Saturday, 1 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

கழிவறைகளிவோடு நின்று 



கழிவிய கழிவறை பணத்தில் 

பெருமைகொள் சமூகம் 

ஒன்று  பணத்தால்  தன் 

சாதித்தொலைத்தது  சாதிபெருமை 

பேசும்  சிறப்பை  கிராமத்து 

பெண்ணிவள்!புன்னையோடு 

  வேடிக்கை கொள்கின்றாள் 

இருக்கும் !இல்லாமலும் இருக்கும் 

ஒன்று  இருக்க  தேடும் 

வேடம்  சிறப்பாக 

மனிதனிடம்  இல்லாமல் 

போகா  ஒன்றை  பார்த்து 

 

Friday, 31 July 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 தெருவிளக்கு  இல்லா 

தெருவுக்குள்  நான் 

 நிலவொளியில் 

நடகையில்  என்  

 மனசு கையில் பிடித்த 

கற்பனை  மாமன்   மனசு!!

மாமா!!  நீயில்லா !

அலங்கராவிளக்கொளியில் 

நான் நடக்கையில் நான் 

கைப்பிடித்த  மனசு  நீயென்றாலும் 

கொஞ்சம் அச்சம் பட்டு 

தவிப்பதேன் மாமா !!நீயில்லா 

இவ்வுலகம் இருள்நிறைந்த 

பாதையென்பதாலா !

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

வீரத்தாலட்டின்!  


வீரமங்கை களமாடிய 

களத்தென்றல்!

வீசும்மூச்சுக்குள்  மூச்சாகியே 

மறுபிறவியெடுத்தே 

நடந்தபெண்ணின் துணிவிற்குள்  

சிக்கித்தள்ளாடு வீரம்  

மறுபிறவிகேட்டு !இது 

பணம்  கொடுத்த 

மோகமென்றாலும் 

விழுந்த  மண்ணில் விழுந்த 

உதிரம் இன்னும் மழைகாற்றால் 

கழுவிமுடித்திடவில்லையென்பதே 

நியம்!! 


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இருப்பவனுக்கு !

 இழப்பின்மீது  பயம் !

இழந்தவனுக்கு

 தன்மீதி பயம்  !

எல்லாம்  !

வெறுத்தவனுக்கு எதன் 

மீதும் பயமில்லை !

அவனை!!நம்பினால் 

  இழந்து விடுவோம் என்ற 

பயமே  பயத்தால் 

 காட்டிக்கொடுக்கின்றது

இழந்திட விருப்பாதவனே 

எதிரியாகின்றான் என்று !!! 

Thursday, 30 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒருமனிதனின்  உள்  அறிவின் 

  வளர்ச்ச்சியை 

அறிய விருப்பினால்!!

 உன்  சிக்கல்களை கூறிப்பார் 

தீர்வை வைத்தே  உன்மீதே  

உனக்கு  நம்பிக்கை வரும் !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒன்றை  தீர்வுக்கு 

ஒருமுறை  அல்ல 

பலமுறை சிந்தித்தாலும்  

கிடைக்கா  ஒரு பதில்  

இல்லத்தரசிக்கே 

சொந்தமான கேள்வி !!

 ஒருமுறை அல்ல  பலமுறை

 கேட்டாலும் 

கொடுக்கா  வரமும் அவள் 

சுமக்கும்  மனதின் 

சுமைகளின் கேள்விக்கே 

வலி !!!


Wednesday, 29 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மாமன் கைபிடித்து 

மாமர நிழலுக்குள் 

அவள்  பேசிய காலம் 

ஒரு மாமரப்பூவின் 

உதிர்வை கூட 

ஏற்க  மறுக்கின்றது !

மாமன்  பறித்து 

அவள்  உண்ட மாங்கனிகள் 

சுவையாய் தித்திப்பாய் 

 மாமன் இருந்தாலோ !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சின்ன சின்ன சந்தோஷமே!

 வாழ்க்கையென்னும்

 அவளுக்குள் !!

பெரிய பெரிய கனவுகள்  

அவளை கேட்காமலேயே 

அவள்  விழிகளுக்குள் 

வந்து  வந்து  போகின்றது !! 


குட்டிக்குட்டிச் சாரல்......,

சுகந்திரக்காற்றின்

சுவாலைக்குள்  என் 

மூச்சுக்காற்று எரிகின்றது  

Tuesday, 28 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

பாதி உண்டு மீதிக்கு ஏங்கி 



ஏழ்மையருக்குள் 

வறுமையைக்கற்று 

ஏழ்மைதாய்யின்  வறுமையின் 

நாட்களுக்குள்  விழுந்து  எழுத்து 

தவழ்ந்து  நடந்த மனிதன் 

ஏழ்மையின் வாழ்வை அழித்து 

பெருமைகொள்ளும்  சமூக நீதி 

சிந்தனையை!   மனிதனுக்குள் 

வித்திடும்  சுகந்திரத்தை 

கற்றிட  ஒரு  வரலாறு எழுதும் 

தலைவனை கொண்டாடி  

சமூகம்  கற்றுக்கொள்கின்றது! 

தனது  வாழ்வை காத்திட 

அடுத்தவன் அழிவில் 

 தன்னை  தலைவனாக்கிடும் 

சமூக கொள்கையை!!


 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோடி இன்னல்களின்  



நடுவே கொஞ்சமும் அச்சமில்லாதே 

பூவான பெண்மை 

கொஞ்சிபேசிடும் 

கோழை மனிதனிடம் 

மட்டும்  வார்த்தைகளில் 

விழுது விடுக்கின்றதே 

கொஞ்சமும் யோசிக்காதே 

இங்கே அறிவை வெல்லும் 

ஆயுதம் எது  

தேடித்தேடி  பார்க்கின்றேன் 

இதுவரை  சிக்கவில்லை 

மனசின்  சிறைக்குள் 

அடைக்கப்படட  உணர்வின் 

மாயயாலத்தின்  மர்மங்களின் 

பக்கங்கள்  கோடுபோட்டதும் 

பொய்யே  !!


Monday, 27 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அன்பெதுவான 



தேடிப்பார்த்தேன் 

யாரிடமும் கிடைக்கவில்லை 

நான் தேடிய அன்பு !அன்பை 

 கேட்டேன் அன்பிடமே!

 அன்பு கண்ணீரோடு 

சொன்னது நீகொடுத்து 

நீ தேடும் நான் தொலைந்த 

இடமே அன்பு !உன் வீட்டில் 

அழகான ஒளியின் வெளிச்சம் 

ஊர்பரவ ஊர்பேசும் உன் 

வீட்டில் உன் கண்களின் 

ஏக்கம்  நான்னென !நான் 

தேடும் நீயும்  நீதேடும் 

நானும்  தொலைக்கப்பட்ட 

பெண்மையை !தேடாத 

சமூகத்தின் வீரமென்றது  !

குட்டிக்குட்டிச் சாரல்......,

 கற்பனை தேடும் 

கனவுக்குள் பெண்மையழகு 

ஆண்மைக்கண்ட கல்லுக்குள்லும் 

பெண்மையழகு 

வாழ்கை கண்ட உயிருக்குள் 

மட்டும் பெண்மை அழகை 

கண்ணீர்குடிக்கின்றது 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிலைகொள்ளா  வேலைகளை 



நிலையில்லா உயரத்தில் 

வைத்து!  நிலையில்லாமல் 

நின்றுகொண்டு 

நிற்கும்  உறவுகளை

நிலைமாற   செய்துவிட்டு 

நிலைக்கும் கற்பனைக்குள்  

நீயும்  நானும்  பேசும் 

வார்த்தைகள்  எனறும் 

போலிமுகம்கொண்ட 

விம்பத்தின்  அழகே !

இங்கே  நாம்  தொலைத்து 

தேடும்  வாழ்விற்க்குள் 

அன்பே  தோடும் பொருளானால் 

காதல் எப்படி வாழும் 

வாழ்க்கையாகும் !

யாரோ எழுதிய கற்பனைக்குள் 

யாரோ தொலைத்த காதலை 

நாமும்  இன்னும் எதுவென 

தெரியாமலே தேடிக்கொண்டே 

இருக்கின்றோம் !அன்பேயில்லாமல் !!

Friday, 24 July 2026

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

உதிரம் பாய்ந்தோடிய 



நிலமகள் மேனிதனில் 

துறவறம்  கொண்டதுவோ 

உணர்ச்சிகள் !

குடித்த உதிரத்தில் நிலமகள் 

செழிக்க வான் சிந்திய 

கண்ணீர்த்துளிகளில்  

முளைக்கவில்லையோ 

விதைகள் 

இன்னும்  காரணம் காரணம் 

தேடும்  பலிகளின் விழிகளில் 

சுயநலம்  பிரிக்கின்றதோ 

உறவுகளின் உணர்வுகளை 

காலம் சொல்லும் கதைக்களத்தில் 

இன்னும்  மீதியுள்ளது 

சேர்த்திட முடியா 

தோல்விகளால் நிலமகளை 

மூடிய   உதிரத்தின் 

வண்ணங்களே !!

 

Monday, 20 July 2026

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்......,

 செல்லமாய்!

  செல்லம் கொஞ்ச

செல்வமாய்!

  நாங்கள்  வந்தோம் 

அப்பாவின்  கைகளுக்குள் !!

அன்பின் !மொழிக்கேட்டு 

அன்பென்னும் !

கூட்டுக்குள்  செல்லசிட்டுகளாய் 

சிறகடித்தே பறந்த நாம் 

பரந்த  வான்கடைந்து தூரதேசத்து 

துரமானாலும்!

 நிழல் குடையின்   வடத்திற்குள் 

கூடிப்பேசி சிரித்து மகிழும் 

சொர்க்க  வாசல் அப்பா !

கோவம் வரும் கூடவே அம்மா 

குரலும்  வரும் பின்னே !

 பிரிவுகள் பிரித்தாலும்  

பிரிக்கமுடியா இல்லம்

  அப்பா !

இன்று அவருக்கு 

பிள்ளைகள்  ஒன்றுகூடி 

சின்ன  விழா 

நான் தூரம்  நின்று 

ரசித்தது  வியக்கின்றேன்!

 அவரை ! அவர்  

மகிழ்வை  கண்டு வியக்கின்றது 

விழிகள் !

ஆனாலும் !

மகள்களை மறக்கடித்த 

மருமக்களுக்கு  என்  இதயத்தால் 

நன்றிகள் கோடி !!!கூடியகைகளுக்குள் 

கொடுத்த  வரம் அவர்களே !!!



Thursday, 16 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நாம் செய்யும் செயலின்

அர்த்தங்கள் நமக்கான 

சந்தோஷத்தை  தருவதால் தான் 

அதில் மற்றவரின் சந்தோஷங்கள் 

சேர்ந்திருப்பது புரியாமல் 

போகின்றது !அதனால் தான் 

நமக்கான சந்தோஷத்தேடலில் 

மற்றவரை தொலைத்து 

விட்டது தெரியாமல் 

வாழ்கின்றோம் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 மாயாவுலகிற்குள் 

மாட்டிக்கொண்ட 

புள்ளிமான் துள்ளியோடி 

அள்ளிக்கொள்ள  கைகள் 

நீட்டிய போதே 

தெரிந்தது இது 

மாயாவுலகென்று சந்தமில்லாமல் 

காட்டுக்குள் திரும்பியது 

மாயாவுலத்து வெளிச்சத்தைவிட 

காட்டின் இருள் அழகென்று !

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 காப்பாற்றும் கைகள் 



கிடைத்தால் போராடும் 

நிமிடங்கள் அழகு 

சோர்வுகளை தோற்கடி

கைப்பிடிக்கும்  கைகளுக்கு 

தெரியும்  மனதின் வலி !

தெரியாமல் மாட்டிக்கொண்ட 

மனதிற்கு  கண்ணீரே 

கைகள் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 உயிர்நோக 



அடித்து விட்டு 

உயிரே நீயென சொல்லும் 

வார்த்தைக்குள் 

உயிருக்குமென 

நம்பிட சொல்லும் 

நம்பிக்கையே 

உயிர் குடிக்கும் விஷம் !!

விஷமான வாழ்க்கைக்குள் 

இனிப்பான சொற்கள் 

வாழ்ந்திடாதுடிக்காது !!மரணித்த 

பின் சூட்டப்படும்  மாலைக்கு 

கிடைக்கும் அழகே

வார்த்தையின்  நிதர்சனம் !!

புரியாமல் புரிந்தது போல் 

எதர்க்கவும் நடிக்கலாம் 

ஆனால் வாழ்க்கைக்கு இது 

உதவாத உதாரணம் !!


 

Wednesday, 15 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

வண்ணம்  குளித்த  அன்னம் 


வெள்ளப்பூவிற்கு  வேடிக்கை

செய்தியனுப்பியது  

கார்மேகத்தின்  கீழ்நின்று !!


Tuesday, 14 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உயரத்தின் ஏழ்மை 

அன்பே!  ஏமாற்றம்! 

வார்த்தைகளில் இல்லை 

பொய்மை!  இருந்தும் 

பெயர்கள் முன் கண்ணாடி 

வார்த்தை  வித்தகர் முன் 

தோல்வியின்  கடிகாரம் !

ஏளனப் பேச்சில்  எதிரியும் 

ஒன்றாய்  கூடி 

 அழுதே புலம்பிட 

வார்த்தையால்   விளையாட்டு! 

போகும் திசைகள்  முன்னே 

வாழும்  காலக்கணக்கில்

தனக்காய் சிந்திக்காமல் 

ஏழ்மையின் பாதைகளில் 

முற்களை  எடுத்திடவே 

சிந்திக்கின்ற சிறந்த மனித 

நேயம்!  கோடிமனிதனுக்குள் 

தேடினாலும் குறைகளுக்குள் 

சிறந்திடமுடியா  மணித்துளிகளை 

அழகாக்கியே  ரசிக்கும் தலைவனாய் 

நாளை எதுக்கும்  நிலையில்லை என்ற 

இறையை  நாளின் அழகிய 

விழிப்பு !!  சுயநலவாதிகள் வெறுக்கும் 

இன்றைய  வெளிச்சம்  !!



Saturday, 11 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயரம் எதுவானாலும் 

மனசு பூமிக்குள் அடங்கட்டும் 

விழும் போது  வேடிக்கை 

மனிதனே விழிப்போடு  இருப்பான் !! 

Friday, 10 July 2026

மழையின்சாரல்.................,

ஓலைக்குடில்  

கொட்டித்தீர்த்துக்கொண்டே

இருந்தது மழை 

 விட்டுவிடாத என்ற 

ஏக்கங்களுடன்  அவள் விழிகள் 

காத்திருப்பது தெரியாமலே 

விட்டுவிடாமலே  

தொடரும் மழைக்கு 

தெரியாது ! 

அவளின்  வறுமை!  ஆனால்! 

தாலிகட்டியே கூடிவனுக்கு தெரிந்தும் 

மழையை விட  மோசமான 

தண்ணியில் அவன்  !எப்போதும் 

போல்   அவள் 

கைகளை பிசைந்தபடியே 

நிக்கின்றாள்  நாளையாவது 

விடியாதயென !!

Thursday, 9 July 2026

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்......,

கருவுக்குக்குள் பூத்த

 கவிக்குயில் 



பேசத்தொடங்கிய  பேச்சுக்கு 

சுகந்திரம் கிடைக்காமல் 

பேசும்  மொழியின்  சிறைக்குள் 

காகிதப்பூவிற்க்குள் வண்ணமாகி 

வானவில் பூப்பறித்து 

வெண்ணிலா ஒளிகுளித்து 

வெண்மேகப்போர்வைக்குள் 

விழுந்த  தென்றலுக்கு  

வேர்வைதுடைத்திட  கைக்குடை 

தான் கொடுத்து 

உறவுக்குள்  வேராகி  உயிருக்கு 

பூவெடுத்து  வானம் துள்ளியோடும் 

துளிகளின் விழிகளுக்கு 

தோகையாகிய  தானிருக்க 

நந்தவனமானால்  வாசகியாய் !!!

 


 

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஏடுகளில் எல்லாம் அழகிய 



பெண்னோவியம் பிடித்தே 

படிக்கும் வரை ! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆதிப்பெண்ணிவள்!!



 காடுகளில்  நடுவே  

தொலைத்துவிட்டு  சென்ற 

மனித உறவுகளுக்கு  நன்றி !

கொஞ்சிப்பேசும்  தாய்மொழியில்லை 

கொஞ்சிபேசுகின்ற பறவைமொழியழகு 

கொஞ்சம் சோர்ந்தால் கூடி விளையாட

அன்பைகாட்டும்  மிருகங்கள் 

மனித கோவத்தை விட 

அழகாய் விளையாடும்  அவளோடு! 

உறவையிட அழகின்  உறவு 

அவள் கொடுக்கும் அன்பின் அழகிற்கு 

கிடைக்கும் அன்பின்  அழகு    

செல்லப்பிள்ளை இவள்  !பசியை போக்க 

பிச்சையிட  தட்டு  ஏந்திடாமல் 

பசியை போக்கும்  மரமும் 

இவள் தாய்மையின்  அழகு 

 திரும்பும் திசைக்காற்று 

கூட  நின்று பேசியே செல்லும் 

இவள் குருப்பின் அழகில்

ஆற்றின்  மொழிகள்  துங்கிட 

தாலட்டும்  அழகில் உறக்கம் 

சொர்க்கவாசல்  கொண்டுசெல்லும் !

அச்சம்  கொண்ட  நாகம் கூட 

கூடவந்து  கூடி விளையாட 

பாசம் கொள்ளும்  இவளோடு 

 இவள் சொல்லும் 

மொழிகள் மௌனம் கொள்ளும் 

இவள் பேசாமொழிகள்  கூடி பேசி 

அச்சம்  போக்கும் 

  இங்கு  ஏற்ற தழ்வு 

இல்லா  சுகந்திரம்  அவளை 

அன்பாய்  கட்டிப்போட்டு வாழக்கூடி 

வாழ்க்கை முத்தாகின்றது !!




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றை பிறப்பின் ஒற்றை 



மாற்றம்  ஒன்பது 

வித கற்பனையின் தோல்வி 

  இங்கே 

பெண்மையும்  ஆண்மையும் 

தொலைந்த  இடத்தின் 

தொடக்கம் !தொடங்கியதால் 

வாழ்வே  ஏமாற்றம்!  

அன்பை தாய்மை கொள்ளா 

அன்பின் தாய்மையை  

தவறுக்குள்  தள்ளிவிட்டு  

தவறுகளை கற்றுக்கொடுத்து 

ஏளனம் செய்யும் பிறவிகளுக்கு 

கிடைத்த  தாய்மாடியில் 

பிறந்ததை  தொலைத்து விட்டு 

பேசும்  தகுதி மட்டு  யார்கொடுத்தார் !!



 

Wednesday, 8 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தூரத்தே  மின்னும்  


நட்சத்திரம்  போல் இவள்

 மண்ணில் தூரமாய் 

போன வாழ்விற்க்குள்

இரவல் கேட்டிடும்  சந்தோஷம் 

 இருளின் கண்களுக்குள் 

அமைதி கொள்கின்றது 

ஆர்பாட்டமில்லாமல்!இங்கே 

பொய்கள் இல்லா விம்பமே 

அவளின்  சந்தோஷத்திற்கு 

காரணமே !! 




Monday, 6 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு  தனிமைக்குள் 



ஆயிரம்  அழகான  மலரும்

மலர்கின்றது! அதேநொடி 

அந்த  அழகிய மலர்தோட்டம் 

விரத்தியின்   வெப்பக்காற்றால் 

கருகியும்  சாம்பலாகின்றது !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மூசசுக்கு மூச்சுக்கு 



பேச்சு பேச்சுசுகந்திரம் 

அடைந்ததாய் பேச்சு !இங்கே 

மொழிகள் ஊமையாகி  

அவர் அவர் முகங்களே  

மொழியாகி 

மூச்சற்ற பேச்சால்  உயிரற்று 

மொழி இறந்து கொண்டிருக்கின்றது !!

Sunday, 5 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இரவுகள் என்னை பார்த்து 



அச்சத்தோடு கேட்கின்றது! 

பெண்ணே நீ !

அச்சம் கொள்ள வேண்டாமா !

 நிசத்தம் கொண்ட எனக்குள்  

நின்று! பதற்றமின்றி ரசிக்கின்றயே 

உன் முகம் மூடிய என் முகத்திற்கு 

உன் விழி கொண்டு புது வெளிச்சம் 

தேடுகின்றாய் !அச்சமின்றி !

அடடா !!உன்மொழிகேட்டு 

குரல் கேட்டு  இசைக்கும் 

தென்றலின் குரல் ஓசை 

மறக்கின்ற மாயத்தால் 

உன் திசை பார்த்து அச்சத்தோடு 

காத்திருக்கின்றேன்!

ஆதவன் தொடும் வரை 

கரைகின்ற என்னை 

உன் விழி சொல்லும்  மொழி தேடி 

கரைய வைக்கின்றாயே பெண்ணே!

மௌனம் பேசும் 

கலைபெண்ணே பதில் சொல்வாயா 

உன் பெண்மைக்குள் ஒரு தீ 

என் இரவிற்குள் இரவல் கேட்க 

நீயே துணைக்கு என்னையே காவல் 

என்கிறாய்!!



Saturday, 4 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நல்ல அப்பவாவின் 

கைகளுக்குள்  நல்ல 



பிள்ளைகளை  உருவாக்கலாம்  

நல்ல  தலைவனின்

 சிந்தனைக்குள் 

கெடடவனும் நல்லவனாய் 

உருவாக்கலாம்!  உருவாக்குபனை  

நல்லவனாய்  தேடுவதே 

நல்ல  உலகத்தை  உருவாக்க 

தேவை!கிடைத் நிழலை 

விட்டு விட்டு  கிடைக்காத 

நிழலுக்கு  குடை பிடிக்கின்றோம் !

இது  காலச்சக்கரம்

 கற்று தந்தாலும்  இன்னும் 

கற்கமறுக்கும்  காலக்கொடுமை

இந்த  மனிதப்பிறவி !! 


 

 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவள்  உண்மையின் 

அழகு !அந்த அழகினை 

பார்த்து யாரோ

 சொன்னார்கள்! அவள் 

உண்மையில் அழ
கற்ற கறுப்பியென   !

அவள் ரசனையின் 

அழகு  அந்த  அழகினை 

பார்த்து  யாரோ 

சொன்னார்கள்  அவள் 

ரணையற்றகறுப்பியென  !

அவள்  ஒரு பொய்யின் அழகில் 

புதைக்கப்படட அழகின் 

பொக்கிஷம் என 

அவளுக்கு மட்டுமே தெரிந்த 

அழகின்  அழகு  அவள் !


 

Friday, 3 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 இருளோடு தழுவிய சுமை 

மனோதோடு  பேசாமறுக்கும் 

சோர்வு  போகும்  பாதையெங்கும் 

உறங்கிக்கொண்டு  இருக்க 

ஒற்றைக்கல் தடுக்கியிட


தடுமாறி பார்த்தாவிழிகள் 

புன்னைகைக்க 

அப்படியே  உறைந்த  இதயம் 

  புதிதாய் துடிக்க 

இருளின் மறைவிற்குள்

 என்னோடு விழித்துக்கொண்டே 

மறைத்த  மூக்கில்விளக்கி 

புன்னகைக்கும்  நிலமுகம் 

சொன்னது  நான் இருக்கின்றேன் 

விட்டாமால் என்று !!!சோர்வின் 

புன்னகைக்குள் ஒரு 

உணர்வு பேசியது உயிரோடு !!!



Thursday, 2 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவளை  வாவென 

சொல்லும் வாய்வார்த்தைகளில் 

அவள் தேடிக்கொண்டு 

இருக்கின்றாள் 

உண்மையில் ஒரு காதலை 

அவள் இன்னும்  

தேடிக்கொண்டே இருக்கின்றாள் 

அவளுக்குள்  இல்லா போலியை 

காதலாய் நியாமென சொல்லும் 

வார்த்தைகள் கொன்றுகுவித்த 

கல்லறையின் மேல் காலரா 

அமர்ந்தபடி !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஊர் போற்ற உறவு போற்ற 

வான் போற்ற  வனம் போற்ற 

நான் தோற்று  நடக்க நதிக்கரை 

வாடுது எனக்காய்

மீன்கண்டு பூ கண்டு 

நரையும் சோகம் கொண்டு 

கொக்குண்ண மீன் விட்டு 

என் பாதத்தடத்தின் மேல் நின்று 

ஏக்கமாய்  பார்க்குது!!

பாவமாய் தோணுது  எனக்கும் 

அனாலும்  மனசு கேக்காமல் 

கிடக்குது  எனக்குள் !!

 

  

Wednesday, 1 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மாற்றமுடியாமல்

ஒரு கூட்டம் 

மாற்றம்  தேடியே 

ஒரு கூட்டம் 

நடுவே  மாட்டியே  தலையை 

பிச்க்கொண்டோடுது 

சுயநலமும் பொதுநலமும் 

மாற்றத்தைதேடி!! 


Tuesday, 30 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 அவளுக்காய்!!அவள் 

இருப்பதாய் நினைத்த 

  ஒற்றை  சொல் இருந்தும் 

ஏனோ இல்லாமல் 

 போய்  வாழ்வதாய் ஏக்கங்கள் 

சூழ்ந்தே 

விழித்த  இரவுக்குள் 

புரட்டிய  பக்கத்திற்குள்  விழிமூட 

துடிக்கும்  தூக்கத்திற்கு 

தாலாட்டியே தலைசாயும் 

மடிதூக்கத்தை  தேடியே 

புரண்டுகொண்டே இருக்கின்றது!! 



Thursday, 25 June 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

கைகள் வெட்டுண்டு

 வீழ்ந்தாலும் 

கால்கள் கட்டுண்டு  

கிடந்தாலும் 

நல்மனதின்  சிந்தனை 

நல்விதையே  விதைக்கும் !



Tuesday, 23 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 சுமந்த  கருவை 

 காக்கும் 



பெருமை  கொள்

 பெண்மை 

சிறுமையாகி!  இங்கே 

தனியே!  கிடக்கின்றது 

போற்றும்  சமூகமும் 

தூற்றும்  சமூகமும்

 தூரதேசத்து பார்வையானது  

உண்மை! 

வெளியே  அழகின்  வேடம் 

உள்ளே    வலிகள் 

சுமந்திட  முடியாமல் 

பெண்மைக்குள் போராட்ட 

களம் ! அறிவின் திறனை 

அழித்து 

தாய்மையை  கொன்று

  உயிரை குடிப்பதுவும் உண்மை !! 

காலத்தின்  ஒட் டம் 

அனைத்தையும்  அள்ளிக்கொண்டோடுத்து 

தனியாய் !! சொன்னால் புரியும் 

என்ற பார்வைகள்  குருடாகி 

சொல்லாமல்  ஓடுது  வாழ்க்கை !!


Thursday, 18 June 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னைத்தேடிக்கொண்ட 

என்னை!

தேடவிடாமல்  திருடிக்கொண்டு 

போன  இயற்க்கை!  

கொடுத்துவிட்டு  போன 

காட்டு முல்லை!  மூடிவைத்தே 

வீசுகின்றது  காடெங்கும் 

என்  வாசத்தை !


விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 தூக்கம் கலையா விழி 



ஓடும்  கைகால்களை 

நில்லென  கெஞ்சியே நிற்க 

வேள்வித்தீயாய்  சுற்றியே 

 எழுப்பியது  கோடைகாலத்து  

ஆதவன் !!

மனதின்  சோர்வினை  சுட்டதோ 

விழித்து கொண்ட என்  விழிகள் 

வாவென கெஞ்சு  என்னை !!

Wednesday, 17 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்ன வாழ்க்கையை 

நான்  சிந்திக்கும்  

நொடிகள் கூடிப்பேசி 

கொடுத்த  சாபமா நான்  !!

சொல்லமுடியா  தடைகோட்டுக்குள் 

அடைத்து 

சடுகுடு ஆட்டம் ஆடி 

விளையாடுகின்றதே என்னோடு !

விதியென  எதிர்த்தே 

விளையாடிடாவ !!  இல்லை 

அடைக்கப்பட்ட  கோட்டுக்குள் 

மௌனமாய்  மோதிவிளையாடி 

தோற்க்கவா! சொல்லிவிட்டு 

போகவா  இறைவா !!!



Saturday, 13 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 தொட்டு இழுக்கின்றது

 தென்றல் 

கொஞ்சம்  தூரமாய்  ஓடுது

 மனசு 

விட்டிடாது   துடிக்கின்து

  இதயம் 

விட்டுவிட  சொல்லுது 

உணர்வு 

கூடிப்பேசி சிரிக்குது  

நினைவு  

தட்டிநிறுத்தி கால்கள் தொட்டு 

 விளையாடுது 

சாய்ந்தாடும் புற்கள்!கொஞ்சம் 

மறக்கு துளிகள் !



Friday, 12 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வார்த்தைக்குள்  சிக்கிக்கொண்ட 

உறவுகளே!


 

வார்த்தைக்கு  வார்த்தை 

தன்னை  நிருபிக்க 

  வார்த்தையின்றி 

தகராறுக்குள்  தடுக்கி  விழுது 

கேலிக்கூத்தாக்கின்றது!

இங்கே !

ஒற்றை  சுயநலத்தேவை   

வார்த்தைக்கு  கொடுத்த 

உறவே உறவற்று போக  கரணம்!!


 

Thursday, 11 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனிதனை அடிமைகொள்

வழிகள்  ஆயிரம்! ஆனால் 

இப்போ!!

 அடிமை  கொண்டது 

ஆடம்பரம்!

பணமெனும் கருவி 

பூசும்  வர்ணத்தில் 

 மயங்கி கிடக்கின்றது 

மனிதம்!

  இருப்பவன்  கையில் 

இழந்தவன்  பொம்மையே !

கண்ணுக்குள்  துள்ளும் 

கண்ணீர்த்துளிகள் விழுந்தாலும் 

நின்றாலும்  வேடிக்கை மனிதனுக்கு 

எல்லாம்  ஒன்றே !!

நீ  உண்மை எனில்

 போலி பொய்யெனில்  

நீயே  இருந்தும் போலியே  

நல்ல  மனிதனாய்  !


குட்டிக்குட்டிச் சாரல்......,

வெறுமைத்துளிகள் 

சிந்தி சிவந்த  காலமும்  

கருணையற்று கடந்தது  

தனிமையில்  இருந்தும் 

வெளியில்  ஆயிரம் மாயமேககூட்டம் 

பாலைவன மண்மேல் 

கருணைமுகம்போல் !!

Tuesday, 2 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முதல் முறை  ஒரு 

உணர்வு  அன்பை 



அழகாக்கின்றது  இதுவரை 

பொம்மையின்  கையில் 

சிக்கிய  பெண்மை  

உணர்வின்  கையில் 

உணர்வாகின்றாள் 

 இனிவரும் காலம்  

ஆண்மை  இருப்பதுவும் 

பெண்மையிருப்பதுவும்  ஒரு 

பூமியின்   இரு வேறு உலகு !

தெரியாமல்  போனாலும் 

தெரிந்தே செய்யும்  தவறுகளால் 

தனியாகின்றது  இருவர்வாழ்வும் !! 

இருந்தாலும்  தேவையின் தேடல் 

அழிக்கப்போகின்றது  நல்லறத்தை !!


மழையின்சாரல்................

 சோர்ந்தே போன



உணர்வினை தட்டியெழுப்பி 

சடுகுயாடி  துளியோட 

வைக்கின்றாய் 

கொஞ்சம் கூட  அச்சப்படாமல் 

மொத்தமாய்  நனைத்து 

மொத்த உடலும் நடுங்க 

உன்னை  திட்டவும்  முடியாமல் 

வெறுக்கவும்  முடியாமல் 

நள்ளிரவில் நான் ஒரு 

சூரியத்தீண்டல் பூவாய் 

நிக்கின்றேன்!