Sunday 31 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உண்மையே பொய்யே எதை சொல்லி

எப்படி ஒருவரை வீழ்ந்துவதுயென 

அறிந்தே அழகாய் நம்மை நகர்த்துகின்றேம்

வீழ்ந்ததும் புரியாமல்    வீழ்த்தியதும் புரியாமல் 

தடுமாறும் போதே நம்மகே புரிகின்றது நம்நிலமை


Friday 29 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓடிக்களைத்து

ஓய்வாய் சில நாட்கள்

அமர்ந்தேன் தனியாய் அப்போதுதான்

புரிந்தது நான் தொலைத்தவைகள் நம்மை

நமக்குள் தேடி பார்க்க நாட்களென்று

திரும்பி தேடியதி்ல் யாரும் இல்லை அருகே

நமக்கே நமக்காய் இந்த தனிமை சொன்னபாடம்

விலைமதிபற்ற  உண்மையை  கற்று தந்தது!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நினைவுகள் நினைப்பவருக்கு

சுகமானது அந்த நினைவுகளை

நிலையாக கொண்ட வாழ்க்கை 

சுவையற்ற பயணத்தை உருவாக்கும் 

நினைவுகளில் நாம்நம்மை ஓழித்தே 

வைத்து வாழநினைக்கின்றோம்

அது வாழ்க்கையில்லை மாயவிம்பமென

காலம் கடந்து உணர்வதை 

இப்போதே உணர்ந்தால்

அழகான வாழ்க்கை நமக்கும் அமையும்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 பலவிதமான ஏமாற்றங்களை

பலர்வடிவில் பலவிமாய் அடைகின்றோம்

ஆனலும் நம்பியவர்கள் நம்பியநிமிடம்

நமக்கு தரும்போது உடையும் மனசு

மரணத்தை கூட துச்சமென நினைக்க வைத்துவிடும்!!

Wednesday 27 October 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நம்மை நேசிக்கா இதயத்தை 

நேசியென்கின்றது நேசம் 

தன் ஆசையை அடைய 

இன்னோர்   இதயத்தை தூக்கியெறிந்து 

தன்னை வைத்திட போராடும்நிமிடங்களே 

காதல் காணாமல் போள வாழ்க்கையாகின்றது

பிடிக்காமல் சண்டையிட்டு சாவதை  விட

பிடித்தவருடன் வாழவைத்து  ரசிப்பதே காதல்!!

உன்னில் உன்னை தூக்கி காதலை வைத்தால்

நம்மை விட அழகானவர்கள் யாருமில்லை இவ்வுலகில்

குட்டிக்குட்டிச் சாரல்

 நல்ல எண்ணங்களை கொண்ட

நல்ல இதயத்திற்கு மற்றவர்களை போல்

சொல்லி சொல்லி ஏமாற்ற தெரியாது

நல்ல முடிவை எடுத்து மற்றவருக்கு உதாரணமாய்

வாழத்தான் தெரியும்

Tuesday 26 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 காயத்தின் ஆழத்தில் பூத்த 

ஒற்றைரோஜா தீயின் சுவாலைக்குள்

தன்னையிட்டு சாம்பலாக்கியது தன்னுல்

கொண்ட  கோபத்தின் அனலை மண்ணில்

புதைத்திட!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 பார்வையின் விம்பங்கள் தவறுவதால்

பார்வைகள் பிழையாகி அழகினை

உடைத்தெறிகின்றது

 கண்டித்துண்டிப்போல்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓன்றை பூசூடா கார்கூந்தல்

கழுத்தை பிழையென்று 

அறுந்தோடிய அணிகலன் 

அணியா அழகாய்  தலைசாய்த்த

பெண்மை 

 கையோடு கைவலையல்கள் 

கையுடைத்தே கைசேராக்காயங்கள் 

நிமிர்திடக் கூடாதென 

மனதை கட்டிப்போட

வண்ணங்கள் தொலைத்த ஆடைகள் 

தளர்நடைபாதம் தடம் தெரியாதே

நடைபோட் கலண்டேடிய கால்கொலுசு

அதையும் அழகாய் ரசிக்கும் கண்கள் 

குற்றி கிழித்தே 

இதயத்தை கையிலெடுத்து

கறைகள்படாமல்  ஆராயும் அறிவாளிகள்

கைபிடிவெட்டுண்டு  

கையேடு வலியணைக்கும்ஒன்றைஇதயம் 

தனித்தே நிற்பதை கண்டுண்டு

கதைபடிக்கும் கற்பனைகள்  

வாழ வழிகாட்டா 

வேலியேர முற்சொடிகள் 

வயிற்றுபசி கானா காம்பசிகண்டு  

கற்பனைக்கு உயிரிட்டு 

காட்சி பொம்மையாக்கும் விந்தைக்குள்

வீழ்ந்துடையும் விம்பங்கள் 

கரையில்ல ஆழ்கடலுக்குல் கரைதேடியலையும் அவளைகள் 

கறைபட்டு காயபட்டு கரைதொடதே 

மூச்சைவிட்டு முத்தாகின்றது



Monday 25 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 பிரிவுகள் சிலநேரம் நம்மை

நம்கே  உணர்த்தும் 

சிலநேரம் மற்றவரை 

நமக்கு  உணர்த்தும் 

பிரிவின் நேசமே

உண்மையை நமக்காய்

 உணர்த்தும் 



குட்டிக்குட்டிச் சாரல்

 வெண்ணிலா புன்னகைக்க

அல்லிமலர் பூத்திருக்க 

தென்றல் கொஞ்சம் தலைசாய்க்க

மின்மினிகள் அழங்கரிக்க்

தாமரையோ  விழித்திருக்கு 

 ஏகத்தோடு !!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஏதோ கனவில் ஏதோ நினைவில்

ஏதேதோ சொல்லி எதை எதையே 

இழந்து இறப்பதற்கு முன் சரிசெய்ய

தவிப்பதே மனிதம்  பிடித்ததை மறைத்து

பிடிக்காத்தை வாழ்க்கையாக்கி பிடித்ததிற்காய்

ஏங்குவதே முதுமை இதில் தவறுகளே அதிகம்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 வாழ்வை வாழத்தான்  ஆசை ஆசயே

வாழ்கையாவதால்

சிலர் சருகாய் விழுகின்றனர் பலர்

மலராய் உதிர்கின்றனர்


குட்டிக்குட்டிச் சாரல்

 வில்லோடு சொல்லை வளைத்து 

பொருளோடு உணர்வை வளைத்து

அம்பினை செய்தவனுக்கு தெரியாதவலி

வலியின் வலியால்.   உதிரத்தை

கண்ணீராய்சித்தியதுவே  இதயம்

இதயத்துடிப்பை.   மறக்கின்றதே !!!

குட்டிக்குட்டிச் சாரல்

 மனசை 

நோகடித்து நோகடித்து 

இதயத்தின் உணர்வை 

இறக்க செய்தே

சிலரை வாழச்சொல்கின்றது 

நேசம்

மனதின்காயங்களின்

 ரணங்களால்  பலர்

படைப்பையே வெறுக்க

நியங்களை அழித்தே 

நிழல்களேடு  வாழும் நியங்களுக்கு 

புரியாத நியத்தை பெற்றவரே

நியமாய் அழுவதையும் 

பொய்யென்கின்றனர்

 நிழல்களை நம்பிக்கொண்டு!!

Sunday 24 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 எல்லோரும் ஜெயித்திட நினைப்பன்

தன்னை தேற்கடிக்கின்றான் தான் ஜெயிக்க

நினைப்பவன் மற்றவரை தேற்கடிக்கின்றான்

புத்திசாலியாக இருந்தாலும் சூழ்நிலைபுரியாதன்

முட்டாளாகின்றான்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 பந்தங்களில் நம்பிக்கையில்லாதவள்

ஆழ்மன பொக்‌ஷசம்  என் மாமன் தானே

ஆழ்ந்த உறக்கத்தின் கனவாகின்றான்

நியத்திரைகளில்  விழுந்தோடும் நீர்துளிகளை

துடைத்திட கிடைத்திட்ட கரம் மாமன் தானே!!!

Saturday 23 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 தீயின் நடுவேயெருநிலத்திற்க்குள் 

ஊற்றான ஓரு நீரின் ஊற்று 

தன்வழியே  ஓடுகின்றது !

வெந்தும் கொதிப்பின் நிலையை

நிலம் தாங்கியே  குளி்ர்ச்சியை  தன்னடக்கியே

தாகம் தீர்க்கும் நீரை கொடுப்பதால் !!!

நம்மையும்  உள்வாங்கியே தாங்கிடும்

நீலம்போல் இதயம் வேண்டும்

நாமும் நாமாய் வாழ இவ்வுலகில்!!

குட்டிக்குட்டிச் சாரல்

பொய்களின் ரசணைகளை

நேசிக்கும்  நேசங்களுக்கு தெரியாதே

உண்மையின் வலிக்குள் துடிக்கும்

இதயத்தின் வலியின் வலி பொய்களை சொந்தம்

கொள்பவர்கள்  அறியாதே போகின்றது பலர் உண்மைகள்

குட்டிக்குட்டிச் சாரல்

 பெண்மையின் உணர்வை 

பலர் பலவிதமாய்  

சிந்திக்க முடிவுகள்

அவளின்றி அவளேடதாய்  

உறவுகள்  திர்மணிப்பதே

விருப்பமாய் மாறுகின்றது

  அவள்  வாழ்வில்!!!அவள்

உணர்வை சிதைத்தே 

அவள் முடிவாய் கூறும்

அவள் கூடவுள்ள உறவுகள் !

அவள் வாழ்வை அவள்வாழ்த்திட 

அவளால் மட்டும் முடியாத்தால்

தோற்கின்றாள்!பல வழியிலும் 

பெண்ணாய்!!


Friday 22 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

நியத்தில் தொலைத்த கனவினை

கனவில் கண்டேன் நியம்போல் கைபிடித்த

கனவை கைதொட கையெடுக்க அப்படியென்ன

கோவமே என் விழிகளுக்கு விழித்துக்கொண்டதே

கைபிடிக்கவிடாமல் !!

குட்டிக்குட்டிச் சாரல்

 காதோடு கதைபேச செந்தமிழ் தவமிருக்க

தென்றலேடு மல்லிகை கலத்திருக்க  மாமனை

விழிதேட யன்னல்வந்த  தென்றல் ஏனே பொய்யாய்

வீசிய  வாசனையில் ஏமாத்ததே என் இதயம் 


குட்டிக்குட்டிச் சாரல்

 எனக்கே எனக்கான மாமன்

அன்பை எனக்கே எனக்காய் 

சிறையெடுத்து என் இதயத்திற்குள் 

பத்திரமாய் வைத்தேன்

என்னை தவிர யார் விழியும் 

சொந்தகொள்ள கூடாதென  !!

குட்டிக்குட்டிச் சாரல்

 நம் வலியின் போது நம் அன்பை புரிந்தவர்

நம்மீது அன்பாய் இருக்கும் நிமிடமே இந்த

உலகிலே நமக்கு கிடைத்த அழகான தருனம்!!!

Thursday 21 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

மங்கலம் வரைந்த மங்களநாயகி

மங்கலத்தை பறித்தே தான் குளித்தால்  அழகாய்

  அழகான மங்களநாயகி கைபிடித்தும்

 தீட்டாகிய மங்களம் தொட்டு 

அவள் பாதம் இட்டேன் அழகாய்

எனியெரு பொண்மைக்கு இதையெழுதேயென 

விதியென்று பெண்மை தண்டிக்கின்றாள் 

மங்கலத்தை அவளுக்கு சொந்தமாகி


குட்டிக்குட்டிச் சாரல்

 எந்தன் இதயம் தொட்டு மாமன்

வரைந்த காதல் 

மல்லிகை வண்ணம்குளித்த 

வானவில்  சிந்திய 

வண்ணத்தில்பூத்த 

ரோஜாவின் இதழ்  

அழகின்பனித்துளியைபோல்

மின்னியது மாமன் அகமெங்கும்


குட்டிக்குட்டிச் சாரல்

 ஓற்றை உயிர் புரிய இரட்டை உயிர்

வடிக்கும் கற்பனை வரையும் உயிர்

காதல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நினைவுகளில் நிழலாய் 

நியத்தையிழந்து உருகும் உயிர் 

வாழ்வாழ்க்கையின் தவமென காதல் 

பிறப்பின் பயண் பிறந்தும் காத்திருக்கும்நியம் 

எழுந்து வடிக்கும் கற்பனை 

சிகரம் இருக்கும் வரை கிடைக்கா சந்தோஷம் 

இறந்த பின்னர் கதையின் தலைவி  

பெண்மைக்கு இலக்கியம் தந்த வரம் வாழா வழ்கையின்

பொக்கிஷம்! காதல்!!!



Wednesday 20 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 எந்தன்  மனசு  எனக்குள் 

மாமன் தந்த காதல் உணர்வு

மட்டும் பேசும் மனசு

எனக்குள்  எழுந்த கனவு 

மாமன்  என்னேடு  வரைந்த  நினைவு

  எனக்குள் இருக்கும் உயிர் 

மாமன் விட்ட மூச்சின் துடிப்பு

எனக்குள் எழும் கவி

மாமன் சொல்லா வாழ்க்கை 

 எனக்கு மட்டும் கேட்கும் ஓசை

இருவர்இதயம் மட்டும்

துடிக்கும்  ஓற்றையுணர்வு



குட்டிக்குட்டிச் சாரல்

 நீதேடி வந்த நிமிடம்

 என் சோதனை காலமென

அறிகின்றேன் தாயே 

எந்த உயிரையும் 

எனி என்னிடமிருந்து

திருடாதே  தாயே 

 நீ என்னோடு இருந்தும்

திருடுவதே எனக்கு வலிக்குது தாயே

உன்னை ஏற்று 

என்னை தருகின்றோன்  நீ

திருடும் உயிர்  நானாய் இருக்க 

அருள்வாய் தாயே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓற்றை வார்த்தை பலமாகும் நம்பிக்கை

சொல்லிகாப்பவர் சொல்லுக்கு அர்த்தம் 

புரிந்தால்  பொய்யா நம்பிக்கையை விதைத்திட

மாட்டார்

குட்டிக்குட்டிச் சாரல்

 மீராவை தேடும் கண்களுக்கு மீராவின்

வலிதெரியா காதல் கதையானதால் பலர்

வாழ்வில் கண்ணன்கள்   தோன்றினர்

குட்டிக்குட்டிச் சாரல்

 காதல்  குழந்தை காலத்தோடு  மலர்ந்தால்

பூப்பது தோட்டமாகும் 

 காத்திருந்து  வீணாய் போனால்

காவியம் படைபவனுக்கே கருவாகும்!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னோடு  இருப்பது 

உனக்காய் இருக்க 

இருப்பதை விட்டு

உரிமையற்ற இடத்தில்

உரிமைகொள்ளும் மனசை

கொஞ்சம்  சிந்தித்தித்தால் 

நல்ல உறவை உருவாக்கிட

முடியும் நம்மாலும் !!!

மற்றவர் வார்த்தை கேட்டு கோவபடும்  நம் மனசை சரிசெய்வோம்!!! நமக்கானதை நமே காப்போம்!!!

Tuesday 19 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 எத்தனை நன்மையவள் செய்தும்

ஓத்திடாமல் அடம்பிடிக்குதே ஆண்மை

இருந்தும் விரதம் இருக்கு பெண்மை யென்மங்கள்

கூட  ஏதோயெரு யென்மம் உண்மையாய் வாழத்தானே


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கட்டுமரம் கடலையை கிழிக்க

கட்டிவைத்த ஆசை அலையாக

மாமன் கட்டுடல் கம்பீரத்தில்  கண்ணம்மா

கற்பனையும் திமிராச்சி  

அதிகாலை மல்லிகை பூ

பூத்த வாசத்தில்மாமன்  

கொஞ்சம்  தான்  ஏங்கிட

 கண்ணம்மா வைச்ச பார்வை 

  நம்பிக்கைக்கு   மாமன் கைதுடுப்பாச்சி 

ஆதவன் துயில் கொள்ளும்

இருளுக்கு இருமனயெளியாச்சி  

நீரீன் ஓசை அடங்கிட 

கண்ணமாவுடல் யாரும் வடிக்காமல் 

கற்சிலையாச்சி அந்த

கற்சிலையுள்  கண்ணிரெண்டும்

உயிர்கொண்டெழுந்து

ஏக்காம் காத்திருக்கு  மாமன்

வரவிற்காய்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தேவியவள்   இவள்தேவைமுடிந்ததாய்

நினைத்தாலே  இல்லை 

பூமிதனில்பூவையவள் 

வாழ்க்கை போதுமென்று

வந்தாளோ இல்லை 

கண்ணின் மணியுக்கு கண்கள்குளமாக

தாய்யாய் மீண்டும் மீண்டாளே இல்லை

 வீதியில் விட்டு சென்றவள்

மீண்டும்  தாயாய் காத்திட வந்தாளோ

இல்லை  சொன்னதெல்லாம் 

புரியாமல் சென்றவள்

பட்டதுன்பம் போதுமென வந்தாளா 

இல்லை பாவையவள் புத்திக்கு 

பட்டறிவு போதுமென தீயாய் வந்தாளோ

இல்லை  துன்பத்தின் உச்சத்தில்

கையணைக்க  யாறுமில்லையென

கண்மணியை  கையணைக்க

வந்தாளோ  இல்லை

தன்னம்தனியாய் போராடி உண்மைக்கும்

பொய்யுக்கும்  மனிதனுக்கும்  அன்பிற்கும்

இடைவெளி இவள் கண்டதால் 

தன்னை 

மீண்டும்  தாயாய்  தருகின்றாளோ நான்

அப்போது செய்தபிழை  இப்போது புரிகின்றது 

நீ இப்போது வந்தது என் மரணத்தின் பாதைவழி

தனிமைதுணையாய உணர்கின்றேன் 

Sunday 17 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உண்மை புரியாதே  உன்னை  நினைக்காதே

பொருளும் அறியாதே  உன்னை தொலைக்காதே

இருளும் ஓளியும் எல்லோர்  வழியிலும்

ஓளியை கண்டு உள்ளே  நம்பாதே

 தனிமை தவிப்பு எல்லா நிலையிலும்

இருந்தும் அழும்மனசின் இதயக்காயம் 

பொறுத்தே வருத்தமும் கண்ணீரும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 குறைகளை நிறைவாக்க 

முடிந்தாலே 

இல்லம் இனிமைகொள்ளும்

பருவங்களை கையள அறிந்தாலே

வாழ்க்கையும் ஓடிவரும்  

இடைவெளி  புள்ளியானாலே 

உறவும்கூட வரும் இவைகளை

அறிந்தும் அலட்சியம் செய்வதே மனிதனெங்கின்றின்றான்  இறைவன்!!!



Saturday 16 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 யாரே மீட்டி பார்க்கும்    இசையின்

சோகமாய் அவள்

  சற்றும்வெளிவர முடியா 

வீணையின் அறுத்த கம்பிபோல் 

சிரிக்கின்றாள் 

அந்த வானம தன் துளியால்

அவள் துளியை மறைத்திட

இயற்க்கைக்கும்அவளுக்கும் உள்ள காதல் 

மனிதனேடு பொறுந்தாதே போனது!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 கல்லறைமுன் இவனேன் கற்பனை

கதைபடிக்கின்றான்  இன்னும் நியங்களை

நிழலாய் நினைக்கின்றானே எப்படி சொல்லும்

ஆத்மா அவனுக்கு  வாழ்க்கையின் நியத்தை


குட்டிக்குட்டிச் சாரல்

 இவள் கிறுகிய குறுக்களும்  

கூட இவளைபோலேசிறைபட்டதே 

துன்ப கடலிலே மிதக்கின்றதே


Friday 15 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்


என்பலவீனங்களை புரித்தே விளையாடும்

மனிதர்களுக்கு  என் பலம் தெரியாமல்போனதால்

என்னை தேற்கடித்திட  முடியவில்லை  என் அன்பை

தவறாகிய மனங்களுக்கு அதன் ஆழம் புரியமல் போனதால் கரையேடு  நிக்கின்றனர் வழியறியாதே!!

 என் மனதின் குழப்பங்கள  என் வாழ்க்கையின்

புரிதல்கள் 

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்போடு நம்பிக்கையே என்னை ஏமாற்றி

ஏமாளியாக்கியது அறிவற்ற உணர்ச்சியே

என்னை நம்பவைத்து   தண்டித்தது  இன்று

சிந்தனை சிந்திக்க மறுத்தால் இன்னும் ஏமாத்து

கொண்டே  இருக்கின்றேன் 


Thursday 14 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னோட நீ என்னாயென என்னுள்

தோன்றும் பொழுது எங்கேயெரு கனவு

என்னோடு நியம் போல் பேசிட திடுக்கிட்டு விழிக்கும்

பொழுதெல்லாம் இதயம்  துடிக்கும் சத்தமே

இன்னும் வாழ்வதை சொல்லுகின்றது  எள் இதயத்தில்

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்பிக்கை கதையெழுத அதிஸ்ரமே 

எட்ட நிற்க விழுத்தெழுத்த இதயம் கைபிடித்தே

தூக்கிட ஆளற்று  தரையேடு கிடக்கின்றது 

கொஞ்சம் கொஞ்சம் கூட வந்தால் கொஞ்ச தூரம்

தென்றல் காற்று சுகமாகும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 பெண்மையின் ஆசைகள் சின்ன வார்த்தைகளில்

ஆண்மையின் ஆசைகள் பெரிய கற்பனைகளில்

பெண்மையின் உடல் உழைப்பை மதிக்கா

ஆண்மைகளை மதிக்கும் பெண்மைகளே

சிறந்த தாமையுமாகின்றனர்

Monday 11 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என் இதழ் இசைக்குத் ஸ்ரங்களில்

உன் முகவரியை பார்க்கின்றேன்

என் மனம் இசைக்கும் இசையில் உன்

முகவழகை பார்க்கின்றேன் என் இதயம்

பேசும் மொழியில் உன் மொழியழகை ரசிக்கின்றேன்

என் மெளனத்தின் அழகில் உன் இசையாகின்றேன்


குட்டிக்குட்டிச் சாரல்

 பட்டாம்பூச்சி யானே மனசு 

எங்கும் நில்லாதே பறக்குதே தானாய்

உள்ளமிருக்குதே  உள்ளே !!ஆகாக!ஒழித்தோடுதே கனவும்

விம்மல் தொட்டதும்மலில் தோற்றதே இதயம்

கண்கள் துடிக்குதே  தானாய் 

உன்னில் பட்டுயெழுந்ததாலே விடியலும் அழகானதே

இன்று!!!உன்னை என்னை தகர்த்திட எங்குமில்லை

உளிகள்!!செய்தவன் கையிலுமில்லை சதிகள்!!

Sunday 10 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை தப்பு என்றவரை  நான் புரித்து கொண்டதால்

என்னை புரியவைத்திட 

சிந்தித்ததில்லை எனக்கான

சுமையை அவர்கள் சுமக்கவில்லை  என்பதால்

மற்றவரை தப்பு சொல்லும் போது சண்டையிடுகின்றேன்

அவர் நல்லவர்களாய்இல்லையென்பதால்


குட்டிக்குட்டிச் சாரல்

 நம்பியே இரு உருவம்  துணையாகின்றது

நம்பிய ஆண்மையின்  அறியமையால் வரும்

இடர்களுக்காய் பெண்மை தியாகமாகின்றது

பெண்மையின் அறியமை இடர்களிலிருந்து

தன்னை காத்திட இன்னெரு 

பெண்மையை சொந்தமாக்கியே தன்னை காத்திட

துடிக்கின்றது ஆண்மை!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 நாம் நம்பியவர்களே நமக்காய் இல்லையென

சந்தர்ப்பங்கள் புரியவைத்தும் நாம் புரியா 

சந்தர்ப்பமே நம் வாழ்க்கையின் இழப்பு 

Saturday 9 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 வேறு வேறான 

நம் மாயக்கண்ணாடி

ஓர் நாள் 

விழுந்துடையும் போதே 

நம் வாழ்க்கையில் 

தோற்ற வலியின்உண்மை

உதிரமற்ற உடலை

காட்டும் ஒர் நாள்!!

Thursday 7 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 எல்லா மனிதனின் துளிகளிலும் ஓரு நம்பிக்கை

அழுகின்றது எல்லா பெண்களின் துளிகளிலும்

ஓரு பாசம் அழுகின்றது 

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்று நேசத்தால் வந்த தனிமையை

இன்று மகன் எழுதுகின்றான் எனக்காய்

என்றும் உனக்கு இதுதான் முடிவு எங்கின்றது

விதி ஆனால் முன்பை  விட இப்பே பக்குவம்

வந்ததுவே அதிகம்  மெளனமாய்     இருக்கின்றது

ஏமாற்றம்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உன்னை தேட என் மனம்

என்றும் துணித்தில்லை

என் தேவையென்பது எனக்கே தெரியமல்

போனதால் 

அனால் தாலாட்டும்  இசை நீயானதால் 

என் நினைவில் நீயே உயிரோடு வாழ்கின்றாய்  

நான்  வலிதொடும் சுகமாய்நீ தான் நிக்கின்றாய் 

 நீ அரக்கனே நண்பேனே

நான் அறியேன் என்னில் இறக்கமுள்ள உயிராய்

தோன்றுது எப்போதும்!!!!

Wednesday 6 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என் வலி  உரச தனித்தழும்

விழிமறுக்கும் பொழுதுகளில்

விலைகொடுத்தும்  வாங்க முடியா 

தூக்கதை நீ  இசையாகி  தூங்கவைக்கின்றாய்

நான் சோய்யாய் உறக்கும் போதொல்லாம்  என்

யானைக்குட்டி  தாய்யாகின்றது உன்னைபோல்

எதிர் பார்க்கும் உலகில் எதிர்பார உன் அன்பை

இறையாய் யாகின்றோன் என் நிழலில்லா இருளின்

தாலாட்டு நீயானதால் !!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு  பெண் ஓவியம் விற்பனைக்காய்

சந்தையில்  அழகாய் நிற்க

 பல ஆண்கள்

பணத்தை அள்ளிக்கொடுத்து

வாங்கிட  போட்டியிட்டனர் 

அதன்னழகில் மயங்கியதால் அதை

வரைந்த உயிர் ஓவியம் 

சீதனசந்தையில் போட்டியிட

 உயிரற்ற அழகினை 

விலைபேசியது யாரும்  அறியாமல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓருவரை  கவனியாமலே அவரை

தனிவழியில் தள்ளிவிடுகின்றோம் நம்மை

மட்டும் சிந்தித்துகொண்டு சென்றவரை

நமக்கு தேவையெனும் போது தேடி புலம்புகின்றோம்

யாரோயெரூவரிடம்

 நம்மை நல்லவராய் காட்டிக்கொள்ள

Monday 4 October 2021

ஹைக்கூ... கவிதைகள்

 இட்ட தீயில்   தீயின் சுவாலை  

சுட்டதுவும்கூட சாம்பலான 

இதயமே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டில் பூச்சிகளாய் நெருப்பை

தொட்டே இறக்கின்றது   நேசத்தால் 

பெண்மை  விரும்பியே!!இறக்கும் வரை நெருப்பை

உணராமல் அல்ல உணர்ந்தது நெருப்பானதால்


குட்டிக்குட்டிச் சாரல்

 இழப்பில் தோற்ற என் இழப்பு

உறவி்ல் தோற்ற என் வாழ்க்கை 

தடுமாற்றத்தில் தோற்ற நான் 

தொலைந்தும்கற்ற பாடம் என்னை

செதிக்கியது தானாய் !!

உன் வலி வழியில் ஏமாற்றிடவே

பல நிழல் நியம்போல தோன்றி மறையும்

நீ நியமென  நின்றிடாதே! 

என்றது அறியாமை எனக்கு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 என் ஆசைகள் ஆசைகளாக காத்திருக்க

என் வாழ்க்கை வனத்தில்  தவமிருக்க 

என் ஏமாற்றங்களை ஏற்று நான் தவமிருக்கின்றேன்

முத்தியடைய

  மீண்டு வோண்டாமே இந்த பொய்யான கனவு

வாழ்க்கையென!!!

Sunday 3 October 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அதிகரிக்கும் தவறுகளில் அதிகமாக

சிக்கிக்கொள்ளுது பெண்மை ஏமாந்தும்

கதைபடிக்கு தாய்மை 

 கேள்விகேட்க தடைவிக்குது பெண்மை 

ஏமாற்றியவன் கைகளை பற்றியே பிழையும்

சொல்லு  உண்மை  

இருப்பதை தொலைப்பதுவும்

 தொலைத்தபின்னே  அழுவதும்  உண்மை

 அதை முட்டாள் தனமென சொல்லு ஆண்மை  

அந்த முட்டாள் பெண்மையை

கருணையற்று சிதைப்பதும் உண்மை

இங்கே சித்தினைக்கு கிடைக்காவிதி சிலர் வாழ்க்கைக்கு எழுதும் கேள்வி!!!

Saturday 2 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓற்றை நிலவினை சுற்றி  எந்தனை விண்மீண்கள்

உண்டென கனாக்கானும் மனிதனுக்கு தெரியா

ஆனால் நிலவுற்கும் தெரியும் தன்னை சுற்றிய

ஓளி தனக்கான அல்லயென