Tuesday 14 July 2009

உயிர்த்துடிப்பு............

சொல்லித் திட்டி
திட்டி அடித்து
சொல்லாது வாழ்ந்தாலும்
மனிதர்கள் தேடும் சொந்தம்
இது தான்!!

தூக்கி நிறுத்தி
தூண்டாது போனாலும்
உணர்ச்சி விளையாட
ஒன்றானா இதயங்களால்
உருகும் உடலில் தொலையாய
உணர்வாய் தேடும் சொந்தம்
இது தான்!!

தேடிக்கிடைத்தாலும்
தேடாது வந்தாலும்
சோராது போனாலும்
சேர துடிக்க தேடி தவிக்கும்
சொந்தம் இது தான்!!

காயங்கள் கொடுத்து
காயங்கள் பட்டு
காலங்கள் கடந்தாலும்
தொலைந்த கனவோடு
பேசும் சொந்தம் இது தான்!!

மறக்க நினைந்து
மறந்தே வாழ்ந்தும்!!
மறக்க முடியா மறதியின்
உரிமை செய்தியின் இறுதி
சொந்தம் இது தான்!!

பொய்யான மகிழ்ச்சியில்
மெய்யான நிமிடத்தை
பொய்யாய் தந்தாலும்
மெய்யான உறவின்
பொய்யில்லா பந்தம் இது தான்!!

Wednesday 1 July 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

அவையங்கள் அவையிழந்து
அவையில்லா அவையங்களின்
வலியோடு சிதைகின்ற உடலில்
வடிகின்ற உதிரமாய் உதிர்கின்ற
உணர்வை தொட்டெழுப்பும்
ஈயும் எறும்பும் விட்டிடாதா என
ஏங்கும் ஏக்கத்தை தட்டி விட
முடியா தவிப்பாய் தொட்டவலியும்
விட்டிட சோகமும் கொட்டக் கொட்ட
கொட்டிய வாழ்வை
தட்டிய தர்மம் சத்தமில்லாது
சொல்லுது சூது கவ்வியதாய்..