Showing posts with label தேடலால் வந்தசாரல்...... Show all posts
Showing posts with label தேடலால் வந்தசாரல்...... Show all posts

Wednesday, 6 March 2013

காலம்!!!

காலகாலமாய் பலதைக்கற்று
 பெற்றுத்தந்த காலம்
தொலைவாகி போனபின்
தவறை எழுதிவிட்டு தொலவிற்காய்
அழுகின்றோம்!

தப்பென உணர்ந்த போதும்
தவறென அறிவுசொல்லிய போதும்
கேளாது மனசை ச் சொலுத்திட்டு
ஏதோஒன்றைிடம் வாழ்வை
தோற்றிட்டு அழுகின்றோம்!!!

உரிமையில்லாத உறவிலும்
 நில்லாது ஒர் கதையை
தொடராக எழுதிவிட்டு சொல்லாது
தவிக்கின்றோம் மற்றவர்சொல்லியும்
கேட்காது தண்டனை பெற்றுவிட்டு
நில்லாது துடிக்கின்றோம்!!!

எல்லாமே தெரிந்தாலும் வாழ்வை
கண்முன்னோ தொலைத்து விட்டு
தொலைவாகி நிற்கின்றோம்
இதை வெல்லவும் முடியாது மெல்லவும்
முடியாது ஊமையாய் போகின்றோம்!!

மீண்டும் காலம் கற்றுவிட...கற்றுவிட
தோடுகின்றோம் கற்பனை,யாய்,,,காலத்தை

Wednesday, 6 February 2013

இரு இதயம்

உன் மகிழ்ச்சிகளில்
நான் தொலைவாகின்றேன்
உன் சோகங்களில்
நான் அருகமர்கின்றேன்
உன் தேவைகளில்
நான்  நீயாகின்றேன்
உன் சோர்வுகளில்
நான் நிழலாகின்றேன்
உன் ஆசைகளில்
தொலைவாகின்றாய்
என் மகிழ்ச்சிகளில்
 துயரங்களாகின்றாய்
என் கனவுகளில்
வேடிக்கையாகின்றாய்
இருந்தும்   நமக்குள் பிணைப்பு!!
நாமாய் நாம் வாழ
ஆண்மையா பெண்மையா
தடையென எண்ணிய
தேடலில்  ஆண்டுகள் கடந்து
மி
ஞ்சியது சொல்லறித இரு இதயமே!!

Thursday, 31 January 2013

மறவன்............

மறைவிற்குள் நில்லா  மறவன்
மறைவு தேடிச்சொல்லும் 
கதையென்ன!
வரவிற்காய் கூடும்  மறவன்
வரமாய்  எண்ணும் மறவென்ன

கொடிகொடியாய் அறுக்கும் மறவன்
கொடியின் வேரில் தேடுவதென்ன
அடிதடியாய் அலையும்  மறவன்
அழித்த மறவின் கெதியென்ன

பழமைக்குள் புதுமைதேடும் மறவன்
மறவென சொல்லும் கதையென்ன
கட்டுபாட்டை இழந்த  மறவன்
கட்டிக்காக்கும் மறவென்ன

ஒழுக்கத்தை  இழந்த மறவன்
ஒழுக்கமாய் எழுதிடும் மரவென்ன
பெண்ணினத்தை இழிவுபடுத்தும் மறவன்
பெண்ணிற்காய் சொல்லும் மரவென்ன

இரு பாலாய் பிறந்தமறவன்  ஒருபாலுக்காய்
எழுதும்  மரவென்ன
இருட்டிற்குள் மனசை வைத்த மறவன்
வையகதிற்கு சொல்லும் மரவென்ன

வாழும்வரை வரைந்த மரவை
மறவன் இருக்கும் போதேஅழிப்பதென்ன!!
தமிழுக்காய்  சொல்லிச்சொல்லி மறவன்
வாழ்கைக்கு தடையாகி போன மரவென்ன

தடைகளாய் தடையிட்டமரவைவிட்டு
 தடையின்றி வந்திட்ட  மறவன்
தடை தாண்டி கற்று தன்வாழ்விற்காய்
தேடிக்கொண்ட மரவென்ன!1

தலையில்லா மறவனாகி  இன்று
தலைகீழாய் தெறித்தோடும் மறவன்
தவறியபின் தேடியழையும் வாழ்வின்
 கதையின்  மரவென்ன!!

அடிமைக்குள் ஓர்மரபு  !
பாலோடு பால் கலந்து
பாலாகி நிற்பதென்ன
பொறுமையாய் இருந்த மரபு
பொறுமையின்றி போனதென்ன  மண்ணெங்கும்
கொடுமைகளோ மரவாய் ஆனதென்ன!!!!

Sunday, 13 January 2013

யார் தவறு...............................

பெண்னே வறுமை யுத்தை
வென்றிட வேலையுத்தை
நடந்தும் நீ கொஞ்சமும்
கருவறையைக் கல்லறையாக்கு!!!

கிழிந்து விட்ட ஆடை மறைக்க
புதுப்பாதை தொடங்கும் நீ
கொஞ்சம் கற்பப்பைக்கு
விடுமுறை கொடுத்து
கண்ணிற்கு ஓளியையெடு!!

 உன்னை  மறந்த வேளை
வாழ்வை கண்ட  சந்தோசதில்
வசதியில்ல வாழ்கையில்
ஆடம்பரம்  தேடும்   உன்
மனசின் மறதிக்கு மருந்தையெடு!!

காமத்தீயில் சுழன்று கரைந்து
இணைந்து வயிற்றைநிரைத்து
இறைவன் கொடையொன
ஒன்றிண்டைஅடுத்தடு பெற்று விட்டு
ஓப்பாறி வைப்பதனை விட்டுவிடு!!!!

அத்தனையும் பெட்டையென
அதற்குள்ளும் ஆண்பிள்ளை தேடும்
உன் கருணைச் சுயநலத்தின் கள்ளிச்சொடிப்பாலை
ஆணிற்கு கொடுத்திடா தந்திரத்தை
கருணையோடு நிறுத்தி விடு
உன்னையோ நீ ஏமாற்றுவதையும்  புரிந்திடு!!

உன்வயிற்றை கண்ணீரால் நிறைத்து
மழழை வயிற்றை தண்ணீரால் நிறைந்து
அகதியாக்காதே !!அதை அடிமையுமாக்காதே!!!
கொடுமை படுத்தாதே கொன்றுவிட்டு
தியாகியாகி தெருவில்விட்டுதேடியழையாதே
கொஞ்சம் கருணைகொண்டு
கருவறையை கல்லாய்யாக்கிவிடு!!

உன்னைச் சுமாக்கா தலைவன் சொல்லை
நம்பி பிள்ளைசுமக்காதே
துள்ளிதிரியும்வயதில்பள்ளி
 சிறுவர்பையுக்குள் குழந்தையை  வையாதே
அடிமைக்கழுதையாய் பொதியச்சுமக்க
எங்கும் அனுப்பாதே!!!!
!கொஞ்சம் !!கருணைகொண்டு பிள்ளை
                                      சுமந்திட  உண்மை கண்டிடு பெண்ணே!!!

Sunday, 30 December 2012

வர்ணமழை


இயற்கையில் ஒர் விந்தை
மனிதனுக்கு புரியா விந்தை
ஆதவன் அள்ளியொடுத்தவிந்தை
மேகமதிற்குள் ஓடும் விந்தை
தூறலாய் சிதறும்விந்தை
கண்ணை கட்டியாலும் விந்தை
சிந்தையை நனைக்கும்  விந்தை
செய்தவருக்கு புரியா விந்தை
சீற்றம்கொண்டதால் வந்த விந்தை
அழித்திட  துடிக்கும் விந்தை
அழிந்தவர் சிரிக்கும் விந்தை
அழிந்தழித்து மாற  விந்தை
மனிதனக்கு
அழிவை காட்டும் விந்தை
இறுதியாய் விந்தையாய்
வந்த விந்தை
திருத்திட விளையாடுது
வானவிலின் வர்ணத்துறலாய்..........


எதற்கு இது இறைவா...............

ஆண்டுதோன்றி மறையும்
ஆண்டாண்டு புதிய புதிய
எண்ணமும் மீண்டும் தோன்றி
மறையும் !!நடப்பது கொஞ்சம்
இழப்பது கொஞ்சம் இருந்தும்
இருபதை நினைத்து நடந்ததை
மறந்திடத்தேன்றும் !!ஆனாலும் 
மாறதே நடந்திடும் யாவும்
 ஏக்கங்கள் கூடும் எதிபார்ப்புக்கள்
பெருகும் காத்திட ஓர் இதயம்
தேடும்!!! கிடைக்காது போனால்
எல்லாமே அழிந்ததாய்  நிற்காது
 என்னாலும்  வாடும் 
கருணையுள்ள மனிதனை தேடும்
கருணையற்ற செயலையோ
கருணையோடு செய்யும்
வீராப்பாய் உறுதியோடு
எழுதிடதுடிக்கும் மீண்டும் ஓர் 
தோல்வி  வந்து  அந்தனையும் 
சேர்த்தேயுடைக்கும் எது நடந்தாலும்
 இதுவோ வாழ்வாய் தேன்றும்
மீண்டும் ஒர்பிரிவு எதற்கொன தெரியாது
கூடவே தேன்றும் கருணையற்றவன்
இறைவனாய் போவான்!!!!!!¬

Thursday, 15 November 2012

தீபாவளி

பட்டுண்டு பாவாடையும்ண்டு
வேட்டியுமுண்டு சட்டையுமுண்டு
விதவிதமாய் உடைகளுமுண்டு 
ஆனாலும்
                                                                 அணிந்திடாத் தீபாவளி
கோயிலுண்டு வசதியுண்டு
ஆறுகாலபூசையும்முண்டு ஆனாலும்
 அங்கே போகமுடியா தீபாவளி
அரியுண்டு மாவுண்டு சீனியுண்டு
நெய்யுண்டு பக்கத்தில்வீடுமுண்டு
 ஆனாலும் விதம்விதமாய்
பலகாரம்செய்திடாத்தீபாவளி
அன்னையுண்டு தந்தையுண்டு
பிரிந்த போதும் கையோடு
 தொலைபேசியும்முண்டு ஆனாலும்
 வாழ்த்திட முடியாத் தீபாவளி
கணவருண்டு பிள்ளையுண்டு
ஒரு பொழுது கூடியுண்ண நேரமில்லா
வாழ்வும்முண்டு இருந்தபோதும்
மீட்கமுடியா நேரத்தை வாழ்த்தி
ஓய்வாக்க வந்திட்ட தீபாவளி
அன்பை பறிமாறிட முடியாது
போனது தேசமற்ற மனிதர்க்கு
விடுதலையின்றி............



Saturday, 10 November 2012

வட்டம்.........................

உருண்டை பந்துபோல்
உருண்டேடுது வாழ்வு
மேடுபள்ளம் மோதி!
வந்து கூடி உறவாடி
விட்டுப் பிரிந்து உறவாகி
விளையாடுது  விதியாகி
கட்டிக் காத்திடமுடியாது
தள்ளாடுது
                                                       கருணை கதறிக்கொண்டு
முட்டி மோதி பட்டுப் பதறி
விட்டு விலகி உருண்டு புறன்டு
உளறி கொண்டிநிற்கு பாசம்
எதுகும் அறியாது‘
அட்டைக்கத்தி யோடும்
 அறிவில்லா வாளோடும்
கெட்டியாய் பிடித்த வேலோடும்
அள்ளி தெளிக்குது மனசு
உண்மை புரியாது
தத்தளித்து தள்ளாடி தன்னை மறந்து
தானாடி எட்டிபிடித்திட நின்றாலும்
உருட்டியொடுகின்றது ஒன்றுமோ
                      சொல்லா ஈர்ப்புக்குள் விதி.............


Tuesday, 25 September 2012

பாரதியின்பெண்னே!!!!!

கற்றுபெற்று விட்டு கலங்கிய
காலம்  இப்ப இங்கே 
எங்கே போச்சு
வீட்டை விட்டு வெளியே வந்து 
உழைத்து பணம் கையில் வந்தாச்சி!!
அப்ப !கண்ட கனவு இப்ப
பெண்னோடு உண்டாச்சி !!
இருந்தும் கையில்  இருப்பதுவோ
ஓட்டை குடமாச்சி!!எதற்கு 
இந்த வாழ்வு என்று
இன்னும் பெண்பேச்சி!!
காலமும் விதியும் கலந்ததாய்
சொல்லி போகுதுபெண்மூச்சு!!
இதனால் ! இங்கே தொலைந்த
கலாச்சாரம் !மாற்றதின்கையில்
போயேபோச்சி !!ஆனாலும்
ஆடவன் வந்தால் ஆனந்தமே
பெண்னிற்கு பொருபாடய்போச்சி!!
காதலும் உணர்வும் வந்து 
காகிதங்களோடு வாழும் கதையாச்சி!!
நேருக்கு நேர்சந்தித்தால் இருவருக்கும்
தெரியாவாழ்வு திரையாய் போச்சி!!
தினசரி செய்திகளும் பெண்ணின் 
அறியாமை அங்கங்கே உண்மையோடு
விளம்பரம் செய்தாச்சி!!இருந்தும்
பெண் உணர்விற்குள் அடைபட்டு
நிற்பதுவும் துடிப்பதுவும் தவிப்பதுவும்
ஆண்மையின் சாட்சியாய்போச்சி !!இதனாலோ
ஆடவன் பெண்ணின் திறப்பாய் போச்சு
இருந்தும் அவனுக்கும் புரியாத மனமும்
உள்ளுக்குள்  இருப்பதாய் பேச்சி!!
புரிந்தாலும் நிறைவது சட்டதின் கோப்புகலாச்சி!!!!




Tuesday, 11 September 2012

ஏமாளிகள்


புரியாத் தேல்விகள் ஏமாற்ற
கதவுகளை மெல்லத்திறக்க
வெண்பிஞ்சு மனசு சிந்துகின்றது
சிந்தனையின்றி!!

அள்ளிய கைகள் காட்டிடா
பாசத்தை  எண்ணியபடியே
என்றும் தொலையாய்  நடக்கின்றது
சிந்தனையின்றி!!

பாராமுகம் கொண்டு விட்டு
விலகும் உறவு தன்னையே
வெறுத்துகொண்டு நடக்கின்றது
சிந்தனையின்றி !!!

பிரிந்த வாழ்வு திசைகாற்றில் தள்ளாட
பிரிந்த இதயமே வேரோர் உறவோடு
கைகோர்க்க  அழிந்த ஆசை
அதிகாலை கனவானதால் நடக்கின்றது
சிந்தனையின்றி!!

எண்ணிய எண்ணம் கற்பனைகாற்றாய்
 களைந்தோட !வெட்டவெளி
 பக்கத்தில் விரக்கிப்பூ
உணர்வின் பக்கமாய்விரிய
 அறிவின்முதிர்ச்சியை உணர்வின்பூக்கள்
அப்படியேசிதைக்க!! சிந்தனை இழந்து
தன்னைத் தொலைத்து தட்டுதடுமாறிய
உணர்வின் பக்கத்திற்குள் புதைந்து
நடக்கின்றது சிந்தனையின்றி!!

தெளிவிழந்த சிந்தனை பாசத்தால் தவிக்க! 
புரியா குழப்பதிற்குள் கோமாளி வேடமிட்டவர்
 நிமிடத்தின்பக்கங்களை தன்பக்கமாய்
மாற்ற எதையும“ புரியா ஏமாளியாய்
நடக்கின்றது சிந்தனையின்றி!!
தன்னை தொலைத்து எடுதழித்து சென்றதன்
வாழ்வு அந்தனையும் மறந்து அன்பின்தேடலில்
பூமிவிட்டு சிறகடித்து பறந்திட
 தன்னை மறந்து நடக்கின்றது சிந்தனையின்றி!!

கொஞ்சிய கோமாளிகளின் வர்ணங்கள்
 மெல்ல வெளுத்து  தற்காலிக குடையான
 உண்மையில்லா பொய்களின் கைப்பிடிப்பு 
ஊமைவாழ்வானதால் அஞ்சம்கொண்டு
நடக்கின்றது சிந்தனையின்றி!!

ஒன்றை ஒன்று பொய்கள் கைபிடித்து
மன்னிக்கமுடியா பிழைகளை மண்ணில்
செய்து!!! ஒன்றைஒன்று காயபடுத்தி
 தன்னை தானோ ஏமாற்றிக்கொள்ளது
நடக்கின்றது சிந்திக்காமலே!!

Friday, 20 April 2012

உயிர்க்காதல்

உடல் மொழி கண்டு
உணர்வு மொழி பேசுது 
கொண்ட  காதல்!!

வழிவழிபாதைகளில்
காத்து காத்து நிற்குமா 
உயிர்க்காதலை 
வென்ற உணர்வின்
 மொழியாய் சொன்னதென்ன
 கண்டதென்ன சொல்வதென்ன !!

உயிர்க் காதலாகி கருவாகி
அன்னை வயிற்று இருளுக்குள்
உயிராகி  அழும் கரு மொழி 
புரியாக்காதல்
பெற்றோர்ராகி இட்டு கட்டும்
சண்டையினை புரிந்திடா
உணர்வின் காதலாய்  உயிர் கொடுத்து
உயிர்காத்து உயிரழித்திடும்
 உயிர்க்காதலாய் எதைத்தேடி
 எதையெடுத்து எதைசொல்லுது
வாழ்வதற்கு!!

உன்னை என்னை புரியா
 உயிர்க்காதல் இன்னென்றை
புரிந்து உயிரொன சேரத்துடித்து
உயிர்க்காதலாய் கற்று தந்த
 உடல்மொழி த் தேடலின்
உடல்கள் மட்டும் புரிந்த வாழ்வில்
விட்டு போவதென்ன காதல்!!

உனக்கும் எனக்கும் இடையில்
இன்னொருவர் எடுத்துச் சொல்ல
நம் காதல் சொல்லும் என்றால்
காதல் வெறும் காகிதகிறுக்கள் தானோ!!

உயிர்க்காதல் மொழியில்லா
கல்லறையிலும் சேர்ந்தே வாழும்
என்றால் !மொழியில்லா உயிர்
உடல் மொழி தேடாதே  அப்போ
உடல்மொழியோ உயிர்க்காதல்!!!

Friday, 7 October 2011

தாய்மடி

மண்ணில்பெண் தேடுவது
என்னவென்றறியாத காலதத்தில்
இதுவென்றது  காலச்சாரம்!!

அது பிழையென்றபெண்ணின்
இதயவாசலை!! மெல்ல திறந்து
தானென்றது அறிவுக்கண்!!

இயற்கைவாசல் தான் திறந்து
 சொல்லாது பெண்ணிற்காய்
கொடுத்தது அதுவல்ல இதுனென்று!!

எதையெடுப்பது என்றுதெரியாத
பெண்ணின் கைகளுக்குள் சிக்கிக்கொண்ட
இவ்வுலகிற்குள் நான் என்றது பத்துமாதம்!!

கடத்த பருவம் கண்ட ஆண்மை
பொய்யென்றது !சிதைக்கப்பட்ட பெண்மை
 வேடிக்காய் பார்க்கின்றது
 வரம்கொடுத்த இறையை  எங்கு காணவில்லை
!!
எங்கேயாவது தேடிபிடிப்பது என்று அழைகின்றது
காவிதரித்தஆண்மை !!!

 கொண்ட வாழ்வில் சிகரங்கள்
நாங்கள் எங்கின்றது பெண்மை!
 நாங்கள் இல்லா உங்கள் வாழ்வில்
எங்கே வரும் இனிமையென்று
வாதிடுகின்றது ஆண்மை !!!

வேடிக்கையான இறைவன்
ஒன்றுக்குள் ஒன்றைவைத்து
வேதனையாய் சிரிக்கின்றான் சிலையாய்!!

ஒன்பது நாள் என்ன ஓராயிரம் நாட்கள் விரதம்
கொண்டாலும் முடிந்ததும்         
விடித்ததும் யார்பெரிது என்பதே கேள்ளி?ஃ

Thursday, 18 August 2011

வாசல்ப்படி

சுறற்றியவேலிக்குள்
சுவராய்பெற்றோர்
கட்டி நின்று காத்தபெண்கள்
 விடுதலை காற்று வீசிய திசையில்
வேண்டிய திசைகடந்து பறந்தால்!!

திசைகள் மாறியவாழ்வில்
சிதைகின்ற குடும்பங்கள்
நித்தமும் உழைத்த ஆண்மகனை
அவமான சின்னமாக்கியகதை
வீட்டிற்கு வீடு வாசல்படியானது!!

வாசல் தாண்டி இல்லாத குறைகூறி
குறையில்லா மகான்தேடி ஓடும் பெண்கள்
விட்ட பிள்ளையால்..அப்பா முருகனாய்
அம்மா வள்ளியாய் நித்தம் நித்தம்
 தேடுவது அப்பாவும் அம்மாவும்!!!

உழைத்து  உழைத்து சேர்த்த பணத்தின்
உயர்ந்த ஆடம்பரம் தேடிய  சந்தோஷம்
 வீடுக்கு வீடுவாசல்ப் படியானது இன்று!!!


Friday, 9 April 2010

இன்ப நாள்....................

மீண்டும்  மீண்டும்    தொட்டு     
விட்டு  விட்டதைச் சொல்லும்  
நாள்! 
விட்டுச் செல்லும்
கெட்டாதிற்கும்   நல்லதிற்கும்       
சாட்சியாய்   ஏறி இறங்கிடா நாளை  
கைகோர்த்திடும் நினைவிற்கு   
சாட்சியாக்கி பாதையாக்கும் நாள்.....  

பதவிக்கு வந்தாலும்
பாதையோரம் கிடத்தாலும்     
கசக்கும் நினைவுகள்
இதயத்தை பிழிந்தாலும்
சிரிக்க நிற்கும் நாள்....

போனால் மாற! மாறினால்
வீழா! வரையறையற்ற நாட்களை
வந்து வந்து சொல்லி நிற்கும் நாள்......

கொண்டு போகும் வரை
சொல்லி களைந்து
மனிதனோடு மொட்டு முதல்
சருகுவரை தரையோடு
இன்பத்தை  தேடும் நாள்
ஒரு நாளோடு மட்டும்
தள்ளாடுது மதுவருந்தும் மனிதனாய்......................

Tuesday, 2 March 2010

என்ன காதல் இது.........?

நிலவில் முகம் பார்த்து
உணர்க்கு உயிர் கொடுத்து
இனித்திட பேசி
இதயத்தை வருடி
பதவியால் நொந்து
புகழாய் தேய்ந்து
ராகமாய் மீட்டி
அன்பால் அடைந்து
பொருளாய் பறிமாரி
வார்த்தையால் புதிதாக்கி
புதுமையால் கவியாக்கி
மெய்யால் பொய்யாகி
கிடைத்தால் வெறுந்து
உண்மையோடு விளையாடி
சொல்லு பிழையென்று
வாழ்வோடு திட்டி
அழித்தழித்து எழுதி
அறிவோடு மோதி
மற்றவருக்காய் நடித்து
சந்தோஷத்திற்காய் சிரித்து
விதிமேல் புள்ளி வைத்து
வர்ணமாய் கோலமிட்டு
வாழ்வோடு போராடும் காதல்
என்ன காதலடா...........?

Thursday, 25 February 2010

வட்டமேசைமகாநாடு

நாலு நாலாய் நால்வர்
வந்து வந்து போக
இட்ட மேசையும் கதிரையும்
பேச்சு வார்ந்தை நடந்துகின்றது
நாலு திசையும் கேட்க!

வட்ட மேசையோடு
வாக்கியம் அமைந்து
வார்தையால் வானம் தொட்டு
பேசி வந்த கடமை
வாக்கு வாதத்தால் வென்று
திசைக்கொருவராய்
திசையின்றி நால்வரோடு
கூடி சென்றதால்....
அப்படியே!அமர்ந்த கடமை
விட்ட வார்தையை
தொட்டு எடுந்து
விட்டு சென்ற மேசையோடு
கதிரையோடும் கடமைக்காய்
தொடர்ந்து பேசுகி்ன்றது!

நாலு நாலாய் நாடுகளும்
நாலு பக்க இடைவெளியில்
பக்குவமாய் பிரிந்து நால்வருக்காய்
கூட! சிதறும் பூகோலம்
கெட்டதும் அறியாது நல்லதும்
புரியாது நால்வருக்காய்
வட்ட மேசை மகாநாட்டில்
மனிதனைத் தொலைந்து
மனித வெற்றிக்காய்
கடமை துயர் குடிந்து
துப்பும் இரத்தம் பூசும் சாயமாய்
மறையும் மனிதன் பிறப்பிந்த
வாத்தில் தொலைந்த உயிராய்
தொடருது...........

Wednesday, 19 August 2009

மருதானி சிகப்பு

நட்ட நடுவானில்
விட்டு போன மேகம்
தொட்டு மறைந்த
தேய் பிறைநிலவு!!

விட்டு போக கனவை
கட்டியணைந்த படி
சுட்டித்தமாய் கட்டிபோட்ட
 சுட்டி சேட்டைகளோடு
சுமையான சுமைகளை
சுகமாய் சுமந்து கொண்டு!!

வெட்ட வெளி காற்றிடையில்
இருளின் நிழலுக்கு
தீபமின்றி விளக்கேந்தி
நெட்ட நெடும் பாதையில்
தொலை தூரத்து நினைவோடு
தென்றல் உதிர்ந்த பூவில்
பாதம் வைத்து போகின்றாள்
முற்தரை மேல்...

Tuesday, 14 July 2009

உயிர்த்துடிப்பு............

சொல்லித் திட்டி
திட்டி அடித்து
சொல்லாது வாழ்ந்தாலும்
மனிதர்கள் தேடும் சொந்தம்
இது தான்!!

தூக்கி நிறுத்தி
தூண்டாது போனாலும்
உணர்ச்சி விளையாட
ஒன்றானா இதயங்களால்
உருகும் உடலில் தொலையாய
உணர்வாய் தேடும் சொந்தம்
இது தான்!!

தேடிக்கிடைத்தாலும்
தேடாது வந்தாலும்
சோராது போனாலும்
சேர துடிக்க தேடி தவிக்கும்
சொந்தம் இது தான்!!

காயங்கள் கொடுத்து
காயங்கள் பட்டு
காலங்கள் கடந்தாலும்
தொலைந்த கனவோடு
பேசும் சொந்தம் இது தான்!!

மறக்க நினைந்து
மறந்தே வாழ்ந்தும்!!
மறக்க முடியா மறதியின்
உரிமை செய்தியின் இறுதி
சொந்தம் இது தான்!!

பொய்யான மகிழ்ச்சியில்
மெய்யான நிமிடத்தை
பொய்யாய் தந்தாலும்
மெய்யான உறவின்
பொய்யில்லா பந்தம் இது தான்!!

Monday, 12 January 2009

காலமே பதில்.....

கொண்டவன் வென்றவன்
கொள்கை கொள்பவன்
எம்மை அழிப்பவன்
ஆள்பவன் 
எல்லாம் காலத்தின்
விடையாய் தேடுது மனசு இன்று!!!

யாரிடம் யாரை கேட்க்க
உயிரின் உறவுகள் எங்கோ
அடுக்கடுக்காய் அழிய
ஆற்றிட துயரம் தேடியழையுது
மண்ணில் விடை தனை
பாவியர் மண்ணில் உயர்ந்திட
பாவியாய் ஆன எம்மவர் வாழ்கை
தினசரி செய்திதாளாய் பக்கத்துக்கு
பக்கமாகய் ஆராட்சி கட்டுரையில்
அவியுற்று அடுக்கடுக்காய் இறக்குது
எமக்காய்
உலகத்தின் நாடகம்
எதிரியின் வெற்றியாய் தெரிய
ஏமாற்றதால் ஏமாந்த எங்கள் இதயம்
கேட்குது காலத்திடம்!
உண்மையின் விலைக்கு நாங்கள்
ஆண்டுக்கு ஆண்டு கொடுத்த
உயிர்த் தியாகத்திற்கு பதில்
என்னவென்று ............

Thursday, 1 January 2009

வந்தது ஓர் வருடம் புதிதாய்.....

கோடி மக்கள் கனவை
சுமந்து வந்தது ஓர்
வருடம் மீண்டும் புதிதாய்
இன்று!!
தொட்டதை விட்டதை
கண்டதை தொலைத்ததை
கொண்டதை மறந்ததை
மீண்டும் தேடிட வந்தது
ஓர் வருடம் புதிதாய் இன்று!!

அக்கம் பக்கம் இருப்பவர்
குற்றம் குறை மறந்து
சாதி மதம் கடந்து
கைகள் கோர்த்து
கூடி மகிழ்ந்து கொண்டாடிட
மீண்டும் வந்தது ஓர் வருடம்
புதிதாய் இன்று!!

பகை மறந்து சிரிந்து
நாளை உயிர் குடிக்க
மனிதனை மனிதன் வென்று
காலத்தைக் கொள்ள
மீண்டும் புதிதாய் தேடிட
வந்தது ஓர் வருடம் இன்று
மட்டு் மனிதனாய் வாழ............