செல்லமாய்!
செல்லம் கொஞ்ச
செல்வமாய்!
நாங்கள் வந்தோம்
அப்பாவின் கைகளுக்குள் !!
அன்பின் !மொழிக்கேட்டு
அன்பென்னும் !
கூட்டுக்குள் செல்லசிட்டுகளாய்
சிறகடித்தே பறந்த நாம்
பரந்த வான்கடைந்து தூரதேசத்து
துரமானாலும்!
நிழல் குடையின் வடத்திற்குள்
கூடிப்பேசி சிரித்து மகிழும்
சொர்க்க வாசல் அப்பா !
கோவம் வரும் கூடவே அம்மா
குரலும் வரும் பின்னே !
பிரிவுகள் பிரித்தாலும்
பிரிக்கமுடியா இல்லம்
அப்பா !
இன்று அவருக்கு
பிள்ளைகள் ஒன்றுகூடி
சின்ன விழா
நான் தூரம் நின்று
ரசித்தது வியக்கின்றேன்!
அவரை ! அவர்
மகிழ்வை கண்டு வியக்கின்றது
விழிகள் !
ஆனாலும் !
மகள்களை மறக்கடித்த
மருமக்களுக்கு என் இதயத்தால்
நன்றிகள் கோடி !!!கூடியகைகளுக்குள்
கொடுத்த வரம் அவர்களே !!!


