Friday, 29 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தினம் தினம்  தேடி


 

தினமதனை கொண்டாட 

செதுக்கிய  தினத்திலும் 

செருக்காய்  கதைபேசும் 

மனிதனுக்குள்  தினமதனை 

கையில்  எடுத்து

இருப்பவனிடம்  கொடுயென 

இருப்பவனுக்கு  கற்றுக்கொடுக்கும் 

பண்பு !இல்லாத இதயத்தின்  

இருள் நாள் ஒளிவிளக்கின் 

ஒரு  திரிதொடக்கமானது !

இன்று  பசியின்  தேடலுக்கு 

தற்காலா  சந்தோசமானது !

வறுமையின்  வயிறும் பசிக்கும் 

என்ற  தினத்தின்  தேடலின் 

தொடக்கத்தின்  முதல் மனிதப்பிறப்பு 

உயிர்பெறுகின்றது  !  

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனிமை களம் சமைக்க 



வாழ்க்கை   போராட் டம்  

கலையிழக்க 

உரிமையற்ற  தனிமையில் 

களைப்பின்  உச்சம்  

விழிகளை  மூட விடியலில் 

விழிக்கும்  பசியின் தூக்கம் 

துடிப்பாய்   எழுப்பி  பெண்மைக்கு 

சொல்லும்  செய்தி  உண்டாலும் 

உறங்கினாலும்  உனக்கான 

உன்னை  உயிர்  வரை  சுமக்க 

உன்னை  விட்டால் 

யாருமில்லை !!

Thursday, 28 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்  தகுதி என்னவென 

அறியவில்லை  நானும் !

அறிவும்  அருமருந்தாகுது 

இருந்தும்  கூட! 

விளைவு  களமாட காசுபணம் 

கையில்  இல்லை 

 பெருமைக்கு நாலுபேரும் 

கூடி பேச குடிலில் இடமுமில்லை  

இருந்தும் 

ஏழைக்கு  ஏமாற்றம் 

கொடுக்க  அன்பேனும் 

சொல்லுண்டு  பூட்டிய வாசலை 

தட்டியே வாயடி போக !

புரிந்தும்  சந்தோசமாய்  ஏமாறுது 

மனசு இதயம்  ஏக்கங்களாய் 

துடிப்பதால் !!