Saturday 31 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கால்களில் அலைமோத 

கடல் நீர் உப்பாகி கண்ணீர்

துளி விழுகின்றது அலைமேல்

முடியாத நினைவிற்க்குள்

கடனாக கேட்ட ஆசைகளை

அலையேடு போட்டேன் 

என்னைப்போல்

பூவாகியே கருகிய ஆசைகளை

கைபிடித்து நடந்தே பட்டகாயங்கள்

நிலையாக நின்றே சொன்னதால்

மெளனமாய் திரும்பியது மனசு

ஊமையான விழிகளில் 

ஓவியமாய் போன ஆசையை

கற்பனைகளிடமிருந்து கடனாய்

வாங்கியதை கற்பனையிடமே

கொடுத்திட்டே  அமதியாய்

செல்லுது மனசு 

இதன் பின்னே நானும்  

அமைதியாய்  செல்கின்றேன்

வாழ்க்கையின் கைபிடிதூரம்

மரணம் காத்திருக்க கைவிட்டு

போகின்றேன் என்னை!!!

கையெடுத்து கைபிடித்து நடந்திடாமல்

ஊனமாய் போன ஆசைகளில

தடுக்கிவிலுத்திடமால்

விலகியே போகின்றேன் 

விதியிடமும். மதியிடமும்

மன்னிப்பை கேட்டுக்கொண்டு

நிழலின்றிய பாலைவனம்

நியமதனை சொல்லியதை நம்பி

என் மனசைபோல் நானும் போகின்றேன்

தன்னம் தனிமையை நேசித்தபடி

இவ்வுலகின் விந்தையில்

சிக்கி தவிக்காமல் விலகியே செல்கின்றேன்

என் மனசைபோல்!!!!




No comments: