Saturday, 1 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 என் பாதையை



 நான் தெரிவு செய்தே

 நடக்கவில்லை

என் பாதையின் 

தடைக்கல்லாய்  மாறியவர்களே 

என் பாதையின்

தொடக்கமானார்கள்

எனக்கான  எந்த இலட்சியமும்

என்னில்  நங்கூரமாய்  கிடக்கவில்லை

இருக்கும் நிமிடத்தை  

எனக்கான நிமிடமாய்

 மாற்றியே  வாழ்க்கை

அழகாய் நகர்ந்தது  இங்கே

எதிரியும் நண்பரும் 

ஒன்றாய் என்னேடே  எப்போதும்

நடந்தார்கள்  இருந்தும்

யாருடனும் ஒட்டி வெட்டி

புதிய பாதை  தேடவுமில்லை!!!






No comments: