"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வண்ணப்பூக்களின் வண்ணமிழந்த
தேன்சுவைபோல் அவள் கண்ணீரும்
வண்ணமிழந்த பூவாகின்றது!!!
அவள்!!
ஒருமுறையில்லை பல முறை
கேட்டும் கிடைக்கா ஒன்று
அவள் ஆசைப்பட்ட அவளின்
சந்தோசங்கள்!!!
விளையாடி ஓய்ந்தது கனவு
விளையாட்டாய் முடிந்தது வாழ்க்கை
விதியென தேற்றுது மனசு
விழுத்திவிட்டு அழுகின்றது கண்கள்!!