Friday 26 September 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தமிழர் எம் இருள் போக்கிட
உம் உடலையே மெழுகாக்கி
உம் உயிர்த்திரிக்கே உண்ணா
எண்ணை விட்டு எமக்காய்
எரிந்திட்ட தியாகனே!

 எம்உயிரிலும் மேலாத்தோழனே!!
மண்ணில் மறைந்த உம் உடல்
எங்கள் லட்சிய தீபமாய்
எப்போதும் எமக்குள் எரித்து
கொண்டேயிருக்கையிலே!

எம் உலகம் எம்மை
சுற்றி சுற்றி வேட்டையாடி
விளையாடி பார்க்கையில்!
அவர்கள் விளையாட்டை
எதிர்த்து எரிக்கும் தீயாய்
உம் பாதையில்  நாம் வளர
எம் கண்ககளின் ஒளியாய்
மீண்டும் மீண்டும் எழ வேண்டும்
உம் லட்சியம்........