மின்மினிசிறகில் மின்னிய
ஒளியில் கண்மணி விழியில்
காதல் பூத்ததை வெள்ளி நிலாவை
விடுதலை செய்த மேகம் கண்டதாய்
சொன்னது!!!
மின்மினிசிறகில் மின்னிய
ஒளியில் கண்மணி விழியில்
காதல் பூத்ததை வெள்ளி நிலாவை
விடுதலை செய்த மேகம் கண்டதாய்
சொன்னது!!!
குறையின் வடிவில் நிறைவைத்தேடி
குறைத்துக் கொள்கின்றோம் மனித்த்தின்
அழகை!!!
தெரியாமல் வேறுக்கும்
இதயம். தெரிந்த நேசிப்பால் அழித்து
. விடுகின்றது ரசணையின் வடிவில்
குறைகளை!!!
உண்மையில் ஓரு உறவு
உரிமையாய். வருமெனில் என்றுமே
ஓரு துணிவு எப்போதும் கூடவரும்
இல்லையே !!எந்தணை ஆறுதல் எவர் தொடுத்தாலும்
பொய்யான புன்னகையே மெய்யாக மிஞ்சும்!!!
கட்டாயத்தால் கண்டுவதே
வாழ்கையெனில் கட்டாயம்
உடைந்திட வே போராடும்
கண்டிப்பாய் ஒரு நேசம் உண்டென்றால்
சொல்லவே தேவையில்லை பாவமாய் ஓரு ஜீவம்
எதையுமே புரியாதல் மாட்டிதவிக்கும்
விடைகிடைக்கும் வரை!!!
கண்மூடி பயணிக்கும் காலத்தின்
நினைவு தீயானதால் கன்திறந்த
காயத்தின் வலியே நீயானாய்
நேசத்தில் தேற்ற நேசத்தின் வலி
கற்றிட வைத்தது நேசத்தின் ஆழத்தை
ஏமாற்றிட பல காரணம் ஏமாந்திட
ஒற்றைக்காரணம் நேசமே உணர்வானகின்றது
உயிர்வரை!!!
பெண்மையின் சிந்தனையை
தடுத்திட எந்தனையே வாழ்கை தடை
மோதியுடைத்திட போராடி போராடி
அழிவில் விழுவதும் எழுவதும் பெண்மைக்கு
நியதியென்கின்ற நியதியை எழுப்பியவர்
எழுப்பிய சுவருக்குள் பெண்மை தோற்கடிக்கபடுகின்றது
புரியாதே மனம் தடுமாறும் போதே
யார் தவரோடும் தவறிவிழுத்து விடுகின்றது மனசு
நல்லதையெண்ணி கெட்டதில்
விழும்போது தெரிவதில்லை தன் தவறின்.
கயிற்றை யாரோ பிடித்திருப்பது
புரியும் போதே தன்னை உணர்கின்றது!
இதை சொல்லிபுரியவைத்திட
எல்லோராலுமுடிவதில்லை முடியும் போது
வாழ்கை தோற்றுவிடுகின்றது!!
உன்னை உன்னால் வென்றிட முடியாநிலையே
என்றால் தவறுகளின் ஆரம்பத்தில் நீ
உன்னை உனக்கு தெரிந்தால் உன்னாலும்
உருவாகும் அழகான சமூகம்!!!
கற்பனையின் சிறப்பு சிற்பியின்
உளிதரும் அழகு மனதின் சிறப்பு
நல்ல மனிதனை உருவாக்கும் இதபத்தின்
அழகு!!
சபையின் நடுவிலும் உன்
பெயரின் உச்சரிப்பில் நான்துள்ளிக்குதிக்கின்றேள்
உலகின் கண்கனை மூடிவிடாதே .
என் மகிழ்ச்சிப்பூக்கள் என்னுள்
மவரும் அழகினைப் பார்த்திட்ட்டும்
இது தான் உணர்வின்உண்மையழகு!!!!
உயிரில் கலந்த ஓரு ஆன்மா
ஓரு நெடிப்பொழுதில்
உணர்வில் எழுதிடுது. பிறவிகள்
கடந்த உறவை !!!
ரவுடி மகனென பொருமை கொள்ளும்
தாய்மை சிறக்கும் வரை கற்பனைவாதிகளின்
கற்பனையும் சிறக்கின்றது பெண்மையை
அழிக்கும் பெண்மையின் சிறப்பாய்!!
தூக்கமும் விழிப்பும்
துயிலமுடியா தவிப்பும்
ஏக்கமும் அழுகையும்
வாழ்கையாய் போனதால்
பார்க்கும் விழிகளுக்கு அறியமல்
போவதே படைப்பு
திக்குதிசைதெரியா மனங்ளில்
திசைக்கற்றாய் விழுந்ததில் பட்டதே
காயாம் இட்டிட வார்த்தையின்றி
ஊமையானதே இதயம் கற்றிடப் பாடம்
தந்த கற்பனைகளைக்கு தெரியாதே
வலியதன் துடிப்பு!!
காதலில் குறையில்லை
இல்லறத்தில் நிறைவில்லை
இரண்டுமே சோராமல் இடையே நிக்கின்றது
குறையேயில்லாமல் குறைகள் !!
இட்டசுவையில் நீ தொட்டாசுவையே
கனிந்த கனியில் உன் கண்கள்
பாராக்கனியே மலர்ந்த மலர்களில்
உன் வண்ணம் தொடாமலரே பிறந்த
பிறப்பிலேயே நீ வெறுக்கும் பிறப்போ
இப்பிறவி!!!
அடைக்கப்பட்டவன் மகிழ்ந்தே வெளிவர
சண்டையிட்டவன் கைகோர்த்து மகிழ்ந்திட
தவறுயென்றவன் !!அடைபட்டுவிட்டான்
வெளிவராதே !!
சாதிப்பவனை குறைகாண்பவன்
ஓயாதே திட்டுகிண்றான் தன்னை மறந்தே!!
உள்ளேயும் வெளியேயும் ஓரே முகம் தான்
மற்றவர் குறைகளும் நன்றே தான்!!!
நிலாத்தேய்ந்தால் வண்ணமதி
வடிவழகை இருள் காட்டுமே. அழகாய்
ஓளியெடுத்து ஓளியாக நீயிருந்தால்
ஓளிருமே வண்ணம் போல் மதியும் மதியாகும்!!
இது எதுவென எதையும் தேடாமல்
இருளேடு ஏனே தேய்வு!!!
நியங்களில் யுத்தம் நிழலேடே
நடத்தியே தேற்றிடும் மனசு!!
புலம்பலும் இயம்பலும் புரியாதே
கரையுது கவி வியம்பினால் விளக்கமும்
விடையாகுமே மனசிற்கு!!!
உள்ளேய்யே ஓரு உள்ளிருப்பு
இதயத்தின் வலியிருப்பு சொல்லவும்
முடியாமல் வெல்லவும் முடியாமல்
ஒர் தவிப்பு !!இயல்பாய் இருப்பதாய். ஓர்நடிப்பு
இயமினால் கேட்கவெரு செவியுண்டா
என கேட்கும் மனசு. பெய்யென மெய்யாய்
எழுதிடும் கவி வடிப்பு. வடிவமே இல்லாத உயிர்
பிறப்பு!!!வடிவத்தை இழந்தும் வாழும் தனிப்பிறப்பு
மற்றவர் புரியா புதிர் மனசு காயங்கள் விடையான கண்ணீர் தொகுப்பு!!!
உணர்வுகளை அடக்கியாளத்தெரிந்தவனே
மக்களிமனதை வென்று சாதனை படைக்கின்றான்
இதை புரிந்தவென்றிட மனிதனே மனிதனுக்கு
கற்றுக்கொடுக்கின்றான் பல காயத்தை
பாடங்களாய்!!
இரவின் தூக்கத்தில் விழியின்
விழித்திருப்பில் உன் தாலாட்டில் என்
தூக்கமே சாபத்திலும் பெற்றவரமே!
தண்டித்துவிடாதே மரணம் வரும்வரை !!ஓரு
ஜீவனின் ஜீவித்தை இடுகாட்டு காட்டில்
யாரே எழுதி போட்ட சென்ற சாபமென!!
உதிக்குது உதயம் இருளுக்கும்
வெளிச்சதிற்கும் நடுவே !
பாராப்பாரினில் பாமவர் இருப்பது
பாவம் !!! பார்ப்பவர் தோடலிலும் முடிவினில்
கிடைப்பதேயில்லை வெற்றி!
இளமைக்கும் முதுமைக்கும்
இடையிலே தோன்றும் யுத்தம்
முதுமையை தோற்கடித்து தோன்றும்
உயர்ந்த பாடத்தினை கற்றவர் வாழ்வே சிறந்த
புத்தகம்!!
ஓவ்வொரு நாளும் ஓவ்வோரு ஏமாற்றம்
எதனால் !எல்லோரிடமும் இதயம்
சிந்திக்கும் மனதிற்கும் சிந்தனைக்கும்
இடைவெளி. உள்ளதாலே !!மனிதன் ஏமாந்தே
ஏமாற்றி இதுதான் வாழ்கையென வாழ்கின்றான்!!!
எல்லோரும் நீ தப்பென சொல்லும் போதும்
திட்டும் போதும் கலங்கி தடும் மாறும் மனதினை
யாரே. ஓருவர் தோல் தொட்டு அரவணைத்து
சரிசொய்யும் போதே நம்பிகை உடையாதேஎழுகின்றது !!விமர்சணங்கள் கடுமையாகும்
போதே தவறும் கடுமையாகின்றது !!
பொண்மைக்கு. என்ன பெருமை
பிறப்பிற்கும் இறப்பிற்க்கும் இடையில்
சிறுமையில் சிந்தனை
வெறுப்பில் வேதனை
விற்பனைக்கு நல்ல உடல்
விரும்பித்தேடினால்
பழிகளை சுமந்த உயர்வு
எதையும் எதிர்த்தால்
இல்லையே மானம்
இயம்பிட கூடவே கூட்டம்
தாய்மையும் சிறப்பும்
தண்டிக்க வந்ததே தனியாய்
முதுமையில் இல்லையே அன்பு
எண்ணங்கள் பல எழுத்தின் வடிவம்
எழுந்தாலே தடுக்கும் தனியாய்
வறுமைக்கும் வயதிற்கும். போர்
வயதினையும் வருந்தியே
கடந்திடும் நாடகள்
நல்லதையழித்து நடந்திட்டாள்
கெட்டதில் காண்பார் பெண்மை!!
இங்கே தண்டனை அதிகம்.
பிறப்பில் சிறப்பாய் போச்சுகளும்
அதிகம் கைகளை பற்றியும்
கனிவில்லா வாழ்கை
பாராட்டிடா துணை
பாரமாய் போனதால
காதலும். வாழ்கையும்
மாற்றியே போகின்றது
இன்றைய உறவில்!!!!
தொலைந்த வயதில்
தொலையாதே வருகின்றது அனுபம்
என்னைத்திருந்தியே
கற்றுக்கொண்டுத்துக்கொண்டே என்னை விட்டு
போகின்றது தவறுகள்இப்போ !
உண்மை தனிமையை பரிசளித்திட
உள்ளம் புரிந்தது நியத்தை!உண்மையில்
யாருமில்லை என்பதை உணர்வுகள்கற்றிட கண்முன்னே
பல விம்பங்களை மேகங்கள் போல்
தந்தது இறை !! இருந்தும் கையில்
எடுத்த தீபம் ஏற்றபடாமலே
அனைந்தது கையில்
இருளேடு யுத்தம் கனவேடு வாழ்க்கை
கருணையற்ற தாட்கள் கற்பனையானது
இவளுக்கு மட்டும்!!!
கற்பனைசிறகுகள் உடைந்தபின்னே
கனவுகள் தூங்கிக்கிடக்கின்றது
மற்றவர் கோடிடும் போதே பாதையை
தொலைத்ததே பாவைக்கு எழுதிய விதியானது
எத்தனை தடைகள் வந்தபோதும்
ஓடியகால்களுக்கு ஏன் இந்த தயக்கம்
இயலாதேயென ! தொட்டே தோல்வி கற்று தந்த
பாடமே!
இழந்தன் வலிகளை ஆழ்மனம்
சிறையெடுத்தே புன்னகைக்கின்றது
சொல்லிக்கொள்ளாமலே!! இருப்பவர்
தெரியமலே சொல்லி நகைப்பதே வாழ்கை!!
கவிதைப்பொய்யில் காதல் பொய்
பொய்யாயே போனதே ஏன் மாமா!எண்ணத்தில் தேன்றா எண்ணங்கள்
சொல்லா உண்மை பொய்கையில்
வீழுந்ததே ஏன் மாமா!
வெண்ணிலாதேய வெள்ளிமலர்
தீயாய் எரிய
கண்கலால்பார்ததும் இதயதை பொய்யாய்
வைத்தது ஏன் மாமா!!
வசந்தத்தை தேடி வாசலில்செவ்வந்தி
உதயம் தோன்றாப்பொழுதில்
பூத்திட்ட பூவாய் புன்னைக்க
பூவிதழ் பூக்காலப் பொழுதின்
கற்பனைக்குள் !!காத்திருக்கா
வெண்ணிலாவும் மறைந்தே போக
போதும் போதுமென பூவிற்குள் ஏமாற்றம்
தேடலின்றி தேடலாய்பூக்க
விம்பங்கள் விம்ப விம்மியவிம்மலில்பூவும் வாட கற்பனையென்ற கண்களில்
உருவம் உயிரோடு வாழ
பார்த்திட முடியா ஏக்கதோடு
இருள் சூழும் கனவில் அவர்அவர் !
அவர் அவர் பாதையில்
விழகிட முடியா பயணத்தில்
கற்பனையும் கனவும் சேர்த்தும் பிரித்தும்
பார்க்கின்ற வண்ணங்களைப்போல்
இடையில் மாட்டிக்கிட்டவர் சொல்வதே புதிய
கதையாகின்றது இவ்வுலகில் பூவிற்கு!!
ஜென்மங்கள் வேண்டாம்
காத்துக்கிடக்கவும் வேண்டாம்
தாய்மையின் பூமிக்குள் ஆண்மையின்
தாய்மை !பண்பின் தாமையாய்சிந்தித்தால்
பெண்மையின்சிந்தனைத்தெளிவில்
பெண்மையின்தாய்மை பெண்மையை காத்திட்டால்
ஓரு ஜென்ம்போதும்வாழ்க்கை வசந்தமாகிட!!