உண்மையே பொய்யே எதை சொல்லி
எப்படி ஒருவரை வீழ்ந்துவதுயென
அறிந்தே அழகாய் நம்மை நகர்த்துகின்றேம்
வீழ்ந்ததும் புரியாமல் வீழ்த்தியதும் புரியாமல்
தடுமாறும் போதே நம்மகே புரிகின்றது நம்நிலமை
உண்மையே பொய்யே எதை சொல்லி
எப்படி ஒருவரை வீழ்ந்துவதுயென
அறிந்தே அழகாய் நம்மை நகர்த்துகின்றேம்
வீழ்ந்ததும் புரியாமல் வீழ்த்தியதும் புரியாமல்
தடுமாறும் போதே நம்மகே புரிகின்றது நம்நிலமை
ஓடிக்களைத்து
ஓய்வாய் சில நாட்கள்
அமர்ந்தேன் தனியாய் அப்போதுதான்
புரிந்தது நான் தொலைத்தவைகள் நம்மை
நமக்குள் தேடி பார்க்க நாட்களென்று
திரும்பி தேடியதி்ல் யாரும் இல்லை அருகே
நமக்கே நமக்காய் இந்த தனிமை சொன்னபாடம்
விலைமதிபற்ற உண்மையை கற்று தந்தது!!!
நினைவுகள் நினைப்பவருக்கு
சுகமானது அந்த நினைவுகளை
நிலையாக கொண்ட வாழ்க்கை
சுவையற்ற பயணத்தை உருவாக்கும்
நினைவுகளில் நாம்நம்மை ஓழித்தே
வைத்து வாழநினைக்கின்றோம்
அது வாழ்க்கையில்லை மாயவிம்பமென
காலம் கடந்து உணர்வதை
இப்போதே உணர்ந்தால்
அழகான வாழ்க்கை நமக்கும் அமையும்!!
பலவிதமான ஏமாற்றங்களை
பலர்வடிவில் பலவிமாய் அடைகின்றோம்
ஆனலும் நம்பியவர்கள் நம்பியநிமிடம்
நமக்கு தரும்போது உடையும் மனசு
மரணத்தை கூட துச்சமென நினைக்க வைத்துவிடும்!!
நம்மை நேசிக்கா இதயத்தை
நேசியென்கின்றது நேசம்
தன் ஆசையை அடைய
இன்னோர் இதயத்தை தூக்கியெறிந்து
தன்னை வைத்திட போராடும்நிமிடங்களே
காதல் காணாமல் போள வாழ்க்கையாகின்றது
பிடிக்காமல் சண்டையிட்டு சாவதை விட
பிடித்தவருடன் வாழவைத்து ரசிப்பதே காதல்!!
உன்னில் உன்னை தூக்கி காதலை வைத்தால்
நம்மை விட அழகானவர்கள் யாருமில்லை இவ்வுலகில்
நல்ல எண்ணங்களை கொண்ட
நல்ல இதயத்திற்கு மற்றவர்களை போல்
சொல்லி சொல்லி ஏமாற்ற தெரியாது
நல்ல முடிவை எடுத்து மற்றவருக்கு உதாரணமாய்
வாழத்தான் தெரியும்
காயத்தின் ஆழத்தில் பூத்த
ஒற்றைரோஜா தீயின் சுவாலைக்குள்
தன்னையிட்டு சாம்பலாக்கியது தன்னுல்
கொண்ட கோபத்தின் அனலை மண்ணில்
புதைத்திட!!!
பார்வையின் விம்பங்கள் தவறுவதால்
பார்வைகள் பிழையாகி அழகினை
உடைத்தெறிகின்றது
கண்டித்துண்டிப்போல்
ஓன்றை பூசூடா கார்கூந்தல்
கழுத்தை பிழையென்று
அறுந்தோடிய அணிகலன்
அணியா அழகாய் தலைசாய்த்த
பெண்மை
கையோடு கைவலையல்கள்
கையுடைத்தே கைசேராக்காயங்கள்
நிமிர்திடக் கூடாதென
மனதை கட்டிப்போட
வண்ணங்கள் தொலைத்த ஆடைகள்
தளர்நடைபாதம் தடம் தெரியாதே
நடைபோட் கலண்டேடிய கால்கொலுசு
அதையும் அழகாய் ரசிக்கும் கண்கள்
குற்றி கிழித்தே
இதயத்தை கையிலெடுத்து
கறைகள்படாமல் ஆராயும் அறிவாளிகள்
கைபிடிவெட்டுண்டு
கையேடு வலியணைக்கும்ஒன்றைஇதயம்
தனித்தே நிற்பதை கண்டுண்டு
கதைபடிக்கும் கற்பனைகள்
வாழ வழிகாட்டா
வேலியேர முற்சொடிகள்
வயிற்றுபசி கானா காம்பசிகண்டு
கற்பனைக்கு உயிரிட்டு
காட்சி பொம்மையாக்கும் விந்தைக்குள்
வீழ்ந்துடையும் விம்பங்கள்
கரையில்ல ஆழ்கடலுக்குல் கரைதேடியலையும் அவளைகள்
கறைபட்டு காயபட்டு கரைதொடதே
மூச்சைவிட்டு முத்தாகின்றது
பிரிவுகள் சிலநேரம் நம்மை
நம்கே உணர்த்தும்
சிலநேரம் மற்றவரை
நமக்கு உணர்த்தும்
பிரிவின் நேசமே
உண்மையை நமக்காய்
உணர்த்தும்
வெண்ணிலா புன்னகைக்க
அல்லிமலர் பூத்திருக்க
தென்றல் கொஞ்சம் தலைசாய்க்க
மின்மினிகள் அழங்கரிக்க்
தாமரையோ விழித்திருக்கு
ஏகத்தோடு !!!
ஏதோ கனவில் ஏதோ நினைவில்
ஏதேதோ சொல்லி எதை எதையே
இழந்து இறப்பதற்கு முன் சரிசெய்ய
தவிப்பதே மனிதம் பிடித்ததை மறைத்து
பிடிக்காத்தை வாழ்க்கையாக்கி பிடித்ததிற்காய்
ஏங்குவதே முதுமை இதில் தவறுகளே அதிகம்!!
வாழ்வை வாழத்தான் ஆசை ஆசயே
வாழ்கையாவதால்
சிலர் சருகாய் விழுகின்றனர் பலர்
மலராய் உதிர்கின்றனர்
வில்லோடு சொல்லை வளைத்து
பொருளோடு உணர்வை வளைத்து
அம்பினை செய்தவனுக்கு தெரியாதவலி
வலியின் வலியால். உதிரத்தை
கண்ணீராய்சித்தியதுவே இதயம்
இதயத்துடிப்பை. மறக்கின்றதே !!!
மனசை
நோகடித்து நோகடித்து
இதயத்தின் உணர்வை
இறக்க செய்தே
சிலரை வாழச்சொல்கின்றது
நேசம்
மனதின்காயங்களின்
ரணங்களால் பலர்
படைப்பையே வெறுக்க
நியங்களை அழித்தே
நிழல்களேடு வாழும் நியங்களுக்கு
புரியாத நியத்தை பெற்றவரே
நியமாய் அழுவதையும்
பொய்யென்கின்றனர்
நிழல்களை நம்பிக்கொண்டு!!
எல்லோரும் ஜெயித்திட நினைப்பன்
தன்னை தேற்கடிக்கின்றான் தான் ஜெயிக்க
நினைப்பவன் மற்றவரை தேற்கடிக்கின்றான்
புத்திசாலியாக இருந்தாலும் சூழ்நிலைபுரியாதன்
முட்டாளாகின்றான்!!!
பந்தங்களில் நம்பிக்கையில்லாதவள்
ஆழ்மன பொக்ஷசம் என் மாமன் தானே
ஆழ்ந்த உறக்கத்தின் கனவாகின்றான்
நியத்திரைகளில் விழுந்தோடும் நீர்துளிகளை
துடைத்திட கிடைத்திட்ட கரம் மாமன் தானே!!!
தீயின் நடுவேயெருநிலத்திற்க்குள்
ஊற்றான ஓரு நீரின் ஊற்று
தன்வழியே ஓடுகின்றது !
வெந்தும் கொதிப்பின் நிலையை
நிலம் தாங்கியே குளி்ர்ச்சியை தன்னடக்கியே
தாகம் தீர்க்கும் நீரை கொடுப்பதால் !!!
நம்மையும் உள்வாங்கியே தாங்கிடும்
நீலம்போல் இதயம் வேண்டும்
நாமும் நாமாய் வாழ இவ்வுலகில்!!
பொய்களின் ரசணைகளை
நேசிக்கும் நேசங்களுக்கு தெரியாதே
உண்மையின் வலிக்குள் துடிக்கும்
இதயத்தின் வலியின் வலி பொய்களை சொந்தம்
கொள்பவர்கள் அறியாதே போகின்றது பலர் உண்மைகள்
பெண்மையின் உணர்வை
பலர் பலவிதமாய்
சிந்திக்க முடிவுகள்
அவளின்றி அவளேடதாய்
உறவுகள் திர்மணிப்பதே
விருப்பமாய் மாறுகின்றது
அவள் வாழ்வில்!!!அவள்
உணர்வை சிதைத்தே
அவள் முடிவாய் கூறும்
அவள் கூடவுள்ள உறவுகள் !
அவள் வாழ்வை அவள்வாழ்த்திட
அவளால் மட்டும் முடியாத்தால்
தோற்கின்றாள்!பல வழியிலும்
பெண்ணாய்!!
நியத்தில் தொலைத்த கனவினை
கனவில் கண்டேன் நியம்போல் கைபிடித்த
கனவை கைதொட கையெடுக்க அப்படியென்ன
கோவமே என் விழிகளுக்கு விழித்துக்கொண்டதே
கைபிடிக்கவிடாமல் !!
காதோடு கதைபேச செந்தமிழ் தவமிருக்க
தென்றலேடு மல்லிகை கலத்திருக்க மாமனை
விழிதேட யன்னல்வந்த தென்றல் ஏனே பொய்யாய்
வீசிய வாசனையில் ஏமாத்ததே என் இதயம்
எனக்கே எனக்கான மாமன்
அன்பை எனக்கே எனக்காய்
சிறையெடுத்து என் இதயத்திற்குள்
பத்திரமாய் வைத்தேன்
என்னை தவிர யார் விழியும்
சொந்தகொள்ள கூடாதென !!
நம் வலியின் போது நம் அன்பை புரிந்தவர்
நம்மீது அன்பாய் இருக்கும் நிமிடமே இந்த
உலகிலே நமக்கு கிடைத்த அழகான தருனம்!!!
மங்கலம் வரைந்த மங்களநாயகி
மங்கலத்தை பறித்தே தான் குளித்தால் அழகாய்
அழகான மங்களநாயகி கைபிடித்தும்
தீட்டாகிய மங்களம் தொட்டு
அவள் பாதம் இட்டேன் அழகாய்
எனியெரு பொண்மைக்கு இதையெழுதேயென
விதியென்று பெண்மை தண்டிக்கின்றாள்
மங்கலத்தை அவளுக்கு சொந்தமாகி
எந்தன் இதயம் தொட்டு மாமன்
வரைந்த காதல்
மல்லிகை வண்ணம்குளித்த
வானவில் சிந்திய
வண்ணத்தில்பூத்த
ரோஜாவின் இதழ்
அழகின்பனித்துளியைபோல்
மின்னியது மாமன் அகமெங்கும்
நினைவுகளில் நிழலாய்
நியத்தையிழந்து உருகும் உயிர்
வாழ்வாழ்க்கையின் தவமென காதல்
பிறப்பின் பயண் பிறந்தும் காத்திருக்கும்நியம்
எழுந்து வடிக்கும் கற்பனை
சிகரம் இருக்கும் வரை கிடைக்கா சந்தோஷம்
இறந்த பின்னர் கதையின் தலைவி
பெண்மைக்கு இலக்கியம் தந்த வரம் வாழா வழ்கையின்
பொக்கிஷம்! காதல்!!!
எந்தன் மனசு எனக்குள்
மாமன் தந்த காதல் உணர்வு
மட்டும் பேசும் மனசு
எனக்குள் எழுந்த கனவு
மாமன் என்னேடு வரைந்த நினைவு
எனக்குள் இருக்கும் உயிர்
மாமன் விட்ட மூச்சின் துடிப்பு
எனக்குள் எழும் கவி
மாமன் சொல்லா வாழ்க்கை
எனக்கு மட்டும் கேட்கும் ஓசை
இருவர்இதயம் மட்டும்
துடிக்கும் ஓற்றையுணர்வு
நீதேடி வந்த நிமிடம்
என் சோதனை காலமென
அறிகின்றேன் தாயே
எந்த உயிரையும்
எனி என்னிடமிருந்து
திருடாதே தாயே
நீ என்னோடு இருந்தும்
திருடுவதே எனக்கு வலிக்குது தாயே
உன்னை ஏற்று
என்னை தருகின்றோன் நீ
திருடும் உயிர் நானாய் இருக்க
அருள்வாய் தாயே!!!
ஓற்றை வார்த்தை பலமாகும் நம்பிக்கை
சொல்லிகாப்பவர் சொல்லுக்கு அர்த்தம்
புரிந்தால் பொய்யா நம்பிக்கையை விதைத்திட
மாட்டார்
மீராவை தேடும் கண்களுக்கு மீராவின்
வலிதெரியா காதல் கதையானதால் பலர்
வாழ்வில் கண்ணன்கள் தோன்றினர்
காதல் குழந்தை காலத்தோடு மலர்ந்தால்
பூப்பது தோட்டமாகும்
காத்திருந்து வீணாய் போனால்
காவியம் படைபவனுக்கே கருவாகும்!!!
உன்னோடு இருப்பது
உனக்காய் இருக்க
இருப்பதை விட்டு
உரிமையற்ற இடத்தில்
உரிமைகொள்ளும் மனசை
கொஞ்சம் சிந்தித்தித்தால்
நல்ல உறவை உருவாக்கிட
முடியும் நம்மாலும் !!!
மற்றவர் வார்த்தை கேட்டு கோவபடும் நம் மனசை சரிசெய்வோம்!!! நமக்கானதை நமே காப்போம்!!!
எத்தனை நன்மையவள் செய்தும்
ஓத்திடாமல் அடம்பிடிக்குதே ஆண்மை
இருந்தும் விரதம் இருக்கு பெண்மை யென்மங்கள்
கூட ஏதோயெரு யென்மம் உண்மையாய் வாழத்தானே
கட்டுமரம் கடலையை கிழிக்க
கட்டிவைத்த ஆசை அலையாக
மாமன் கட்டுடல் கம்பீரத்தில் கண்ணம்மா
கற்பனையும் திமிராச்சி
அதிகாலை மல்லிகை பூ
பூத்த வாசத்தில்மாமன்
கொஞ்சம் தான் ஏங்கிட
கண்ணம்மா வைச்ச பார்வை
நம்பிக்கைக்கு மாமன் கைதுடுப்பாச்சி
ஆதவன் துயில் கொள்ளும்
இருளுக்கு இருமனயெளியாச்சி
நீரீன் ஓசை அடங்கிட
கண்ணமாவுடல் யாரும் வடிக்காமல்
கற்சிலையாச்சி அந்த
கற்சிலையுள் கண்ணிரெண்டும்
உயிர்கொண்டெழுந்து
ஏக்காம் காத்திருக்கு மாமன்
வரவிற்காய்
தேவியவள் இவள்தேவைமுடிந்ததாய்
நினைத்தாலே இல்லை
பூமிதனில்பூவையவள்
வாழ்க்கை போதுமென்று
வந்தாளோ இல்லை
கண்ணின் மணியுக்கு கண்கள்குளமாக
தாய்யாய் மீண்டும் மீண்டாளே இல்லை
வீதியில் விட்டு சென்றவள்
மீண்டும் தாயாய் காத்திட வந்தாளோ
இல்லை சொன்னதெல்லாம்
புரியாமல் சென்றவள்
பட்டதுன்பம் போதுமென வந்தாளா
இல்லை பாவையவள் புத்திக்கு
பட்டறிவு போதுமென தீயாய் வந்தாளோ
இல்லை துன்பத்தின் உச்சத்தில்
கையணைக்க யாறுமில்லையென
கண்மணியை கையணைக்க
வந்தாளோ இல்லை
தன்னம்தனியாய் போராடி உண்மைக்கும்
பொய்யுக்கும் மனிதனுக்கும் அன்பிற்கும்
இடைவெளி இவள் கண்டதால்
தன்னை
மீண்டும் தாயாய் தருகின்றாளோ நான்
அப்போது செய்தபிழை இப்போது புரிகின்றது
நீ இப்போது வந்தது என் மரணத்தின் பாதைவழி
தனிமைதுணையாய உணர்கின்றேன்
உண்மை புரியாதே உன்னை நினைக்காதே
பொருளும் அறியாதே உன்னை தொலைக்காதே
இருளும் ஓளியும் எல்லோர் வழியிலும்
ஓளியை கண்டு உள்ளே நம்பாதே
தனிமை தவிப்பு எல்லா நிலையிலும்
இருந்தும் அழும்மனசின் இதயக்காயம்
பொறுத்தே வருத்தமும் கண்ணீரும்!!!
குறைகளை நிறைவாக்க
முடிந்தாலே
இல்லம் இனிமைகொள்ளும்
பருவங்களை கையள அறிந்தாலே
வாழ்க்கையும் ஓடிவரும்
இடைவெளி புள்ளியானாலே
உறவும்கூட வரும் இவைகளை
அறிந்தும் அலட்சியம் செய்வதே மனிதனெங்கின்றின்றான் இறைவன்!!!
யாரே மீட்டி பார்க்கும் இசையின்
சோகமாய் அவள்
சற்றும்வெளிவர முடியா
வீணையின் அறுத்த கம்பிபோல்
சிரிக்கின்றாள்
அந்த வானம தன் துளியால்
அவள் துளியை மறைத்திட
இயற்க்கைக்கும்அவளுக்கும் உள்ள காதல்
மனிதனேடு பொறுந்தாதே போனது!!!
கல்லறைமுன் இவனேன் கற்பனை
கதைபடிக்கின்றான் இன்னும் நியங்களை
நிழலாய் நினைக்கின்றானே எப்படி சொல்லும்
ஆத்மா அவனுக்கு வாழ்க்கையின் நியத்தை
என்பலவீனங்களை புரித்தே விளையாடும்
மனிதர்களுக்கு என் பலம் தெரியாமல்போனதால்
என்னை தேற்கடித்திட முடியவில்லை என் அன்பை
தவறாகிய மனங்களுக்கு அதன் ஆழம் புரியமல் போனதால் கரையேடு நிக்கின்றனர் வழியறியாதே!!
என் மனதின் குழப்பங்கள என் வாழ்க்கையின்
புரிதல்கள்
அன்போடு நம்பிக்கையே என்னை ஏமாற்றி
ஏமாளியாக்கியது அறிவற்ற உணர்ச்சியே
என்னை நம்பவைத்து தண்டித்தது இன்று
சிந்தனை சிந்திக்க மறுத்தால் இன்னும் ஏமாத்து
கொண்டே இருக்கின்றேன்
என்னோட நீ என்னாயென என்னுள்
தோன்றும் பொழுது எங்கேயெரு கனவு
என்னோடு நியம் போல் பேசிட திடுக்கிட்டு விழிக்கும்
பொழுதெல்லாம் இதயம் துடிக்கும் சத்தமே
இன்னும் வாழ்வதை சொல்லுகின்றது எள் இதயத்தில்
நம்பிக்கை கதையெழுத அதிஸ்ரமே
எட்ட நிற்க விழுத்தெழுத்த இதயம் கைபிடித்தே
தூக்கிட ஆளற்று தரையேடு கிடக்கின்றது
கொஞ்சம் கொஞ்சம் கூட வந்தால் கொஞ்ச தூரம்
தென்றல் காற்று சுகமாகும்!!!
பெண்மையின் ஆசைகள் சின்ன வார்த்தைகளில்
ஆண்மையின் ஆசைகள் பெரிய கற்பனைகளில்
பெண்மையின் உடல் உழைப்பை மதிக்கா
ஆண்மைகளை மதிக்கும் பெண்மைகளே
சிறந்த தாமையுமாகின்றனர்
என் இதழ் இசைக்குத் ஸ்ரங்களில்
உன் முகவரியை பார்க்கின்றேன்
என் மனம் இசைக்கும் இசையில் உன்
முகவழகை பார்க்கின்றேன் என் இதயம்
பேசும் மொழியில் உன் மொழியழகை ரசிக்கின்றேன்
என் மெளனத்தின் அழகில் உன் இசையாகின்றேன்
பட்டாம்பூச்சி யானே மனசு
எங்கும் நில்லாதே பறக்குதே தானாய்
உள்ளமிருக்குதே உள்ளே !!ஆகாக!ஒழித்தோடுதே கனவும்
விம்மல் தொட்டதும்மலில் தோற்றதே இதயம்
கண்கள் துடிக்குதே தானாய்
உன்னில் பட்டுயெழுந்ததாலே விடியலும் அழகானதே
இன்று!!!உன்னை என்னை தகர்த்திட எங்குமில்லை
உளிகள்!!செய்தவன் கையிலுமில்லை சதிகள்!!
என்னை தப்பு என்றவரை நான் புரித்து கொண்டதால்
என்னை புரியவைத்திட
சிந்தித்ததில்லை எனக்கான
சுமையை அவர்கள் சுமக்கவில்லை என்பதால்
மற்றவரை தப்பு சொல்லும் போது சண்டையிடுகின்றேன்
அவர் நல்லவர்களாய்இல்லையென்பதால்
நம்பியே இரு உருவம் துணையாகின்றது
நம்பிய ஆண்மையின் அறியமையால் வரும்
இடர்களுக்காய் பெண்மை தியாகமாகின்றது
பெண்மையின் அறியமை இடர்களிலிருந்து
தன்னை காத்திட இன்னெரு
பெண்மையை சொந்தமாக்கியே தன்னை காத்திட
துடிக்கின்றது ஆண்மை!!!
நாம் நம்பியவர்களே நமக்காய் இல்லையென
சந்தர்ப்பங்கள் புரியவைத்தும் நாம் புரியா
சந்தர்ப்பமே நம் வாழ்க்கையின் இழப்பு
வேறு வேறான
நம் மாயக்கண்ணாடி
ஓர் நாள்
விழுந்துடையும் போதே
நம் வாழ்க்கையில்
தோற்ற வலியின்உண்மை
உதிரமற்ற உடலை
காட்டும் ஒர் நாள்!!
எல்லா மனிதனின் துளிகளிலும் ஓரு நம்பிக்கை
அழுகின்றது எல்லா பெண்களின் துளிகளிலும்
ஓரு பாசம் அழுகின்றது
அன்று நேசத்தால் வந்த தனிமையை
இன்று மகன் எழுதுகின்றான் எனக்காய்
என்றும் உனக்கு இதுதான் முடிவு எங்கின்றது
விதி ஆனால் முன்பை விட இப்பே பக்குவம்
வந்ததுவே அதிகம் மெளனமாய் இருக்கின்றது
ஏமாற்றம்
உன்னை தேட என் மனம்
என்றும் துணித்தில்லை
என் தேவையென்பது எனக்கே தெரியமல்
போனதால்
அனால் தாலாட்டும் இசை நீயானதால்
என் நினைவில் நீயே உயிரோடு வாழ்கின்றாய்
நான் வலிதொடும் சுகமாய்நீ தான் நிக்கின்றாய்
நீ அரக்கனே நண்பேனே
நான் அறியேன் என்னில் இறக்கமுள்ள உயிராய்
தோன்றுது எப்போதும்!!!!
என் வலி உரச தனித்தழும்
விழிமறுக்கும் பொழுதுகளில்
விலைகொடுத்தும் வாங்க முடியா
தூக்கதை நீ இசையாகி தூங்கவைக்கின்றாய்
நான் சோய்யாய் உறக்கும் போதொல்லாம் என்
யானைக்குட்டி தாய்யாகின்றது உன்னைபோல்
எதிர் பார்க்கும் உலகில் எதிர்பார உன் அன்பை
இறையாய் யாகின்றோன் என் நிழலில்லா இருளின்
தாலாட்டு நீயானதால் !!!
ஓரு பெண் ஓவியம் விற்பனைக்காய்
சந்தையில் அழகாய் நிற்க
பல ஆண்கள்
பணத்தை அள்ளிக்கொடுத்து
வாங்கிட போட்டியிட்டனர்
அதன்னழகில் மயங்கியதால் அதை
வரைந்த உயிர் ஓவியம்
சீதனசந்தையில் போட்டியிட
உயிரற்ற அழகினை
விலைபேசியது யாரும் அறியாமல்!!!
ஓருவரை கவனியாமலே அவரை
தனிவழியில் தள்ளிவிடுகின்றோம் நம்மை
மட்டும் சிந்தித்துகொண்டு சென்றவரை
நமக்கு தேவையெனும் போது தேடி புலம்புகின்றோம்
யாரோயெரூவரிடம்
நம்மை நல்லவராய் காட்டிக்கொள்ள
விட்டில் பூச்சிகளாய் நெருப்பை
தொட்டே இறக்கின்றது நேசத்தால்
பெண்மை விரும்பியே!!இறக்கும் வரை நெருப்பை
உணராமல் அல்ல உணர்ந்தது நெருப்பானதால்
இழப்பில் தோற்ற என் இழப்பு
உறவி்ல் தோற்ற என் வாழ்க்கை
தடுமாற்றத்தில் தோற்ற நான்
தொலைந்தும்கற்ற பாடம் என்னை
செதிக்கியது தானாய் !!
உன் வலி வழியில் ஏமாற்றிடவே
பல நிழல் நியம்போல தோன்றி மறையும்
நீ நியமென நின்றிடாதே!
என்றது அறியாமை எனக்கு!!!
என் ஆசைகள் ஆசைகளாக காத்திருக்க
என் வாழ்க்கை வனத்தில் தவமிருக்க
என் ஏமாற்றங்களை ஏற்று நான் தவமிருக்கின்றேன்
முத்தியடைய
மீண்டு வோண்டாமே இந்த பொய்யான கனவு
வாழ்க்கையென!!!
அதிகரிக்கும் தவறுகளில் அதிகமாக
சிக்கிக்கொள்ளுது பெண்மை ஏமாந்தும்
கதைபடிக்கு தாய்மை
கேள்விகேட்க தடைவிக்குது பெண்மை
ஏமாற்றியவன் கைகளை பற்றியே பிழையும்
சொல்லு உண்மை
இருப்பதை தொலைப்பதுவும்
தொலைத்தபின்னே அழுவதும் உண்மை
அதை முட்டாள் தனமென சொல்லு ஆண்மை
அந்த முட்டாள் பெண்மையை
கருணையற்று சிதைப்பதும் உண்மை
இங்கே சித்தினைக்கு கிடைக்காவிதி சிலர் வாழ்க்கைக்கு எழுதும் கேள்வி!!!
ஓற்றை நிலவினை சுற்றி எந்தனை விண்மீண்கள்
உண்டென கனாக்கானும் மனிதனுக்கு தெரியா
ஆனால் நிலவுற்கும் தெரியும் தன்னை சுற்றிய
ஓளி தனக்கான அல்லயென