Wednesday 31 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


தெலைவாய் போனவாழ்கையில்
தொலைந்த அன்பில்
தொலைவாக உயிரைக் கட்டிப்போட்ட
காலம் நியத்திற்கும் நினைவிற்கும்
வித்தைக்காரனாய் விளையாடுது
இரண்டும் கெட்டு! இன்பத்தை
தொலைத்த  மனதிற்கு ஆறுதல்
எங்குண்டு எனத்தெரியாத இதயங்களோடு
விளையாடப் பலருண்டு!!
 துன்பத்தைவெல்ல சொல்பவரும்
கோடியுண்டு1!  அந்த  துன்பத்தை
உணர்ந்தவர்யாரேனும் உண்டா  உலகில்!!!

Friday 26 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அக்கினி குளியலிட்டு
தங்கமாய் தரணியெங்கும்
மின்னிஒளிர்கின்ற செந்தமிழே!
வணக்கம்!!

சுற்றிவட்மிட்ட சூறைக்காற்றை
தட்டிப் பறந்து எட்டுத்திசையும்
வண்ணம் சிந்தும் பைத்தமிழே!
வணக்கம்!!

பொங்கும் கடலில் கல்லாய்நில்லா 
 தெப்பமாகி  அள்ளியணைத்வர்
கரங்களில் தவழ்கின்ற குந்தைத்தமிழே!
வணக்கம்!!

அழிந்திடவந்தவர்  அழிவினைத்தந்தவர்
எரித்திட்டுசிரித்தவர் அத்தனை மனிதரையும்
தேடிச்சுவைத்திட செய்திட்ட தீந்தமிழே!
வணக்கம்!!!

தொலையும் காலம் தொலைக்காத வரமாய்
எமக்களித்த கலையின் சிறப்பில் சிறக்கும்
இசைத்தமிழே!வணக்கம்!!

எத்தனை செய்தும் எந்தனைகொடுத்தும்
மாறாக்கலாச்சரதினை கண்டு வியக்கின்ற 
மானிடரின் முன் வாழும்பண்பாட்டு தமிழே!வணக்கம்!!

எந்தனைமொழிகளில்  மாற்றினாலும்
அந்தனையும் கடந்து பாரதியின் கனவாய்
சிகரத்தை தொட்ட  இன்பத்தமிழே! அகரங்கள்
மாறதே சிறந்திட  வணங்குகின்றேன்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சின்ன சிட்டு வண்ணம்
கொண்டு எண்ணங்கள்
சிந்திட மாந்தேப்பு குயிலுக்கே
கூவிடச்சொல்லுகிறதே ஓ., குயில்
மௌனம் கொண்டு சிந்திடும்
தேனை மறந்தாலே! 

Monday 15 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

விடுதலைகாற்றின் உயிருக்கு
வித்திட சிம்மாசமிட்வர்களே!!
முற்பேக்கு சிந்தனையை தொலைத்திட்டு
முத்திபெற்றதாய் முப்பது பக்கம்
முப்பொழிவற்றிட விடுதலைகிண்ணமல்ல!!!
இனத்தின்  மனதை வென்று இனத்தை
வெல்ல விடுதையை உணர்வில் கலந்து
புத்தியில் வித்திட வழியதனை தேடுங்கள்!!!
 விடுதலைதீபற்றியே நிற்க!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஓரு அதிகர தேடல்
அநியாய கொடுமை
இனதிற்கு நியதியென
எழுதுகின்ற  உலகு1!  ஒரு
விரைவான கொள்கை
விடியலுகு தடையென
அறியாத இனம் தடைகளை
உடைத்திட முடியாது தவிக்கின்றார்
!!!
ஒரு அறிவான இனம்
தலைவணங்காத கொள்கை
தன்னிதிற்கு தடையென
புரியாது எதிர்கின்றார் !ஓரு
மனிடப்பிறப்பு மிருகத்தின்
தன்மை யாரையும்வாழவைத்திட
முடியாத நிலையானது உலகு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் இதயதின் துடிப்பிற்குள்
என்இதயம் இயங்கித்துடிக்கின்றதே
உன் இதயவலிகண்டு என் விழிகள்
அழுகின்றதே!!

Sunday 14 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றை பார்வைக்குள் ஓராயிரம்
அர்தங்கள் சொன்ன கண்கள்11
எட்ட நின்றவளை
கிட்டகட்டியணைத்து பல கதைகள்                   சொன்னகண்கள்!!
எல்லா யென்மத்திலும் என்னையே
காதல்செய்த கண்கள்1!!
எப்படி தொலைந்தாலும் என்னை
கண்டால் சிரிக்கும் கண்கள்1!
கிளிகள்மொழியை கனியாய்
என்னைத் தின்றகண்கள்!!!
பாராது சென்றாலும் பார்வை
யால் இதயத்தை திறக்கும் கண்கள்1!!
பேசாதமொழியனைத்தும்
என்னோடு மட்டு  பேசும்கண்கள்!!!
இல்லாத இருந்த கனவை எனக்காய்
மட்டும் கானுமும் கண்கள்1!!
எதைதொலைத்தாலும்
என்னை மட்டும் என்றும்தொலைத்திடாது
காத்து நிற்கும் கண்கள்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வண்ணதில் எண்ணங்களை
தொலைத்து எண்ணங்கள்
தேடியதில் கலைத்திட்ட
வண்ணதிற்கு எண்ணமென்ன
சிந்திக்க சொன்ன அன்னதிற்கு
கொடுத்த வண்ணம் என் சிந்தனைக்
தெரியாத எண்ணமாய்சிதைந்தால்
எண்ணதின் வண்ணதிற்குள் சிதையானேன்11

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

கண்மணியே!!!கருவிழியேர
கார்மேகம் மழையெனபொழியும்
இருவிழிகுளதிற்குள் விண்மீனாய்
சிரிக்கின்ற தேவதையே111

மொழியென வந்து கவியென
பொழிந்து மடிதனைில் சுமையென
வீழ்ந்து சுகமாய் உறங்கி
சிரிக்கின்ற தேவதையே11

மார்வுதனில் உடைந்து
இதயசுவர்தனில் மோதி நித்தம்
அலையெனயெழுந்திடும்  நினைவுகளில்
சிரிக்கின்ற தேவதையே11

இன்பங்கள் தந்து தாய்மை
துன்பத்தையுடைத்து மலராய்
மலருக்கும் புன்னகை 
சொல்லி புன்னைக்குள்
சிரிக்கின்ற தேவதையே111

சிந்தைகலக்கி சித்தம் சிதைந்து
உன்னை மொத்தம் இழந்து
தத்தி தவிக்கும் மனதிற்குள்ஞ
ஒற்றை  ரோசாவாய் 
 என்ஆத்மாவிற்குள் நித்தம்
சிரிக்கின்ற  தேவதையே 111உனக்காய்
காத்திருக்கிறது என் இதயம்!!!

Saturday 13 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

எட்டெடுத்து வைப்பதற்குள்
எழாதே தடுக்கும்  கை
தத்திதத்தி நடக்கையில்
சொல்லாலே தடுக்கும் கை
தனாக நடக்கையில்
சதியாலே தடுக்கும் கை
தலைநிமிர்ந்து நடக்கையில்
தலைமறைவாய் தடுக்கும்  கை
எதிர்த்து நடக்கையில்
மானமாய் தடுக்கும்  கை
வீரமாய்  எழுகையில்
நம்பிகையால் தடுக்கும்  கை
எதிரியாய் எழுகையில்
பெண்மையாலே தடுக்கும்  கை
என்று புரியாதே வலையாகுது
புதிராய்  கைகள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்னின் கண்மணியாகி
கண்ணனின் ராதையாகி
பாரதியின் கண்ணம்மாவாய்
முடிகின்றது வாழ்கை!!!

Thursday 11 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

வார்தைகளை வாங்கி
வாக்கியம் செய் வார்த்தைகளை
வாங்கி  வாழ்கையமைக்காதே!!
சுமைக்கும் சுகத்திற்கும்
பாலமின்றி வீழ்ந்திடுவாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விழிப்பிற்கு தெரியா வலி
கனவிற்கு தெரியா சுமை
உறக்கதிற்கு தெரிகின்றது
உயிர் இருப்தைவிட 
உறங்கிக்கிடப்பது மேல்லென்று

Tuesday 2 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் தாத்தா
 தன்னை வருதியதால்
என் அப்பா
 சுகமாய் வாழ்ந்தார்
என் அப்பா
 சுகமாய் வாழ்ந்தால்
என் அண்ணன்
 சோம்பேறியானான்
 என் அண்ணன்
 சோம்பேறியாய்யிருந்ததால்
என் மகன்
தனக்காய் வாழ்ந்தான்
என் மகன்
 தனக்காய் வாழ்ந்தால்
 என் பேரன்
 சுயநலவாதியானான்!!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

என் பாட்டிபொய்யோடே
வாழப்பழகியதால் என்
அன்னை  பெய்களை
சமாளிக்கத்தெரிந்தேயிருந்தால்1!
என் அன்னை    பெய்களை
சமாளித்ததால் என் வாழ்கை
பொய்யால் அழிந்து போனது!!
 ஏமாந்து போன என்னால்
என்  மகள் பொய்களை
எதிர்கின்றாள் ! என்மகள்
பொய்களை எதிர்ப்பதால்
என் பேத்தி பொய்களை
வெறுக்கின்றாள் என்பேத்தி
வெறுப்பதால்  இல்லறம் பொய்யென
ஆனது  1!!
 இந்த பெய்யான
உலகத்தில் மெய்யில்லா உடலுக்காய்
எந்தனை பொய்கள் மெய்யாகவே1!!

Monday 1 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பைத் தேடாதே
அடைபட்டுவிடுவாய்
அன்பை கொடுக்காதே
ஏமாந்திடுவாய்!!
ஏனனில்யாரிடமும்
அன்பு சுயமாய் இல்லை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இல்லத்து வேலைக்காரியாய்
இல்லறதில் இருபவளுக்காய்
எப்போதும் ஒரு சொல்
சும்மாயிருபவள் !!!

இவள் செய்யும் வேலைக்கு
கிண்டலும் கேலியும்
 எப்போதும்சம்பளம் !!!

அப்பப்ப அவர் அவர்கொடுக்கும்
பரிசுபொருளுக்காய்
எப்போதும் சுமப்பதாய்
 வெறுப்பும்திட்டும்!!

 நித்தமும் அவர்களுகு்காய்
இந்தனையும் தாங்கி வாழ்ந்தாலும்
கொடுமைக்காரியாய் பட்டமும்!

எப்படி வாழ்வதென்ன சிந்தித போத
கல்லாய் இருந்துவிடு என்றது மனசு!!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இல்லாறதை  காப்பற்றுவதாய்
 இல்லாதபொய் சொல்லாதே
என்னாலும் 1!
 உன்னால என்னாலும்
 அவமதிக்கபடுவதை எங்கால
சொன்னாலும் திருந்தாத
எண் போன்றோர்  என்னாளும்
காட்டு வெறுப்பே 
பேதைகள் இல்லாத அன்பை
 இருபதாய் எண்ணி
அன்னியன்   இதயதிற்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
இல்லறம் உடைத்து!!!
 உன்னாலே நடக்கும் தவறை
என்னாலும் மறைத்து 
தவறை சொன்னாலும் 
சொல்லுவதைக்கேளாதே
என்மேலே சொல்லும் தவறை
இன்னாலே திருத்து   இல்லறதிற்குள்!!
அன்னியன் கொல்லைபுறம்
உன்வாசம்  மறைத்து தன் வாசம்
வீசிட முதல் !!!