கனவின் கனவிற்குள்
கற்சிலையென்றை கண்டேன்
கையேடு கையெடுத்து
கனவிற்குள் நடந்தேன்
அழகான பெண்வடிவம்
மூடியவிழியின்திரையானது
என்னைப்போல்
கனவிற்குள் ஒரு கற்பனை
என்கற்பனையை தடைபோட்டது!!
ஒரு குரல் காற்றைகிழித்தே
என் நடையை
தடைபோட மெல்ல
திரும்பினேன்
குரல் வந்த திசைகேட்டு !
வேல்விழியின் வால்வீச்சே
திசைதொட்ட ஒளிவீச்சே
உன்மொழிகாற்றின் வில்பட்டு
என் இதயம் விழுந்ததடி கால்லடியில்!!!
என்ற கவி கேட்டு
கற்சிலை போல் நானேயானேன்
சிலைவடித்து கவிவடித்தவன்
குரல் கேட்டு !!!இருள் தனை
கிழித்தெடுத்தவன் உருவம் தேட
கனவினை உடைத்தே விழிகள் திறந்தது
பாராமல்!!!