உயரம் எதுவானாலும்
மனசு பூமிக்குள் அடங்கட்டும்
விழும் போது வேடிக்கை
மனிதனே விழிப்போடு இருப்பான் !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓலைக்குடில்
கொட்டித்தீர்த்துக்கொண்டே
இருந்தது மழை
விட்டுவிடாத என்ற
ஏக்கங்களுடன் அவள் விழிகள்
காத்திருப்பது தெரியாமலே
விட்டுவிடாமலே
தொடரும் மழைக்கு
தெரியாது !
அவளின் வறுமை! ஆனால்!
தாலிகட்டியே கூடிவனுக்கு தெரிந்தும்
மழையை விட மோசமான
தண்ணியில் அவன் !எப்போதும்
போல் அவள்
கைகளை பிசைந்தபடியே
நிக்கின்றாள் நாளையாவது
விடியாதயென !!
கருவுக்குக்குள் பூத்த
கவிக்குயில்
பேசத்தொடங்கிய பேச்சுக்கு
சுகந்திரம் கிடைக்காமல்
பேசும் மொழியின் சிறைக்குள்
காகிதப்பூவிற்க்குள் வண்ணமாகி
வானவில் பூப்பறித்து
வெண்ணிலா ஒளிகுளித்து
வெண்மேகப்போர்வைக்குள்
விழுந்த தென்றலுக்கு
வேர்வைதுடைத்திட கைக்குடை
தான் கொடுத்து
உறவுக்குள் வேராகி உயிருக்கு
பூவெடுத்து வானம் துள்ளியோடும்
துளிகளின் விழிகளுக்கு
தோகையாகிய தானிருக்க
நந்தவனமானால் வாசகியாய் !!!