Thursday, 10 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நம்மை நாமே அழித்து

கற்பனைகைக்குள் 


நாமே   அடைத்து

வைத்த  விடுதலை !!

நம்மை  சிறைவைத்து  

விற்பனை சந்தையில்

உயர்ந்தே நிக்கிக்கின்றது

வரலாறின் சிறப்பாய்!!

பல கல்லறை 

பேசும் வலிகள்

கறைபட்டு  

உடைத்தெறிபட்டு 

சுயமற்ற உணர்வுகளாய் 

சுகங்களை 

 கடன் வேண்டி

கடமை பேசும் 

கடன்கார்கள்

கடனுக்கு 

விற்ற விடுதலையாய்   

கற்பனையின் சிகரத்தின்

உச்சத்தில் தினமும்  

தேடியலைகின்றது  

தமிழில்  

விடுதலையை!!



No comments: