Saturday 5 June 2010

உதயம்.....

துயிலாத உறக்கம் விழிகளில்
கரையாத  களையாத
இரவைக் களைத்து விடியாது
பிறந்த என் பிறவாத உதயமோ! 


என் புலராத பொழுதிற்குள்
இருளாகி விளையாடி
புரியாத வாழ்வாகி
புதிரான விடையாகி
விதையாகி உதயமாகி
உணர்வாகி  என் மனதோடு
மோதி சொத்திட்ட உதயமோ!


என் நெஞ்சாகி கொஞ்சம்
அழித்த நினைவாகி
கண்ணீராகி முற்தரையாகி
முள்ளாகி கல்லாகி கால்வலியாகி
கதையாகி கருணையில்லா பெண்ணாகி
கலையிழந்து ஒய்வின்றி
ஒய்ந்திட்ட இதயமான பின்
எடுத்தெரித்து ஒளியிழந்து
இருளாகி சிரிப்பதேனோ....................