Sunday 8 March 2009

பிறகட்டும் விடுங்கள்......

பழங்கதையின் உயிரென
சிலையெடுத்து
பத்தினியென வடிவமைத்து
உணர்வு கொடுத்து உணர்வு
மறுப்போரோ!! ஒரு முறை
அவளையும் பிறக்கவிடுங்கள்
குழந்தை முதல் கிழவி வரை
சரித்திரம் தேடி சரித்திரம்
படைத்து சரித்திரம் கொடுப்போரே
ஒரு முறைவிடுங்களேன்!! அவளும்
பிறந்து அறிந்து அறியாமை அறிவை
அரவோ அகற்றி பிறக்கட்டும்
ஒரு முறை........
திசைகள் பல கடந்து
திசையின்றி வாழ்வதாய்
திசைகள் காட்டடி நிற்பவரோ!!
ஒரு முறை திறக்காத உங்கள்
கதவை திறந்திடுங்கள் தவரான
கதவையும் சரியாக திறந்து
ஒரு முறை அவளும் பிறக்கட்டும்
இருளுக்கு ஒளியாய்
குடும்பத்து விளக்காய்
ஒளியின் ஒளியாய் பிறந்தவளை
ஒளியின் நிழலென எண்ணி
நிஜம் மறந்து கதைப்பவரோ!!
ஒரு முறை தீபமாய்
எண்ணி எரியவிடுங்களேன்
அவளும் இவ்வுலகில் ஒளிரட்டும்

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன் நெஞ்சத்து காதலாய்
மண்ணை நேசித்து
தன் நெற்றி திலகமாய்
குருதியை நேசித்து
தன் வேலியின் தாலியாய்
விசத்தை நேசித்து
தன் அழகுடலின் உடையாய்
வெடி மருந்தை நேசித்து
தன் கைகளின் வர்ணப் பூசைப்போல்
ஆயுதங்களை நேசிந்து
தன் கருவின் உயிராய்
தன் மக்களை நேசிந்து
பெண்மை புயலாகி
மென்னை கல்லாகி !
ஒவியமாய்
தன் உணர்வை விடுதலையாக்கி
எல்லையில் நிற்கின்றாள்
எல்லாம் தன் உறவென எண்ணிக்கொடு
தன் உயிரைக் கொடுத்து
மண்ணுயிரைக் காக்க..........

Thursday 5 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தாயகத்தின் தென்றல்
காற்றோடு காற்றாய்
காற்றின் திசையெல்லாம்
காற்றாய் கலந்திட்ட என்
உறவின் உயிர்க் காற்றே!!
உங்கள் மூச்சின் வீசை புயலாக்கி
ஒரு தரம் எழுந்து வீசி
மண்ணிலிருந்து எதிரியை
அள்ளி வீசி எங்கள் தேசம்
காத்திட !! ஒரு தரம்
எழுந்து வாருங்கள் எங்கள்
தேசத்திற்காய் நீங்கள்

எங்கும் தீயாய் எரிந்திடும் தீயணைந்து
தீமையின் கொடுமை நிறுத்தி
மண்ணில் இரத்தம் துடைத்து
யுத்தத்தின் தாக்கம் மாற்றி
உறவிற்கு சற்றோ ஒய்வு
கொடுத்து இளைப்பார செய்திட
நீங்கள் மீண்டும் புயலாகி
எங்களுக்காய் எழுந்து வாருங்கள்
இந்த தேசம் காத்திட.......எங்கள்
உறவை காத்திட..............


Monday 2 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

யுத்தத்தின் கையில் உறவு
பரிதவிக்க காட்ச்சிகள்
கண்களைக் குளமாக்க!

ஏன் இதுவென்று சற்றே
மனம் உடைய! உடைந்த
மனதை தட்டியெழுப்பி!!

எழுந்த உள்ளத்தை உறவாய்
இணைந்து !இணைந்த உறவின்
கரங்களை இறுகப் பற்றி!

பற்றிய கைகளுக்குள்
பதறிய நெஞ்சங்களை
சிதறாது அணைந்து!

அணைந்த உறவோடு
காயத்தால் தவிக்கும்
உயிரையும் தவிக்காது
அள்ளியெடுத்து!

எரிமலையாய் !!!!
தமிழ் எழுகின்றது!
மனதின் உறுதியால்
உயிரின் உறுதிவரை !

எதிரியின் எதிர்ப்பை
எதிர்த்தே நின்று உலகின் வெறுப்பை
உடைந்தே உரைத்து தமிழை
உதிராப் பூவாய் காக்க!!!