Saturday 21 August 2010

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்...................


தன்னம் தன்னிய என்னை விட்டு
பணம் தான்  வாழ்கையென
பட்டணம் போனமாமன்!! பட்டிக்காட்டுபெண்ணை
பத்திரமாய் வைத்திட்டு
பத்தோடு பதினென்றாய் மறந்ததேனோ!!

பத்துத்திங்கள்  கடத்தும் என்
பக்கம் வராது நிற்கும் மாமன்!
மாமன்பெயரை 
 சொல்லிச்சொல்லி 
 பைத்தியக்காரியாய் ஆனபின்னும்
 பணத்தைத் தேடியழைவதேனோ !!

ஆட்டுக்குட்டியோடு ஆத்தங்கரை
ஆலமரநிழலென வானம்பாடியாய்
திரிந்தவளை
 நாலுசுவர் சிறைக்கைதியைப்போல்
தன்னம் தனியாய் வைத்தோன் 

 தூக்கம் தொலைத்து
விடிய விடிய நிழலோடு  கதைபேச
வைத்த மாமன் ! விடிந்தும் விடியாது
விட்டுப்பிரித்த  கனவைபோல்  
நிற்பதேனோ!!

விடிகாலையெழுதோடு  வீதியில்
விளையாடித்திரிந்தவள் 
சிலையாகி மாமன் வரவிற்காய்
 நிற்ப்பதை  கோழிகண் தாடிகாரனும் 
மெட்டைமண்டையனும்
வெட்டிபயல் சோம்பேறியனும்  உத்து உத்து
பார்த்து முறைக்க!! என்னை
விட்டு போன மாமன் மட்டும்
 பணம் பணமென அழைவதுதேன்
எப்போடா என் பாசம் 
புரிந்து மாமன்  என்நேசம்காண 
தேடிவருவான் இந்த பணத்தை 
மறந்து,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
 

*******************************
அலைகடல் ஓசைபோல்
அலை அலையாய் அலையும்
என் மனசு தெரிந்த மாமா
அதிகாலை போய்
திங்கள் முகம் சிரிக்க்
வருகின்றான் எனைத் தேடி!!
தேடித்தேடி பொருள் எடுத்து
பார்த்து பார்த்து நான் சமைத்து
பூத்த கண்ணும் தவிக்க
காத்து காத்து கரைமேல் நின்றவளை
யோசிக்காத என் மாமான்
எனைத்தேடி யோசிக்காமல்
வருகின்றான்!பார்!!!

ஏக்கம் மறைந்து கோவம் சிரிக்க
வந்து சேர்ந்த மகிழ்ச்சியோடு
எட்டப் பார்த்த மாமானை
விட்டு விலகி  எட்டி நடக்கின்றேன்
கொண்ட கோவத்தால்!!

வந்த மாமான் கொஞ்சம்
தவிக்க நீண்ட கோபம்
விட்டு விலகும் வரை......

*******************************


வீரவாள் பேச்சோடு
வெற்றிவாள் கண்ணோடு
அரிவாள் மீசையோடு
கட்டுக்கடாக களையாய்
கட்டி போட யாருமின்றி
சுற்றி திரிந்த என் மாமான்
விட்ட வாள் கூராய்
மனசுக்குள் யாரோ வந்தது போல் 
தந்நி தவவளுகின்றான் 
இல்லாத பொய் சொல்லி
வந்ததெரு நிலவின்
வாசம் தேடி மல்லிகையும்
கையுமாய் சின்னபெண் பின்னால்
திரியும் மாமனின் ,
செல்லப்பெண்ணிவள் 
இல்லாத்தொல்லையின் தொல்லையான 
மாமான் மனசின் 
கள்ளச்சிரிப்போடு இருப்பவள் எனறும் 
கற்பனைக்குள் மாமானை கட்டிவைத்து
சுண்டியிழுத்து கற்பனை கதை மடிப்பில 
எனறும்  இருப்பாள் தனியாய் 
 

நிலவோடு ஓர் சாரல்.......


காத்திருந்த கனாக்காலம்
காரிருள் கார்காலத்தி ல்
பூத்திருந்த  பூவவையவள்
கையிக்குள்  கைசேர!!

வாடி நின்ற மதியவள்
வார்தையற்று மெல்லச் செல்ல
பூந்திருந்த நிலவெளி யில்
காளையவன்  கரமிருக்கி  கதைபேச!

சில்லென்றதென்றல் கொஞ்சம் தட்டி
விளையாட! பட்டெதெறித்த 
குளிர் காற்று ஒட்டி உரசி 
உறவாட!!

வெட்கி குனிந்த நாணம்
வீட்டை விட்டு  வந்து  காதல்பேச
சுற்றி நின்ற  கடல் மெல்ல உறங்கி
தலைசாய்க்க  விட்டுப் பிரித்த  காலம்
முட்டி மோதி விடைதேட 
தட்டிக்கழித்த காலம் கெஞ்சி கொஞ்சி
நிக்கின்றது முன்னோ .....................

 ***********************************

  இரக்க மற்ற இதயமென்று
நிலாப்பெண்ணை  சிறையெடுத்து
 இரும்புமனம் கொண்ட
சங்கிலியால்  இருகரம் 
தனைக் கட்டி பூக்கொடுத்து 
மலர்பறிக்க பூவோடு
பெண்ணவளைகுளிர் நிலவில்
தவிக்க விட்டு  அரக்கனாய்
காத்திருக்கு  இரு மலரையும்
அழித்தழடவே!!!..........


*************************************

தொலை தூரத்து வானம்
தொலைந்திடா நச்சத்திரம்
வந்து வந்து போகும் நிலா
கண்டு கண்டு ரசித்திட்ட
நாட்கள் .........


உன் நினைவைச் சொல்லிச்
சொல்லி வாட்டுதடா...
எனைச் சிறையில் தள்ளி
சிரிக்குதடா...


என் மனசெல்லாம்
உனைத் தேடுதடா
இல்லையென்று அறிந்தும்
ஏங்குதடா......


சொல்ல முடியா சோகம்
எனை வாட்டுதடா
என் இதயம் எனை மட்டும்
கேள்வி கேக்குதடா


யாரும் இல்லாத் தனிமை
எனைத் தாக்குதடா
உனைச் சேரும் காலம்
எங்கேயெனத் தேடுதடா...
இறப்பின் நாட்கள் தெரியாது
தவிக்குதடா என் இதயமே.......

*************************************
மெல்லிடையால் !!
தன்னை தான் மறந்து
நிலவெறிக்கும் நேரத்தில்
ஆற்றங்கரை யோரமாய்!
மன்னவன் கனவோடு
குளிர்நிலவெளியில்
மெல்லிடை அசைத்திட
மெல்லன காலெடுத்து
மெல்லமாய் நடக்கையில்!
 அங்கோர்சத்தம்!
 அவள் கனவைக் கலைந்திட
வந்தது மானோ புலியோ
சிங்கமோ முயலோ என
மான்விழியாள் மிரண்டு தவித்தொடுகையில்

தவித்தள் பூந்தேகம் தொட்டு
தனக்குள்  இழுத்தணைத்திட்ட
 மன்னவன் செயல் இனியவளின் பயம் போக!

இரவின் மயக்கத்தில்
தூக்கமின்றி தவத்த நாணல்கள்
பார்த்து நாணி தலைகுனிந்தன
அவர்கள் நாணம் தாம்
கொண்டு அணைத்தவன் செய்கையால்....
******************************

வாழ்கையாய் நான் மாற
சோகங்களாய் நீயும்
வந்தாய்

மெளனங்களாய் நான்
மாற! மொழியாய் நீயும்
வந்தாய்

கவியாய் நான் மாற
கருவாய் நீயும் வந்தாய்
இருளுக்குள் நானிருக்க
ஒளியாகி நீயும் வந்தாய்  !இன்று
ஒளியாய் நான் மாற
மேகத்திற்குள் ஏன்மறைந்தாய்.....
**********************************

அக்கம் பக்கம் தெரியாமல்
பக்கம் பக்கமாய் கவியெழுதி
உனக்காய் பத்திரமாய்
வைத்தேன் என் தலையணைக்கடியில்

நீ பக்கத்தில் வந்தவுடன்
அத்தனையும் காட்டி
என் காதலை கதை கதையாய்
சொல்ல.......

ஆனால் ....
அக்கம் பக்கம் அறியாமல்
இரவிற்கும் தெரியாமல்
என் விழியிரண்டும் அழுதழுது
வடிந்த நீரில் அத்தனையும்
அழிந்த போது புரிந்தது எனக்கும்
என் பக்கம் புரியாமல்
பக்கத்தில் இல்லாத உனக்காய்
நான் பக்கம் பக்கமாய் எழுதியது
தப்பென்று.....................

Friday 20 August 2010

மலரின் சாரல்....................,


அதிகாலை தானெழும்பி
நந்தவனப் பூவென்று
தான் வாழ பூப் பறித்தாள்
நந்தவன் சென்று!

காலை அருந்த தேனீருக்கு
வழியின்றி
அவசர அவசரமாய்
சரம் தொடுத்து அதை
அழகழகாய் கூடைக்குள்
அடுக்கி தலை சுமந்து
ஓடி ஓடி சென்றாள்
கோயில் வாசலுக்கு!


உள்ளிருக்கும் கடவுளுக்கும்
தெரிந்த கதையை
திரும்பச் சொல்லி
நினைவு படுத்தி
காத்து நின்றாள்
வருவோர் போவோர்
முகம் பார்து தன் பூவை
விற்பதற்காய்!

கிழிந்த ஆடை மற்றவர்
கண் தைக்க
வயிற்று பசி இசை பாட
தன் தலைச் சூட பூ
மற்றவர் தலை சேர
விதம் விதம் மாய்
கோர்த்தால் கடவுளுக்கும்
சேர்த்து இன்றாவது
தன் வியிற்று பசி போகாதா
என்ற ஏக்கத்தில்....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இட்டவாசம் எடுத்தவாசத்தை
தொலைத்த வாசமாக்கி விட்டு!

கொண்ட வாசம் மறந்ததால்

இல்லாவாசம்  பேசுகின்றது         

எதனால்!!!

இல்லாமை தந்த இயலாமை
வந்தாலோ உள்ளம் ஒர் வாசம்
தந்து அள்ளிக்கொள்ள இயலாது
ஒன்றை இரண்டாக்கி
கொள்கை இல்லா தலைவனாகி
கொள்ளை   பேனது    !!!!!!!!

கடவுள் கொடுத்த வர்ணம் 
மாறப் பூவிற்கு !!கொடுத்த   வாசம் மறந்து

இட்டு ஒர் வாசம்    பேசி               
பொல்லா பூவாய் பொல்லாப்பு

கூறினாலும்!!

காட்டின் மழைக்கவிதையாகி
கசத்த நினைவை சாபமாய் கொட்டினாலும்

முற்றமில்லா காட்டுக்குள்ளும்

மாறவாசத்தோடே மலரும் இந்த பூ

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.

தன்னைக் கொடுத்து வையத்து 
வாசம் கொண்ட
மலரின் கண்கள் !சிந்தி சிதறு சிறு 
துறல் கற்றில் !!!இருப்பதுவும்
கொடுத்ததும் இறை கண்ணீர்துளி மட்டுமே
 என்றாலும்!!!எட்டவே நின்று எறியும்
கற்களை தட்டித் தடுக்கவே
தண் டனை கொடுக்கா முற்களை 
பக்கத்து துணையாய் கூடவோ கொடுத்தான்!!
பக்கம் தெரிய  பக்கமான
பக்கத்து மானிடன் பக்குவம்
இல்லாது  பதறி பறித்து
பகடைக்காய் ஆக்கி
பயனும் அடைத்த பின்!! சட்டென
தடுமாறி  கைவிட்டதால்
பட்ட காயத்தை பக்குமாய்
மறைத்து  ஈட்டியாய் பாய்ந்தான்
 முற்கள்ளை தப்பொன!!!
மலர் கொண்ட மென்மை
உண்மையானாலும்   தன்மென்மை
கண்டும்  தன்னையோ தவறு என்றவரை
 அழிக்கும்நியதியை எப்போ மாற்றும் 
இயற்கையென ஏக்கத்தோடு  காத்துகிடக்கு!!
நியதிக்குள் சிக்கியோ வாசம் இறப்பால்
பேசப்படும் நியதியை மாற்றம் பேசும்வர்த்தை
உண்மையின்றி போனதால்................



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


                                                                                                                                                                                                                               அதிகாலைக்கதிரவ ன்
                                                 எனைத்தொட்டுவந்த முகவரி!!
பூங்காற்றாய் தென்றல் வீசியதால்
வாசம் தந்த முகவரி!!
வண்டு தேடிய தேனைக்
கொடுத்த  முகவரி
மங்கையிவள் கூந்தல்
ஏறியதால் மன்னன் தந்த முகவரி
கல்லறையில் கல்லாய்
உறைந்தவனுக்கு நான்
கொடுத்த முகவரி
தந்தவனக்கு நானே கொடுத்த
அழகு முகவரி.......

                                                                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
     



  இறைவா!!
உன் படைப்பில்
மலர்ந்தே உதிர்ந்த
பல வர்ண இதழ் சேர்த்து
உனக்காய் தருகின்றேன்
அழிந்திடும் மனித நேயம்
மீண்டும் பூமியில் பூத்திட

அரக்க இதயங்கள்
என்றும் இறந்தே பிறந்திட
எல்லோர் இதயங்களிலும்
உண்மை அன்பு பூத்து
மகிழ்ந்திட

இரத்தங்கள் இல்லாப் பூமியில்
தென்றல் மலர் தொட்டு
பூமியெங்கும் பூக்களின்
வாசம் வீசிட

மனிதர்கள் மலரின்
மென்மையோடு
என்றும் வாழ்ந்திடும்
வாழ்விற்காய் தூவுகின்றேன்
மேலும் மேலும் பூக்களை
உனக்காய்......
                                                          ******************************
                                                                 


இதழ்சிரிக்கும் பூக்கள்

இவள் முகம் ஏந்த!
பூவையிவள் முகம்
புதைத்தாள் பூக்களின்
இதழ்களில் _தன் முகம்
மறந்து தரணியில்
தான் வாழ
தவிக்கும் இவள் இதயத்தை
தூங்கவைத்தது பூக்கள்
தன் சோகம் மறந்து....

                                                          *******************************
                                                               

என் காட்டுக்கள் மலர்ந்திட்ட
என் மலரே..
உன் அழகு கண்டு
இதழ் தொட்டு
விளையாடி ரசித்திட்ட
நாட்கள் என் இதயத்தில்
வாழ்ந்திட்டாலும் இன்று
என் இதயத்தில் உன்
வர்ணங்களின் அழகெல்லாம்
தியாக தீபங்களாய் மாற

உன் மாதத்து நாளெடுத்து
உயிரின் உயிர்களுக்கு
தலைவணங்கி
உன் தூய்மை தொட்டு
நான் வணங்கி நிக்கின்றேன்
உன் தூய்மை என்னையும்
தொட்டு நிற்க வேண்டும்
என்று....
                                                        *******************************
                                                               

சிகப்புரோஜாவே உன்னை
மதுக்கிண்ணத்தில்
அடைந்து ரசித்தவன்
யார்?
மென்மைபுரியாத
அரக்கனோ...
மெழுகுதிரி ஏற்றி
ரசித்திருக்கின்றான்!

இவனை!
முற்களால் காயப்படுத்தாதே
முகவரியில்லா முள்வேலிக்குள
சிறையிடு! உன் மென்மை
அறியாதவன் இருந்தும்
இல்லா மானிடம்!

இவ்வுலகில்
உன் மென்மை என்ன
மனிதனையே ரசிக்க
தெரியாதவர்கள் தான் அதிகம்....

                                                     *******************************

                                                               

என்
வெள்ளை ரோஜாவே
உன் இதழில் தான்
எத்தனை தேன்துளிகள்
வண்டுற்காய்...

Thursday 19 August 2010

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அன்னை மடி.......

எடுத்து அடி வைக்க
எட்டிக் கைகள் பற்றியவன்

அடுதடுத்து அடி வைத்து
விழுந்து  என்னைக் கட்டியவன்


பிடிந்த கை விடுத்து
விறு விறுவென்று நடந்தவன்


கண்ணாம்பூச்சி தானாட

என் கண்கள் தனைக்கட்டி
இருளில்  தன்னையெழித்து
பொய்யாய் அழவிட்டு கட்டியணைத்து
சிரித்தவன்


படிக்க  நான் அழைக்க பல கதை

தான்பேசி  பொய்யாய் நடித்தே
அடிக்க எடுத்த தடியை 
உடைத்தே எறிந்து படிப்பை
மறக்க செய்தவன்


இரவு  வந்து இருளைக் கன்டு தனித்து

தான் நடக்க பயந்து
என்னைத்தேடித்தேடி அழுபவன்


சில நேரம்  பிரிந்தால்
தாவி அணைத்து எனக்கு
முத்தம் தந்து  சிரிப்பவன்

இப்போ
குழந்தையவன் இளமை பிறக்க
ஆண்மை எட்ட அன்னை மடி விட்டு
மெல்லத் தொலைகின்றான்
தன்னை மறந்து....

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,

                                                                                                

நாதங்களில் அகம்
நளின  நடைபயில  
தடையின்றி  ஸ்ரங்கள் உன்னிடையே
  இசையாய் வந்தோட !

மெல்லினம் இடையினம்

மயிலினமாய்  நடைபோட !
துயிலினம் குயிலினத்தோடு
குழவிட !
கவியினம் கலையினத்தோடு இசைத்திட
 வானவீதியில் உலவும்  மனசு
மெல்லமாய் பாட! எந்தன்
 கால்கொலுசு  எந்தன்  உந்தன்
கானம் கேட்டு  அசைத்தாட
தனிமை கொன்று தவம் செய்து
இதயம் கண் மறந்து விழிதிறக்கு  உனக்காய்.............




யாழ்லெடுத்து நான் மீட்ட    
                                  அதில் சுரங்களாய் நீ மாற                                     
இசை கேட்டு   விண்மீன்கள்
எனை வாழ்த்த.....

அதைக் கேட்ட   உன் விழியோ  
உறங்காது  தவிக்க ...  தவிக்கும் 
விழியறியாது     என் விழியோ.. 
உன்னைத் தேட
விழி பார்த்து பிறை நிலா

உன் முகம் காட்ட.. பனிகால 

குளிர்காற்றின் வெப்பத்தீண்டலாய் 
                                  என் இசை  உனக்காய் அரங்கேற்றமாக !!                            

ஸ்வரங்களின் சுருதியில்

என் சுவாசம்   தாளத்தின்  மடியாய்   
உன் மடியில் கரைகின்றது
நின் மதியாய் !!
அலைமேல் மிதந்திடும்
பொம்மையின் அசைவாய்
என் உணர்வுகள்
உன் உணர்வில் 
இசையாய் கலையாய்  உணர்வாய்
அசைகின்றது
புது புது ராங்களாய்!!!



உலகத்து    உயிரை  
உனக்குள் மயக்கி
என்னையும் சிறையெடுத்து
எனக்குள் வாழும் அற்புத இசையோ!
என் இதயத்தின் ரணங்களை
மயிலிறகால் வருடி எனக்குள்
வாழும் அதிசய சுரமா நீ!
நான் கண்மூடி உன்னேடு
நடக்கையில் என் இதய
சுவரெங்கும் சுகமான உணர்வு
உயிராய் உயிர் பெற்று நிக்க
என் மனதில் தோன்றிய
ராகத்தின் தாலாட்டாய்
என் சுவாசக் காற்றில் கலந்திட்டு
என் கனவோடும் நினைவோடும்
நீயே தோன்றியதால்...
உனக்குள் நான் தொலைந்து
விழிமூடி கண்னுறங்கிட
உன்மடி தேடி நான் வந்தேன்
ஒர் குழந்தையாய்.....
********************************

என் இதயத்துடிப்பின்
ஓசை நிற்கும் வரை
உன் இசையின் ஓசை
என் இதய ஓசையாய்
மாறிட வேண்டும்

என் விழிகள் அதற்கு
அபிநயம் பிடிக்க
வேண்டும்

நான் சிந்தும் சிரிப்பு
என் இதழின் இசையாய்
மாறிட வேண்டும்

நான் வலி இல்ல இசையாய்
உன்மடியில்
உறங்கிட வேண்டும்

அந்த நிமிடத்து உறவாய்
நீயோ வர வேண்டும்

உன் இதயமே என்
கல்லறையாக வேண்டும்

அந்த நிமிடமே என் வாழ்வின்
கடசி நிமிடமாய் தோன்றிட
வேண்டும்

Friday 13 August 2010

முழுநிலா


செறிந்த பார்வைக் கண்மணிக்கு
உடைந்த மனசு உள்ளுக்குள்
ஆனால்
சிரிக்கும் உதடு அவனுக்காய்!!

விடிந்தும் விடியா இரவு
விழுந்தெழுந்த கனத்த 
இதயனக் கண்மணிக்கு
இருண்ட வாழ்வு உள்ளுக்குள்
ஆனால்
அமவாசைக்காலத்தில்  உதிக்கும்


நிலாமுகம் அவனுக்காய்!!

கொண்ட வாழ்வில் கொள்ளும் 
வேதனைக் கண்மணிக்கு
விழிகளுக்குள் தேங்கும் கண்ணீர்
உள்ளுக்குள் ஆனால் 
இட்ட பெட்டும் கட்டும் பட்டும்
அவனுக்காய்!

Wednesday 11 August 2010

கொடிமலர்...............

இட்டவாசம் எடுத்தவாசத்தை
தொலைத்த வாசமாக்கி விட்டு!
கொண்ட வாசம் மறந்து
இல்லாவாசம்  பேசுவதெனால்   !!!

இல்லாமை தந்த இயலாமை
வந்தாலோ உள்ளம் ஒர் வாசம்
தந்து அள்ளிக்கொள்ள இயலாது
ஒன்றை இரண்டாக்கி
கொள்கை இல்லா தலைவனாகி
பொய்யான வாசம் வீசுகிறது  !!!!!!!!



கடவுள் கொடுத்த வர்ணம்
மாறப் பூவிற்கு !!

கொடுத்த   வாசம் மறைத்து
இட்டு ஒர் வாசம்    பேசி              
பொல்லா பூவாய் பொல்லாப்பு
கூறினாலும்!!

முற்றமில்லா காட்டுக்குள்ளும்
மாறவாசத்தோடு

காட்டின் மழைக்கவிதை போல்
கசத்த நினைவை சாபமாக்கி

 மலரும் இந்த பூ................

Wednesday 4 August 2010

சிந்தும் இதழ் சிவத்திடும் சாரல்.......

 வாடகைத்தாய்.

பிரமா செதுக்கிய
அழகுப் பெண் ஓவியம்
குறை காண்டதால்
மனிதன் செதுக்கினான்
பிரமாவை பெண்   
ஓவியமாய்.... 

  வாழாவெட்டி   

சோகக் கதையின் கதாநாயகி
பலர் கண்களின் 
பரிதாபத் திருமதி                  
வாழ்கையோடு போராடினாள்
தன்னிலமை காத்திட- ஆனாலும்
மனித விஷப் பார்வை
நித்தம் நித்தம் பார்தனர்
அவளை மாதவியாய்..



பணத்தேடலில்
தொலைந்திட்ட பாவை
செவ்வாய் தோஷம் வந்து
மறைந்திட்ட உயிர் ஓவியம்
எதுகை மோனைக்காய்
வாழ்கின்றது பல காலம்


எழுதுகோல்

என்னை மட்டும் காதலிக்கும்
காதலன் இவன்!!
என் சுவாசம் உள்ள வரை என்
கூடவே நடப்பான் !!ஆனால்
நாளைய கோவலன்


காகிதம்

அவன் நினைவுகளை
கிறுக்கி கிறுக்கி!
உன்னைக் குப்பைத்
தொட்டியில் நான்
போட.....
அவனே!                                     
நான் கிறுக்கிய
உன்னைச் சேகரித்து சேகரித்து
என்னை குப்பைத்தொட்டியில்
போட்டு விட்டான்....


பொருத்தம்

மனசும் மனசும் சேர்ந்ததால்
காதல் வர

உறவும் உறவும் புரிந்து
மகிழ்ச்சி தந்து!
அவள் குறிப்பும் என் குறிப்பும்

பொருந்தவில்லையென
சங்கடமாக்கினார் ஐயா!! என் வாழ்வை!!!

சுமை

உனக்கு நான் சுமையென்றாய்
சரியென்றேன்
என்னால் வாழ்வே சுமையென்றாய்
பிரிந்து போனேன்
இன்னெரு உறவை தேடியதால்
நான் சுமையான கதை
இப்போது தான் புரிந்தது
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று.......


உரிமை

மூன்று முடிச்சு போட்டதும்
இப்படியிரு அப்படியிரு
அதைவிடு இதைவிடுயென
உனக்காய் என்னை மாறிய
உன்னால்....... முப்பது
வருடமாகியும் எனக்காய்
ஒரு கெட்ட பழக்கம் கூட
விட முடியவில்லையே...ஏன்


காயம்

பல பெண்களின் இதயத்தில்
காதல் அம்பை விட்டு
ரசித்த என் நண்பன்...
அவன் எய்த அம்பு
அவன் இதயத்தை
தைத்த போது வலியால்
மதுக் கடை தேடினான்
காயத்தை ஆற்ற......

உண்மை

சத்தியம் சத்தியமென
பிள்ளைமேல் சத்தியம்
செய்தார் என் கணவர்
சாயங்கால மதுக்கடை
திறக்கும் வரை..
சத்தியம் செய்தவருக்கு
தெரியாது நான் நம்பாத
மனிதரே அவர் தான்
என்ற உண்மை.....

ரசிகன்

முண்டியடித்து அதிக
பணம் கொடுத்து
சினிமாப் படம் பார்க்கச்
சென்றவன் பாதியில்
கவலையோடு வீடு வந்தான்
என்னப்பா என்றால்
கவர்ச்சி நாயகி பட்டிக் காட்டு
வேடத்தில் வந்து விட்டாள்
என்றான்...


சந்தேகம்

என் மீது சந்தேகப்பட்டு
சந்தேகப்பட்டு
இப்படி
குடித்து குடித்து
என்னை சந்தேகப்பட
வைத்து விட்டாரே..


கணவன்

இப்படி அழகழகாய்
உடுத்தி உடுத்தி
என் காசையெல்லாம்
தண்ணியாய் கரைக்கிறாள்
இவள்...
ஏனடி என்றால்
அவள் அழகாயில்லை
என்று தானே என்னிடம்
வந்தீர்கள் என்கின்றாள்.....

காதலன்

ஐயோ! பாவம் என் காதலன்
அழகழகாய் உடுத்தி
என்னோடு திரிந்தவன்
பணத்திற்கு ஆசைப்பட்டு
பக்கத்து வீட்டுப் பணக்காரப்
பெண்ணைக் காதலித்து
இப்படி வேலைக்காரன்
ஆகி விட்டானே...



காதல்

உன்னைக் காகிதத்தில்
எழுதி எழுதி
காகிதக்குப்பைக்குள்
தொலைத்தால்
காகிதக்குப்பைகள் இருந்து
நீ என்னை தேடி காதலிக்கின்றாயே
என் காதலே.......

மனைவி 

எப்போது திட்டினாலும்
சிரித்துக்கொண்டே
போகின்றாயே ஏனடி என்றால்!
எப்போதும் எனக்குள் நீ
இருப்பதாக நீங்கள் தானே
சொன்னீர்கள் என்கின்றாள்
அதே சிரிப்போடு .........

ராதையின் விழி பேசும் சாரல்...............

அழகுத் தமிழ் சொல்லெடுத்து
மழைத்துளி நீரெடுத்து
நட்சத்திர ஒளியொடுத்து
ரோஜேப்பூ இதழெடுத்து
வாணவிலின் வர்ணம் தொட்டு
ராதையவள் வரைந்த கண்ணன் !!

மாயவுலகிற்குள் மாயமாய்
நின்று கேள்வியாய் அவளை
வைத்து வேடிக்கையாய்
மனதை வைத்து
கேலி பேசி கேலி பேசி
விளையாட்டாய் அம்பு விட்டு
அம்பு விட்டு வந்தவன்!!
இயப்பூவின் காதலால்
புல்லாங்குழல் இசையில்
புதுராகம் மீண்டுகின்றான்
ராதைக்காய்


************************************

ராதையின் கள்ளக்கண்ணன்
தன் புல்லாங்குழல் இசையால்
அவளை அழைத்து மாயங்கள்
பல செய்து காதல் மொழி
உரைக்க!
கருப்பிற்குள்அழகனாய்
வாழ்வின் துணைவனாய்
தன் அருகேஅவனிருந்து
ரசிப்பது புரிந்த ராதை
பெண்மையின் நாணத்தால்
தன் முகம் சிவக்க
விழியிரண்டும் கெஞ்ச
மொழியிருந்தும் மெளனமானாள்
அவன் சுவாசத் தீண்டல் பட்டு......
****************************************
அவளுக்குள் இருந்து
அவளோடு இணைந்து
போகும் திசையெங்கும்
வந்த கண்ணன் தன்
புழ்லாங் குழல் காற்றாய்
அவள் சுவாசம் எடுத்து இசையாய்
இசைத்து இசைத்து
தன் வசம் கொண்ட பின்பும்..
அவளை தவிக்க விட்டு தவிக்கவிட்டு

அவளோடு இருந்து கொண்டே
மௌனமாய் சிரிக்க..

கெஞ்சியவள் கண்களில்
வந்த கோவம்ஆண் மீதே தோன்ற
தன்னை சோதித்தவன்
கண்களை விட்டு மறைந்தாள்
கோவத்தில் ...

*****************************************
உனக்காய்  என்னை வைத்து
என் உயிரின் உணர்வாய் நீ
இருந்து
என்னை அறிந்து என் நிழலாய்
 என் பின்னோதொடரும் கண்ணா 

உனக்குமாடா
என் மனசு விளையாட்டுத் திடல்!!
கேட்காது தந்திடும்  மனசை
அறிந்தும் அறியாதவன் போல்
என்னிடமே திருட்டுத் தனமேனடா
 எனக்கேதெரியாமல் நீ உடைப்பது

 பால் குடம் மட்டுமில்லை        
என் மனசும் தானடா!!!
மீண்டும் மீண்டும்
உடைக்காதே என்னை!!
வதை பட்ட என் மனசு
தாங்காது துடிக்கின்றது உன்னால்.......................

Monday 26 July 2010

ஞாபக அலைகள்


என்னிடத்தில் வந்து போகும் 
என் நினைவுகள்
என்னைத் தொலைத்து
என்னைத் தேடி உன்னிடத்தில்
வந்து மோதி நிற்பது   உண்மையடா

என்னை மீட்கா என் நினைவுகள்
உன்னிடத்தில் என்னைச்  சிறையிட்டு 
மீண்டும் மீண்டும் என்னைத் தேடுவது
 ஏனடா?

உன்னோடு நான் தொலைத்த
அந்த இருள்குடித்த நாட்களை    
என் கரம் பிடித்து
கதைபேசி என்னை மீட்டு 
உன்னிடத்தில் என்னை ச் சேர்க்கஒரு தரம்
எனக்காய்   வாயேன்டா?
உன்னோடு நானும்என்னோடு நீயும் வாழ…..

Friday 23 July 2010

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

நினைவுகள் எடுத்து
நியாயம் தேடி
ஆண்டு தோறும்
கண்ணீர் மாலை

கண்கள தொலைத்து
காவியம் தேடும்
கல்லறை மாலை


அன்பைத் தொலைத்த
மறத்தமிழன் தேடிடும்
காணமல் தொலைந்த ஒற்றுமைமாலை


வந்து வந்து போகும்
நாட்களின் கொடுமையை
கிழித்தெறித்து வாழ்வைத்தேடும்
புதிய சிந்தனையின் கண்ணீர் மாலை


தொலைந்த தமிழனுக்காய்
தொலையும் தமிழன்
ஆண்டுக்கு ஆண்டுக்கு
தேடிடும் கண்ணீர் மாலை


விடுதலைத்தீயில் விடுதலைதேடும்
உண்மை தமிழனின்
உண்மைக் கண்ணீர் மாலை


தொட்டெடுத்து கட்டிய உயிர்களின்
வெற்றி மாலையின் கண்ணீர் பூவிற்குள்!
இன்று கண்ணீர் மாலையாகின்றது
நாளைய உதயம்..............

Monday 5 July 2010

கனவில் பிடித்த கைகள்....

ஏந்தியவன் எதுகை மோனைக்காய் 
ஏந்தியவளைக் கவிபாட 
இல்லா உலகத்தின் 
இல்லாப் பொய்யாய்
கற்பனையில் தோற்க்காப் பெண் 
கொண்டவன் கரங்களில் 
கவியானாள்!


காதலின் உயிர்த்துடிப்பால்
காலமெல்லாம் காதலாய்
வாழக் கை கோர்த்தவள்
காதலின் ஏதுகை மோனை போல்
உண்மை வாழ்வின்
கற்பனையில் தோற்றாள் 
காதல் பெண்!

சொன்னவன் வார்த்தைகள் 
அத்தனையும் நட்சத்திரமாய் மின்ன 
சுகமிழந்த வாழ்வு 
சுமையோடு கசக்க 
பொறுமையின் சகிப்பு 
பெண்மை என்று மாற 
நிலையான கனவில் 
நிலையற்ற ஆசைகள் 
வந்து வந்து போக 
பிள்ளையோடு கணவன்
புகழ் மாலை சூட 
இருபதும் அறுபதும் 
இல்லாது தொலைய 
இருந்தும் வாழும் கனவைக் 
கண்ணீரில் கரைத்து 
மறு ஜென்மத்துப் பாட்டியாய் 
வாழ்கிறாள் கற்பனைப் பெண்!

Saturday 5 June 2010

உதயம்.....

துயிலாத உறக்கம் விழிகளில்
கரையாத  களையாத
இரவைக் களைத்து விடியாது
பிறந்த என் பிறவாத உதயமோ! 


என் புலராத பொழுதிற்குள்
இருளாகி விளையாடி
புரியாத வாழ்வாகி
புதிரான விடையாகி
விதையாகி உதயமாகி
உணர்வாகி  என் மனதோடு
மோதி சொத்திட்ட உதயமோ!


என் நெஞ்சாகி கொஞ்சம்
அழித்த நினைவாகி
கண்ணீராகி முற்தரையாகி
முள்ளாகி கல்லாகி கால்வலியாகி
கதையாகி கருணையில்லா பெண்ணாகி
கலையிழந்து ஒய்வின்றி
ஒய்ந்திட்ட இதயமான பின்
எடுத்தெரித்து ஒளியிழந்து
இருளாகி சிரிப்பதேனோ....................

Friday 30 April 2010

கனவிற்குள்.. ஒர் கல்லறை......

உன் இதயவீட்டுக்குள்
விதையாகி....
உன் கண்ணீர்த்துளியால்
அரும்பாகி...
உன் சுவாசக்காற்றால்
உயிராகி....
உன் கனல் ஒளியால்
வளர்ந்து...
உன் வார்தை  கேட்டுப்             
பெரிதாகி....
உன் காதல்மொழியால்
கருவாகி....
உன் மனம் போல்
மொட்டாகி
உன் வர்ணத்தால்
நிறமாகி..
உன்அழகால்    பூவாகி         
உன் மார்வோடு    தலைசாய்த்து
என் விதியோடு கோவப்பட்டு
நொத்து வெறுத்து
உன்னை இழந்து என்னைத் தேடி
உனக்குள் கருகிடும் என்னை
ஏனடா தொலைத்தாய்...................

Saturday 10 April 2010

பிறை நிலா


தேய்ந்தாலும் மறைந்தாலும்
விட்டு விட்டு வளர்ந்தாலும்
வளராது இருளோடு பூத்தாலும் ! 
ஒளியிழந்து தவிந்தாலும்! 
என் காலம் இனிமை 
தராது போனாலும்!
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாத்தாலும்!
தொலைதூரத்து தென்றலாய்
என்னை நீ வதைத்தாலும்!

கண்ணீரை மட்டும்
கண்கள் வரைந்தாலும்
முழுமையின்றி அழிந்தாலும்
திசைகளின்றி போனாலும்
மாறாது விடிந்திடும்
பொழுதுக்குள் உனக்குள்
வாழ்ந்திடும் நிமிடங்கள்
என்னோடு வாழ்ந்திடும்
காலம் வரை என்
இதழ்பூக்கள் என்றும்
உனக்காவே பூக்கும்........
என்றாலும் புரிந்திடு கல்லறை
சாட்சியாகும் வரை தான்........

Friday 9 April 2010

இன்ப நாள்....................

மீண்டும்  மீண்டும்    தொட்டு     
விட்டு  விட்டதைச் சொல்லும்  
நாள்! 
விட்டுச் செல்லும்
கெட்டாதிற்கும்   நல்லதிற்கும்       
சாட்சியாய்   ஏறி இறங்கிடா நாளை  
கைகோர்த்திடும் நினைவிற்கு   
சாட்சியாக்கி பாதையாக்கும் நாள்.....  

பதவிக்கு வந்தாலும்
பாதையோரம் கிடத்தாலும்     
கசக்கும் நினைவுகள்
இதயத்தை பிழிந்தாலும்
சிரிக்க நிற்கும் நாள்....

போனால் மாற! மாறினால்
வீழா! வரையறையற்ற நாட்களை
வந்து வந்து சொல்லி நிற்கும் நாள்......

கொண்டு போகும் வரை
சொல்லி களைந்து
மனிதனோடு மொட்டு முதல்
சருகுவரை தரையோடு
இன்பத்தை  தேடும் நாள்
ஒரு நாளோடு மட்டும்
தள்ளாடுது மதுவருந்தும் மனிதனாய்......................

Tuesday 2 March 2010

என்ன காதல் இது.........?

நிலவில் முகம் பார்த்து
உணர்க்கு உயிர் கொடுத்து
இனித்திட பேசி
இதயத்தை வருடி
பதவியால் நொந்து
புகழாய் தேய்ந்து
ராகமாய் மீட்டி
அன்பால் அடைந்து
பொருளாய் பறிமாரி
வார்த்தையால் புதிதாக்கி
புதுமையால் கவியாக்கி
மெய்யால் பொய்யாகி
கிடைத்தால் வெறுந்து
உண்மையோடு விளையாடி
சொல்லு பிழையென்று
வாழ்வோடு திட்டி
அழித்தழித்து எழுதி
அறிவோடு மோதி
மற்றவருக்காய் நடித்து
சந்தோஷத்திற்காய் சிரித்து
விதிமேல் புள்ளி வைத்து
வர்ணமாய் கோலமிட்டு
வாழ்வோடு போராடும் காதல்
என்ன காதலடா...........?

Thursday 25 February 2010

வட்டமேசைமகாநாடு

நாலு நாலாய் நால்வர்
வந்து வந்து போக
இட்ட மேசையும் கதிரையும்
பேச்சு வார்ந்தை நடந்துகின்றது
நாலு திசையும் கேட்க!

வட்ட மேசையோடு
வாக்கியம் அமைந்து
வார்தையால் வானம் தொட்டு
பேசி வந்த கடமை
வாக்கு வாதத்தால் வென்று
திசைக்கொருவராய்
திசையின்றி நால்வரோடு
கூடி சென்றதால்....
அப்படியே!அமர்ந்த கடமை
விட்ட வார்தையை
தொட்டு எடுந்து
விட்டு சென்ற மேசையோடு
கதிரையோடும் கடமைக்காய்
தொடர்ந்து பேசுகி்ன்றது!

நாலு நாலாய் நாடுகளும்
நாலு பக்க இடைவெளியில்
பக்குவமாய் பிரிந்து நால்வருக்காய்
கூட! சிதறும் பூகோலம்
கெட்டதும் அறியாது நல்லதும்
புரியாது நால்வருக்காய்
வட்ட மேசை மகாநாட்டில்
மனிதனைத் தொலைந்து
மனித வெற்றிக்காய்
கடமை துயர் குடிந்து
துப்பும் இரத்தம் பூசும் சாயமாய்
மறையும் மனிதன் பிறப்பிந்த
வாத்தில் தொலைந்த உயிராய்
தொடருது...........

Friday 5 February 2010

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


மனதோடு மனம் பேசி
உணர்வுக்குள் உணர்வு
வந்து   மோதி       
இதயத்தோடு   இதயம்      
 விளையாடி  உண்டான காதல்!
அவனோடும் அவளோடும்
உறவாகி உறவோடு உறவு
களகம் செய்ததால்!!
விட்டிடா பிடிவாம்
பற்றி பிடித்தது உறுதியோடு
மனசு கெட்டிடாது நின்றதது
ஜெயித்திட!!
மணவறைப் பூக்கள்
மாலையோடு வாழ்த்தி ரசிக்க 
மகிழ்ச்சி வந்து கரம் பற்றியது 
தொடருகின்ற வாழ்வில்
தொடர்ந்து வரும் காலம்
பற்றிய காதலை பற்றியே நின்று
மாற்றிய இயத்தை மாற்றியே 
புன்னகைக்க   பனிகால தென்றல் போல
ஒர் உணர்வில் இருவர்
ஒரு உறவாய் பல காலம்
வாழ என் வாழ்த்துகள்...........