Sunday 29 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 முற்களின் உதிரத்த்தில்  

பாதம் மருதாணிச்சிகப்பில்

 நடந்திட கண்கள்  சொன்ன 

பொய்யுக்கு கற்பனை உயிர்கொடுத்தான்

 வறுமையை அறியா சொல்வந்தன்!!!

வஞ்சியவள் கஞ்சியில்லா

கொடுமையை கண்டுகொள்ளா 

மனம்படைத்த கற்பனைகள் 

தனக்கு தேவையென்றால்  வைரத்தைகூட

அள்ளிக்கொடுக்கும் உடல்தேவைக்காய் !!!

உண்டு உறங்க  கூரையில்லாப்

பெண்ணிற்க்கும்

தெருவேர வாழ்க்கையிலும்

வறுமையை போக்க போராடும் 

போராட்டத்தை விட 

தன் உடல்காக்க போராடும் போராட்டமே

வலிகூடியது!!!இருப்பதையெடுத்து

இல்லா கதைபடிக்கும் உலகானது!!!

No comments: