Saturday 6 September 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நெஞ்சதில் நெருஞ்சி்
முற்களை யாருரோ எறிந்த
வலிததந்தாய் பெண்ணே
எனக்கு!
அன்று என்ஆடையில்
விழுத மஞ்சல் கறைகள்
இன்று உன் ஆடையிலும்
விழுந்திடக்கண்டேன் பெண்ணே!

மனதிற்கு போட்ட கறுப்புத்துணி
உன் கண்ணீரால் நனைத்து
விழுந்தடி தாங்கிட முடியாது!!
யாரோ புதைத்த வாழையானவள்
நீரைத் தாங்கி நீரால் சொழித்திட
முயலுதடி !
அழுகிவிடா அளுக்கினை கொட்டிய போதும்!!!



கண்ணீர் அஞ்சலி

அழ்ந்த உறக்கத்தில் கற்சிலையாய்
உம் உருவம் கள்ளமின்றி படுத்திருக்க
பதறித்துடிக்குதையா எம் இதயங்கள்
உம்மையிழந்து

அள்ளி நிறையா நிறைகுடமாய் கண்கள்
உன் மீதுகொண்ட அன்பால்  நீரை
தழும்பி வடிக்குதையா உம்
பிரிவை ஈடு செய்திட முடியாது

ஆற்றிடா துயரமதை ஆற்றிட
ஆறுதல் தேடிய  எம்மோடு
உம் கரம்பிடித்து உம்நினைவுகள்
அலையாய் மேயெழுப்பி அணைத்து
தவிக்குதையா எம்மோடு

விழுந்தவேரில் தோன்றும் விருட்சத்தில்
நாளைய உம் கனவுகள் நிலைத்திட
கரம் கூப்பி தொழுகின்றோம் உம்
ஆத்ம சாந்திக்காய்!!!