கைகள் வெட்டுண்டு
வீழ்ந்தாலும்கால்கள் கட்டுண்டு
கிடந்தாலும்
நல்மனதின் சிந்தனை
நல்விதையே விதைக்கும் !
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கைகள் வெட்டுண்டு
வீழ்ந்தாலும்கால்கள் கட்டுண்டு
கிடந்தாலும்
நல்மனதின் சிந்தனை
நல்விதையே விதைக்கும் !
சுமந்த கருவை
காக்கும்
பெருமை கொள்
பெண்மை
சிறுமையாகி! இங்கே
தனியே! கிடக்கின்றது
போற்றும் சமூகமும்
தூற்றும் சமூகமும்
தூரதேசத்து பார்வையானது
உண்மை!
வெளியே அழகின் வேடம்
உள்ளே வலிகள்
சுமந்திட முடியாமல்
பெண்மைக்குள் போராட்ட
களம் ! அறிவின் திறனை
அழித்து
தாய்மையை கொன்று
உயிரை குடிப்பதுவும் உண்மை !!
காலத்தின் ஒட் டம்
அனைத்தையும் அள்ளிக்கொண்டோடுத்து
தனியாய் !! சொன்னால் புரியும்
என்ற பார்வைகள் குருடாகி
சொல்லாமல் ஓடுது வாழ்க்கை !!
என்னைத்தேடிக்கொண்ட
என்னை!தேடவிடாமல் திருடிக்கொண்டு
போன இயற்க்கை!
கொடுத்துவிட்டு போன
காட்டு முல்லை! மூடிவைத்தே
வீசுகின்றது காடெங்கும்
என் வாசத்தை !