பிறப்பின் சந்தோஷத்தில் இறப்பின்
வலியை எழுதிய இறைக்கு எந்தன் உயிர்
கொடுத்தேன் சந்தோஷமாய்!!
இழப்பின் நடுவே விழுந்த சங்கடங்களை
என்னோட மாலையாக்கி சந்தோஷத்தைக்
கொடுத்தேன் இறைவனுக்கே!!
பூக்கள் உதிர்ந்த நாரில் கண்ணிர் முத்துகளை
பக்தியோடு கோர்த்து மகிழ்வாய் போட்டேன்
என் உயிர் மாலையாய் இறைவனுக்கு!!!
மறைந்த. உடலெடுத்து என் உயிரால் உயிர்கொடுத்து
இருண்ட நாளுக்கு ஓளியேற்றினேன் நானாய்
இறைவன் சொல்லாமலே!!
கரையின்றிய கடலேடு தரைதொடா தொப்பம் போல
தனியாய் மிதக்கின்றது வாழ்கை யார்வுடனும் கோவமுன்றி
!! தவறுகளை உருவாக்கி இறைகற்று தந்த பாடத்தையும்
அறிவிழந்த உயிரின் உணர்ச்சியால்
உடைந்தெறிந்த கண்ணாடி. காயத்தைப்போல
கற்றுக்கொண்டேன் எனக்கான தண்டனையாய்!!
வலிகளுக்குள் வலிகளை வழியமைத்த இறைவனுக்கு
நன்றியாய் என் வண்ணங்களை கொடுத்தேன் அன்பாய்!!!
கற்றபாடத்தையும் வாழ்வையும் சிந்தித்த
கற்பனை தோல்விக்கும் எனக்கும் இறைகல்லாய்
புன்னகைக்க கண்ணின். நீர்சுரப்பிக்கும்
எனக்கும் எப்போதும் சண்டையானது என் வாழ்கையில்!!!