Wednesday, 21 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சிந்தைக்குள் சிதைத்த 

சின்ன சின்ன கனவும் 

தொண்டைக்குழிவரை 

வந்து வந்து சென்ற

அழகிய  ஆசையும் 

இருந்தும் மறைந்த

கற்பனைகளும்  


எழுதமுடியா தோல்விகளால்

எழுதி முடித்த புத்தகம் போல் 

இருந்தும் வருகின்றது  

ஏழ்மையின்    ஏக்கமாய் !

விரைந்தே போகும்   காலம்

வரைய மறந்த     நாட்கள் போல் 

இருக்கும் உயிரை தேடி தருமே

விடுதலை  இயல்பாய்!

நடித்தே  இயலாதே  தேற்கின்றது

இதயம்

இல்லையென்றதை

இருப்பதாய்  எழுதும் விதியிடமே!!!



No comments: