Sunday 25 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தம்

கனவினை  தாமே

செதுக்கிடுக 

மற்றவர் கைகளில்

உளியினை

கொடுத்திடாது இருந்திடுக

உளியினை பிடிக்கும் கரம்

எப்பவும் நம்மை வென்றிடும் 

கரமாகவே கண்டிடுக!!

இல்லையெனில்

கனவு தடுமாறும் நம்மை போல்

தன்கனவைவெல்ல தானே

சிந்தித்திக்க   தன் கனவேடு

மற்றவரையும்பயணிக்க செய்க

தன்கனவிற்குள்யாரும் 

நிரந்தரமுமில்லையென

உணர்விற்கு சொல்க

கட்டிப்போட்டு கதைபடிக்க 

கனவு தேவையுமில்லயென

சிந்தித்து செயல் புரிக

காலத்தின்மாற்றதேடு தன் கனவையும்

சோர்ந்தே மாற்றிக்கொள்க

கனவிற்க்கும் வயதிற்க்கும்

தொடர்வுகள் இல்லையென்று

விம்பத்தை உடைதெறிக

கனவேடு

ஆசைகளை கலந்திடாமல்

கையெடுக்க 

மற்றவர் வார்த்தைகளையும்

கொஞ்சம் செவியெடுக்க

தேவையானதை அறிவிற்குள்

அடக்கியே  சிந்திக்க

தேவையற்றதை செவிவழிவிடுக

தன்கனவினை மற்றவர் விரும்பிடும்

வித்தைகளை  கையெடுக்க 

ஓடும்வேகத்தை 

ரசனையேடு  கைபிடிக்க

கனவை உன் ஆசைகாய் 

கட்டிபிடிக்காதே

ஆசையை வெளியேடு  கனவை

வென்றிட ஆசையைத்திடுக

மாற்றதின் குடையை வானவில்லாக்க

கனவு வண்ணங்களாகும் 

இதயங்களேடு!!!

இல்லையேல் கனவேடு போராட்டமே 

மாற்றதின் புள்ளியே

மனிதனின் வாழ்க்கையின் புள்ளி

சிந்தனையின் வரைவை உன்

கற்பனையில் செதுக்கு தானாய்

கனவு நிலைத்திடும் உன்னை சொல்லி

உன்னை நீயே கனவிற்காய்

யாரிடமும் கொடுக்காதே

பிச்சையிடும் கரங்களில் 

உன் கண்ணீர்துளியை விழுத்தாதே

உன் வலிகள்  உன்னையே

கேலியாய் பார்க்கும்

கனவை உருவாக்கிட தெரிந்தவனுக்கு

அறிவே சிறந்த ஜோதி!!!



No comments: