Thursday, 11 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனிதனை அடிமைகொள்

வழிகள்  ஆயிரம்! ஆனால் 

இப்போ!!

 அடிமை  கொண்டது 

ஆடம்பரம்!

பணமெனும் கருவி 

பூசும்  வர்ணத்தில் 

 மயங்கி கிடக்கின்றது 

மனிதம்!

  இருப்பவன்  கையில் 

இழந்தவன்  பொம்மையே !

கண்ணுக்குள்  துள்ளும் 

கண்ணீர்த்துளிகள் விழுந்தாலும் 

நின்றாலும்  வேடிக்கை மனிதனுக்கு 

எல்லாம்  ஒன்றே !!

நீ  உண்மைஎனில் போலி 

பொய்யெனில்  நீயே  நல்ல  மனிதன் !


குட்டிக்குட்டிச் சாரல்......,

வெறுமைத்துளிகள் 

சிந்தி சிவந்த  காலமும்  

கருணையற்று கடந்தது  

தனிமையில்  இருந்தும் 

வெளியில்  ஆயிரம் மாயமேககூட்டம் 

பாலைவன மண்மேல் 

கருணைமுகம்போல் !!

Tuesday, 2 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முதல் முறை  ஒரு 

உணர்வு  அன்பை 



அழகாக்கின்றது  இதுவரை 

பொம்மையின்  கையில் 

சிக்கிய  பெண்மை  

உணர்வின்  கையில் 

உணர்வாகின்றாள் 

 இனிவரும் காலம்  

ஆண்மை  இருப்பதுவும் 

பெண்மையிருப்பதுவும்  ஒரு 

பூமியின்   இரு வேறு உலகு !

தெரியாமல்  போனாலும் 

தெரிந்தே செய்யும்  தவறுகளால் 

தனியாகின்றது  இருவர்வாழ்வும் !! 

இருந்தாலும்  தேவையின் தேடல் 

அழிக்கப்போகின்றது  நல்லறத்தை !!