Sunday, 1 October 2023

விழி மொழி பேசும் சாரல்....................

 அன்னையவள்  பெற்றவரம் 



பேதையிவள் வாழ்வியிற்றுக்குள்  

விதியென  விளையாடிட  

அரக்கனும்  இரக்கம்கொள்ளும் 

விட்டில்பூச்சி   பெற்ற   தீப்போல்  

துடிக்கும்  இவளுக்காய் 

கொஞ்சம்  இரக்கம்கொள் 

இறையே !!! 

கொஞ்சுமொழிச்சுவை

பெண்ணவள் கொஞ்சகாலம்

நின்மதி கொள்ள!!

கொஞ்சம் கருணைகொள் 

இறையே !!!

கருணைவடிவானவள்

கண்குளத்திற்க்குள்ளும்  மீன்தேடும் 

கண்கள்  முன்னே கொஞ்சகாலம்

புன்னகைவழித்தோடிட!!!

கொஞ்சம் பாசம்  கொள்

இறையே !!!

பாசப்பெண்னிவள் ஏமாந்தே 

இழந்த  இதயத்தின்வலிகள் 

கொஞ்சமறந்திட

பாசம்கொடு இதயம்பெற!!!

கொஞ்சம் உயிர்கொடு 

இறையே!!!

கல்லான பெண்னிவள் கற்பனையும்

தோற்றிட்ட நாட்களை கொஞ்சம்

கவிவடிவமாய் உயிர்பூவில் பூவாக்க !

கொஞ்சம்  காண்பாரு  இறையே 


No comments: