இரட்டை வேடம் இரடடை
வாழ்கை வாழும் இருண்ட
மனித வாழ்வை வெறுத்தே
கல்லறையில் பூத்தேன்
இருந்தும் என்னை
நடிக்க அழைக்கின்றாயே
இறைவா
பொய்யாய் வாழும் வாழ்கையில்
மெய்யான வலிகள் வேண்டாம்
இல்லா உடலாய் வாழும்
உயிர் போதும் இந்தக்கல்லறைபூவிற்கு
துன்பம் கண்டு துவண்டு போன
துன்பப்பூவிற்கு
இனியும் வேண்டாம் உன் வேடிக்கை
தாங்கிகொள்ள இதயமில்லை
தடுத்து நிக்க தைரியமும் இல்லை
போதுமே இந்த உயிர் பட்டகாயங்கள்
விட்டுவிடு கல்லரைக்குள்ளேயே
உறங்கிக்கிடந்திட
No comments:
Post a Comment