நாம்!
ஏன் அடுத்தவர்
வாசலில் கையேந்தி
அடிபடுகின்றோம்!
நமக்கான தலமை நம்மிடம்
இல்லையா?
இல்லை கைகட்டியே
நின்று பழகிவிட்டோமா
நல்லதை நமக்கா நமே
தேடாமல் குழம்பித்தவிக்கின்றோம் !
மற்றவர் வாசலில் !
நாம்!
ஏன் அடுத்தவர்
வாசலில் கையேந்தி
அடிபடுகின்றோம்!
நமக்கான தலமை நம்மிடம்
இல்லையா?
இல்லை கைகட்டியே
நின்று பழகிவிட்டோமா
நல்லதை நமக்கா நமே
தேடாமல் குழம்பித்தவிக்கின்றோம் !
மற்றவர் வாசலில் !
சில உறவிற்குள்
இதயம் துடிப்பதுஉயிர்வாழ்
ஆனால் துடிப்பிலா
ஒரு துடிப்பின் ஓசை
என் சுவாசத்தின் துடிப்பாகின்றது
நின்று நிதானமாய் சிந்தித்து
திரும்பி ஓடும் வாழ்க்கைகாலத்தில்
முழுமை போராட்டம் தனக்கான
உழைப்பின் தொடக்கம்
அவரவர் தொடக்கம் !!
இருந்தும்
விவசாயின் உழைப்பிற்கு
உயிரின் தொடக்கமும்
முடிவும் முடிவில்லா
போராட்டம் !!
ஏழ்மையின் கண்ணீருக்குள்
சுகந்திரம் தேடும் முதலைகளிடம்
விழுந்து போராடுகிறது தொழிலார்த்தினம்!!
அதிகாலை வேளை
அவசரஅவசரமாய்வேலையை நோக்கி
ஓடியவேளை
சின்னதாய் ஒருதூறல்
மெல்லமெல்ல சரலாகி
என்னை தீண்ட
அதைக்கண்டுகொள்ள
நேரமில்லா என்வேகத்தை
சடடென தடுத்தது தென்றல்
சடென கோவமாய் மரத்தின் கீழ்
நின்ற என்மேல்
கொஞ்சமும் யோசிக்காமல்
மரத்தின் பூக்களை என்மிது
கொட்டியது! நின்று ரசிக்க
நேரமில்லாமல் குடையை விரித்தபடி
வேகமா நடந்தேன் !! அந்த தருணத்தை!
அழகிய மணப்பெண்போல்
புன்னகையோடு
என்னை வரவேற்ற மரம்
இன்று என்னைபோல்
வண்ணமிழந்து வாடியே
நிக்கின்றது தூறலோடு
தென்றல் கைகோர்த்ததாலோ !!
கொட்டும் மழைக்கு
மட்டுமே தெரிந்தது
அவள் கண்ணீர்த்துளிகள் !
தூரத்தே ஒதுங்கிய
விழிகளுக்கு தெரிந்தது
அவள் சிறுபிள்ளை தனம்
விதிக்கு தெரிந்தது
அவள் மரணம்
ஆனால் !
மின்னலுக்கு தெரியாமல்
போனது அவள் ஆசைகள்
தேசம் கடந்து நேசம்
கொண்டாடுகின்றது இற்றைப்பொழுதை
சந்தோசமாய் !
விடியல் காற்று கொஞ்சம்
சுகந்திரமாய் வீதியில் வீசுகின்றது
நாளைய உதயதம் தழுவ
முகங்கள் கொஞ்சம் அடையாளம்
மறந்து கைப்பிடித்தே நிக்கின்றது
வீதியெங்கும் !
நிழல் படங்கள் கொஞ்சம்
அழுகின்றது நியமில்லை
தம் உருவமென்று புதிய
உதயம் எழுகின்றது எல்லா உயிர்களுக்கும்
பொதுவாய் !!
சின்னதாய் ஒரு பயணம்
கூடியபயணிகள்
எதை எதையோ
தேடியவடிவாய் கைபேசியோடு !
நடுவே நான் எதுவும் தோன்றாமல்
வேடிக்கை பார்த வேளை
பாதையோர மரமொன்று
அழகிழந்த மணப்பெண்ணொருத்தி
அழகுக்கலை பெண்ணின்
கையில் கிடைத்தவள் போல்
அழகான இளஞ்சிகப்
பில்
புன்னகைத்தது!
யாரோ ஒருவரிடம்
நம்மீதான அன்பிற்க்காய்
சண்டையிட்டு போராடும்
இயந்திர நிமிடங்களைத்தேடாமல்
எனக்கான
பாலைவனத்திற்குள்
ஒரு பூக்களின்
சிறைச்சாலைக்கூண்டுக்கிளியக்கின்றேன்
அவள் வலதுகண்
துடிப்பின் தவிப்பை
அவள் இடது கண்
ரசிக்கின்றது !
பாவம் அவள்!
அவள் கண்களுக்கு
புரிந்தது
அவனுக்கு புரியாமல் ஏன் போனது !!
முதுமை வந்தால்
முகம் கொஞ்சம்தொலைகின்றதோ
முடிவுரை காலத்து முகம்
கொஞ்சம் ரசனை அற்றுத்தான்
போகின்றது!கொஞ்சமும்
வசதியில்லை என்றால்
அருவருக்கவும் வைக்கின்றது
தானாய் வரும் தூக்கத்து
கனவுகளே நாங்கள் !!!
மனிதா உன்னை
நீயும் சிந்திக்கும் காலம்
எக்காலம்!!!
பெண்ணாய் ஆணாய்
ஏன் பிறந்தாய் ஒன்றுக்கு
ஒன்று வாழ்வைகெடுத்து
இல்லாமல் போகும்
நிமிடத்தில் நின்று
எச்சம் விழும் எச்சிலால்
முகம் கழுவி யாருக்கு
யார் சிறந்த பிறப்பென
அம்பினை கையை விட்டு
விழுந்த கிளியினை
வைத்து புத்தனாய்
வேடம் போட்டு நடிப்பதால்
எந்த போதிமரத்திற்கும்
பயனில்லை !!பயனற்ற
பயணங்களால் எழும்
கேள்விக்கு நாளைய
பரம்பரைக்கே விடையில்லா
தோல்வியே வரலாறாய் மாறும் !
அழிகிய உண்மை
உனையே நம்பி
அழகான வாழ்க்கைக்குள்
கைப்பிடித்தே அழகாய்
உன்னை காக்கும்
புன்னகையையே காதல் !!
இவள் ஒற்றையில்
ஓடும் உயிர்களை
வேடிக்கை பார்க்கின்றாள்
பேசும் வார்த்தைகள்
தனியாய்
பிறந்தகுழந்தையும்
தனியாய்
கட்டிய குடும்பம்
மட்டும்
நீதிகேட்டு வீதிக்கு வீதி
சண்டையில் !
விளையாட்டாய் பேசினாலே
வாயில் அடித்தகாலம்
வாய்க்கு பூட்டு கேக்குது இப்போ!!
நேசம் என்ன
நேசித்த உறவென்ன
காலம் கொண்டோடி
போனதே
அன்ரியவள் வார்த்தைக்குள்
விழுந்து வெளியேறமுடியா
புதிய நேசத்தின்
புதுதிய வளர்ச்ச்சியை
அன்னை கொஞ்சம் அழுகின்றாள்
பூமிக்கு இது என்ன
புதிய சோதனைக்கலாமென
காவிக்கு பயந்தோடிய காலம் போய்
போதைக்குள் விழுந்தோடமுடியாமல்
நடுங்குகின்றது மண் !!
அவள் ஏடுகளை
புரட்டி புரட்டி பார்த்தாலும்
புரியாத ஒன்று அவள்
வாழ்க்கை ஒன்றே அது
அவளுக்குமே புரியவில்லை
தானே !!
அழகிய ரோஜா அழகால்
புன்னகைத்ததை பிடிக்கா
இறைவன் தூக்கத்தில்
போட்ட கையெழுத்து
தனிமை!!
தனிமை சிறைதந்து
உறவின் உயிர் குடித்துமுற்களை விதைத்தவன்
இறைவன் அவனே !
இருந்த கூட்டதை
தள்ளியோட வறுமைக்குள்
அவளை சிறைவைத்தே
சாவியை தொலைத்தவனும்
அவனே!!புன்னகை சருக்குள்
பொய் பூக்களை வெண்ணீரால்
குளிக்கவைத்தே மண்ணிற்குள்
புதைத்தவனும் அவனே
விதியென தனிமை கல்லறை
கண்ணீர் சிந்துகின்றது
மண்ணில் விழும்துளி
மறுபடி சேராது என்பதால் !
தமிழை அறிவோட
தேடும் மனிதன் தன்னை
பெருமை கொள் மனிதத்திற்குள்
இன மொழி கடந்து
இணைக்கின்றான் !!அதையே
மற்றவரை ஏமாத்தியே
தமிழனாய் தன்னை அடையாளம்
காட்டும் தமிழன் மற்றவர்
உணர்விற்குள் விளையாடியே
தன்னை மட்டும் காப்பாத்தி
வாழ்கின்றான் !
தூரமா அன்பினால்
கூட இருக்கும் உருவம்
மறைக்கப்படுகின்றதால்
கூடமால் கட்டப்படட
இல்லத்திலிருந்து கூடுவிட்டு
பாய்கின்றது
காதல் !!
என் தோல்வியில்
ஒரு நம்பிக்கை
அருப்பிட
என் தவறுகளிலிருந்து
ஒருவன்
தன் நம்பிக்கையை
விதைக்கின்றான்
அவன் முயச்சிகள் ஜெயித்திட
என் விதியை எழுதியவனிடம்
அவன் விதி மாற்றிட
வேண்டுகின்றேன்!!
புகழ் ஒரு போதைதான் போல
பாட்டிக்கு தெரியா குடும்ப
வாழ்க்கை
அம்மாவிற்கு தெரியா
அடுப்படி
மகள்களுக்கு புரிந்தால்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
வாரத்தை யுத்தம்
அழகற்ற பிறப்பில்
முழுகி ஓடுகின்றது
இணைய வரலாற்று சாதனையாய் !!!
நம்மிடம் இருப்பதை
நாம் இழக்கும் வரை
அது
பயனற்ற ஒன்றாய்
நம் சுயநலம் காணும்
மற்றவரின்
கைகளில் ஒளிரும்
போது
ஏன் நம் சுநலம்
பொறாமை தீயுக்குள்
விழுந்து எரிக்கின்றது
நம்மைவிட்டு போனதால
இல்லை
நாம் முட்டாள் என்பதால!!
இதுவரை என் கண்கள்
தூக்கி சுமந்த நீரெல்லாம்
இப்போதே!
தப்பியோடிட துடிக்கின்றது
எத்தனை நம்பிக்கை என்
கண்களுக்கு மட்டும் !!
ஒவ்வென்றாய்!
இழந்த பின்னர்
ஒவ்வென்றும் கற்றுத்தரும்
பாடங்கள் என்னை மட்டும்
மனிதனுக்கு வழிவிட்டு
தனியே நடந்து போகச்சொல்லுகின்றது!!
பத்திரிகைச்சுகந்திரம்
படுத்துக்கிடக்கின்றது
பணக்காரன் வீட்டுக்குள் !!
ஏழையின் கண்ணீர்
விழுந்தோடு கூவத்துக்குள் !
இல்லறம் அறம் தேடுது
நல்லறம் இழந்து
திமிர் எழுந்து
விளையாடுது பாசம் கொன்று
பணம் வந்து கூட்டு சேர்க்கின்றது
தனிமனிததுணைக்காய் !!
என்னைப்படைக்கும்
போது
என்ன நினைத்தானோ
இருக்கும் வரை
அழுது கொண்டே ஓடு
எங்கின்றான்
முட்டிமோதி பார்த்தாலும்
முடியாதே போகின்றது
தூரம்
விழுந்தெழுந்து களைத்து
நிறுவிடடேன்
எனியாவது
ஓய்வுகொள்ளட்டும் இறைவன் !
தமிழில்
விடுதலை என்னும் சொல்
மட்டும் பெண்
தொலைத்து விட்டு
தேடுக்கின்றாளே !
ஒற்றை ஆணை
கோடிப்பெண்கள் கொண்டாடும்
உலகத்திற்குள் ஒரு பெண்குழந்தையை
கூட பாதுகாத்திட யாருமில்லை
வேடிக்கையான விடுதலை தேசம்
பெண்ணிற்கு மட்டும்!
தூயதமிலில் பெண்ணை துரத்தி
துரத்தி இழிவு படுத்தும்
மனித நேசம்
கள்ளத்தொடர்வுக்குள்
விளக்கைபோட பணத்தை எரித்தலும்
இழந்த வீட்டிற்க்குள்
வறுமை போக்க எந்த
பணத்தையும் எடுப்பதில்லை ஏனோ
பேதைப்பெண்ணாய் போதை
தேடும் மனிதநேயத்தை மாற்றும்
உறவில் புதிய விடுதலை பூக்கட்டும் !!!
விதியோடி விழுத்தியகாலம்
விடுதலையில்லா
மரணதண்டையென
விட்டுக்கொடுத்து போன
உறவு எழுதிய சுயநலப்புத்தகத்தின்
வரிகளை படிக்காதே அவள்
புரிந்து கொண்டால்!
நாம் யாரோவாய்
வாழவேண்டும் என !!யார் யாரோ நம்மைக்கேட்க்காமலேயே
நம் ஓவியத்தை அளித்தளித்து
வரைந்து பார்க்கின்றனர்
தமக்கு பிடித்தமாதிரி !
வருடங்கள் ஓடுகின்றது
வாழ்க்கையும் ஓடுகின்றது
கூடவே இல்லறத்திற்குள்
மட்டும்
புரியாமல் இரு உடல்கள்
சேர்ந்தோடுகின்றது !!
விழுந்தெழுந்து விழாமல்
வாழமுயற்சி செய்யும்
மனிதன் !
காமக்குளத்திற்குள் ஒழுக்கமில்லா
கல்லாய் !விழுந்து
மூழ்கிகிடக்கின்றதால்தானோ
நட்பின்கைகள் கறைபடித்து
கிடக்கின்றது !பெண்மைக்கு
பொருள் சொன்ன பொருள்ளெல்லாம்
தாசிக்குள் அடைக்கப்பட்டு
மூழ்கிப்போனதோ!பெண்ணின்
ஒற்றை வடிவம் ஓராயிரம்
வார்தைகளால் தாக்கப்பட்டு
அளிக்கப்படுகின்றது !இங்கே
பேச்சு சுகந்திரம் இழிநிலை
வார்த்தைகளுக்குள் பாண்டவர்
மனைவியின் வாரமோ !!
ஒரு மாலைப்பொழுது
மழைதுளிக்கு ஏங்க
ஒரு தூறலின் துளி
பூவினித்தழுக்கு ஏங்க
ஒரு வண்டின் தேடல்
தேன்துளிக்கு ஏங்கிக்கிடக்கின்றது
இதயத்தை
அழகாய் நேசிக்க
ஆழமாய் யாரும்
தீண்டிப்பார்த்ததில்லை !!!
உடைந்த அவள் இதயத்தின்
கண்ணீர்துளிகள்
யார்மனதையும்
தொட்டதுமில்லை இதுவரை
அவள் தேடிய கோவிலில்
கடவுளும் உயிரற்றுபோன
உருவமே !!!இருந்தும்
அவள் தேடப்படும் புத்தகத்தின்
கடைசிப்பக்கம் !!!
விளையாடி ஓய்ந்தது கனவு
விளையாட்டாய் முடிந்தது வாழ்க்கை
விதியென தேற்றுது மனசு
விழுத்திவிட்டு அழுகின்றது கண்கள்!!
சோர்வாய் ஒரு பார்வை
அழகினைக் கண்டுகொள்ள
ஒரு இதயத்துடிப்பு
யாருக்கும் இல்லா ஒரு
சோகம் ஆறுதலில்லா
அருகாமை அவளோடுமட்டும்
நிரந்தரம் !!!
காலத்தின் கண்ணீருக்குள்
விதைக்கப்படட தனிமை
கோடிப்பெயருக்குளும்
கண்டுகொள்ள பென்குயின் வரலாறு !!
எதை இவ்வுலம்
தேடுகின்றது
எதற்க்காக இவ்வுலகம்
போராடுகின்றது இதுவரை
புரியாமனிதம்
எது எதுவென தேடினாலும்
இதுவென சொல்லும் மனிதன்
சொல்லுக்குள் அடங்கிவிடுகின்றது!!!
நெஞ்சம் வலிக்கின்றது
அவளுக்கு
கொஞ்சம் உறக்கம்
கடன்கேக்கின்றது அவளை
இல்லையென்றே போகின்றது
நாட்கள்! அவள் கேளாமல்
துடைக்கின்றது துன்பம்!
அவள் கேட்டும் கிடைக்காமல்
கொலைசெய்யப்பட்ட்து
அவள் ஆசைகள் இருந்தும்
அவள் பெண்ணானால் !!
அவள் !
மெல்ல மனசை எழுப்பிட
முயல்கின்றாள்
அவள் மனசோ இறந்திட்ட
உடல்போல் கிடக்கின்றது
எதையும் நம்பமறந்து !!பொய்களை
கேட்டுக்கேட்டு இருப்பதும்
பொய்யானது அவள் மனசுக்கு மட்டும் !!!