"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை என் கண்கள்
தூக்கி சுமந்த நீரெல்லாம்
இப்போதே!
தப்பியோடிட துடிக்கின்றது
எத்தனை நம்பிக்கை என்
கண்களுக்கு மட்டும் !!
விதியென!
விலகிப்போனாலும்
பாவங்கள் மனிதனைப்போல்
என்னை விடாமல் சுற்றுகின்றது
தண்டனைகள் போதாதென !!
ஒவ்வென்றாய்!
இழந்த பின்னர்
ஒவ்வென்றும் கற்றுத்தரும்
பாடங்கள் என்னை மட்டும்
மனிதனுக்கு வழிவிட்டு
தனியே நடந்து போகச்சொல்லுகின்றது!!