பெண்விழுந்த அறைக்கோணத்தில்
விழிகளுக்கு கிடைத்தது பெண்விடுதலை!!
உறைபனியின் மேல் ஓரு நடை
விழுந்தெழும்பி தத்தி தவழ்ந்து
மகனின் கைபிடித்த நடை
ஓரு குழந்தை போல்
அழகிய நடை ! விழுந்திடாதே
இறுகப்பற்றிக்கொண்ட மகனின்
கைகளுக்குள் ஓரு நடை
நடக்கக்க கற்றுக்கொடுத்த தாயே
நடக்ககற்றுக்கொண்ட நடை
புதிதாய் பிறந்திட்ட
அழகிய தருணம் மீண்டும்
குழந்தையாய் வாழ்ந்த நடை
அன்பான தருனத்தை
அருகே இருப்பவர் அழகா
கொடுத்தாலே போதும்!!
அழகானா வாழ்க்கை பூக்கும்
வாழ்வோடு
செல்லும் ஆண்டு
எடுத்து செல்வதைவரும் ஆண்டு
தந்து செல்லுமா
ஏனத்தெரியவில்லை
இருந்தும்
காத்திருக்கின்றேன்
எல்லா ஆண்டும்!!
அழகிய நாட்களுடன் அழகிய
வாழ்வை அழகாய் வாழத்தான்
ஆசை மாமா ஆனால்
நான் அழகியாய் பிறக்கவில்லையே
உனக்கு நீ கைபிடித்து
மாலையிட்டு கையேடு கூட்டிப்போக
கல்மீதும் முள்மீதும் நான் நடக்க
விதியென நீருக்க
கால் வலிபொறுத்து பசிமறந்து
உடல்மெலிந்து உள்ளம் உடைந்து
காதல் ஊமையானேன் உன்னால்
கடசிவரை நீவிரும்பா பெண்ணாகவே
ஆனேன் மாமா!!
சட்டென திரும்பிப் பாரென்றது
உணர்வு
நீயெனப்பார்த்தது விழிகள்
நிழலாய் சிலநொடி நீ தோன்றுகையில்
ஏதோ ஓரு உணர்வு எனக்குள்
சந்தோஷம் தருகின்றது।
அது நிரந்தரமில்லையெனத்தெரிந்தும்
அதேயே மனம் விரும்புகின்றது।
அவள்
போராட்டக்களத்திற்குள்பருந்துகள்
அவளை
தூக்கியெறிந்திடவே
வட்டமிடுகின்றது
அவள்
எதிரிகளை மறந்து
பருந்துகளுடன் யுத்தம்
செய்கின்றாள்
அவள்
உயிர் எதிரியிடம்
அவள்
மானம் பருந்துகளிடம்
பெண்மைக்கு
எப்போதும்
இருயுத்த வாழ்க்கையே
இருக்கும் வரை!!!
கிழிந்த ஆடையை
நனைத்த மழைத்துளிதொட்டு சொன்ன காதல்!!
அவளை விட்டுச்சென்ற
மரணம்
கொட்டிக்கொடுத்த
வலிக்குள்
கைவிட்டு சென்ற
கணவன் மிண்டும்
உயிர்பெற்று
கட்டியணைத்தததை போன்ற
உணர்வினை கொடுத்தது
அச்சமின்றி
புன்னகைத்தால்
மிச்சமீதவலிகள் மறந்து!!
இந்த கூண்டுக்கிளி
மாமன் உயிரை தன்
மாமனை நினைவிற்குள் தன்னை
வைத்து தன்னை
வடித்தால் ஒவியமாய்!
ஒற்றை இதயத்துடிப்பில்
என்னைத்தேடியே
உன் இதயம்
எனக்காய் துடித்தது
நிஜமென்றால்
நிஜங்களை கண்டு
அச்சம் கொண்டு
மிச்வாழ்கையை
என் தேனீர் சுவையேடு
இசையின் சுவை இணைந்து
என் கவிச்சுவையை களவாடியே
என்னை ஊமையாக்கி உறங்கிட
சொல்கின்றது!!
நான்
சொல்லாமலேயே
எனக்குள்ஒடும்
உணர்வைப்போல்
நான்
உடைந்தே
அழுதிடும்
நிமிடங்களில்
எனக்கு
சொல்லாமலேயே
என்னை
எழும்பியேட
செய்கின்றது
நின்றுபேசி
பிரிந்த பின்சிலநெடி
பிரியாதே
நம்மேடு
வீசும் வாசம்போல்
சிலரின்
வாழ்கையில்
சில உறவுகள்
அர்த்தங்கள்
இல்லா வாசமகின்றனர்!!
என் வாழ்வில் எதை
வேண்டாமென வெறுகின்றேனோ
அதையே திரும்ப கொடுக்காதே
இறைவா!!
என்னை படைத்தபோது
என்ன நினைத்து
படைத்தாய்யெத்தெரியவில்லைஆனால் எனக்காய் என்முன்னே
உள்ள வாழ்கை
கொடுமையான வலியெனக்கு
இறைவா!!!
என்னை புரிந்த நீ
என்முன்னே வைப்பது ஏன்
இறைவா !!!
சிலுவை சுமப்பவளை
கல்கொண்டு அடிக்கும்
வலியை தருகின்றாயே
இறைவா!!!
தண்டனைக்காளாம்
மரணமென தெரியும் ஆனாலும்
வலிகள் வலிக்குது
இறைவா!!!
என்பிறவியின் அர்த்தம்
பாவத்தின் தண்டனையென
அறிந்தாலும் மனசு கல்லில்லையே
இறைவா!!!
சோர்ந்திடும் போது தந்தை
கரம் தேடுது மனசு
அழுதிடும் போது தந்தை
மடிதேடுது மனசு
தடுமாறும் போது தந்தை
தோல்தேடுது மனசு
கோவம் வரும்போது
தந்தை முகம் தேடுமனசு
எப்பவும்!! அவன்
சினம் என்னைகொஞ்சம் அழவைக்கும்
இப்போது!!
என்னை சிந்திவைக்கின்றது
பல விடைகள்
கேள்வியானதால்!!
கேவிக்கு விடைத்தேடலே
தனிமைக்கு துணையானதால்
கண்ணீருக்கு அர்த்தம்
தேடுகின்றது
தனிமை!!
இரட்டை வேடம் இரடடை
வாழ்கை வாழும் இருண்ட
மனித வாழ்வை வெறுத்தே
கல்லறையில் பூத்தேன்
இருந்தும் என்னை
நடிக்க அழைக்கின்றாயே
இறைவா
பொய்யாய் வாழும் வாழ்கையில்
மெய்யான வலிகள் வேண்டாம்
இல்லா உடலாய் வாழும்
உயிர் போதும் இந்தக்கல்லறைபூவிற்கு
துன்பம் கண்டு துவண்டு போன
துன்பப்பூவிற்கு
இனியும் வேண்டாம் உன் வேடிக்கை
தாங்கிகொள்ள இதயமில்லை
தடுத்து நிக்க தைரியமும் இல்லை
போதுமே இந்த உயிர் பட்டகாயங்கள்
விட்டுவிடு கல்லரைக்குள்ளேயே
உறங்கிக்கிடந்திட
வாழ்கையென்னும் நதியில்
விழுந்த உயிர் போகுமிடம்
தானாய் ஒட நாம் எதையே
வென்றதாய் பெருமை கொள்கின்றேன்!!
என் கனவுகள்
ஆசைகளுக்காய்
யார் வாழ்வையும்
கனவையும் இதுவரை
அழித்திடவில்லை !!
மாறாக என் கனவையே அழித்தேன்
முதல் முரை !
என் கனவிற்காய்
உன் கரம் பிடிக்கின்றேன்
இது! சரியா பிழையா
தெரியவில்லை மகனே
இருந்தும் என் மரணம்
உன்னை
என் கனவின் வழியாய்
வழிநடத்துமென நம்பிக்கையேடு
இறுகப்பற்றிக்கொள்கின்றேன்
மகனே !!
ஒரு பெண்மையை
நேசிக்கும் போது
நல்லதை தேடும் ஆண்மை
அந்த பெண்ணை சமூதாயம்
பார்க்கும் பார்வையை மட்டும்
ஒருபோதும் ஏன் புரிவதேயில்லை
அவமானங்களையும் பழிகளையும்
பெண்மை சுமப்பதாலா
அப்போ எப்போ
ஆண்மை பெண்மையை
பாதுகாக்கும்!!இன்றுவறை ஒற்றையாய்
வாழும் பெண்னிற்க்கு புரியவில்லை
ஆண்மையும் சமூதாயமும் !!!
நான் தூக்கியெறிந்த
எதையும் சிந்தித்ததில்லை
பிரிவுகளே வாழ்கை
பாடமானதால்!!!
விட்டு சென்றவர்கள் நினைவில்
வாழ ஆசையுமில்லை !
பிரிந்தே புரிந்தே போகும்
வாழ்கையேடு வாழும் வாழ்கை
என்னை விழாதே
தாங்கிக்கொள்வதால் !
புரியாமல் பேசும் வாய்களோடு
கோவமும் இல்லை!!
காலம் கடந்து
காயபட்டு காயப்பட்டு
இதயங்கள் இருப்பதாய் சொல்லும்
இதயங்களின் புரிதலையும் புரிந்தே
வாழ்வதால் பொய்கள் மீதும்
வருத்தமில்லை!!
ஒரு மாயவாழ்கைக்குள்
பேசும் ஓவியம் போல் நான்!!
யார்மீதும் கோவமில்லா
புன்னகை இதழ்கள் பேசும்
ஊமை போல் !!!
என்னை சுயநலவாதியென்றவரகள்
இன்னும் என்னோடு சேர்ந்தே இருக்க
தன்னை தியாகியென்றவர்கள் சுயநலமாய்
தொலைதே போனார்கள்
உங்களிடம் தைரியம் இருந்தால்
நீங்கள் ஒரு அழகான
வாழ்க்கு தேவையான ஒன்றை
தேடியிருப்பீர்கள் ஆனால்
உங்களுக்கு வாழ்க்கையே
வேடிகைவிளையாட்டு என்றால்
உங்களுக்கு அழகின் அர்த்தங்கள்
ஒரு பெண்ணின் ஒபபணை போன்ற
சிலநெடித்தேடலே!!!
சொல்லூக்குள் அடங்கா ஒற்றை
உணர்வை சொல்லிட ஏங்கிடும்
சொல்லுக்கு இல்லை உணர்வு
சொன்னாலும் புரியா சொல்லை சொல்லியே
ஏங்கினாலும் உணர்வுக்கு இல்லை
ஏக்கம் இருந்தும் இல்லாமல் தேடும்
உணர்வே உயிரின் தேடல்
எனக்கான உலகிற்க்குள்
எனக்கான எதையும் யாருக்காவும்
விட்டுக்கொத்திடவும் மாட்டேன்
யாருக்கானதையும் எதற்க்காவும்
எனக்காவும் வைத்துக்கொள்ளவும்
மாட்டேன்!!!
பெண்ணின் கற்பனைக்குள்
கருவெடுத்து கதையெழூதும்
ஆண்மையே பெண்மையின்
நியத்தை அழிக்கின்றது।
என் இருண்ட
பாதைக்குள்வெளிவரமுடியா
யுத்தம் என்னேடு
சண்டையிட்டு வென்றபோதும்
என்னால் புரிந்திட முடியா
இருட்டே நியமாய் நீண்டது
ஒற்றை ஒளி பிறந்தபோது
விட்டுவிழகா உறவே இன்று
விலுந்திடதாங்கயே நிக்கின்றதுவிழுந்த காயம்
நெஞ்சின்வலியானாலும்
தாங்கி நிற்க்கும் கரங்கள்
நிஜமானதால்
எழும் பூவும்
நம்பிக்கையின்
வண்ணமாய் மலர்கின்றது!!!
மீண்டும் ஒரு யாழ் இசையாய்
வீசும் காறிற்க்குள் மிதற்க்கும்
மொழீயாகின்றேன் விழூம் இடத்தில்
ஏந்திடுதே s ஸ்வரங்கள் ।
இப்படி வாழ்ந்திடத் தான்!
ஆசைத்துறலாயாய் விழுகின்றது
மனதில் முதல்
மழைத்துறல் பட்ட இடமும்
பூக்கிறது தானாய்!!!
என் கனவிற்க்குள்
ஓரு அழகான வாழ்கைஉறங்கியேகிடக்கின்றது
யாருக்கும் புரியாமலேயே !!
சிலநேரம் ஏக்கமாய்
என்னை வாட்டும்
சிலநேரம்
கண்ணீர்த்துளியாய்
கரைந்தேயேடும்
இருந்தும்
வாழ்க்கை நகருகின்றது
தானாய்।।
ஓரு ஆழகான வாழ்க்கை
எல்லோர் மனதிலும் அழகாய்
பூத்திருக்கும் ஓரு சிலருக்கு மட்டுமே
அழகாய் கைசேரும்
ஓரு சிலருக்கு கனவின் மேகத்தில்
கற்பனையின் துறலில் நினைவாய்
வாழூம்।
நம்மில் அக்கரையேடு இருப்பவர்
கூடயிருந்தால் போதும்
எதையும் முடிக்கும் நம்பிக்கை
தைரியமாய் பிறக்கும்!!!
முன்
அறியா ஒன்று இருப்பது
அறிந்தவருக்கு தெரிவதில்லை
எதுகும் தெரியாதவர்
முன்
தெளிவாய் ஓன்று இருப்பது
தெரியாதவருக்கும் புரிவதில்லை
இருவர் நிலையிலும்
ஒன்றை இழக்கும் போதே
கடவுள் எழுகின்றான்!!!
தோற்ற போதும்
துவண்டு அழுதபோதும்தனிமை உண்மையை
சொன்னது
இருப்பவரும் இல்லாதவரும்
உன்வாழ்வில்
ஓன்றுதான் என்று!!
என்னை!
விட்டுச்சென்ற எதையும்
என் வாழ்கை
திரும்பப்பெறவில்லை
மாறக! என்னை மேலும்
துன்படுத்தவே
சிலரை உறவாய் தத்தது
இபோ!
நான் என்னையே
வெறுத்த பின்னே
மரணம் மன்னிக்க சொல்கின்றது!!
என்னை
புரிந்து கொள்ளாஆயிரம்
உறவைவிட
என்னை
புரிந்த ஒரு உறவு
கூடயிருந்தால் போதும்
நான்
நினைத்தது
என் கைசேர!!!
ஒற்றையிழக்கும் வரை
அதன் அருமைபுரிவதில்லை
ஒற்றை இழந்த
பின்பு மற்றென்றின்
அருமை தெரிவதும் இல்லை
கூடவரும் இன்னென்று
நீண்டே வருவதும்
இல்லை
கூடிபேசும் மனிதர்
எல்லாம்
கூடவே இருப்பதும்
இல்லை
கூட இருப்பவரும்.
இருந்தும் பயணில்லை
எல்லாம் கடக்குமென
மரணவரை நடிப்பதே
உண்மையானது!!!
பிடித்தவர்கள்
மரணிக்கும் போதுதான்
நாம் பிடிக்காதவர்கள் கூட
வாழும் சுமை
அதிகமாகமாய் அழவைக்கின்றது
பிடித்தவர்கள்
எப்போதும் நம்மை
மகிழ்ச்சியாய் வைத்திருப்பார்கள்
பிடிக்காதஙர்கள்
எப்போதும் நம்மை
அழவைத்துக்கொண்டே இருப்பார்கள்!!!
இறையவன் விதித்த
வித்தைக்குள் சிக்கிகொள்ளும்போதெல்லாம்
தனிமை கேலிசெய்யும்
மனிதபிறப்பின் அர்த்தம்
தன் கையெழுத்தென!!!
வித்தையாய் எப்போதும் போல
மனம் விதித்த விதியால்
தானாய் ஏங்கும் !
நடக்காதேயென இயற்க்கை
இயம்பினாலும்
எழுப்படா தேடலைத்தேடி
கடைசியில்
என் தோல்விகளில்
என் தேடல்கள் முடியும்!
நான் இழந்த உறவே
என் தண்டனையாகும்
என் தண்டனைக்குள் சிறுபொருமூசிச்சு
சுவாசமாய் மீண்டும் துடிக்கும் !!!
இவள் என்ன!
கல்லறையின் மேல்
பூத்தபூவா!
மீண்டும் மீண்டும்
மரணம் மன்னிக்கமறுக்கின்றது
இவளை தன்
தேவதையென்றவன்
இப்போ! சொல்லாதே சென்றுவிட்டான்
பிறவிகளில் சில உறவுகள்
நம்மை தாங்கியே தன்னை தரும்
அப்படி என் வாழ்வில்
வந்த அண்ணன் அவன்
இவள் சின்னவயதில்
பொறமையால் பூத்த நேசம் அவன்
தங்கையே விட்டுத்தந்த
பந்தம் அவன்
அண்ணியவள் பொறமைகொள்ளும்
அன்பு அவன்
இப்போ! என்னிடம்
சொல்லாமல் சென்றே விட்டான் !
நம்ப மறுக்குது உணர்வு
நம்பித்துடிக்கு மனசு
விதியே என்சந்தோஷங்களை
மட்டும் பறிக்கின்றாய்
என்னை பறித்திட
சொல்லியும் கேளாமலே
கண்களில் இல்லையண்ணா
கண்ணீர் உன்னை நினைத்தே
அழுது துடிக்க
இதயம் மட்டும் அழுகின்றது
உனக்காய்!! அங்கே நான் வரும்போது
எனக்காய் காத்திருக்கும் உயிர்களில் நீயும்
இருப்பாய் !எனக்காய் !
என்றும் உன் செல்லத்தங்கை
நான் தான் எப்போதும்!
இங்கே !!
இல்லை மாமா நான்எங்கே!!
எடுத்துச்சென்றாய்
என்னை!
எங்கையும் காணேமாமே
நம்மை!
யார் யாரே
தேடிப்பார்த்தும்
இல்லையென்று
சொல்லியழைக்க
நாம் மட்டும்
என்னவானோம் !!
ஒற்றை உயிரெடுத்து
எந்தன் இதயம் சுமந்து
ஓருமுறை கனவுக்குள்
பேசிட வா மாமா!!
கற்பனைக்குள்
நம்மை கண்டு வந்த
கண்களுக்கு
ஒற்றை உயிர்வாசம்
பேசும் நாமே
வாழ்வின் தேடலாக
வாமா மா !!!
கோடிமின்னல்
தாக்கிய இருள் சூழ்ந்த
வனத்திற்க்குள்ஒற்றைக்குயில் வாழுது
தனியாய்!!
ஒளியை தொலைத்த
வனத்திற்கு ஒற்றைவிளக்காய்
வாழும் நிலவும் வளர்ந்தும்
தேய்த்தும்!இருளோடும்
ஒளியோடும்
கூடயில்லாப்பரிதாவம்!
கூயிலுக்கும் பழகிவிட்டது
இருள் !!
இல்லையெனும் உறவுகள்
இருக்கும் உறவுஎள்
இருப்பதை மறைக்கும் இதயத்திற்க்குள்
இல்லாமல் இருக்கும் இதயம்
இருக்கும் வாழ்வே
உயிருக்கு இறை தந்த வரம் !!!
முற்களின் உதிரத்தில்
மருதாணிபாதச்சிகபபாய்நடந்திட் டவளை பார்த்தவன்
கண்கள் சொன்ன
பொய்யுக்கு கற்பனை
உயிர்கொடுத்தான்
வறுமையை அறியா சொல்வேந்தன்!!!
வஞ்சியவள் கஞ்சியில்லா
கொடுமையை கண்டுகொள்ளா
மனம்படைத்த கற்பனைகள்
தன் உடல் தேவைக்காய்
வைரத்தைகூட
அள்ளிக்கொடுக்கும் பெண்ணிற்கு !!
உண்டு உறங்க
கூரையில்லாப்பெண்ணிற்கும்
தெருவேர வாழ்க்கையிலும்
வறுமையை போக்க போராடும்
போராட்டத்தை விட
தன் உடல்காக்க
போராடும் போராட்டமே
வலிகூடியது!!!
இருப்பதையெடுத்து
இல்லா கதைபடிக்கும் உலகமா
னது!பெண்மைக்கு !
இதயங்கள் மோதிகொண்டே
ரணங்களில் தூங்கிக்கொள்ளும்
இயல்பினேடே வாழ்வதா காதல்!!!
இயற்கையேடே சண்டையிடும்
மரணத்தைபோல் தெரியமலே
வந்தே மறைகின்றதே காதலாய்!!!
கண்ணீரை கைதுடைத்து
மண்மீதேயுள்ளவரை நம்பிக்கையில்
பூப்பதில்லையா காதல்!!
இருள்பற்றிய வாழ்வினுடே
ஒற்றை விரல் தொட்டு ஓளிபற்றும்
பாதைவரை கூட்டிபோகதா காதல்!!
இருக்கும் வரை சேர்ந்தே சுவாசித்து
இனிமையான நாட்களைப்போல்
இணைந்து போக எதைகொண்டு
எது தடுக்குது இதயதிற்க்குள் காதலை!!!
உணவுர்வு எழும் கிறுக்களைபோல்
இதபமொழிகள் களவுபோக இதயம்
பேசா வார்த்தையில் புதைத்திடவே காதலா!!!
ஊருமெச்ச. உறவுஉச்சுக்கொட்ட
ஊருக்குள்ள மாமான் கைபிடித்தே
நடக்கதான் ஆசை !!!
உள்ளூர் பெருமைகொள்
பெருமை போல் மாமான்
உயிராய் வாழ
அக்கம் பக்கம் பொறாமைபடும்
ஒருத்தி நானாய்
ஊருக்குள் வாழத்தான் ஆசை!!!
அச்சதேடு வந்து அஞ்சிபேசும்
மனிதனெல்லாம் எக்கரைக்கு சென்றாலும்
மாமான் ஒற்றைபெயரை கேட்டால் பயம்வர
மாமான் கொஞ்சும் கிளியாக ஆசை!!!
ஊருக்குள்ள உள்ள ஜோடியெல்லாம்
கண்ணுபட்டு கண்ணுகதற மாமன்
கண்ணுக்கு ஒருத்தி
நானாக தானாக ஆசை!!
இஸ்ரதெய்வம் இருக்கும் வரமாக
மாமான் பெற்றதெய்வம்
கொடுத்தவரமான மாலைக்கு
மல்ராக பூத்திடத்தான் ஆசை!!!
கண்பட்டு கண்ணீசொட்டும்
கண்கள் தேடும் ஜோடி
நாங்களாய் கண்களுக்குள்
வாழத்தான் ஆசை !!!
மாமன் கைபட்டு சொழித்திடம்
நிலம்போல் எம் வாழ்க்கை
மண்ணின்பெருமைகொள்
வளம்போல் காலம்மோறும்
வாய்பேசும் மொழியின் சிறபாக
வாழ்ந்திடத்தான் ஆசை!!!
அன்பானவர்கள் கூடவே இருந்தால்
எதிர்மறை எண்ணங்களால் கூட
தோற்கடிக்க முடியாது யாரையும்!!!
நம்மை நாமே சிந்திக்காதவரை
நம் எதிர்வுனையே மற்ளவர்களை
உயரத்திற்க்கு எடுத்து சொல்லும்
நம்மையும் முந்திக்கொண்டு!!!
நீண்ட வான் தொடாதூரம்
நான் தொடா நீயும் நானும்
கார்கால மயில்தோகைபோல்
காத்திருக்கும் கனவிற்குள்
மழைவந்தது!!!
கண்மூடிய நம்பிக்கையில்
தன்னைத்தொலைத்த பூவென்று
நம்பிக்கையை மறந்து
புன்னைக்க கற்றுக்கொள்கின்றது
எட்டிப்பிடித்திடத்தான் ஆசை
ஆனால் எட்டவில்லை உன் கனவுகள்
விட்டு நடந்திடத்தான் ஆசை
ஆனால் முடியவில்லையெனக்கு
தள்ளித்தனியே நின்றிடத்தான் ஆசை
ஆனால் அசையவில்லை இதயம்
எட்டாதே என தெரிந்தும்
எட்டிபிடித்திடா வானவிலின்
வண்ணங்களாய் வண்ணம் தொலைத்து
வண்த்தோட்டத்தில் தனியாய்
சும்மா நிக்கின்றேன் சுமையின் வலியாய்
சொன்னால் புரியா சொல்லின்
மௌனத்தின் புன்னகை போல்!!!
என்னில் என்னை காணாத்தருனம்
எல்லாம் நான் இழந்த தருனம்
ஒற்றை இதயம் என்னை தாங்கியே
எல்லா உறவின் தூணாய் நின்றவர்
இற்றைபொழுது ஏனே இறைவன்
கஸ்ரத்தை கொடையாய் கொடுத்தே
கஸ்ரங்களை சுமக்க சொல்கின்றான்
இதையும் தாங்கி மலையாய் எழுந்து
தவிக்கும் மனையாளின் கணீர்துடைக்க
வரவே வேண்டும் இறையே என்னில்
கண்ட துயரம் எல்லாம் எனியும் கானா
நன்மைகொண்ட நாட்கள் வேண்டும்
எந்தன் உயிரே முதலாய் போகும் வரமே
வரமாய் வேண்டும் வதைப்பதும்
சிதைவதும் நானாகவே முடியவேண்டும்
கண்ணீர் கண்கள் புன்னகைக்கும்
பொழுதாய் நாளைய பொழுது வேண்டும்
இறையின் தீபமே இல்லமாய் மாறிட நீயே
எழுந்தே நடத்திட வா!!!
தாத்தாவிற்க்கு
இரண்டு மனைவியென
பாட்டியழும்போது கூட வளர்த்த
அப்பாவிற்க்கு இன்னெருத்தி வந்தால்
அம்மா உயிருடன் இருக்க!!
அம்மா சண்டைபோட கூட
இருந்த அண்ணனுக்கு
மனைவி கூடவாழ்கையில்
அண்ணன் மனைவியறியாமல்
அண்ணனுக்கு இன்னெருத்தி
இயல்பாய் கைகோர்த்தால்
அண்ணியழுவதை பார்த்து பார்த்தே
அண்ணன் மகன் கூடவளர்கின்றான்
நாளை அவனுக்கு இரு பெண் காத்திருப்பதாய்
கற்பனைகள் நாளைய வாழ்க்கைக்கு
ஒருவழிதேடிகொடுக்க
பெண்ணின் கோழைவாழ்க்கைக்கு
புதிய அந்தியாயம் எழுதிகின்றத்து
கற்பனைகதைபோல் !
!திருட்டுதனங்களின்
அங்கிகாரப்பணத்தோட்டம்
புதியபாதையாய் பூக்கின்றது பழமையில
புதுமையாய்!!!
கவலைவிடுபெண்னே
அங்கிகாரம் இல்லாகோடிகளுக்குள்
கோடிவாழ்க்கை கஸ்ரமில்லாமல்
எதிர்காலத்திட்டதில் சில்லறைகளைபோல்
சிதறி புன்னைக்க கைபிடித்தபடி
நீயே எப்பவும்போல் கற்பனையுலக்தோடு
சண்டைபோட்டே உயிர்வாழ தயராயிரு!!
உன்னைதொலைக்கும் வரை
என்னையாரும் திரும்பிபார்க்கவில்லை
மாமா
உன்னைத்தொலைத்தபின்னர்
ஐந்துவயதிற்க்கு கூட
அன்ரிமேல் ஆசைவருதுமாமா
நீயல்ல உலகில்
வாழ்க்கையே கறுப்பாச்சிமாமா
நான் நடக்கபாதையும் வெறுப்பாச்சிமாமா
என் உறக்கமும் கனவாச்சி மாமா
கனவேடும் கற்பனையேடும் காலமும்
முடிந்தது மாமா!!!
தனித்த பெண்னின்
இடருக்குள்சிக்கிகொள்ளும்
குழந்தைகள்
எப்போதும் !
பாதிப்புக்குள்ளயே
சிக்கிக்கொள்கின்றனர்!
சிக்கிக்கொண்ட சின்னசிரார்களை
சிக்கவைத்திடும் சமூகத்திற்குள்
தானாய் நடக்கமுடியாமல்
தொலையும் குழந்தைகளே
அதிகம்!
ஒடிவிளையாடும் வயதில்
போராடும் காலில் உறுதியுண்டு
ஆனாலும் வலியின் வழிகள்
கொஞ்சம் தடுமாறும் இயல்பாய்!!
இது கூட நடக்கும்
உறவுக்கே புரியாதபோது
வேடிக்கை பேசும் மனிதம்
அறியாமுடியாதே!
தோற்றுப் பார்த்தால் தெரியும் உலகு
படித்தவர் மற்றவர் மனசை !
படித்தால் போதும்
பலபடிகள் தாண்ட குழந்தைக்கும்
தெரியும் தானாய் !!!!
புத்திசாலியை பார்த்து
கற்றுக்கொள்ளாத முட்டாளே
புத்திசாலியின் அடிமையாகின்றான்
கற்றவன் தன்வழி நடக்கின்றான்!!
என்னில் துறல்போட்ட
மழைதுளி சொன்னது
உந்தன் ஆசை
எந்தன் ஆசையென்று
எப்பவும் தோற்றிடும்
எந்தன் தோல்விகளுக்கு
எந்தன் மனசு சொன்னது.
எந்தன் வெற்றி
இயற்கையின் காதலால்
பூக்கும் நம்பிக்கையின்
கையென்று!!!
அழகான வாழ்க்கை
எதுவென தேடிபார்த்தேன்
உண்மையற்ற இதயத்தின்
பொய்களில் மயங்கிக்கிடந்தது!!!
அன்பான வாழ்க்கை
எதுவென தேடிப்பார்த்தேன்
வறுமையின் குடிலுக்குள்
மழைவெள்ளத்தி்ல் மிதந்து கிடந்தது
அறிவான வாழ்க்கை எதுவென
தேடிப்பார்த்தேன்
கையில் சிக்கிடா முத்தைபோல்
கடலிலுக்குள் கிடந்தது
கற்பான வாழ்க்கை
எதுவென தேடிபார்த்தேன்
தனியான பெண்மையின் கையின
ஆயுதமாய் இருந்தது!!!
பண்பாடான வாழ்க்கை
எதுவென தேடிப்பார்த்தேன்
ஆண்மையின் உருவத்தில்
விலங்கைப்போல் காட்டிற்க்குள்
கிடந்தது!!
மனிதனின் பிறப்பென்னயென
தேடிப்பார்த்தேன்
தவறுகளின் வடிவில் தன்னையே
தொலைத்து தேடும் உயிராய் கிடந்தது!!!
நம் வாழ்க்கையை
எதுவும் தீர்மாணிக்கலாம்
நாம்
நம்நற்பண்பை இழக்காதவரை
நம் வாழ்க்கை
எப்போதும் மற்றவரிடமிருந்து
வேறுபடும் !!!
அவள் தோல்விகளில்
மகிழ்ச்சியை ரசித்தபடி பல
உருவம் நிழலாய் நடைபோட
அவள் நிழலின் விம்பத்தில் கால்வைத்தே
நடக்க தனகென தனிவழியமைத்தால்!!
வாக்கப்பட்டு இஸ்ரப்பட்டு
கஸ்ரப்பட்டு வதைபட்டு
காயப்பட்டு கண்ணீர்பட்டு
பூவென்று பூக்கின்றது தீக்குளிக்க!!
கொஞ்சநேரம் ஓய்வாய்
கொஞ்சிபேசிய காலம்
கொஞ்சம் கொஞ்சமாய்
ஓய்ந்தே போக
கொஞ்சமும் ஒய்வற்ற தேவையேயற்ற
தேவைகளை சுமந்தபடி
வாழும் வாழ்க்கை ஏங்கு தேடுது
கொஞ்நேரம் கொஞ்சிப்பேச…..
மங்கையவளை விதவையாக்கிய
மரணத்தோடு ஓற்றைக்காதல்!!
வெள்ளைமலரைக்கொய்தேமாலையாக்கி மரணக்காதலுக்கு
காணிக்கையாக்கியே
மங்கை சூடினால் வெள்ளையாடை!
வெள்ளை மாலைக்குள் மாலரைப்போல்
அவளுக்கு மட்டும்
பூக்கும் கனவுவாழ்க்கை!!
கல்லினுள் கவிதையாய்
ஒற்றைவாசல் இல்லாவீட்டில்
மங்கையிவள் ஏற்றிய ஆத்மதீபம்
அழகாய் எரியும்
மனிதனின் மறுபக்கத்தில்!!
கவிவழியே கரையும்
கனாக்காலத்தை பறித்தே
பதியமிட்டத்து வாழ்கையை!!!
என்கற்பனைகளுக்கு
முகங்கள்
தேடபட்டபோதெல்லாம்!!
என் முகம் கருமையின்
கனவிற்குள் முழுமதியற்ற
இரவுக்குள்
தொலைந்து கிடந்தது
இருந்தும் ஓற்றை நிமிடத்தை
மரணம் கொடுத்திடவே
கனாக்கண்டேன்
கற்பனை முகம் புன்னகைக்க!!!
அப்பாதோற்றே விழுந்த நினைவு
கடனால் அம்மாவடித்த கண்ணீர்
அறிந்தும் அறியாபருவம் அறிவாய்
சிந்தனை செய்யென்றது!!தந்தைகற்று தந்த
பாடம் கணவர் எழுதிய தொடர்கதை
தீயின் சுவாலையாய் என்னை எரித்தே
சாம்பலாக்கியது !!
சாபலில் இழந்து விழுந்து எழுந்த
பெண்னாய் மீண்டும் மீண்டேயெழுந்திட
விடாமல் கூடவே கூடியே நடித்தே
கூடவே நடத்தவரே அதிகம்
ஆனாலும் மனிதம் அப்படியே
அன்றிலிருந்து
இன்றுவரை எதை இழந்தாலும்
அதைவிட அதிகமாய்
சிந்தனை செய்திடச்சொன்னது!!!
அறிவும்தோல்விகள்
வாழ்க்கையில் மலையென
உயர்ந்தாலும் முயற்சிகள் ந்தியென
ஒடுது வழியாய் என்னுள்ளே !!
பரதிகண்டகனவு
தோற்றதே வென்றதே அறியேன்
பரதிபெண்ணாய் உடைதாலும் எழுகின்றேன்
சுயமாய்!!!
சந்தர்ப்பங்கள்
தோற்கடித்தாலும்
நம் சந்தோஷங்களை
தோற்கடிக்கா
சந்தர்ப்பத்தை
தரும் நம்பிக்கையே
நம் எதிர்காலம்!!!
கொஞ்சம் கூட
தெரிய மனிதர்களின் பொய்யே
இன்றைய மனித வாழ்க்கையின்
கற்பனைபொழுதுபோக்கின்
நியமாய்பேச்சு!!
உள்வீட்டு உண்மைகளை
வறுமைகுடிக்க
உயரத்தின் ஒளியில்
தெரியும் முகத்தின்பின்னே
ஆயிரம் கதைபடித்திட
தோடுகின்றனர்!!
தன்னைமறந்த மனிதர் கூட்டம்!!
உயரதெட்டவன் படியில்
பலவடிவம் படுத்துறங்கிப்கிடப்பதை
அறிந்தவனே ! பொயின்றி
தானாய் தன்னைக்கொடுத்தே
தன்னைசெதுக்கி தன்னைமிக்கும்
கால்களுக்கு மேலே
நல்லதலைவனாய் உயர்கின்றான்!!
புரியாமனின் கடசிவரை தன்னை
மறந்து பெய்யேடு வாழ்கின்றான்
அடுத்தவர் வாழ்விற்குள் தேடல்
தன் வாழ்க்கையின்
கற்பனைச் செலவு !!!
அன்னையவள் பெற்றவரம்
பேதையிவள் வாழ்வியிற்றுக்குள்
விதியென விளையாடிட
அரக்கனும் இரக்கம்கொள்ளும்
விட்டில்பூச்சி பெற்ற தீப்போல்
துடிக்கும் இவளுக்காய்
கொஞ்சம் இரக்கம்கொள்
இறையே !!!
கொஞ்சுமொழிச்சுவை
பெண்ணவள் கொஞ்சகாலம்
நின்மதி கொள்ள!!
கொஞ்சம் கருணைகொள்
இறையே !!!
கருணைவடிவானவள்
கண்குளத்திற்க்குள்ளும் மீன்தேடும்
கண்கள் முன்னே கொஞ்சகாலம்
புன்னகைவழித்தோடிட!!!
கொஞ்சம் பாசம் கொள்
இறையே !!!
பாசப்பெண்னிவள் ஏமாந்தே
இழந்த இதயத்தின்வலிகள்
கொஞ்சமறந்திட
பாசம்கொடு இதயம்பெற!!!
கொஞ்சம் உயிர்கொடு
இறையே!!!
கல்லான பெண்னிவள் கற்பனையும்
தோற்றிட்ட நாட்களை கொஞ்சம்
கவிவடிவமாய் உயிர்பூவில் பூவாக்க !
கொஞ்சம் காண்பாரு இறையே
போராடும் வாழ்க்கையை
தடைபோட்டே
நிறுத்திய தோல்வியால்
தடுமாறும் மனதினை
தடுதிடும் இசையெடுத்து
தூங்க தோழன் மடியால்
விதியேடு விளையாடவும்
பிடிக்கின்றது முதுமையிலும் !!
மீண்டும் மொழியேடு
காதலும் பூக்கின்றது
அழகான போராட்டக்கடல் மீனாகின்றேன்
விதியேட தூண்டிலில் சிக்கியே!!!
விதையாய் விழுந்த கனவு
விளையாடிடு என்னேடு
விருப்பமே இல்லாமல்
திண்டாது உறவு
அடுத்த அந்தியாதை
அழகாய் தொடங்கு விதி
விதியின் கையில்
பொம்மையாய் நான்
விழுந்த தெருவில் அழிந்த கனவு
விதியின் வடிவெடுக்கு தானாய்!!
அழிவதே எழுதே இறைவன் எழுதிய
நாட்காட்டியின் எழுதியே முடிவான பக்கம்!!!
பூக்களின் பனித்துளி
விழும் வரைபனித்துளியேடு காதல்
பருகிடும் சூரியன்
தாகம் உள்ளவரை நீரோடு காதல்
பூமிக்கு மழைத்துளியின்
தேவையால் மழையோடு காதல்
தேடிய உடல் அழகினேடு
சேர்ந்தே பிறக்கவும் இறக்கம் காதல்
பூவைத்தீ சுட்டுவிட்டால்
வண்டிற்கு தேனேடு காதல்
கல்லறையுமில்லையென்றால்
காகிதம் குப்பையேடு காதல்
மண்ணிலுள்ள உயிருக்கு மட்டும்
மண்ணில் இல்லா மரணமே காதல்!!!
ஒற்றைபெண்ணாய்
பிறந்ததில் இத்தனை தவரா !!
எத்தனை நாட்கள் இங்கே
சுத்தமாய் தொலைந்தே போச்சி
எத்தனையே !! தடைகள்என் முன்னே
எழுந்திட முடியா
எரிமலையாய் எழுகின்றது!!
உன்னால் முடியாதென
உச்சரிக்கும் ஓலியின் சத்தமே
என் உறக்கத்தை பறிக்கின்றது
இருந்தும் பாதம் முன்னே வைக்கின்றேன்
பின்னே என்னை வைத்தே!!!
வெண்பனி ஒன்றாய்
கொட்டினாபோல்முன்னே சென்றவள்
பின்னே நடந்தவரை
சட்டென திரும்பிப்பார்த்தாள்
அவள் அழகில்
சாத்திரங்கள் விழுந்தது
அவள் காலடியில் !!!
பெண்ணின் அழகிற்க்கு முன்
எந்த கட்டுக்குள்ளும்
ஆண்மையை
கட்டிவைத்திட முடியா வரமே
மண்ணில் அழகிய பெண்மை!!!
உண்மையற்ற உருவம் கொள்
பொய்களேடு உறவாய் பிறந்திடு
நிமிடத்திற்க்கு நிமிடம்
எமாற்றகற்றுக்கொள்
இல்லாத ஒன்றை இருப்பதாய்
நடித்திடு
வறுமையை மறைத்து ஆடம்பரமாய்
வாழகற்றுக்கொள்
உயர்ந்த எண்ணங்களைஅழித்து
சுயநலமாய் சிந்தனை செய்
கொடுத்திடமலே கொடுத்தாய்
விளம்பரம் செய்
கோவிலை கண்டால் அச்சம்கொள்
உச்சத்தைதொட்டு திரும்பி பார்க்க
உலகம் வரும்!!!
அவள் தலையாடி
உதிர்ந்த மலர்கள்
தன்னை தொட்டாலே
கருகிவிடுவேன் என்றது
அவள் முகமுதிர்ந்த மங்களமே
அவளை அமங்களம்
என்றே தள்ளி நில்றென்றது
அவள் உடல் வளைந்து அழகான பட்டே
அவள் உள்ளமறந்தே தீயேடு
சாம்பலானது
அவள் நடந்த தெருவே அவள் பதம்
பட அஞ்சியே விழிகள் முடிட
அவள் தன்னை வெறுத்து
சிறைபட்ட இருளே அவள் வாழ்வின்
துணையானது !!!
திரும்பிபார்க்கின்ற
என்னை
எப்படிபார்த்தாலும்
ஒற்றை துளியே நிற்காமல்
விழுகின்றதை கண்கள்
சொல்லாமல் சொல்லிசெல்லுகின்றது
இருந்தும் என்னிலும் உண்டு
கற்பனைகைக்குள் அடங்கிடா
கனவுகள்
கையேடு எடுத்திடமுடியாமல்!!!
என் தோல்விகளுக்குள் எத்தனை
காரணமும் இருக்கலாம் ஆனால்
இற்றைவரை என்னை நம்பியே
ஏற்றிவிட ஓற்றை கரம் இல்லா தோல்விகளே
அதிகம் இது விதியே இல்லை
என்பிறப்பின் தண்டனையே அறியேன்
ஆசை!
அலைமோதி அலைமோதி
மனசுடைக்க !
தனிமைகொண்டு
உறக்கம் தொலைந்த
நிமிடம்
வெற்றி கிண்ணமாய்
மரணத்தை
தூக்கிதரும் நெடி
உயிர்ப்பாரத்தை
உடல் சுமக்க மறக்கின்றது!!
எத்தனை தடைகள்
வந்தாலும்
உடைத்திடவே
நினைக்கின்றேன்
ஆனால்
கொஞ்சமும் மாறமல்
வாழ்வும் தடுமாறியே
ஏங்கிடுது
ஒற்றை கைகூட
தடுத்திட இல்லாமல்
மனசு ஏங்கிடும்
பொழுதெல்லாம்
தனிமையை
தலையணையாக்கியே
உறக்கம் விழித்திடுது
இல்லையென்ற ஓன்றையே
தேடிதுடிப்பதும்
ஏமாந்தே ஒய்ந்து
கிடப்பதும் இழப்பால்
கிடைத்திட துயரத்தால்
மனசு அழுதிட
இதயம்வலிகிறதே தானாய்!!!
ஓரு மரணம் வலியேட பிறசவம்
அதுவே பிரசவித்த மகளின் வலியென்றால்
தீயிட்டு கொழுத்திடும் வலியை விட
வலி தரும்!!!
முதுமைக்காலம்.
நம்மை அதிகம்
சிந்திக்க செய்கின்றது
நாம் மற்றவருக்காய்
பார்த்து பார்த்து சிந்தித்து
செய்யும் நல்லவைகள் யாவும்
யாரும் தனக்காய் செய்யாத போதே
முதுமை சந்தித்து
சிந்திக சொல்லும் நம்மை!!!