இதயத்தை கொன்று
உயிரைகுடிக்கு பணம்
இருப்பன் வாழ
இல்லதவன்அடிமையாக
உதவியாய் நிக்கின்றது இயலாமை
வட்டியை காட்டி
ஆசையை ஊட்டி
உயிரை பறிக்கு பணம்
கடனையெடுத்து
கடனில் மடிவதே
வறுமை
இதயத்தை கொன்று
உயிரைகுடிக்கு பணம்
இருப்பன் வாழ
இல்லதவன்அடிமையாக
உதவியாய் நிக்கின்றது இயலாமை
வட்டியை காட்டி
ஆசையை ஊட்டி
உயிரை பறிக்கு பணம்
கடனையெடுத்து
கடனில் மடிவதே
வறுமை
வரமாய் பூக்கின்றது
இயற்கையின் கையில் காதல்
சாபமாய் பூக்கின்றது
மனிதனின் கையில்
காதல் !!காதலை
விற்று கடனாலியாய் மனிதன்
மரணத்தை பெற்றுக்கொள்கின்றான்!!!
விழிதுடிக்க மூச்சுக்காற்று
வாசமாக தோட்டபூவிற்க்குள்ளும்
கண்ணன் ராதை வாசம் கண்டான்
முதுமையில்தனிமையுணரும்
முதுமைக்கு துணையதன் விம்பம்
தூரமாய் போகின்றதோ
கூடவேயுருந்தாலும்
ஒரு அன்பின் ஏக்கம் அலைபாயுதே
பிடித்திட அழகற்ற கரமென்றா
ரசித்திட அழகற்ற முகமென்றா
மண்தொட்டு மரணம் வரை
கூட்டிச்சொல்லும் காதல்
ஏன் முதுமைக்கு தடையானது
அழகையும் காமத்தையும்
கட்டிக்கொண்டதாலா முமையில்
காதல் தடுமாறுகின்றது
ரசனையின்அழகு
துணையதன் மூச்சுவரை சுவசமானல்
கடசிவரை பூக்கும் காதலும் அழகே!!!
ஐயம் கொண்ட ஐந்தும்
அச்சம் கொண்ட ஆறும்
ஓன்றை ஓன்று இழக்கும்
இடத்தில் தோற்க்கின்றது
அன்பு
கைக்குள் கையை வைத்து
கற்பனையில் பேசு காதல்
அறிவுக்குள் அறிவை தேடி
கையை இழுத்து
போகின்றது ஆசை
சொல்லுக்கும்செயலுக்கும்
தூரமாய் அலைகின்றது
வாழ்க்கை
கைக்கும் கண்ணீருக்கு
சொந்தமாய் நிற்கின்றது மனசு
தனிமை சில காலம்
துயரத்தின்தவமாய்
வீணையின் நரம்புகள் அறுந்த
மெளனத்தின் ஓசையாய் போச்சு!!!
தனிமை பல காலம்
வறுமைக்கு உரமாய் கைகள்
உடைத்தே கட்டுண்ட காயத்தின்
வலியாய் போச்சு!!தனிமை சிலகாலம்
தனிமைக்கு என்னை துணையாய்
கொடுத்து போகும் பாதையில்
கடமைக்கு என்னை உறவாய்
கொண்டுத்தே! கடந்தே போக
தனிமையை தந்தத உறவிற்கு
என்னையே அர்த்தங்களாக்கியே
என்னையே அர்த்தங்கள்
கேட்டது!! தனிமை பலகாலம்
வலியின் துடிப்பை நடிப்பாய்
கண்டவர்கள்
வாழ்க்கையின்சந்தோஷத்தை
தேடியேடியவர்கள் என்மீது
மீட்டிடா கோவத்தை
காட்டியே வெறுத்தவர்கள்
கூடவே இருந்திடா
தூரமாய் நடந்தே
வேடிக்கை பார்த்தவர்கள்
பரிசாய் கொடுத்தது!!
தனிமை சிலகாலம்
எனக்கு கண்ணாடியாகி
எனக்காக நானே
என்னை கைபிடித்துக்கொண்டே
நடந்தே பழகிட கற்றும் தந்தது!!
கைகள் பிடித்திட கரங்கள்
கையை நீட்டுகின்றது கறைகளை
மனதில் சுமந்துகொண்டு. கறைகளை
துடைக்கமுடியாமல் தடுமாறுகின்றது
நேசத்தால் இதயம்!!!
விக்கலுக்கும் தண்ணீருக்கும்
நடுவே ஒடுகின்றது உன் நினைவுகள்
தலையில் யாரேனும் தட்டாதவரை
ஓற்றையாய்!!!
உறவுகள் நிலைக்குமென்ற
கனவுகளே நிலைத்திடுகின்றது
கனவேடு உறவுகள்
தடமாறுகின்றதால்தானே
இரு மனங்களை
கட்டமுடியாமல்முன்னோர்கள்
அடையாளத்தை கண்டுபிடித்து
கட்டினரோ உறவாய்
விலகிட விக்கியவரையும்
ஓழுக்கத்தால் கட்டியதால் தான் குடும்பம்
விலகாமல் நின்றதுவோ
நன்றாய்!!!
தெரிந்தே செய்யும் தவரை
தெரியாது என்னும் புத்திசாலிகளே
தன்னை உயர்த்தி கொள்கின்றனர்
உன்னுல் என்னை
தொலைக்கும்வரை
என் காதல்
நியமென தோன்றவில்லை
எனக்கும் !!
என்னை நீ
கைவிட்டு போன நிமிடமே
உனக்குள்தொலைந்த
நிமிடம் உண்மையென
சொன்னது எனக்கும் என்
இதயம்
என்றும் நினைவுகள்
பேசும் உண்மை மொழி நீ
இருந்தும் நாம் தொலைத்த
காதல்
நமக்குள்புரியாமல்
கடத்தியே நம்மை தொலைத்த
கற்பனையின் உண்மை காலத்தின்
நியம்
என் தோல்விகளை
எனக்கே சொல்லி
சிரித்திடும் இதயங்களே
உங்கள் வெற்றியும்
நிரந்திரமில்லை
உங்களுக்கு கிடைத்தில்
ஓரு பகுதில்கூட
என் வெற்றியை
நான் தேடிடவில்லை
என் தோல்வி
இறைவன் போட்ட கணக்கு
உங்கள் வெற்றி
இறைவன் எழுதி வைத்த
வரம்
போராட்டாமே இருவருக்கும் பொது
என் கைகளேடு
அள்ளிச்சொல்லமுடியா
என்பூக்களை
என்பாதையெங்கும் தூவிசென்றேன்
என் பாதைபட்டு கடப்பவர்
என் பூக்களை
எடுத்துசொல்லட்டுமென
புரியாதவர் புரியாமல் பார்த்த
பார்வையால்பூக்கள் உதிர்ந்திட
என் பாதையெங்கும் முற்கள்
சிதறியதில் காயங்கள்
காலத்தின் சூழற்ச்சிக்குள்
காத்திருக்க காலத்தினை கடந்திட
கொஞ்சம் மெளனித்தபடி முற்களேடு
நான் காத்திருந்தேன்
இதயத்தின் உதிரம் முற்கள்
பட்டும் உதிரா ஒவியமாய்
காத்திருக்க காலத்தின்
கற்பனையும் கனவும் தேற்க
காலத்தை கேலியாய் பேசியே
என்னை கடந்தே சென்றனர் பலர்
‘ஆனால். இப்போ!!
மீண்டும் பூக்களை கைகள் நிறைய
அள்ளிவருகின்றேன்
தடையென விழுந்தகாலதிற்கும்
சோர்த்தே!!
என்தோல்விகளில் ஒருவகை
வெற்றியை நான் தோற்றபின்
அறிந்துகொண்டேன்
என்னை தேற்கடித்து அழவைத்த
என் தோல்விகளுக்கு நன்றி
என்னை எனக்காய் தந்தது
என் தோல்விகளே!!!
சுமையதன் வெறுப்பில் கானல்
தீசுட்டெறிக்க போராடும் வாழ்வில்
தனிமை இட்டதனை சுவைக்க
முதுமைக்கு கண்ணீரே ஊற்றானது!!!
ஒன்றைமரம் பட்டிட
பட்டிடும் மரத்தினை
ஒரக்கண்ணால் பார்த்தும்
பார்க்காமலும் போனவர்கள்
இப்போ !!!
பரிகாரசெய்திட
பக்கத்தில் வருகின்றனர்
பட்டமரமே பக்கம் வந்த
அவர்களை
இறந்த கண்ணால்பார்க்கின்றது
இந்த மாயை புரிந்த
இறைவன் புரியாமல்
பார்க்கின்றான் மனிதனை!!!
ஆனால் !!
மனிதனே மரத்தை
பெருமை படுத்துவதாய்
தன்னை பெருமை
படுத்தி மகிழ்கின்றான்!!!
திரும்பி பார்த்தேன் என்
திருப்ப முடியாத நாட்களை
புன்னகையில் குளித்தது
என் நிலாமுற்றம் அப்பாடி
இறைவன்
என்னிடம் வாங்கிக்கொண்ட
பரிசும் பெரிசு தான்
பரவாயில்லை தேற்றது
அவனிடம் என்பாதல்
தேல்வியும் புன்னகையானது
இன்று!!!
பெண்மைக்கு ஒரு துணிவு
பல பொம்மைகள் தூக்கியெறிவு
வாங்கிட பணமும் கையளவு
இதனால்
தலையாட்டிடும்பொம்மைகளும்!!
இங்கே அதிகம்
இருந்தாலும் இல்லையென்றாலும்
உறவு அதனாலேயே
சிலநாள் காதல் பெரிது
அம்மைக்கு அப்பனுக்கும்
இல்லை உரிமை இருந்தாலும்
சொல்லமுடியா உறவுகளாய்
வாழ்க்கை!!!
வாழ்க்கையினை
போன போக்கில்வாழ்ந்தவன்
தமிழனா !!தமிழ்
தமிழனென தேடுகின்ற தமிழுக்கும்
சொல்லுக்கும் செயலுக்கும்
தடுமாற்றங்கள் பிறக்கின்றதே
பல தேடலில் இன்று
ப.ல வரலாறுகளை
தேடி தேடி சொல்லும்
தமிழுக்கு!!
என்ன வரலாறு தமிழே
எதுகும் தமிழுக்கு
சொந்தமாய்தோன்றவில்லையென்றால்
தோன்றலின்அடையாலம் என்ன
தமிழே!!இல்லை
மனிதன்மனிதனாய்
பிறந்ததுவே உண்மையே
கடனாய் !!கடன் வேண்டி
தன்னைதொலைத்தவன்
காட்டுக்குள் எதுவாய் வாழ்ந்தான்
இறைவனும்
கடனெனில் இறைவனை
எதனிடம் கண்டான்
இவனிடம் தேற்ற அறிவும்
இப்போ பலதாய் சிதைத்து
காலத்தின் மடியில்
பலவடிவில் புதைக்கின்றதே !!
மனிதனை மனிதன்
எதன் அடையாளமாய்பார்த்தே
கண்டே வாழ்ந்தான்
ஓன்றில் மட்டும்
தோற்கவில்லை மனிதன் இன்றும்
மிருகத்தோடு மிருகமாய்
வாழ்வதில் மட்டும்
மனிதன் மனிதனாய் தெரிகின்றான்
இதில் மட்டும்
எந்த அடையாளமும்
அவனில் பிறக்கவில்லையே என்றும்!!!
காயத்தின் வலிகளை
அறிந்திடாதவருக்கு
கதை
அறிந்தவருக்கே இதயத்தில்வலி
அது எப்படி வந்தது என்பதை
ஆராயாமல்காத்திடமுனைபனே
அன்பின்சிகரம்!!!
நடந்திடும் பாதைகளே நம்
எண்ணங்கள்
நடக்கையில் நம்
பதங்களில்
முற்கள் பட்டாலும்
ஒன்றுதான் கற்கள் பட்டாலும்
ஒன்றுதான் வலிகள் என்னவோ
பாததிற்கே!!!!
பிடி கையுறுதி நிளம்
குறைகின்றது
என் மனத்திலும்
அச்சம் பிறக்கின்றது
என் கடமைகள் இன்னும்
காத்திருப்பதால்
வாழ்க்கை பயணத்தில் நடுவே
இறைவன் ஆசைகாட்டி ஏமாற்றிபக்கத்தில்
வந்துபோன மனிதர்கள்
மட்டும் நிழலாய் காரணமின்றி
ஏமாற்ற பட்டவள் மட்டும் ஏமாற்றத்துடன்
நியமெது பொய்யெது என புரியாமல்
வாடிவிழுந்தாள்காரணங்களே தெரியாமல்
இறக்கும் வரை என்வாழ்க்கை
சிக்கலை எதைக்கொண்டும்
சரிசெய்ய முடிவில்லையே என
இறைவனை
தேடிச்சென்றேன் நின்மதிக்காய்
அவன் விதியிலேயே இல்லையென்றான்!!!
நாம் தளரும் போது
அணைத்து கொள்ள
உண்மையாக ஒரு உறவு
கிடைத்தால்
அந்த கைகள் கூட
நமக்கு மருந்தேயாகும்
சோர்வுகளில் கூட ஒரு
உற்சாகம் பிறக்கும் தனாய்
கண்ணீரில் கூட
ஓரு நின்மதி கிடைக்கும் சுகமாய்
நம்மனதின் நம்பிக்கையில் தோல்வி கூட
ஏற்புடையதாய் தோன்றும் நியமாய்!!!
அதிகாலை காற்று மிஞ்ச
பக்கத்து வீட்டு அம்புயம்
இது புரியாமல்பரபரக்க
பக்கம் வந்து மாமன் காதுகடிக்க
இன்னும் கொஞ்சமென
தூக்கம் போர்வையிழுக்க
தலைக்குமேல்வேலையிருக்கு என்னப்பா
செய்கின்றாய்யென அத்தை குரலெழுப்ப
அச்சச்சோயென சோம்பல்
இருந்த இடம் தெரியாமலே ஒட
தலைகுளித்தேன் நானும்மெல்ல
வாழைமரம் தோரணம் மாலையேடு
மாமன் புன்னகையோடு
எனை நோக்க உதவிடவாயென
விழிகள் கெஞ்ச அறிந்தும் அறியாமலும்
நானும் பார்க்க
சாணமிட்டு அத்தை முற்றத்தில்
கோலமிட மச்சாள் நிறைகுடவைத்து
விளக்கேற்ற
பக்கத்தில் அடுப்பு வைத்து
விறகேடு மாமா சண்டையிட
எதையும் அறியதவள் போல் கொஞ்சம்
தேனீர் கிடைக்குமாயென கண்கள் ஏங்க
அருகே வந்த மச்சாள் அறிந்ததைமோல்
கேலிபேச எதையே
புரிந்ததை போல்மாமன்
யஎன்னை பார்க்க மெல்ல ஆனந்தம்
கிண்டலும்கேலியுமாய் தொடங்க
அத்தையேடு மாமா
பொங்களை பொங்க
சுற்றி நாங்கள்
இழந்ததை புதுப்பித்து மகிழ
அப்பப்ப என்னையும
மாமனையும் ஒன்றாய்
இணைத்தால் இன்று!!!
தொலைத்த வருடம் கூட இனித்தது தித்திப்பாய்!!
தைமகள் பிறந்ததால்
பிறக்குமே வழிகளென
தையவள்வரவிற்காய்
ஏங்கிய மனங்களுக்கு
தையவள் விலங்குடைத்து
கொடுப்பாளே நம்பிக்கை !!!
அங்கும் இங்குமாய் அழிவு
வறுமைக்கு ஏனோ தண்டனை
வழியதனை தேடித் தேடி
மண்ணேடு சண்டையிட்டு சண்டையிட்டு
தேடும் விடியலில் அழிவுகள்
அரிசியை உயர்த்தியது ஆகாயவிலையாய்
இருந்தாலும் உற்பத்தி செய்ய
இல்லையே வழிகள்
அதிகாலையெழுந்தாச்சி குளிந்து
கோலமிட்டு அடுப்பெடுத்து கையோடு
பானையுமெடுத்தே தண்ணீரு விட்டாச்சி
தீயேடு நீரும் நம்பியே சூடாச்சி
தேடிடும் கைகளுக்கு
அரிசியும் கிடைக்குமே இன்றாவது
பால்தேடி கனிதேடி காய்கறியும்
தேடிய கண்கள் சூரியனைமட்டுமே கண்டது
இன்றும் ஆதலால்
ஓற்றை தீபத்தையெடுத்து ஏற்றுகின்றோம்
நாளைய விடிவுற்காய்
தையவளே பாராபட்சமற்ற
உன் வரவில் எம் வயிறு நிறைந்திட
வழிசெய்வாயென!!!
ஏமாற்றும் மனதினை ஏற்றே ஏமாறும்
நம் மனதிற்கு. ஒரு உண்மை புரியாமல்
போவதே நம் நம்பிக்கையின் ஏமாற்றம்
பழயதை அழித்தே புதியதை
வரவேற்று இட்டு எரித்திடும்
தீச்சவாலையில் புறப்படும் புதிய நாளை
புதிதாய் வரவேற்று மகிழ்ச்சியை எழுதிடும்
கணம்!!மனதின்
அழுக்கினை அகற்றியே மனிதனாவோம்
உணவை கொட்டிவிட்டு
நான் திரும்பி பார்த்தேன்
அங்கே. ஒரு குழந்தை என்னை
ஏக்கத்தேடு பார்ப்பதாய். தேன்றியது
இல்லையென்பதை அனுபவித்தவள்.
செய்யும்முட்டாள் தனத்தை நினைத்து.
என்னை நானே கோவித்து கொண்டேன்
இருபதால்கொட்டிவிடும்
உணவுகளின் காலவரையை ஓரு
குழந்தைக்கு. கொடுத்திடும் தண்டனையின்
பாவமாய் எனக்கு ஏன் தேன்றவில்லை
இந்த முட்டாள் தனமே
நம்மால் பல உயிரில் மரணம்!!!
ஓருமுறை என் நிழலின் நியமாய்
தேன்றிடு என் அழுகுரலின் வலி
உன்னையும் எனக்காய் சிந்திக்க சொல்லும்
வனுமைக்கு பிறந்து
பசிக்கு பாத்திரமாகி
பாலுக்கு்அழுது
நேயினை உண்டு
வாழ்விற்குள் வாழ
வாழ்க்கையினை
வாழ்வாய் உடுத்தி
மறந்த மனிதனின்
மறவா தெருவிளக்காய்
ஓளியினை காண
கண்ணீரும்வெள்ளமுமாய்
மிதந்திடும் பிறப்பினின்
சாபத்தின் வரங்களாய்
கைகளின்அழுக்காகி
பாசத்தை தேடுகின்றோம்
ஒரு நாள் விடியலும்
நமக்காய் மறிடுமென
நம்பியே!!!
என் பாதையேரம் நான்
ஒன்றை ரசித்தால்
அந்த அழகினை
கூறாமல் சென்றதில்லை
என் வாழ்வோடு பயணிப்பவரை
என்றும்
கண்ணீரேடு வாழ்ந்தியதுமில்லை
என் கண்ணீரை
யார்மீதும் பாரமாய் ஏற்றியதுமில்லை
என் கண்ணீருக்காய்
ச யார் கனவையும் அழித்ததுமில்லை
நம்மால் தேற்றகனவை யாரே
யெந்திட செய்யும். போது
நமக்கே நம்மீது நம்பிக்கை தோன்றும்
நம்மிவரை நாம் ஏமாற்றும் போது
அச்சமின்றி மகிழ்ந்தால்
நம்ம. னசு
நமக்குள்இறந்து விடுகின்றது
நம்பியவரை நம்மால்
ஏமாற்ற முடியவில்லையென்றால்
நமக்குள் நம்
மனசு உயிரேடு வாழ்கின்றது
நம்மால் மற்றவர் வாழ்க்கை
காப்பாற்றபட்டால் நாம் மனிதம்
நம்மால் மற்றவர் வாழ்க்கை அழிக்கபட்டால்
நாம் மிருகம்
நமக்கு எந்தனை அறிவு என்பதை
நாமே முடிவு செய்கின்றோம்
பல நேரங்களில் நம்நிலமையை
நாமே மறந்தேவிடுகின்றேம்
நிலையில்லா மகிழ்சிகளை
நிலையென நினைத்தே
நிலைதடுமாறி விழ்கின்றோம்
வீழ்த்த இடத்தின் கற்களே
நம்மை நமக்கே
சொற்களாய்கோர்த்து
தருகின்றது அப்போது
நம்மை உணர்ந்தால்
நாம் நம்மை புரிந்திடலாம்
இல்லையெனில்
காலமுழுவதும் ஏமாற்களே
துணையாய் நிற்க்கும்!!
பொய்யின் சந்தோஷத்தில்
அடகுப்பொருளாய் நாம்!!
நமக்கே தெரியாமல்
உறவுமின்றி உரிமையுமின்றி
உலகத்தின் கண்களின் தூசாய் …
நம் விம்பம் விழுந்தே கிடக்காமல்
நிமிர்வோம்!!!
பெண்ணை மட்டும்
பந்தாடாடும்வீர்ர்கள்
அதிகம் தான் ஆனால்
பெண் தன்னைக்கோழையாய்
நினைக்கும் வனரத்தான்
பழியின் மைதானத்தின்
விளையாட்டில் ஆண்கள்
வெற்றியாளர்கள்!!
பெண் நின்று அடித்தால்
நின்றாட இடமற்ற கோழையாகி
கடசியில் நின்மதியுமற்றே அழைவார்!!!
நம்முடன் கூட வாழும் உறவிற்க்கு
எப்போது
நம் திறமை புரியவில்லையோ
அப்பவே
நாம் தோற்றுவிடுகின்றோம்
நம்மை
நேசிக்கும் உறவே
நம்மை
தேற்கடிக்கவும் செய்கின்றது!!!
மற்றவர் சொல்லும் பொய்களை
நமக்கான உண்மையென நம்பும்
உறவிடதான் நம் முதல் தோல்வி ஆரம்பம்