அன்று ஒருநாள்!
அழகிய மணப்பெண்போல்
புன்னகையோடு
என்னை வரவேற்ற மரம்
இன்று என்னைபோல்
வண்ணமிழந்து வாடியே
நிக்கின்றது தூறலோடு
தென்றல் கைகோர்த்ததாலோ !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய மணப்பெண்போல்
புன்னகையோடு
என்னை வரவேற்ற மரம்
இன்று என்னைபோல்
வண்ணமிழந்து வாடியே
நிக்கின்றது தூறலோடு
தென்றல் கைகோர்த்ததாலோ !!
கொட்டும் மழைக்கு
மட்டுமே தெரிந்தது
அவள் கண்ணீர்த்துளிகள் !
தூரத்தே ஒதுங்கிய
விழிகளுக்கு தெரிந்தது
அவள் சிறுபிள்ளை தனம்
விதிக்கு தெரிந்தது
அவள் மரணம்
ஆனால் !
மின்னலுக்கு தெரியாமல்
போனது அவள் ஆசைகள்
தேசம் கடந்து நேசம்
கொண்டாடுகின்றது இற்றைப்பொழுதை
சந்தோசமாய் !
விடியல் காற்று கொஞ்சம்
சுகந்திரமாய் வீதியில் வீசுகின்றது
நாளைய உதயதம் தழுவ
முகங்கள் கொஞ்சம் அடையாளம்
மறந்து கைப்பிடித்தே நிக்கின்றது
வீதியெங்கும் !
நிழல் படங்கள் கொஞ்சம்
அழுகின்றது நியமில்லை
தம் உருவமென்று புதிய
உதயம் எழுகின்றது எல்லா உயிர்களுக்கும்
பொதுவாய் !!