Friday 30 April 2010

கனவிற்குள்.. ஒர் கல்லறை......

உன் இதயவீட்டுக்குள்
விதையாகி....
உன் கண்ணீர்த்துளியால்
அரும்பாகி...
உன் சுவாசக்காற்றால்
உயிராகி....
உன் கனல் ஒளியால்
வளர்ந்து...
உன் வார்தை  கேட்டுப்             
பெரிதாகி....
உன் காதல்மொழியால்
கருவாகி....
உன் மனம் போல்
மொட்டாகி
உன் வர்ணத்தால்
நிறமாகி..
உன்அழகால்    பூவாகி         
உன் மார்வோடு    தலைசாய்த்து
என் விதியோடு கோவப்பட்டு
நொத்து வெறுத்து
உன்னை இழந்து என்னைத் தேடி
உனக்குள் கருகிடும் என்னை
ஏனடா தொலைத்தாய்...................

Saturday 10 April 2010

பிறை நிலா


தேய்ந்தாலும் மறைந்தாலும்
விட்டு விட்டு வளர்ந்தாலும்
வளராது இருளோடு பூத்தாலும் ! 
ஒளியிழந்து தவிந்தாலும்! 
என் காலம் இனிமை 
தராது போனாலும்!
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாத்தாலும்!
தொலைதூரத்து தென்றலாய்
என்னை நீ வதைத்தாலும்!

கண்ணீரை மட்டும்
கண்கள் வரைந்தாலும்
முழுமையின்றி அழிந்தாலும்
திசைகளின்றி போனாலும்
மாறாது விடிந்திடும்
பொழுதுக்குள் உனக்குள்
வாழ்ந்திடும் நிமிடங்கள்
என்னோடு வாழ்ந்திடும்
காலம் வரை என்
இதழ்பூக்கள் என்றும்
உனக்காவே பூக்கும்........
என்றாலும் புரிந்திடு கல்லறை
சாட்சியாகும் வரை தான்........

Friday 9 April 2010

இன்ப நாள்....................

மீண்டும்  மீண்டும்    தொட்டு     
விட்டு  விட்டதைச் சொல்லும்  
நாள்! 
விட்டுச் செல்லும்
கெட்டாதிற்கும்   நல்லதிற்கும்       
சாட்சியாய்   ஏறி இறங்கிடா நாளை  
கைகோர்த்திடும் நினைவிற்கு   
சாட்சியாக்கி பாதையாக்கும் நாள்.....  

பதவிக்கு வந்தாலும்
பாதையோரம் கிடத்தாலும்     
கசக்கும் நினைவுகள்
இதயத்தை பிழிந்தாலும்
சிரிக்க நிற்கும் நாள்....

போனால் மாற! மாறினால்
வீழா! வரையறையற்ற நாட்களை
வந்து வந்து சொல்லி நிற்கும் நாள்......

கொண்டு போகும் வரை
சொல்லி களைந்து
மனிதனோடு மொட்டு முதல்
சருகுவரை தரையோடு
இன்பத்தை  தேடும் நாள்
ஒரு நாளோடு மட்டும்
தள்ளாடுது மதுவருந்தும் மனிதனாய்......................