அழகான வாழ்க்கை
எதுவென தேடிபார்த்தேன்
உண்மையற்ற இதயத்தின்
பொய்களில் மயங்கிக்கிடந்தது!!!
அன்பான வாழ்க்கை
எதுவென தேடிப்பார்த்தேன்
வறுமையின் குடிலுக்குள்
மழைவெள்ளத்தி்ல் மிதந்து கிடந்தது
அறிவான வாழ்க்கை எதுவென
தேடிப்பார்த்தேன்
கையில் சிக்கிடா முத்தைபோல்
கடலிலுக்குள் கிடந்தது
கற்பான வாழ்க்கை
எதுவென தேடிபார்த்தேன்
தனியான பெண்மையின் கையின
ஆயுதமாய் இருந்தது!!!
பண்பாடான வாழ்க்கை
எதுவென தேடிப்பார்த்தேன்
ஆண்மையின் உருவத்தில்
விலங்கைப்போல் காட்டிற்க்குள்
கிடந்தது!!
மனிதனின் பிறப்பென்னயென
தேடிப்பார்த்தேன்
தவறுகளின் வடிவில் தன்னையே
தொலைத்து தேடும் உயிராய் கிடந்தது!!!
No comments:
Post a Comment