மனிதனை அடிமைகொள்
வழிகள் ஆயிரம்! ஆனால்
இப்போ!!
அடிமை கொண்டது
ஆடம்பரம்!
பணமெனும் கருவி
பூசும் வர்ணத்தில்
மயங்கி கிடக்கின்றது
மனிதம்!
இருப்பவன் கையில்
இழந்தவன் பொம்மையே !
கண்ணுக்குள் துள்ளும்
கண்ணீர்த்துளிகள் விழுந்தாலும்
நின்றாலும் வேடிக்கை மனிதனுக்கு
எல்லாம் ஒன்றே !!
நீ உண்மைஎனில் போலி
பொய்யெனில் நீயே நல்ல மனிதன் !

.jpg)
.jpg)