விழுந்த பெண்னின் அரைக்கோணம்
பார்க்கும் விழிகளுக்குகிடைத்ததே
பெண்விடுதலை
உறைபனியின் மேல் ஓரு நடை
விழுந்தெழும்பி தத்தி தவழ்ந்து
மகனின் கைபிடித்த நடை
ஓரு குழந்தை போல்
அழகிய நடை ! விழுந்திடாதே
இறுகப்பற்றிக்கொண்ட மகனின்
கைகளுக்குள் ஓரு நடை
நடக்கக்க கற்றுக்கொடுத்த தாயே
நடக்ககற்றுக்கொண்ட நடை
புதிதாய் பிறந்திட்ட
அழகிய தருணம் மீண்டும்
குழந்தையாய் வாழ்ந்த நடை
அன்பான தருனத்தை
அருகே இருப்பவர் அழகா
கொடுத்தாலே போதும்!!
அழகானா வாழ்க்கை பூக்கும்
வாழ்வோடு
செல்லும் ஆண்டு எடுத்து செல்வதை
வரும் ஆண்டு தந்து செல்லுமா
ஏனத்தெரியவில்லை இருந்தும்
காத்திருக்கின்றேன் எல்லா ஆண்டும்
அழகிய நாட்களுடன் அழகிய
வாழ்வை அழகாய் வாழத்தான்
ஆசை மாமா ஆனால்
நான் அழகியாய் பிறக்கவில்லையே
உனக்கு நீ கைபிடித்து
மாலையிட்டு கையேடு கூட்டிப்போக
கல்மீதும் முள்மீதும் நான் நடக்க
விதியென நீருக்க
கால் வலிபொறுத்து பசிமறந்து
உடல்மெலிந்து உள்ளம் உடைந்து
காதல் ஊமையானேன் உன்னால்
கடசிவரை நீவிரும்பா பெண்ணாகவே
ஆனேன் மாமா!!
சட்டென திரும்பிப் பாரென்றது
உணர்வு
நீயெனப்பார்த்தது விழிகள்
நிழலாய் சிலநொடி நீ தோன்றுகையில்
ஏதோ ஓரு உணர்வு எனக்குள்
சந்தோஷம் தருகின்றது।
அது நிரந்தரமில்லையெனத்தெரிந்தும்
அதேயே மனம் விரும்புகின்றது।
அவள் போராட்டக்களத்திற்க்குள்
பருந்துகள்
அவளை தூக்கியெறிந்திடவே
வட்டமிடுகின்றது அவள் எதிரிகளை
மறந்து பருந்துகளுடன் யுத்தம்
செய்கின்றாள் அவள் உயிர்
எதிரியிடம் அவள் மானம்
பருந்துகளிடம் பெண்மைக்கு
எப்போதும் இருயுத்த வாழ்க்கையே
இருக்கும் வரை!!!
கிழிந்த ஆடையை நனைத்த
மழைத்துளி தொட்டு சொன்ன காதல்
அவளை விட்டுச்சென்ற மரணம்
கொட்டிக்கொடுத்த வலிக்குள்
கைவிட்டு சென்ற கணவன் மிண்டும்
உயிர்பெற்று கட்டியணைத்தததை போன்ற
உணர்வினை கொடுத்தது அச்சமின்றி
புன்னகைத்தால் மிச்சமீதவலிகள் மறந்து!!
மாமன் நெஞ்சுக்குள் வாழும்
இந்த கூண்டுக்கிளி
மாமன் உயிரை தன்
நேஞ்சுக்குள் சுமந்த்து
மாமனை நினைவிற்குள் வைத்து
தன்னை வடித்தால் ஒவியமாய்!
ஒற்றுக்காய் என்னைத்தேடி
உன் இதயம் எனக்காய் துடிப்பது
நிஜமென்றால் நிஜங்களை கண்டு
அச்சம் கொண்டு மிச்வாழ்கையை
தொலைத்திருக்கமட்டாய்
என் தேனீர் சுவையேடு
இசையின் சுவை இணைந்து
என் கவிச்சுவையை களவாடியே
என்னை ஊமையாக்கி உறங்கிட
சொல்கின்றது!!
சொல்லாமலே எனக்குள்
ஒடும் உணர்வைப்போல்
நான் உடைந்தே அழுதிடும் நிமிடங்களில்
எனக்கு சொல்லாமலே என்னை
எழும்பியேட செய்கின்றது இசை!!
நின்றுபேசி பிரிந்த பின்
சிலநெடி பிரியாதே நம்மேடு
வீசும் வாசம்போல் சிலரின்
வாழ்கையில் சில உறவுகள்
அர்த்தங்கள் இல்லா வாசமகின்றனர்!!
எதை என் வாழ்வில் வேண்டாமென
வெறுகின்றேனோ
அதையே திரும்ப கொடுக்காதே
இறைவா
என்னை படைத்தபோது
என்ன நினைத்து
படைத்தாயெத்தெரியவில்லை
ஆனால் எனக்காய் என்முன்னே
உள்ள வாழ்கை கொடுமையான
வலியெனக்கு இறைவா
என்னை புரிந்தும் என்முன்னே
வைப்பது ஏன் இறைவா।சிலுவை
சுமப்பவளை கல்கொண்டு அடிக்கும்
வலியை தருகின்றாயே இறைவா
தண்டனைக்காளாம் மரணமென
தெரியும் ஆனாலும் வலிகள்
வலிக்குது இறைவா!!!என்பிறவியின்
அர்த்தம் பாவத்தின் தண்டனையென
அறிந்தாலும் மனசு கல்லில்லை இறைவா
சோர்ந்திடும் போது தந்தை
கரம் தேடுது மனசு
அழுதிடும் போது தந்தை
மடிதேடுது மனசு
தடுமாறும் போது தந்தை
தோல்தேடுது மனசு
கோவம் வரும்போது
தந்தை முகம் தேடுமனசு
நிறங்கள் நிறப்பிய வண்ண நீருக்குள்
அவளை போட்டு எடுத்தாலும்
அவள் என்னவோ வெள்ளை வர்ணம் தான்
அழகான ஒற்றைகனவு
கிளிக்கூட்டுக்குள் அடைபட்ட
கிளியைப்போல் சிறைப்பட்டுக்கிடக்கிறது
எப்பவும்
தன்சிமைஎன்னை
கொஞ்சம் அழவைக்கும்
இப்போது
என்னை சிந்திவைக்கின்றது
பல விடைகள்
கேள்வியானதால்
கேவிக்கு விடைத்தேடலே
தனிமைக்கு துணையானதால்
கண்ணீருக்கு அர்த்தம் தேடுகின்றது
தனிமை!!
இரட்டை வேடம் இரடடை
வாழ்கை வாழும் இருண்ட
மனித வாழ்வை வெறுத்தே
கல்லறையில் பூத்தேன்
இருந்தும் என்னை
நடிக்க அழைக்கின்றாயே
இறைவா
பொய்யாய் வாழும் வாழ்கையில்
மெய்யான வலிகள் வேண்டாம்
இல்லா உடலாய் வாழும்
உயிர் போதும் இந்தக்கல்லறைபூவிற்கு
துன்பம் கண்டு துவண்டு போன
துன்பப்பூவிற்கு
இனியும் வேண்டாம் உன் வேடிக்கை
தாங்கிகொள்ள இதயமில்லை
தடுத்து நிக்க தைரியமும் இல்லை
போதுமே இந்த உயிர் பட்டகாயங்கள்
விட்டுவிடு கல்லரைக்குள்ளேயே
உறங்கிக்கிடந்திட
வாழ்கையென்னும் நதியில்
விழுந்த உயிர் போகுமிடம்
தானாய் ஒட நாம் எதையே
வென்றதாய் பெருமை கொள்கின்றேன்!!
என் கனவுகள் ஆசைகளுக்காய்
யார் வாழ்வையும் கனவையும்
இதுவரை அழித்திடவில்லை
மாறாக என் கவையே அழித்தேன்
முதல் முரை என் கனவிற்காய்
உன் கரம் பிடிக்கின்றேன்
இது சரியா பிழையா தெரியவில்லை
இருந்தும் என் மரணம் உன்னை
என் கனவின் வழியாய் வழிநடத்துமென
நம்பிக்கையேடு இறுகப்பற்றிக்கொள்கின்றேன்
மகனே உன்னை!!!
ஒரு பெண்மையை
நேசிக்கும் போது
நல்லதை தேடும் ஆண்மை
அந்த பெண்ணை சமூதாயம்
பார்க்கும் பார்வையை மட்டும்
ஒருபோதும் ஏன் புரிவதேயில்லை
அவமானங்களையும் பழிகளையும்
பெண்மை சுமப்பதாலா
அப்போ எப்போ
ஆண்மை பெண்மையை
பாதுகாக்கும்!!இன்றுவறை ஒற்றையாய்
வாழும் பெண்னிற்க்கு புரியவில்லை
ஆண்மையும் சமூதாயமும் !!!
நான் தூக்கியெறிந்த எதையும்
சிந்தித்ததிலை
பிரிவுகளே வாழ்கை பாடமானதால்
விட்டு சென்றவர்கள் நினைவில்
வாழ ஆசையுமில்லை
பிரிந்தே புரிந்தே போகும்
வாழ்கையேடு வாழும் வாழ்கை
என்னை விழாதே தாங்கிகொள்வதால்
புரியாமல் பேசும் வாய்களோடு
கோவமும் இல்லை।
காலம் கடந்து காயபட்டு காயப்பட்டு
இதயங்கள் இருப்பதாய் சொல்லும்
இதயங்களின் புரிதலையும் புரிந்தது
வாழ்வதால் பொய்கள் மீதும்
வருத்தமில்லை!!ஒரு மாயவாழ்கைக்குள்
பேசும் ஓவியம் போல் நான்
என்னை சுயநலவாதியென்றவரகள்
இன்னும் என்னோடு சேர்ந்தே இருக்க
தன்னை தியாகியென்றவர்கள் சுயநலமாய்
தொலைதே போனார்கள்
உங்களிடம் தைரியம் இருந்தால்
நீங்கள் ஒரு அழகான
வாழ்க்கு தேவையான ஒன்றை
தேடியிருப்பீர்கள் ஆனால்
உங்களுக்கு வாழ்க்கையே
வேடிகைவிளையாட்டு என்றால்
உங்களுக்கு அழகின் அர்த்தங்கள்
ஒரு பெண்ணின் ஒபபணை போன்ற
சிலநெடித்தேடலே!!!
சொல்லூக்குள் அடங்கா ஒற்றை
உணர்வை சொல்லிட ஏங்கிடும்
சொல்லுக்கு இல்லை உணர்வு
சொன்னாலும் புரியா சொல்லை சொல்லியே
ஏங்கினாலும் உணர்வுக்கு இல்லை
ஏக்கம் இருந்தும் இல்லாமல் தேடும்
உணர்வே உயிரின் தேடல்
எனக்கான உலகிற்க்குள்
எனக்கான எதையும் யாருக்காவும்
விட்டுக்கொத்திடவும் மாட்டேன்
யாருக்கானதையும் எதற்க்காவும்
எனக்காவும் வைத்துக்கொள்ளவும்
மாட்டேன்!!!
பெண்ணின் கற்பனைக்குள்
கருவெடுத்து கதையெழூதும்
ஆண்மையே பெண்மையின்
நியத்தை அழிக்கின்றது।
இருண்ட பாதைக்குள்
வெளிவரமுடியா யுத்தம் என்னேடு
சண்பையிட்டு கொண்டபோது
என்னால் புரிந்திட முடியா
இருட்டே நியமாய் நீண்டது
ஒற்றை ஒளி பிறந்தபோது
விட்டுவிழகா உறவே இன்று
விலுந்திடம்ஸ் தாங்கயே நிக்கின்றது
விழுந்த காயம்
நெஞ்சின்வலியானாலும்
தாங்கி நிற்க்கும் கரங்கள் நிஜமானதால்
எழும் பூவும் நம்பிக்கையோடு
எண்ணத்தின் வண்ணமாய் மலர்கின்றது
மீண்டும் ஒரு யாழ் இசையாய்
வீசும் காறிற்க்குள் மிதற்க்கும்
மொழீயாகின்றேன் விழூம் இடத்தில்
ஏந்திடுதே s ஸ்வரங்கள் ।
இப்படி வாழ்ந்திடத் தான்!
ஆசைத்துறலாயாய் விழுகின்றது
மனதில் முதல்
மழைத்துறல் பட்ட இடமும்
பூக்கிறது தானாய்!!!
என் கனவிற்க்குள் ஓரு அழகான
வாழ்கை உறங்கியேகிடக்கின்றது
யாரும் புரியாமால்
சிலநேரம் ஏக்கமாய் என்னை வாட்டும்
சிலநேரம் கண்ணீர்த்துளியாய்
கரைந்தேயேடும் இருந்தும்
வாழ்க்கை நகருகின்றது
தானாய்।।
ஓரு ஆழகான வாழ்க்கை
எல்லோர் மனதிலும் அழகாய்
பூத்திருக்கும் ஓரு சிலருக்கு மட்டுமே
அழகாய் கைசேரும்
ஓரு சிலருக்கு கனவின் மேகத்தில்
கற்பனையின் துறலில் நினைவாய்
வாழூம்।
நம்மில் அக்கரையேடு இருப்பவர்
கூடயிருந்தால் போதும்
எதையும் முடிக்கும் நம்பிக்கை
தைரியமாய் பிறக்கும்!!!
எல்லாம் அறிந்தவர் முன்
அறியா ஒன்று இருப்பது
அறிந்தவருக்கு தெரிவதில்லை
எதுகும் தெரியாதவர் முன்
தெளிவாய் ஓன்று இருப்பது
தெரியாதவருக்கும் புரிவதில்லை
இருவர் நிலையிலும்
ஒன்றை இழக்கும் போதே
கடவுள் எலுகின்றான்!!!
தோற்ற போதும்
துவண்டு அழூதபோதும்
தனிமையே உண்மையை சொன்னது
இருப்பவரும் இல்லாதவரும் உன்வாழ்வில்
ஓன்றுதான் என்று!!
என்னை விட்டுச்சென்ற எதையும்
என் வாழ்கை திரும்பப்பெறவில்லை
மாறக என்னை மேலும் துன்படுத்தவே
சிலரை உறவாய் தத்தது இபோ
நான் என்னையே வெறுத்த பின்னே
மரணம் மன்னிக்க சொல்கின்றது!!
என்னை புரிந்து கொள்ளா
ஆயிரம் உறவைவிட என்னை
புரிந்த ஒரு உறவு கூடயிருந்தால் போதும்
நான் நினைத்தது கைசேர