என்னைப்படைக்கும்
போது
என்ன நினைத்தானோ
இருக்கும் வரை
அழுது கொண்டே ஓடு
எங்கின்றான்
முட்டிமோதி பார்த்தாலும்
முடியாதே போகின்றது
தூரம்
விழுந்தெழுந்து களைத்து
நிறுவிடடேன்
எனியாவது
ஓய்வுகொள்ளட்டும் இறைவன் !
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னைப்படைக்கும்
போது
என்ன நினைத்தானோ
இருக்கும் வரை
அழுது கொண்டே ஓடு
எங்கின்றான்
முட்டிமோதி பார்த்தாலும்
முடியாதே போகின்றது
தூரம்
விழுந்தெழுந்து களைத்து
நிறுவிடடேன்
எனியாவது
ஓய்வுகொள்ளட்டும் இறைவன் !
தமிழில்
விடுதலை என்னும் சொல்
மட்டும் பெண்
தொலைத்து விட்டு
தேடுக்கின்றாளே !
ஒற்றை ஆணை
கோடிப்பெண்கள் கொண்டாடும்
உலகத்திற்குள் ஒரு பெண்குழந்தையை
கூட பாதுகாத்திட யாருமில்லை
வேடிக்கையான விடுதலை தேசம்
பெண்ணிற்கு மட்டும்!
தூயதமிலில் பெண்ணை துரத்தி
துரத்தி இழிவு படுத்தும்
மனித நேசம்
கள்ளத்தொடர்வுக்குள்
விளக்கைபோட பணத்தை எரித்தலும்
இழந்த வீட்டிற்க்குள்
வறுமை போக்க எந்த
பணத்தையும் எடுப்பதில்லை ஏனோ
பேதைப்பெண்ணாய் போதை
தேடும் மனிதநேயத்தை மாற்றும்
உறவில் புதிய விடுதலை பூக்கட்டும் !!!
விதியோடி விழுத்தியகாலம்
விடுதலையில்லா
மரணதண்டையென
விட்டுக்கொடுத்து போன
உறவு எழுதிய சுயநலப்புத்தகதின்
வரிகளை படிக்கத்தே அவள்
புரிந்து கொண்டால்!