Wednesday 27 August 2008

தமிழ்

ஆதி அந்தம் தேடிய தமிழ்
ஆண்டவனுக்குப் பிடித்த தமிழ்

விதி வந்தும் அழியாத் தமிழ்
வீதியில் நின்றும் தொலைந்திடா
தமிழ்

அகதியாய் அலையும் தமிழ்
வறுமையிலும் மானம் காத்திடும் தமிழ்

எரியும் தீயில் எரிந்த தமிழ்
சாபலிலும் வீரமாய் பூத்திடும் தமிழ்


அஞ்சா நெஞ்சம் கொண்ட தமிழ்
யாரிடமும் தோற்க்காத் தமிழ்

வரலாற்று வலி கண்ட தமிழ்
வழி மாறிடா இன்பத் தமிழ்

உண்மைக்காய் வாழும் தமிழ் என்றும்
சரித்திடம் படைத்திடும் அன்புத் தமிழ்

Thursday 14 August 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தமிழர் எம் வாழ் நிலத்தில்
நெருப்புப் பொறியால்
குண்டு நெருப்புப் பொறியால்
அரசு கோலங்கள் போட!
எம் இருண்ட வாழ்விற்கு
ஒளியாய் குடிசைகளும் எரிய!

நித்தம் நித்தம் நாமும்
பாதுகாப்பிற்கு ஓரிடம் தேடி!
இரவு பகல் அறியாது
ஊண் உறக்கமில்லாது
உயிர் காக்க ஓடினாலும்
வானத்தின் கீழ் எம் வாழ்வு
என்பதால்.....கண் இழந்து
கையிழந்து காலிழந்து
இறக்காமல் இருந்தவர்
வலி போக்க மருந்துமின்றி
உதவிக்கு ஆளுமின்றி
சுற்றி எரியும் நெருப்பின்
மத்தியில்
ஏக்கத்தோடு தவிக்கின்றோம்!
காத்திட யாருமில்லா துயரோடு.............