ஓரு மரணப்பாதையில் கல்லறைக்கு
அருகே பாதம்
மனசு திரும்பி பார்க்கின்றது
பாதையை
வீசப்பட்டுகின்றது கனவு
ஏக்கத்தோடு துடிக்கின்றது இதயம்
எடுத்திட கைகள் நீள்கின்றது ஆசையில்
முதுமை ஏலனமாய் எனக்குள்
புன்னகைகின்றது
ஓரு மரணப்பாதையில் கல்லறைக்கு
அருகே பாதம்
மனசு திரும்பி பார்க்கின்றது
பாதையை
வீசப்பட்டுகின்றது கனவு
ஏக்கத்தோடு துடிக்கின்றது இதயம்
எடுத்திட கைகள் நீள்கின்றது ஆசையில்
முதுமை ஏலனமாய் எனக்குள்
புன்னகைகின்றது
என் விழிகளில் விழுந்த விம்பம்
விசும்பியழுகின்றது ஏனோ
சித்திரம்பேசவில்லையென அழுகின்றதா
இல்லை சித்திரத்தையே தொலைத்திட்டு
அழுகின்றதா
எம்மை எமக்கான எதிரியாய்
உருக்கியே எம்மை தேற்றோம்
தோற்றும் புரியா எம்மை
ஒன்றாக தந்திரத்தாலே எம்மை இன்னும்
இழந்துகொண்டே போகின்றோம் இன்னும்
எதிரியை வெளியே தேடுகின்றோம்
நம்மை நாம் திரும்பி பார்க்காமலே!!!
கோவில் வாசலில் விடுதலை விதை
தன் வறுமை போக்க யாசகம்
கேட்கின்றது தியாகத்தின் பெயரால்
கடவுளுக்கு பயந்ததே
உள்ளே செல்லும் எம் மனசிற்கு
தியகத்தையும் புரியவில்லை
கடவுளையும்புரியவில்லை
ஆனால் விடுதலை மட்டும் புரிகின்றதே
ஆச்சரியம் தான் எம் இனம்!!!
நம்பியே நம்பிக்கை நம்பியதால்
தேற்றாலும் நம்மை தேற்ற நிமிடத்தில்
கற்ற நம்மை யாரும் தேற்கடித்திட முடியா
உறுதியே. வாழ்க்கை
வித்துடல் விதைத்து
உதிரத்துவியர்வையில்குளித்து
மற்றவை மறந்து நல்லதையெண்ணி
விதையான உயிராய் விழுந்து
தீப்பூக்காடான தேசத்தில்
கருகிய வாசணையில்
அவையங்கள் இழந்துஎழுந்திட முடியா
இதயத்தின் வலிகளில்
விழுந்தோடும்நீர் தடாகத்தில்
பூவான உயிர்களின் மூச்சுக்குள்
கேட்டிடும் உணர்வினை
கையெடுத்து வணங்கி
தகுதியற்றவளாய் மண்டியிடுகின்றோன்
உயர்ந்தவர்களே உங்கள் உயர்ந்த எண்ணத்திடம்
இழந்தவை கேள்வியாக
இருப்பவைவிடையற்று தவிக்க
நடந்தவை கதையில்
நம்மை தொலைந்தோம்
நம்மையே நம்பாமல்
விழுந்ததையெழுப்பிடாமல்
விரும்பியதைவிரும்பாமல்
நமக்கே நாமே எதிரியானோம்
நம்கதையில்
எடுத்ததை ஒழித்ததை
எவர்கேட்டும் கொடுக்காமல்
இருப்பதையும்தொலைந்தோம்
நம் செயலால்
நம்பியதும்கேள்வியாக
நம்பிடாமனத்திடையே
நம்பிக்கை அறுத்தோம்
நம் சுயநலத்தால்
இருந்தும் நம்மிடையே
இருக்கும்உணர்வால்
எழுந்திட சொல்லியும்
எழுந்திட முடியாமல்
இடைவெளியாகின்றோம்
நம்மோடு
விதியேசதியே மதியே
மண்ணில் விழ்ந்த உதிரம்
வழிந்த ஒடிய வனத்தில்
எழுந்த கல்லறைகள் தம்
எண்ணத்தை சொல்லியே தன்னை
கொடுத்து மண்ணில் வீழ்ந்தது
உணர்வாய்!!!
எண்ணத்தைதொலைத்து
மண்ணையும் விட்டு
கல்லைமட்டும்வைத்தோம்
நம்நினைவில் !!சிந்தைக்குள்
நம் நல்லதை சிந்தித்து நமக்காய்
நாம் வாழ்வதை மற்றவர் அறியாமதியால்
நம்மை காத்திட்டோம் தெளிவாய்!!!
கொடுத்த தாய் தவிக்க
காத்திட மகற்று புலம்ப
பசித்தவயிறு வலிக்க
ஓற்றையிடமற்று துடிக்க நாம் கல்லாய்
பத்தோடு பதினென்றை
சொந்தமாக்கிகொண்டோம்
நமக்காய்!!
பெற்றபிள்ளை சிறக்க மற்றவர்பிள்ளை
இழந்தோம் நமக்காய் நாமே
நீதிவழிகதைபடித்த நீதி தமிழாய்
நீதியற்ற சரித்திரத்தில் நீதியுள்ள
மனிதனாய்நமக்காய் நாம் வாழ்கின்றோம்
நம்பொறுமைபேசி!!
கண்ணின்மணியே கண்மணியே
என் உயிர் விட்டு போன மூச்சுக்காற்றே
யுத்தமின்றி சத்தமின்றி என்னை
தேற்கடித்த என் வாழ்க்கை தேல்வியே
உணவின் ருசியை என்னிலிருந்து
பிரித்தெடுத்த சுவையின் சுவையே
பசியில்லையென்றால் பட்டினியாய்
உறங்கவிடா பசியே இப்பே
சண்டையிட்டு உணவுட்ட நீயில்லை
என்னோடு!!என்பிடிவத்தின்பிடிவாதமே
என்னோடு சண்டையிட்டு
முத்தமிட்ட நிமிடங்கள்
மட்டுமே நினைவில்புன்னகைக்க
நிழல் மட்டும் நியாமாய் முன்னே
கண்ணீரோடு நிக்கின்றது!!!
அப்பப்ப !!!
உன் தமயன்
நேசிக்கும் நிடத்தில் எப்ப
இவன் மகளாகளாய்
என் மடிவருவாய் என என்
உயிர்காத்திருக்கு
பாட்டன் முப்பாட்டன்
பெண்பிள்ளைக்காய்
உயர்த்தியவேலியையும் காணேம்
நம் ஒழுக்கத்தையும் காணேம்
பண்பாட்டு சாக்கடை
கறைகள் என்ற நம் இனத்தின்
பண்பாட்டை உடைத்தெறிந்த
நம் தன்னம்பிக்கை
வலுக்கி தேற்ற இடத்தில்
அறிவாளியுமில்லை பட்டிகாடுமில்லை
பெண்மை மட்டுமே
இறந்துகிடக்கின்றது அனாதையாய்!!!
மனசின்நெருக்கத்தில் நின்றவரெல்லாம்
மனசிற்க்கு நெருக்கமற்று தொலைவதே
மனசில் தோன்றும் நேசமெங்கின்றது
இதயங்கள் வலிகள் வலிகளின்
தடம் தெரியமால்மறைப்பதை
அன்பின் ஆழமெங்கின்றது அன்பு
எதையும் புரியாமல்
வாழ்வதே வாழ்க்கையென்கின்றது முதுமை
எழும்ப முடியாமல் எழும்பியோடும்
கால்கில் படும் காயத்திற்கு மட்டும்
தான் தெரியும்நம்மை பற்றி
மையின் துளிகளில் கண்ணீர்
கலந்திடும் நிமிடத்தில் யாரும் அறியா
வெள்ளை ஏடுகள் தன்னை மறைக்கின்றது
நெஞ்சடைத்தவலிசுமத்து
ரசனையற்ற எண்ணம் தோன்றும்
பொழுதுகளில்மனசு மெளனித்தே
போகின்றது ஊமைபோல்
மனங்களைகொலைசெய்து
மானங்களைவிற்பனை செய்து
உடல்களை தேடும் உலகம்
இதுவா!!!
ஆடைகளை களைந்து
உடல்களைகற்பனை செய்து
உயிர்களை சிதைக்கும் உலகம்
இதுவா!!
எத்தனையே கொடுமைகளை
எவர் எவரே கடக்க
கடக்கமுடியா கொடுமைகளை
பெண்ணுக்குள்வைத்த இறைவன்
செய்த தவறின்உலகம்
இதுவா!
பிஞ்சுவுடலும் அஞ்சி சாவுகின்றதே
கொஞ்சமும் இறக்கமில்லா
வஞ்சகர் செயலால்
அத்தனை கொடுமையும்
பெண்ணையே தேடியலைய
கருணையின்றி போன
மனித இதயம் வாழும் உலகம்
இதுவா!
பக்கத்தில்உறங்குவது
யாரென தெரியமலே
கற்பும் கதறியழகின்றது
தன்னை வைத்து
மண்ணை படைத்த
மனிதனின் பெண்ணையென்னி
தாய்பால் சுரந்தநெஞ்சங்கள்
கல்லாய் போய்கள்ளி விதிப்பாலாய்
சுரக்கும்உலகம் இதுவா!!
கருதான்டியபெண்ணின்
சுவைப்பால்கள்ளிபாலாகியும்
ஓரு ஆணின் ஓழுக்கமற்ற
தன்னம்பிக்கையற்ற வடிவமே
பெண்ணின் மரணமென
ஆண்புரியும்காலம் எக்காலம்
சந்தோஷமான
உலகம் மலருவது எப்போது!!!!
உணர்வின் விழிப்புணர்வை விழிகளின்
விழிம்பில் விதையென விதைத்து
மண்ணுடல்வித்தாகிடமரணத்தின்
உணர்வை உயிரென சுவாசித்தவர்
சுவாசத்தை நிறுத்திட
விடுதலையை வீரமாய் பேசி
கையுரை யணியாக்கி
மெய்யுரை கதையில் பொய்யுரை புகுத்தி ஐயகோ
பைத்தமிழில் நாமென பரிதவித்தே கண்ணீர்
வடித்தவர் உணர்வுகள் தன் நலனேடு பிறநலம்
கண்டு காணாதும் வாழுது பொறுமையாய
நம்மை நமே
நமக்காய் எழுந்தால்
பெண்மையும் தேற்குமே
இவ்வுலகில்
நம்மை நாமே
நமக்காய் சிந்தித்தால்
கண்களும்உதிர்க்குமே நீரை
நம்மை நமக்கே புரியாதபோது
நம்மால் ஆவதே தோல்வி
கதையும் கவியும்
நம் கனவினை தொடுமே
கற்பனையும் ஏக்கமும்
கைகொடுத்து தூக்குமே
உயர்வாய் இருந்தும் தொலைப்பதேன்
நம்மை நாமே
ஓசையாய் ஆசைகளை கற்றிடையோசையிடம்
கலந்தேன் நீ காற்றானதால் தென்றல்
தொட்டு ஓசையை ஆசையின்இசையாக்கி என்
சுவாசை தொட்டு சொல்கின்றது வாசமாய்
நான் அறியா மரணமே நீ என்னை
தண்டிக்கவும் செய்கின்றாய் நான்
அறியாதே என்காயத்திற்கு
மருத்தஈகவும் மாறுகின்றாய்
என்வரமும் நீயே
என் சாபங்களும்நீயே
என்வாழ்வும்நீயே
என் மரணமும் நீயே
என் உயிரை தந்ததும் நீயே
அதை உதிர்ததும் நீயே
கண்ணேமணியே !!!
விம்பத்தில் பதிந்தே சித்திரமானவளே
துன்பதை மறந்து புன்னகை
சிந்தி என்னை தோற்கடித்தவளே
கொஞ்சநேரம்பிரியா
கொஞ்சுமொழியே கற்பனைக்குள்
உன்னை வைத்து கண்டகனவும் கண்மூடா
காரிருளும் காலத்தை கடந்தே நிற்க
உன்புன்னகையழகை கடந்திடா
என் புன்னகை கூடதேற்றதடி
நீபயணித்த இடத்தில் என் பாதச்சுவடின்
சிலநெடி வாசத்தில்
அதிர்த இதயமகூட உன்னை தேட
விழுந்திடா உன் இறுதிபயணம்
என்னை தேற்றே ஓட
ஓடிய நாட்கள் ஒற்றை நீர்துளியானது
எனக்குள்
எப்படி முடிந்தது உன்னால்
என்னை அழவிடாதே ஏமாற்றி போய்விட
இல்லையென்றும் தேடியழைகின்ற
இதயத்தின் உணர்வே
என்றும் என்னோடு வாழ்வாய்
புன்னகையாய் !!!
கரையாய் நிற்கின்றேன்
அலையாய் ஆசைகள் என்மேல்
மேதிமேதி திரும்புகின்றது
்தனியாய் தானே நடக்கின்றது கால்கள்
வேடிக்கை மனிதனின் வேடிக்கை
பேச்சிக்களில் வேதனையை உணரா
மனிதன் உறவாய் கூட நடப்பதே
சிலர் வாழ்க்கை
இல்லையென்றே இருப்பதாய்
நடிப்பதே இல்லறமானதால்
இருப்பதை தொலைத்திடவே
துடிக்கின்றதே இதயங்கள்
அடிப்பவன் அறியான் பெற்றவன் வலியை
திரும்பி கொடுத்திடும் வரை
சுப்பவன் வலியை
சுமையை ஏற்றியவன் அறியான்
தான் சுமக்குவரை
அறியாதவனே அதிகமாய் வாழ்வதால்
அடுத்தவர் துன்பத்தை ரசித்திட தொடங்கியவனாகின்றான்
வழிகள் மறைத்த வலிகள் மறைய
இசையை சுவாசித்த இதயம்
மறந்தும்மறையாவலியை
என் இதயம் சுவாசிக்க தந்தது
கண்ணீரோடு
அஞ்ஞானம் பற்றி விஞ்ஞானம் கற்று
மெஞ்ஞானம் கண்டாலும் இவ்வுலகத்து
உயிர் சுவாசம் மட்டுமே நியமானது
நிற்கும் வரை தேடிசொல்கின்றோம் அன்பை
மட்டும் விட்டு விட்டு மற்றதையெல்லாம் உயர்வாய்
இருபவர் அறியா மகிழ்ச்சி கையிழக்கையில்
தெரியும் துன்பம் வரை லாழ்க்கை
பலதும் பத்தும் வேடிகை பேச்சையாகும்
ஒற்றை பண்டிகை ஓன்பது செலவு
என்றாலும் குதுகலம் பிறந்திடும் மனதில்
கஞ்சனம் கருமியும் கொஞ்சமாய் செலவு
செய் மனசை ஓன்றினைக்கும் திருநாள்
இல்லையென்பவர் மனதிலும் பிறக்கும் வழி
வாசல் கோல வண்ணத்தின் மங்களமாய்!!!
இல்லங்களில் சந்தோஷம்
இல்லாமையால் தோற்க
இதயங்களில்துன்பம்
விரக்த்தில்தேற்க
தேற்கும் மனிதனை
மகில்வில் நனைத்திட
அப்பப்ப !!! புன்னகைக்க
வருகின்றது தினங்கள்
ஓன்றாகியே சந்தோஷ
புன்னகை சிந்தி மகிழ்ந்தே
நம்மை நாமே ஜெத்திட வாழ்ந்தவர்
தந்ததே சென்ற தினங்கள்
புலம்பலை நிறுத்தி புன்னகைக்க!!!
ஒற்றையாய் ஒரு இதயம்
இருளேடு ஒரு கனவு
விதைத்திட முடியா விதையாய்
அனலில்விழுந்து கருகிட
துன்பத்தின் கண்ணீர்
ஓளியை ஏற்றியது
இல்லத்தின் இன்பத்திற்காய்!!!
அரக்கத்தில் இன்பம் காணும்
இரக்கமற்ற மனதின் இருளகற்றி
துன்பத்தை துடைத்து இன்பத்தினை
இதயத்தின் ஓளியாய் ஏற்றி
இருப்பவர் இல்லாதவர் வாசல் தேடி
இல்லாமை இருளுடைத்து
இன்பதைகொடுக்கும்ஓளியெடுத்து
நம்முள்ளத்தில் அதைவிதைத்து
நல்லெண்ணத்தை நம்மேடு கொண்டு
நல்லெளியெங்கும்பரவ
நல் சிந்தனையை மனதில்விதைத்து
நல்லெளியேற்றிட ஒன்றாகிட ஒளியாய் ஓளிரும்
ஓளிநாளே வருக வாசல் தேறும்!!!
குழந்தைகள அங்கங்கே
தொட்டிலில்அழுகின்றது நாம்
வந்த நேரம் நேசமற்ற உறவிற்க்கும்
தாய்மைற்ற உறவிற்க்கு இடையே வந்த
நேசம் செய்த பாவம் நாம்
அனாதையென்னும்பெயர்பெற
உயிரிலில் கலந்து உணர்வேடு ஓடி
உலகிலே உயிர்த்துடிப்பன உயிர்காதல்
தம்மை தம்மில் உணர்ந்து பரிசுகளை சேமித்து
நினைவுகளில் மிதந்து பரிமாறிய பரிசெல்லாம்
காதல்சின்னமாக உயிரில்உயிரான கரு மட்டும்
அவமாசின்னமாய் அசிங்காய் அழிக்கபடுகின்றது!!!
உண்மையற்று பரிமாறும் உணர்விற்க்கு
காதல்கூட உண்மையற்றே போகின்றது மனிதவாழ்வில்