Tuesday, 2 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முதல் முறை  ஒரு 

உணர்வு  அன்பை 



அழகாக்கின்றது  இதுவரை 

பொம்மையின்  கையில் 

சிக்கிய  பெண்மை  

உணர்வின்  கையில் 

உணர்வாகின்றாள் 

 இனிவரும் காலம்  

ஆண்மை  இருப்பதுவும் 

பெண்மையிருப்பதுவும்  ஒரு 

பூமியின்   இரு வேறு உலகு !

தெரியாமல்  போனாலும் 

தெரிந்தே செய்யும்  தவறுகளால் 

தனியாகின்றது  இருவர்வாழ்வும் !! 

இருந்தாலும்  தேவையின் தேடல் 

அழிக்கப்போகின்றது  நல்லறத்தை !!


மழையின்சாரல்................

 சோர்ந்தே போன



உணர்வினை தட்டியெழுப்பி 

சடுகுயாடி  துளியோட 

வைக்கின்றாய் 

கொஞ்சம் கூட  அச்சப்படாமல் 

மொத்தமாய்  நனைத்து 

மொத்த உடலும் நடுங்க 

உன்னை  திட்டவும்  முடியாமல் 

வெறுக்கவும்  முடியாமல் 

நள்ளிரவில் நான் ஒரு 

சூரியத்தீண்டல் பூவாய் 

நிக்கின்றேன்!

Monday, 1 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கொஞ்சம் கொஞ்சமாக 



குறைந்து கொண்டே போகும் 

வாழ்வின் எல்லைக் கோடு

கொஞ்சநேரம் ஒய்ந்திருக்க. 

சொன்ன நேரம்!

 கொஞ்சமும் யோசிக்காமல்

 என்  கைபிடித்து 

என்னை பார்த்து  கேட்டது 

உன் கைபிடித்து

காதல் செய்யும் நிமிடங்கள் 

 கைநீட்டும் தூரம் வரை 

காத்திருக்கா?இல்லை  உன் வாழ்வில் 

தான் பூத்திருக்க 

உன் துயரத்தில் 

நீ  தோள்சாந்து  கதை பேசி 

உன்னை தேற்ற உன் பார்வையின் 

தூரத்தில் ஓர் உறவு 

 உனக்குத்தான்  காத்திருக்க? இல்லை 

உன் வாழ்வில் சேர்ந்திருக்க 

நீ அழும்  துளிகள் 

உன் விழி குளமதில் ஆறாகி ஓடமுன்  

உன் பாரம் தாங்கும் நின்மதி 

உனக்கிருக்க!!  இல்லை 

உனக்கென ஒரு உயிர்பிறந்திருக்கா  

 ஓடுகின்றாய் 

ஏன் என்று கேள்விக்கு

 விடையின்றி !பேசுகின்றாய். 

உன் பேச்சில் அனைவரும் 

உன்னை  தேட 

ஆனாலும் நீ தேட உனக்கா 

 நியாமற்ற உன் நிழலே நியம் 

நியமாய் சொல்லு நியதானே !