Thursday 5 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 மங்கையவளை விதவையாக்கிய

மரணத்தோடு  ஓற்றைக்காதல்!!

வெள்ளைமலரைக்கொய்தே  

மாலையாக்கி  மரணக்காதலுக்கு  

காணிக்கையாக்கியே

மங்கை சூடினால் வெள்ளையாடை!

வெள்ளை மாலைக்குள் மாலரைப்போல்

அவளுக்கு மட்டும்

 பூக்கும்  கனவுவாழ்க்கை!!

கல்லினுள் கவிதையாய்

ஒற்றைவாசல் இல்லாவீட்டில் 

மங்கையிவள் ஏற்றிய ஆத்மதீபம்

அழகாய்  எரியும் 

 மனிதனின் மறுபக்கத்தில்!!

கவிவழியே  கரையும்

கனாக்காலத்தை  பறித்தே  

பதியமிட்டத்து  வாழ்கையை!!!

No comments: