அவளை வாவென
சொல்லும் வாய்வார்த்தைகளில்
அவள் தேடிக்கொண்டு
இருக்கின்றாள்
உண்மையில் ஒரு காதலை
அவள் இன்னும்
தேடிக்கொண்டே இருக்கின்றாள்
அவளுக்குள் இல்லா போலியை
காதலாய் நியாமென சொல்லும்
வார்த்தைகள் கொன்றுகுவித்த
கல்லறையின் மேல் காலரா
அமர்ந்தபடி !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவளை வாவென
சொல்லும் வாய்வார்த்தைகளில்
அவள் தேடிக்கொண்டு
இருக்கின்றாள்
உண்மையில் ஒரு காதலை
அவள் இன்னும்
தேடிக்கொண்டே இருக்கின்றாள்
அவளுக்குள் இல்லா போலியை
காதலாய் நியாமென சொல்லும்
வார்த்தைகள் கொன்றுகுவித்த
கல்லறையின் மேல் காலரா
அமர்ந்தபடி !!
ஊர் போற்ற உறவு போற்ற
வான் போற்ற வனம் போற்ற
நான் தோற்று நடக்க நதிக்கரை
வாடுது எனக்காய்
மீன்கண்டு பூ கண்டு
நரையும் சோகம் கொண்டு
கொக்குண்ண மீன் விட்டு
என் பாதத்தடத்தின் மேல் நின்று
ஏக்கமாய் பார்க்குது!!
பாவமாய் தோணுது எனக்கும்
அனாலும் மனசு கேக்காமல்
கிடக்குது எனக்குள் !!
மாற்றமுடியாமல்
ஒரு கூட்டம்
மாற்றம் தேடியே
ஒரு கூட்டம்
நடுவே மாட்டியே தலையை
பிச்க்கொண்டோடுது
சுயநலமும் பொதுநலமும்
மாற்றத்தைதேடி!!