Sunday 30 December 2012

வர்ணமழை


இயற்கையில் ஒர் விந்தை
மனிதனுக்கு புரியா விந்தை
ஆதவன் அள்ளியொடுத்தவிந்தை
மேகமதிற்குள் ஓடும் விந்தை
தூறலாய் சிதறும்விந்தை
கண்ணை கட்டியாலும் விந்தை
சிந்தையை நனைக்கும்  விந்தை
செய்தவருக்கு புரியா விந்தை
சீற்றம்கொண்டதால் வந்த விந்தை
அழித்திட  துடிக்கும் விந்தை
அழிந்தவர் சிரிக்கும் விந்தை
அழிந்தழித்து மாற  விந்தை
மனிதனக்கு
அழிவை காட்டும் விந்தை
இறுதியாய் விந்தையாய்
வந்த விந்தை
திருத்திட விளையாடுது
வானவிலின் வர்ணத்துறலாய்..........


சிதறல்................

மலரோடு ஒர் கோவம் இறை
கொண்டதேனோ
உதிர்த்த போதும் சுறாவளியாய்
சுழட்டுவது ஏனோ
பட்ட காயத்தை ஈட்டியால்
குத்தி கிழிப்பதேனோ
உடைந்த மனதோடு இதயமில்லா
விளையாட்டு கொள்வதோனோ
கனவில்லாகண்களுக்குள்  கனவாய்
வந்ததேனோ !!!கவிதையாய்
கவியாய் படைத்ததேனோ
கவிதையோடு ஒர் காதலை
உணர்வோடுகலந்ததேனோ 
வெள்ளை மனசுக்குள் மீண்டும்
கொள்ளை ஆசைகளை 
கொலுவாய் வைத்ததேனோ
 கொண்டாடிடா கொண்டவனை  
கொண்டாடி செய்ததேனோ 
கொண்டுகின்ற நீராய் என்றும் 
கண்ணீரொண்டை  கொடுத்ததேனோ
கற்பனை வாழ்வுக்குள் முற்றுபெற்றிடா
புள்ளிகளை இட்டதேனோ
இடரோடு வாழ்கையோனோ
முடிவில்லா துயரமேனோ
இலலாத கற்பனைகளை என்னோடு
சிதறியது தான் ஏனோ 
சிதறாத உயிராய் என்னை சிதறடிப்பதும்
ஏனோ.......




எதற்கு இது இறைவா...............

ஆண்டுதோன்றி மறையும்
ஆண்டாண்டு புதிய புதிய
எண்ணமும் மீண்டும் தோன்றி
மறையும் !!நடப்பது கொஞ்சம்
இழப்பது கொஞ்சம் இருந்தும்
இருபதை நினைத்து நடந்ததை
மறந்திடத்தேன்றும் !!ஆனாலும் 
மாறதே நடந்திடும் யாவும்
 ஏக்கங்கள் கூடும் எதிபார்ப்புக்கள்
பெருகும் காத்திட ஓர் இதயம்
தேடும்!!! கிடைக்காது போனால்
எல்லாமே அழிந்ததாய்  நிற்காது
 என்னாலும்  வாடும் 
கருணையுள்ள மனிதனை தேடும்
கருணையற்ற செயலையோ
கருணையோடு செய்யும்
வீராப்பாய் உறுதியோடு
எழுதிடதுடிக்கும் மீண்டும் ஓர் 
தோல்வி  வந்து  அந்தனையும் 
சேர்த்தேயுடைக்கும் எது நடந்தாலும்
 இதுவோ வாழ்வாய் தேன்றும்
மீண்டும் ஒர்பிரிவு எதற்கொன தெரியாது
கூடவே தேன்றும் கருணையற்றவன்
இறைவனாய் போவான்!!!!!!¬

Tuesday 4 December 2012

வாமன்னன்

எதுகும் சொல்லாது
என்னவென்றும் சொல்லாது
உள்ளத்தை பிழிந்து நீ
எதற்கு மாமா உருப்படியி்ல்லா
ஆட்டத்தை ஆடுகின்றாய்!!!

விளையாடிட  நானிருந்தும்
உன்னோடே சேர்ந்திருத்தும்
உனக்காய் வாழ்ந்திருத்தும்
 தவமாய் நினைத்திருத்தும்
ஏன் மாமா தனித்தே ஆடுகின்றாய்

அடி யே !!பைத்தியமே
 படிக்காத பட்டிக்காடே
பகுத்தறிவும் பக்குவமும்
பதவியோடு உள்ளவளுக்கே
சொந்தமொன  அருக்கானி தேடினீ
ஏன் மாமா புதிதாய் அழைகின்றாய்!!

பாதையோடு போறவளை
பாதியிலே வழிமறித்து பாதியிலே
நின்ற உறவை  பாதையிலே
 சொல்லி  வீனே  ஓர் நாடகம்
எதற்கு மாமா போடுகின்றாய்!!

சொத்திட்ட உணர்விற்கு ஒரு
துளிநீர்  போதும் மாமா!! உன்னை
என்னைப் பிரித்திடும்காலம்
எப்பவும் வானும் மண்ணும்
தான் மாமா !!
உன்னை யோ எண்ணி
என்காலம்  முடிந்தாலும்
யார் காலத்தையும் அழிக்காதே
என் மாமா!!

உன்னையோ நம்பியவளை
உறவாக்கி ஒதுக்காதே
ஆசையில் தோல்சாய்பவள்
ஆசைகளை வேசமிட்டு காக்காதே
வேதணையை க் கொடுக்காதே
பொய்யான மனிதனாய்போர்வைக்குள் ஒழியாதே !!
 வீரத்தோடு நீருந்தால்
முற்களிலும் என் முகவரிகிழிந்திடாது
இருக்கும் மாமா...........................

எதிர்பார்ப்பு

நிமிடங்கள் கடந்து
வாரங்கள் கடந்து
மாதங்கள் கடந்து!!!
கடந்து கடந்து வந்திட துடிந்திடும்
புதியதோர் வருடமே!!
உன்னை வரவேற்க மனிதன்
காத்து காத்து கனவுகளை
கண்ணுக்குள் பதித்துக்கொண்டு
காலத்தோடு சண்டையிட்டு
சண்டையிட்டு  அழித்த
உயிர்களை எண்ணி எண்ணி
புதியதோர் சண்டையிட
யுத்திதனை வகுத்துக் கொண்டுகூடிபேசி
நடிப்பதனை
பார்த்து பார்த்துவெறுத்திட
விண்ணுக்கும் மண்ணுக்கும்
வந்திட்டதே ஓர்  கோவம்
அணுவின்றி ஆயுதமின்றி
தயராகுது மனிதனை வென்றிட
ஓர்  யுத்ததிற்கு !!! இயறகையாய்
கொடுத்ததெல்லாம் சேர்க்கையாக்கிய
மனிதன் மட்டும் எதற்கு இயற்கையாய்
என்று எண்ணியதோ !!இயற்கையே இப்போ
யுத்தை நடத்திட துடிக்கின்றது !!
 சந்தோசம் பாதி சந்தோகம் பாதி
சங்கடந்தோடு அழிவிற்குள் மனிதனை
அந்தரதில் நிறுத்தி  மரணத்தை நோக்கி
 நகரது பூமிக்கிரகம்
மரணத்தை கொடுத்து கொடுத்து
திருந்த முடியாமனிதனை தன்னையழிந்து
திருந்திட துணிந்ததுவே..,,,,

Saturday 1 December 2012

வலை

மெல்ல மெல்ல ஊற்றிடும் உணர்வு
மெல்லமெல்ல  நகருது தனா
சொல்ல சொல்ல வளரும் உணர்வு
சொல்லாது அசையுது தானா
என்னடா கொடுமையிது
பெண்ணவளுக்கு!!

பெண்ணினமானதால் 
கிடைத்த சாபமா
இருப்பன் கொடுத்தசாபம்
இறந்தவன் கட்டிய சாபம்
அடுதவன் கண்களை தொட்ட சாபம்
பெண்ணினதின் வார்தைகள் கோர்த்து
  கோர்த்து விளையாடுது  சாபமாய்
ஆண்ணினதின் அலட்டல்களுக்குள் சிக்கி
கொண்ட சாபம்ங்களாய்!

எல்லாம் தாங்கிதலைநிமிர்த்து
நடக்கையில் தடுக்கிவிடும் சாபம்
 பேதையவள் போதைக்கென சுற்றிய
இவ்வுலகு வரையுதுசாபமாய்!!
எண்ணி எண்ணி தேற்றவள் 
எடுத்து விளையாடிவிதைத்தவன்
விதியொன போகையில் சரியொன
சொல்லும் விதியின்சாபம்
பொண்ணிற்கு மட்டும் தான் உண்டோ
நம்மிடையில்  !!!
எதற்கு தான் இந்த
விவரிப்பு அலட்டல்கள்!!!

 நான் நீயும்ஒன்றொன்று
சொல்லி சொல்லிஅந்தனை
அசிங்கங்களை அள்ளிதெளிக்க
அங்கங்களாய் காட்டி நிற்கும்சாபம்
விதியொன சொல்லி தள்ளிவைத்து
அசிங்கங்களை அரங்கோற்ற
சாபமாய் வந்த பெண்ணின் சாபங்களானதேன்!!
கோவிகளில் பெண்ணாய்  குடுபத்தில் பெண்ணாய்
சிலையுருவில்பெண்ணாய்
அடுப்படியில் பெண்ணாய் ஆசைகளுக்காய் பெண்ணாய்
வேண்டுவதும்பெண் தேடுவதும் பெண்
துணைக்கும் அவள் துறவிக்கும் அவள்!!!!



Saturday 17 November 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அழகோவியம்


வண்ணங்களை கட்டிக்கொண்ட
   மலர்கொத்து
 சிந்துகின்றது எண்ணங்களை
தொட்டெடுத்து!!
 தென்றலுக்கு தூதுசொல்லும்
  வாசமலர்
 தென்திசைக்காற்றுக்குள்
 தெமாங்கு பாட்டெடுக்கும்
இசை மலர்
வண்டுக்குப்புதுராகத்தைத்
தொட்டுசொல்லும்  வர்ணத்தாளம்!!
வஞ்சணைக்குள் சிக்காத புதுமலர்
எண்ணத்தால் தொட்டவுடன்
ஒட்டிக்கொண்டு 
உயிருக்குள் ஒளியாகுது  வசந்தமலர்
 மழலை வர்ணத்தில் விளையாடும்
சின்னமலர் !
 மொழியின் நாத்தால் ஆடும் அழகு மலர்!!
கற்பனையில் தொட்டுவிடும்
 ஸ்ரத்தின் தந்திக்குள்  நடந்திடும்
கவிமலர்
கருணையுள்ளவர் கைளுக்கே
இசைமலர்
கொட்டமடிப்பர் பார்வைக்குள்
சிக்கா வாசனை மலர்
முயற்சியுள்ளவர் கைகே
மலர்க்கொத்தாகும் வைரமலர்
கொட்டும் மழையில் கரையாவாசமலர்
சுறாவளி தொட்டிட்டால்
வளைந்தாடும் நாணல்மலர்
சுட்டிடும் நெருப்பிலும் மறையாத
உண்மைமலர்
புரிந்தவர் உள்ளதில் நின்மதிமலர்
புரியாதவர் இதயதுக்கே முள்ளான
கருப்புமலர்.............


உள்ளோ!!!.......வெளியோ!!!.....

அழகானதோர்ரிடம்
அமைதியான வாழ்வுதனில்
பணமில்லாதவரோ!மனிதராயுண்டு !!!
பசிக்காத வயிருண்டு
தேடியோடாகால்களுண்டு
தட்டிப்பறித்திடா கைகளுண்டு
ஒலிகள்கேட் காதுண்டு
மொழிகள் பேசாவாயுண்டு
அமைதியான மனதுண்டு
துடிப்புணரா இதயமுண்டு
சோகமில்லா அகமுண்டு
கண்ணீர் சிந்தாக்கண்களுண்டு
கருணையுள்ளோர் மலர்களுண்டு
கவிதைகளின்மொழியுமுண்டு
இரவுமுண்டும் பகலுமுண்டு
கல்லுக்குள் வீடுமுண்டு
 கனவில்லா  உறக்கமுண்டு
பொய்யில்லா முகங்களுண்டு
தவிப்பில்லாதனிமையுண்டு
உயிரற்ற காற்றுண்டு
உண்மைகள் இங்குமட்டுமுண்டு.....................

Thursday 15 November 2012

தீபாவளி

பட்டுண்டு பாவாடையும்ண்டு
வேட்டியுமுண்டு சட்டையுமுண்டு
விதவிதமாய் உடைகளுமுண்டு 
ஆனாலும்
                                                                 அணிந்திடாத் தீபாவளி
கோயிலுண்டு வசதியுண்டு
ஆறுகாலபூசையும்முண்டு ஆனாலும்
 அங்கே போகமுடியா தீபாவளி
அரியுண்டு மாவுண்டு சீனியுண்டு
நெய்யுண்டு பக்கத்தில்வீடுமுண்டு
 ஆனாலும் விதம்விதமாய்
பலகாரம்செய்திடாத்தீபாவளி
அன்னையுண்டு தந்தையுண்டு
பிரிந்த போதும் கையோடு
 தொலைபேசியும்முண்டு ஆனாலும்
 வாழ்த்திட முடியாத் தீபாவளி
கணவருண்டு பிள்ளையுண்டு
ஒரு பொழுது கூடியுண்ண நேரமில்லா
வாழ்வும்முண்டு இருந்தபோதும்
மீட்கமுடியா நேரத்தை வாழ்த்தி
ஓய்வாக்க வந்திட்ட தீபாவளி
அன்பை பறிமாறிட முடியாது
போனது தேசமற்ற மனிதர்க்கு
விடுதலையின்றி............



Sunday 11 November 2012

ஒளிநிலா

வந்தனர் சென்றனர்
ஏதோ சொன்னனர்
பிரிந்தனர் கூடினர்
குற்றங்கள் கண்டனர்
வஞ்சகமாய் பேசினர்
கார்ரிருள் என்றனர்
 சொந்தமென்றனர்
பின்னர் முன்னர்
காப்பதாய் சொன்னனர்
மகிழ்ந்தனர் கூடிகூலாவினர்
இன்னும் ஏதேதோ சொன்னனர்!!
மௌன இதயத்தின்
ஒலியில்ஊமையான மொழி
மெல்ல கற்றிட்டதை
அசைபோட்டு அசைபோட்டு
தன் செல்லதளிர்கரம்
பிடித்திட்டது இது மட்டும்
உண்மையொன்று!!! இப்போ
 இருள்வென்று தளிர் வருகின்றது ஒளியாய்!!!!!!!!!!!!!!!!!

Saturday 10 November 2012

வட்டம்.........................

உருண்டை பந்துபோல்
உருண்டேடுது வாழ்வு
மேடுபள்ளம் மோதி!
வந்து கூடி உறவாடி
விட்டுப் பிரிந்து உறவாகி
விளையாடுது  விதியாகி
கட்டிக் காத்திடமுடியாது
தள்ளாடுது
                                                       கருணை கதறிக்கொண்டு
முட்டி மோதி பட்டுப் பதறி
விட்டு விலகி உருண்டு புறன்டு
உளறி கொண்டிநிற்கு பாசம்
எதுகும் அறியாது‘
அட்டைக்கத்தி யோடும்
 அறிவில்லா வாளோடும்
கெட்டியாய் பிடித்த வேலோடும்
அள்ளி தெளிக்குது மனசு
உண்மை புரியாது
தத்தளித்து தள்ளாடி தன்னை மறந்து
தானாடி எட்டிபிடித்திட நின்றாலும்
உருட்டியொடுகின்றது ஒன்றுமோ
                      சொல்லா ஈர்ப்புக்குள் விதி.............


கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,



மண்ணைத் தொலைத்திட்ட
இதயங்களே !கொஞ்சம்  நாம்
தாய்மண்ணையும்  சிந்தித்தால் தான் என்ன?

உறங்கியே வாழும்
 இதயங்களே! கொஞ்சம்
மண்ணுக்காய் விழித்திட்டால்
தான் என்ன?
அறம்பாடும் இதயங்களே!
கொஞ்சம் அல்லல்படும்
தமிழுக்காய் பாடினால் தான் என்ன?

இறைபாடும் இதயங்களே!
மனிதஇயங்களில்  கொஞ்சம்
அன்பையும் தூவினால் தான்  என்ன?

தமிழ்பேசும் இதயங்களே!
கொஞ்சம் தமிழுக்காய்  வாழ்ந்து
பார்த்தால் தான் ஏன்ன?

ஆண்டுக்கு ஒருமுறை  அழிந்ததை
நினைக்கும் இதயங்களே!அப்பப்
கொஞ்சம் மாண்டு போனதை
நினைத்தால் தான் என்ன?

தன்னைக்காக் தனக்காய்
மண்டியிட்ட இதயங்களே!
கொஞ்சம் மண்ணுக்காய்
 தலைநிமிர்ந்தால்தான் என்ன?

வாழ்விழந்து வழியிழந்து
வாழயிழது தவிக்கும் இதயங்களே!
கொஞ்சம் இழந்ததை நினைத்து
எழுந்தால் தான் என்ன?

அது  இது எதுவெனத்தெரியா
இதயங்களே!
எல்லாம் எம் விதடுலையென
கூடிவாழ்ந்துவென்றிட எழுந்தால் தான் என்ன?


கனவு தேசம்

நேசத்தின் நிழல் காதலின்
உணர்வால் துறந்தது
காதலின் நிழல் காமத்தின்
உணர்வால் துறந்தது
பொய்யின் நிழல் கவிதையின்
உணர்வால் துறந்தது
கற்பனையின் நிழல் கனவின்
உணர்வால் துறந்து
காலத்தின் நிழல் வீணடித்திட்ட
உணர்வால் திறந்தது
இப்படிஇரண்டும் சண்டையிட
துரத்தி துரத்தி ஓடி
நிழலோடு நிழல்மேதிஉடைகின்றது
ஒன்றாகையில்......................

Friday 2 November 2012

கனவு

எட்டி எட்டி பார்க்கின்றேன் எங்கோ 
தொலைந்த கனவினை கொஞ்சம் 
அள்ளிக்கொண்டு நடைபோட  
ஆனாலும்!கொஞ்சமும் அச்சமின்றி
நட்டநடுவான் நட்சத்திரஒளிபோல்
விட்டுவிலகிய கனவுகள்அப்படியோ 
நிக்கின்றது என்னைத் தள்ளிவிட்டு!!

அழிந்தொழிந்த கனவுகளை
கூட்டி க்கூட்டி பார்கின்றேன்
கொஞ்ச நாள் நான் வாழ
எங்கிருந்தோ வந்து போகும்
தொன்றல் சுழன்று போகையில்
அத்தனையும் சிதறவிட்டு
வெற்றுக்கைகளாய்
 மீண்டும் திரும்புது என்னிடத்தே!!“

குட்டிஇதயமதில் கொட்டி வைத்த
கனவுகளை  தட்டித் தட்டிப்பார்க்கின்றேன்
கொஞ்ச உற்சாகத்தை கட்டிக்கொள்ள
கட்டிக்காக்கும் சிந்தனை தடடிவிட்டு
போகின்றது அந்தனையும் மறந்திட்டதாய்!!

எந்தனையோ கற்றாலும் எந்தனையோ
நினைத்தாலும்  அந்தனையும் கூடிடாது
பலமிழந்த மனசு ஏனோ
என்னை சுற்றி சுற்றி வந்து
 இதயமதை உடைக்கின்றது
கனவிற்காய்!!!!!!!!!!

ஏமாற்றம்

உன்னை நம்பி
நம்பிக்கையிழந்து!!!
உயிரோடு ஒரு இறந்த காலம்
உணர்வின்றி நடைபோட
வசந்தங்கள் வாசலில்லா
இல்லத்தில் சற்று நேர
ஓய்விற்காய் தங்கிவிட்டு போக!!
இருப்பதற்கும் நடப்பதற்கும்
உண்மையில்லா உள்ளம்
தானென்று வீரம் போச!!
கண்களுக்குள் ஓர்  கணிவில்லா
பாசம் சுயநலத்தோடு  தேடிநிற்க
விட்டு போன துயரங்கள்
இரட்டை வேடங்கொண்டு
ஒன்றை சொல்லொடுத்து
பொய்யான உண்மைக்காய்
விட்டிடாத் தொடர்மழைக் காற்றாய்
திக்குதிசையின்றி  கொட்ட!!
நொந்து போன இதயது
மீட்டுமொரு  வலியால் தன்னை
தொலைத்து  தவிக்குது ஏமாற்றதால்!!!!!


Saturday 29 September 2012

பனிப்பூ

வானமும் மண்ணும் பனியும் மழையும்
பாறையும் கடலும் பறவையும் விலங்குகளும்
புல்லும்  செடியும் பூவும் மெட்டும்
அலையும் கரையும் கானமும் இசையும்
கரையும்  மனதை தொட்டொடுத்து
வார்தொடுத்து  வார்த்தெடுத்து
விட்டிடாது பிடித்து கற்று தந்த இலக்கணம்
 சொல்லாது என்னாலும் என்னோடு
விளையாடும் காதலின் 
 இலக்கணம் தான்!!

எல்லாமே என்னோடு காதல்கொண்டாலும்
 உன்மீது பட்டு என்மீது வந்த காதல்என்ன?

 எண்ணி எண்ணிபார்க்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்  உருண்டு
புறன்டு உணர்வுக்குள் பறந்து
 சொல்லுது இதை தான்காதலென்று !!

எதற்க்காவும்  காத்திருக்கா இதயமது
காத்திருக்கு காத்திருக்கு உன்மொழி கேட்க!!“
பூ த்திருக்கு பூத்திருக்குஉன்னோடு பேசிட!!
 காலம் கடந்தும்உன்னோடு வாழ்ந்திட 
 இயலாதவாழ்வாகி போனபின்பும் 
முட்டாள் பெண்ணென்றுமுனுமுனுக்கும் 
சத்தங்கள் காதில் விழுந்தபோதும்
காத்திருக்கு கத்திருக்கு எதற்கென தெரியாமலோ!!!

இலக்கியத்து காதலை இலக்கணமாய்
எடுக்கவுமில்லை தொலைக்கவுமில்லை
இல்லா ஒன்றிற்காய் தவிக்கவுமில்லை
இருந்தும் அவை இதயதிற்குள்
 உண்டென்ற அறிவால் கொஞ்சம் துடித்து
கொஞ்சிபோகும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாய்
கரைத்து  காத்திருக்கு காத்திருக்கு
உன்னை எண்ணியோ!!

Tuesday 25 September 2012

வாய் சொல்லில் வீரர்கள்..........

முட்டாளின் சிந்தனையை
முந்திபெற்றவனும் அறியாதது போல்!!
அறிவிருந்தும் அறியமையால்
அறியாது பிதற்றுவதால் என்னபயன்!!“

நிலைகொள்ளா மனதின்  நிலையற்ற
வாழ்வு நிலைகொள்ள நினைப்பது
முற்களற்ற தரசை முன்வைக்கும்
இல்லறத்தில்  தான் என்றால்
காவியும்  கதைபடிக்கும் உண்மையென்று!!!
எல்லாமே காதலென்று  எல்லொரும்
சொன்னாலும் என்னாலும் எல்லோரும்
காதலோடு இருப்பதுவும் இல்லையோ!!
இல்லாத தேவதாஸ்  வாழ வாழ்கையும்
முற்சந்தி சாராயகடையும்  முன்னும் பின்னும்
உன்னையாற்றிட இருந்திட தேவையென்றால்!!

நிலையற்று தவிக்கும் மனதிற்கு
நிலைகொள்ளத்தெரியாத போது!!
நிலையானது இதுவென்று   நிலைகொள்ள
செய்பவனுக்கே  நிலை எதுவென்று
புரியாத நிலை தான் !
எங்கே!
நிலைகொள்ளுது  நிலையான வாழ்கை!!
என்னிடத்திலா உன்னிடத்திலா
முடிந்தாலும் வாழ்வு தொடர்வது
நமக்குள்  தானென்றால்
மாற்றத்தெரிந்த  வாழ்வு மாறதே
வந்தாலும்  சொல்லாதே  மீண்டும் மீண்டும்
கேட்டு  கேட்டு எல்லோரும் எதையும் புரியாது
போய்விட முதல்!! நன்றே செய் இன்றே செய்!!!!
நல்லதையோ செய்!!!!

பாரதியின்பெண்னே!!!!!

கற்றுபெற்று விட்டு கலங்கிய
காலம்  இப்ப இங்கே 
எங்கே போச்சு
வீட்டை விட்டு வெளியே வந்து 
உழைத்து பணம் கையில் வந்தாச்சி!!
அப்ப !கண்ட கனவு இப்ப
பெண்னோடு உண்டாச்சி !!
இருந்தும் கையில்  இருப்பதுவோ
ஓட்டை குடமாச்சி!!எதற்கு 
இந்த வாழ்வு என்று
இன்னும் பெண்பேச்சி!!
காலமும் விதியும் கலந்ததாய்
சொல்லி போகுதுபெண்மூச்சு!!
இதனால் ! இங்கே தொலைந்த
கலாச்சாரம் !மாற்றதின்கையில்
போயேபோச்சி !!ஆனாலும்
ஆடவன் வந்தால் ஆனந்தமே
பெண்னிற்கு பொருபாடய்போச்சி!!
காதலும் உணர்வும் வந்து 
காகிதங்களோடு வாழும் கதையாச்சி!!
நேருக்கு நேர்சந்தித்தால் இருவருக்கும்
தெரியாவாழ்வு திரையாய் போச்சி!!
தினசரி செய்திகளும் பெண்ணின் 
அறியாமை அங்கங்கே உண்மையோடு
விளம்பரம் செய்தாச்சி!!இருந்தும்
பெண் உணர்விற்குள் அடைபட்டு
நிற்பதுவும் துடிப்பதுவும் தவிப்பதுவும்
ஆண்மையின் சாட்சியாய்போச்சி !!இதனாலோ
ஆடவன் பெண்ணின் திறப்பாய் போச்சு
இருந்தும் அவனுக்கும் புரியாத மனமும்
உள்ளுக்குள்  இருப்பதாய் பேச்சி!!
புரிந்தாலும் நிறைவது சட்டதின் கோப்புகலாச்சி!!!!




Tuesday 18 September 2012

.இப்படியிருந்தால்..எப்படி தான் சாதிக்க?????

தொலைந்த வாழ்விற்குள்
தொலைதுரமான கனவு
வரைந்திட்ட காலதிற்குள்
விரையமாக்கியது  வயதை!!

விரைந்தும் முடியா ஏழ்மைக்குள்
தொல்லைகளை சுமந்து 
வரும் விதி
சும்மாவிட்டாலும் விட்டிடாடு
துரத்து  இல்லா 
கற்பனைக்கதைகளை
சேர்த்தே கூட்டிக்கொண்டு!!

பெற்ற தாயவளுக்கு கொடுத்திட
முடியா பணம் வந்த போதும் சென்ற போதும்
வட்டிப்பணதிற்கோ வந்திடாமையை
எப்படி எப்படியென சிந்தித்து சிந்தித்து
உழைத்ததில் உயிரிருந்தும்
இல்லா வாழ்கை ஒன்று கூடவோ
கூடியோ நடக்க அருமையும் பெருமையும்
மரணதிற்கு தான் புரியுமென்றது மனசு!

சும்மா இருந்தாலும் சும்மா சென்றாலும்
சும்மாசொல்லக்கூடாது பணம்
பக்குவமாய் பந்தாடுது வாழ்வை
எல்லாமே பணமென்பதால்!!

பாசம் இல்லாதே இருந்தாலும்
இல்லாப்பணம் பொய்பேசும் தனக்காய்!!
இல்லாதபோதே எல்லாமே தேவையென
கூட்டிவரும் இல்லறவாழ்வின்  தேவைகள்
சொன்னாலும் புரியாதிருந்து கொண்டோ
என்னாலும் சொல்லாதே தண்டிக்குது
 சோதனைகளால்!

கல்லாத கல்வியை என்னாலும்
கற்றும் கண்டிடமுடியா ஆழம் போல்
விட்டு விட்டு  போகின்றது
இயலாமை கோழையாக்கி!
எதையும் செய்திட முடியா தவிப்பாக்கி
கண்ணிருந்தும் குருடாய் போன உதயம்
எக்காலமும் வராது நிற்பது எதனால்?????????????

Saturday 15 September 2012

பராசக்தி


காணியுண்டு நிலமுண்டு மனிதனுண்டு
பண்படுத்த மட்டும்வேணுமடி பராசக்தி

தமிழுண்டு தமிழனுண்டுமண்ணுமுண்டு
காத்திட மட்டும்வேணுமடிபராசக்தி!!

கலையுண்டு கலாச்சாரமுண்டு
காவலுமுண்டு வளர்த்திட மட்டும்
வேணுமடிபராசக்தி!!“

ஆணுமுண்டு பெண்ணுமுண்டு
தாலியுண்டு வேலியுண்டு பூவுமுண்டு
பொட்டுமுண்டு புரிந்தவர் மட்டும்
வேணுமடி    பராசக்தி!!!“

குடும்பம்முண்டு குலமுண்டு
குத்துவிளக்குமுண்டு அன்பின்ஒளி மட்டும்
வேணுமடி பராசக்தி!!

இதயமுண்டு இரக்கமுண்டு உழைப்புமுண்டு
 உதவிடும்கை மட்டும் வேணுமடி பராசக்தி!!!

படிப்புண்டு பதவியுண்டு உயர்வுமுண்டு
 ஓழுக்கம் மட்டும் வேணுமடிபராசக்தி!!!

இன்பமுண்டு துன்பமுண்டு  சுமையுமுண்டு
சுப்பரின்தோலில் தூங்கிடாதவர் மட்டும்
வேணுமடி பராசக்தி!!!

Tuesday 11 September 2012

ஏமாளிகள்


புரியாத் தேல்விகள் ஏமாற்ற
கதவுகளை மெல்லத்திறக்க
வெண்பிஞ்சு மனசு சிந்துகின்றது
சிந்தனையின்றி!!

அள்ளிய கைகள் காட்டிடா
பாசத்தை  எண்ணியபடியே
என்றும் தொலையாய்  நடக்கின்றது
சிந்தனையின்றி!!

பாராமுகம் கொண்டு விட்டு
விலகும் உறவு தன்னையே
வெறுத்துகொண்டு நடக்கின்றது
சிந்தனையின்றி !!!

பிரிந்த வாழ்வு திசைகாற்றில் தள்ளாட
பிரிந்த இதயமே வேரோர் உறவோடு
கைகோர்க்க  அழிந்த ஆசை
அதிகாலை கனவானதால் நடக்கின்றது
சிந்தனையின்றி!!

எண்ணிய எண்ணம் கற்பனைகாற்றாய்
 களைந்தோட !வெட்டவெளி
 பக்கத்தில் விரக்கிப்பூ
உணர்வின் பக்கமாய்விரிய
 அறிவின்முதிர்ச்சியை உணர்வின்பூக்கள்
அப்படியேசிதைக்க!! சிந்தனை இழந்து
தன்னைத் தொலைத்து தட்டுதடுமாறிய
உணர்வின் பக்கத்திற்குள் புதைந்து
நடக்கின்றது சிந்தனையின்றி!!

தெளிவிழந்த சிந்தனை பாசத்தால் தவிக்க! 
புரியா குழப்பதிற்குள் கோமாளி வேடமிட்டவர்
 நிமிடத்தின்பக்கங்களை தன்பக்கமாய்
மாற்ற எதையும“ புரியா ஏமாளியாய்
நடக்கின்றது சிந்தனையின்றி!!
தன்னை தொலைத்து எடுதழித்து சென்றதன்
வாழ்வு அந்தனையும் மறந்து அன்பின்தேடலில்
பூமிவிட்டு சிறகடித்து பறந்திட
 தன்னை மறந்து நடக்கின்றது சிந்தனையின்றி!!

கொஞ்சிய கோமாளிகளின் வர்ணங்கள்
 மெல்ல வெளுத்து  தற்காலிக குடையான
 உண்மையில்லா பொய்களின் கைப்பிடிப்பு 
ஊமைவாழ்வானதால் அஞ்சம்கொண்டு
நடக்கின்றது சிந்தனையின்றி!!

ஒன்றை ஒன்று பொய்கள் கைபிடித்து
மன்னிக்கமுடியா பிழைகளை மண்ணில்
செய்து!!! ஒன்றைஒன்று காயபடுத்தி
 தன்னை தானோ ஏமாற்றிக்கொள்ளது
நடக்கின்றது சிந்திக்காமலே!!

Saturday 1 September 2012

கார்காலம்


தென்றல் காற்றாட கார்கூந்தல்
சேர்ந்தாட!! 
அந்தி வான் கொண்டாட
புள்ளிமான் எழுந்தாட!!
 தேகைமயில்விரித்தாட !!
கார்மேகம் ஓடியாட
மஞ்சள்வான் கலைந்தாட
புன்னகைத்து நந்தவனமாட
பூக்களோடு நானாட!!
 சட்டென சிந்தனை யாட !!
சிறகுகள் அதற்குள் விரிந்தாட
இடியோடு மின்னல்லாட
அச்சத்தோடு நான் நின்றாட
 மாமான்என்னைக் கண்டாட
அகத்தேடு முகமலர்ந்தாட
கண்ணத்தின்குழிக்குள் துளியாட
முதல்துளி காதலாய் என்னோடுவிழுந்தாட
 என்றுமில்லாஆனந்தம் வந்தாட
மயில் போல்  மாமான் சேர்ந்தாட
தோகையில்லா மார்வேடுநானாடா
தெறித்திடும் துளிகள்என்னேடுவிளையாட
வெட்கத்தோடு நான்நனைந்தாட
மாமான் என்னைப் பிடித்தாட!!
கைபட்டு  வலயல்களாட
உடைந்திட்டதுண்டுகள்
வானவில்லாய் விழுந்தாட!!
 கூயிலென்று பாட்டெடுத்தாட
என்கால் சலங்கை வளைந்தாட !!
சலசலக்கும் நீர்பிரிந்தாட !!
இயற்கைஅசைத்த ஒலியில்
இசைத்த கூயிலைரசித்த மழை
 என்னை சிக்கிவிழகிதொட்டு
நனைத்து போககையில்
சொல்லவில்லையோ!!
என் மாமானுக்கு ஜயலதோஸம் வருமொன்று!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,


மண்ணில் கண்ணில்
புத்த தர்மம் எழுதிய அகிம்சை
நடைபாதை பாதசுட்டக்குள்
காப்பாற்ற பட்ட ஊர்வண காட்டா
நன்றியால் எழுந்த வீரம்!! புத்தர்
கொள்கைக்கு கொடுக்கா உயிரை
தன் உயிர் காத்திட மாற்றி மாற்றி
பிற உயிர் பறித்து தான் வாழ
எழுந்த அகிம்சையே தமிழன் உயிரானது!

இழந்ததால் பிரிந்தால் தன்னை தொலைத்தால்
தழிழன் எழுந்து தலைநிமிர்ந்ததால்
தன்னை கொடுத்து எடுத்தது மீண்டும்
கொடுத்ததை நினைத்து நினைத்து
உருகு தழிழ் ஈடாக எதையும்
பெற்றிட முடியாமல் தவிக்கும் தவிப்போ
தேசத்தின இழப்பாய் போனது!

தவித்து புலம்பினாலும் வழிதேடும்
கொள்கையில் வடிவாய் அமர்த்தாலும்
தற்பொருமை  பேசி பேசி
வந்தவர் நின்றவர் போனவர்
பின்னால் கூட்டிப் போனதால்
ஆசைக்காய் பணம் வந்து
கதைபடிக்க ஆடம்பரம் ஆடைகிழிக்க்
எம்மிடம் உள்ளது கையிழக்க
கட்டிப்போட்ட திறமை தலைமிர
தலைகவிழ்ந்தது உண்மையானது!!

பலகால தவம்
இன்னும் தேடும் தேடலானதால்
கண்டு கொண்ட குற்றசாட்டு மற்றவர்
மற்றவர் என்ற வீரப்பேசி
சின்ன நாட்டு சிற்கார தமிழ்
கற்றதை பெருமைக்காய் விற்று
வீரமிருந்தும் பொருமையால்
வாழ்வின்றி தவிக்கின்றது..
இன்று நாளை என்று!!…
.

Saturday 18 August 2012

துறல்கள்....

தொலைவானாலும் தொலைத்தாலும்
பிரிந்தாலும் பிரிவைகொடுத்தாலும்
கலைந்தாலும் கலைத்திட்டாலும்
பதவிக்கு வந்தாலும் அதிகாரியானாலும்
போராசைகொண்டாலும் பெருநஸ்ரமானாலும்
கண்ணீரில் வாழ்த்தாலும் கரையாமனம்
மண்ணில் உண்டென்றால் தாயொன்றால்
இல்லையென சொல்லயாருமில்லையொன்றாலும்
எங்கோயென தேடும் இதயமும்
காட்சியாய்  போனதால்
தாய்மை கொஞ்சம் தவிக்கின்றது!!
பெண்ணினதின் தாய்மையை
பெணிற்கே சொல்வது ஆணினத்தின்
தாய்மையானதால் !! அந்த பொண்ணின்
தாய்மையை காக்கும்  ஆணின்தாய்மை
கொஞ்சம் தவறினாலும்
மண்ணின்தாய்மை மக்கிபோகுமல்லவா!!
எந்திசைதொடும் காற்றானாலும்
தொட்டு உணர்த்தும் அன்பின் உண்ணதத்தையும்
எப்பவும் மறந்திடா ஒழுக்கத்தையும் மறக்கும்
ஆண்மையின் தாய்மை ஏற்றுகொள்ளும்  தாய்மையால்
எங்கும்பெண்மையின்தாய்மைக்கு இல்லா
முகவரியோ!!!!!!!

Sunday 5 August 2012

கண்ணமா..

ஆண்மையின் தேடலில்
சிக்கலின்றி !!
கிடைக்கு பெண்மை
சிக்கலென சிக்கியவனும்
சிக்யதை விட்டாலும்
சிக்குது  மீண்டும்
 சிக்கலின்றிக்கைகளில்!!
ஒப்படைத்த பெண்மை
ஒப்பத்தமில்லாது போனாலும்
ஒப்பத்தமாகுது இன்னொரு
தேடலிலால் பெண்மை
இலவசமாய்!!
பெற்று காண்ட வாழ்வில்
கற்றுக்கொண்ட எதுகும்
திருத்திக்கொள்ள முடியாது
தள்ளிவிட்ட கொடுமையிலும்
பெண்மை  பெற்றுகொண்டது
ஆண்மை ஒன்றை  சொந்தமாய்
சொல்வதை   மட்டுமே!!

நட்பு





பொய்யில்லாக்கயிறு கட்டிக்கொள்ளும்
பொய்யின் இலக்கணம்
தொட்டுப் பிடித்து நிக்கின்றது
உறவைத்தொலைத்தும் உறவை விட
நட்போ பெரிதென்று!!

விட்டுக்கொடுத்து வீரியம் பேசி
விதை போல் நித்தம் நித்தம்
முளையிட்டு 
சொந்தமில்லா சொந்தங்களை
இதற்குள் செந்தமாய் சிறைபிடித்து
என்னவென சொல்லத்தெரியது
நிற்கின்றது நட்போடு!1
எத்தனை இருந்தும்
 அந்தனையும் இதற்கள் 
தேடிக்கொண்டு
 அதனையோ வேண்டுமென்று 
விட்டுப்பிரிந்தும்
பிரிய முடியாது தேடுது
 நட்பை மட்டும்!!
கருணையும் கடவுளும்
 அன்பும்அரவணைப்பும்  
நல்லதும் அர்ப்பணிப்பும்
இதற்குள் மட்டுமேயுண்டென்று
நட்போடு வந்த உயிரை 
 உறவாய் ஏற்றுக்கொண்டு 
உன்னதம் இதற்குள்
சொல்லும் நட்பிற்கு 
ஏன்னிந்த தனியுலகம்!!
உறவுக்குள்ளும் நட்பிருந்தால்
உறவு கூட சிறப்பு தான் நட்போ!!
தந்தை கொடுக்கா நட்பு!
அன்னை சொல்லா நட்பு 
!கணவன் காட்டா நட்பு!
மணைவி  இழந்த  நட்பு!
பிள்ளளையை பின்னிடா நட்பு!
நட்பை தேடுது வெளியே தனியாய்
 நட்பபே சிறப்பொன்று!!!!

Thursday 19 July 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


                                                    என் உயிர் மொழி.......


மலரொன்று பிறந்திறந்து
ஆண்டுகள் கடந்தும் அதன்
அழியா  நினைவுகளை
மெல்ல சேர்த்தெடுத்த
தேய்பிறைக் காற்று
வளர்பிறைத் தென்றல் தெட்டு
முழுநிலவாய் அவளை வரைய!!
ஒளியாகி ஒவியமாகி நிலவாய்
சிரிக்கின்றாள் என்கனவை
ஆண்டுகொண்டு
கோடைகாலத்து காற்று
வசந்த காலத்து தென்றல்
தொட்டு ரோஐா மலர் எடுத்து
மாலையாகி சூடியதால்
இன்று மட்டும் உயிர்பெற்றாள்
என் கனவில் !!இல்ல உலகமதில்
நில்லாத அவள் முகம் எப்பவும்
அழியா ஒவியமாகியது என் விழியில்………

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


எப்படி சொன்னால் புரிவார்..................


ஆண்டுகள் பல போனதாம்
ஆண்டோடு நானும்
தொலைதாய் காலம் சொல்ல
அதிசயம் எதுகுமின்றி
அசையுது நினைவு கடந்த
ஆண்டின் நினைவுகளை
தொலைத்திட்ட நிமிடத்திடம்
கொஞ்சம் கடன் வேண்டி!!
எப்போதும் எவரும் காத்திட
நினைவை என் உணர்விற்குள்
கொஞ்சம்  அடகு வைத்திட்டு!!
எப்படிச்சொன்னாலும் புரியா
 உணர்வை எப்படி புரியாதவரிடம்
சொல்வதென்பதை  சிறிதும்
சித்திக்காது !!
எப்பவும் பெண்ணின் உணர்வு
எவருக்கும் புரியா உணர்வானதால்
அதை எப்படி சொன்னாலும் புரியாது என்பதால்
அப்படியோ விட்டு!! 
பெண்ணின் சொல்லாக் காதலை
புரிகின்றமனசு!!அது எப்படி
 என்று என்னைக்கேட்காது!
தன்னைக்காக்கும் புரிதல் என்பதால்
சண்டை போடாது!!
தன்னை மட்டும் சிந்துபவர் உன்னைச்சிந்தித்தால்
எப்படி புரியுமென நீ எப்பவும்
 சிந்திக்காமல் நடைபோடு
பெண்ணே!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

                                                                      கலையே!!!


என் கனவில் வந்து
என் கண்ணீர் துடைத்து
என்னைக்காப்பவளே  !நீ
மண் மரணிக்க விண்ணுக்கு சென்று
ஆண்டுகள் கடந்தும் அழிய வரமாகி
எனக்குள் ஏன் வாழ்கின்றாய் !!
நான் மண்ணில் இறந்து
உயிரில்லா உடலாகி நரகதின்
வாசலில் எரிக்கும் தீக்காய்
காத்திருப்பவள் என்பதாலா!! இல்ல!!
உயிரற்ற உடலெடுத்து
இதயமதை அறுத்தெறிந்த
பொய்யான முகங்களின்
புன்னகையும் பாசமும் என்னை
அழித்திடுமென்பதாலா!!!
இருக்கும் வரை பெண் வாழ்வே போராட்டம்
எதைக் கொண்டு
மாற்றுவது பாருக்குள் என்பதாலா!!
இல்ல கற்பனைகள் கவி பாட
நீ சொல்லிடா காமதிற்காய்
அவளை தேடியழித்து முற்சந்தியில்
நிறுத்திடுவார் மானிடரென்பதாலா!!
கடசி
மூப்பது போர் தேடலுக்காய்!
எழுத்தில்லா கதையின் பொருளாகி
இருக்கும் வரை வாசணையற்றதிரவியம்
என்பதாலா!!இறந்தால் 
கிடைக்கும் நினைவுச்சின்னங்கள்
என்பதால் நீ இறந்து
என் வாழ்வு க்கண்ணீருக்குள்
விதியானதே  இதனால்தானா!!

Monday 9 July 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

குருவி................


சொல்லி களைத்திட்ட
ஏழைகுருவி எட்டு பக்கம் கதை
அற்புத விளக்கமாச்சி!!
படித்தவர் எல்லோரும்
பாராட்டும் கதையாச்சி!!
யாரும் இல்லாக்குருவிக்கு
தனிமையே பொழுதாச்சி
தரித்திரம் வாழ்வாச்சி
புரியா உறவிற்கு குருவிமேல்
வெறுப்பாச்சி இருந்திட்ட கூடும்
புயல் பட்டு போய்யாச்சி
எல்லாம் இழந்திட்ட குருவிக்கு
தன்கையே உதவியாச்சி
சோர்த்திட்ட மனதிற்கு
நம்பிக்கை நிலவாச்சி
வெட்டவெளி வாழ்விற்கு
இருபுறமும் நதியாச்சி
பொல்லாத மனிதனுக்கும்
பேராண்மை வந்தாச்சி
வில்லாதி வில்லனுக்கும்
வீரமற்ற வால் கையாச்சி
பொல்லாப்பாய் வந்தருக்கும்
பொறுமையில்லா மனமாச்சி
குருவிக்கு கிடைத்த உணவு
வயிற்றிக்குள் புண்ணாச்சி
இருக்கும் கதைக்குள் இதுவே
பொருமைக்குரிய கதையாச்சி..............................

Wednesday 4 July 2012

உள்ளவரை.....................

காற்று மெல்ல வந்து
என் உடல் நனைத்து!
உன் உயிர் நான் என்றது!!

கொஞ்சமும் சம்மதமில்லா
என்உடல் அதனை பிடித்து சிறைவைத்து
என் நிமிடம் என் வாழ்வு இதுவொன்றது!!

வீரமாய் அறிவு எழுந்து எல்லா நிமிடமும்
என் நிமிடதான் என்றது !!!
அதைக்கேட்டகாற்று 
 மௌனமாய்  விலகிப்போனதால்
அறிவு தன்னை மறந்துஆணவத்தோடு நின்று
உன்னைக்கொலு வைத்து!!

உறவென்ற உரிமையால் உடலிற்கள்
ஏதே தோ ஆட்டம் போட1!

மெல்ல கற்று சொன்னது
உன்னிடம் உள்ளவரை
என் நிமிடம் தான் உன் நிமிடம்
இதை அறிந்தும் உன் உணர்ச்சிக்காய்
ஆடும் மானிடா நான் போகுவரை
நீ அடங்கிட மாட்டாய் !!!!

ரோஐா

தன்னைக் கொடுத்து வையத்திற்கு
வாசம் கொடுத்து  வையத்து
அழகின் மயக்கத்தில் வாழ்த்த
மலரின் கண்கள் !சிந்தி சிதறுது சிறு 
துறல் கற்றில் !!!இருப்பதுவும்
கொடுத்ததும் இறை கண்ணீர்துளியென்பதால்
எட்ட  நின்று எறியும்
கற்களை தட்டித் தடுக்கவே
தண் டனை கொடுக்கா முற்களை 
பக்கத்து துணையாய் கூடவோ கொண்டது!!
பக்கம் தெரிய  பக்கமான
பக்கத்து மானிடன் பக்குவம்
இல்லாது  பதறி பறித்து
பயனும் அடைத்த பின்!! சட்டென
தடுமாறி  கைவிட்டதால்
பட்ட காயத்தை பக்குமாய்
மறைத்து  ஈட்டியாய் பாய்ந்த
 முற்கள்ளை தப்பொன்றான்!!!
மலர் கொண்ட மென்மை
உண்மையானாலும்   தன்மென்மை
கண்டும்  தன்னையோ தவறு என்றவரை
 அழிக்கும்நியதியை எப்போ மாற்றும் 
இயற்கையென ஏக்கத்தோடு  காத்துகிடக்குது!!
நியதிக்குள் சிக்கிய வாசம் இறப்பால்
பேசப்படும் நியதியை மாற்றிடா  மாற்றம்பேசும்
வர்த்தையாய்   போனதால்................

Friday 1 June 2012

கரம்


மலருக்குள் தேனை மட்டும் தேடும்
கரங்களுக்கு அதன் மகிமை
சொல்லி பயனில்லை!!!
மலர் பறிக்கும் கரதிற்கு
கருணைசொல்லி பயனில்லை!!!
மலரைக் கசிக்கியெறியும் கரங்களிடம்
காத்திடுட சொல்வதில்ப் ஞாயமில்லை!!!
கசக்கி மலருக்குள் பயனைத்தேடும்
கரங்களிடம் அதன் அருமை
சொல்லிப் பயனில்லை!!!
வாடும் மலர் ரசிக்கும் கரங்களிடம்
அதன் மென்மை சொல்லி பயனில்லை!!!
பயனுல்ல மலரைின் பயன்
புரியாக்கரங்களிடம் கொடுப்பதிலும்
பயனில்லை.................................

Thursday 31 May 2012

பேரின்பம்

உயிரோடு  உயிர்  கலந்த  உணர்வை
உயிரும் உயிரும்சேர்த்து
உயிராக்கி ஓர்உணர்வின் மொழியாய்
உயிருக்குள்  கொடுத்ததால் !!!
என் உயிர்  வந்து திண்டாது
 இவள் கற்பதிற்குள்!!!
பிறப்பின் பால் வந்தவர்கள்
பிறபினை தப்பென்று பிறவா
என்னைப் பாராது திட்டுவதை
மௌனதேடு கேட்கின்றேன்
தவறோ புரியாப் பிறப்பி  நானென்பதால் !!!!
அம்மா இவளுக்கு அந்த காலத்து
மனிதர்கள் சொன்ன சடங்கின்றி
 கழுதிற்கு தாலியின்றி நான்வந்தால்!
!அம்மா இவள் தப்பானவளாம்!! 
பாட்டிக்கும் தாத்தாவிற்கும் நான்
அவமான சின்னமமாம்   !அப்பா
உயர்சாதியென்பதால் தொட்டுக் கெடுத்த
அம்மாவிற்கு தகுயில்லையாம் 
அவரோடு  சேர்த்து வாழ!!! அதனால் 
நான் வேண்டாமாம் இவ்வுலகிற்கு !!! அப்பாவின்
குடுபக் கௌரவம்  காபாற்ற தப்பான
உறவிற்கு சாட்சியான நான்
வேண்டாமென்று தப்பான பிள்ளையை 
பெற்ற தாத்தாசொல்லுகின்றார்!!
தப்பான வாழ்வை மனிதன் வாழ
கூடாது என இறை வைத்த தத்துவம் புரியாது!!!
ஊரும் உறவும் அறிய முன்
என்னை கருவோடு அழித்திட
அலோசனை கூட்டம் !!!
தவறிய பின்னோ அழுதுடிக்கின்றாள்
தன்னை என்னி  அன்னை !!!என்னை அல்ல!!!
இறைவா மீண்டும் ஒரு தப்பான
பாதையை காட்டாதே என்னை
சில மாதம் மட்டும் சுமக்கும் அமாக்களுக்கு!!
என்ன நான் செய்தோன் மனிதா?
உன்னால் சிந்திக்கா வாழ்வு
என்னை அசிங்ப்பார்வை பார்க்க
கருவோடு களைகின்றேன்
கருவறை இருள் போல் ....
அம்மாவாய் அப்பாவாய் ஒன்றாகும்
காதல் தேகங்களோ உங்கள் 
உணர்விற்குள் என்னைச் சபிக்காதீர்கள்
மீண்டும் மீண்டும் கொலைகார்
நீங்கள் தான் ...............நாங்கள் அல்ல!!!!!

Sunday 27 May 2012

பிறவி..............

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அடிதடி!! அடடா !!இல்லமும்
சட்டசபை ஆச்சி!!
எதிர்கட்சி ஆளும் கட்சி
அடிக்குது லுட்டி !!அடடா!!!
இரண்டுக்கும் நடுவோ
ஓர் விடுதலை மூச்சுக்கு
புரியா வாழ்வாச்சி!!
பிள்ளைக்கும் பெண்ணுக்கும்
இரண்டே கதையாச்சி !! அடடா
கண்ணும் காதுக்கும் 
குளிரான பேச்சு வீட்டுக்குவீடு
சொல்லும் கதையாச்சி!!!
ஆச்சுக்கும் அப்புவுக்கும்ம்
பதருக்குள் அறிவாச்சி!! அடடா
மகனுக்கும் மருமகளுக்கும்
அறிவோ பதராச்சி!!
போதைக்கு பெண்ணாச்சி
பொருளுக்கு அவன்னாட்ச்சி
உணர்விற்கே புரியா அருளாச்சி
இருந்தும் அடடா!!
புரிதலுக்கு மேடையாச்சி 
பிறவி இதுவாச்சி !!எனியும்
காலம் தான் சொல்லனும்
விடுதலை பேச்சு!! ஆனாலும்
வந்து வந்து தேயுது காமத்தின் ஆட்சி
அடடா !!என்றுமே இதுவே  செய்துஆட்சி

Monday 21 May 2012

உயிர்வரை

உள்ளத்துக் காதலை
உண்மை அன்பினால்கட்டி !!
உயிர் மூச்சிற்குள்
உன்னை  என்னை  வைத்து
எனக்கும் உனக்கும் வந்த
காதல் சொன்னதெல்லாம்
என்னிடதில் அப்படியோ இருக்க!!
உன்னிடத்தில்  வந்ததொல்லாம்
 உன்னை  எடுத்து என்னை
வடிதெடுத்த கற்பனைகள்மட்டுமே !!
எப்படி !!எப்பவும் உன்னைமட்டும்
சிந்திந்து என்னை மறந்திடிம் எனக்கும்
 உனக்கும் ஒர் காதல்
ஆண்டுகள் கடந்தும் ஆயிரம் இழந்தம்
அப்படியோ என் மனதில் புத்தம் புது வாசமாய்......
தேடி எடுக்க வாழ்விருந்தும்
தேவையின் தெளிவிருந்தும்
தேவையில்லாப்  பைத்தியமாகி
இன்னும் எதையும் இழக்கா
 நினைவுகளாய்  என் இதயத்தில் 
 அச்சுபிழையில்லாபுத்தமாய்
அப்படியோ இருக்க!!உன்நினைவுகள்
மட்டும் அப்பப்ப  தென்றல் தெடும்
காற்றால் உதிர்கின்ற இழ்கள் போல்
என்னுல் வந்து வந்து உதிர்கின்றது நம்வர்ணக்
கனவுகளை......





Friday 18 May 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

உன்னதம்


என்னைக் கொன்று உன்னை
பெற்று பொருமை தந்து
நம்மை பெற்ற  வாழ்வின்!!!
அற்புதக் கருணை ஒன்று
தொலைய தொலைவில்
தொலைந்து நிற்க!!
நான்யார் நீயார் யாரும்
அறியா வாழ்விற்கு  ஒளிகொடுத்து
உன்  உயிர் கொடுத்து
என்னை பெற்ற உன் உருவதிற்குள்
மெல்ல கரைகின்ற என்நிழலை
  என் உளியொடுத்து  என்னை
வடிக்கின்றேன் நீயாய் நான் மாறிட!!!!!

Thursday 17 May 2012

பந்தம்

ஆண்ஐாதி பெண்ஐாதி
உலகிற்கு இருஐாதி அப்பாடி!!
ஆணும் பெண்ணும்சரிபாதி !!
இருந்தும்!! ஏன் ஓர் பொய்ப்பாதி!!

சிவனுக்கு சக்தி சரிபாதி
இருந்தும்!! பிறந்து பிரிந்து
சோருவது  எப்பாதி!

முருகனுக்கு வள்ளி சரிபாதி
இருந்தும்!!தெய்வானை ஏதற்காய்
ஓர் பாதி!!
கண்ணனுக்கு ராதை
உயிர்ப்பாதி இருந்தும் !! ஆண்டாள்
எதற்காய்பாதி!!

கோவலுக்கு கண்ணகி சரிபாதி
இருந்து்ம் !!மாதவி யாருக்காய்ப்பாதி!!

இப்படி! அக்கரைக்கும்
இக்கரைக்கும்  இடதிற்கும்
வலதிற்கு்ம்ஒர் பாதி பாதியாய்
நிற்கும் கதைகள் சொல்லு்
பாதிப் பெண்களின் பாதிவாழ்கைக் கதைக்கு
 எப் பொருள் முப்பொருள் காண
இப்படைப்பு......
..
பாவையவள்  படைப்பின்
பாவக்கதைகள்  சொல்லும்
பொல்லாத உலகிற்குள்
பொருந்த வாழ்கைக்குள்
 சற்றும் நில்லாத காற்றைப் போல்
முன்னாடி பின்னாடி தள்ளாடி
கொஞ்சமும் குறையாத பாசம்
இல்லாது போனதால் என்றால்???????????

எதைவைத்து யாரைப்படைத்தான்
இறை!!
எதற்காய் இந்த வாழ்கை
யாரை யார்வெல்ல வந்ததிந்த
மனுடம்  !!
கரையும்மனதிற்கு பிடிப்பதெல்லாம்
அறிதும்அறியாமை கல்வியா................?


Wednesday 16 May 2012

சக்காலத்தி

அக்காளின் கணவருக்கு
அக்கரையாய் ஒர் பாசம்
அக்காவிற்கு தெரியாது
வந்தால்!!
தற்காலம் அக்காளிடம்
தங்கை சக்காலத்தியானால்!!!

 முக்காலம் இக்காலம்
எக்காலும் போனாலும் ஓர் உறவு
பெண்ணிற்கு இப்படியொரு பெயராய் 
எப்படித்தொடருது!!!
இல்லாத பொல்லா கனவில்
நில்லாது மிதப்பதாலா!!

சொல்லாது வந்த பொல்லாத
காதல் நில்லாத உணர்ச்சியை
கொள்ளாது கொள்வதாய் பொல்லாத
உணர்விதற்கு .இல்லாத கதையை
கொஞ்சம் கல்லாத மனம் சொல்வதாலால!!
நில்லாது வடிக்கும் பொல்லாத கருணையால்
அக்களும் தங்கையும் எதிரியாய் மாற்றிவிளையாடும்
விளையாட்டின் அர்தம்புரியவில்லை !!

அத்தனையும் செய்துவிட்டு
அப்பாவி வேஷமிட்டு அக்கரையாய்
நிற்கும் அத்தானின் மனதிற்குள்
அந்தனையும் பொய்யாய்யனதாலா!!
உணர்ச்சியை  தவிப்பாக்கி உண்டுவிளையாடி
உண்டிட்டு  கல்லாய்நிற்பது தான் ஆண்மையா .,,,,,,,,,,,,,,,,,,,,,

Wednesday 9 May 2012

நானும் நீயும்

மொழியின் காதலில்
தமிழின் அகரத்தில்
வாழ்வின் சிகரத்தில்
புகழின் கிற்றுகளில்
என்றோ ஒன்றாய்வாழ்ந்த
ஞாபகங்கள் நன்றாய் என்
விழிகளில் ஒளித்திரையில்
 வாழ்வதால்!!! 
வரியாய்க் கவியாய்
கற்பத்து ஓவியமாய் என்
கண்களின் உயிராய்
நிற்று நடக்கும் நதியாய்
நில்லாது ஒடும் நீரை போல்
தள்ளாடும் மனசும்  மறக்காது
 துடித்திட நீயேயானாய்!! என்
முன்னாலும் பின்னாலும்
சொல்லாத நினைவாய் நீ
நிற்காது  வருவதால் பொல்லாத
 ஐயம்!! ஐயத்தின் மேல் வந்தாலும்!!
என் மனசு  உன்னை
அள்ளியணைத்திட முடியா
வையத்து ஊமத்தம் மலரானதேன்!
அனிச்சம் மலரனய்!! உன்னை
அள்ளிக்கொள்ள முடியாது தள்ளிவிட்ட
தாய்விதி சொல்லிக்கொள்ள
வந்தென்ன உனக்கும் எனக்கும்..........?



Saturday 5 May 2012

மொழி

பள்ளியில் படித்தெல்லாம்
வாழ்க்கைக்கு உதவ
வில்லை
உள்ளத்து மொழியினை நாவிற்கு
மறைக்கத்தெரியவில்லை
கள்ளத்துமொழிபடிக்க ஒர்
பள்ளிக்குப் போனதில்லை
நடிப்பின்மொழிக்கேர் வாத்தியார்
வைத்ததில்லை
பொய்யின் மொழிகற்று
வாழப்பழகவில்லை
ஏமாற்றி வாழ ஒர் மொழியும்
தேடவில்லை
அறிஞ்ஞரின் மொழியினை
கற்றிட தோன்றவில்லை
அறிவின் பக்கத்தை அறியும்
அறிவும் எனக்கில்லை
 அறிவுடையோர் கேள்விக்கு பதிலும்
அறிவு கொண்டு சொன்னதில்லை
மனிதறிவின் தத்துவத்தின் பக்கங்களும்
 என் அறிவிற்கு புரியவில்லை
மனிதப் பிறப்பின் கணகிற்கு கொடுத்த
மொழியதனை தேடியும்  நான் கற்கவில்லை...................................................



Friday 4 May 2012

என்றும் அன்புடன்

குழந்தை பருவம் அறியா அறிவு 
 அன்னை அன்பைமட்டும் புரியும் உணர்வு
சொன்ன பக்தியில் எதையும்கேட்கா
 அறிவில் வந்தது பக்தி காதலாய்உன்னிடமே!!

வளர்ந்த காலம் இளமைக் காலம்
கிண்டலும் கேலியும்  என்
கூடவோ தொடர பாதி மோதகம்
எனக்கே எனக்கென்றுசண்டையிட்டு 
வாங்கி உண்ண வந்தது பக்தி காதலாய்உன்னிடமே!!!
பருவக்காதல் உணர்ந்த காலம்
உன்னைப் போல் அன்னை மகன்
காணா பெண்ணாயாய் தேடிய
 பக்தியில்  சுற்றிய மனம் சுற்றியோ வந்தது
காதலாய் உன்னிடமே!!
தாய்மை பருவம்
கண்ட காலம்! உன்னை போல்
ஒர் மகன் எனக்கும் வேண்டி
வந்தது பக்தி  காதலயாய் உன்னிடமே!!

எல்லாம் முடிந்து  இழந்த காலம்
தவியாய் தவித்த  மனசு யாருமற்று
பட்டுநின்றநிலையிலும்
துணையென வந்தது
பக்தி காதலாய்உன்னிடமே!!

மேலும் மேலும் துயரங்கள் 
 தீட்டிப் பார்த கூரிலும் குத்தியெடுத்து
 வார்தைதெடுக்கும்  உறவின் சொல்லுக்கு
தேனீயற்ற தேனைப் போல்இனிமையாய்
 மனம் வந்ததுபக்தியோடு காதலாய்உன்னிடமே!!

எதுமில்ல வாழ்வில்
எதுகும் செய்யா
 உன்னை எதுகும் கேளாது
எப்பவும் அமைதிதேடி மனம்
அமிர்தமாய் நின்றிட
 வருகுது  பக்தி காதலாயாய் உன்னிடமே!!

ஆணைமுகம் கொண்ட உன்னை
அன்பிமுகம் பார்து ஆற்றில் கரையும்
உன்னில் அழகு முகம் கண்டு தொடருது
பக்தி உன்னிடமே காதலாய் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Tuesday 1 May 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

இதயத்துளி

சுட்டிக்கதையாகி
சுடரில்லா ஒளியாக்கி
 வெட்டிப் புதைத்த நினைவதனை
தட்டித்தட்டி உயிராக்கி
மெல்லக் கனவாக்கி
கற்பனைக்குள் சிறகாக்கி
எடுத்தென்னை உறவாக்கி
 சுட்டு எரித்தும் எரியா
வாழ்வாக்கி பின் தள்ளிக் கண்ணீர்
 கதைசொல்லி இருந்தும்
 கதறும் மனமதனை
 விட்டுப் பிரித்து  தவிக்கவிட்டு
தவிக்கும் எண்ணத்தை சுயநலமாய்
அழித்து  திரும்ப திரும்ப
பிரியா மணலால் கட்டி
துடிக்க துடிக்க எரியும்
வலிகள் கண்டும்  என்று  துடிக்காக
                            இதயம். நீயேயானாய்  ..............

Sunday 29 April 2012

விழிகள்

சின்ன அருபுகளின் நடுவே
 மெல்ல  விரிந்திடதுடிக்கும் மொட்டுகள்
முட்டி மோதி மெல்ல வெளிவர
காத்திருக்கும் தோட்ட மணல்வெளி
 தன்னைப்பச்சைவர்ணம் போற்றி
அழகு காட்டி செழிக்கும் பசுமைகாலத்தின்
 ஓர் அந்திப்பொழு !
மெல்லத் தவழுகையில்!
அந்த பொழுதின் ரசனைக்குள்
தொலைந்த மனசு கரங்கொண்டு
 இறுக பற்றியே தன்னைப்பற்றியவளினை
அணைத்தபடியே ஒன்றையடி பாதையில்
இருவரும் தம்மைமறந்தே நடக்க!!
எங்கிருந்தே வந்த தென்றல்
உயரத்து மரங்களிடம் அப்படியென்ன
பேசியதோ சட்டென  இதழ்களைத்தூவி
ஒரு நிமிடம்  வாழ்த்திப் போக!!
உன் கைகளுக்குளே என்
உலகை வைதாய்  எண்ணிய
இயத்துடிப்பை உணர்ந்த மனசு
தன்ஆசைகளை உன் காதுகளில்
 மௌனமாய் சொல்ல 
உன்உணர்வுகளைில் கலந்த என்
உணர்வு 
 உன கண்கள்  என்னை ரசித்தபடி
ஏதேதோ சொல்லிடத் துடிக்க
புரிந்தும்  புரியாமலும் நான்
மனதிற்குள் ரசித்தபடி தவிக்க!!
அந்தநிமிடம் இந்த உலகில்
 யாருமே மகிழ்ச்சியாய்
வாழந்திடா ஒர் எண்ணம் தோன்ற
விழித்திட்ட என் கண்கள்
என்னைப் பாவமாய் பார்த்து
கேலியாய் சிரிக்க !!என் மனம்
கோவமாய் சினக்க   விழிகள்
           சொன்னது உன் கனவை நிறைவேற்ற               
                                                       என்னால் முடியாது என்று...................


Thursday 26 April 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

விளையாட்டு

படைத்தவன் மோதி மோதி
உடைத்திட்ட வெற்றியை
உடையவன் உண்மையின்றி
தொலைத்திட்ட வெற்றியை
விதி விரைதெடுத்து கணகிட்டு
பெற்றுகொண்டதாய்  எண்ணி
அழுகின்றது மனசு
மோதி மோதி களைத்திட்டதால்!!

வலி கொஞ்சம் கொஞ்சமாய்
கொடியோற்ற வர்ண வர்ண
கனவுகள் வெள்ளை கறுப்பாய்
ஆனதால் படிப்பும் பயற்று
கிடக்க அறியாமை சோம்பலுக்கு
குடைபிடிக்க நிழலின் சுகத்தில்
துயரம் சுகமாய் உறங்க
வெறுப்பு வார்தையாய்
கதைசொல்ல வாழ்கையின்றி
அழுகின்றது  தோல்வி வெற்றியை
 தொலைத்தாய் எண்ணி!!

இறையவன் படைப்பில்
எல்லாமே சுயநலம் பெற்றதாய்
எதையும் சிந்திக்க மறுக்கின்றது
அறிவு துன்பதின் பக்கங்களில்
நின்றுகொண்டு எதையும் செய்யாது
சந்தோஷபக்கங்களை வெற்றி
கொள்ளா   துயரமாய்
பிறப்பின் கணக்கு பாவம் என்று
கணக்கிட்டு சொன்னதால்
துயரங்களை துடைத்திட
நல்இதயமின்றி  பாவம்
வென்ற மனிதனுக்கு
கதைகதையாய் படிக்குது விதி!