கொட்டும் மழைக்கு
மட்டுமே தெரிந்தது
அவள் கண்ணீர்த்துளிகள் !
தூரத்தே ஒதுங்கிய
விழிகளுக்கு தெரிந்தது
அவள் சிறுபிள்ளை தனம்
விதிக்கு தெரிந்தது
அவள் மரணம்
ஆனால் !
மின்னலுக்கு தெரியாமல்
போனது அவள் ஆசைகள்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கொட்டும் மழைக்கு
மட்டுமே தெரிந்தது
அவள் கண்ணீர்த்துளிகள் !
தூரத்தே ஒதுங்கிய
விழிகளுக்கு தெரிந்தது
அவள் சிறுபிள்ளை தனம்
விதிக்கு தெரிந்தது
அவள் மரணம்
ஆனால் !
மின்னலுக்கு தெரியாமல்
போனது அவள் ஆசைகள்
தேசம் கடந்து நேசம்
கொண்டாடுகின்றது இற்றைப்பொழுதை
சந்தோசமாய் !
விடியல் காற்று கொஞ்சம்
சுகந்திரமாய் வீதியில் வீசுகின்றது
நாளைய உதயதம் தழுவ
முகங்கள் கொஞ்சம் அடையாளம்
மறந்து கைப்பிடித்தே நிக்கின்றது
வீதியெங்கும் !
நிழல் படங்கள் கொஞ்சம்
அழுகின்றது நியமில்லை
தம் உருவமென்று புதிய
உதயம் எழுகின்றது எல்லா உயிர்களுக்கும்
பொதுவாய் !!
சின்னதாய் ஒரு பயணம்
கூடியபயணிகள்
எதை எதையோ
தேடியவடிவாய் கைபேசியோடு !
நடுவே நான் எதுவும் தோன்றாமல்
வேடிக்கை பார்த வேளை
பாதையோர மரமொன்று
அழகிழந்த மணப்பெண்ணொருத்தி
அழகுக்கலை பெண்ணின்
கையில் கிடைத்தவள் போல்
அழகான இளஞ்சிகப்
பில்
புன்னகைத்தது!