கால்களில் அலைமோத
கடல் நீர் உப்பிற்குள்
கண்ணீர் துளி விழுகின்றது
உப்பாய் !!
அலைமேல் நினைவாய்
அலைமோதும் நினைவிற்க்குள்
கடனாக கேட்ட ஆசைகளை
அலையேடு
போட்டேன்மீண்டும் மீட்டிட கைகள்
இல்லை என்பதால் !!
என்னைப்போல்
பூவாகிக்கருகிய ஆசைகளை
கைபிடித்து நடக்கா
கைவிட்டு கைபட்ட
காயங்கள் நிலையாக
நின்றே சொன்னதால்
மெளனமாய் திரும்பியது
மனசு!
ஊமையான விழியின்
ஓவியமாய் போன ஆசையை
கற்பனைகளிடமிருந்து கடனாய்
வாங்கியதை கற்பனையிடமே
கொடுத்திட்டே அமதியாய்
செல்லுது மனசு !
அதன் பின்னே நானும்
அமைதியாய் செல்கின்றேன்
வாழ்க்கையின் கைபிடிதூரம்
மரணம் காத்திருக்க கைவிட்ட
மனசைப்போல் !
என்னைக்கையெடுத்து
கைபிடித்து நடந்திடாமல்
ஊனமாய் போன ஆசைகளில்
தடுக்கிவிலுத்திடமால்
விலகியே போகின்றேன்
மனசைப்போல் !
விதியிடமும். மதியிடமும்
மன்னிப்பை கேட்டுக்கொண்டு
நிழலின்றிய பாலைவனம்
நியமென சொல்லியமனசை
நம்பி
என் மனசைபோல்
நானும் போகின்றேன்
தன்னம் தனிமையை
நேசித்தபடி!
இவ்வுலகின் விந்தையில்
சிக்கி தவிக்காமல்
விலகியே செல்கின்ற
என் மனசைபோல் நானும்
செல்கின்றேன் ஊனமாய் !!!

No comments:
Post a Comment