Wednesday, 29 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 அதிகாலை வேளை 

அவசரஅவசரமாய் 

 வேலையை  நோக்கி 

ஓடியவேளை  

சின்னதாய்  ஒருதூறல் 

மெல்லமெல்ல சரலாகி 

என்னை  தீண்ட 

 அதைக்கண்டுகொள்ள 

நேரமில்லா  என்வேகத்தை 

சடடென  தடுத்தது  தென்றல் 

சடென  கோவமாய்  மரத்தின் கீழ் 

நின்ற  என்மேல் 

 கொஞ்சமும்  யோசிக்காமல் 

மரத்தின்  பூக்களை  என்மிது 

கொட்டியது!  நின்று ரசிக்க 

நேரமில்லாமல்  குடையை  விரித்தபடி 

வேகமா  நடந்தேன் !! 


குட்டிக்குட்டிச் சாரல்......,


அன்று  ஒருநாள்!

அழகிய மணப்பெண்போல் 

புன்னகையோடு 

என்னை  வரவேற்ற மரம்  

இன்று  என்னைபோல்

 வண்ணமிழந்து  வாடியே 

நிக்கின்றது  தூறலோடு 

தென்றல் கைகோர்த்ததாலோ !! 



 

Friday, 24 April 2026

மழையின்சாரல்.................,

 கொட்டும்  மழைக்கு

மட்டுமே  தெரிந்தது 

அவள்  கண்ணீர்த்துளிகள் !

தூரத்தே  ஒதுங்கிய 

 விழிகளுக்கு தெரிந்தது 

அவள்  சிறுபிள்ளை  தனம் 

விதிக்கு  தெரிந்தது 

 அவள்  மரணம் 

ஆனால் !

மின்னலுக்கு  தெரியாமல் 

போனது  அவள்  ஆசைகள்