Thursday, 18 June 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னைத்தேடிக்கொண்ட 

என்னை!

தேடவிடாமல்  திருடிக்கொண்டு 

போன  இயற்க்கை!  

கொடுத்துவிட்டு  போன 

காட்டு முல்லை!  மூடிவைத்தே 

வீசுகின்றது  காடெங்கும் 

என்  வாசத்தை !


விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 தூக்கம் கலையா விழி 



ஓடும்  கைகால்களை 

நில்லென  கெஞ்சியே நிற்க 

வேள்வித்தீயாய்  சுற்றியே 

 எழுப்பியது  கோடைகாலத்து  

ஆதவன் !!

மனதின்  சோர்வினை  சுட்டதோ 

விழித்து கொண்ட என்  விழிகள் 

வாவென கெஞ்சு  என்னை !!

Wednesday, 17 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்ன வாழ்க்கையை 

நான்  சிந்திக்கும்  

நொடிகள் கூடிப்பேசி 

கொடுத்த  சாபமா நான்  !!

சொல்லமுடியா  தடைகோட்டுக்குள் 

அடைத்து 

சடுகுடு ஆட்டம் ஆடி 

விளையாடுகின்றதே என்னோடு !

விதியென  எதிர்த்தே 

விளையாடிடாவ !!  இல்லை 

அடைக்கப்பட்ட  கோட்டுக்குள் 

மௌனமாய்  மோதிவிளையாடி 

தோற்க்கவா! சொல்லிவிட்டு 

போகவா  இறைவா !!!



Saturday, 13 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 தொட்டு இழுக்கின்றது

 தென்றல் 

கொஞ்சம்  தூரமாய்  ஓடுது

 மனசு 

விட்டிடாது   துடிக்கின்து

  இதயம் 

விட்டுவிட  சொல்லுது 

உணர்வு 

கூடிப்பேசி சிரிக்குது  

நினைவு  

தட்டிநிறுத்தி கால்கள் தொட்டு 

 விளையாடுது 

சாய்ந்தாடும் புற்கள்!கொஞ்சம் 

மறக்கு துளிகள் !



Friday, 12 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வார்த்தைக்குள்  சிக்கிக்கொண்ட 

உறவுகளே!


 

வார்த்தைக்கு  வார்த்தை 

தன்னை  நிருபிக்க 

  வார்த்தையின்றி 

தகராறுக்குள்  தடுக்கி  விழுது 

கேலிக்கூத்தாக்கின்றது!

இங்கே !

ஒற்றை  சுயநலத்தேவை   

வார்த்தைக்கு  கொடுத்த 

உறவே உறவற்று போக  கரணம்!!


 

Thursday, 11 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனிதனை அடிமைகொள்

வழிகள்  ஆயிரம்! ஆனால் 

இப்போ!!

 அடிமை  கொண்டது 

ஆடம்பரம்!

பணமெனும் கருவி 

பூசும்  வர்ணத்தில் 

 மயங்கி கிடக்கின்றது 

மனிதம்!

  இருப்பவன்  கையில் 

இழந்தவன்  பொம்மையே !

கண்ணுக்குள்  துள்ளும் 

கண்ணீர்த்துளிகள் விழுந்தாலும் 

நின்றாலும்  வேடிக்கை மனிதனுக்கு 

எல்லாம்  ஒன்றே !!

நீ  உண்மைஎனில் போலி 

பொய்யெனில்  நீயே  நல்ல  மனிதன் !


குட்டிக்குட்டிச் சாரல்......,

வெறுமைத்துளிகள் 

சிந்தி சிவந்த  காலமும்  

கருணையற்று கடந்தது  

தனிமையில்  இருந்தும் 

வெளியில்  ஆயிரம் மாயமேககூட்டம் 

பாலைவன மண்மேல் 

கருணைமுகம்போல் !!

Tuesday, 2 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முதல் முறை  ஒரு 

உணர்வு  அன்பை 



அழகாக்கின்றது  இதுவரை 

பொம்மையின்  கையில் 

சிக்கிய  பெண்மை  

உணர்வின்  கையில் 

உணர்வாகின்றாள் 

 இனிவரும் காலம்  

ஆண்மை  இருப்பதுவும் 

பெண்மையிருப்பதுவும்  ஒரு 

பூமியின்   இரு வேறு உலகு !

தெரியாமல்  போனாலும் 

தெரிந்தே செய்யும்  தவறுகளால் 

தனியாகின்றது  இருவர்வாழ்வும் !! 

இருந்தாலும்  தேவையின் தேடல் 

அழிக்கப்போகின்றது  நல்லறத்தை !!


மழையின்சாரல்................

 சோர்ந்தே போன



உணர்வினை தட்டியெழுப்பி 

சடுகுயாடி  துளியோட 

வைக்கின்றாய் 

கொஞ்சம் கூட  அச்சப்படாமல் 

மொத்தமாய்  நனைத்து 

மொத்த உடலும் நடுங்க 

உன்னை  திட்டவும்  முடியாமல் 

வெறுக்கவும்  முடியாமல் 

நள்ளிரவில் நான் ஒரு 

சூரியத்தீண்டல் பூவாய் 

நிக்கின்றேன்!

Monday, 1 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கொஞ்சம் கொஞ்சமாக 



குறைந்து கொண்டே போகும் 

வாழ்வின் எல்லைக் கோடு

கொஞ்சநேரம் ஒய்ந்திருக்க. 

சொன்ன நேரம்!

 கொஞ்சமும் யோசிக்காமல்

 என்  கைபிடித்து 

என்னை பார்த்து  கேட்டது 

உன் கைபிடித்து

காதல் செய்யும் நிமிடங்கள் 

 கைநீட்டும் தூரம் வரை 

காத்திருக்கா?இல்லை  உன் வாழ்வில் 

தான் பூத்திருக்க 

உன் துயரத்தில் 

நீ  தோள்சாந்து  கதை பேசி 

உன்னை தேற்ற உன் பார்வையின் 

தூரத்தில் ஓர் உறவு 

 உனக்குத்தான்  காத்திருக்க? இல்லை 

உன் வாழ்வில் சேர்ந்திருக்க 

நீ அழும்  துளிகள் 

உன் விழி குளமதில் ஆறாகி ஓடமுன்  

உன் பாரம் தாங்கும் நின்மதி 

உனக்கிருக்க!!  இல்லை 

உனக்கென ஒரு உயிர்பிறந்திருக்கா  

 ஓடுகின்றாய் 

ஏன் என்று கேள்விக்கு

 விடையின்றி !பேசுகின்றாய். 

உன் பேச்சில் அனைவரும் 

உன்னை  தேட 

ஆனாலும் நீ தேட உனக்கா 

 நியாமற்ற உன் நிழலே நியம் 

நியமாய் சொல்லு நியதானே !

Friday, 29 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தினம் தினம்  தேடி


 

தினமதனை கொண்டாட 

செதுக்கிய  தினத்திலும் 

செருக்காய்  கதைபேசும் 

மனிதனுக்குள்  தினமதனை 

கையில்  எடுத்து

இருப்பவனிடம்  கொடுயென 

இருப்பவனுக்கு  கற்றுக்கொடுக்கும் 

பண்பு !இல்லாத இதயத்தின்  

இருள் நாள் ஒளிவிளக்கின் 

ஒரு  திரிதொடக்கமானது !

இன்று  பசியின்  தேடலுக்கு 

தற்காலா  சந்தோசமானது !

வறுமையின்  வயிறும் பசிக்கும் 

என்ற  தினத்தின்  தேடலின் 

தொடக்கத்தின்  முதல் மனிதப்பிறப்பு 

உயிர்பெறுகின்றது  !  

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனிமை களம் சமைக்க 



வாழ்க்கை   போராட் டம்  

கலையிழக்க 

உரிமையற்ற  தனிமையில் 

களைப்பின்  உச்சம்  

விழிகளை  மூட விடியலில் 

விழிக்கும்  பசியின் தூக்கம் 

துடிப்பாய்   எழுப்பி  பெண்மைக்கு 

சொல்லும்  செய்தி  உண்டாலும் 

உறங்கினாலும்  உனக்கான 

உன்னை  உயிர்  வரை  சுமக்க 

உன்னை  விட்டால் 

யாருமில்லை !!

Thursday, 28 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்  தகுதி என்னவென 

அறியவில்லை  நானும் !

அறிவும்  அருமருந்தாகுது 

இருந்தும்  கூட! 

விளைவு  களமாட காசுபணம் 

கையில்  இல்லை 

 பெருமைக்கு நாலுபேரும் 

கூடி பேச குடிலில் இடமுமில்லை  

இருந்தும் 

ஏழைக்கு  ஏமாற்றம் 

கொடுக்க  அன்பேனும் 

சொல்லுண்டு  பூட்டிய வாசலை 

தட்டியே வாயடி போக !

புரிந்தும்  சந்தோசமாய்  ஏமாறுது 

மனசு இதயம்  ஏக்கங்களாய் 

துடிப்பதால் !!

Wednesday, 27 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒழுக்கம் !!
என்னும்  சொல் 
இன்றைய!!
 செய்தித்தாள்களில் தேடும்  
பக்கங்களானது   
சொல்லி  வைத்த 
திருவள்ளுவனும்  
நாலுபக்கமும்  சிலையாய் 
 நிக்கின்றான் 
கண்டும்  கேட்டும்  தனிமனித 
சுகந்திரம்  தன்னை  தொலைத்து 
தேடுது   எங்கும் 
சிகப்புக்கம்பளம்  விரிப்புக்குள் 
வலுக்கி  விழுந்த  ஒழுக்கம் 
அடுத்தவனின்  உடலுக்குள் 
ஆராச்சி  கூடம்  நடந்து !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சிந்தனை  சிப்பி ஒரு தனிமைக்கு 



செதுக்கிய அறிவு பொக்கிஷம் 

அன்பின் உச்சத்தில் 

  ஆளுது என்னை 

பொய்யாயானா  முகமில்லை 

போலியான  வார்த்தையில்லை 

உடலில்  உயிரில்லை அனாலும் 

பசிக்கும்  வயிறு இருப்பது 

புரித்து  வருந்து  தனியாய்! 

எனக்கே எனக்காய் !

 இற்றை காலம் 

கொள்ளும்  வாழ்வின் இருளின் 

பாதை  நாளை மனிதன் 

மிருகமாகும் விதிக்கு இன்றைய 

வெளிச்சம் !

Tuesday, 26 May 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

இந்த  வெள்ளையாடை 

விருந்தாளிக்கு  அந்த 

வெள்ளிக்கொலுசு 

மௌனவிரம் 

பூண்டது  தனியாய்!!


Friday, 22 May 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

அத்திப்பூ சிகப்பழகில் 

ஆதவன்  முகில்குளிக்க 

பவளமல்லி வாசத்தில் 

மாமன் தோப்புக்குள் என் 

மனசு  தான்  குளிக்க 

வெட்டிக்கொண்டு ஓடுது 

ஆத்துநீருக்குள்  கயல்விழி 

கட்டிப்போட முடியாமல்  !!

எட்டுத்தொட்டு  எடுத்து 

பதுங்கி நிக்கின்றது கால்கள் 

மாமன்  அழகில் !

கொட்டி கிடக்கின்றது வேர்வை 

எடுத்து விதைக்கும்  விதைநெல் போல் !!


 

Thursday, 21 May 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சிந்தி சிதறி 

விழுந்த கற்பனைக்குள் 

 தத்தளிக்கின்றது காதல் 

 எடுத்துவிளையாடும் 

மனிதன்  இதயம்  புரியாமல் !!

Wednesday, 20 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 சந்திக்கு சந்தி  ஒரு காவல்! 

தெய்வமனது தமிழக்கு ! 

  இருந்தும் 

இல்லம் காக்க குலசாமி 

குடும்பத்தலைவன்!!  ஆனாலும் 

சிலநேரம் கல்லாய் நிற்பதேன் 

பெண்மைக்கு !!காட்டுக்குள் 

வாழ்ந்தயினம்  வீரத்தை  கடவுள் 

ஆக்கியும் வீரம்தேடும்  பெண்மைக்கு 

மானம் காக்க கையெங்கே?

வெட்டுண்டுகிடக்கின்றதோ  !இருந்தும் 

வெட்டுண்ட  கையும்   

மானம் சிதைத்திட  கட்டுண்டு வரும் !

பெண்மையென்றால் !     

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சதியாடும்  ஆட்டத்திற்குள் 



விளையாடும்  திறமை 

கொண்டவன்  ஆடும்  ஆட்டமே 

விதியாகின்றது  சிலநேரம் 

Tuesday, 19 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எல்லைக்கு!ஒரு சாமி !



நீ இருந்துமேன்  சாமி ?

தெருவிற்கு தெரு போராட்டம்!! 

வெள்ளந்தி மனிதரெல்லாம் 

வேட்டையாடும் மனிதனுக்கு 

உயர்ந்து நிற்க்க

 நீதியும் உன்னிடத்தில் 

 உண்டா சாமி  !!

கருவிற்கும் கருவறுக்கும் 

கயவருக்கும்  கருணைக்கு 

நீயேன் சாமி!!  பொய்யோ 

மெய்யோ  கற்பனையோ! 

எழுத்து  வாசாமி நீதியின் 

 காவலாய் !

விழுந்தே  கிடைக்கும் 

மனிதனுக்கும்

பிறந்தும் வாழப் போராடும் 

பெண்மைக்கும் 

துணை யார்  சாமி !!   

 


 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 எல்லா  போதைக்கும் 



பின்னால்!  

நாம்  கற்றுக்கொள்ளா 

ஒரு  பாடம் 

 வெவ்வேறு உருவில் 

சிக்கித்தவிக்கின்றது !! 

உள்ளதை நல்லதை  

செய்கின்றவன்!

 இருக்கும் வரை கோமாளியாகின்றான்!!

Monday, 18 May 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மனிதனுக்கு  புரியாப்புதிரே 

தாய்மைக்கு  தாயான 

குழந்தையே !

உன்னோடு இணைந்த 

என்னோடு பூக்கும் 

பூபாளம் யாருக்கும் 

கிடைத்திடாப்பொழுதுகள் !

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

மரணங்கள்  மன்னிக்கா 

மண்ணில்  மரணித்த  உயிரும் 

மன்னிக்கா அடையாளமே 

நாம்!!விடுதலை மூச்சுக்குள் 

கண்ணீர் !

விதைக்கப்படடதோ  அறுவடையற்று 

அகதியாய்! கிடக்கின்றது 

விரும்பியும்  விருப்பாமலும் நாம் 

பிளவுபட்டே விதிசெகின்றோம் 

கொடுத்தவர்  தெருவில் 

எடுத்தவர் மாளிகையையில் 

இறைவனிடத்தில் மன்னிப்பு 

 கடிதங்கள் மூட்டை மூட்டையை !!

Wednesday, 13 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புறம்  பார்த்து  புறம்  பார்த்து 

அகம் பார்க்க  மறந்துவிடட்டோம்  

இனம் பார்த்து  குலம் பார்த்து 

நம்மையே  நாம் பார்க்க மறந்துவிட்டோம் 

வழிமுடி  விழிமூடி  சிந்திக்க 

மறுக்கின்றோம் 

வந்ததை  மறந்து விட்டு 

வருமென காத்திருக்கின்றோம் 

கையில்  இருப்பதை  கேலியாக்கி 

கைபிடித்தே   கலவரம்  செய்கின்றோம் 

கருணைக்கும்  கடவுளுக்கும் 

தூரமாய்  பணத்தோடு  விளையாடுகின்றோம் 

வருவதை  ஏற்காமல்  அழித்தழித்து 

அழிந்திடவே துடிக்கின்றோம் 



Sunday, 10 May 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

முயற்சி ஒன்றே 

வாழ்வின் முதல் வெற்றி 

நம்பிக்கை ஒன்றே வாழ்வின் 

முதல் சிகரம் 

மௌனம் ஒன்றே வாழ்வில் 

சிறந்த ஆசான் !


Thursday, 7 May 2026

கனவின் புன்னகைக்குள் ஓர் சாரல்..........

விதியோடு !
விளையாடியபடி  
தனியாக  போனவள்
 கண்ணுக்குள் !
விழுந்தெழும் 
 கனவுகளுக்குள்  
விழுந்தவள்   இதயம் சந்தோஷத்தால் 
எழுந்திடவில்லை !!இப்போதுதான் 
அவளுக்கும்  புரிகின்றது 
அவள்  இதயம்  பூவாக மலர்வதே 
அவள் கனவென்று !!

Tuesday, 5 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நாம்!

ஏன் அடுத்தவர் 

வாசலில்  கையேந்தி  

அடிபடுகின்றோம்! 

நமக்கான தலமை நம்மிடம் 

இல்லையா?

 இல்லை கைகட்டியே 

நின்று பழகிவிட்டோமா 

நல்லதை  நமக்கா  நமே 

தேடாமல்  குழம்பித்தவிக்கின்றோம் !

மற்றவர்  வாசலில் !

Friday, 1 May 2026

குட்டிக்குட்டிசாரால்..........

 சில உறவிற்குள் 

இதயம் துடிப்பது 

உயிர்வாழ் 

ஆனால்  துடிப்பிலா 

ஒரு துடிப்பின் ஓசை 

என் சுவாசத்தின் துடிப்பாகின்றது


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஒடியடிவிளையாடியகால்

 நின்று நிதானமாய் சிந்தித்து 

திரும்பி ஓடும் வாழ்க்கைகாலத்தில்

முழுமை போராட்டம்  தனக்கான 

உழைப்பின் தொடக்கம் 

அவரவர் தொடக்கம் !!

இருந்தும்

விவசாயின் உழைப்பிற்கு 

 உயிரின் தொடக்கமும் 

முடிவும் முடிவில்லா 

போராட்டம்  !!

ஏழ்மையின் கண்ணீருக்குள்

சுகந்திரம் தேடும் முதலைகளிடம்

விழுந்து போராடுகிறது தொழிலார்த்தினம்!!



Wednesday, 29 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 அதிகாலை வேளை 

அவசரஅவசரமாய் 

 வேலையை  நோக்கி 

ஓடியவேளை  

சின்னதாய்  ஒருதூறல் 

மெல்லமெல்ல சரலாகி 

என்னை  தீண்ட 

 அதைக்கண்டுகொள்ள 

நேரமில்லா  என்வேகத்தை 

சடடென  தடுத்தது  தென்றல் 

சடென  கோவமாய்  மரத்தின் கீழ் 

நின்ற  என்மேல் 

 கொஞ்சமும்  யோசிக்காமல் 

மரத்தின்  பூக்களை  என்மிது 

கொட்டியது!  நின்று ரசிக்க 

நேரமில்லாமல்  குடையை  விரித்தபடி 

வேகமா  நடந்தேன் !! அந்த தருணத்தை!


குட்டிக்குட்டிச் சாரல்......,


அன்று  ஒருநாள்!

அழகிய மணப்பெண்போல் 

புன்னகையோடு 

என்னை  வரவேற்ற மரம்  

இன்று  என்னைபோல்

 வண்ணமிழந்து  வாடியே 

நிக்கின்றது  தூறலோடு 

தென்றல் கைகோர்த்ததாலோ !! 



 

Friday, 24 April 2026

மழையின்சாரல்.................,

 கொட்டும்  மழைக்கு

மட்டுமே  தெரிந்தது 

அவள்  கண்ணீர்த்துளிகள் !

தூரத்தே  ஒதுங்கிய 

 விழிகளுக்கு தெரிந்தது 

அவள்  சிறுபிள்ளை  தனம் 

விதிக்கு  தெரிந்தது 

 அவள்  மரணம் 

ஆனால் !

மின்னலுக்கு  தெரியாமல் 

போனது  அவள்  ஆசைகள் 


Wednesday, 22 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தேசம்  கடந்து  நேசம் 

கொண்டாடுகின்றது  இற்றைப்பொழுதை 

சந்தோசமாய் !

விடியல்  காற்று கொஞ்சம் 

 சுகந்திரமாய் வீதியில்  வீசுகின்றது 

நாளைய  உதயதம்  தழுவ  

முகங்கள்  கொஞ்சம் அடையாளம் 

மறந்து  கைப்பிடித்தே  நிக்கின்றது 

வீதியெங்கும்  !

நிழல் படங்கள் கொஞ்சம் 

அழுகின்றது  நியமில்லை 

தம்  உருவமென்று  புதிய 

உதயம்  எழுகின்றது  எல்லா உயிர்களுக்கும் 

பொதுவாய் !!


Monday, 20 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


சின்னதாய் ஒரு பயணம் 

கூடியபயணிகள்  

எதை எதையோ 

தேடியவடிவாய்  கைபேசியோடு !

நடுவே நான் எதுவும்  தோன்றாமல் 

வேடிக்கை  பார்த வேளை 

பாதையோர  மரமொன்று 

அழகிழந்த மணப்பெண்ணொருத்தி 

அழகுக்கலை பெண்ணின் 

கையில் கிடைத்தவள் போல் 

அழகான இளஞ்சிகப்
பில் 

புன்னகைத்தது! 


Friday, 17 April 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ ஒருவரிடம் 

நம்மீதான அன்பிற்க்காய் 

சண்டையிட்டு போராடும்  

இயந்திர நிமிடங்களைத்தேடாமல் 

எனக்கான  

பாலைவனத்திற்குள் 

ஒரு பூக்களின் 

சிறைச்சாலைக்கூண்டுக்கிளியக்கின்றேன் 

 

Monday, 13 April 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  வலதுகண் 

துடிப்பின்  தவிப்பை 

அவள்  இடது கண் 

ரசிக்கின்றது !

பாவம்  அவள்! 

அவள்  கண்களுக்கு 

புரிந்தது 

அவனுக்கு  புரியாமல் ஏன்  போனது  !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

முதுமை  வந்தால் 

முகம் கொஞ்சம் 

 தொலைகின்றதோ 

முடிவுரை  காலத்து முகம் 

கொஞ்சம்  ரசனை  அற்றுத்தான் 

போகின்றது!கொஞ்சமும் 

வசதியில்லை என்றால் 

அருவருக்கவும்  வைக்கின்றது

 தானாய் வரும்  தூக்கத்து 

கனவுகளே  நாங்கள் !!!

    

Friday, 10 April 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

விழிக்கும்  பொழுதுக்குள் 



விழிமூடிடத்துடிக்குது 

இதயம்!


 

Tuesday, 31 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 மனிதா  உன்னை 

நீயும்  சிந்திக்கும்  காலம் 

எக்காலம்!!!  

பெண்ணாய்  ஆணாய் 

ஏன்  பிறந்தாய்   ஒன்றுக்கு 

ஒன்று  வாழ்வைகெடுத்து 

இல்லாமல்  போகும்  

நிமிடத்தில்  நின்று  

எச்சம்  விழும் எச்சிலால் 

முகம்  கழுவி யாருக்கு 

யார் சிறந்த பிறப்பென 

அம்பினை கையை விட்டு  

விழுந்த  கிளியினை  

வைத்து புத்தனாய் 

வேடம்  போட்டு  நடிப்பதால் 

எந்த போதிமரத்திற்கும் 

பயனில்லை !!பயனற்ற 

பயணங்களால்  எழும் 

கேள்விக்கு   நாளைய 

பரம்பரைக்கே  விடையில்லா 

தோல்வியே  வரலாறாய்  மாறும் !

 


குட்டிக்குட்டிச் சாரல்......,

 அழிகிய  உண்மை 

உனையே  நம்பி  

அழகான  வாழ்க்கைக்குள் 

 கைப்பிடித்தே அழகாய் 

உன்னை காக்கும் 

புன்னகையையே  காதல் !! 

Friday, 27 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இவள்  ஒற்றையில்


 நின்று 

ஓடும்  உயிர்களை

  வேடிக்கை பார்க்கின்றாள் 

பேசும்  வார்த்தைகள்

  தனியாய் 

பிறந்தகுழந்தையும் 

 தனியாய் 

கட்டிய குடும்பம் 

 மட்டும் 

நீதிகேட்டு  வீதிக்கு  வீதி 

சண்டையில்  !

விளையாட்டாய்  பேசினாலே 

வாயில்  அடித்தகாலம்  

வாய்க்கு  பூட்டு  கேக்குது  இப்போ!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நேசம்  என்ன 

நேசித்த உறவென்ன

 காலம்  கொண்டோடி 

போனதே

 அன்ரியவள் வார்த்தைக்குள் 

விழுந்து வெளியேறமுடியா

புதிய  நேசத்தின் 

புதுதிய  வளர்ச்ச்சியை  

அன்னை  கொஞ்சம்  அழுகின்றாள் 

பூமிக்கு  இது  என்ன 

புதிய  சோதனைக்கலாமென 

காவிக்கு  பயந்தோடிய காலம் போய் 

போதைக்குள்  விழுந்தோடமுடியாமல் 

நடுங்குகின்றது  மண் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  ஏடுகளை 



 புரட்டி  புரட்டி  பார்த்தாலும் 

புரியாத ஒன்று  அவள் 

வாழ்க்கை ஒன்றே அது  

அவளுக்குமே  புரியவில்லை 

தானே !! 

Thursday, 26 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 உறவின் ஊருக்குள் 

அழகிய ரோஜா  அழகால் 

புன்னகைத்ததை  பிடிக்கா 

இறைவன்  தூக்கத்தில் 

போட்ட  கையெழுத்து  

தனிமை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனிமை சிறைதந்து 

உறவின் உயிர் குடித்து 

முற்களை  விதைத்தவன்  

இறைவன்  அவனே !

இருந்த  கூட்டதை 

தள்ளியோட  வறுமைக்குள் 

அவளை  சிறைவைத்தே 

சாவியை  தொலைத்தவனும்

 அவனே!!புன்னகை சருக்குள் 

பொய் பூக்களை  வெண்ணீரால் 

குளிக்கவைத்தே  மண்ணிற்குள் 

புதைத்தவனும்  அவனே 

விதியென   தனிமை  கல்லறை 

கண்ணீர்  சிந்துகின்றது 

மண்ணில்  விழும்துளி 

மறுபடி  சேராது என்பதால் !


Tuesday, 24 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தமிழை அறிவோட 

தேடும்  மனிதன்  தன்னை 

பெருமை  கொள்  மனிதத்திற்குள்

இன மொழி  கடந்து 

இணைக்கின்றான் !!அதையே 

மற்றவரை  ஏமாத்தியே 

தமிழனாய்  தன்னை  அடையாளம் 

காட்டும்  தமிழன் மற்றவர் 

உணர்விற்குள்   விளையாடியே 

தன்னை  மட்டும்  காப்பாத்தி 

வாழ்கின்றான் ! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 தூரமா அன்பினால் 

கூட  இருக்கும்  உருவம் 

மறைக்கப்படுகின்றதால் 

கூடமால்  கட்டப்படட 

இல்லத்திலிருந்து   கூடுவிட்டு  

பாய்கின்றது 

காதல் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 என்  தோல்வியில்  

ஒரு நம்பிக்கை 

 அருப்பிட 

என்  தவறுகளிலிருந்து 

 ஒருவன்   

தன்  நம்பிக்கையை 

 விதைக்கின்றான் 

அவன்  முயச்சிகள்  ஜெயித்திட 

என்  விதியை  எழுதியவனிடம்

அவன்  விதி மாற்றிட  

வேண்டுகின்றேன்!!  

Monday, 23 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புகழ்  ஒரு  போதைதான் போல  

பாட்டிக்கு  தெரியா  குடும்ப 

வாழ்க்கை 

அம்மாவிற்கு  தெரியா 

 அடுப்படி  

மகள்களுக்கு  புரிந்தால் 

ஆணுக்கும்  பெண்ணுக்கும் 

வாரத்தை  யுத்தம் 

அழகற்ற பிறப்பில் 

முழுகி   ஓடுகின்றது 

இணைய  வரலாற்று  சாதனையாய் !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நம்மிடம்  இருப்பதை 

நாம்  இழக்கும்  வரை  

அது 

பயனற்ற ஒன்றாய்  

 நம்  சுயநலம்  காணும்

 மற்றவரின் 

கைகளில்  ஒளிரும் 

 போது 

ஏன்  நம்  சுநலம் 

பொறாமை  தீயுக்குள் 

விழுந்து  எரிக்கின்றது 

நம்மைவிட்டு   போனதால 

இல்லை 

 நாம்  முட்டாள் என்பதால!!