தாய்மைக்கு தாயான
குழந்தையே !
உன்னோடு இணைந்த
என்னோடு பூக்கும்
பூபாளம் யாருக்கும்
கிடைத்திடாப்பொழுதுகள் !
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தாய்மைக்கு தாயான
குழந்தையே !
உன்னோடு இணைந்த
என்னோடு பூக்கும்
பூபாளம் யாருக்கும்
கிடைத்திடாப்பொழுதுகள் !
மரணங்கள் மன்னிக்கா
மண்ணில் மரணித்த உயிரும்
மன்னிக்கா அடையாளமே
நாம்!!விடுதலை மூச்சுக்குள்
கண்ணீர் !
விதைக்கப்படடதோ அறுவடையற்று
அகதியாய்! கிடக்கின்றது
விரும்பியும் விருப்பாமலும் நாம்
பிளவுபட்டே விதிசெகின்றோம்
கொடுத்தவர் தெருவில்
எடுத்தவர் மாளிகையையில்
இறைவனிடத்தில் மன்னிப்பு
கடிதங்கள் மூட்டை மூட்டையை !!
புறம் பார்த்து புறம் பார்த்து
அகம் பார்க்க மறந்துவிடட்டோம்
இனம் பார்த்து குலம் பார்த்து
நம்மையே நாம் பார்க்க மறந்துவிட்டோம்
வழிமுடி விழிமூடி சிந்திக்க
மறுக்கின்றோம்
வந்ததை மறந்து விட்டு
வருமென காத்திருக்கின்றோம்
கையில் இருப்பதை கேலியாக்கி
கைபிடித்தே கலவரம் செய்கின்றோம்
கருணைக்கும் கடவுளுக்கும்
தூரமாய் பணத்தோடு விளையாடுகின்றோம்
வருவதை ஏற்காமல் அழித்தழித்து
அழிந்திடவே துடிக்கின்றோம்