Wednesday 28 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அழிவுகள் இழப்புக்கள்

சொல்லி ச்சொல்லி ஒரு

கூட்டம் தன்னை வாழவைக்கு 

பெண்னே உன்னை கைதியாக்கி

இழப்பை ஆயுதமாக்கி

தன்னை முன்னேற்றுது  ஒரு 

கூட்டம்

விடியல் தேடுவதாய்

 விடுதலை பேசிப்பேசி  

விமர்சணத்தால்

உன்னை அடிமையாக்கி 

தன்னை  முன்னேற்று ஓரு

கூட்டம் 

உன்னைவிட உயர்ந்தவர்

இல்லையென்பதால்   உன்னை

வைத்தே நாடகமாடி  தன்னை

முன்னேற்று ஓரு கூட்டம்

தமிழ்தேசம் தமிழ்பற்று

பேசி பேசி  மண்ணில்  வென்ற

மரணத்தை  ஆயுதமாக்கி 

 ஆடம்பரத்தை  சொந்தமாக்கி

ஆடம்பர வாழ்க்கை  தேவைக்காய்

அங்கே. இங்கே  நல்லவர் போல் 

பாசாங்கு  காட்டுது ஓரு கூட்டம்

தன் குடும்பம் தன் வாழ்க்கை

உயர்வடைய அழிவுமில்லை  

இழப்புமில்லை  தினமுமில்லையென

யார்யாரிடமே பெருமைபேசி

நடிக்குது ஓரு கூட்டம்

தேசபற்றாய் இருப்பதாய்  இவர்களை

போல்  இருபதை விட

நம்மிக்கையின் விதையாய்

எழுந்திடு  உன் பின்னேயும்

வருமே கூட்டம்!!

விடுதலை  தேடிய  இழப்பின்

மண்ணில் ஒரு விருட்சமாய்

எழுந்திடு  வெட்டிட வாளும் வாலும்

வரும்  கண்ணீர் துளிகள்  

இல்லை வாழ்க்கை அடைபட்ட

இடத்திலேயே 

எழுந்திடும் திறமையே  வெற்றி

அந்தவெற்றியேடும் வருமே 

ஒரு கூட்டம்

உயிர் பயந்தேடி

  உன்னை கேலிபேசும்

மனிதனுக்கில்லை  வலிகள் 

உன்னை அழவைத்துக்கொண்டே 

 உயரும்மனிதனிடம் 

இல்லை உண்ர்வு 

உன் பயணத்தை உன் விருப்படி

அமைத்திடுக  

அழிவின் பின்னே

உயர்ந்த பல சரித்திரம்  

கண்முன்னே

புதிய வரலாறு படைத்திடுக!!

கூட்டமும் கைதட்டி கூட்டாமாகும்

உன்னோடு!!!

No comments: