இருவர் உறவிற்க்குள் யாரும்
நுளைய முடியக்காதல் மலர்ந்தால்
மூவர் வாழ்வின் முட்டாள் உறவு
புதிதாய் பிறந்திட முடியா இதயம்
நமதாகும் !!!
இருவர் உறவிற்க்குள் யாரும்
நுளைய முடியக்காதல் மலர்ந்தால்
மூவர் வாழ்வின் முட்டாள் உறவு
புதிதாய் பிறந்திட முடியா இதயம்
நமதாகும் !!!
இல்லையென்ற ஏழ்மையிடம்
இருக்கு என்ற திமிர் பிச்சை
கேட்டும் கொடுத்தும் நிக்கமால்
தப்பியேடுது பாசம்!!!
மாமன் மனசுக்குள்
மாமன்நினைப்பேடு
மாமன் உயிருக்குள்
உறங்கிய பையிங்கிளி
விழிகள் திறக்கவில்லை
மரணம் வரை
ஆயிரம் உறவுகள் கூட
இருந்தாலும் மாமன்போல
யாருமில்லையென்று!!!
என்னைத்தொலைத்து
என்னைத்தேட
மாமன் வந்தான்
கையில் கொண்டு
மாமன் கையில்
என்னைக்கண்டு
விழியின் தவிப்பில்
மழையும் வந்தது
கொஞ்சம் கொஞ்ச
கொஞ்சும் மழையால்
மாமன் கையில் நனைந்த
என்னைக்கண்டு
கதிரவன் வந்தான் கொஞ்சம்
பாசம்கொண்டு கொஞ்சபாசம்
கண்டு மெல்லமலர்ந்த
என்னைக்கண்டு
மெல்ல வளைந்தது வானவில்
கூடையாய் எனக்கு!!!
தேவையின் அளவுகோல்
தேடலின் அளவுகோலால்
பிழைத்திடால் வாழ்வின்
அளவுகோல் சிக்கிவிடுகின்றது
சிக்கிய சிக்கலின் முடிச்சிகளை
கண்டறிந்திட முதல் யார் யாரோ
புரட்டிவிடுகின்றனர் !!!
எழுந்தின் வடிவத்தில்
வடித்த கற்பனையித்தோல்வியில்
செதுக்கிய் சில சிலைகள்
உயிர் பெறமலேயே
உறவாகி உணர்வின்றி சிதைகின்றது!!
பெண்மையே நம்மை
தப்பாக நினைத்து
நடிப்பரிடத்தில்
கல்லாக மாறிவிடு
தன்
சந்தோஷத்திற்காக
எம் கைபிடித்து கைவிடுபவரிடத்தில்
நீ கல்லாக மாறிவிடு
கூடவே வாழ்ந்தும்
கொஞ்சம் கூட நம்மை
நேசிக்காதவர் முன் நீ
கல்லாய் மாறிவிடு
நமக்கு நல்லதை செய்வதாய்
தமக்கான நல்லதை தேடுபவர் முன்
நீ கல்லாகமாறிவிடு நம்
உண்ர்வை சிந்தி தன் உணர்வை
வாழவைக்கும் அறிவிலிகள்
முன் நீ கல்லாய் மாறிவிடு
மாற்றத்தை தேடும் மாற்றத்தின் முன்
மட்டும் நீ உளியாய் மாறிவிடு
உண்மைநேசம்
உடைத்தே விடுகின்றது உறுதியை
கைபிடித்தே சொல்லும்
தையரியத்தையும் கொடுக்கின்றது
சபைதனிலும்
மனங்கள்உண்மையெனில்
காதலும் கைபிடித்து
புன்னகைக்கின்றது கூடவே
வாழ
தலைசாய்த்தே
இதயம் வாழ்ந்திட துடிக்கும்
நிமிடம் பக்கம் நின்று கத்தி சொல்லுகின்றது
தனக்கான காதலை
அங்கிகாரத்தை கொடுத்தே
அங்கிகாரம்பெற்று காதலை
வென்று கைபிடிக்கின்றது
நேர்மையாய்! உள்ளத்தின் உண்மை
காதல்!!!
தீச்சுவாலை தீந்தமிழ்
அச்சமின்றி எல்லைதாண்டி
அச்சுவெள்ள சொல்லெடுத்து
அக்கம்பக்கம் கைபிடித்து
தென்றல்கோர்த்து திக்கெட்டும்
தமிழ் ஒளியாய் பட்டுதெறிக்கின்றது
பெண்ணை மதிபதாயே
புதைக்கின்ற உலகம்
இங்கே நம்மை நாமே
தண்டிக்கும். வரலாறு மாறாதவரை
புதைகுழிகளும் பெண்மையும்
உலகத்தில் மாறாது
கருகியபூக்களையே
மீண்டும் மீண்டும் புதைத்திட்டு
வித்திட்டதாய் ஏமாறும் நாம்
நம்மையுணரா நமக்காய்
பறிக்கும் புதைகுழிகளே நம்
தியாகம்!!!
நெடிப்பொழுதில் வந்து
மறைகின்றது ஆயிரம் உணர்வுகள்
ஓரு வானவிலைப்போல் நெடிகள்
கடந்ததும் தானாய் வருகின்றது
ஏமாற்றத்தின் வலிகள் ஒரு தேய்பிறை
ஏக்கமாய்!!!
நம் செயல்களே
மற்றவரை தப்பாக
சிந்திக்க வைக்கின்றது
நம் சுயநலமே மற்றவரை
எதிராய் நிக்க வைக்கின்றது
நாம் எப்பவும்
நமக்கான சந்தோஷத்தை
தேடும் வானம்பாடிகள்
நாம் மற்றவர்
உணர்வை உணராமல்
அழிக்கும் போது
நம்மை மற்றவர்
உணர்வு அழிக்கின்றது
நம்மில் தவறுகள் குறைந்தாலே
மற்றவர்த வறுகளும் குறையும்
ஓரு சுயநலவாதி
ஓரு தியாகத்தை மதிப்பதில்லை
மதிக்க திரிந்தவனே உணர்வுகளை
நேசிக்கவும் தெரிந்தவன்
தனக்கான வாழ்வை
கொஞ்சம் மற்றவருக்காவும்
வாழ கற்றுக்கொண்டால்
நம்மை சுற்றிய வாழ்வும் ஒரு அழகிய
வானவில்லாகும் !!!!
பூவிற்குள் பூவாய்
கொஞ்சம் வண்ணத்தின்
எண்ணத்தில் இதழ்கள்
மலர வண்டுகள் சொன்னது
தேனின் சுவைத்தேடல்கள்
தான் தாமென்று அன்று மூடிய
இதழ்கள் மலராமலே உதிர்ந்தது
மண்ணில்!!!
மரணங்கள் நம்மீது
எழுதபட்டவை
மரணிக்கும் நிமிடங்கள்
விசித்திரமானவை
புரியாவிளையாட்டு பொம்மைகளாய்
நாம் எல்லாம் புரிந்ததாய்
ஓன்றையிழந்து ஓன்றைபற்றி
வாழ்கின்றோம்
எனக்கு மரணகற்று
தந்ததை எந்த மனிதனும்
கற்றிட செய்திடவில்லை
விதியோடு மோதியுடைந்த நிமிடத்தில்
மதிகூட கைகட்டியே நின்றது
என்னோடு !!!
மதிபற்ற பிறப்பு பெண்மை
மதியாளாய்
இருக்கும் வரை இருந்திட்டு
தேவையில்லையென்றால்
தூக்கிபோடும்உடலும் அவளே!!!
தோல்விகளை தந்த
வேல்விகள்
கற்றிட சொன்ன காவியங்கள்
விட்டு விட்டு சென்ற உயிர்கள்
விட்டுவிடாமல்
பற்றிகொண்ட ஆசைகள்
தேடலில் தொலைந்த கண்ணீர்கள்
தேவையென்ற கனவுகள்
தேவையற்ற கற்பனைகள்
உண்டு உடைத்தே
எறிந்து விளையாடி மகிழ்கின்றது
அறியா அறிவாய் !!
பற்றித்துடிக்கும்உயிர்கள்
பக்கமென நினைக்கும்
வாழ்வின் வெற்றி
வைத்திடா இறைவன்ஆட்ச்சி
தீயிற்குள் தண்ணீர்துளியாய்
வாழ்ந்து முடிகின்றது!!!
நினைவேடு நீ நியமின்றி நான்
நினைவேந்தலில் நாம்
கடந்தது. காலம்
கரைந்திடமுடியாமல்
வழிகின்றது வாழ்க்கை
இழந்ததை தேடு இதயம்
அடைந்திட
முடியாமல் தவிக்குது
மனசு
இருந்தும் நம் மரணம்
வாழுது விசித்திரமாய்
இல்லையென்றது அறிவு
இருந்தும் வாழ்வதாய். சொல்லு
உணர்வு
மனசேடு மனசாய் உன்னையும்
என்னையும் இனைந்து விளையாடு
விதி அந்த விதியின்
காத்திருக்கும் நிமிடத்தின்
கவியாய் பிறந்திறக்கின்றாய்
நானாய்!!!
தடைகளை தாண்டி
நினைத்தை செய்யும் போது
கஸ்ரங்களை தாண்டி
நம்மில் வரும் நம்பிக்கை
பிறக்கும் நிமிடம்
மற்றவர் பின்னேமறைந்த
தன் நம்பிக்கையின்
முகவரியின்
சந்தோஷ சாதணையின்
முகவரிகளைவிட
சாதிக்க வைத்த பெருமை
என்னுள் இன்னும முடியுமென
உறுதியளிக்கின்றது!
முகவரிதேடியே பிரிந்தவர்
தடையானவர் என்னால்
முடியாதென கேலிபேசியவர்
கூடவே கூடிநடக்காதே
என்னை தேற்கடித்திட
கைகள் பற்றியவர்
முகங்களின் முகவரியே என்னை
இன்னும் தேற்கவிடா
கைகளாகின்றது என்னுள்
நான் !!
வாழும் நாள் நம்பிக்கை
ஆயிரம் முகமாகும் ஒரு நாள்!!!
நான் ஏறும் படிகளின்
உயரம் என்னை விழுத்திடாதே
கைபிடித்தே இழுத்தே
உயரத்திற்கு
அழைத்தே செல்கின்றது
மரணத்தின் வெற்றிபடியானதால்
விழுந்தெழும் வாழ்விலும்
விழுந்திடா பயணம் உயரத்தை
கண்டும் இறங்கிடா பயணம்
பயமற்ற உயரத்தில்
என் மரணத்தின் முன்னேட்டம்
என் கண் முன்னே
சற்றே வலித்தது
உடலேடு எத்தனை அன்பு
இருக்கும் வரை புரியவில்லை
மனிதபாசம்
இறந்தும் புரியவில்லை
எழுப்பிடும் ஆசை!!! நிராகரிப்புக்களும்
பலிவாங்களும் சற்றே சிந்தையில்
விட்டு விலகிட கண்ணீர்
மீண்டும்எழுகையில்
நாம் தொடரும் நாமே மனிதம்
காதலால் தோற்ற இதயம்
காமத்தால் வாழுது
இருவர்களால் தோற்ற வாழ்க்கை
சுகந்திரத்தை தேடு
என் தோல்விகளை விட
என் கவலைகளை விட
என் காயங்களை விட
என்னை புரியாமனிதர்களோடு
நான் வாழ்வதே கொடுமையானது
அந்த கொடுமையை
தாங்கிடவே தனிமையை கைபிடித்தேன
காலத்தை கரைத்தே
கவலைகள் வாழுது கவலையை
கரைத்திட காலம் கைகூடி
வருவதில்தான்
வாழ்க்கையும் மாறும் அந்த
காலமே நமக்கில்லையெனில்
கவலைகளேவகூடும்!!!
ஏமாற்றத்தை கொடுப்பவர்
ஏமாற்றத்தை சந்திக்காவரை
ஏமாற்றும் வித்தை அழகே
எமாந்தவர் உணரும் நிமிடும்
வாழ்க்கையின் அழகே
அழிவு !!! அழிவிலே அழகான
வாழ்வை தேடுகின்றது மனிதம்!!!
ஓன்றை தொலைத்த நிமிடம்
அறிந்து கொண்டேன் தேடிதருபவரை
விட தேவையற்ற மனிதனே தேவையின்றி
நம்மிடம் நடிப்பதை!!உண்மையில்
நம்மிடம் அவர்களுக்கு தேவைமட்டுமே
தேவையாகின்றது!! நாம் உடைத்து
அழுகையில் தான் நமக்கே புரியும்!!!
ஓரு பெண்ணை எக்கோலத்திலும்
இழிவாய் பார்க்கும் மனித்தம்
நம்மிடம் மட்டுமே எண்ணிக்கைக்குள்
அடங்கிடாமல் வாழுகின்றது
உண்மைக்கு பயந்த மனிதன்
உண்மையாய் வாழப்பயந்தே இன்று
பொய்களுக்குள் புதைத்துகொள்கின்றான்
மரணம் நிர்ணைத்த பாதையை
விட்டு தவறியதில்லை நாம் தான்
கற்பனையில் மரணத்தை மறக்கின்றோம்
உடலை தட்டிய பின்னும்
கற்பனையில்வாழ்கின்றோம்
கற்பனைவாதிகள் தோற்றதால்
கதைகளம் யுத்தபுமியில்
எச்சத்தை தேடுதுபோல்
இல்லத்தில் இயலாமையை தேடி
உண்மையை புதைத்து
கற்பனையை கருணைகொலை செய்து
கதையை வாழவைக்கின்றது
மரணங்கள் மலிந்திட்டதால்
வலிகள் கேலியானதே இல்லை
உறவுகள் அழைப்புமணியானதால்
புரிதல்கள் உணர்வற்றதே இல்லை
மனிதவாழ்க்கையே பாதைமாறியதே
இன்றைய மனிதத்தேடல்கள்
அநாகரிகமாய் மாறிட!!!
நம்மை பார்த்திடும் பார்வைக்கு
தெரிந்தால் போதும் நம்மை
பார்க்கவும் இரு விழிகள் இருப்பது
வறச்சியான வாழ்க்கையில்
வார்த்தைகள்பட்டுபோனதால்
நான் பசுமையற்ற வனத்து
பூவானதைபோல் பலர்
வாழ்க்கையும்தொலைத்துபோகின்றது
வார்த்தைகளற்று