Showing posts with label கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............. Show all posts
Showing posts with label கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............. Show all posts

Monday, 18 May 2026

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

மரணங்கள்  மன்னிக்கா 

மண்ணில்  மரணித்த  உயிரும் 

மன்னிக்கா அடையாளமே 

நாம்!!விடுதலை மூச்சுக்குள் 

கண்ணீர் !

விதைக்கப்படடதோ  அறுவடையற்று 

அகதியாய்! கிடக்கின்றது 

விரும்பியும்  விருப்பாமலும் நாம் 

பிளவுபட்டே விதிசெகின்றோம் 

கொடுத்தவர்  தெருவில் 

எடுத்தவர் மாளிகையையில் 

இறைவனிடத்தில் மன்னிப்பு 

 கடிதங்கள் மூட்டை மூட்டையை !!

Tuesday, 13 May 2025

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

 குடிசைகள் !

சாம்பலான  மண்ணில் 

திசைக்கு  திசை 

வியப்புகள்   வீழ்ந்துகிடக்க 

வெளிநாட்டு  கலாச்சாரம் 

வீதியில் நிறுத்தியதால்  

விழ்ந்து அழுகின்றது 

தமிழ்  !

வியர்வை  சிந்தும்  மண்ணில் 

உதிரம்  பயந்தும்  கண்கள் 

மூடிய  பூனைகள் பாலோ 

 தமிழ்! 

முதுமைகள்   வாய்திறந்தால் 

வார்த்தைகள்  நாறுது 

வலைகளில்  வீழ்ந்த  மீனைப்போல்!! 

நாம்  படித்தும் 

 நாகரிகங்களை கற்றும் 

திரும்பி  பார்த்து  திருந்திடத்தான் 

திருப்பங்கள்  இன்னும் காணோம் 

இருந்தும்  வளர்ச்ச்சியடைந்திட்டோம் ! 

Thursday, 20 March 2025

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

 தமிழே நீ சிந்திக்க 

இன்னும்  எத்தனை 

யுத்தங்கள் தேவை !!

தன்னை  தானே  

அசிக்கப்படுத்த பட்டங்கள்  

பதவிகள்  ஏனோ வினே!!  

குப்பைகள்  என்றால் 

அள்ளிப்போட கைகள் 

தேடலாம்!!  ஆனால் 

சாக்கடைக்குள்  விழுவதே 

வழிவழி  பாதையென்றால் 

இன்னும்  புரியவில்லை  தமிழே ! 

பெண்ணை  இழிவுபடுத்தும் 

வரலாறு  உண்டுதான் 

அனாலும்  கற்றுக்கொள்ளா 

தமிழா  தமிழையாளுவது 

தலைவன்  ஏன்றால் 

குழந்தையும்  புன்னைக்குமாம் 

பெண்மைக்கும்  வீரம்  வருமாம் 

ஆனால்  இப்போ  

பெண்மையும்  கோழையாகி 

சாக்கடைக்குள்  கைபிடித்து 

நடக்குது  தமிளுக்காய்  !!!

அச்சப்பட்டு  அசிங்கப்பட்டு 

உலகத்திற்கு  சொல்லும்  சபைவழி 

நாகரிகம்  அற்ற வரலாறு 

நாளைய தமிழுக்கு  எதை 

கற்று கொடுக்கும்  ?




Thursday, 27 July 2023

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

 எனக்கான மண்ணில் என்

முகவரிக்காய்  போராட்டம்

முகவரியிருந்தும் அன்னியபெண்ணாய்

சொந்தமண்ணில்!!நான் 

 சுற்றுலாப்பயணியாய்!

பணத்தை கட்டுக்கட்டாய் கொடுப்பவன்

முகவரிகள் மட்டும் வெளிச்சத்தில்

உரிமையற்ற நிலம் கூட

 உரிமையாகின்றது  சிலநெடியில்!!

வாழமுடியா இடத்தில் 

பலகோடிசொலவில் வீடுகள் !!

அனாதையாய் உயர்ந்தே கிடக்கின்றது!

போகும் பாதையேரம் இறந்தபின்னே

நிழலாய் மாறிய நிழல்கூட மனிதர்கள்!

விழிகளில் ஆச்சரியமானர்கள்

யுத்தம் பறித்த  தமிழ்!

என்னைபோல் அங்கே

முகவரிதேடியழைகின்றது !!

அர்த்தங்கள் புரியாமல் 

தாய்மொழி விற்பனை சந்தையில்

முதல் தரப்பெருமைப் பொருளாய் 

அரசியல் சந்தையில்  நன்றாகவே பேசி

விற்பனை செய்யப்படுகின்றது !

வெளிநாட்டுத்தமிழ்  தன்னைமட்டும்

சிந்தித்து  இருபதையும் கெடுக்கின்றது

நாடு எனது!! 

உரிமை மட்டும்! அங்கே 

இல்லை   

பணம் பேசும் பணமும்  இல்லை  !

சொந்தநாடும்  இல்லை !!



Wednesday, 18 December 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

பட்டணத்தை விட்டு. ஆடம்பரத்தை விட்டு 
 ஊரைத்தொட்டு   வயலைத்தொட்டு 
என்  மாமன்  ஏரைத்தொட்டு  
காளைபூட்ட என் கண்கள் 
மாமன் அழகைத்தொட்டு
வார்த்தை பட்டு ஊமைக்கொக்கைபோல் 
நிக்கின்றேன்  உள்ளம்கெட்டு 
எண்ணம் மலர!!

திண்ணைக்கு திண்ணை திண்டது செமிக்க
 கண்டதை பேசிகாலத்தை போக்கிய காலம்
காணமல் போயியும் !!கண்டதைபேசி
Bildergebnis für வயல்காலதைபோக்க எதை எதையே தேட
வலைக்கு வலையழைகின்ற
சிறுதும் பெரிசும்  வாழ்கையை அங்கங்க
தொலைத்து தேட!

என் மாமன் கற்றதை விட்டு 
கம்பீரமாய் வந்தான்  ஊரைத் தேடி 
வெங்காய பேச்சை
தெருவுக்கு தெருபேசி 
ஆடையில் மண்னெட்டாது 
அழையும் சிந்தனைவாதிகளை
கடந்து  பட்டணம
 விட்டு பட்டிக்காடு தேடிவந்தான்
உழைக்க!!

கையில் உணவையெடுத்தால் 
நாகரிகமில்லையென
கையும் உணவும் சண்டைபோடும்
காலத்தில் சேற்றில் இறங்கிவேலைசெய்திட
வந்தான் கம்பீரமாய்!!
ஒற்றை ரோயாவில் மாமன் முகம் பார்த்து
ஒராயிரம் கதைசொல்லியவள் கற்பனைக்கு
உயிர்கொடுத்து நிக்கின்றான் வியர்வைத் துளிசிரிக்க
என் முன்னே!!

Saturday, 21 September 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

செம்மண் செங்குருதி
ஆற்றில் மிதந்த உடலுக்கு
Bildergebnis für யுத்தம்
கிடைத்த பாராட்டு மழை
ஒலிபதிவு நாடாக்களின் தியாகம்!!!

Sunday, 28 July 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

மனம்வலிக்க உணர்வு
ஊமையாக  தளிர் கொடி
Bildergebnis für வறுமைதவிக்கின்றது  தனியாய்
உயிரற்ற உடலாகி உறவற்ற
பொருளாகி  தெருவோர குடிசைக்குள்
ஓளியற்ற முகமின்றி  இருளோடு
கிடக்கின்றது  தனியாய்!!

பொய்களும்  புகழ்களும் பொன்னாடை
போற்ற  உண்மையாய் கிடக்கின்றது
மார்பு  மூடிட ஆடையற்று!!
தெருவிளக்கு மின்குமிழ் கூட
கருணையற்றே போனது
அவளுக்கும்!!!!


கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அலைஓசைகாற்றசைய
அலைமகள் தாலாட்டில்
Bildergebnis für கறுப்பு ஜூலைஅகதியான கூட்டம்
அறிவிருந்தும் அவனியில்
இழந்தே துடிக்குது தனியே!!

தனித்தே நின்றாலும் அமதியற்ற
அலைபோல்  மோதி மோதிக் கரைசேராது
இழந்தை அடைந்திடாது திரும்புகின்றது
தனியாய்!!!!

Sunday, 19 May 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தென்றல் தொட்ட தென்னகீற்றை

                                                                                         

                                                      குண்டுகள் தொட்டு எரிக்கும்

திங்கள் வானம்  சிவந்த ஒளியில்
  ஆதவனையே     எரிக்கும் 
கொள்ளை  கொலை 
கோவில்  முன்னும் 
தினம் தினம்   புதுக்கதை 
முடிவாய்  படிக்கும் !
எடுக்கும்  உயிரே   கொள்கையென
கொள்கை  கூட்டம்  திரியும்
 
மனித ஜாதி  மிருகம்வென்று  
  தனியாய்   தம்மை  தேடும் 
இருப்பதை தொலைத்து  காப்பதையாறியாது
கொலையாளனிடமே  சென்று 
கருனைமனு அழிக்கும்   
பாக்கள் வென்று  மாக்கள் வந்து 
மனுதர்மம் எழுதும்  
வெற்றிமாலையணிந்து 
பணத்தை  வெல்ல  புதிய 
கொள்கை அலையும் 
எதைசொன்னாலும் சிந்திக்கா ஒர்
இனம் உணர்சிக்குகள் அடைபட்டு
ஏதோ சொல்லுது  தன்னை  காப்பதாய்!!
கொள்கையுமின்றி வழிநடத்தலுமின்றி
மிருகங்களாய் மாறிடும் மனிதனின்
தேடல் சொல்லுது உலகையழிப்பதே
எமது வெற்றியென
இதில் சுயமிழந்த  சுயம் சுயங்களை
காக்க சுயமாய் செய்திடுவதாய் 

                                                                  எதை  சொல்லுது  !!!



Friday, 22 February 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அலைமோதும்  கடலின் 
Bildergebnis für கல்லறை ரோசாநடுவே அழகிய தீவு !
அலைகடல் ஓசையில் மலர்ந்திடும் 
பல்முகப்பூக்கள் !
ஆதவனின்  அரவணைப்பில்  
உதயமாகியே    மனிதநேசம்
ஒன்றோடு ஒன்று கலந்திட  
பல மொழியின் கதம்பமாய் 
 மலர்ந்திடும்  உறவுத் தோட்டத்தின் நடுவே 
உழைததிடும் உழவன் 
கைகள்  சிவந்து  சிறக்க !
 உறங்கிடது விழித்திடும்
 மீனவன் முச்சுக்குள் 
உயிர்சிறக்க !
இன்னும்  பல காத்துநிற்க !!
கல்வியும் கலையும் இசையும்
ஊருக்கு ஊர் சிறப்புற்று 
சிந்திக்க செய்திட!
 சிற்பம் கண்டு வியக்கும் 
விழிகள் ஓவியமாய்
ஒவியத்தை கண்டு மகிழும் தீவுக்குள்  
இதயங்கள் தொலைக்கா 
காலத்தின் சக்கரம்
மெல்ல   மெல்ல கரைய 
மனிதனின் தேடகளில்
மாற்றங்கள்  உதயமாக !
இதயங்களில்  மிருகங்கள்
உயிராக 
ஆட்சியமைப்பில் அரக்கத்தனம்
விளையாட 
இறையாண்மை இரக்கமற்றே 
தொலைய சிதைவுகள் 
சிறப்பிடம் பெற்றிட 
மனிதன் தன்னைக்கெடுத்து  
சரித்திரம் எழுதிட
எதிரியானான்!
 உண்டதை  உறங்கியதை
வாழ்ததை மறந்து
 ஒற்றை தீவுக்குள்
ஒன்பது பிரிவுகள் 
எழுந்தது தம்மை தாமே அழிந்திட  
 மென்மைகள் இழந்து 
வன்னைகள் உயிர்பெற்று 
இருபவரை வெறுத்து 
இறந்தவரை நேசித்து 
தீவுக்குள் பலதீவுகளாக மனிதம் 
தேடுகின்றது  உயிர் மூச்சை  !!!

Wednesday, 7 November 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

வஞ்சி வளைந்தாட  இஞ்சி இடையாட 
கொஞ்சும் மொழி கோதைக்கு
நெருஞ்சி குத்தி விளையாட
 வஞ்சி  முகம் சினிங்கி சிவந்தாட
Bildergebnis für கிராமம்
நெஞ்சகுழிக்குள் மாமான் நினைப்பாட
கஞ்சி ப்பானை தளர்ந்தாட
காஞ்சிப்பட்டு  பட்டாட
அங்கம் தங்கம் போல்
மின்னியாட
கால்கொலு துள்ளியாட
பஞ்சிபாதம் நெற்றிப்பொட்டாய்
 கரைந்தாட   
தங்கமுகம் ஏங்கி தேடுது மாமனை!!!

Thursday, 6 September 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அத்திக்காற்றாட 


அந்தியில் வான்மழை 
பொழிந்தோட
நாற்றிற்குள் நாரை
 குளித்தாட
கெண்டையோடு கெழித்தி
சேர்ந்தோட  
சேற்றுக்குள் சோற்றின் 
வாசம் விழித்தாட
மாமனுக்குள் முல்லை!
வாசம் சேற்றின் வாசத்தை  
 வென்றாட 
வறுமைக்கஞ்சிவற்றுக்கு  
நீராகியோட!
வசதிகாய் ஒர்  வாசம் 
கதிரோடு பேச
புவிவெப்பதோடு  
குளிர்ச்சி உறவாட
 உறவிற்குள் மறைந்த கனவு
 துளிராகியெழுந்தாட
வரபோடுமோதியே  நீர்
 வயலோடு நின்றாட
மடைதிறந்த  வேர்கள்போல்  
உயிர்கொண்டாட
மறுபடியும்  கனவென்று  
உயிரோடு அரும்பி 
மலர்கின்றது!!!!


Friday, 24 August 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............

ஆற்றிற்கு அனையிட்டு
ஊற்றிக்கு வழியிட்டு
காற்றிக்கு தூவிட்டு
Bildergebnis für கிராமம்
வயல் காட்டிற்கு நீர் விட்டு
 பாதைக்கு பார்வையிட்டு
பூவைக்கு  பூவையிட்டிட  பொழுதிற்குள்
பொழுதாய் காத்திருகின்றேன்!!!

Wednesday, 22 August 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............

வெப்ப காற்றின்  வேர்வை
துடைக்கின்றது தென்றல்
துடிக்கின்ற நாக்கினை அடைத்து
Bildergebnis für இயற்கை
சுவைக்கின்றது இளநீர்
வடிகின்றதுளிநீரில் கலந்து
வீசிகின்றது மல்லிகை  வாசம் 
உதயவனின் எரிச்சலை  
மறந்து ஓடுகின்றது  நதி
இருப்பதற்குள் வாழ்ந்திட 
துடிக்கின்றது மீன்கள்  
இருந்தும் தவிக்கின்றது
 மனிதயினம்!!

Friday, 22 February 2013

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

காலத்தை மரணத்திடம்
கொடுத்து விட்டு
அரக்கனிடம் நாயத்தை தேடி
நாதியற்று நின்று கொண்டு
நாடிதுடிக்க கதைபேசி
வாழ்வதால் என்னலாபம்!!

வீழ்பதும் எழுவதும்
நாமாகும் போது வீழ்ந்தே கிடந்தால்
வாழ்வது யாரு? வாழ்வுமது ஏது?

கேலிபேசி கேலிபேசி
வாழ்வது நமக்கு 
கேள்வியாகி போனபின்! 
இன்னும் மண்ணுக்குள்
தேடித்தேடி சொன்னாலும்
மாறுமா எம் மனம் தேடுமா புதுயுகம்!!

ஆடை அணிகலன் 
அடுத்த  வீட்டாருடன் அதிகபடி 
தேடி அணிந்து பெருமை பேசி
நாகரிகத்தேடலில் புதுமை காணும்
எம் புதிய பாதைக்கு  அடுத்தவர்
ஆவி போனாலென்ன   சாமியே போனாலென்ன

நம் வாழ்வில் நாம்காணும் இன்பம்
மற்றவர் காணவரை துன்பமில்லை

எழுச்சி பிறக்க அங்கங்கே
எழுந்து பேசி பயனில்லை எழுது கருவறை
தொடக்கம் கல்லறைவரை  விடுதலை காற்றின்
வெப்பத்தை  சொல்லட்டும்  குழந்தை வரை
கிழவர் வரை இது தான் தேவையென்று

பிரிந்து பிரிந்து கிடந்த மனதில் எழுப்பு
 தனக்காய் ஓர் விடுலைத்தேடலை
இது முடியாதென நினைத்து கொண்டு
விடுதலை தேடினால் கடசிவரை தேடலே  மிச்சும்!!!!

Thursday, 5 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தாயகத்தின் தென்றல்
காற்றோடு காற்றாய்
காற்றின் திசையெல்லாம்
காற்றாய் கலந்திட்ட என்
உறவின் உயிர்க் காற்றே!!
உங்கள் மூச்சின் வீசை புயலாக்கி
ஒரு தரம் எழுந்து வீசி
மண்ணிலிருந்து எதிரியை
அள்ளி வீசி எங்கள் தேசம்
காத்திட !! ஒரு தரம்
எழுந்து வாருங்கள் எங்கள்
தேசத்திற்காய் நீங்கள்

எங்கும் தீயாய் எரிந்திடும் தீயணைத்து
தீமையின் கொடுமை நிறுத்தி
மண்ணில் இரத்தம் துடைத்து
யுத்தத்தின் தாக்கம் மாற்றி
உறவிற்கு சற்றோ ஒய்வு
கொடுத்து இளைப்பார செய்திட
நீங்கள் மீண்டும் புயலாகி
எங்களுக்காய் எழுந்து வாருங்கள்
இந்த தேசம் காத்திட.......எங்கள்
உறவை காத்திட..............


Wednesday, 14 January 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

கார்மேகம் வெள்ளமாய்
மண்ணில் கொட்டி தீர்ந்தாலும்
சூரியன் வானிடம் சிறைபட்டு
போனாலும்
தித்திக்கும் தமிழெடுத்து
பிறந்த இடம் பறிந்த
எதிரியின் முகம் பார்த்து
வாழுமிடமெங்கும் பொங்குக
தமிழே பொங்களாய்......

தோல்விதான் வெற்றியென்று
தெருவெல்லாம் மாவிலைத்
தோரணம் கட்டி!
சிகப்பு வர்ண மாவெடுத்து
வாசலெங்கும் தேசியக் கொடி
கோலமிட்டு!
பானைக்கு கல்லாய் மனதின்
உறுதியை வைத்து
எரிக்கும் தீயாய் எம் உறவை வைத்து
எரிந்த தீப் பொறி கொண்டு!
முத்தமிழலை அரிசியாய்
உலையிலிட்டு! செந்தமிழன்
செங்குருதியை பாலாக்கி
அச்சமும் பயமும் எம்மிடம்
வேண்டாமென பொங்குக
தமிழே பொங்களாய் என்றும்
நாளைய விடியலை நேசித்து

Wednesday, 10 December 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

கொட்டும் மழையின் நடுவோ
கூரையில்ல மனித வாழ்வு
கொடி மரங்களைப் போல்
நட்ட நடு வெளியில் நனைகின்றது!
இன்று மனிதவுரிமையால் !!!


குடிக்க தண்ணீர் வான் கொடுக்க
வயிற்று பசிக்கு வழியின்றி
சேற்றிலும் சகதியிலும்
சேர்ந்து துடிக்கின்றது ஓர் இனம்
இன்று மனிதவுரிமையால்

வார்தைகளை அடுக்கடுக்காய்
அள்ளி வீசினாலும்
அடிமை வாழ்வு தொடர
காத்திட யாருமின்றி வாடுது
ஓர் இனம் மண்ணில் இன்று
மனிதவுரிமையால்

ஆமி தேடிச் சுட்டது போக
கொட்டும் மழை அழித்தது போக
ஆற்று வெள்ளம் அள்ளியது போக
மேட்டு மண்ணில் தேடுது
ஒர் இனம் காச்சலோடு இன்று
மனிதவுரிமையால்


சொல்லிச்சொல்லி சொல்லும்களைக்க
சொல்ல வார்தையின்றி தமிழும் தவிக்க
சொல்லியும் கதைத்தும் கேட்டும்
நடக்க போவது எதுகுமின்றி!
ஓர் இனம் தவிந்து நிக்கின்றது!
இன்று மனிதவுரிமையால்......

Thursday, 27 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

செந்தனல் குருதியில்
செங்கதிராய் உதித்த
செந்தமிழ் வீரர்களே!!
செந்தாமரைப் பூவாய்
தோழமை உணர்வோடு
தலைவன் தோழனாய்
தோல் கொடுத்தவர்களே!!

உண்மை வாழ்விற்காய்
உள்ளத்தின் உறுதியோடு
தோல்வியிலும் வெற்றிகானும்
உயர்ந்த எண்ணத்தில்
உயர்வாய் நிற்பவர்களே!!
உலகை வென்று
எங்களோடு கலந்து
எழிமையாய் எங்களை
என்றும் உங்கள் பாதையில்
மாற்றிப் போனஎம்
 வீரர்களே!!!

உங்களுக்காய் நாங்கள்
ஆயிரம் ஆயிரம் தீங்கள்
ஏந்தி! தாழ் பணிந்து
தழிழால் தவிந்தெழுந்து
தனித்தனி பாதை மாற்றி
தருகின்றோம் உறுதி!

இந்த புனித நாளில்
தரணியெங்கும் ! தமிழ்
தலைநிமிர்ந்து வாழ!
உங்கள் பாதையில்
தொடர்வோமென!

Tuesday, 25 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

துயிலும் இல்லமெல்லாம்
துயிலாது தவிக்கும்
தூய்மையானவர்களே !!!
உங்களுக்கு ஈடாய் நான்
எதைச் சொல்ல!

பசித்த வயிற்றுக்கு
நீர்கொடுத்து
வாடிய முகத்தை
தாம் மறைத்து!

வந்த களைப்பை
எதிரிக்கும் காட்டா வீரம்
கொண்டு ! எழுந்த
உங்கள் மனதிற்கு ஈடாய்!
நான் எதைச் சொல்ல

இதை அறிந்து தாய் தவிக்க
பாசக்கல்லாய் நின்று
தாய் மனதை கடந்து!
தாய் மண்ணை காக்க
புறப்பட்ட உங்களுக்கு ஈடாய்!
நான் எதைச் சொல்ல!!


எதிரியின் செல் கண்டு
பட்ட காயம் மறந்து
வீழ்ந்த தோழன் உடல் தாண்டி
எதிரி மேல் போர் தொடுக்கும்
உங்கள் மனதின் உறுதிக்கு
ஈடாய் ! நான் எதைச் சொல்ல!!

மண்ணில் வீழ்ந்த உடலோடு
உயிர் ஒட்டி நின்றால்!
எதிரியைக் காணமுதல்
அமுதாய் விசம் பருகி
கொஞ்சம் கொஞ்சமாய்
விண்ணுலகம் தேடிடும்!
உங்களுக்கு ஈடாய்
நான் எதைச்சொல்ல!!

இன்று! உங்களுக்காய்
பூக்கும் பூக்களும்
மண்ணில் வீசும் தென்றலும்
வாசம் வீச!! மழைமேகம்
கண்ணீரை சென்நீராய்
தருகின்றது! எம்மை விட.........