Sunday, 5 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இரவுகள் என்னை பார்த்து 



அச்சத்தோடு கேட்கின்றது 

பெண்ணே நீ !

அச்சம் கொள்ள வேண்டாமா !

 நிசத்தம் கொண்ட எனக்குள்  

நின்று! பதற்றமின்றி ரசிக்கின்றயே 

உன் முகம் மூடிய என் முகத்திற்கு 

உன் விழி கொண்டு புது வெளிச்சம் 

தேடுகின்றாய் !அச்சமின்றி !

அடடா !!உன்மொழிகேட்டு 

குரல் கேட்டு  இசைக்கும் 

தென்றலின் குரல் ஓசை 

மறக்கின்ற மாயத்தால் 

உன் திசை பார்த்து அச்சத்தோடு 

காத்திருக்கின்றேன்!

ஆதவன் தொடும் வரை 

கரைகின்ற என்னை 

உன் விழி சொல்லும்  மொழி தேடி 

கரைய வைக்கின்றாயே பெண்ணே!

மௌனம் பேசும் 

கலைபெண்ணே பதில் சொல்வாயா 

உன் பெண்மைக்குள் ஒரு தீ 

என் இரவிற்குள் இரவல் கேட்க 

நீயே துணைக்கு என்னையே காவல் 

என்கிறாய்!!



Saturday, 4 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நல்ல அப்பவாவின் 

கைகளுக்குள்  நல்ல 



பிள்ளைகளை  உருவாக்கலாம்  

நல்ல  தலைவனின்

 சிந்தனைக்குள் 

கெடடவனும் நல்லவனாய் 

உருவாக்கலாம்!  உருவாக்குபனை  

நல்லவனாய்  தேடுவதே 

நல்ல  உலகத்தை  உருவாக்க 

தேவை!கிடைத் நிழலை 

விட்டு விட்டு  கிடைக்காத 

நிழலுக்கு  குடை பிடிக்கின்றோம் !

இது  காலச்சக்கரம்

 கற்று தந்தாலும்  இன்னும் 

கற்கமறுக்கும்  காலக்கொடுமை

இந்த  மனிதப்பிறவி !! 


 

 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவள்  உண்மையின் 

அழகு !அந்த அழகினை 

பார்த்து யாரோ

 சொன்னார்கள்! அவள் 

உண்மையில் அழ
கற்ற கறுப்பியென   !

அவள் ரசனையின் 

அழகு  அந்த  அழகினை 

பார்த்து  யாரோ 

சொன்னார்கள்  அவள் 

ரணையற்றகறுப்பியென  !

அவள்  ஒரு பொய்யின் அழகில் 

புதைக்கப்படட அழகின் 

பொக்கிஷம் என 

அவளுக்கு மட்டுமே தெரிந்த 

அழகின்  அழகு  அவள் !