கருகி விழும்வரை வானமும்
நேசம் கொள்வதில்லைஉதிர்த்து பறக்கும் வரை
மலர்களும்
ரசிக்கப்படுவதில்லை
தெரிமால் தெரிந்து
கொள்ளும்
சிறுகுழந்தையக்கின்றேன்
உன்னைக் கண்டால்
நீயோ புரியாதவன் போல்
நடிக்கின்றாய் !!!
பேசும் நொடிகள்
பேசாதே கேட்கின்றேன்
உன் வார்த்தைகள்
தரும் சுகத்தை!!பார்க்கும் நொடிகள்
மூடாதே பார்க்கின்றேன்
விழிகள் பெறும்
சுகத்தை !1
வாழும் நொடிகளுக்குள்
வசந்தம் வீசும் நொடிகள்
தரும் உன் இதயத் துடிப்பிற்குள்
என் இதயத்துடிப்பின்
சத்தம் ஓரமாய் கேட்ப்பதால்
தானே எனக்கு வலித்தால்
நீ தானாய் வருகின்றாய்
எந்த ஆர்ப்பாட்டமுமின்றி
மௌனங்களால் உன்னை
வரவேக்கிறேன் ஏதும் இல்ல
நீலம்போல் !
!தருவாயென காத்திருந்து
ஏமாந்தநாட்கள்
புன்னனைப்பதால இல்லை
வாழ்த்துக்கள்
வழவைக்கதறியதால
புரியாமலே நிக்கின்றேன்
வீதியில் ஏறிந்த
விதிக்குழந்தையாய்
என்றோ ஒருநாள்
எனக்காய் பிறப்பாய்
எனற எதிர்பாப்பில்!!!!!!!!
அழகியவள் காத்திருக்க
அல்லிக்குளம் மீன் தவமிருக்க
வெண்பாத கொலுசு
பொயுரைக்க போயுரைக்க
தென்றல் தேகம் தொட
அச்சம்பட்டு பூவிதல் தொட்டு
காதோர இசையாய்
தவள்ந்தோட
கருவிழி கவியுரைக்க
காத்திருந்த அல்லிக்குளம்
தாகப்பட்டு பாதம் தொட
அழகியவள் நிழ் பட்டு
துள்ளியெழுந்த
மீன் பொருளுரைத்தது !!!தென்றலுக்கு
பத்துக்காசுக்காய்
பற்றிய பத்தினியை சிறையிட்டு
நீயமோ இல்லை
பொய்யோ நீ தரும்
அன்பு அறியாமலே
உன்னைத்தேடுத்து மனசு
இதயம் நீ
யாரெனெத் தெரியாமலே
குழம்புது தவிக்குது
நீ விட்டுப்பிரியும் நிமிடம்
நீ எனனோடு புன்னகைக்க
இதழ்கள் உச்சரிக்க
தவமிருக்கும் ஆனாலும்
நீ யாரோ எனறு
எனனை ஏமாற்றி
விலகிடத்துடிக்கும்
நிமிடம் நான் அனுபவிக்கும்
தனிமைக்குள்
நீ தரமறுத்த நம்பிக்கை
வனத்தின் தூரத்துக் கனவாகும்
மீண்டும் விதியென
நாட்கள் தனாய் நகரும்
மீண்டும் மீண்டும்
தோற்பது உன்னிடம் மட்டும்
நானாகவே நகருகின்றது
அர்த்தங்கள் அற்ற இருளோடு!!!
நான் பிறவாமலேயே
இருந்திருக்கலாம் ஆனாலும்
பிறந்துவிடடேன் பிறந்தவுடன்
இறந்திருக்கலாம் இறைவாஎன் பிறப்பு பாவத்தின் கூலியென்றே
நம்ம்புகின்றேன் இருந்தும்
ஒரு நிமிடம் ஒரு துளி
எனக்கான நிமிடங்களை
தேடுவதால் சுடுகின்றது
வாழ்க்கை
தேடித்தொலைந்து
விழும் கண்ணீர் துளிகளுக்கே
இவள் உணரவுகள் புரிகின்றது
இப்போது தான் புரிகின்றது
மரணத்தின் குழிக்குள்
ஏக்கத்தின் தூக்களே நிரந்தரம் எனறு !!!!
இதயம் ஒன்று
களவு போனதால் மலர்
ஒன்று வண்டிடம்
நீதி கேட்க்க சென்றதுமலருக்கு தெரியாது
களவாடி சென்றதே
வண்டுதானென்று
கல்லவனிடம் நீதி கேட்ப்பதே
மலர்களுக்கு வாடிக்கை
வாழ்க்கையானது
இன்றுபோனால்
நாளையுண்டெரென்ற
சொல்லுள்தேடும்
ஒருநாள் ஒருநாளும்
இருப்பதாய் இன்று போய்
நாளை தோன்ற காணோம்
இருந்தும் காத்திருக்கிறேன்
இன்று!அந்த நாளுக்காய் !!
ஏனோ சிலநேரம்
சிலநொடி
நீயே எல்லாமாய் உணரவைக்கிறாய்
என் கைபிடித்து
குழந்தையைப்போல்
கூட்டியும் செல்கிறாய்
அடுத்த நொடியே
என் உணர்வை பொய்யேயென
நினைக்கவைத்தே
தனிமையைக்கு துணையாக்கி
என் உணர்வை
பொய்யாக்கி விடுகின்றாய்!!!
வெளிவரமுடிய உன் உணர்வும்
வெளியேவரமுடிய என் மரணமும்
தோற்றே விழுகின்றது மரணக்குழிக்குள்
இருந்தும் இல்லா உன்னைப்போலே।
குட்டி குட்டி ஆசைகளையே
கொண்டாட முடியா இவள்
எப்படி தோற்ற ஆசைகளை
கொண்டாட ஆசைப்படுவாள்
இவள் தனிமையை
உடைக்கும் காலமே இவளை
தனியாகவே விட்டுவிடேன்
எப்பவும்
இவள் நினைப்பதும்
நடப்பது வேறு வேறேகவே
முடிகின்றதால் எப்பவும்
இவளுக்கு பொருந்துவது
தனிமையாகட்டும்
ஏமாற்றங்கள் வழ்கையில்
அதிகம் தான் அந்த
ஏமாற்றமே
வாழ்க்கையையின் புதிய
மற்றதை உருவாக்கின்றது
நாம் ஏமாற்ற படுவதை புரிந்தாலே
போதும்।
இவள் கடந்த
ஒத்தை பதையில்
பலரை கடந்தபோதும்
ஒருசிலரே நினைவில்
அப்படி கடக்கையில் இவள்
கைபிடித்தவள் அவள்
இவள் வலிகளில்
அவள் அழுகின்றாள்
இவள் பெற்ற சாபத்தில்
கிடைத்த வரமே அவள்
அவள் விழிபார்த்து
திகைத்தவிழிகளுக்குள்
பூக்கும் அன்பின் ஆழம் இவளானால்!!
ஒருவரை புரிந்தால் மட்டுமே
அவர் வலிகள் மற்றவரை ஆழவைக்கும்
இவளை புரிந்தவர்கள்
புரியாமல்போனவர்களுக்குள்
இவளுக்காய் நிக்கிறாள் என்றும்
அவள்।
வாயடியனவள் ஒற்றை சொல்லுக்குள்
மௌனமாகின்றாள்
விசித்திரமாகதான் உள்ளது
அவள் மௌனம்।இங்கே
உறவும் உயிரும் அழகாகின்றது
அவள் ஒற்றை சொல்
மௌனத்தில்!!!
துன்பமென்று தெரிந்தே
விழுகின்றோம் விழுந்தபின்னரே
எழுந்திட துடிக்கின்றோம்
இங்கே காப்பத்த யாரு
இலையென்றால் தான் வலிகள்
பேசுகின்றது!!!
என்னடா விசித்திரம்
சில உறவிற்கு
அர்த்தங்கள் புரியவில்லை
சில நட்பிற்கு காரணம்
புரியவில்லை
என் வாழ்க்கையின் கிறுக்கள்
போல் காரணமின்றியே
தோற்று போனாலும்
நிழ்போல் தொடருது
நெடுஞ்சாலை பயணம் போல்
விட்டு விலகிபோனாலும்
தூறல்வழி சாரல் மழை
தூறலால் நனைக்கு என்னை
தினமும் இது
அன்பின் தேடலால் தொலைந்த
குழந்தைக்கு கிடைத்த வரமா
இல்லை சாபமா!!
எதையெடுத்தும் நான் கொடுக்க
நான் கற்பனையுலகவானில்
பறக்கவில்லை இப்போ மாமா
நீ தந்த நான்
உன்னோடு பிறந்திறந்து
காலங்கள் காகிதமாய்
நினைவுக்குள் மறைந்தே
போனோம் மாமா
இரும்தும் அக்கம்பக்கம்
அவரவர் கொடுப்பதை நாமாய்
சும்மா கொடுக்க சுகமாய்
இருக்கு மாமா கேட்டாலும்
இல்லை மாமா நீயில்லா
நான்!!!
நம்வாழ்வில் ஒருவரிருந்தால்
நம் வாழ்க்கை அழகாகும் என்பது
நம் நம்பிக்கை அதுவே இருவர்
நம்பிக்கையானால் வாழ்க்கை
அழகாகின்றது நமைபோல்!!
ஒவ்வென்றும் ஒவ்வென்றை
காற்று தருவதே
வாழ்க்கை என்றார்கள்
நானும் மனிதபுத்தத்தை
புரட்டிப்புரட்டிப்பார்க்கின்றேன்
மனிதத்தறுகளின் அர்த்தங்கள் மட்டும்
புரியவில்லை
இறைவனின் விளையாட்டு
என்றார்கள்
இப்போ இறைவனையே
கேட்க்கிறேன்
இத்த விளையாட்டால்
அதிகமானா தண்டனை யாருக்கும்!!
ஒருபெண்மையின் வாழ்க்கை
முற்செடி பூபோன்றது
யார் கண்ணுக்கும்
தெரியா காயங்களே அதிகம்
காவல்காரர்களும் காகிதாப்பூவாய்
நினைப்பதாலேயே
இங்கே அவள் தியாகங்கள்
அசிங்கப்பட்டு தன்னம்பிக்கை
உடைக்கப்படுகின்றது
அவள் உடைந்து நிலைகுலைந்து
நிக்கும்போதே அவள்
பலகாலவாழ்க்கையை
ஒரு நொடியில் கசக்கியெறிந்து
செல்லவும் முடிகின்றது
இங்கே பூ
அன்பால் தடுமாறுகிறது
துணையென நின்றவர்
ஆசையால் தடுமாறுகிறார்
ஒற்றை சொல்லை சொல்லமுடியா
மனிதனால் துன்பம் என்னவே பூவிற்கே
தண்டனைகள்
அதிகம் தான் பெண்மைக்கு
படைப்பின் நியதியென்றாலும்
காக்க அப்பாவை
படைத்து தான் வைத்தான்
இறைவன் ஆனால்
அப்பாவிற்க்கு ஏன்
தான் புரியவில்லை
மனைவியின் அர்த்தங்கள்!!!அப்ப
அப்பாவை படைத்த இறைவனுக்கு
என்ன தண்டனை!!
கெட்டது நதியின் வேகத்தில்
வந்து சென்றுவிடுகின்றது
நல்லது ஆமையின் வேகத்தில்
வருவதால் நல்லது வந்தது
தெரியாமல் வாழ்க்கை நகர்கினள்றது
பேசி புரியவைக்க வேண்டிய
நேரம் பேசிடாமல்
உணர்வுகளை சிறைவைப்பவரே
தனது வாழ்வில்
தமக்கே தண்டனை கொடுத்து
தன்னையே தண்டிக்கின்றனர்।
போட்டிகளும் பொறாமைகளும்
இதுவரை காயப்படுத்தியதில்லை
இப்போ இதனாலும் காயப்படும்
காலமதுவே !!!
இதுவரைபார்த்த முகங்கள்
இதுவரை காணா முகங்களாய்
அழகாய்
புன்னையோடே விளையாடி
நடிக்கின்றது !! இப்போதுதான்
புரிகின்றது மனிதர்களை
விட இயற்கையை
ஏன் காதல் செய்தேன் என்று
முகங்கள் பார்த்து முகங்கன்
அறிய எனக்கும்
பல முகம் தேவையோ இறைவா!!!
என்றாலும் வேண்டாம் இறைவா
இந்த பொய்யான முங்களை விட
என் அழகான காடு என்றுமே என்
அழகாகன புன்னகையாகும்!!!
நடிக்கும் மேடையைவிட
நடிக்கும் வாழ்க்கை கொடுமைக்குள்
போளியாய் புன்னைக்க
கற்றுக்கொள்வதைவிட
உண்மையான தனிமைகள் வரமே
இதுவரை தனியாக
பூட்டிக்கொண்ட என் கனவுகள்
இன்னும் யாருக்கும் புரியாமலே
சிறைப்பட்டு கிடக்கின்றது
யாரும் புரிந்துகொள்ளா
உணர்வுகள் போல்
வெறுப்புகளும் வலிகளும்
தத்தெடுத்த குழந்தையை போல்
உறவுகள் இருந்தும்
அனாதையாய் கிடக்கின்றது
தனியாய்
உரிமையற்று மடிந்த உடலை
பார்த்து தவிக்கும் உயிர்போல்
இவளும் இவள் கனவுகளும் என்றுமே
தனியாகவே கூடு விட்டுபறக்கும்வரை
வாழும்!!!
ஒருநாள் ஒருபொழுது
எனக்க விடியுமா விடியல்
விடியலில் ஆதவன் ஒரு தேனீர்
தந்தென்னை அதிகாலையெலுப்பிட
மண்ணிற்கு வருவானா!!
பெண்ணவள் கேட்டாள் பேயும்
இறங்குமாமே ஆதலால்
ஒருகற்ப்பனை வரம் கேட்க்கிறேன்
ஆதவனே
பெண்ணிற்கு கிடைப்பதெல்லாம்
கற்பனைகள் தோற்றுவிடும்
கதைக்களமானதால்
குந்திதேவிபோல் வரம் கேட்கவில்லை
ஆதவா!!!
இதுவரை யாரையும்
ஜெயித்திடத்தோன்றவில்லை
ஜெயிப்பவர்களுக்கு பக்கத்தில்
ஒரு அணிலைப்போல் தான் நின்றேன்
முதல்முறை போட்டியுலகத்தை
பார்க்கிறேன்
போட்டிபோடும் மனிதனுக்குள்
ஒரு புள்ளிமானைப்போல் நிக்கின்றேன்
ஓடவும் தோணாமல்
போடிபோடவும் தோணாமல்
இது வேடிக்கையாகவே இருக்கு இறைவா
உன்வழி நானாக என்வழி நீயாக
நடுவில் ஒரு ஆரம்பம்!!!என் தொடக்கமும்
முடிவும் உன்னிடம்!!!
எதிர்காலம் தொலைவாய்
தொலைந்த இருளோடு ஒரு
யுத்தம் செய்ய ஒரு நிலவு
விழித்திருக்குமென கொஞ்மும்
நினைக்கவில்லை விழித்திருந்தும்
காத்திருக்கும் மொழிகள் தொலைத்ததேன்
நிலவே மண்ணீல் நீயும்
என்னைப்போல் வெள்ளையடை
சிறையெடுக்க மௌனங்களோடு
யுத்தம் செய்கின்றாயா
சொன்னாலும் புரிந்திடா இதயங்களோடு
பேசிபயனில்லையென என்னைபோல் நீயும்
ஊமையாகாதே!!!
என்னைச்சுற்றி விதியாடும்
ஆட்டம் புரியவிலை தான்
ஆனால் எனக்காக மண்ணில்
எதையும் விட்டவில்லையென
மட்டும் புரிகின்றது।
ஒவ்வெரு தோல்விகளும்
சொல்லும்படம் இதுவாக இருக்க
நான் காரணமேயின்றி நடகின்றேனோ
காலமே பதில்லெழுத்தட்டும்!!
அழகியகார்கூந்தல்
இழந்தவாசத்தால்
முழுமதியவள் வடித்த கண்ணீரில்
முகமது இழந்த அழகை அவன் இறந்தும்
பேசிய இதயத்தின் மொழியழகால்
அவள் கார்கூந்தல் மல்லிகை வசத்தை
சூடிக்கொண்டது!!
நேசங்கள் உண்மையா
எனத்தெரியவில்லை ஆனால்
நேசிக்கப்பட்டால்
எந்த தடையையும்
உடைத்தெறிந்து காத்திடும் என ஒரு
கற்பனை இதயமென்று கண்டேன்
கற்பனையாளர்கள் மாறினால்
அழகான உலகம் நியமகாலம்
இதை கற்பனையாளார்கள்
புரிவார்களா
காமத்தின் தேடல்களில் தொலைந்தவர்களை
கொஞ்சம் நியத்தையும் சிந்திக்க
வைக்கலாமே!!!கற்பனையுலகமே!!
கடவுள் தந்து
கடவுளே பறித்ததை
கடவுளாகவே
ஒரு இதயம் கொடுக்குமெனில்
இழந்தவளுக்கு கிடக்கும்
மதிப்பு எந்த வைரம்
போட்டாலும்கிடைக்காது
இதுதெரிந்தும் அறியா
மனிதன் அழகான வாழ்கையை
இருட்டுக்குள் தேடுகின்றான் !!!
இதைகற்பனைகள் கூட
கற்பனை பண்ணா கற்பனையானதால்
நியங்கள் மிருகவாழ்க்கை
தேடியாழைகின்றது !!
அச்சம்கொண்டபெண்மை
மிச்சமீதிவாழ்கைதேடி கால்களுக்கு
விலங்கை பூட்டுகின்றது !!
பாதம் பரத்தும் உயிர்
போகும்மென்ற போதைகொண்ட
உலமாவதால்!! பிறப்பிற்கும்
இறப்பிற்கும் அர்த்தம்மில்ல
வாழ்கையே பெண்ணை
தேடிப்பெற்றுக்கொண்டதால்
ஒற்றை கனவோடு சிலையானவள்
கொட்டும் மழையில் நனைத்தும்
ஆசைகள் தோற்றும அசையாது
நிக்கின்றாள் தடாகம் தாங்கிய தாமரைபோல்
உறவுகள் நம் உதிரம்
கலந்தோடும் உணர்வு போன்றது
மூச்சுக்காற்று உள்ளவரை இதியத்திற்குள்
துடிப்பதை தடுத்திடமுடியது
காமத்தை வென்ற ஆண்மை
தமையை பெற்றேடுக்கின்றது
தாய்மையை பெற்றேடுத்த ஆண்மை
பெண்மையை காக்கின்றது !!!
பெண்மைக்கு கொடுத்த வரம் இங்கே
பெண்மையே அழிக்கும் சாவமாய்
பெண்மை பெற்ற வரமாகின்றது!!!
கைகள் இல்லா கைபிடித்து
தோளில்லா தோள்சாய்ந்து
நிஜமில்லா நிழலோடு கதைபேசிட
பொய்யான இருள் தேடுது என்னை
கனவுலகத்தனிமைக்குள் வாழ்ந்திட
வாவென்!!
கிடைக்காது என
விட்டுபோன ஒன்று
கையில் கிடைக்கும் போது
கிடைக்கும் மகிழ்ச்சிக்கு
இணையான ஒன்றை
ஏதைக்கொடுத்தும் அடையமுடியாது।!!
எழுதிமுடித்த புத்தம்
விமர்சனங்களை கடந்து
விடையை தேடுது அவர் அவர்
கற்பனைக்குள்!!
யாரே ஒருவன் தொலைத்து
தேடும் கனவை
யாரோ ஒருவன் தூக்கி செல்ல
யாரோ ஒருவன் தூக்கிப்போட்ட
ஆசையை யாரோ ஒருவன்
கையில் ஏந்தி செல்ல
யாரோ ஒருவனைப்போல் ஒருவனாய்
ஒவ்வொருவர் வாழ்க்கையும்
தவிகின்றது கரணமேயின்றி
தேடும் காரணம் தேடியும் கிடைக்கா
ஒருவன் போல் கையில் வைத்தே
தேடும் ஒருவனாய்
தனியாய் த்விக்கு காரணமேயின்றி
யாரோ ஒருவன் நானென நினைக்கா
ஒருவனாய் வாடுவாழ்க்கை!!!
மண்ணில் வாழ்ந்தபோது
தமிழால் அயல் வீட்டோடு சண்டை
இழந்தே நாடுநாடாய் வந்தும்
தமிழால் நாட்டுக்கு நாடு
சண்டை
இங்கே இழந்தும் திருந்தாத ஒரு
மனிதம் நாமே !!!
இருக்கும் இததிற்கே
புரியக்கதால்
இறந்து வாழும் இதயம்
புரிந்து
இழந்த பெண்ணை வாழவைத்திட
துடிப்பதே காதலென்றால் விசித்திரம்
தான் கற்பனைவாழும் காதலும்!!!
சொல்லி கேட்டும் சொல்லாமலும்
கொடுக்கவும் இவளுக்காய்
வாழ வாழ்க்கையென்று சொல்லாமல்
கிடைத்திருந்தால் நீ கேக்காமலேயே
அழகமான பூந்தோட்டம் உன்னையும்
திரும்பிப்பார் என சொல்லியலைத்திருக்கும்
சொல்லும் சொல்லில் இல்லை
அன்பு
கூப்பிடும் உறவில் இல்லை
அன்பு
பேசும் வார்த்தையில் இல்லை
அன்பு
உனக்குள் எனக்குள் இல்லை
அன்பு
சொல்லாமல் பேசாமல் கூப்பிடாமல்
போனாலும் வலிக்கும் போது
அருகே வந்து காக்கும் இதயங்களிடம்
இருக்கின்றது அன்பு ஒற்றை
தாய் உலகை வென்றாள் அந்த
அன்பால் அன்று!!!
ஒவ்வேறுமுறையும் மழைமேகம்
கடக்கையில் ஒருமுறையாவது
என் கானலுக்குள் தூறாதாயென
இருவிழித்துறுகின்றது மழைமேகமாய்
தேடித்தேடி பார்க்கும் ஓரு அழகான
நாட்களை தேடாமலேயே கொடுக்கும்
ஒரு அழகான இதையம் இருந்தால் போதும்
வாழ்க்கை அழகாக
இவன் ஏன் எனக்க
கஸ்ராபடுகின்றான்
என சந்தேகம் வரவில்லை மாறாக
இவன்எப்போது
என்னை விட்டு
பிரியாபோகின்றனோ
என்ற அச்சம் வருகின்றது
இதுவரை என்னை
என் அப்பாவே
புரிந்தவராய் இருந்தார்
அதுவரையே என் சந்தோசங்களும்
இருந்தது!!!
ஒருநாள் ஒருமுறையேனும்
என் உயிர் தேடி வாடும் உயிர்
நீயே தானடி உயிரே!!உன்னால்
பலமுறை ஏமாறும் விழியிக்குள்
தூங்காமல் தவிப்பதும் நியமடி
உயிரே।
வாழ்க்கை விசித்திரமானது
விடியுமென இரவுக்குள்
காத்திருக்க செய்து விடியாமலே
முடிகின்றது
இதில் யாரோ ஒருவராரின்
வெளிச்சத்தை எதிர்பார்த்து
நகர்கின்றது நாட்கள்!!
என்னடா வாழ்க்கையிது
சிறையில் வாழும் மனிதனுக்கு
இல்லாத தண்டனையை
முயச்சி என்ற ஒன்றை சிந்திக்கும்
மனிதனுக்கு கொடுக்கின்றது
பாதையெங்கும்!!!
இன்று
பூக்கும் பூக்களுக்கு
ஏன்
இத்தனை கர்வம்
காதலையாய் பூப்பதாலா
இல்லை கதலருகாய் பூத்தலா
சின்னவர் முதல் முதியவர்வரை
கையில் ஏந்தியபடி
புன்னகைத்து செல்கின்றனர்
ஏக்கம் நிறைந்தவிழியில் கூட
காக்கும் பொழுதை
இத்தனை அழகைக்கொடுக்கும்
உனைபோல வாழ
என்ன தவம்செய்ய நான்
காதிருக்கும் மனிதன்
கடிகாரம் தொலைத்து விழிதேதட
பார்க்கிறேன் நடக்கும் பாதையெங்கும்
இன்று பூமியெங்கும்
உந்தன் அழகே அழகு!
உன்போல் அழகானவளாய்
பிறக்காவிட்டாலும் உன் அழகில்
நானும் கொஞ்சம் காதல் கொள்கிறேன்
தொட்டுவிட்ட இதழ்களை
தொடத்துடிக்கும் உணர்வாய்
கூடி கூவி கேட்டு கூறும் இசையின்
மொழியின் வடிவில்
வாழும் கவியின் அழகில்
பேசும் காதல் நாம்
எதிர்னீச்சல் போடும் எவருக்கும்
கிடைக்கா ஒன்று நமக்கு கிடத்துவிட்டால்
நமக்கான நம் வெற்றி
நம் வெற்றியை எழுதுவது
நியம்
இதுவால் இதை காக்கமுடியும்
என்ற அதுவாய்
நாம் மாறமுடியாமல் சென்றால்
அதுவே நாம் தொலைத்து செல்லும்
அழகான வாழ்க்கை
இதுவாய் இல்லையென
விலகிச்சென்று தேடித்திரும்பிப்பார்த்து
நினைவுகள் பேசினால்
அதுவே நாம் விடுச்சென்ற காதல்
நாம் உணர்வுகளை உணரா தருணங்களே
நாம் புரியா நம் வாழ்க்கை
நம்மை நாமே அடிக்கடி
தோற்கடித்து காட்டுகின்றோம்
இந்த உலகிற்கு !!
ஒன்றை தெரிவுசெய்யவும்
தெரியாமல் ஒன்றை
முடிவெடுக்கவும் தெரியாமல்
யார்யாரோ கைப்பொம்மையாய்
அசிங்கப்பட்டுகொண்டு நம்
வரலாற்றையே தவறக்குகின்றோம்
ஒவ்வொருமுறையும்!!இங்கே
ஒவ்வொரு தனிமனிதச்செயலும்
ஒரு இனத்தின் வரலாராகமாற்ற
நினைப்பாரே ஜெயிக்கின்றனர்!!!
எல்லாமனிதனையும் நேசிக்கும்
உறவாய் இருப்பவர் வாழ்க்கையில்
கூட இத்தனை
வண்மன் காட்டும் மனிதர்கள்
இருக்குமென்று
இதுவரை நினைக்கவில்லை
கனவுகள் தூக்கத்தை
துக்கிச்செல்கின்றது
நினைவுகள் உணர்வோடு
யுத்தம் செய்கின்றது உயிராட
உடல் சோர ஓடிட முடியாமலே
தள்ளாடும் கால்களுக்கு
வறுமை கொடுத்த தண்டனை
முதுமையிலும் தொலையும்
மகிழ்ச்சி!!!
அழகான நாட்களை
உருவக்கத்துடிக்கின்றேன் ஆயுட்காலம்
இழந்தபூவாய்
ஒரு சிலர் கையை பிடித்துநடக்க
ஆசை கொள்கிறேன்
முடிந்து போன பாதையில்
மாமன் இதயத்துடிப்பை
கேட்க நினைகின்றேன்
எரிந்த சாம்பலின் முன்
முடியாதென கூறும் இறைவன்
மூன் ஒற்றை பூவை வைக்கின்றான்
நினைவு பேசும் மொழிகேட்டு
மீண்டு எழுத்திடு மகளே
நீவேண்டுமென்றே நான்
வரம் இருக்கின்றேன் !!!
காலம் கடத்தபோதும்
கண்மணியே கனவில் கூட
உன்னை மறக்கவில்லை
உன்னை!!!
விதியின் விளையாட்டால்
உன் அண்ணன்
கோவம் கொண்டதால்
நீ இன்று அவன் கையில்
வரமாய்யாகின்றாய்!
நான் வாசம் தொலைத்து
உனக்குள் உறக்கம் கொண்டதால்
இன்று
அண்ணன் கையில் நீ
பூவாய் ஏழுகின்றாய்!!!நான்
உனக்குள் உயிராய்
அவன் கையில் விழுகின்றேன்!!
உன் அண்ணன் உன்னை
கைகளில் ஏந்த நான்
உன்மொழி மௌனம் ஆகின்றேன் !!
நான்தோற்றுப்போன
பெண்மை
நீ ஜெயிக்கவாழும்
பெண்மை!!
நீயில்லாமல் வாழ்கின்றாய்
நான் இருந்தும்
இல்லாமல் வாழ்கிறேன்
இருவர் நிலையும் ஒன்று
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
நிழலாய் இருப்போம் என்றும்।
ஏனனென தெரையாமலேயே
ஓட்டம்
யாரெனத்தெரியாமலே
உறவு
வாழ்வது புரியாமலேயே
வாழ்க்கை இது
வினேனத்தெரியாமலேயே
யுத்தம்
நாம் ஏனபுரியாமலேயே
பிரிவு
விதையின் பழுதில்
விருச்சங்கள் எழுவதில்லை
கெட்ட மனசிக்குள்
நல்ல மனிதன் வாழ்வதில்லை
எல்லா சூழ்நிலையிலும்
புன்னகைக்க கற்றுக்கொண்டவள்
இப்பொது !! புன்னகைக்கு
அச்சம் கொள்கின்றாள்
இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டவள்
இப்போது !!! துக்கம் கொள்ள்
மரணம் தேடுகின்றாள்
ஒற்றை கூறைக்குள் வர்ணக்கனவு
கண்டவள் இப்போது!!
ஒட்டைக்கனவுக்குள் ஒளியற்ற
நிலவனாள்
ஒற்றை தனிமைக்குள் ஒராயிரம்
கதைபடிப்பவள் இப்போது
தனிமை கண்டால் அச்சம்
கொள்கின்றாள் ।
பூக்கும் பூக்களிடமே அன்பை
காட்டியவள் இப்போது
ஏக்கம் சொன்ன ஊமையானால்
தென்றல் கற்றுக்கு கவிதை
சொன்னவள் இப்போது
சுவாசக்கற்றையே வெறுக்கிறாள்।
ஒவ்வெரு தருணங்கள்
ஓவ்வெருவரை புறிந்து கொள்ள
செய்கின்றது
உன்னை புறிந்துகொள்ள
இறைவன் தந்த தருணம் இதுவோ
உன்னை வெறுத்தே தீட்டியதுண்டு
பேசாமலே இருந்ததுண்டு
நீயாரென அறியராமலேயே
உன்னால் காயங்கள் பட்டு
அழுததுண்டு மற்றவர் சொல்லால்
குழம்பியதுண்டு என்னையே
வ்வெறுத்து தனிமையானதுண்டு இருந்தும்
இன்றுவரை உன் நம்பிக்கையை
வென்றவளாய் நான்னிலை ஆனால்
எனக்கு வழியாய் வழியில் வருகின்றாய்
என் சுமையின் வழியில் நீ நிழலாகையில்
நான் பயமிறி எழுகின்றேன்
நான் ஜெயிப்பதும் தோற்பதும்
காலம் கடந்த வரலாறு
என் வரலாற்று கல்லறையில்
நீயே புன்னகை।அப்பா
கரம்பிடித்து நடக்காத இவள்
உன் பாதச்சுவட்டுக்குள் அப்பாவை
காண்கிறாள்!!!வேடிக்கையானது
காலமும் உறவு எனக்கு।nm
முதல் முறை திறந்தது
ஒருவித பதை அது
இருண்ட காட்டுவழிக்குள்
நடக்க தொடங்குது
பல முறை விழுவேன் என
அறிவிக்கின்றது அறிவு
இருந்தும் நம்பிக்கை போவென
தள்ளி விடுகின்றது !!பல முகம்
பல விதமாய் தோன்றுகின்றது
இருந்தும் எதுகும் தெரியாமலேயே
நடக்கிறேன் இறைவன் வருவான்
என நம்பி!!!
கொஞ்சம் கொஞ்ச
கொஞ்சநேரம் இல்லையெமும்
மனிதனே குடும்பம் இருந்தும்
தவிக்கும் நிமிடத்தை உருவாக்கி
மிஞ்சநேரம் கொஞ்சத்தேடுகின்றான்
ஓய்வாய் சிலநொடி
ஓரமாய் கேட்டது
உன்னோட சிலநொடியை
யாரே இவனெ தனாய்
தள்ளிவிட்ட காலமே
பல கதை கூறியே
காணாமல் போனபோதும்
உனக்கான நிமிடத்தையே
எனக்காய் கேட்குது தனாய்
வீணா ஆசையென நானாய்
சொன்னாலும் உணர்விற்கு
புரியவில்லை இன்னும்!!!இங்கே
இன்னும் நான் நிலவை கையில்
பிடிக்க ஆசைப்படும் குழந்தையே!!!
நீயே உலகம் என்றவள்
உலம் இலை இப்போ
தன் வழ்கையே அழகு என்றவள்
வாழ்வில்லை இப்போ ஆனாலும்
வாழ்கின்றாள் உன் நிழல் கவிதையாய்!!
யாருடைய
திமிரும் அலச்சியம்
என்னை எதுக்கும் செய்ததில்லை
அதை விட எனக்கு அதிகமாய்
இருப்பதால்
யாரையும் நம்பி எத்த
எதிர்பாப்போடு சிலையாய்
நின்றதில்லை என்னை
நம்பிக்கையே ஓடுவதால்
ஆனால்
பொய்யான அன்பை மட்டும்
யார்மீதும் வைத்ததிலை
பல முறை ஏமாந்தும்
முட்டாள் பெண்ணாயே வாழ்கின்றேன்
உன் முகம் தேடியே
பல விழிகளுக்குள் விழுந்தெழுந்து
உன் விழிக்காய் விழிக்கின்றது இரவு !!
நாணம் கொண்ட
பெண்மை
ஆசை கொண்ட நெஞ்சம்
மறைத்து!!
தென்றல் பாடும் பாடல்
பாடி
கிளிகள் சொல்லும் கதைகள்
கேட்டு
ஆசைக்கனவில் மிதக்கிறாள்
நதிமேல் படகாய்!!!
அச்சம் நிறைந்தமனதை
பதறித்தாங்க
இதயம் இல்லாவிட்டாலும்
பதறவிட்டு எழந்திடாதே
மிஞ்சமீதியாசையையும் அச்சப்படவைக்க
இதயம் உண்டு!!
வலிகள் கடந்து காயங்கள் கடந்து
கடந்தபாதையின் சுமைகளேடு
புதிதாய் ஒரு பாதை
அவள் கனவின் சுமையாய்
பூக்கின்றது
தடுத்த கைகளைத்தாண்டி
வெற்றியடையாதென்ற
நம்பிக்கையைத்தாண்டி
இருப்பவர் விளையாட்டைத்தாண்டி
இல்லாதவளின் நில்லாத ஆசையாய்
பூக்கின்றது!! இது ஒரு
மரணதின் வெற்றி
ஒரு மரணத்தின் தோல்வி
இருந்தும் இவள் கனவு
இழந்தே தனிந்ததே வாழும்
பெண்னிடம் ஆண்மை
பெண்மைத்தன்மையையே
இழந்திடச்சொல்கின்றது
இழந்தபெண்ணிடம் இருப்பதும்
ஆண்மையின் தேடலும்
இங்கே மட்டுமே கேள்விகள்
இல்லாவிடையாகின்றது
இந்தமாயாவுலதில் சில
விந்தைகளும் நிகழும்
சிலமரணகளும் நிகழும் ஆனால்
எப்போதும் பெண்மை மட்டுமே
மீண்டும் மீண்டும் தோற்க்கும் !!
வறுமை வாட்டியபோது
அறியாமுகம்
திறமை பேசியபோது
தேடாமுகம்
பணக்காரமாயக்கண்ணாடி விழுந்ததும்
தேடுமுகமானது!!
இறைவேடிக்கை புரியாமல்
திகைக்கின்றேன்
வரும் ஆபத்தை புரிந்து!!
முயற்சியொன்ரே
என்னுடையது
மற்றவையணைத்தும்
இறைவனுடையது
தாங்குவதும்
வீழ்த்துவதும்
அவன் என்றால்
இப்போது
வீழ்த்தியவனே என்னை
தாங்கிப்பிடிக்கின்றான்
வேதனை கொடுத்து
வேடிக்கை பார்த்தவனே
பாதையாகின்றான்
முதல் முறை என் பாதம்
புற்கள் மீது பனித்துளிக்குளியல்
செய்கின்றது!!
இதுவரை யாரும் பார்த்திடா
அவள் மனசை ஒரு நொடிப்பார்வையில்
அவன் பார்த்திட்ட போது!
மறவர் போட்ட
மாயக்கண்ணாடியை உடைத்து
அவள் மனசு ।அவளை
அவளுக்கே அழகாய் காட்டியது
ஒற்றைநொடிபார்வை பட்டு
மற்றநொடி ஏக்கமாக அவள்
கேட்டநொடி இதயதிற்க்குள்
காத்திருக்கு
தோற்று போய் அழுத போதும் சரி
போராடிக்கலைத்தபோதும் சரி
நான் தேடிய சொத்து
அன்பு ஒன்றே।
இறைவன் விளையாட கையில்
எடுத்த பொம்மை நான் மனிதன்
விளையாட கையில் எடுத்த பொம்மை
பெண் இயற்கை விளையாட கையில்
எடுத்த பொம்மை மனிதன்
நித்தம் பேசும் கனவிற்க்குள்
யுத்தம் செய்யும் நினைவேடு
மொழிகள் சண்டையிடாமல்
தோற்க்கின்றது!!
புதிதாய் ஒரு தொடக்கம்
எனக்கான தொடக்கம்
யார் வந்தாலும் போனாலும்
இருந்தாலும் பிரிந்தாலும்
நிக்காத தொடக்கம்
போனகாலம் கற்றுக்கொடுத்த
தொடக்கம்
இருக்கும் காலம் கற்று
தரும் தொடக்கம் இது
எனக்காய் நான் தொடங்கும்
மிஞ்சக்காலத்தொடக்கம்
கைகொடுத்து கைபிடித்து
கூட்டிப்போகும் இறைவன்
ஆடும் விளையாட்டின்
தொடக்கம் இங்கே
ஓடும் குதிரை நான்
தொடக்கமும் முடிவும் இறைவன்