந்து
துள்ளியோடும் புள்ளிமானைப் போல்
தெமாங்கு பாட்டுப்பாடி
நந்தவன பக்கம் வந்தால் துள்ளிக்கொண்டு
சட்டென ஒரு குரல்
புல்லாங் குழல் இசையாய்
கட்டி இழுக்க
தட்டு தடுமாறி திரும்பினால்
அழகு மயில்

திரும்பியவள் பார்வை
திரும்பாது நிற்க
வசிகர புண்ணகை
வசிகரம் செய்ய
அசையாது நின்றாள் அவனால்

எடுத்த பாதம் தரை படாமல்
தவித்த மனசு சொல்லாது
செந்தாமரைப் பூவைப் போல்
தளர்ந்து நின்றால் மெளனமாய்
****************
உன் நினைவு என்னை
சொந்தமென்று அழைக்க
உன்னவளாய் உன்னைத் தேடி
நாளும்!உனக்காய் தேய்கின்றேன்


அந்திசாயும் நேரத்தில்
ஆற்றங்கரையோரத்தில்
தன்னத் தனிமையில்
தூது சொல்ல தேழியின்றி
துணை வந்த நீயுமின்றி
உறங்கிட விழிமறுக்க
உண்ணும் உணவு தனை மறக்க
நித்தம் நித்தம் தேய்கின்றேன்
உன்னால்..............

******************
என் உணர்வுகள்
சொல்லிய காதல்
எனக்கு மட்டும்
புரிந்த காதல்!

என் நினைவேடு பேசும்
காதல் நியத்தில் எனக்குள்
தோன்றிய காதல்



என்னை தூங்க வைத்து
ரசிக்கும் காதல்
என் விழி பேசும்
உண்மைக் காதல்

என் உள்ளத்தில் உயர்ந்த
காதல் !என்னைக் குழந்தையாக்கி
தாலாட்டிய காதல்

என் உயிரைத்தெட்ட
காதல் என் கல்லறைக்கும்
உரிய காதல்

********************
என் வெள்ளைப் புறாவே
உன் சிறகுகளை எனக்கு தந்து
இந்த பூமியை தான்டி ஓர்
அற்புத உலகிற்கு! என்னை
அழைந்து செல்வாயா?


அங்கே
தென்றல் காற்றில் இரத்தவாசம்
கலந்திடா பூவின் வாசம்
எங்கும் வீசிட வேண்டும்

உடல்களை எரிக்கும் தீ ,அழகாய்
இருளைப் போக்கும் தீபமாய்
எங்கும் எரிந்திட வேண்டும்


மனிதன் என்றும் சிரித்தே
வாழ வேண்டும் அங்கே
நானும் சேர வேண்டும்
என்னை அழைத்து செல்வாய்
தானே என் வெள்ளை புறாவே....
**********************
பூவென மலர்ந்து
பூப்போல் சிரிக்கும் இந்த
பூப்போன்ற இதயம்!!
என்றும் வாடா பாசம்
கொண்டு !பட்டம் பூச்சியாய்
மெல்ல விரிகின்றது!!
காயப் பட்டு கருகாமல்
ஏமாற்றம் தோல்வியால் வாடாமல்
கூடாது கூடின்றி பிரிந்தும்
சிரித்த பூவாய் வாழ்கின்றது
அவன் தந்த நினைவேடு..
*****************
என் இதயமே நீ எப்போது
காதல் வங்கி திறந்தாய்?
இல்ல.....உன்
உணர்வறியா மனிதன்
உன் பெயரால் காதல்
கணக்கை திறந்து மூடி
திட்டி அழித்து அம்பு விட்டு
சித்திரவதை செய்து
தன்னைத் தானே அழித்து
ரசித்து வெறுத்து  நிக்கின்றானே
அது தான் ஒர் சந்தேகம்
எனக்கு....
******************
உன்னைக் காணாது தேடி
உன்னைக் கண்டதும்
மலர்ந்து
உனக்குள் கரைந்து
நீயாக மாறியவளை
நீ யாரிடமும் தேடாதே
என் அன்பே..

தன் உருவம் அழிந்து
உன் மூச்சால் உயிர் பெற்று
உன் மனதிற்குள் எழுந்தவளை
நீ யாரிடமும் தேடாதே
என் அன்பே....

உன் சுவாசக் காற்றில் கலந்து
உன் இதயம் துடிப்பிற்குள் விழுந்து
உனக்குள் வாழும் அவளை
எனி நீ யாரிடமும் தேடாதே
என் அன்பே...

உன் கனவாகி நினைவாகி
உள்ளவளை உன் உயிர் உள்ளவரை
எனி யாரிடமும் தேடாதே
என் அன்பே..

இந்த மன்னில் உள்ளவரை
அவள் உயிர் போகும் வரை
எனி யும் அவளைத்தேடாதே என் அன்பே..

*********************************


தொல்லை தொல்லையாய்
தொல்லைதந்தாள் இந்த
சின்னப் பெண் எனக்கு

அவளையே திட்டித் திட்டி
வெறுத்தாலும்!அவள் முகம்
 காட்டிக் காட்டி சிரிக்கும்
என் விழியின் கனவவே தொல்லை

அவளை விட்டு விலகிப் போனாலும்
அவளை தேடித் தேடி அலையும்
என் நினைவுகளோ தொல்லை

அவளை வெட்டி வெறுத்து நின்றாலும்
என் உணர்ச்சிகள்
நித்தம் நித்தம் அவளைத் தேடும்
தேடலே தொல்லை

அவளால் காயப்பட்டு காயப்பட்டு
வாழ்ந்தாலும்
என் இதயம் முழுதும் அவள்
தந்த வலியே தொல்லை

தொல்லை தொல்லையாய்
தொல்லையானது இந்த
வாழ்கையும் அவளால்....