"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாமன் கைபிடித்து
மாமர நிழலுக்குள்
அவள் பேசிய காலம்
ஒரு மாமரப்பூவின்
உதிர்வை கூட
ஏற்க மறுக்கின்றது !
மாமன் பறித்து
அவள் உண்ட மாங்கனிகள்
சுவையாய் தித்திப்பாய்
மாமன் இருந்தாலோ !!
சின்ன சின்ன சந்தோஷமே!
வாழ்க்கையென்னும்
அவளுக்குள் !!
பெரிய பெரிய கனவுகள்
அவளை கேட்காமலேயே
அவள் விழிகளுக்குள்
வந்து வந்து போகின்றது !!
சுகந்திரக்காற்றின்
சுவாலைக்குள் என்
மூச்சுக்காற்று எரிகின்றது