Friday 2 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................



 கற்பனை கைகளுக்கு 

பாராங்கற்களை கொடுத்தவன்

கடினபாதையில்  தண்ணீர் இல்லா

கண்ணீர் தடாகம் வடித்தவன்

இல்லையென்ற ஒன்றை மட்டும்

இறுகட்டிவிட்டவன்

இருக்க நிலையில்  தனிமை தந்து

மரணத்தை நேசிக்க சொன்னவன்

இருப்பவர் இல்லாதவர்

  இயல்பை கற்க 

வறுமைக்கு என்னை விற்றவன்

வரைந்த பாதை   கசக்க

மனசை  கல்லாய் மாற்றியவன்

ஆசைகள் தொலைத்து 

தனக்காய்  தானே உண்மையாய்

நம்பிட செய்தவன்



நம்பிகையற்ற நிழல்களை

வடித்தே தன்னை

பற்றிய கைகள் கொண்டு

நம்பிகையாய் போராடி

வாழ சொன்னவன் எதிர்காற்றில்

நடைதளர்த்தாலும்  எந்தன் கைகளையே

தூணாய் நம்பி நடக்க செய்தவன்

எழுதிய விதியே நானும் பிறப்பும்!!!


No comments: