Monday 5 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 பிடித்தவை பிடிக்காமல் போவதும்

பிடிக்காதவை பிடித்தவையாக

மாறுவதும்  நமக்கான காலத்தின்

மாற்றம் ஆனால்  ஆண்மை

பெண்மையை



புடிக்கவில்லையென    

கூறுவதை  சரியென ஏற்கும் 

மனிதனுக்கு ஓரு

பெண்சொன்னால்  மட்டும்

மன்னிக்க முடியா தவறாகின்றதே

ஏன்?

எதையும்  புரியாமலே 

மரணம்  வரை கூடவே  போயென

விரட்டும்  வாழ்வை விட்டு

பெண்மை தன்னையே நம்பியே 

 தனியே வாழபோவதும்

நாமே. 

பெண்மைக்கு கற்றுகொடுத்ததே

கற்றுக்கொடுத்து கற்றுகொடுத்தே

தன்னைதொலைக்கும் 

பெண்மையை உருவாக்கியே

இன்னும் கற்பனையிலே தேடிக்கொண்டே

வாழுவதே வாழ்வாகின்றது!!!

No comments: