Friday 20 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 எட்டிப்பிடித்திடத்தான் ஆசை

ஆனால்  எட்டவில்லை உன் கனவுகள்

விட்டு நடந்திடத்தான் ஆசை

ஆனால் முடியவில்லையெனக்கு

தள்ளித்தனியே நின்றிடத்தான் ஆசை

ஆனால் அசையவில்லை இதயம்

எட்டாதே என தெரிந்தும்

எட்டிபிடித்திடா வானவிலின் 

வண்ணங்களாய் வண்ணம் தொலைத்து

வண்த்தோட்டத்தில் தனியாய்

சும்மா நிக்கின்றேன் சுமையின் வலியாய்

சொன்னால் புரியா சொல்லின் 

மௌனத்தின் புன்னகை போல்!!!

No comments: