Tuesday 31 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இவள் என்ன கல்லறையின்

மேல் பூத்தபூவா  மீண்டும் மீண்டும்

மரணமே மன்னிக்கமறுக்கின்றது

இவளை என் தேவதையென்றவன்

இப்போ சொல்லாதே சென்றுவிட்டான்

பிறவிகளில் சில உறவுகள் 

நம்மை தாங்கியே தன்னை தரும்

அப்படி  என் வாழ்வில் 

வந்த  அண்ணன் அவள் சின்னவயதில்

பொறமையால் பூத்த நேசம் அவன்

தங்கையே விட்டத்தந்த பந்தம்

அண்ணியஙள் பொறமைகொள்ளும்

்அன்பு  இப்போ  என்னிடம்

சொல்லாமல் சென்றே விட்டது 

நம்ப மறுக்குது  உணர்வு

நம்பித்துடிக்கு மனசு  விதியே என்

சந்தோஷங்களை மட்டும் பறிக்கின்றாய்

என்னை பறித்திட சொல்லியும் கேளாமலே

கண்களில் இல்லையண்ணா

கண்ணீர்  உன்னை நினைத்தே

அழுது துடிக்க இதயம் மட்டும் அழுகின்றது 

உனக்காய்!! அங்கே நான் வரும்போது

எனக்காய் காத்திருக்கும் உயிர்களில் நீயும்

இருப்பாய் !எனக்காய் !

என்றும்  உன் சொல்லத்தங்கை 

 நான் தான் எப்போதும்!


No comments: