காதலால் வந்த காயத்தால்
தோற்ற மோதலால் வந்த
ஊடலால் கொண்ட கோவத்தால்
வந்த வாதத்தால் பெண்ணோடு
தொலைத்த வாழ்வை மீட்டிட
காயத்தை ஆற்றிட தேற்றிட
மீண்டும் வாழ்ந்திட தேடலாய்
வந்த பெண்ணின் கூடலான பாசம்
காதலாய் மாறி மாற்றமாய் தோன்றி
மாற்றமில்லா ஆணையும் மாற்றுமென்றால்
காதல் கொண்ட கோபத்தால்
வந்த மோதல் தான் வேண்டுமா?
கூடலான கேடிக் கணக்கில்
தேடலாய் தொலைந்த ஆணைனின்
காதல் மொழி வீசும் வார்த்தையும்
வையத்துள் எந்த பெண்ணையும்
மோஷமாய் தேற்றி அழித்திடும் போது
இங்கே யார்மீதுதப்பு சொல்வாய்?
மீண்டும் மீண்டும் பூத்திடம் காதல்
மாற்றமே இல்லாமல் தேடி
வந்திடும் மனிதா நீ தோற்றாலும்
வீணோ வாட்டமாய் பேசி
வார்த்தையாய் தொலைந்து
உணர்ச்சியாய் அழிந்து
ஜடமாய் வாழ்திட காதலில்லாத் தேசமெது?
மனிதனோடு காதலும்
பெண்மையோடும் வாழ்வும்
பூமியோடு ஈர்ப்பும் உள்ளவரை
உள்ளத்தை எங்கு தொலைத்தாலும்
உன்னையோ தொடரும் காதல்
காமந்தை வென்று காவியே அனிந்தாலும்……………..