எதையிழந்தால்
வலியே வாழ்க்கையாகின்றதோ
எதையடைத்தால் மரணவரை
சந்தோஷம் வருகின்றதோ
அதுவே உன்னில் பிறந்த காதல்
எதையிழந்தால்
வலியே வாழ்க்கையாகின்றதோ
எதையடைத்தால் மரணவரை
சந்தோஷம் வருகின்றதோ
அதுவே உன்னில் பிறந்த காதல்
ஓடிக்கொண்டே இருக்கும்
கால்களுக்கு மட்டும் தான்
தெரியும் ஓடிய தூரமும் அதன்
வலிகளும் !!!
எட்ட நின்று பேசும்
வாய்களுக்கு எப்படி புரியாதோ
அதுபோல் தான் வலிகள்
மற்றவர்புரியாமலே.
ஓவ்வொருவர் கண்ணீரும்
வலியும் தனக்குள் சிந்திக்கொண்டே
இருக்கும்!!!
சோர்வாய் போன உடலும்ம
மனசும் உற்சாகமற்றே உடைத்தழுவதை
வேடிக்கை பார்க்கின்றது விடியல்
எழுப்பிடாமல் !!
ஏனென வினாவினேன்
உதிர்ந்த பூவிற்கு வாசமில்லையென்றது!!!
புன்னகை பூக்களே அதிகாலை அழகு
என்பதால் எழுப்பவில்லையென்றது
உடையும் பொழுது பொழுக்கே
பிடிக்கா முகமாகின்றேன் !!!
அருகில் இடம் கிடைத்தால்
போதுமென்ற பெண்மைக்கு
இப்போ
மனதில் இடம் தேவையென
புரிந்ததால் தானே பிரிவுகள்
அதிகமானது
ஓரு தவரான ஆண்மையின்
உயர்வில் கிடைக்கும் பெருமையை விட
ஒரு ஓழுக்கமான ஆணின் வறுமையை
புரிந்த பெண்மையே இறையழகு!!!
எப்போதும் பிடிக்காத
ஓருவர் முன் பிடிக்கவைக்க
போராடும் வாழ்க்கையே
பெண்மையின் தனக்கான
வாழ்க்கைத் தொலைவு!!!
தனக்கான தேடலில்
தொலைந்திடும் நிமிடத்தில்
தொலைந்திடும் ஆண்மையே
புரியாத ஆண்மையின்
தொலைப்வு!!! தொலையாமல்
ஒரு நிமிடம் பிடித்தவரே
ஆண்மைக்கு பெண்மைக்கு இல்லா
வாழ்க்கை!!!
தள்ளியே விழுத்திய போது
எழும்பிய நம்பிக்கை தடுக்கியே
விழுந்தபோது எழுந்த
உற்சாகம் தவறிவிழுந்தபோது
வந்த துணிவு இப்போ
ஏறியே மித்து நடந்தாலும்.
தோற்றே கிடக்கின்றது உணர்வற்று
இறைவன் வெற்றிட்ட
என் உடல் தீயானதாலா இல்லை
மனிதன் உருவாக்கிய வலைகள்
முற்களாய் குத்துவத்தலா ஆனால்
இன்னும் மாறமலே
இருக்கின்றது கோமாளி வேடம்
மட்டும்!!!!
நீவடித்த கற்சிலை உன்
நிழல் பார்த்தே அழுகின்றது
நான் வடித்த பொற்சிலை
எனைபார்த்தே அழுகின்றது
இதுதான் தாமையென
என் கண்ணீர்துளி விழுகின்றது
இருந்தும்ம மகளே
நீ வடித்த ஒவியம் புன்னகைத்தபடி
என்னைப் பார்க்கின்றது!!!!
வேண்டாமே இந்த வெளிநாட்டு வாழ்க்கை!!!
போதும் போதுமே இந்த நாடக நடிப்பு
ஓடு ஓடு என்கின்றது சுமைகள்
ஒழித்திட முடியாமல் சிக்க வைத்து
விடுகின்றது கடன்கள்
தேடிதவிக்கின்றது இதயம்
தேடியிணைந்தவரே பாவம்
பேசிடமுடியா மொழி போல் வாழ்க்கை
பேசினால் பணம் தாலேயே சண்டை
இருப்பதாய் இல்லாமே பெருமைகள்
பெருமைகளால் இல்லை பிள்ளைக்கும்
வாழ்க்கை இருந்தும் திருந்திடா
வாழ்க்கையே நிரந்தரம்
மெல்ல மெல்ல தாய்மொழியும்
மறந்தேபோகுது நமக்குள் !!இருந்தும்
தமிழ் தொலைக்காட்சிகளேடே உரையாடல்
இறந்து வாழுது உணர்வு பணமிருந்தும்
பிரியுது உறவு
ஆடம்பரம் உண்டு உடுத்தியதால்
வயிற்றுக்கு இல்லை உணவு
வசதியாய் இருப்பதாய்
ஊருக்கு சொல்லும் பொய்களே
நமக்கு நாமே கொடுத்த தண்டனை
பிரிவுகள் பேசும் சுயத்தை மதிப்பதேயில்லை
முதுமையில் ஓய்வு இருப்பதாய் பேச்சு
முமைக்கு முதலே உயிரும் போகு தனியாய்
மரணமே இங்கே விடுதலை!!!!
பொய்யின் அழகில் கிடைத்த
சந்தோஷங்கள் காலபோக்கில்
காணமல் போவதை இதயங்கள்
புரிந்தாலே போதும் வாழ்க்கை
உண்மையாகும்!!!
ஓடிக்கொண்டே இருக்கும் பொது
வலுவிழந்த மனசு ஒய்வைத்தேடு
ஓய்வாய் இருக்கும் நிடல்கள்
வலுவிழந்த மனசு ஒடிக்கவண்டே
இருக்க சொல்லுது. !
வெற்றிடத்தின் இடைவெளி
நிரப்படமால் கிடக்கும் போதுதான்
நாம் இழந்தது நம் வெற்றிடத்தின்
அழகு என அறிகின்றோம்!!!
நீ கூட இருந்த போது
அறிந்திடா மனசு உன் மரணத்தின்
இபைவெளியில் ஒரு அனாதையாய்
என்னை நிறுத்திவிட்டு சென்றதை
உணர்கின்றது
தனிமைக்கூட நம்மை பிடிக்காதபோதே
நமக்கு மரணம் கொடுத்த தண்டனை
எவ்வளவு பெரிதென்பதை புரிகின்றது
மொய்யிற்க்கு கூட ஆள்லில்லாத போதே
உண்மையில் தண்டனை புரிகின்றது
தைரியமும் தன்நம்பிக்கையும்
இருக்கும் இதயத்தினை. காதல் செய்
நம்பிக்கையான வாழ்க்கை மலரும்
கோழையின் நம்பிக்கை தன்நம்பிக்கையற்ற
போராட்டம்!!
அலைபோல் வந்து வந்து
மோதும் கவலைகளில்
இழுத்தும் சொல்லும் அலைகளும்
உண்டு
கரைசோர்க்கும் அலைகளும்
உண்டு காலத்தின் அலைகளில்
தள்ளாடும் உடலே வாழ்கை
நமக்கு எதிரான கடுமையான
சூழ்நிலையை கையாள தெரிந்தாலே
நம்மை நாமே ஜெந்திடலாம்!!!
நம்மை நாம் ஜெந்தாலே நமக்கான
பாதை தனித்தன்மையாய் தெரியும்!!!
அதிகாலை என்னை எழுப்ப
ஆதவன் விழிகள் திறக்க!!
இல்லங்கள் எங்கும் ஆரவாரம்
யன்னல் காற்றாய் பேச
என் கைதொலைபேசி
காதைக்கடிக்க மெல்ல
எழுந்திட் ட மனசு கையேடு
கதைபடிக்க
விடியாமல் தவிக்கு விடியல் !!
உற்சாகம் குதுகலமற்று
மாமனைத்தேடுது கண்கள்
ஒற்றைச்தேனீர்ச்சுவை பட்டு
சிதறிய இதழ் போல் !!!
தேன் சுவை கனிகளும்
தித்திக்கா சுவையற்ற
நல்நாளாய்தோற்க
மாமன் நினைப்பு என்னை வாட்ட
அரிசியிருந்தும் பானையிருந்தும்மாமான் கைகளில்லா இன்நாளில்
பொங்கிட மறுக்கின்றது இதயம் !!
பொங்கும் பானையாய் உடல்
பொங்கியே வழியும் மாமன்
நினைவுகளே கரும்பாய்
இனிக்க தித்திப்பாய்
நானும் பொங்களும் என்றும்
மாமன் நினைவுகளோடு !!!!
திங்கள் முகம் சிரிக்க
ஆதவன் புன்னகைக்க
இல்லம் குதுகலிக்க
உறவுகள் ஒன்று கூடிட
பஞ்சம் பதறியேட மழையின்
கைதட்டலில் உழவன் கைபிடித்தே
வீடு வந்த நெல்மணிகள்
உள்ளத்தை. மகிழ்விக்க என்றே
தொலைந்த நம்பிக்கை தழிழ் மண்ணில்
எழுந்து நடக்க அக்கம் பக்கம்
தமிழால் உறவாடி உண்டு சிரித்தே
பூந்திட்டது நன்றாய் இன்று
ஒரு உதயம் தழிழின் சிறப்பாய்!!!
பழய கவலைகயில்
கொஞ்சம் எடுத்து
புதிய கவலையோடு
சோர்த்து
பழமையான சிந்தனைக்குள்
புதிய தீமையை கொஞ்சம்
அழித்து இன்றைய
சந்தோஷ குப்பைக்கைள்
இட்ட மனசை
தீச்சுவாலைக்குள். நிறுத்தி
போகியில் புதிதாக்கியெழுகின்றேன்
நல்லசிந்தனை தெளிவேடு நாளைய
புதிய நாளை வரவேற்க
நமக்கன வரமாய் நம்மை
துன்பத்திலுருந்து காத்திட
ஒருவர் கிடைத்தால் நம்
சாபங்கள் கூட வரமாகும்
நம் துன்பத்தையே ஒருவர்
உருவாக்க கிடைத்தீட்டால் வரம்
கூட சாபமே!
இறைவன் படைப்பிற்குள்
சிக்கிக்கொண்ட மனிதனை
கைபிடித்து காப்பாற்றினால்
காதல்
சிதைத்திட்டு வேடிக்கை
பார்த்தால் உணர்வு
இருவர் உணர்வை
ஓன்றாய் சோர்த்தால் காதல்
ஓருவரால் ஒருவர்அழிந்தால்
உணர்வு
ஓற்றை நூலில்
தெரியாமல் பூத்தால்
காதல் தெரிந்தே
உதிர்ந்தால் உணர்ச்சி
இரண்டில் ஓன்றை
எது அடிமைபடுத்துகின்றதே
அதையே மனிதன்
தனதாக்கிக்கொள்கின்றான்
ஒற்றை துளைக்குள் சிக்கிக்கொண்ட
ஓற்றே ஓன்று மனிதனை
தனதாக்கிகொள்கின்றது காதல்
கிடைத்தால் இரட்டை இதயதின்
ஓற்றை இன்பம்
உணர்ச்சி வாழ்ந்தால் இரண்டு
மனிதனின் இரட்டை துன்பம்!!!
தோல்விகள் என்னை
கேலிபேச
என் உணர்வுகள் என்னை
சிறைபடுத்த என் சிந்தனை
என்னை திரும்பி பார் என்றது!!
என்னை நான் திரும்பிபார்க
என் கற்பனை எனக்கு கதைபடித்தது
இப்படி!! நீ
நல்லமகளாய் தோற்றபின்னே
நல்லமகளை பெற்றுக்கொண்டாய்
நீ நல்ல மனைவியாய்
தேற்றபின்னே நல்ல பெண்மையை
கற்றுக்கொண்டாய்
நீ நல்ல தாயாய் தேற்றபின்னே
நல்ல தாமையை
உணர்ந்து கொண்டாய்
நீ நல்ல நண்பியாய்
தோற்றபின்னே
நட்பின் உண்மையை
உணர்ந்து கொண்டாய்
நீ நல்ல பெண்னாய்
தேற்ற பின்னே
பெண்மையை தாய்மைக்குள்
கண்டு கொண்டாய் நீ
ஓழுக்கத்தை உனக்குள்
கண்ட பின்னே தோல்வியேடு
புன்னகைக்க கற்றுக்கொண்டாய்
வெற்றியை தொலைத்த வாழ்விலும்
உண்மையை உனக்குள்
வைத்தால் தானே
கற்றதன் வழியில்
வந்தவை அனைத்தும்
துன்பமேயென்றாலும்
மற்றவர் துன்பதை இன்பமாக்கிட
நல்ல இதயத்தை உனக்குள்
உருவாக்கினாய் என்றது!!!!
ஓவ்வெரு வலிகளுக்கு பின்னும்
ஓரு அனுபவம்.
ஓவ்வெரு அனுபத்திற்க்கு
பின்னும் ஓரு முதிர்ச்சி
நம்மை மெல்ல மெல்ல
சிந்திக்க சொல்கின்றது!!!
எப்பவும் வார்த்தைகளுக்கு
பிடிப்பவராய் வாழ்ந்து விட்டேன்
அதுதான் வாழ்க்கையும் வார்த்தையேடு
முடிந்துவிட்டது !
எப்பவும்
உணர்வுகளுக்கு
பிடிப்பவராய் வாழ்ந்திடுங்கள்
தடைகளை உடைத்து காத்திடும்
அன்பு கண்ணீர்துடைக்கும் கையாய்
என்றும் வாழும் உங்களேடு!!!!
கண்சிமிட்டும் நிமிடத்தின்
என் கண்துடிப்பின் சந்தோஷம்
சநீயானாய் என என்
உணர்வுகள் நம்பியதுண்டு
இப்போ அந்த கண்துடிப்பால்
என் கண்கள்
கண்ணீர்விடுகின்றது என்
உணர்வுகள் சொன்ன நீயே
இல்லையென!!
காலம் ஒரு விசித்திரம்
நம்மை கடக்கும் வரை
புரியாமல் தொலையும்
அனைத்தையும் கடந்தபின்னர்
காயமாய் ஏமாற்றமாய்
நமக்கு புரியவைத்திடுகின்றது
நீயாய் தந்து போன
ஆசைகளும் நீயாய்
தந்த ஏமாற்றங்களும்
நானாய் எதிர்பார்த்த கனவாய்
கடந்தே போனது ஓரு மழைமேகம்
போல்!!!
கை தொட்டு கைவிட்ட
கிடைக்கும் என்ற கனவுகள்
கனவுக்கைள்
என்றும் வாழும் நம்மோடு
நாட்கள் சொல்ல சொல்ல
கற்பனை போல் தூரமாய் போய்விடும்
நம்மை விட்டு
காகிதகுப்பைக்குள்
ஒற்றைகாகிதம் அவள்
இதுவரை யாரும் தேடியெடுக்க
கற்பனை சிறகு அவள்
மழையின் துளிகள் அழித்திட
மரணத்தின் ஜென்னம் அவள்
மண்ணில் பூக்கும் பூக்களின்
மென்னையின் வடிவம் அவள்
கண்கள் கண்டால் விட்டு சொல்லா
கனவின் தேடல் அவள்
உண்மை சொன்னால் உயிரின்
உளியின் சிற்பியின் கற்பனை அவள்!!
விட்ட பிரிந்த உறவிற்க்குள்ளே
தட்டுதடுமாறி. வாழும் பெண்மையை
வைத்துக்கொள்ளவாயென
கேட்க்கும் ஆண்மைகள். ஏனே அதிகம்
இங்கே பெண்மைக்கு எங்கே
அங்கிகாரம் !!!வாழ்க்கை பட்டு
விட்டபின்னும் பலுபார்க்கின்றது
ஆண்மை எட்டநின்றே உதைபவரும்
கிட்டவந்தே சிதைபவரும்
கற்றுகொள்ள சொல்லும் வாழ்க்கை
என்ன வடிவம்!!!விட்டுபோகும் ஒழுக்கும்
தேடிசிதைக்கும் ஒழுக்கும். கற்றுகொண்ட
ஐந்தறிவு தேடல் இங்கே
மாட்டிக்கொண்டே சிதைகின்றது
பெண்மை!!!
இன்று நேற்று வந்ததல்ல
கிறுக்கல் ஒன்றை காகிதம்
கிடைத்த நெடி வந்து போகும்
எனக்குள் யாருக்காகவும்
பிறக்கவில்லை எனக்குள்
கையில் ஒற்றை எழுதுகோல்
கொடுத்தால் போதும் தொற்றிக்கொள்ளும்
தானாய் எனக்குள் குப்பைக்கைள்
குப்பையாய் தொலைத்தது
அதிகம்
தொலையமல் இங்கே
இருப்பதால்
என்னை கற்பனை செய்யும் விதமே
கொஞ்சம். வருத்தம்
இருந்தாலும் நிக்கபோதில்லை
இந்த பழக்கம் இது பிறப்பிற்க்குள்
அடைத்த கணக்கு மரணம்
தொட்டால் மட்டுமே நிக்கும் இந்த
மையின் கிறுக்கல் !!!
என் புன்னகையை மட்டும்
பார்த்தவருக்கு என்
வலிகள் தெரியவாய்பில்லை
என் கோவத்தை மட்டும்
பார்த்தவர்களுக்கு என்
ஏற்றங்கள் தெரியவாய்ப்பில்லை
என் அனபை மட்டும்
பார்த்தவர்களுக்கு என்
காயங்கள் தெரியவாய்ப்பில்லை
என் கனவை மட்டும்
பார்ப்பவர்களுக்கு என்
ஏங்கள் தெரியவாய்ப்பில்லை
என் வார்த்தையை மட்டும்
பார்ப்பவர்களுக்கு என்னையே
தெரியவ்ப்பில்லை!!!!!
என்னை தோற்கடித்த
என்னையே என் கற்பனை
காதல் செய்ததால் தான்
என் கனவுகளில் பூக்கின்றேன்
நீ விட்டசென்ற கல்லறை
காத்திருப்பதால் தான்
என் உயிரை
கூண்டுக்குள் சிறைவைத்தேன்
என் ஆசைகள் தேற்றபின்னர்தான்
என் கனவுகளை என்னேடு
பூட்டிக்கொண்டேன் என்
கற்பனைகள் தோற்கா
கைபிடியானதால் என் வலிகளேடு
உறவானேன் கைதட்டும் தூரத்தில்
யாருமில்லா வனமானதால்
தான்
என் சிற்பத்தில் வெள்ளை வர்ண்ம்
அழகானது
ஆச்சரியம் ஒட்டிக்கொண்ட
வர்ணங்கள் மட்டும் அழுக்கானது
பல விழிகளுக்கு
என்னில்பட்டுதெறித்த
சூரியனின் ஒளியின்
பார்வையில் மட்டும்
விசித்திரமானேன் புரியாமல்
மனசுடைத்து இதயம் வெறுத்து
கல்லாய் போன கல்லுக்கே கற்பனை
கதையெழுத ஓரு காவியம் குழப்பத்தில்
முடிந்தது தானாய்!!!இங்கே எழுதுகோலும்
எனதில்லை கற்பனைகளும் எனதில்லை!!!!
கண்விழிகளேடு
காத்திருந்து
என் கனவேடு பூத்திருந்து
நான் கண்மூட இசையான
என் கண்விழியின் விழியே
உன்னை கண்டதாலேயே நான்
இசையின் வடிவமானேன்!!!
யாருமில்ல நிலைதொட்டு
யாரும் பேசா வாழ்வை தொட்டு
வாழும் போதுதான் நம்மை
யாருக்கு பிடிக்கவில்லையென
புரியும் அப்பவும் நடிக்க முடியாமல்
ஊமையாகும் வாழ்க்கையே
நமக்காய் நாம் தேடிக்கொண்ட
நியம்!!!
பக்கவந்து கதைபேசிட
இரவு பகல் காத்திருந்தும்
ஓற்றை பார்வை ஓரம்
நீயும் கானல்நீர் போல் தொட்டிட
மறைந்ததேனே கனவே!!
நின்றாடிய நிலாவெளியில்
கண்மலர்ந்த கனவுகளில்
ஒன்றாடிய பொழுகளும்
கனவினைபோல் களைத்தாடியே
மறைந்ததேன் உன்னைபோல்
நிலவே
என்னைபெற்றெடுத்த
இதயங்களுக்கு
நன்றி. என்னை
பொத்திவைத்தே காத்த
என் அப்பாவிற்கு
நன்றி
என் கண்ணில் சிறுதுளி
சிந்திடாமல் என் விழியாய்
வாழ்ந்த என்அண்ணனுக்கு
நன்றி
சின்ன சின்ன சண்டைபோட்டும்
அன்பில் மட்டும் மாற்றமில்ல என்
அன்னையின் பெற்றிடா பிள்ளைகளுக்கு
நன்றி
சாதிக்க துடித்த நேரதனில்
நட்பாய் கூடி பணமற்ற நேரங்களில்
சில்லறைகளால் என்னை சிரிக்க
வைத்த என் இதயம் நிலைத்த நட்பின்கு
நன்றி
வேடிக்கை பேச்சில் வேதனை
துடைத்தே பிரிந்தாடா உறவாய்
இறுதிவரை என்னை புரிந்தே
நான் பெற்றிடா பிள்ளைகளுக்கு நன்றி
தம்பியென்ற ஒற்றை சொல்லில்
என் அன்பை திருடி மணிதுளிகளை
தொலைப்பதறியாமல் தொலைத்து
இன்று வரை என்னை புரிந்தால்
பிரியாமல் உறவாய் நிலைக்கும்
என் தம்பிக்கு நன்றி!
வேசம் போட்டு வேடிகையாய்
முகம் தொலைத்து முகமற்றே போன
முகங்களுக்கு நன்றி
என்னைத்தேடி
என்னையே பயணபடுத்தி
என்னையே மற்றவருக்கு
தப்பாய் காட்டியே நல்லவர்களான
நல்லவர்களுக்கு நன்றி!!!
தன்னம் தனியே தைரியமான
எந்தன் போராட்டமதில் எதிரியாய்
என் புன்னே நின்ற அறிவிலிகளுக்கும்
நன்றி!!!
சில சமயவலியை பெரும் வலியாய்
மாற்றியே இறுதிவரை என்னை புரிந்திடாமல்
சென்றவருக்கும் நன்றி!!!
படைபின் புரிதலை என் பாதையில்
தந்த உறவிற்க்கும் நன்றி !!!
என்னை
படைத்தே பெண்ணை தேடவைத்த
இறைவனுக்கும் நன்றி!!!!
வில்லின் வளைவிற்குள்
வண்ணங்களைப் போல்
ஆடியவள இன்று
இருளின் கறுமைக்குள்
அணியபட்ட ஆடை
தொலைத்திட்ட
வர்ணணமானாள்!!!
என்னை சிந்திதே என்னை
தண்டித்த ஆண்டுகளே
உங்களை கடந்த என்னை
இன்னும் வாழவைக்கும்
எமனுக்கு நன்றி
என்னை எழுதி என்னை
நானே சந்தித்து என்னை
சிந்திக்க வைத்த விதியுக்கு
நன்றி
இல்லையென்ற வறுமை கதவை
திறந்தே வைத்தே காவலுக்கு இருப்பதாய் இருக்கும் நேயத்திற்க்கு நன்றி
மனிதனை மனிதன்
கண்டுகொள்ளா
மதியை தந்த இறையுக்கும்
நன்றி
தவருகளால் அஞ்சி தவறுகளேடு
அழுதுகொண்டே வாழமுடியா
அடிமை வாழ்வை ஏற்கா என்
மனதிற்கு நன்றி
காயபட்ட இதயம் தந்து காயபடுத்தும்
மனிதனை தந்து கண்ணீர்சிந்த
விழிகளை தந்தும் கண்ணீர்சிந்தா
விழிகளான என் விழிகளுக்கு நன்றி
எடுத்துடைத்த தேங்காய் போல்
சிதறிய மனதினை கொண்டும்
புன்னகை பூவாய் பூக்கும்இதழுக்கு நன்றி
நோய்யைதந்து
உடலை வருந்தும் இறைவன்
அருகே தந்த தனிமை கண்டும்
எழுந்தே போராடும் உறுதிகொண்ட
என் உடலுக்கு நன்றி
தெரிந்தும் நம்பி தெரிந்தே தேற்று
தெரிந்தே பட்ட காயத்தால்
உடைந்தே விழுந்திடாமல்
என்னை தாங்கிக்கொண்ட
என் இதயதுடிப்பிற்கு நன்றி
மீண்டும் கனவுகள் பூக்கா
பாலைவனத்தில் மிச்சிய சருக்குள்ளும்
ஈரம் இருக்க வைத்த என் சிந்தைக்கு நன்றி
வரண்ட காலத்து வசத்தை
இருண்ட காலம் கொண்டே சொல்ல
வரும் காலம் காத்திருக்கும்
என்னில் என்னை திருத்திய பக்கங்கள்
முற்று பெற்றதிற்க்கு நன்றி!!!
நம்மில் சிறந்தது நம்மேடு
கூடவரவேண்டியது எதுவென
தெரிந்தும் நம்மிலிருந்து
கொஞ்சம்கொஞ்சமாய்.
போய்கொண்டயிருக்கின்றது
நம்முடைய ஓழுக்கம்
தனியெருவர்
சிறப்பாய்பேசபட்டவையை
கடிணமென கலட்டி
போடுவிட்டே வாழபழகி
விட்ட
வாழ்வை மாற்றி
இவ்வாண்டே நீ பூத்திடு!!!