Sunday, 25 December 2022

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்.....

 முமையில்   ஓரு ஓய்வுகாலம் 

வரமாய்  கிடைத்தால் மண்ணில்

மீண்டும் அப்பா அம்மா கைபிடித்து

நடந்திட  காத்திருக்கு

ஒரு பொற்காலமென

தானாய்  கைபிடித்த தனிமை

கண்ணீர் துடைத்து எழுந்திட

சொல்லு   என்னை!

காலத்தேடு  கற்றவை 

உன் பாதையில் பயம் தராது என்று

மீண்டும் நான் நானாய்

வாழ எழுந்திட சொல்லுது 

 கண்ணீர்துடைத்தே!!

மிருகங்களின் நட்பாகி

குருவிகளின் இசையாகி 

 நாகத்தேடு வம்பிழுந்து 

அச்சம்போல் நடித்து

எழுந்துபடமெடுக்க 

 அருகிருந்தே ரசித்து

மீன்பிடித்தே மீண்டும் 

நீரில் விட்டு

அல்லிபூக்க நிலாவைத்தேடி

கரையோரம்  காத்திருந்து

 நிலவேடு கதைபேசி  

கவிசொல்லி

பூக்களேடு சண்டைபோட்டு   

பூவிதழ் திறந்திட காத்திருந்து

போர்வை விலக்கி 

ஆதவன் ஓளிகண்டு  

பனிதுளியில் கால் நனைக்க 

 எழுந்திட சொல்லு தனிமை

கண்ணீர்துடைத்து

காட்டின் சொல்லப்பிள்ளையாய்

நடைபோட

அச்சமில்லை துன்பமில்லை

குறையேடு  வாழும் வாழ்க்கையில்லை

ஆடம்பரதேவையில்லை

 அழுகையைம் தேவையில்லை 

எழுந்து  வாவென  சொல்லு தனிமை

கண்ணீர்துடைத்து

தொலைத்த

பொம்மை தேடிய சிறுமியாய்

என் அழகான நாட்களை தேடியேட

தனிமை கூப்பிடுது  என்னை

 ஆசையாய்!!!!


 

No comments: