Monday, 27 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அன்பெதுவான 



தேடிப்பார்த்தேன் 

யாரிடமும் கிடைக்கவில்லை 

நான் தேடிய அன்பு !அன்பை 

 கேட்டேன் அன்பிடமே!

 அன்பு கண்ணீரோடு 

சொன்னது நீகொடுத்து 

நீ தேடும் நான் தொலைந்த 

இடமே அன்பு !உன் வீட்டில் 

அழகான ஒளியின் வெளிச்சம் 

ஊர்பரவ ஊர்பேசும் உன் 

வீட்டில் உன் கண்களின் 

ஏக்கம்  நான்னென !நான் 

தேடும் நீயும்  நீதேடும் 

நானும்  தொலைக்கப்பட்ட 

பெண்மையை !தேடாத 

சமூகத்தின் வீரமென்றது  !

குட்டிக்குட்டிச் சாரல்......,

 கற்பனை தேடும் 

கனவுக்குள் பெண்மையழகு 

ஆண்மைக்கண்ட கல்லுக்குள்லும் 

பெண்மையழகு 

வாழ்கை கண்ட உயிருக்குள் 

மட்டும் பெண்மை அழகை 

கண்ணீர்குடிக்கின்றது 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிலைகொள்ளா  வேலைகளை 



நிலையில்லா உயரத்தில் 

வைத்து!  நிலையில்லாமல் 

நின்றுகொண்டு 

நிற்கும்  உறவுகளை

நிலைமாற   செய்துவிட்டு 

நிலைக்கும் கற்பனைக்குள்  

நீயும்  நானும்  பேசும் 

வார்த்தைகள்  எனறும் 

போலிமுகம்கொண்ட 

விம்பத்தின்  அழகே !

இங்கே  நாம்  தொலைத்து 

தேடும்  வாழ்விற்க்குள் 

அன்பே  தோடும் பொருளானால் 

காதல் எப்படி வாழும் 

வாழ்க்கையாகும் !

யாரோ எழுதிய கற்பனைக்குள் 

யாரோ தொலைத்த காதலை 

நாமும்  இன்னும் எதுவென 

தெரியாமலே தேடிக்கொண்டே 

இருக்கின்றோம் !அன்பேயில்லாமல் !!