அழகிய ரோஜா அழகால்
புன்னகைத்ததை பிடிக்கா
இறைவன் தூக்கத்தில்
போட்ட கையெழுத்து
தனிமை!!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய ரோஜா அழகால்
புன்னகைத்ததை பிடிக்கா
இறைவன் தூக்கத்தில்
போட்ட கையெழுத்து
தனிமை!!
தனிமை சிறைதந்து
உறவின் உயிர் குடித்துமுற்களை விதைத்தவன்
இறைவன் அவனே !
இருந்த கூட்டதை
தள்ளியோட வறுமைக்குள்
அவளை சிறைவைத்தே
சாவியை தொலைத்தவனும்
அவனே!!புன்னகை சருக்குள்
பொய் பூக்களை வெண்ணீரால்
குளிக்கவைத்தே மண்ணிற்குள்
புதைத்தவனும் அவனே
விதியென தனிமை கல்லறை
கண்ணீர் சிந்துகின்றது
மண்ணில் விழும்துளி
மறுபடி சேராது என்பதால் !
தமிழை அறிவோட
தேடும் மனிதன் தன்னை
பெருமை கொள் மனிதத்திற்குள்
இன மொழி கடந்து
இணைக்கின்றான் !!அதையே
மற்றவரை ஏமாத்தியே
தமிழனாய் தன்னை அடையாளம்
காட்டும் தமிழன் மற்றவர்
உணர்விற்குள் விளையாடியே
தன்னை மட்டும் காப்பாத்தி
வாழ்கின்றான் !